Saturday, November 30, 2019

மரண கலாய் . . .

என்னை சிரிக்க வைத்த ஒரு மீம்.





சீமான் செல்ல வேண்டிய இடம் . . .


இறுதிப்போர் நடக்கும் வேளையில், குண்டுகள் பொழிந்து கொண்டிருந்த போது

சீமான் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை பிரபாகரன் குறிப்பெடுக்கச் சொன்னதாக சீமான் பேசிய காணொளி பார்த்து திகைத்துப் போனேன்.

இதை பொய் என்று வரையறுக்கக் கூடாது.

கற்பனையில் தோன்றுவதையெல்லாம் நிஜமாக கருதி பெருமை பேசும் மன வியாதிக்கு அவர் உள்ளாகியுள்ளார் என்றே தோன்றுகிறது.

அவரது தம்பிகள் சீமான் அபத்தமாக பேசுவதற்கெல்லாம் கை தட்டி அவரது வியாதியை அதிகப்படுத்துவதற்குப் பதிலாக அவரை மன நல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது நல்லது.

சீமான் செல்ல வேண்டிய இடம் மன நல மருத்துவமனைதான்.

சீக்கிரம் குணமாகி வரட்டும்.


Friday, November 29, 2019

தர்பார் பாட்டு - நியாயமே இல்லை



ஒரு புதுப்பாட்டு வெளியாகி ஒரு நாள் கூட முடிவதற்கு முன்பு அது எந்த பாட்டின் நகல் என்று எடுத்து போடுவதெல்லாம் நியாயமே கிடையாது.

இப்படி எல்லாம் ரசிகர்கள் உஷாராக இருந்தால்  பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்! இனி எங்கிருந்து சுடுவார்கள்!

நேற்று தர்பார் பாட்டு வெளியாகி ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே வாட்ஸப்பில் வந்த இரண்டு காணொளிகள் கீழே உள்ளது.




ஏ.ஆர்.முருகதாஸின் முந்தைய படங்களில் கதைத்திருட்டு என்ற குற்றச்சாட்டு வந்தது. தர்பாரில் அது பாட்டிலேயே தொடங்கி விட்டது. படம் வந்தால் என்னென்ன குற்றச்சாட்டுக்கள் வருமோ?

வெடிகுண்டு சாமியாரை மட்டுமல்ல . . .


மக்களவையில் "கோட்ஸே புகழ்" பாடிய காரணத்தால் வெடிகுண்டு சாமியார் மீது பாஜக நடவடிக்கை எடுத்துள்ளதாம். பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து அவரை நீக்கியதே அந்த நடவடிக்கையாம்.

வெடிகுண்டு சாமியார் பிரக்யாசிங் தாகூர் மட்டுமா குற்றவாளி?

நீக்கப்பட வேண்டியவர்கள். நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவர்கள் பட்டியல் மிகவும் பெரியது.

வெடிகுண்டு வழக்கில் சிறையில் இருந்த போலிச்சாமியாருக்கு நாடாளுமன்றத்தில் போட்டியிட இடம் கொடுக்கச் சொன்ன நாக்பூர் குருபீடம், 

போட்டியிட வாய்ப்பு கொடுத்த மோடி, அமித்து வகையறாக்கள்,

ஊரறிந்த கொலைக்குற்றவாளிக்கு வாக்களித்த போபால் தொகுதியின் முட்டாள் வாக்காளர்கள்.

கோட்சே புகழ் பாடியதை பதிவு செய்யாமல் மறைத்த மக்களவைத் தலைவர்.

அவர் ஒன்றும் கோட்சே பற்றி பேசவில்லை, உத்தம்சிங் பற்றி பேசினார் என்று பொய் சொல்லி திசை திருப்பி முட்டு கொடுக்க முயற்சித்த நாடாளுமன்றத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி.

இப்படி பட்டியல் மிகப் பெரியது.

வெடிகுண்டு சாமியார் மீது எடுக்க வேண்டிய சரியான நடவடிக்கை என்பது 

அவரது எம்.பி பதவியை பறித்து பிணையை ரத்து செய்து மீண்டும் சிறைக்கு அனுப்புவதுதான்.




Thursday, November 28, 2019

சீமான் சிஷ்யன்டா!

சீமானின் சீடர்கள் சீமான் போலவே இருப்பார்கள் என்பதற்கான உதாரணம் கீழே.


சீமானின் லேட்டஸ்ட் காணொளி பார்த்து திகைத்து நிற்கிறேன். மாலை அது பற்றி


Wednesday, November 27, 2019

மாலன் ஒரு விஷ ஜந்து



பொதுவாக தமிழ்த்திரைப்படங்களின் வில்லன் எல்லாம் தோற்றத்திலோ அல்லது நடிப்பிலோ கொடூரத்தை வெளிப்படுத்துபவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

பி.எஸ்.வீரப்பா, நம்பியார், அசோகன், மனோகர் போன்ற ஆதி கால வில்லன்களாக இருந்தாலும் சரி

ரஜனிகாந்த், சத்யராஜ், ரகுவரன், நாசர் போன்ற பிந்தைய கால வில்லன்களுக்கும்

இந்த இலக்கணம் பொருந்தும்.

இந்த இலக்கணத்திற்கு மாறான ஒரு வில்லனை கமலஹாசன் நடித்த "சத்யா" படத்தில்தான் முதல் முறை பார்க்க முடிந்தது.

மென்மையான தோற்றத்தோடு கனவான் போல காட்சியளித்த வில்லன் கிட்டி. கமலஹாசனிடம் காரியம் முடிந்த பிறகுதான் உண்மையான நிறம் தெரியும். அப்போதும் கூட அந்த மென்மை மாறவேயில்லை.

அது போன்றதொரு வில்லன்தான் விஷ ஜந்து மாலன்.

மோடி ஆட்சிக்கு வந்த பின்பு மென்மையான கனவான் முகத்திரை கழண்டு போன  விஷ ஜந்துக்களில் முக்கியமான ஜந்து மாலன். 

ஆம்

மனிதன் என்று அழைப்பதற்கான எந்த யோக்கியதாம்சங்களும் இல்லாததால் ஜந்து என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

சங்கி என்று தன்னை வெளிப்படையாக அறிவித்துக் கொள்ளும் குறைந்தபட்ச நேர்மை கூட இல்லாமல் நடுநிலை நாடகம் போடுவதுதான் அந்த ஜந்துவின் வாடிக்கை. 

மகாராஷ்டிராவில் அஜித் பவார் மூலம் குதிரை பேரம் நடத்திய போது சங்கிகளை ஆதரித்து எழுத முடியாத கையாலாகததனத்தை, ஆனால் மனதிற்குள் ஏற்பட்ட குதூகலத்தையும் மறைக்க முடியாமல் அந்த ஜந்து சரத் பவார் தன்  முன் வினைப்பயனை இப்போது அனுபவிக்கிறார் என்று எழுதி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டது. 

அத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை அந்த ஜந்து.

பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டதும் அப்படியே  பதறி விட்டது. 

ஆளுனரின் உரிமையில் தலையிட நீதிமன்றத்திற்கு உரிமை உண்டா என்று எழுதி தான் ஒரு அக்மார்க் சங்கி என்று நிரூபித்து அடுத்த பேமெண்டுகளை உறுதிப்படுத்திக் கொண்டு விட்டது. 

நீதிமன்ற ஆணை அமித் ஷாவின் அற்புதம் தொடர அனுமதிக்காது என்பதால்தான் அதற்கு அந்த பதற்றம்.

நடுநிலை வேடத்தைக் கலந்து தான் ஒரு சங்கி என்பதை வெளிப்படையாகக் கூறும் வரை இந்த ஜந்துவிற்கு  துடைப்ப அடி தொடர்ந்து கொண்டே இருக்கும் . . . 


Tuesday, November 26, 2019

மூன்று நாள் முதல்வரும் அற்புதமா?



வாஜ்பாய்,
யெடியூரப்பா

வரிசையில் 

நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே பதவி விலகியவர்கள் பட்டியலில் 

பட்னாவிஸ் இணைந்துள்ளார்.

குதிரை பேரத்தின் மூலம் மொத்த வியாபாரம் வெற்றிகரமாக நடந்திடும் என்ற நம்பிக்கையில் பதவி மோகம் கொண்டு ஜனநாயக விரோதமாக பதவியேற்றவர்கள் என்று வரலாறு இவர்களைச் சொல்லும்.

அமித் ஷா வின் அற்புதம் என்று இந்த அசிங்கத்தை வர்ணித்தவர்கள் இந்த ராஜினாமாவிற்கு என்ன தலைப்பு கொடுப்பார்கள்?

பிகு 1

ஆனாலும் மகாராஷ்டிர மாநில கட்சிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கர்னாடகாவில் செய்த அசிங்கத்தை எப்போது வேண்டுமானாலும் சங்கிகள் மகாராஷ்டிராவில் முயற்சிப்பார்கள். 

பிகு 2

மூமூமூமூமூமூத்த பத்திரிக்கையாளரின் வெட்கம், மானம், ரோஷம் இல்லாத கருத்துக்கள் பற்றி தனியாக எழுத வேண்டும். நாளை எழுதுவேன்.






Saturday, November 23, 2019

மானஸ்தனெல்லாம் எங்கய்யா போனீங்க?


கர்னாடகாவில் குமாரசாமியும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்த போது "தேர்தலின் போது எதிர்த்து போட்டியிட்டு விட்டு இப்போது ஆட்சி அமைப்பது நியாயமா?"

என்று 

அறம் பேசிய மானஸ்தர்களே,

தேர்தலுக்குப் பிறகு சிவசேனா முரண்டு பிடித்த போதும் பின்னர் மாற்று அரசு அமைக்க முயற்சித்த போதும்

"இதெல்லாம் பிளாக் மெயில்"

என்று விமர்சித்த அறவான்களே,

சரத் பவார் குடும்பத்துக்குள் குழப்பம் விளைவித்து தேர்தலின் போது எதிர்த்து போட்டியிட்ட தேசியவாதக் காங்கிரஸ் கட்சியை விலைக்கு வாங்கி அமைக்கப்பட்ட மகாராஷ்டிர ஆட்சியைப் பற்றி

வாய் திறக்காமல் கள்ள மவுனம் சாதித்தால் கூட பரவாயில்லை. ஆனால்
இதுதான் அமித் ஷாவின் சாமர்த்தியம் என்று பாராட்டுகிறீர்களே, 

எங்கே போனது உங்கள் அறம்?
எங்கே இருக்கிறது உங்கள் நியாயம்?

பிகு

பழைய கோவா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேச, பீகார் உதாரணங்கள் கிடக்கட்டும், சமீபத்தில் ஹரியானாவில் ஓம்பிரகாஷ் சௌத்தாலா கட்சியுடன் கூட குதிரை பேரம் நடத்தி ஆட்சி அமைத்த போது கூட இந்த மானஸ்தர்கள் "அறம்" என்று  எந்த   எழவையும் பேசவில்லை என்பதை  நினைவில்  கொள்ளுங்கள். 

எச்சரிக்கையா இருங்க கமல்




நீங்களும் ரஜனிகாந்தும் சேர்ந்து கூட்டணி அமைக்கப் போறீங்க போல இருக்கு. யார் முதல்வர் வேட்பாளர் என்பதை அப்பாலிக்கா முடிவு செய்யலாம்னு (இன்னும் ஆரம்பிக்கப்படாத, ஆரம்பமாகுமே என்றே தெரியாத) உங்கள் கூட்டணிக்கட்சித் தலைவர் ரஜனிகாந்த் சொல்லி இருக்காரு.

ஆனாலும் நீங்க அவருகிட்ட ஜாக்கிரதையா இருக்கனும். அவரோட  முதல் படத்தில இருந்தே அவர் உங்களுக்கு வில்லன்தான்.

ஞாபகம் இருக்கா?

அபூர்வ ராகங்கள் பைரவி, மூன்று முடிச்சு செல்வி, 16 வயதினிலே மயிலு ஆகியோர் உங்களுக்கு கிடைக்காம போனதுக்கு யார் காரணம்?

அதிலயும் நீங்க தண்ணியில விழுந்து தடுமாறும் போது முகத்தை கொடூரமா வச்சிக்கிட்டு,  எம்.எஸ்.வி வாய்ஸ்ல பாடிக்கிட்டு  துடுப்பு போட்டு நீங்க மூழ்கிப்போனதை வேடிக்கை பார்த்தது யாரு?

ஏதோ மூணு சதவிகித வோட்டு வாங்கினீங்க. அந்த மூணு பேரை பறி கொடுத்தது மாதிரி, இவரோடு சேர்ந்து அந்த மூணு சதவிகிதத்தையும் இழந்திடாதீங்க . . .

பிகு

இதை நகைச்சுவைப் பதிவாக கருதுபவர்கள் நகைச்சுவையாகவும்
அரசியல் பதிவாக கருதுபவர்கள் அரசியாலாகவேவும்
எடுத்துக் கொள்ளலாம்.


Friday, November 22, 2019

கொரிய திரைப்பட விழா பாத்துடுங்க . . .


இன்றிலிருந்து சென்னையில் மூன்று நாட்கள் கொரிய திரைப்பட விழாவாம்.

வாய்ப்புள்ளவர்கள் அவசியம் பார்த்து விடுங்கள்.

எந்த படத்திலிருந்து எந்த காட்சிகளை நம் தமிழ்ப்படங்களில் சுட்டுள்ளார்கள் 

என்பது மட்டுமல்லாமல்

இனி சுட்டாலும் தெரிந்து கொள்ள

அரிய வாய்ப்பு.

வாய்ப்புள்ளோர் நழுவ விடாதீர் . . .

Thursday, November 21, 2019

மோடி குடும்ப துட்டு 42,336 கோடி ரூபாய்


ஸ்பெக்ட்ரம்  ஏலம் எடுத்த தொகையை கட்டுவதற்கு தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள்  இரண்டாண்டு கால அவகாசம் கொடுத்துள்ளது மத்தியரசு. 

அதாவது இன்று கட்ட வேண்டிய தொகையை இரண்டாண்டுகள் கழித்து கட்டிக் கொள்ளலாம். அதுவும் உடனடியாக அல்ல. அடுத்து ஒரு ஐந்து ஆண்டுகளில் சமமாக பிரித்துக் கட்டிக் கொள்ளலாம்.

இந்த முக்கிய முடிவை நேற்று மோடி தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டம் எடுத்துள்ளது.

நிதிப்பற்றாக்குறை காரணமாக பாரத் பெட்ரோலியம், ஷிப்பிங் கார்ப்பரேஷன், கண்டய்ணர் கார்ப்பரேஷன் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது மட்டுமல்லாமல் நிர்வாகப் பொறுப்பையும் கை மாற்றி விடுவது என்றும் அதே கேபினட் கூட்டம் முடிவெடுத்துள்ளது.

ஒரு புறம் நிதிப்பற்றாக்குறை என்று சொல்லி பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பதும் அதே நேரம் அரசுக்கு தனியார் நிறுவனங்கள் அளிக்க வேண்டிய 42,336 கோடி ரூபாய்க்கு கால அவகாசம் அளிப்பதும் (நாளை ரகசியமாக தள்ளுபடி கூட செய்து விடுவார்கள்) எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!

இதை ஊழல் என்று சொல்லாமல் வேறெப்படி அழைப்பது?

அரசுக்கு வர வேண்டிய பணத்திற்கு கால அவகாசம் கொடுக்க அது என்ன மோடி குடும்ப சொத்தா?


Wednesday, November 20, 2019

காதலுடன் துருக்கிக்கு பாகிஸ்தான் வழியே


ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்ற வாலிபர் திங்கட்கிழமையன்று பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

துருக்கியில் உள்ள தனது காதலியை சந்திக்க பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வழியாக துருக்கி செய்யப் பயணப்பட்ட போது தான் பாகிஸ்தானில் கைதானதாக அவர் சொன்னதாக சொல்லப்படுகிறது. அவரிடம் பாஸ்போர்ட்டோ அல்லது வேறு ஆவணங்களோ எதுவும் இல்லை. 

2017 ஏப்ரல் முதலே அவர் காணவில்லை என்று அவருடைய பெற்றோர் சொல்லி உள்ளார்கள்.

இரண்டரை வருடங்களாக அவர் எங்கே இருந்தார்?

நடந்து போவதாக இருந்தால் கூட இத்தனை நாட்களில் இரண்டு முறை துருக்கி போய் விட்டு வந்திருக்கலாமே?

பாஸ்போர்ட், விசாவோடு நேரடியாக துருக்கிக்கு போக முடியும் என்பது ஒரு மென்பொருள் பொறியாளருக்கு தெரியாதா?

இதில் என்னமோ மர்மம் இருக்கிறது. 

அதை மறைக்க காதல் என்ற சாயம் பூசப்படுகிறதோ?

பிரசாந்திற்கும் அவரை பாகிஸ்தானுக்கு அனுப்பியவர்களுக்கும் மட்டுமே வெளிச்சம்!




Tuesday, November 19, 2019

எம்.பி க்கு ஜிலேபி மட்டும் போதாதாம் . .





மாசுப் பிரச்சினையால் புது டெல்லி மக்கள் சொல்ல முடியா சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

இது பற்றி விவாதிக்க கடந்த வெள்ளிக்கிழமையன்று சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. புது டெல்லி அரசு, புது டெல்லியைச் சேர்ந்த எம்.பி க்கள் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் ஒரு பாஜக எம்.பி. அவரும் கலந்து கொள்ள வேண்டும்.  ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை.

முக்கியமான பிரச்சினை குறித்த கூட்டத்தில் கூட கலந்து கொள்ள முடியாமல் அப்படி என்ன தலை போகிற வேலையைச் செய்து கொண்டிருந்தார்?

அவருடைய சக முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் அந்த ரகசியத்தை ட்விட்டரில் போட்டோவுடன்  போட்டு உடைத்து விட்டார்.

“இந்தூரில் நாங்கள் சூடான ஜிலேபியை ருசித்துக் கொண்டிருக்கிறோம்”

ஏதோ கிரிக்கெட் பந்தயத்திற்கு தொலைக்காட்சி வர்ணனை கொடுக்க போய்விட்டார் நாடாளுமன்ற உறுப்பினர் கவுதம் கம்பீர்.

தொலைக்காட்சியில் வர்ணனை செய்தால் துட்டு கிடைக்கும். மாசுப்பிரச்சினை தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டால்  என்ன கிடைக்கும். அந்த கூட்டத்தில் கூட ஜிலேபி, சமோசா எல்லாம் கூட கிடைக்கலாம். ஆனால் வர்ணனை செய்வதற்கு கிடைக்கும் துட்டு கிடைக்குமா?

பிரச்சாரத்தின் போதே தன்னைப் போல தோற்றமளித்தவரை திறந்த ஜீப்பில் நிற்க வைத்து தான் ஓய்வெடுத்துக் கொண்ட சொகுசுப் பேர்வழிக்கு ஓட்டு போட்டது தவறு என்று இனியாவது அத்தொகுதி மக்கள் உணரட்டும்.

Monday, November 18, 2019

விடியும் முன்பே

கதிரவன் தன் பயணத்தை துவங்கும் முன்பே அதிகாலையில் இன்று எடுத்த படம்


அச்சம் ஏன் மோடி?



நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. அதை முன்னிட்டு நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்னாள் காஷ்மீர் முதல்வரும் தற்போதைய மக்களவை உறுப்பினருமான ஃபாரூக் அப்துல்லா அவர்கள் நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்க வழிவகை செய்ய அவரை வீட்டுக் காவலிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்த மோடி அரசு அதை நிராகரித்து விட்டது.

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியிருந்தால் ஃபாரூக்கை விடுதலை செய்திருக்கலாமே?

அச்சம் ஏன் மோடி?

Sunday, November 17, 2019

நேருவே காரணம். நிர்மலா அல்ல . . .


என்னமோ நேருவிற்கு தொலை நோக்கு பார்வை இருக்கு, அதனால்தான் இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினதா பீற்றிக் கொள்கிறீர்களே, 

நிஜமாகவே அவருக்கு தொலை நோக்கு பார்வை இருந்திருந்தால்,  நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன், மோடி போன்றவர்கள் ஆட்சிக்கு வருவார்கள், அவர்கள் பொதுத்துறை நிறுவனங்களை விற்பார்கள் என்று தெரிந்திருக்குமல்லவா? 

இன்று பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுவதற்கு அவற்றை உருவாக்கிய நேருதான் காரணமே தவிர, அதை விற்கிற மோடியோ, நிர்மலாவோ காரணமல்ல. 

அவற்றை நேரு உருவாக்காமல் இருந்திருந்தால் மோடியாலும் நிர்மலாவாலும் அவற்றை விற்க இயலுமா? தேசத்தின் சொத்துக்களை விற்கிறார்கள் என்ற அவப்பெயரும் அவர்களுக்கு வந்திருக்காதே!

பாவங்க அவங்க!


இதையாவது மாலன் ஏற்பாரா?

கீழே உள்ளது மத்தியரசின் புள்ளி விபர நிறுவனமே வெளியிட்ட தகவல். நுகர்வோர் செலவினம் குறைந்து கொண்டு வருகிறது என்ற உண்மை பொருளாதார மந்தத்தின் வெளிப்பாடு.



இதையாவது பொருளாதாரத்திற்கான  நோபல் பரிசு பெற்ற  மாலன் ஒப்புக் கொள்வாரா அல்லது

டாஸ்மாக்கில் விற்பனை அதிகரித்துள்ளதால் பொருளாதாரம் சுபிட்சமாக இருக்கிறது என்று முட்டு கொடுப்பாரா?

வாங்கும் துட்டுக்கு முட்டுத்தானே கொடுக்க வேண்டும் . . .

Saturday, November 16, 2019

கொல்லப்பட்ட பூசாரியின் வாக்குமூலம்




இன்று வாட்ஸப்பில் இந்த கட்டுரை கிடைக்கப்பெற்றது. சங்கிகளின் பக்தி வெறும் பகல் வேஷம் என்பதையும் ராமர் கோயில் என்பது வெறும் அரசியல் ஆதாயத்திற்கானது என்பதை ராம ஜென்ம பூமி கோயிலின் தலைமை பூசாரியாக இருந்த லால்தாஸ் என்பவர் அம்பலப்படுத்துகிற கட்டுரை இது.

அதனால் அவர் படுகொலை செய்யப்படுகிறார்.

சற்று நீண்ட கட்டுரை. ஆனால் மிகவும் முக்கியமானது.  அவசியம் முழுமையாக படியுங்கள், பரப்புங்கள்.



நவம்பர் 16 - அயோத்தி ராம ஜென்ம பூமி கோவில் தலைமை பூசாரி 

லால்தாஸ் கொல்லப்பட்ட தினம்

ஆனந்த் பட்வர்த்தன், ஆவணப்பட தயாரிப்பாளர், இயக்குநர்

முன்னாள்  பூசாரி சுட்டுக் கொல்லப்பட்டார்”  என்ற சிறிய அளவிலான செய்தி ஒன்று 1993 நவம்பர் 17 அன்று மாலை  செய்தித்தாளில்  வெளியாகி இருந்தது. அது  பூசாரி  லால்தாஸாக இருக்கக் கூடாது என்று உடனடியாக  நான் வேண்டிக் கொண்டேன்

ஆனாலும் மோசமான அந்த அச்சம் நனவாகிப் போயிற்று. அயோத்தியில்  அவரை நாங்கள்  பேட்டி  கண்டு  மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ராம் கே நாம் ஆவணப்படம் பகிரங்கமாக திரையிடப்பட்டு இரண்டு  ஆண்டுகளுக்குப் பிறகு, லால்தாஸ்  படுகொலை  செய்யப்பட்டிருந்தார்.

அவரை முதலில் நாங்கள் பேட்டி கண்ட  அந்த மாலைப் பொழுதும் ஒரு சோகமான சந்தர்ப்பமாகவே  அமைந்திருந்தது

அது 1990 அக்டோபர் 30,  தனது  அரசின் பாதுகாப்பு  ஏற்பாடுகளை  மீறிஒரு பறவையாலும் மசூதி மீது பறக்க முடியாதுஎன்று முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ்  பெருமை பேசினாலும், விஷ்வ ஹிந்து பரிசத்-பஜ்ரங் தளம்-

பாரதிய ஜனதா கட்சி  கூட்டணியின் தலைமையிலான  ஹிந்து  கும்பல்  பாபர் மசூதியைத்  தாக்குவதில் வெற்றி  கண்ட நாள்.

மசூதி மீதான தாக்குதலை இரண்டாவது தீபாவளி என்று கொண்டாடியவர்களால்  வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் சப்தத்தை நாங்கள் அமர்ந்திருந்த கோவிலுக்கு வெளியே  எங்களால் கேட்க முடிந்தது

விஎச்பியின்  நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்து வந்த பூசாரி லால்தாஸ்  ஏற்கனவே பல மரண அச்சுறுத்தல்களையும், ஒரு கொலை முயற்சியையும்  எதிர்கொண்டவராக இருந்தார்

 பாஜக வேட்பாளரைத் தோற்கடித்த பைசாபாத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மித்ராசென் யாதவ் சில மாதங்களுக்கு முன்னர்தான் சுடப்பட்டு காயமடைந்திருந்த நிலையில், லால்தாஸுக்கு மெய்க்காப்பாளர் ஒருவரை அரசாங்கம் அளித்தது

அந்த சமயத்தில் ராம ஜென்ம பூமி  கோயிலின்  தலைமை பூசாரியாக லால்தாஸ் இருந்தார். சமீப காலமாக பிறர் மீது தாக்குதலை நடத்துகின்ற விஎச்பியின் ஆற்றல் அதிகரித்திருப்பதைக் காரணம் காட்டி, மீண்டும் அமைதி திரும்பும் வரை சில நாட்களுக்கு கோவிலுக்கு செல்ல வேண்டாம் என்று அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டிருந்தது
ஆனாலும் அமைதி ஒருபோதும் திரும்பவில்லை.

அக்டோபர் 30 அமைதியாக கழிந்து விடும் என்றே நாங்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அயோத்தி, உத்தரபிரதேசம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் வகுப்புவாத பதட்டங்கள் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றன

 லால்தாஸ் எதிர்பார்த்தவாறே, ஆயிரக்கணக்கான உயிர்கள் பறி போயின. நாட்டில் மிகவும் ஆபத்தான  துருவமுனைப்பு  ஏற்பட்டிருக்கிறது.

அவரிடம் நேர்காணலை நாங்கள் பதிவுசெய்த போது, அந்த நேர்காணல்  பகிரங்கமாகக்  காட்டப்பட்டால்  அவருக்கு  பாதுகாப்பு இருக்குமா என்று லால்தாஸிடம் நாங்கள் கேட்டோம்

தனது செய்தி மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதே  தன்னுடைய மிகப்பெரிய விருப்பம் என்றும், தனிப்பட்ட முறையில் தனக்கு ஏற்படுகின்ற விளைவுகளைப்  பற்றி தான் பொருட்படுத்தப் போவதில்லை என்றும் அவர்  என்னிடம் உறுதியாகத் தெரிவித்தார்.

மீண்டும் ஒரு முறை நாங்கள் சந்தித்தோம். 1992 ஜனவரியில் லக்னோவில் திரையிடப்பட்ட அந்த ஆவணப்படத்தின் முதல் காட்சிக்கு லால்தாஸ் வந்திருந்தார்.  

அந்த சமயம் மாநிலத்தை ஆண்ட பாஜக, கோவில் பூசாரி பதவியில் இருந்து அவரை  நீக்கியிருந்தது. ஆவணப்படத்தின் திரையிடம் முடிந்த பிறகு, ஹிந்து மதத்தில் உள்ள உலகளாவிய கூறுகள்  மீதான தனது உறுதிப்பாட்டை லால்தாஸ் உறுதி செய்தார்

அந்த படத்தை  மிகவும் நேசித்த அவருடைய பாதுகாப்பு குறித்து எனக்கிருந்த அச்சங்களை  ஒதுக்கித் தள்ளி விட்டு, அயோத்தி பகுதி முழுவதும்  அதனைத் திரையிடப் போவதாக கூறினார்

அவர் முகத்தில் இருந்த புன்னகையே அவர் முன்வைத்த ஒரே வாதமாக இருந்தது. அதுவே  அவரைப்  பற்றிய  எனது  இறுதி நினைவாகவும் இருக்கிறது.

ராம் கே நாம் (கடவுளின் பெயரால்) என்ற ஆவணப்படத்திற்காக பூசாரி லால்தாஸுடன் 1990 அக்டோபர் 30 அன்று நடத்தப்பட்ட நேர்காணலின் பகுதி இங்கே தரப்படுகிறது.

கேள்வி: கோவிலைக் கட்டுவதற்கான விஸ்வ ஹிந்து பரிசத்தின் திட்டம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

லால்தாஸ்: இது விஎச்பி விளையாடுகின்ற அரசியல் விளையாட்டு. கோவில் கட்டுவதற்கு ஒருபோதும் தடை விதிக்கப்படவில்லை.
 தவிர பாரம்பரியத்தின் படி, கடவுளின் சிலைகள் வைக்கப்படுகின்ற எந்த இடமும் கோவில் என்பதே ஹிந்துக்களின் வழக்கம். சிலை இருக்கின்ற எந்தவொரு கட்டிடமும் கோவிலாகவே ஹிந்துக்களால் கருதப்படுகிறது

தனியாக கோவிலைக் கட்ட வேண்டும் என்று அவர்கள் விரும்பினால், அதற்காக ஏற்கனவே சிலைகள் இருக்கின்ற அமைப்பை ஏன் இடிக்க வேண்டும்?

இதைச் செய்ய விரும்புபவர்கள் உண்மையில் இந்தியா முழுவதும் பதட்டத்தை உருவாக்கி ஹிந்து வாக்குகளைப் பெறுவதிலே அதிக அக்கறை கொண்டவர்களாக மட்டுமே இருக்கின்றனர்.

 அவர்கள் இங்கே நிகழும் இனப்படுகொலை பற்றி - எத்தனை பேர் அதில் கொல்லப்படுவார்கள், எவ்வளவு சொத்துக்கள் அழிக்கப்படும் என்பது பற்றி அல்லாது முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்ற பகுதிகளில் ஹிந்துக்களுக்கு என்ன நடக்கும் என்பது பற்றியும் கவலைப்படாதவர்களாகவே இருக்கிறார்கள்.

1949இலிருந்து எந்தவொரு முஸ்லீமும் இங்கு எந்த பிரச்சனையையும் உருவாக்கவில்லை. ஆனால்பாபரின் புத்திரர்கள் ரத்தம் சிந்த வேண்டும்என்று இவர்கள் முழக்கமிட ஆரம்பித்த போது, முழு தேசமும் கலவரத்தில் மூழ்கி ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

 தாங்கள் உருவாக்கிய பதட்டங்களுக்கு இன்னும் அவர்களிடம் இருந்து எந்தவொரு வருத்தமும் தெரிவிக்கப்படவில்லை. ஹிந்து-முஸ்லீம்களுக்கிடையிலான ஒற்றுமை இப்போது வரை நம் நாட்டில் நிலவி வருகிறது. ஹிந்து கோவில்களுக்கு முஸ்லீம் ஆட்சியாளர்கள் நிலம் வழங்கி இருக்கின்றனர்- ஜானகி காட் மற்றும் அனுமன் கார்னியின் சில பகுதிகள் முஸ்லீம்களாலேயே கட்டப்பட்டன

இந்த சொத்துக்கள் அனைத்தையும் முஸ்லீம் ஆட்சியாளர்களே கோவில்களுக்கு நன்கொடையாக வழங்கினர்

மேலும், அமீர் அலி மற்றும் பாபா ராம்சரண் தாஸ் ஆகியோர் ஜென்ம பூமியைப் பிரித்து, முஸ்லீம்கள் ஒரு பகுதியிலும், ஹிந்துக்கள் இன்னொரு பகுதியிலும் வழிபாடு செய்து கொள்ளலாம் என்று ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் நல்லிணக்க உடன்படிக்கையை ஏற்பாடு செய்தனர்

இப்போது அந்த முயற்சிகள் அனைத்தும் வீணடிக்கப்பட்டுள்ளன.

நிதி மற்றும் அரசியல் லாபத்திற்காகவே இந்தியாவை உலுக்கிய அனைத்து வகுப்புவாதக் கலவரங்களும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன

ராமரின் பிறப்பிடத்துடன் அவை எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை, இன்று வரையிலும் விஎச்பியைச் சார்ந்தவர்கள் ஒரு.தடவை கூட இங்கே வழிபாடு நடத்தியதில்லை என்பதோடு  அவர்கள் ஒருபோதும் இங்கே கடவுளை வணங்கியதில்லை என்பதையும் ராம ஜென்ம பூமி கோவிலின் பூசாரியான நான் நேர்மையுடன் சொல்லிக் கொள்கிறேன்

அதற்கு மாறாக அவர்கள் வழக்குகளைத்  தொடர்ந்து வழிபாடுகளுக்கான தடைகளை மட்டுமே உருவாக்கினர்

இதனால் உள்ளூர் மக்கள் அவர்களை ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. ஆனால் பேராசை கொண்ட சில பூசாரிகளை அவர்கள் பணம் கொடுத்து வாங்கிக் கொண்டார்கள்

ராமர் கோவிலுக்கான செங்கல் பிரச்சாரத்தை தொடங்கிய அவர்கள் தங்களுக்கான சொந்த அறைகளையும் வீடுகளையும் கட்டிக் கொண்டார்கள். பொதுமக்களை முட்டாளாக்கி பெரிய பெரிய கட்டிடங்களை அவர்கள் உருவாக்கினார்கள்

பல்வேறு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் அளவிலான  நன்கொடைகளை அவர்கள் பெற்றுக் கொண்டனர். அவற்றில் சில நன்கொடைகளை  தங்களின் சொந்த வங்கி கணக்கில் பெற்றுக் கொண்டனர்

இதனால்தான் மக்கள் கொல்லப்படும் போது, அது குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை. பணம் மற்றும் அதிகாரத்தின் மீது மட்டுமே அவர்களுடைய  அக்கறை முழுவதும் இருக்கிறது. நல்ல ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புகின்ற உயர்சாதியைச் சேர்ந்தவர்களே ஹிந்து தேசத்தைப் பற்றிப் பேசுவதும், ராமரின் பெயரால் வன்முறையை உருவாக்குபவர்களாகவும் இருக்கின்றனர்.

 தன்னல மறுப்பு, தியாகம், பொதுவாழ்வின் மீதான அக்கறை ஆகியவை ஒருபோதும் அவர்களிடம் இருந்ததில்லை. தங்கள் சொந்த வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்காகவே மக்களின் மத உணர்வுகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

நடந்து செல்வதற்குப் பதிலாக நாம் பறக்கிறோம். முதல் வகுப்பில் பயணம் செய்து குளிரூட்டப்பட்ட அறைக்குள் வாழ்கிறோம். பொது நன்மைக்காக தியானிப்பதற்கும் வேலை செய்வதற்கும் உலக சுகபோகங்களை நாம் கைவிட்ட நேரங்கள் எல்லாம் மறைந்து போய், இப்போது உலக விஷயங்களுக்குள் முழுமையாக மூழ்கி விட்ட நம்மால் பொருளை மட்டுமே முதன்மையாகக் கொண்டு சிந்திக்க முடிகிறது

வெறுமனே பொருள் ஒழுங்கை மட்டுமே நிலைநிறுத்துகின்ற இன்றைய மதத் தலைவர்களைப் பற்றி நம்மால் என்ன சொல்ல முடியும்? பெரும் வணிகர்கள்ஹிந்து மதத்தை பாதுகாக்க வேண்டும்என்று கூறுகிறார்கள் 
அசோக் சிங்கலைப் போன்ற நாட்டின் பெரும் பணக்காரர்கள், தங்களை ராமரின் பக்தர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள். மக்கள் பட்டினி கிடந்து இறப்பதுதான்  ராமரின் லட்சியமா

நம் நாட்டில் இருக்கின்ற இந்த பெரும் பற்றாக்குறை குறித்து நமது மதத் தலைவர்கள் கவலைப்பட வேண்டாமா? உங்களிடம் பணம் இருக்கும் என்றால் அல்லது பணக்காரர்கள் உங்கள் பேச்சைக் கேட்பார்கள் என்றால், அந்த பணத்தை ஏழைகளுக்கு உதவுவதற்கு என்று நீங்கள் பயன்படுத்த வேண்டாமா

அன்னை தெரசா செய்வதைப் போல? அல்லது கடந்த காலத்தில் நமது மதத் தலைவர்கள் செய்ததைப் போல?

கேள்வி: நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட் என்று உங்களைப் பிடிக்காதவர்கள் குற்றம் சாட்டுகிறார்களே?

லால்தாஸ்: ஒரு கம்யூனிஸ்ட் என்று என்னைச் சொல்வது எனக்கு பெருமை சேர்க்கின்ற விஷயம் ஆகும். உணவு, உடை மற்றும் தங்குமிடம் ஆகியவற்றிற்கான ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உள்ள உரிமை குறித்து கம்யூனிஸ்டுகள் பேசுவதில்லையா

பகவான் ராமரின் கொள்கைகளை நாம் நம்பினால், (ராமாயணத்தை மேற்கோள் காட்டி), “ராமரின் ராஜ்ஜியத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை, அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.” என்பது நமக்குத் தெரியும்

உணவு, உடை, அனைவருக்கும் கல்வி என்று அதையேதான் கம்யூனிஸ்டுகளும் விரும்புகிறார்கள். ராமரின் கொள்கைகளை நம்புகிற நாம், அதே விஷயங்களைச் சொல்கின்ற மற்றவர்களையும் மதிக்கிறோம்.
 குறைந்தபட்சமாகச் சொல்வதென்றால், இனப்படுகொலைகளுக்கு ஒருபோதும் கம்யூனிஸ்டுகள் அழைப்பு விடுத்ததில்லை!

அயோத்தியில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் இதை எதிர்க்க வேண்டும். மற்றவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தி அவர்களின் இதயங்களை நாம் ஒருபோதும் நொறுக்கி விடக் கூடாது.

கேள்வி: இன்று, நம் நாட்டில் ஒரு அலை இருப்பதாகத் தெரிகிறது - உங்களைப் போன்றவர்களுக்கு இருப்பதைக் காட்டிலும் வெறுப்பைப்  பேசுபவர்களுக்கு  மிகப்  பெரிய  ஆதரவு கிடைக்கிறது.

லால்தாஸ்: அது  அப்படி  இல்லை. வெள்ளத்தின் போது, சூறாவளியின் போது, ரயில்களும் கட்டிடங்களும் கீழே விழுந்து விடுகின்றன. சாலைகள், அவற்றின் பயன்பாடுகள் அழிக்கப்படுகின்றன.

 "மழை அதிகமாக இருக்கும்போது, புற்கள் மிகவும் உயரமாக வளர்ந்து சரியான பாதையை கண்டுபிடிப்பது கடினமாகிறதுஎன்ற கவிதை ராமாயணத்தில்  ஆரண்யா காண்டத்தில் இருக்கிறது
அது போன்றே போலித்தனமானவர்கள் பேசும் போது, உண்மை மறைக்கப்படுகின்றது, போதைப் பொருளை  உண்ட ஒருவர் எதற்கும் தகுதியற்றவர் ஆவதைப் போல. அவருக்கு பைத்தியம்  பிடிக்கலாம்,  

நம்மைத் தாக்கலாம், ஏன் தற்கொலைகூட செய்து கொள்ளலாம். வெறித்தனம் கொண்டிருக்கும் தருணத்தில்  ஒருவரின் சிந்திக்கின்ற திறன்  அழிக்கப்படுகிறது

ஆனாலும் இந்த மழைக்காலம் என்பது மிகவும் குறைவான காலமே. இன்று மக்கள் ஒரு வகையான வெறி கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பின்னர் உண்மையை எதிர்கொள்ளும்போது….மக்கள்  தங்களுடைய பகுத்தறிவு  திறனை  மீண்டும்  பெறுவார்கள்.

 **********************************************************************************

1994 ஜனவரி 14 ஃப்ரண்ட்லைன் பத்திரிக்கையில் வெளியான கட்டுரை
********************************************************************************************

தமிழில்
முனைவர் தா. சந்திரகுரு