Saturday, April 25, 2020

புமா ஜெமோதான் அழிவு சக்தி




குருதிக் கலவை அழகு குறித்த கண்டனங்களுக்கு பதில் அளிக்கும் வேலையை  தன் தொண்டரடிப் பொடிகளுக்கு  அளிக்காமல் அப்பணியை ஜெமோ அவரே எடுத்துக் கொண்டு விட்டார்.

அவருடைய “நமக்கு நாமே” டிசைன் படி ஒரு  செல்ஃபி கேள்வி  கேட்டு  நீநீநீநீநீநீநீண்ட பதில் ஒன்றும் கொடுத்துள்ளார்.

ஒன்று இவர்களில் பெரும்பாலானவர்கள் எதையும் படிப்பதில்லை. அந்த ஒற்றைவரியை முகநூலில் வாட்ஸப்பில் படித்திருப்பார்கள். அதன்மீது ஏதாவது அரைவேக்காடு அளித்த விளக்கத்தையும் படித்திருப்பார்கள். எஞ்சியபலர் எதையும் படித்துப் புரிந்துகொள்பவர்கள் அல்ல.

இது அவரது வழக்கமான திமிர். இவர் அவருடைய வாசகர்களையும் அப்படித்தான் மதிக்கிறார். இவரது பின் தொடரும் நிழலைப் படித்த பின்புதான் லெனின் பற்றி அறிந்து கொண்டதாக அவரது வாசகர்கள் கூறியதாக தடம் நேர்காணலில் கூறியிருந்தார். லெனின் யார் என்று தெரியாத மண்ணாந்தைகள் என்று தன்னுடைய வாசகர்களையே கூறுகின்ற ஜெமோ, விமர்சனம் செய்பவர்களை வேறெப்படி அழைப்பார்! இது அவரது வழக்கமான வசைதான்.

என்னுடைய முந்தைய பதிவில் சொன்னது போல “அந்த அழகியல் எழவு” கருத்து அந்த கதாபாத்திரமான  ஔசேப்பச்சனின் கருத்து என்றும் அந்த கதாபாத்திரத்தின் இயல்பு அது என்று விளக்கித் தள்ளியுள்ளார்.

ஔசேப்பச்சன் நிஜமல்ல. வாழ்ந்த நபர் அல்ல. “பத்து லட்சம் கண்றாவிகள்” என்பது ஒரு உண்மைக் கதை அல்ல.

அந்த கதையும் ஒரு முழுமையான புனைவு. அதில் வரும் பாத்திரங்களும் புனைவு. ஆகவே புனைவு பாத்திரம் சொல்கிற அனைத்திற்கும் படைப்பாளிதான் பொறுப்பு. படைப்பாளி தன் கருத்துக்களை தான் படைக்கும் பாத்திரங்கள் வழியேதான் வாசகர்களுக்கு கடத்துகிறான்.

அவரது கலவை அழகு குறித்து ஜெமோ அளிக்கும் விளக்கம் இங்கே

ஔசேப்பச்சன் தொடர்ச்சியாக தன்னைத்தானே கிண்டல் செய்துகொள்கிறான்- தன் சாதி, தன் மதம், தன் தெய்வம் ஆகியவற்றை. கூடவே தொடர்ச்சியாக உயர்சாதியை, இந்துமதத்தை, பாரதிய ஜனதாவை நையாண்டி செய்கிறான் அதேபோல கம்யூனிசத்தையும்

அந்த நையாண்டிப் பார்வையில் ஒன்றுதான் அந்த வரி. இந்த சற்றே அறிவார்ந்த, தெனாவெட்டான, கொஞ்சம் போக்கிரித்தனமான நையாண்டி என்பது கேரள கிறிஸ்தவர்கள் எப்போதுமே இந்துமதம் மற்றும் நாயர் நம்பூதிரி சாதிகள் மேல் வைப்பது. இதை அங்குள்ள சூழல் ஒருவகையில் ஏற்றுக்கொள்கிறது. அது கேரளப்பண்பாட்டின் ஒரு அம்சம்.

இக்கதைகளில் ஔசேப்பச்சன் நாயர் சாதி பற்றி என்னென்ன சொல்கிறான் என்பதை பார்ப்பவர்களால் அச்சூழலை புரிந்துகொள்ள முடியும். அவன் சொல்லும் பெரும்பாலான விமர்சனங்கள்  ‘டீஸன்ஸியின் நிலையிலிருந்தும் கீழே செல்பவை. ஆனால் அது ஒரு பண்பாட்டுச்சூழல்

என்று சொல்லும் ஜெயமோகனிடம் ஒன்று கேட்க வேண்டியுள்ளது. டீஸன்ஸியின் நிலையிலிருந்தும் கீழே செல்பவை ஔசேபச்சனின் விமர்சனங்களா அல்லது ஔசேபச்சனின் பெயரில் உங்கள் எழுத்துக்களா?  இதுதான் கேரள பண்பாட்டு சூழல் என்று சொல்கிறீர்களே, இது கேரளாவில் உள்ளவர்களுக்கு தெரியுமா? இத எழவெடுத்த கதையை மலையாளத்தில் எழுதியிருக்கலாமே?

அடுத்து அவர் சொல்வது இன்னும் மோசம்…

நேரடியாக ஆசிரியனே விளக்கவேண்டியிருப்பது ஒரு தலையெழுத்துதான். வேறுவழியே இல்லை. ஔசேப்பச்சனின் அந்த கிண்டல் உத்தேசிப்பதுநீங்கள் கொண்டாடும் அழகு என்பது நீங்கள் உரிமைகொண்டாடுவது போல இனத்தூய்மை அல்லது இன மேன்மையில் இருந்து வந்தது அல்ல, இனக்கலப்பில் இருந்து வந்ததுஎன்பதுதான்.

இன்னும் சொல்லப்போனால். ’நீங்கள் மிலேச்சன் என்று சொல்பவர்களின் ரத்தம்தான் நீங்கள்என்பதுதான் அந்த வரியின் நேரடிப் பொருள். அந்தக்கதையின் ஒட்டுமொத்தத்தில் அந்த வரி எப்படி முக்கியமானது என்பதை வாசகர்கள் உணரலாம். அதை நான் ஏற்றுக்கொள்கிறேனா , நான் அதைச் சொல்கிறேனா என்பது அல்ல இங்கே கேள்வி. உயர்சாதியினர் மீது கேரள கிறிஸ்தவர்களின் நையாண்டி [அல்லது உண்மையானவிமர்சனம் அது என்பதுதான்.

விளக்கம் என்கிற பெயரில் இங்கேதான் ஜெமோவின் விஷம் வெளிப்படுகிறது.

“உயர்சாதியினர் மீது கேரள கிறிஸ்தவர்களின் நையாண்டி [அல்லது உண்மையானவிமர்சனம் அது என்பதுதான்.”  என்று கேரள கிறிஸ்துவர்களுக்கும் மற்ற மதத்தினருக்கும் இடையே சிண்டு முடிகிற கீழ்த்தரமான புத்திதானே இது!

“அதை நான் ஏற்றுக்கொள்கிறேனா , நான் அதைச் சொல்கிறேனா என்பது அல்ல இங்கே கேள்வி” என்று ஒரு  safety clause  போட்டுக் கொள்வதில்தான் இவரது பொய்மையும் மோசடியும் அம்பலமாகிறது. இவர் உருவாக்கிய பாத்திரம் பேசுவதை இவர் சொல்வதாக எடுத்துக் கொள்ளாமல் வேறு யார் சொல்வதாக எடுத்துக் கொள்ள முடியும்?

இவர் கிண்டலாக எழுதியதை புரிந்து கொள்ள இலக்கிய வாசிப்பு, அறிவுத்திறன், நுண்ணுணர்வு இருக்க வேண்டுமாம்.  இது அனைத்தும் உள்ளதால்தான் உங்களின் சூழ்ச்சியும் தீய எண்ணமும் புரிகிறது.

செல்ஃபி கேள்வி மூலமாக அவரது உள்ளக்கிடக்கை தெளிவாகிறது.

அதற்கு கோபித்துக்கொள்ள வேண்டியவர்கள் உயர்சாதியினர். இவர்கள் அதை ஏதோ தாழ்ந்த சாதியினருக்கு எதிரானதாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

முதலில் தாழ்ந்த ஜாதி என்ற சொற்றடரே தவறு. தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். இது ஜாதிய ஆணவத்தின் வெளிப்பாடு.  இரண்டாவது அவர்கள் அழகற்றவர்கள் என்பதுதான் ஜெமோ சொல்ல வருவது. நுண்ணுணர்வு உள்ளதால்தான் ஜெமோவின் சதி புரிந்து கண்டிக்கிறோம்.

இந்த கதை மூலம் ஜெமோ என்ன எதிர்பார்த்துள்ளார் என்பதும் செல்ஃபி கேள்வி மூலம் புரிகிறது.

அதற்கு கோபித்துக்கொள்ள வேண்டியவர்கள் உயர்சாதியினர்.

யாரையெல்லாம் இவர் கலவைக்குருதி என்று சொல்கிறார். அதையின் அந்த பத்தியில் குறிப்பிட்டுள்ளவர்களை மட்டும் சொல்கிறேன்.

கொங்கணி பிராமணர்கள்,
மாத்வ பிராமணர்கள்,
இஸ்லாமியர்கள்,
நாயர்கள்,
நம்பியார்கள்

இஸ்லாமியர்களைத் தவிர இதரர்கள் யாரும் தமிழகத்தில் பெருமளவில் கிடையாது.

ஏற்கனவே சங்கிகள் நடத்தி வரும் பொய்ப் பிரச்சாரத்தால் கடுப்பாக இருப்பவர்களை கொஞ்சம் சீண்டி விட்டால் அவர்கள் கோபம் கொண்டு திருச்செங்கோட்டில் பெருமாள் முருகனுக்கு நிகழ்ந்தது போல தனக்கும் ஏதாவது நடக்கும்.

புளிச்ச மாவு விவகாரத்தில் கேசை ஸ்ட்ராங் செய்ய மருத்துவ மனையில் கையில் தண்ணீர் பாட்டிலோடு பெட்டில் அமர்ந்து சீன் போட்டது போல மீண்டும் ஒரு சீன் போடலாம் என்று நினைத்தவருக்கு பிரச்சினை திசை மாறிப் போனதில் வெறுப்பும் கோபமும் உச்சத்திற்கு போய் விட்டது.

இன்று எழுதும் இளம் எழுத்தாளர்கள் எழுத ஆரம்பிக்கும்போதே இந்தவகையான அசட்டு உணர்ச்சிகர மிரட்டல்கள், அவதூறுகளுக்கு ஆளாவார்கள் என்றால் மெல்லமெல்ல ஓர் அறியாத ஜாக்ரதை உணர்ச்சி வரும். அது படைப்பூக்கத்திற்கு எதிரானது.

என்று முதலைக்கண்ணீர் வடிக்கிறார்.

சொல்லப்போனால் ஜெமோ மீதான கண்டனங்கள் இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு பொறுப்புணர்வை கற்றுத்தரும். அபத்தமான எழுத்துக்களை தவிர்க்க வேண்டும் என்ற எச்சரிக்கை வரும். சமூக சூழலில் நஞ்சைக் கலக்கக் கூடாது என்று அக்கறையை, அவசியத்தை  ஜெமோ பெறும் அடிகள் அவர்களுக்கு கற்றுத்தரும்.

ஓர் எழுத்தாளன் யாராக இருந்தாலும் தன் படைப்பில் தடையின்றி வெளிப்படுவதே முறையானது. ஒரு சிறு  மூடக்கும்பல் முற்போக்கு என்றும் அரசியல் சரி என்றும் சொல்வதை ஏற்று அவன் எழுதவேண்டியதில்லை. அவ்வாறு எழுதுபவன் எழுத்தாளன் அல்ல. அவ்வாறு எழுதச்சொல்லி கூச்சலிடுபவர்கள், எழுதுபவனை அவதூறுசெய்பவர்கள் மாபெரும் கலாச்சார அழிவுச்சக்திகள்

தன் படைப்பில் வெளி வரும் எழுத்துக்களுக்கும் தனக்கும் தொடர்பு கிடையாது, அது அந்த கதாபாத்திரம் சொன்னது என்று தப்பிக்க நினைக்கும் ஜெமோ, நீர்தானய்யா அழிவு சக்தி.

“அதை நான் ஏற்றுக்கொள்கிறேனா , நான் அதைச் சொல்கிறேனா என்பது அல்ல இங்கே கேள்வி” என்று சொல்கிற உம் மோசடியைப் புரிந்து கொள்ளாமல் உம்முடைய பிற்போக்கு சங்கி அரசியலை அறிந்து கொள்ளாமல்  உம்மையும் ஒரு படைப்பாளி என்று ஆராதிக்கிறதே  அதுதானய்யா சிறு மூடக் கும்பல். . .

பிகு: நீல நிறத்தில் உள்ளதெல்லாம் ஜெமோவின் செல்ஃபி கேள்வி, பதிலில் உள்ள பகுதிகள்


3 comments:

  1. சவுக்கடி

    ReplyDelete
  2. ஆமாம். யார் இந்த ஜெயமோகன்?

    ReplyDelete
  3. தொடர் பிரச்சனைகளை ஏற்படுத்தி தன்னை லைம் லைட்டில் ைவைத்துக் கொள்ளும் யுத்தி

    ReplyDelete