Showing posts with label அனாமதேயம். Show all posts
Showing posts with label அனாமதேயம். Show all posts

Friday, February 13, 2026

பருத்தியில் சிக்கிக்கொண்ட மோடி மந்திரி

 


அமெரிக்காவுடன் இந்தியா ஏற்படுத்திக் கொண்ட அடிமாட்டு, அடிமை ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்று புரோக்கர் மந்திரி பியூஷ் கோயல் கதை விட்டுக் கொண்டிருந்தார். 

ஆனால் அவர் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து "இந்திய விவசாயிகளின் நலனை அமெரிக்க கட்டளைக்கு அடிபணிந்து விட்டுக் கொடுத்து விட்டோம்" என்று ஒப்புக் கொண்டு விட்டார்.

இந்திய ஆடைகளின் இறக்குமதிக்கு 18 % வரி விதிக்கும் அமெரிக்கா, வங்க தேச ஆடைகளின் இறக்குமதிக்கு 0 % வரி மட்டுமே விதித்துள்ளதே, அதனால் இந்திய ஆடைத் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்களே என்று கேள்வி கேட்டதற்கு 

"வங்க தேசம் போல நாமும் மூலப் பொருளை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து அதனை பதப்படுத்தி, ஆடையாக்கி ஏற்றுமதி செய்யும் போது நமக்கும் 0 % வரிதான் விதிக்கப்படும். இதற்கான உடன்பாடு விரைவிலேயே எட்டப் படும்? 

என்று பியூஷ் கோயல் சொல்லியுள்ளார்.

ஆடைக்கான மூலப் பொருள் எது?

பருத்தி.

பியூஷ் கோயல் சொல்லியபடி அமெரிக்கப் பருத்தியை நாம் இறக்குமதி செய்யப் போகிறோம்.

அமெரிக்க பருத்தியை இறக்குமதி செய்வதால் இந்திய பருத்தி விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

இந்தியாவில் பருத்தி முக்கியமான பணப் பயிர்.

130 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் இந்தியாவில் பருத்தி பயிரிடப் படுகிறது. பத்து மாநிலங்களில் 60 லட்சம் விவசாயிகள், பருத்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

உள் நாட்டு ஆடை உற்பத்திக்கு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தி பயன்படத்தப்படும் என்றால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பருத்தியின் நிலை என்ன? இந்திய பருத்தி விவசாயிகளின் நிலை என்ன ஆகும்?

ஆக இந்திய பருத்தி விவசாயிகளின் நலனை பின்னுத் தள்ளி அமெரிக்காவிலிருந்து பருத்தி வாங்கப் போகிறது மோடி அரசு. 

வங்கதேசத்தில் கூட  பருத்தி விளைகிறதே! அந்த விவசாயிகளுக்கு பாதிப்பு கிடையாதா என்று எவனாவது மூடச்சங்கி அனாமதேயமாக ஆங்கிலத்தில் பின்னூட்டம் இடுவான். அந்த அனாமதேயம் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

வங்க தேசத்தில் வெறும் 45000 ஹெக்டேர் நிலத்தில்தான் பருத்தி விளைகிறது.  அதிலும் 1,70, 000 விவசாயிகள்தான் ஈடுபடுகின்றனர். வங்க தேச ஆடைத்தொழில் எப்போதுமே இறக்குமதி செய்யப்படும் பருத்தியை நம்பித்தான் இருக்கிறது.

ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிதல்ல

என்பது போல

மோடி அரசுக்கு துரோகங்கள் புதிதல்ல . . .

Monday, December 15, 2025

அந்த வக்கீல்கள் அனாமதேயங்களா?

 


நேற்றைய ஆங்கில இந்து நாளிதழில் ஒரு செய்தி பார்த்தேன். 

தி.குன்றம் தீர்ப்பாளரை பதவி நீக்கம் செய்தால் ஒட்டு மொத்த நீதித்துறையே நிலை குலைந்து போய்விடும் என்பதால் அவரை பதவி நீக்கம் செய்ய அளித்துள்ள மனுவை நிராகரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் உள்ள வக்கீல்கள் மக்களவை தலைவருக்கு கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளார்களாம்.



சரி, இதை அனுப்பியவர்கள் யார் என்று பார்த்தால் இந்த செய்தியில் யாருடைய பெயரும் இல்லை. எந்த வழக்கறிஞர் அமைப்பின் பெயரும் இல்லை. ஜாதி, மத அமைப்புக்களின் பெயர் கூட இல்லை. இந்த மனுவில் எத்தனை வக்கீல்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்ற விபரமமும் இல்லை. ஆனால் ஒரு லட்சத்து இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தீர்ப்புக்கள் வழங்கியுள்ளார் என்ற சங்கிகளின் கட்டுக்கதை மட்டும் மனுவில் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் சங்கிகள் எப்படி அனாமதேயமாக, போலி ஐடிக்களில் பின்னூட்டம் போடுவார்களோ அது போல சபாநாயகருக்கு அனாமதேயமாக, மொட்டைக் கடிதம் அனுப்பி விட்டார்கள் போல. . .


Thursday, February 29, 2024

கரும் புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதை . . .

 

மதுரை மண்ணின் பெருமையாக, அடையாளமாக திகழும் எம்.பி தோழர் சு.வெங்கடேசன் அவர்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்து ஒரு கோழை, அனாமதேய, அநாகரீக, அசிங்க, நேர்மையில்லாத, திருட்டுக் கூட்டம் "கண்டா வரச் சொல்லுங்க" என்றொரு சுவரொட்டி அடித்து ஒட்டு தோழர் சு.வெ, அந்த சுவரொட்டி முன்பாக கெத்தாக நின்று சுவரொட்டி ஒட்டிய அந்த திருட்டுக் கும்பலை "வா, வா" என்றழைக்கிறார்.


சமூகத்தில் ஒளிந்து கொண்டு அயோக்கியத்தனம் செய்வதற்கென்றே ஒரு கூட்டம் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் போலிப் பெயர்களில், அனாமதேயமாக வன்மம் கக்கும் ஜந்துக்கள்,

போலிப்பெயரில் மஞ்சள் பத்திரிக்கைகளில் எழுதும் அசிங்கப்பிறவிகள்,

மொட்டைக்கடிதம் மூலம் வளர்த்த மரத்தையே அசைத்துப் பார்க்க நினைக்கும் துரோகிகள்.

இவர்கள் அனைவரையும் கண்டறிந்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதை மீதேற்றி அம்பலப்படுத்த வேண்டும்.

ஒளிந்து கொண்டிருந்தாலும் மண்டை மீதுள்ள கொண்டையை மறைக்கத் தெரியாத மடையர்கள் இவர்கள். ஆகவே கண்டறிவது சுலபம். 

Wednesday, January 10, 2024

நியாயமில்லை இந்தியடிமை மாலனே!

 


இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் சேதுபதி சொன்ன கருத்தும் அதற்கு மூத்த்த்த்த்த எழுத்து வியாபாரி மாலன் போட்ட பின்னூட்டமும் கீழே உள்ளது.


நவீன தாராளமயமாக்கல் கொள்கையை அமலாக்கி அரசு அனைத்திலிருந்தும் விலக வேண்டும் எனும் டிமோவை ஆதரித்து அந்த அனைத்து அயோக்கியத்தனத்துக்கும் புல்லரிக்கும் விளக்கம் கொடுக்கும் மாலனுக்கு இங்கே தமிழ்நாட்டு அரசு இந்தி கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்து தர வேண்டுமாம்.

கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் தான் சொன்னதற்கு முரணாக எழுதினால் விட்டு விட முடியுமா?

முதலில் ஒரு பின்னூட்டம் போட்டேன். சூடு போதாது என்பதற்காக இன்னொரு பதிவும் போட்டேன்.


இதற்கெல்லாம் கவலைப்படுகிற ஜென்மமா அது? 

வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை இல்லாத ஜந்து.

பிகு: ஒரு அனாமதேயம் ஒன்று உள்ளது. ஒரு காலத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஜந்து. நானுமே பிச்சை போட்டுள்ளேன். அது இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒரு அசிங்கமான பெயருடன் வந்து பின்னூட்டம் போடும். அதுவும் வெ.மா.ரோ.சூ.சொ இல்லாத ஜந்துதான்.

Thursday, December 22, 2022

அயோக்கியர்களின் புகலிடம் – கொரோனா அச்சுறுத்தல்

 

ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர், கொரோனா பரவலை தடுக்க உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், இல்லையென்றால் பாரத் ஜோடா யாத்திரையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

 கொரோனா அச்சுறுத்தல் என்பது வெறும் வெட்டிச்சாக்கு. பாஜகவிற்கும் மோடிக்கும் ராகுல்காந்தியின் நடைப்பயணம் எரிச்சலையும் அச்சத்தையும் கொடுத்திருக்கிறது என்பதுதான் யதார்த்தம். அதை தடுத்து நிறுத்த அவர்கள் கையிலெடுத்துள்ள ஆயுதம் கொரோனா அச்சுறுத்தல். மோடியின் அற்ப புத்தியைத்தான் சுகாதாரத்துறை அமைச்சரின் கடிதம் வெளிப்படுத்துகிறது.

 தங்களுக்கு பிடிக்காத, எரிச்சலூட்டும் நிகழ்வை தடுத்து நிறுத்த இந்த கொரோனா அச்சுறுத்தல் என்ற கீழ்த்தர உத்தியை பயன்படுத்தியதை கண்ணுற்ற அனுபவம் எங்களுக்கும் உண்டு.

 அந்த அனுபவத்தை பொது வெளியில் பகிர்வதா, வேண்டாமா என்று நீண்ட நேரம் மனதுக்குள் ஒரு போராட்டம் நடத்திய பின்பே இதை எழுதுகிறேன். மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் கடிதம் அந்த சம்பவத்தை  நினைவு படுத்தி விட்டது.

 ஒரு வரலாற்று நிகழ்வுக்குப் பின் இருந்த சதி ஏற்படுத்திய எரிச்சலை இப்பதிவின் மூலமாக ஆற்றிக் கொள்ளலாம் என்ற முயற்சியே.

 மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் எங்கள் சங்கத்தின் தென் மண்டல மாநாட்டை எங்கள் வேலூர் கோட்டச்சங்கம் பொறுப்பேற்று 13.08.2022 முதல் 15.08.2022 வரை மிகச் சிறப்பாக நடத்தினோம். 26 வருடங்களுக்கு பிறகு கிடைத்த வாய்ப்பு என்பதால் எங்கள் தோழர்கள் மிகுந்த உற்சாகத்தோடு, அர்ப்பணிப்போடு செயலாற்றினார்கள், நிதியை வாரி வாரி வழங்கினார்கள். நாங்கள் நிர்ணயித்த தொகையைக் காட்டிலும் அதிகமாக கொடுத்தவர்கள் ஏராளம்.

 ஒரு புறம் மாநாட்டுப் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்த போது, தோழர்களின் உற்சாகத்தை, மாநாட்டுப் பணிகள் வெற்றிகரமாக நடப்பதை பொறுக்க இயலா சில தீய சக்திகள் அரசின் அதிகார மையங்கள், ஊடகங்கள் ஆகியோருக்கு மொட்டைக் கடிதங்களையும் போலி பெயர்களில் மின்னஞ்சல்களையும் அனுப்பிக் கொண்டே இருந்தார்கள்.

 மாநாடு தொடங்குவதற்கு முதல் நாள், அஞ்சல் ஊழியர் அணுகுகிறார், நீங்கள் அனுப்பிய சில கடிதங்களில் ஸ்டாம்ப் ஒட்ட தவறி விட்டதால் திரும்பி விட்டது, ட்யூ கட்ட வேண்டும் என்று சொல்கிறார். ஏதோ வில்லங்கம் இருப்பது போல உணர்ந்ததால் பணத்தை கொடுத்து வாங்கிக் கொண்டோம்.

 இரண்டு நாளிதழ்களுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் காவல்துறை கண்காணிப்பாளருக்கும் அனுப்பப்பட்ட கடிதங்கள். சாதாரண கவரில் அனுப்புனர் முகவரி “எல்.ஐ.சி ஊழியர் சங்கம்” என்று கையால் எழுதப்பட்டு இருந்ததால்தான் அஞ்சல் ஊழியர் எங்களிடம் வந்திருந்தார்.

 அந்த கடிதம் வெவ்வேறு ஆட்களால் எழுதப்பட்ட தோற்றத்தில் இருந்தாலும் ஒரே மாதிரி தட்டச்சு செய்யப்பட்ட கடிதம்தான்.

  “கொரோனா காலத்தில் மாநாடு நடத்த அனுமதிக்கக் கூடாது. கேரளாவில் பன்றிக் காய்ச்சல் பரவுவதால் கேரளாவைச் சேர்ந்தவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ள வருவதால் தமிழ்நாட்டிலும் பன்றிக்காய்ச்சல் பரவி  தமிழ்நாட்டில் பெரும் உயிரிழப்பு நடக்கும். டெல்லியில் இஸ்லாமியர் மாநாடு உருவாக்கிய விளைவுகள் போல தமிழ்நாட்டில் இம்மாநாட்டின் மூலம் நிகழும்”

 இதுதான் அக்கடிதத்தின் சாராம்சம். எங்கள் கைகளுக்கு அக்கடிதங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்காததால் மண்டையை மறைத்தாலும் மண்டைக்கு வெளியே இருந்த கொண்டையை மறைக்க மறந்து விட்டார்கள்.

 பாவம் அவர்கள் வேறு யாருக்கெல்லாம் கடிதம் அனுப்பினார்களோ, அவர்கள் எல்லாம் அதனை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார்கள் போல.

 “இன்று போய் நாளை வா” திரைப்படத்தில் ராதிகாவை காரில் வைத்து துபாய்க்கு கடத்திப் போக காமெடி வில்லன் கூட்டம் திட்டம் போடும். புறப்பட்ட கொஞ்ச நேரத்துலயே பெட்ரோல்  இல்லாமல் கார் நின்று போகும். ஏண்டா  பெட்ரோல் போடலியா என்று மெயின் வில்லன் அடியாளை கேட்க துபாயில பரோட்டா கிடைக்குமான்னு தெரியாததால் அந்த காசுல பரோட்டா தின்னுட்டோம் என்பார். அது போல ஸ்டாம்ப் வாங்கி கவரை அனுப்ப பணிக்கப்பட்டவர் அந்த காசை எதற்கு பயன்படுத்தினாரோ, சதியின் ஆதாரம் எங்களிடம் சிக்கியது.

 “எவ்வளவோ பாத்தாச்சு, இதையும் பார்ப்போம்” என்று அதை அலட்சியப் படுத்தி விட்டு மாநாட்டை நடத்தினோம். பங்கேற்ற அனைவராலும் பாராட்டப் பட்ட மாநாடு என்ற மன நிறைவைப் பெற்றோம். வேலூர் கோட்டத்தின் ஒவ்வொரு தோழரின் பெருமிதமாக தென் மண்டல மாநாடு அமைந்தது. 















































 இப்பதிவில் பகிர்ந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் மாநாட்டின் பிரம்மாணடத்தைச் சொல்லும்.

 தீய சக்திகளின் வயிறு பொசுங்கியது.  தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனாக அவதூறுகளோடு அடுத்த மொட்டைக் கடிதாசி பறந்தது. இம்முறை அவர்கள் ஸ்டாம்ப் ஒட்டியிருந்தார்கள். ஆனாலும் யாருக்கெல்லாம் அனுப்பியிருந்தார்களோ, அவர்களே அதை எங்களுக்கு கொடுத்து விட்டார்கள்.

 கொரோனா அச்சுறுத்தல் என்று அற்பத்தனமாக செயல்படும் ஒன்றிய அரசும் அசிங்கப்படப் போகிறது.

Friday, April 22, 2022

கொண்டை மறந்த அனாமதேயத்திற்காக .

 


யாரோ ஒருவர் அனாமதேயமாக இளையராஜா பற்றிய ஒரு பதிவில் அளித்த பின்னூட்டத்தை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.


Every body has got the right to voice their personal opinion. Don't expect him to toe your lines.  do not dictate your terms to Ilayaraja.

 

If you dont like the comments of ilayaraja just leave it.

you cannot tell a great musician just to stick with music. In a democratic setup when a nobody like Su venkatesan is airing his opinions why cant the great ilayaraja?

 

பாவம் கடைசி வரியில் தோழர் சு.வெங்கடேசனை இழுத்து தன் மண்டையில் இருக்கும் சங்கிக் கொண்டையை மறைக்க மறந்து விட்டார்.

 

அவருக்கு நான் அளித்த பதில் கீழே.

 

ஆமாங்கய்யா. இளையராஜாவுக்கு தன் கருத்தை சொல்ல எல்லா உரிமையும் இருக்கத்தான் இருக்கு. மோடியை அண்ணல் அம்பேத்கரோடு அபத்தமா ஒப்பிட்டதால்தான் இப்போ சர்ச்சை. இதுவே மோடியை ஜயேந்திர சரஸ்வதியோட ஒப்பிட்டிருந்தா யாரு அவரை சீண்டியிருக்கப் போறாங்க. ஒரு போலி மனிதனை இன்னொரு போலி மனிதனோடு ஒப்பிட்டிருக்காருன்னு நாங்க பாட்டுக்கு போயிக்கிட்டே இருப்போம். இசை ஞானி, அரசியல் ஞானம் இல்லாதவரா இருக்காருன்னு ஒரு ஆதங்கம், நமக்கு ரொம்ப பிடிச்ச மனுசனை இப்படி பேச வேண்டியிருக்கே என்ற வருத்தம் இதெல்லாம்தான் அவர் இசையோடு நிறுத்திக் கொண்டால் நல்லது என்று எழுதினேன். அதற்கான உரிமை எனக்கும் இருக்கிறது மிஸ்டர்.

 

அப்புறம் என்ன, சு.வெ NOBODY யா?  இந்த வரியில் உங்க சங்கிக் கொண்டையை மறைக்க மறந்துட்டீங்களே! உங்க அறியாமை, பொறாமையில் தீயை வைக்க! இந்த ஒரு வார்த்தையே பதில் சொல்ல அருகதையற்றவர் நீங்கள் என்பதை உணர்த்துகிறது.

 

சமீபத்தில் தோழர் சு.வெ நிகழ்த்திய ஒரு அற்புதமான உரையை விரைவில் பகிர்ந்து கொள்கிறேன். அதைப் படிச்சாவது அறிவை வளர்த்துக் கொள்ளவும் மிஸ்டர் காவிக் கண்ணாடி.

 

அந்த அனாமதேயத்திற்காகவே தோழர் சு.வெ ஆற்றிய ஒரு முக்கியமான உரையை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 

ஒரு தமிழ் இலக்கிய ஆளுமை, மதுரை மக்களின் பிரதிநிதி, தமிழ்நாட்டின் குரலை மக்களவையில் ஒலிப்பவராக பன்முகத் திறமையும் ஆளுமையும் கொண்ட தோழர் சு.வெங்கடேசனை NOBODY என்று பேசிய அந்த அனாமதேயம் இந்த உரையைப் படித்து விட்டு வெட்கி தலை குனிய வேண்டும். ஆனால் அனாமதேயமாய் ஒளிந்து வாழும் சங்கிகளுக்கு வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை என எதுவுமே கிடையாதே! !

 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது அகில இந்திய மாநாட்டையொட்டி கண்ணூரில் உள்ள சி.எச். கணாரன் நகரில் பண்பாட்டு மாநாடு நடைபெற்றது. கருத்தரங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி வரவேற்புரையாற்றினார். தேசிய சாகித்திய அகாதெமியின் தலைவரும் தலைசிறந்த கவிஞருமான சச்சிதானந்தன் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார். கருத்தரங்கில் எனது உரை;

 

தமிழகமும் கேரளமும் மிக ஆழமான பண்பாட்டு வேர்களைக் கொண்ட இரண்டு மாநிலங்கள். உலகின் மிகப்பழமையான இலக்கிய தொகுப்பான சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுகிற பல திருவிழாக்கள் இன்றைக்கும் கொண்டாடப்படுகிற நிலம் கேரளம் என்பது மிகவும் பெருமைக்குரியது. நான் மதுரையிலிருந்து வருகிறேன். மதுரைக்காரன். ஒரு ஆச்சரியமான விஷயத்தை இங்கே பகிர விரும்புகிறேன். ஓணம் பண்டிகைபற்றி முதன்முதலில் எழுதப்பட்ட குறிப்பு சுமார் 2500 வருடத்திற்கு முன்பு எழுதப்பட்ட மதுரைக்காஞ்சி எனும் சங்க இலக்கியத்தில் இருக்கிறது.

 

மாங்குடி மருதன் எழுதிய மதுரைக்காஞ்சியில் பாண்டிய நெடுஞ்செழியன் காலத்தில் மதுரையில் சிறப்பாக கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகையைப் பற்றி “மாயோன் மேய ஓணம்நன்நாள்” என்று பாடப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகையைப் பற்றிய மிகப்பழமையான இலக்கியப்பதிவு மதுரைக்காஞ்சியாகத்தான் இருக்குமென நினைக்கிறேன். அதுமட்டுமல்ல, 2500 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பெயரில் கொண்டாடப்படும் சிறப்புகுறிய விழாவாக ஓணம் பெருவிழா இருக்கிறது.

 

வஞ்சித்த வாமனை அல்லாமல், வஞ்சிக்கப்பட்ட மாபலி சக்கரவர்த்தியை கொண்டாடுவதே ஓணம் பண்டிகை. கேரளம் எப்போதும் அநீதிக்கு எதிரானவற்றையே தனது அடையாளமாக கொண்டது.

 

இந்தப் பண்பாட்டுக் கருத்தரங்கில், முதலில் ஒரு வரலாற்று நிகழ்வுக்கான எனது பாராட்டுகளை பதிவு செய்ய நினைக்கிறேன். அது வெறும் நிகழ்வல்ல, இந்திய பண்பாட்டு வரலாற்றின் இருள்கிழித்த பாய்ச்சலானதொரு முன்னெடுப்பு.வைக்கத்தில் நடந்த தீண்டாமை கொடுமைக்கு எதிராக அன்றைய சென்னை மாகாணத்தின் காங்கிரஸ் தலைவராக இருந்த தந்தை பெரியார் நேரடியாக வந்து போராட்ட களத்தில் இறங்கினார். அவர் எடுத்த மிக முக்கியமான இயக்கம் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்கிற இயக்கம். டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழகத்தில் அதற்குச் சட்டம் கொண்டு வந்தார். ஆனால் நீதிமன்றத்தின் தலையீட்டால் அதை நிறைவேற்ற முடியவில்லை. தந்தை பெரியார் தனது இறுதி உரையில், ''அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் நிலையை உருவாக்க முடியவில்லை. அது எனது நெஞ்சில் தைத்த முள் '' என்று சொன்னார். நண்பர்களே பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளினை அகற்றிய முதல் அரசு கேரளாவில் இருக்கிற தோழர் பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணியின் அரசு.

 

இறைவனுக்கு முன்பு வேறுபாட்டிற்கு இடமில்லை. ஏற்றத்தாழ்விற்கு இடமில்லை. ஒரு தீபச்சுடர் அனைவருக்கும் சமமாய் ஒளி அளிப்பதைப் போல, இறைத்தளம் பாகுபாடின்றி இருக்க வேண்டும் என்பதை கருவறைக்குள் செயல்படுத்திக் காட்டியவர்கள் கம்யூனிஸ்டுகள். இந்திய பண்பாட்டு வரலாற்றில் இது மகத்தானதொரு பாய்ச்சல். இதனை செய்து காட்டிய தோழர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசுக்கு எனது பாராட்டுகள்.

 

இன்றைக்கு நம்மைச்சுற்றி என்ன நடந்து கொண்டு இருக்கிறது? இறைவனின் பெயரால் எவ்வளவு ஏற்றத்தாழ்வுகள். வேறுபாடுகள். கர்நாடகத்தில் ஜிகாப்பில் துவங்கி ஹலாலில் வந்து முடிந்திருக்கிறது. நேற்றைக்கு முன்தினம் தில்லியின் மேயர் சொல்கிறார் நவராத்திரி பண்டிகை இருப்பதால் மாமிசம் உண்ணக்கூடாது, பூண்டு உண்ணக்கூடாது, வெங்காயம் சாப்பிடக்கூடாது என்கிறார். நவராத்திரியில் மாமிச கடைகளை அடைக்க வேண்டும் என்று ஒரு பி ஜே பி எம்பி பேசுகிறார். உணவின் பெயரால் எவ்வளவு சீழ் பிடித்த அரசியல். இறைவனின் பெயரால் எவ்வளவு கீழ்மையான அரசியல்.

 

எல்லா தளங்களிலும் ஒற்றைவாத அரசியலை இந்துத்துவவாதிகள் வேகமாக முன்னெடுத்து வருகின்றனர்.

 

எல்லோருக்கும் பொதுவான ஒற்றை உணவு முறை என்பது இந்தியாவில் எங்கேனும் உண்டா? இந்திய ஆன்மீக மரபிலாவது உண்டா ? கடவுளர்களுக்காவது உண்டா ? சைவ மரபு உங்களுக்குத் தெரியும் சிவனுக்கு என்ன படையல் வைக்க வேண்டும். நெய் கலந்த சுத்த அன்னம்தான் ஓரே படையல். நெய்வேத்தியம் “நிர்மால்யம்”. படைக்கப்பட்டதை மனிதர்கள் சாப்பிடக்கூடாது. காக்கைக்கும் பறவைகளுக்கும் வைக்க வேண்டும். அதுதான் சைவ மரபு.

 

ஆனால் வைணவ மரபில் மனிதன் தனக்கு பிடித்ததையெல்லாம் பெருமாளுக்குப் படைக்கலாம். வடை, பொங்கல், தோசை, பாயாசம், என 300 உணவு வகைகள். அதனைப் பெருமாளுக்குப் படைப்பது மட்டுமல்ல, படைத்ததையெல்லாம் கோயிலிலேயே வைத்து அனைவரும் சாப்பிடலாம்.

 

‘மூடநெய் பெய்து முழங்கை வழிவார

கூடியிருந்து குளிர்தேளோ எம்பாவாய்”

 

என பெருமாளுக்குப் படைத்த அந்த படையலை எடுத்து உண்ணும் போது, நெய் கையெல்லாம் ஒழுகி ஓடும் பெரும் மகிழ்வு பற்றி ஆண்டால் அழகு தமிழில் திருப்பாவையில் பாடுகிறாள்.

 

சிவன் அபிசேக பிரியன் என்றால் விஷ்ணு போஜனப்பிரியன்.சிவனுக்கு நெய் கலந்த சுத்த அன்னம் மட்டுமே படையல். ஆனால் பெருமாளுக்கு எல்லாம் படையல். சிவனுக்குப் படைத்ததை எவரும் சாப்பிடக்கூடாது. பெருமாளுக்குப் படைத்ததை எல்லோரும் சாப்பிடலாம். அதில் சைவ உணவு மட்டுமா கண்ணப்பன் சிவனுக்கு என்ன படைத்தான் மாமிசத்தைப் படைத்தான். அதுவும் வாயில் கவ்விக்கொண்டு வந்த மாமிசத்தை. எச்சில் மாமிசத்தைப் படைத்தான். சிவனுக்கு எச்சில் மாமிசத்தைப் படைத்த கண்ணப்பனை இந்துவல்ல எனச் சொல்ல இந்துத்துவா வாதிகள் தயாரா? அல்லது மாமிசம் உண்ட சிவனை நவராத்தி காலத்தில் வழிபடாதீர்கள் என்று இவர்கள் சொல்வார்களா?

 

ராமனுக்குக் குகன் என்ன படைத்தான். மீன் படைத்தான். மரக்கறி உண்ணும் இராமனுக்கு அசைவத்தைப் படைத்தான் குகன். அப்பொழுது ராமன் ஒரு நிமிடம் முனிவர்களைத் திரும்பி பார்த்தான் புன்னகை புரிந்தான் என்று எழுதுகிறான் கம்பன். அன்பால் படைத்த அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறான் ராமன்.

 

தாங்கள் வணங்கும் கடவுளர்களுக்கு மக்கள் எத்தனை வகையான படையல்களைப் படைக்கின்றனர். எண்ணிலடங்காத கோழிகள், ஆடுகள், மாடுகள், சாராயம், சுருட்டு என வகைவகையான படையல்கள். இந்திய இறை மரபும், இந்திய பண்பாட்டு மரபும் இத்தனை வண்ணங்களை கொண்டதுதான். ஆனால் தங்களின் வாக்கு அரசியலுக்காக நமது வளமான பண்பாட்டினை முற்றிலுமாக சிதைக்க முயல்கிறார்கள். பிராமணிய பண்பாட்டு முறைதான் இந்து பண்பாடாகவும், அதுவே இந்தியப் பண்பாடாகவும் இந்துத்துவவாதிகள் முன்வைக்கிறார்கள்.

 

இந்தியாவில் எத்தனை வழிபாட்டு முறைகள் உள்ளன. கேரள முழுக்க தாந்திரிக வழிபாட்டு முறை, தமிழ்நாடு முழுக்க மந்திர வழிபாட்டு முறை. இதில் ஒரு வழிபாட்டு முறைதான் சிறந்தது, மற்றதை ஏற்க முடியாது என்று சொல்ல முடியுமா ? நான் கேரளத்தின் உதாரணத்தையே கூறுகிறேன். வைணவத்தின் மகாபுருஷர் ராமானுஜர் திருவனந்தபுரம் பத்மாநாப கோவிலுக்குத் தனது சீடர்களுடன் வருகிறார். இங்கே தாந்திரிக முறையில் வழிபாடு நடக்கிறது. அப்போது நம்பூதிரிகளிடம் ராமானுஜர் சொல்கிறார் தாந்திரிக முறையில் வழிபாடு நடத்தாதீர்கள், பஞ்சராட்ச முறையில் வழிபாடு நடத்துங்கள் எனச் சொல்கிறார். சொல்பவர் வைணவத்தின் மகாபுருஷர் ராமானுஜர்.

 

அன்று இரவு நம்பூதிரிகள் எல்லாம் பத்மநாபசாமியிடம் முறையிடுகிறார்கள். எங்கள் வழிபாட்டு முறையை மாற்றச்சொல்கிறாரே எனப் புலம்பி விட்டுப் படுத்துத் தூங்குகிறார்கள். காலையில் எழுந்து பார்த்தால் பத்மநாபசுவாமி கோவிலில் ராமானுஜரின் சீடர்கள் எல்லாம் இருக்கிறார்கள். இராமானுஜர் இல்லை. இராமானுஜரை இங்கிருந்து இரவோடு இரவாகத் தூக்கிக் கொண்டு போய் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பக்கத்தில் திருக்குறுங்குடி வட்டப்பாறையில் கொண்டுபோய் போட்டுவிட்டார் பத்மநாபசுவாமிகள்.

 

 

வழிபாட்டு முறையும், பழக்கமும் அவரவர்களுக்கானது, அதனை மாற்ற யார் வந்தாலும் ஏற்க மாட்டோம், தூக்கி வீசுவோம், அதனையும் இறைவனே செய்வான் என்பது தான் இம்மண்ணின் மரபு, இந்திய ஆன்மீக மரபு.

 

எத்தனை வழிபாட்டு முறைகள் எவ்வளவு வண்ணங்கள் இங்கே இருக்கிறது. ஆனால் இந்தியாவில் கலாச்சாரத்தின் பெயரால், வரலாற்றின் பெயரால், மொழியின் பெயரால், உணவின் பெயரால் ஒன்றைப் பண்பாட்டை நிறுவ முயற்சிக்கிறது இந்துத்துவா கூட்டம்.

 

சில மாதங்களுக்கு முன்பு ஒன்றிய அரசு இந்தியாவின் 12 ஆயிரம் ஆண்டு பண்பாட்டு வரலாற்றை எழுத ஒரு குழு அமைத்தது. அந்த குழுவில் ஒரு தென்னிந்தியர் கிடையாது. சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் கிடையாது. ஒரு தலித் கிடையாது. ஒரு பெண் கிடையாது. வடகிழக்கு இந்தியர் கிடையாது. தமிழறிஞர் ஒருவர்கூட கிடையாது, ஆனால் அமெரிக்காவின் நியூயார்க்கில் இருக்கிற பிராமணர் சங்க செயலாளர் அந்த குழுவில் இருக்கிறார். இதை நாங்கள் எல்லாம் நாடாளுமன்றத்தில் எதிர்த்தோம், விந்திய மலைக்குக் கீழ் இந்தியா இல்லையா? எனக்கேட்டோம். 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து குடியரசுத் தலைவரைச் சந்தித்து மனுக்கொடுத்தோம், தொடர்ந்து போராடினோம். அதன் விளைவு இன்று அந்த குழுவினை மாற்றி அமைப்பதாகவும், அதுவரை அக்குழுவின் செயல்பாட்டை நிறுத்தி வைப்பதாக ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது.

 

நண்பர்களே மிக முக்கியமாக இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றை அவர்கள் மாற்றி எழுத நினைக்கிறார்கள். மேற்கின் தாக்கம் இல்லாமல், கம்யூனிஸ்ட்களுடைய அறிவு சிந்தனை இல்லாமல் இந்தியத் தன்மை கொண்ட வரலாறு என்ற பெயரிலே, அவர்கள் ஆரிய வரலாற்றை எழுத முனைகிறார்கள். எனவேதான் ஆரியர்கள் இந்தியாவில் உதித்தவர்கள் என்றும், சிந்து வழி நாகரிகத்தைச் சரஸ்வதி சிந்து நாகரிகம் எனவும் மாற்றி எழுதுகிறார்கள். சமஸ்கிருதம்தான் இந்திய மொழிகளின் தாய்மொழி என மீண்டும் மீண்டும் கூறுகின்றனர்.

 

சிந்துவெளி நாகரிகம் அது கண்டுபிடிக்கப்பட்ட நாள் தொட்டு அது திராவிட நாகரிகம் என உலக அறிஞர்கள் எல்லாம் ஒத்துக்கொண்ட உண்மை. ஆனால் இன்றைக்குச் சிந்து வழி நாகரிகத்தைச் சிந்து சரஸ்வதி நாகரிகம் என எழுதுகிறார்கள். சரஸ்வதி நதியைக் கண்டுபிடிக்கப் பலநூறு கோடியைச் செலவழிக்கிறார்கள்.

 

சமீபத்தில் உத்திர பிரதேசத்தில் சனோலி என்ற இடத்தில் தொல்லியல் அகழ்வாய்வில் ஓர் தேர் கண்டுபிடிக்கப்பட்டது. அது மகாபாரத காலத்துத் தேர் என்று சொல்லி, அந்த இடத்தை உடனடியாக பாதுகாக்கப்பட்ட இடம் என அறிவிக்கிறார்கள்.

 

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியத் தொல்லியல் துறை சார்பில் ஹம்பியில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. அந்த கருத்தரங்கத்தில் இந்தியாவில் இருக்கின்ற கோவில்களின் கட்டிடக்கலை முழுக்க வேதங்களிலிருந்து உருவான கட்டிடக் கலைதான் எனச் சொல்கிறார்கள். அதற்கு “தேவதாயனம்” என்ற சமஸ்கிருத பெயர் சூட்டுகின்றனர்.

 

இந்தியாவிலேயே மிக அதிக கோவில்கள் இருக்கிற மாநிலம் தமிழ்நாடு. 43 ஆயிரம் கோவில்கள் இருக்கிறது. மிகப்பழமையான 9 ஆயிரம் கோயில்கள் இருக்கும் மாநிலமும் தமிழகம் தான். வேதப்பண்பாட்டிற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டு செழுமை கொண்ட மாநிலம் தமிழகம் என்பதை கீழடி, பொருநை அகழாய்வுகள் எடுத்துரைக்கின்றன. இந்திய கோயில் கட்டிடக்கலை என்பது பெருங்கற்கால நினைவுச்சின்னங்களில் இருந்துதான் தோன்றியது என்பதை மாற்றி வேதங்களில் இருந்து உருவாக்கப்பட்டது என்று எழுத நினைக்கிறார்கள்.

 

இந்திய பெரு மதங்களுக்கு சம்பந்தமில்லாமல் ஆதியிலேயே பண்பாடு செழித்தோங்கியிருந்தது என்பதை நிரூபிக்கும் கீழடி உள்ளிட்ட அகழாய்வுகளை திட்டமிட்டே கைவிட்டு வெளியேறுகின்றனர். உண்மையான கண்டுபிடிப்புகளை கைவிடுவது, மற்றும் மறைப்பது. தங்களுக்கான பொய்களை உருவாக்க வரலாற்றை திரிப்பது, மாற்றுவது என்பது தான் இன்றைக்கு இவர்கள் செய்து கொண்டிருக்கும் முழுநேரவேளை.

 

வரலாற்றுக்கு அடுத்தபடியாக இவர்கள் கைக்கொள்ளும் ஆயுதமாக மொழி இருக்கிறது. இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி சமஸ்கிருதம் என இந்திய நாடாளுமன்றத்தில் பிரதமர் பேசுகிறார். அமைச்சர்கள் பேசுகிறார்கள். சமஸ்கிருதத்தின் முதல் கல்வெட்டு எழுதப்பட்ட காலத்திற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பு பல கல்வெட்டுகள் தமிழ்மொழியில் இருக்கிறது. ஆனால் அந்த உண்மையை பேச மறுக்கின்றனர்.சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 450 கோடி ஒதுக்கப்படுகிறது. இந்தியை தவிர மற்ற எல்லா மொழிகளுக்கும் ஒதுக்கப்படும் நிதியை ஒன்று சேர்த்தாலும் இதற்கு சமமில்லை.

 

இந்தியாவில் மொழியென்றாலே சமஸ்கிருதமும், ஹிந்தியும் தான் இவர்களின் நினைவில் இருக்கிறது.

 

நாடாளுமன்றம் மொழியாலும், பண்பாட்டாலும் ஒற்றை மையப்படுத்தப்படுகிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்படுகிறது. நமக்கு வருகிற செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது. வேதனை அழிக்கிறது. அந்த புதிய கட்டிடத்தில் மொழிபெயர்ப்பு அறை என்ற ஏற்பாடேயில்லை என்று சொல்கிறார்கள்.

 

இன்றைக்கு இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருக்கிறார், இந்தி இல்லாத பிற மாநிலங்கள் எல்லாம் இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனப் பேசியிருக்கிறார். 60 சதவிகிதம் பேர் இந்தி அல்லாத மொழியைத்தான் இந்தியா முழுவதும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் எந்த மொழி மத்தியில் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்றால் எட்டாவது அட்டவணையில் இருக்கின்ற 22 மொழிகளும் இந்திய ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்ற குரல்தான், இந்தியாவின் பன்மைத்துவத்தை வெளிப்படுத்துகின்ற குரல்.

 

இன்றைக்கு உணவு, உடை, வரலாறு, மொழி. வழிபாட்டு உரிமை என அனைத்துத் தளத்திலும் ஒரு கலாச்சார மகாயுத்தத்தை இந்துத்துவா வாதிகள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்து, இந்தி, இந்துஸ்தானி என்ற ஒற்றை கோட்பாட்டை உருவாக்கி. அந்த ஒன்றைக் கோட்டில் இந்தியப் பண்பாட்டு வரலாற்றை நிறுவ நினைக்கிறார்கள்.

 

இந்தியா பன்மை கலாச்சாரத்தின் தாய் நிலம். நூல்களின் தொகுப்புதான் ஆடையின் வண்ணத்தை அலங்காரத்தைத் தீர்மானிக்கிறது. இந்தியர்களாகிய நாம், நமது வண்ணங்களை குலைக்க நினைக்கிற இந்துத்துவா வாதிகளை பண்பாட்டுத் தளத்தில் தீரத்துடன் எதிர்கொள்வோம். இந்த மண்ணில் நடந்த மகா யுத்தங்களில் எல்லாம் மக்களுக்கு எதிரானவர்கள் வீழ்த்தப்பட்டார்கள் என்பதுதான் வரலாறு. அந்த வரலாற்றையே மீண்டும் நிலைநிறுத்துவோம்.”

 

Friday, February 18, 2022

அயோக்கிய அனாமதேயங்களுக்கு அல்ல . . .

 எல்.ஐ.சி பங்குகள் பொது மக்களுக்குத்தானே விற்கப் படுகிறது. அது எப்படி தனியார்மயமாகும் என்று சிலர் கேட்கின்றனர். கீழே நான் பகிர்ந்து கொண்டுள்ள பதிவு, அவர்களுக்கான விளக்கம். பங்கு விற்பனை என்பது தனியார் மயத்தின் முதல் படி என்பதையும் அது ஏன் தேவையில்லாத ஆணி என்பதையும் விளக்குகிற பதிவுகள் இவ்வலைப்பக்கத்தில் நூற்றுக் கணக்கில் உள்ளதையும் படிக்கவும்.

கடந்த சில பதிவுகளில் பின்னூட்டமிட்ட அயோக்கிய அனாமதேயத்திற்கான பதிவு அல்ல இது. ஏனென்றால் அந்த மொழியைக் கொண்டு அது ஒரு கருங்காலி அயோக்கிய அனாமதேயம் என்பது நன்றாகவே தெரிகிறது. அது தன் வன்மத்தை இங்கே வாந்தியெடுத்தால் அசிங்கமாக திட்டப்படும் என்பதை மற்றவர்களுக்கு பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.



*நாளொரு கேள்வி: 17.02.2022*

தொடர் எண்: *626*

இன்று நம்மோடு கோவைக் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் *துளசிதரன்*
########################

*மாயமான் போன்ற அரசின் வாதம்*

*கேள்வி:* பொதுமக்களிடம் தானே பங்குகள் விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்குதானே லாபம் செல்கிறது. இதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது?

*துளசி தரன்*

நாளை பங்குகள் சந்தைக்கு வரும் போது பாருங்கள். எந்த பொது மக்களுக்கு விற்க போகிறார்கள் என்று. எல்.ஐ.சி பங்குகளை வாங்க டி மேட் வங்கிக்கணக்கு வேண்டும். இந்தியாவில் 7 கோடி பேர்தான் வைத்திருக்கிறார்கள். அதில் 4 கோடி பேர்தான் முனைப்போடு இருப்பவர்கள். *ஏதோ ரோட்டுல சைக்கிளில், ஆட்டோவில் செல்பவர்களுக்கு எல்லாம் பங்கு கிடைக்கப் போவது போல பேசுகிறார்கள்.* இவர்களுக்கு காய்கறி சந்தை தெரியும், ஆட்டுச் சந்தை தெரியும்... பங்குச் சந்தை தெரியுமா? 

உயர் நடுத்தர வர்க்கத்தில் ஒரு பகுதிக்கு கிடைக்கலாம். *அவர்கள் கைகளிலும் பங்குகள் தங்காது.* நிறுவன முதலீட்டாளர்கள் கைகளில் போய் விடும். இதுதான் ஏற்கெனவே பங்கு விற்பனை ஆன அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், ஜி.ஐ.சி அனுபவம். அங்கே எல்லாம் சில்லறை முதலீட்டாளர் கைகளில் ஒன்றரை சதவீத பங்குகள் கூட இப்போது இல்லை. 

ஆகவே இது மாயமான். *சீதையை ஏமாற்றி கடத்தியது போல* இன்று பொதுத் துறை நிறுவனங்களை கடத்தப் பார்க்கிறார்கள். 

*செவ்வானம்*