Thursday, December 30, 2010

பாவம் அவர்கள்! வேறு வழியில்லை போலும்!

ஆனந்த விகடன்  வார இதழ் 2010 ம் ஆண்டின் டாப் பத்து மனிதர்கள்
என்று பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.  அதிலே இடம் பெற்றுள்ள
இருவர் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்
தோழர் பி.சம்பத், மற்றும் குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர்
தோழர் ஜி.லதா. மார்க்சிஸ்ட் கட்சியின் இருவர் இந்த பட்டியலில்
இடம் பெறுவது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. தேவைப்படும்
போது கலைஞர்  சொல்வாரே, ஹிந்துவே சொல்லி விட்டது என்று, 
அது போல அல்ல. விகடன் அளிக்கும்   சான்றிதழ் முக்கியம், 
சிறப்பானது  என்ற  அர்த்தத்தில் எழுதவில்லை.  விகடன் போன்ற
முதலாளித்துவ ஊடகங்களாலும் புறக்கணிக்க முடியாத பணி
என்பதுதான்.

இன்று தீண்டாமை ஒழிப்பிற்கான போராட்டத்தில் மார்க்சிஸ்ட்
கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் தொடர்ந்து நடத்தி
வரும் போராட்டங்களும் இயக்கங்களும் தீண்டாமை ஒழிப்பிற்கு
எதிரான போராட்ட களத்திற்கு, இன்று புதிய பரிமாணத்தை,
வேகத்தை அளித்துள்ளது. பல காலமாக தங்களின் பிரச்சினைகளை 
யாரிடம் சொல்வது என்று அடங்கிக் கிடந்தவர்களுக்கு  புதிய 
நம்பிக்கை பிறந்துள்ளது. 

அதனால்தான் விகடன் போன்ற முதலாளித்துவ ஊடகங்களால்
இப்பணியை புறக்கணிக்க இயலவில்லை.  விகடன் சொன்னது
இருவர். இன்னும் இருப்பவர்கள்  ஏராளம்.  மக்கள்தான் அவர்களின்
உண்மையான நேச சக்தி யார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பட்டியல் நிச்சயம் தமிழக முதல்வருக்கு நிச்சயம்
எரிச்சலூட்டும். அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்கு நானே கோரிக்கை
வைத்து நானே நிறைவேற்றிக் கொண்டேன் என்ற அவரது
பொய்யான தற்புகழ்ச்சிக்கு மாறாக மார்க்சிஸ்ட் கட்சியின் ,
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தொடர் போராட்டம்தான்
காரணம் என்பதை சரியாக சுட்டிக்காட்டியுள்ளது.  அதே போல
குடியாத்தம் பிரச்சினையில் பேச்சுவார்த்தை முறிந்து கைது
செய்யப்பட்டதற்கு முதல்வரின் நேரடி தலையீடுதான் காரணம்
என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் தோழர்
ஜி.ராமகிருஷ்ணன் வெளிப்படையாக குற்றம் சாட்டினார். தானே
கேள்வி எழுப்பி தானே பதில் சொல்கிற, நெருப்பு கலைஞர்
இதற்கு மட்டும் இன்னும் வாய் திறக்கவில்லை.

விகடன் பார்த்ததும் இரண்டு தோழர்களோடும் தொலைபேசியில் 
பேசினேன். அது தங்களுக்கான தனிப்பட்ட பெருமை என்ற 
உணர்வு இருவரிடமும் இல்லை.  எல்லாம் கட்சிதான் என்றார்கள்,
கம்யூனிஸ்டாக. 

பசிக்கு பதிலடி

உள்துறை அமைச்சராக செயல்படுவதற்கு மாறாக மம்தா பானர்ஜியின்
எடுபிடியாக கேவலமான முறையில் நடந்து கொண்ட சிவகங்கை சீமானுக்கு
மேற்கு வங்க முதல்வர் நல்ல பதிலடி கொடுத்துள்ளார். வெட்கம் கெட்ட
சிதம்பரத்திற்கு இதெல்லாம் உரைக்குமா என்றுதான் தெரியவில்லை.


மேற்குவங்கம் குறித்து ஒருதலைப்பட்சமாக மதிப்பீடு ப.சிதம்பரம் கடிதத்திற்கு புத்ததேவ் காட்டமான பதில்


கொல்கத்தா , டிச. 29-



மேற்குவங்க மாநில சட்டம் ஒழுங்குநிலைமை குறித்து மத் திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் மதிப்பீடு பார பட்சமானது என்று மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச் சார்யா கூறியுள்ளார். திரிணா முல் காங்கிரஸ் மாவோயிஸ்ட் கும்பலுடன் பகிரங்கமாக உறவு வைத்திருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.



மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர் களை வாடகைக் கொலையாளி கள் என்று சிதம்பரம் எழுதி யுள்ள கடிதத்தில் கூறியுள்ளதற்கு புத்ததேவ் பட்டாச்சார்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.



மேற்குவங்க மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டிருப் பதாகவும், மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் ஆயுதப்பயிற்சி பெறுவதாகவும் மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு ப.சிதம்பரம் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறிவரும் அவதூறான குற்றச்சாட்டின் அடிப்படை யில், அவரை தாஜா செய்யும் வகையில் இந்தக்கடிதம் எழுதப் பட்டிருந்தது.



இந்தக்கடிதம் மாநில முதல் வருக்கு வந்து சேர்வதற்கு மூன்று நாளைக்கு முன்னதாகவே ஊட கங்களில் கடிதத்தின் உள்ளடக் கம் வெளியானது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு வும், மேற்குவங்க மாநிலக்குழுவும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.



ப.சிதம்பரத்தின் கடிதத்திற்கு உரிய பதில் அனுப்பப்படும் என்று முதல்வர் புத்ததேவ் பட் டாச்சார்யா கூறியிருந்தார். இந் தக்கடிதத்திற்கு செவ்வாயன்று அவர் பதில் அனுப்பினார். கடி தத்தில் கூறப்பட்டுள்ள விஷயம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட தற்கு, கடிதம் உரியவரை சென்று சேர்ந்தபிறகு புதனன்று அது குறித்து தெரிவிப்பதாக அவர் பதிலளித்தார்.



இந்நிலையில், கடிதத்தின் நகல் புதனன்று பத்திரிகைக ளுக்கு வழங்கப்பட்டது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழி யர்களை வாடகைக்கொலை யாளிகள் என்று ப.சிதம்பரத்தின் கடிதத்தில் இடம்பெற்றுள்ள வார்த்தைக்கு புத்ததேவ் பட்டாச் சார்யா கடும் ஆட்சேபமும் கண் டனமும் தெரிவித்துள்ளார். திரி ணாமுல் காங்கிரஸ் தலைவரால் உருவாக்கப்பட்ட இந்த “அரு வருப்பான”வார்த்தையின் பொருள் தெரியாமல் சிதம்பரத் தின் கடிதத்தில் இந்த வார்த்தை இடம்பெற்றுள்ளதாக புத்ததேவ் பட்டாச்சார்யா கூறியுள்ளார்.



மேற்குவங்க மாநில சட்டம்- ஒழுங்கு நிலைமை குறித்து ப. சிதம்பரத்தின் மதிப்பீடு பார பட்சமற்ற ஒட்டுமொத்த மதிப் பீட்டிலிருந்து வெகுதூரம் விலகி யுள்ளது என்று குறிப்பிட்டுள்ள புத்ததேவ், சிதம்பரத்தின் மதிப் பீடு வியப்பளிப்பதாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.



ரகசியம் என்ற பெயரில் அனுப்பப்பட்ட கடிதம் ஊட கங்களில் முன்னதாகவே கசிந்த விதத்தையும் புத்ததேவ் கடுமை யாக விமர்சித்துள்ளார். திரிணா முல் காங்கிரஸ் மாவோயிஸ்ட்டு களுடன் ரகசியமான உறவு என்ற நிலையைத் தாண்டி பகிரங்க மாகவே இணைந்து செயல்படுவ தாகவும், இரண்டு அமைப்பு களின் தலைவர்களும் தொடர்ச் சியாக சந்தித்து உரையாடுவ தாகவும் அவர் குறிப்பிட்டார்.



அரசியல் தொடர்பான மோதல்களில் மார்க்சிஸ்ட் கட்சி யைச்சேர்ந்த 69 ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டுள் ளனர். 723 பேர் படுகாயம் அடைந் துள்ளனர். ஆனால் திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த 32 பேர் பலியாகியுள்ளனர் என்றும், காங் கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.



இத்தகைய மோதல் தமக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்றும், மாநிலத்தின் சில பகுதிகளில் வன்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் புத்ததேவ் பட்டாச்சார்யா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.



மேற்குவங்க மாநிலத்தின் எல்லையில் உள்ள சில இடங் களில் மாவோயிஸ்ட்டுகளின் வன் செயல்கள் நடைபெறுகின்றன. மூன்று மாவட்டங்களில் உள்ள 28 காவல்நிலைய எல்லைகளில் அவர்கள் பரவியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள அவர், காவல் நிலையங்களை அவர்கள் தாக்கு வதோடு ஆயுதங்களையும் கொள்ளையடிக்கின்றனர் என் றும், அவர்களது வன்செயல் களுக்கு அனைத்துக்கட்சியின ரும் இலக்காகியுள்ளனர் என் றும் குறிப்பிட்டுள்ளார்.



மாவோயிஸ்ட்டுகளின் வன் செயல்களை இயன்றவரை எதிர்த்து முறியடிப்பதில் மார்க் சிஸ்ட் கட்சி ஊழியர்கள் ஈடுபட் டுள்ளனர். மாவோயிஸ்ட்டுகளின் வன்செயல்களுக்கு இதுவரை மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் தலைவர்கள் 170 பேர் பலியாகியுள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நீங்கள் அவர்களை குற்றம் சாட்டியுள்ளீர்கள் என்று குறிப் பிட்டுள்ள புத்ததேவ், மாவோ யிஸ்ட்டுகளை எதிர்த்து தீவிரமாக போராடவேண்டியுள்ள நிலை யில், பிரச்சனையின் குவிமையத் தை திசை திருப்புவதாக உங்கள் கடிதம் அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.



மாவோயிஸ்ட்டுகளை தனி மைப்படுத்த நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நடவடிக் கை எடுக்கவேண்டியுள்ளது. இது ஒரு சவாலான பணி என்று குறிப்பிட்டுள்ள புத்ததேவ் பட் டாச்சார்யா, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மத்திய-மாநில கூட் டுப்படைகள் இணைந்து எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக மாவோயிஸ்ட்டுகள் ஒடுக்கப்பட் டுள்ளதை முழுமையாக பட்டிய லிட்டுள்ளார். பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள் ளது. கல்வி நிலையங்கள் இயங்கு கின்றன. வெளியேறிய மக்கள் தங்கள் வாழ்விடங்களில் குடி யேறியுள்ளனர். தொடர்ச்சியான முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.



வேறு மாநிலங்களிலிருந்து ஊடுருவி மாநில எல்லையில் தொல்லைகொடுக்கும் மாவோ யிஸ்ட்டுகளுக்கு எதிரான நட வடிக்கையில் மத்திய-மாநில பாது காப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபடவேண்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், வன் செயலை முடிவுக்கு கொண்டுவர உதவுமாறு அனைத்துக்கட்சி களுக்கும் வேண்டுகோள் விடப் பட்டுள்ளது என்றும், ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் இதற்கு ஒத்துழைக்க மறுக்கிறது என்றும் புத்ததேவ் பட்டாச்சார்யா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி - தீக்கதிர் நாளிதழ்

மாயை அகன்றிருக்குமா?

கடந்த மூன்று நாட்களாக ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள்
மறியல் நடத்தி கைதாகி உள்ளனர்.  ஒவ்வொரு மாவட்டத்
தலைநகரிலும் ஒவ்வொரு நாளும் ஆயிரத்திற்கும்
மேற்பட்டவர்கள் கைதாகி உள்ளனர்.  அதிகமான அளவில்
பெண்கள் இப்போராட்டத்தில் பங்கேற்று கைதாகியுள்ளனர்
என்பதும் குறிப்பிடத்தக்கது.  அதே போல் பொதுவாகவே
போராட்டப் பாதையில் பயணிக்கும் தமிழ்நாடு ஆரம்பப்
பள்ளி ஆசிரியர் கூட்டணி மட்டுமல்லாமல் மற்ற
மூன்று அமைப்புக்களும் கூட இப்போராட்டத்தில்
இணைந்துள்ளது  மிகவும் முக்கியமான விஷயம்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இடைக்கால
நிவாரணம் அளித்து பின்பு ரணம் அளித்தது  அரசு
ஊழியர்களையும் ஆசிரியர்களையும்  வெகுவாக 
பாதித்துள்ளது  என்பதையே  தொடர்ச்சியாக  நடக்கும்
போராட்டம்  உணர்த்துகின்றது. 

என்ன ஆனாலும் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்
தன் பக்கமே நிற்பார்கள் என்ற மாயை தமிழக
முதல்வருக்கு இப்போது அகன்றிருக்கும் எனக்
கருதுகிறேன்.  அவர்கள் மட்டுமே சமூகத்தின் அனைத்து
பகுதி மக்களுமே வெறுப்பில் உள்ளார்கள். ஸ்பெக்ட்ரம்
பணத்தை கொடுத்து அவர்களை விலைக்கு வாங்குவது
சிரமம்தான்.




Sunday, December 26, 2010

வெண்மணியில் சங்கமித்த இன்சூரன்ஸ் ஊழியர்கள்

நேற்று 25 .12 . 2010 அன்றும் வர்க்கப்போரில் உயிர் நீத்த
வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த தமிழகம்
முழுதும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் வெண்மணியில்
திரண்டனர். அஞ்சலி என்பது வெறும் சடங்கல்ல.
அவர்களின் தியாகத்தை நெஞ்சிலேந்தி மனதில்
உரம் பெற்று போராட்டப் பயணத்தை மேலும்
உறுதியாக தொடர்வதற்காகத்தான். வெண்மணி
மண்ணில்ஒவ்வொரு முறையும் கால்
பதிககிறபோதும் நாம் நம்மை புதுப்பித்துக்
கொள்கின்றோம் என்பதுதான்
உண்மை.


ராமையாவின் குடிசையில் வைத்த தீ போராட்ட
உணர்வை அழித்துவிடும் என ஆண்டைகள் போட்ட
கணக்கு தவறு என்றும் அந்த தீ ஒவ்வொரு
உழைப்பாளி நெஞ்சிலும் இன்னமும் எரிந்து
கொண்டிருக்கிறது என்பதை ஒவ்வொரு
ஆண்டு வெண்மணி தினத்தன்றும்
நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.


இவ்வாண்டும் வெண்மணி செல்வதற்கு
முன்பாக திருவாரூரில் சமூக ஒடுக்குமுறை
எதிர்ப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. தென்
மண்டல தலைவர் தோழர் எம்.குன்னிகிருஷ்ணன்
தலைமையேற்க, அகில இந்திய இணைச்செயலாளர்
தோழர் ஜே.குருமூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு
முன்னணியின் துணைத்தலைவர் தோழர்
கு.ஜக்கையன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.



உத்தப்புரம் பிரச்சினையில் காவல்துறையால்
தாக்கப்பட்ட மாதர் சங்கப் பொறுப்பாளர் தோழர்
எஸ்.கே.பொன்னுத்தாய் கௌரவிக்கப்பட்டார்.
எனது எலும்புகளை உடைத்து விட்டால்
உத்தப்புரம் போராட்டத்தை முடக்கி விடலாம்.
மற்ற தலைவர்களை தாக்கினால் அடக்கி விடலாம்
என்று காவல்துறை கருதியது. அப்படி அடங்கிப்
போகின்ற அமைப்பு நாமல்ல என்றும் ஒரு
தோழர் இல்லாவிட்டால் அடுத்த தோழர்
அப்போராட்டத்தை முன்னேடுத்துச்செல்வார் என்று
காவல்துறை அறிந்திருக்கவில்லை என்று அவர்
கூறிய வார்த்தைகள் இன்னும் ஒலித்துக் கொண்டே
உள்ளது.



தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர்
கே.சுவாமிநாதனின் அற்புதமான நிறைவுரையோடு
கருத்தரங்கம் நிறைவு பெற்று வெண்மணி நோக்கிய
பயணம் தொடங்கியது.











தோழர் எம். குன்னிகிருஷ்ணன்





பங்கேற்றோர்





தோழர் எஸ்.கே.பொன்னுத்தாய் கௌரவிப்பு



தோழர் எஸ்.கே.பொன்னுத்தாய்




தோழர் ஜே.குருமூர்த்தி 







தோழர் கு.ஜக்கையன்







தோழர் சுரேஷ் குமார், மதுரை







வெண்மணி இதழிற்கு வேலூர் கோட்டத்திலிருந்து

மேலும் 100 சந்தா







தோழர் ஆர்.தர்மலிங்கம்,





களப்பலியானர்களின் பட்டியல்

இந்த நினைவுத்தூணிலே







கம்பீரமாய் எழுந்து வரும்

வெண்மணி நினைவாலயம்





தோழர் கே.சுவாமிநாதன்







என்றென்றும் அதிர்வு தரும்

எழுச்சி தரும்,

வெண்மணி நினைவுச்சின்னம்
 
 
நன்றி
http://www.iceunionvellore.blogspot.com/

Thursday, December 23, 2010

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் ?

தயவு செய்து கடைசி வரை படியுங்கள். இது மிகவும் முக்கியம்.

பின் வருவது இந்தியாவின் மிக முக்கியமான ஒரு மனிதர்
பற்றிய விபரங்கள்.

RESUME



EDUCATION /Qualification:






1950: Stood first in BA (Hons), Economics, Punjab University, Chandigarh ,


1952; Stood first in MA (Economics), Punjab University , Chandigarh ,


1954; Wright's Prize for distinguished performance at St John's College, Cambridge,


1955 and 1957; Wrenbury scholar, University of Cambridge ,


1957; DPhil ( Oxford ), DLitt (Honoris Causa); PhD thesis on India 's export competitiveness






OCCUPATION /Teaching Experience :






Professor (Senior lecturer, Economics, 1957-59;


Reader, Economics, 1959-63;


Professor, Economics, Punjab University , Chandigarh , 1963-65;


Professor, International Trade, Delhi School of Economics, University of Delhi,1969-71 ;


Honorary professor, Jawaharlal Nehru University ,New Delhi,1976 and Delhi School of Economics, University of Delhi ,1996 and Civil Servant






Working Experience/ POSITIONS :






1971-72: Economic advisor, ministry of foreign trade


1972-76: Chief economic advisor, ministry of finance






1976-80: Director, Reserve Bank of India ;


Director, Industrial Development Bank of India;


Alternate governor for India, Board of governors, Asian Development Bank;


Alternate governor for India, Board of governors, BIRD






November 1976 - April 1980: Secretary, ministry of finance (Department of economic affairs);


Member, finance, Atomic Energy Commission; Member, finance, Space Commission






April 1980 - September 15, 1982 : Member-secretary, Planning Commission






1980-83: Chairman , India Committee of the Indo-Japan joint study committee






September 16, 1982 - January 14, 1985 : Governor, Reserve Bank of India .






1982-85: Alternate Governor for India , Board of governors, International Monetary Fund






1983-84: Member, economic advisory council to the Prime Minister






1985: President, Indian Economic Association






January 15, 1985 - July 31, 1987 : Deputy Chairman, Planning Commission






August 1, 1987 - November 10, 19! 90: Secretary-general and commissioner,


south commission, Geneva






December 10, 1990 - March 14, 1991 : Advisor to the Prime Minister on economic affairs






March 15, 1991 - June 20, 1991 : Chairman, UGC






June 21, 1991 - May 15, 1996 : Union finance minister






October 1991: Elected to Rajya Sabha from Assam on Congress ticket






June 1995: Re-elected to Rajya Sabha






1996 onwards: Member, Consultative Committee for the ministry of finance






August 1, 1996 - December 4, 1997: Chairman, Parliamentary standing committee on commerce






March 21, 1998 onwards: Leader of the Opposition, Rajya Sabha






June 5, 1998 onwards: Member, committee on finance






August 13, 1998 onwards: Member, committee on rules






Aug 1998-2001: Member, committee of privileges 2000 onwards: Member, executive committee, Indian parliamentary group






June 2001: Re-elected to Rajya Sabha






Aug 2001 onwards: Member, general purposes committee






BOOKS:






India 's Export Trends and Prospects for Self-Sustained Growth -


Clarendon Press, Oxford University , 1964; also published a large number of articles in various economic journals.






OTHER ACCOMPLISHMENTS:






Adam Smith Prize, University of Cambridge , 1956






Padma Vibhushan, 1987






Euro money Award, Finance Minister of the Year, 1993;






Asia money Award, Finance Minister of the Year for Asia, 1993 and 1994






INTERNATIONAL ASSIGNMENTS:






1966: Economic Affairs Officer






1966-69: Chief, financing for trade section, UNCTAD






1972-74: Deputy for India in IMF Committee of Twenty on


International Monetary Reform






1977-79: Indian delegation to Aid-India Consortium Meetings






1980-82: Indo-Soviet joint planning group meeting






1982: Indo-Soviet monitoring group meeting






1993: Commonwealth Heads of Government Meeting Cyprus 1993: Human Rights World Conference, Vienna






RECREATION :






Gymkhana Club, New Delhi; Life Member, India International Centre,


New Delhi




மேலே சொல்லப்பட்டவை எல்லாம் பிரதமர்
மன்மோகன் சிங்கின் சிறப்பம்சங்கள்  என்று
யாரோ பீற்றிக் கொண்டிருந்தார்கள்.
 
ஞான ஒளி திரைப்படத்தில் சிவாஜி
 
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்
நோ பீஸ் ஆப் மைன்ட்
 
என்று பாடுவார். அது போல
 
ஆயிரம் தகுதிகளும் அனுபவமும் இருந்து
என்ன பயன்?  விலைவாசி உயர்வை குறைக்க
முடியவில்லை. ஊழலை கட்டுப்படுத்த
முடியவில்லை.  கடன் அளவு அதிகமாய்க்
கொண்டே இருக்கிறது.  எந்த பிரச்சினையையும்
தீர்க்க முடியாத கையாலாகாத பலவீனமான
மனிதராக பரிதாபமாக காட்சியளிக்கிறார்.

Tuesday, December 21, 2010

நாடாளுமன்றம் முடங்கியதால் ஒன்றும் குடிமுழுகிப் போகவில்லை

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடக்காமல் போனதால் 170 கோடி ருபாய்
நஷ்டம் என்ற புதிய பல்லவியை சில பத்திரிகைகள் பாடத்தொடங்கியுள்ளன.
ஸ்பெக்ட்ரம் ஊழலால் தேசம் இழந்துள்ள தொகையில் o.0001  % தான்
இந்தததொகை ( கணக்கு சரிதானே ? )  என்றாலும் அதைப் பெரிது படுத்துவதில்
சிலருக்கு ஆனந்தம்.

சரி இம்முறை நாடாளுமன்றம் நடந்திருந்தால் நாட்டிற்கும் ஏழை மக்களுக்கும்
என்ன நல்லது நடந்திருக்கும்?

விலைவாசியைக் குறைக்க ஆன்லைன் வர்த்தகத்தை முழுமையாக தடை
செய்யும் மசோதாவை அரசு கொண்டு வந்திருக்குமா?

காலம் காலமாக கிடப்பில் போடப் பட்டிருக்கும் மகளிர் மசோதாவை
மக்களவையிலும் நிறைவேற்றி இருக்குமா?

வட இந்திய ஓட்டு அறுவடைக்காக நிறுத்தி வைத்துள்ள சேது சமுத்திரத்
திட்டத்தை தொடர்ந்து நடத்துவதற்கான வழிவகைகள் ஏதாவது
செய்திருக்குமா?

சுவிஸ் நாட்டு வங்கிகளில் முடக்கிக் கிடக்கும் அளவிட முடியாத
கோடிகளிலான கறுப்புப் பணத்தை மீட்பதற்கான சட்டம் எதாவதை
கொண்டு வந்திருக்குமா?

இந்திய வங்கிகளிடம் கடன் வாங்கி திருப்பித்தராத  பெரிய மனிதர்களின்
சொத்துக்களை பறிமுதல் செய்ய சட்டம் வந்திருக்குமா/ அல்லது
அவர்களின் பட்டியலைத்தான் வெளியிட்டிருக்குமா?

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பொது விநியோக முறையை
விரிவு படுத்தப்போகின்றோம் என்று சொல்லியிருக்குமா?

வேலை உத்தரவாத சட்டத்தின் படி கூலியை உயர்த்தியிருப்பார்களா ?
அல்லது நூறு நாட்கள் என்பதை அதிகப்படுத்தியிருப்பார்களா?

இல்லை , இல்லை நிச்சயமாக இல்லை.  

ஆனால் 

தேசத்தின் பல சொத்துக்களை அடமானம் வைக்கும் பணி நடந்திருக்கும்.

உணவுப்பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் உள்ளதும் பறி போயிருக்கும்.

செல்வந்தர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் கண்டிப்பாக
இருந்திருக்கும்.

அமெரிக்கர்களின் அடிமைகள் நாங்கள் என்பது மீண்டும்
உரைக்கப்பட்டிருக்கும்.

வங்கி, இன்சூரன்ஸ், தொலை தொடர்பு துறைகளில் அந்நிய
ஆதிக்கத்தை அதிகப்படுத்துவதற்கான  நடவடிக்கைகள் கண்டிப்பாக
நடந்திருக்கும்.

எனவே இப்படிப்பட்ட நாடாளுமன்ற
கூட்டத்தொடர் முடங்கிப் போனதால்
மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
முதலாளிகளுத்தான் சற்று கஷ்டம்.
அதனால்தான் இந்தப் புலம்பல்

Sunday, December 19, 2010

ஸ்பெக்ட்ரம் நிழலில் மறைக்கப்படும் மற்றொரு அபாயம்

கின்னஸ் சாதனை படைத்துள்ள ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய
சர்ச்சையின் நிழலில் இந்திய முதலாளித்துவ ஊடகங்கள்
இன்னொரு மிகப் பெரிய உண்மையை கண்டு கொள்ளாமல்
இருக்கிறது.  ஏனென்றால் அதுதான் அவர்களுக்கு வசதி.

விக்கி லீக்ஸ் இந்தியா பற்றி வெளியிட்டுள்ள தகவல்கள்
எல்லாமே  இந்தியாவின் ஒவ்வொரு கொள்கை முடிவிலும்
அமெரிக்காவின் தலையீடு இருந்துள்ளது என்பதையே மிகத்
தெளிவாக உணர்த்துகின்றது.  அணு சக்தி உடன்பாடு, ஈரானுடனான
இந்திய உறவு, சீனாவுடனான அணுகுமுறை என எல்லாவற்றிலும்
அமெரிக்கா இந்தியாவிற்கு கட்டளையிட்டுள்ளது. 

திபெத் விஷயத்தில்  நடுநிலையான முடிவு எடுக்க வேண்டும் என்று
சொன்ன வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர்மேனனை
அதட்டியுள்ளார்கள். தலாய் லாமா ஆதரவாளர்கள் ஒலிம்பிக் ஜோதி
ஓட்டத்திற்கு இடையூறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை
எடுக்கக் கூடாது என்று மிரட்டியுள்ளார்கள்,  லண்டன், பாரீசில்
நடைபெற்ற கலவரங்களின் பின்னணியில் இருந்தது அமெரிக்க
ஏகாதிபத்தியம்தான் என்பதும் இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.

இந்தியாவை வேவு பார்க்கும் மையமாகவே அமெரிக்க தூதரகம்
உள்ளது என்பது விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள்
அம்பலப்படுத்தி விட்டது.  இந்திய இறையாண்மைக்கு மிகப் பெரிய
அபாயமாக அமெரிக்க இருக்கிறது என்று இடதுசாரிகள் தொடர்ந்து
கூறி வருவது இன்று உண்மையாகி விட்டது.

இந்த நிலைக்கு பா. ஜ.க வும் காரணம். எனவே காங்கிரசும்
 பா.ஜ.க. வும்  இதை திசை திருப்பும் வேலையைத் தொடங்கி 
விட்டனர். ராகுல் காந்தி சொன்னதைப் பற்றிய சர்ச்சையில் 
அமெரிக்க அத்துமீறலை மறைக்கப் பார்க்கிறார்கள். 

இதனை அனுமதிக்கக் கூடாது. உண்மைகளை உரக்க 
சொல்லிட வேண்டும். சுதந்திர இந்தியாவின்
இறையாண்மையை  பாதுகாத்திட வேண்டும்.

ஹெலிகாப்டரில் அலுவலகம் வரும் மாவட்ட ஆட்சியர் - தமிழகத்தில்தான்







மேலே உள்ள படங்களைப் பார்த்தீர்களா? இது சந்திர மண்டலம் குறித்து
சந்திராயன் அனுப்பிய படங்கள் அல்ல. ஏதோ கிராமத்து சாலையும் அல்ல.
வேலூர் மாநகராட்சியில்(! ?) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு
முன்பாக உள்ள சாலைதான். இந்த சாலை வழியாகத்தான் மாவட்ட
ஆட்சியர் தனது அலுவலகத்திற்குள் நுழைய வேண்டும்.  அருகில் உள்ள
காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மாவட்ட எஸ்.பி
இந்த சாலையைகே கடந்துதான் செல்ல வேண்டும்.

ஏதோ இப்போது பெய்த மழையால் இவ்வளவு மோசமாக  உள்ளது
என்று யாரும் நினைக்க வேண்டாம். கிட்டத்தட்ட எட்டு மாதமாக
இதே கதியில்தான் உள்ளது.  கலெக்டர் அலுவலகம் முன்பாக உள்ள
சாலையின் பராமரிப்பு லட்சணமே இப்படி என்றால் மாவட்டம் முழுதும்
உள்ள சாலைகள் எப்படி இருக்கும் என்பதை யாரும் கற்பனை கூட
செய்ய வேண்டிய அவசியமில்லை.

ஆனால்  அருகில் உள்ள தங்க நாற்கர சாலை மட்டும் நன்றாகவே
உள்ளது. அதிலே செல்ல பணம் வாங்குவதாலோ என்னவோ அதை
மட்டும் ஒழுங்காக பராமரிககிறார்கள்  போலும்.

தன அலுவகம் முன்பாக, தான் அன்றாடம் பயன்படுத்தும்
ஒரு சாலையையே ஒழுங்காக பராமரிக்க முடியாத ஒரு மாவட்ட
ஆட்சியர் தந்து மாவட்டத்தை மட்டும் எப்படி நிர்வகிக்கப் போகின்றார்?
மக்களுக்கு என்ன நல்லது செய்யப்போகின்றார்?

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக சுற்றுப்புற சுவரை மாற்றி
கிரானைட் கல் பதித்து போயஸ் தோட்ட கதவு போல அமைத்து
செலவு செய்துள்ளார்கள். இக்கதவிற்கு ஒரு திறப்புவிழா வேறு
நடத்தி ஏராளமான மலர் மலைகளையெல்லாம் ஒரு நாளில்
போட்டு அலங்காரமெல்லாம் நடந்தது. ஆனால் சாலை மட்டும்
அப்படியே உள்ளது.

ஒரு வேளை இப்படி இருக்கலாமா?

மாவட்டத்தில் உள்ள எல்லா சாலையும் மோசமாக உள்ளது போல
இதுவும் இருக்கட்டும் என்ற பெருந்தன்மையோ!

அல்லது மாவட்ட ஆட்சியர் தினமும் தனது அலுவலகத்திற்கு
ஹெலிகாப்டரில் வருகின்றாரோ? அதனால்தான்  அவருக்கு
சாலைகள் நிலைகள் பற்றி தெரியவில்லையோ ?

பின் குறிப்பு : காலையில் ஐந்தாறு இடங்களை புகைப்படம்
எடுத்திருந்தேன். மதியம் அந்தப்பக்கம் போன போது சில
இடங்களை மட்டும் சரி செய்து சிலவற்றை அப்படியே
வைத்திருந்தார்கள். சரி செய்த இடங்களின் புகைப்படத்தை
போடவில்லை. ஒரு தொழில் தர்மம் வேண்டுமள்ளவ்ல்லவா?

மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை தற்காலிகமாக
சரிசெய்வதற்காக தமிழக அரசு வேலூர் மாவட்டத்திற்கு
இரண்டரை கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்தப் பணத்தில்
எந்தெந்த சாலைகளை சரி செய்யப்போகின்றனர், எப்படி
செய்யப்போகின்றனர் என்பதை பார்ப்போம்.

Friday, December 17, 2010

தோழர் பாப்பா உமாநாத் அவர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி


                                                                     

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நிறுவனத் தலைவர்களில்
ஒருவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் முன்னாள்
தமிழக சட்டப்பேரவை உறுப்பினருமான தோழர் பாப்பா உமாநாத் அவர்கள்
இன்று ( 17 .12 2010 ) காலமானார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


தியாகத்தின் அடையாளமான தோழர் பாப்பா உமாநாத் அவர்களின்
வாழ்க்கை பொது வாழ்வில் ஈடுபடும் அனைவருக்கும் ஒரு பாடம்.
அவர்களின் நெஞ்சுறுதி போற்றத்தக்கது. கம்யூனிஸ்ட் இயக்கத்தை
தடை செய்து அதன் உறுப்பினர்களை அரசு வேட்டையாடிக்
கொண்டிருந்த நேரம் அவரும் அவரது தாயாரும் சிறையில்
அடைக்கப்பட்டனர். அவரது அன்னை லட்சுமி சிறையிலேயே
இறந்து போக கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து
விலக ஒப்புக்கொண்டால்தான் அவரது உடலை
இறுதியாக பார்க்க அனுமதிக்க முடியும் என்று நிபந்தனை
போட்ட போது அதை ஏற்க மறுத்து கொண்ட கொள்கையிலும்
இணைந்த இயக்கத்திலும் உறுதியாக இருந்த தோழரின் அரும்
பணிகள் காரணமாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்
இன்று வலிமையான அமைப்பாக உள்ளது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில சிறப்பு மாநாடு மூன்று      ஆண்டுகளுக்கு முன்பு வேலூரில் நடைபெற்றபோது அவ்வமைப்பின் 
மாநிலக்குழுக் கூட்டம் எங்கள்  சங்க அலுவலகம் சரோஜ் இல்லத்தில்
நடந்தது. அப்போது எங்கள்  சங்க அலுவலகத்திற்கு தோழர் பாப்பா உமாநாத்
அவர்கள் வந்துள்ளார் என்பது எங்களுக்கு மிகவும்  பெருமை அளித்தது.

தோழர் பாப்பா உமாநாத் அவர்களுக்கு செவ்வணக்கம்!


Wednesday, December 15, 2010

உடையும் சுவர்கள், திறக்கும் கதவுகள், தூரத்தில் தொடுவானம்

              




அண்ணல் அம்பேத்கர்- வெண்மணி தியாகிகள்
              நினைவுக் கருத்தரங்கம்
நாள் 15 .12 .2010 , புதன் மாலை 5 .30 
இடம் : எல்.ஐ.சி வேலூர் கோட்ட அலுவலக வளாகம்  
தலைமை : தோழர் எம்.தசரதன், தலைவர், வேலூர் கோட்டம்,

வரவேற்புரை : தோழர் எஸ்.ராமன், பொதுச்செயலாளர், வேலூர் கோட்டம்,

      உடையும் சுவர்கள், திறக்கும் கதவுகள்,
                   தூரத்தில் தொடுவானம்
                                                   என சிறப்புரை
             தோழர் கே.சாமுவேல்ராஜ்,  பொதுச்செயலாளர்,
                  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி

நன்றியுரை:  தோழர் பி.தமிழ்மணி, மாவட்டச்செயலாளர்
அனைவரும் அவசியம் பங்கேற்பீர்

இவண்
                              காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், வேலூர் கோட்டம்,
                       சென்னை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்,
                          வேலூர் - திருவண்ணாமலை மாவட்டக்குழு

Tuesday, December 14, 2010

மம்தா பானர்ஜிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

இந்த பதிவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு பெற எளிய வழிகள்
என்றும் தலைப்பு வைக்கலாம்.

சரி என்ன வழிகள் உள்ளது?

ஒன்று நீங்கள் அமெரிக்க ஜனாதிபதியாக இருக்க வேண்டும், எதுவும்
செய்திட வேண்டாம், சொன்னால் போதும், சொன்னதற்கு  நேர் மாறாக
நடந்தாலும் கவலையில்லை. ஒபாமா போல அதிர்ஷ்டம் இருந்தால்
பதவியில் இருக்கும் போதே கிடைக்கும். இல்லையென்றாலும் கண்டிப்பாக செத்துப் போவதற்கு முன்பாக கிடைக்கும் (ஜார்ஜ் புஷ்ஷிற்கு ஒரு நோபல் பரிசு பார்சல்)

அமெரிக்க ஜனாதிபாதியாக முடியாத துரதிர்ஷ்டசாலிகள் கவலைப்பட வேண்டாம், உங்களுக்கும் வாய்ப்பு உண்டு.
என்ன நீங்கள் கடுமையான கம்யூனிச எதிர்ப்பாளராக இருக்க
வேண்டும்.  கம்யூனிச நாடுகளில் மனித உரிமை மீறல்
நடக்கிறது என்று பினாத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
அந்த பினாத்தலை அபுகாரிப் அல்லது குவாண்டனமோ
சிறைச்சாலை வாசல்களிலிருந்து செய்தால் உத்தமம்.

சந்தேகமிருந்தால் இந்த பட்டியலைப் பாருங்கள்

ஆண்ட்ரே சகரோவ்,
லெக் வாலேசா,
தலாய் லாமா,
மிகையில் கோர்பசேவ்

இந்த வரிசையில் லியு ஜென்போ என விருது கொடுத்து
நோபல் பரிசுகுழு தனது கம்யூனிச எதிர்ப்பு நிலையை
மீண்டும் நிலை நாட்டி விட்டது.

யாசர் அராபத்திற்கும் நெல்சன் மாண்டேலாவிற்கும் கூட
விருதளித்தபோது கூடவே இஸ்ரேல் மற்றும் தென் ஆப்பிரிக்க
அரசியல்வாதிகளுக்கும் சேர்த்து விருதளித்து இவர்களுக்கு தனி
முக்கியத்துவம் கிடைக்காமல் பார்த்துக்கொன்டவர்கள்தானே
இவர்கள்!

இந்த வரிசையில் அமைதிக்கான நோபல் பரிசை அடுத்து பெற
தகுதியானவர் மம்தா பானர்ஜிதான். மாவோயிஸ்டுகளோடு இணைந்து
கம்யூனிஸ்டுகளை கொடூரமாக கொன்று குவிக்கும் அவரைத் தவிர
இந்த விருதைப் பெற யாருக்கு தகுதி உள்ளது ?

தீவிர கம்யூனிச எதிர்ப்பாளர் என்ற முறையில் நரேந்திர மோடியை விட மம்தாவிற்குத்தான் கூடுதல் மதிப்பெண்கள்.

Sunday, December 12, 2010

அன்று பாராட்டியவர்கள் இன்று மௌனமாய் இருப்பது ஏன்?

விமான நிறுவனம் ஆரம்பிக்க ஒரு அமைச்சர் பத்து கோடி ருபாய்
லஞ்சம் கேட்டார். அப்படி ஒரு தொழிலே வேண்டாம் என்று மறுத்து
விட்டேன் என ரத்தன் டாட்டா கூறியபோது, இவரல்லவா நேர்மையின்
சிகரம் என இந்திய ஊடகங்கள் புகழ்ந்து தள்ளின.

ஆனால் அதே ரத்தன் டாடா நீரா ராடியாவுடனான தொலைபேசி
பதிவுகளை வெளியிடக்கூடாது என்று வழக்கு தொடுத்துள்ளபோது
முன்பு ரத்தன் டாடாவினை வானளாவிய முறையில் புகழ்ந்த
அத்தனை ஊடகங்களும்  இப்போது வாய் திறக்கவேயில்லை. 

டாடா நீரா ராடியா உரையாடல் ஒன்றும்  இருவர் குடும்பத்து 
விவாகங்கள் பற்றியோ அல்லது விவாக ரத்துகள்  பற்றியோ 
கிடையாதே!  அரசில் யார் இருக்க வேண்டும், கொள்கைகள் எப்படி
அமைய வேண்டும் என்பது பற்றித்தானே!  இதை வெளியிட தடை 
கேட்டது தனது  தில்லுமுல்லுகளை  மேலும் அதிகமானவர்கள் 
அறியக்கூடாது என்பதற்காகத்தான்.

பாவம் ரத்தன் டாடா, தனது சுத்த சுயம்பிரகாச வேடம்  சில 
நாட்களிலேயே கலைந்து போகும் என்பதை வீர வசனம் பேசும் 
போது அறிந்திருக்க மாட்டார். அவரோடு சேர்த்து  அவர் புகழ் 
பாடிய ஊடகங்களின்   அரிதாரமும் கலைந்து விட்டது.

ஒரே ஒரு சந்தேகம் : ஆரிய திராவிட வாதத்தை கையில் எடுத்துள்ள
கலைஞர், ஏன் ரத்தன் டாடா பற்றி ஊடகங்கள் எழுதாதை குறிப்பிடவே
இல்லை?  பெரு முதலாளிக்கு எதிராக பேசும் வல்லமை அவருக்கு 
கிடையாதா என்ன?  யாராவது கொஞ்சம் தெளிவு படுத்துங்களேன்...   

Saturday, December 11, 2010

1 ,76 ,000 கோடி ரூபாய் எப்படி வரும்?

ஸ்பெக்ட்ரம் ஊழலில் தேசம் இழந்திருப்பது 1 ,76 ,000  கோடி ரூபாய். இதன் மதிப்பை   உணர்த்த சிறு உதாரணம் தரலாம் என்று நினைக்கிறேன். 

இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான எல்.ஐ.சி யின் கடந்த 2009 -10  நிதியாண்டின்      மொத்த பிரிமிய வருமானம் 1 ,86 ,000  கோடி ரூபாய். புது வணிகம் மூலம் திரட்டப்பட்ட   பிரிமியமும் ஏற்கனவே உள்ள பாலிசிகளுக்கு செலுத்தப்பட்ட பிரிமியமும் சேர்ந்த    தொகை இது. இந்த வருமானம் அவ்வளவு சாதாரணமாக வந்தது கிடையாது. 

ஒரு மத்திய அலுவலகம்,
எட்டு மண்டல அலுவலகங்கள்,
நூற்றிப்பத்து கோட்ட அலுவலகங்கள்,
இரண்டாயிரத்து ஐம்பது கிளை அலுவலகங்கள்,
எண்ணூறு துணை அலுவலகங்கள் 

இவற்றில் பணியாற்ற 

இருபதாயிரம் முதல் நிலை அதிகாரிகள்,
இருபதாயிரம் வளர்ச்சி அதிகாரிகள்,
அறுபதாயிரம் மூன்றாம் பிரிவு, நான்காம் பிரிவு ஊழியர்கள் 

இவர்களோடு களத்தில் பணியாற்ற 

பத்து லட்சம் முகவர்கள் 

இவர்கள் அனைவரும் நேரம் காலம் பார்க்காமல்
தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் என்று 
பண்டிகை தினங்களுக்குக் கூட முக்கியத்துவம் தராமல்
இரவு, பகல் பார்க்காமல்,  இருபத்தி நான்கு மணி நேரமும்
கரம் கோர்த்து பணியாற்றியதால் திரட்டப்பட்ட 
தொகை இது. 

சற்று யோசித்துப் பாருங்கள், எவ்வித உழைப்போ 
முயற்சியோ இல்லாமல்  1 ,76 ,000  கோடி ரூபாய்
கொள்ளையடிக்கப்பட்டுள்ளது  என்பது எவ்வளவு
மோசமான விஷயம்?

ஒரு பிரம்மாண்டமான நிறுவனம் மிகப்பெரிய
கட்டமைப்போடு திரட்ட சிரமப்படுகின்ற ஒரு
தொகையை  கண் இமைக்கும் பொழுதில்
சிலர் சம்பாதித்து விட்டனர் என்ற செய்தி 
இத்தேசத்தின் அமைப்பு முறை எவ்வளவு
பலவீனமாக உள்ளது என்பதை காண்பிக்கவில்லையா?

ஆனால் எதுவுமே நடக்கவில்லை என்று இன்னமும்
சாதித்துக் கொண்டிருக்கிற, சாதியின் பின்னர் புகலிடம்
புகுந்துள்ள வேடதாரிகளின் முகமுடிகளை அம்பலப்
படுத்த வேண்டிய கடமை இந்தியக் குடிமக்கள்
ஒவ்வொருவருக்கும் கிடையாதா?

Friday, December 10, 2010

நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு எதிராக போராட்டமாம் - நல்ல நகைச்சுவை

ஸ்பெக்ட்ரம் பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றம் முடக்கப்படுவதைக்
கண்டித்து தி.க ஆர்ப்பாட்டம் நடத்துவதாக சுவரொட்டி பார்த்தேன். தலித் என்பதால்    ராசா குறி வைக்கப்படுகின்றார் என்ற கலைஞரின்  பாட்டுக்கு பின்பாட்டு   பாடிய    மானமிகு      தமிழரின் அடுத்த கட்ட நடவடிக்கை 
ஆர்ப்பாட்டம்     போலும்! 

பெரியாரின்    கருதத்துக்கள் பரவுவதை முடக்க நீதிமன்ற படிக்கட்டுக்களில் ஏறி ஏறி இறங்கியவர்     நாடாளுமன்ற முடக்கல் பற்றிகவலைப்படுவது வியப்பாக உள்ளது. 
இல்லை செஞ்சோற்றுக் கடனா? 

நாடாளுமன்றம்முடங்கிப்    போக எதிர்க்கட்சிகள் மட்டும்தான் காரணமா? மடியில்
கனமில்லை என்றால் ஏன் கூட்டுக்குழு  விசாரணையை முரட்டுத்தனமாக எதிர்க்க 
வேண்டும்?  ஆளும் கட்சியின் பிடிவாதம் பற்றி ஒரு வேலை தி.க கண்டிக்குமோ?

ராசா என்கிற ஒரு தலித்தின் நலன் காக்க குரல் கொடுக்கும் தலைவர்களுக்கு 
சில கேள்விகள் 

அரசு, மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலியிடங்கள் நிரப்பப் படாததால்      வேலை வாய்ப்பை இழக்கும் தலித் இளைஞர்கள்  பற்றி என்றாவது நீங்கள்    கவலைப்பட்டது உண்டா?

முடக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் திரைப்படம் வெளியாக என்ன செய்தீர்கள்?

அரசு ஊழியர்களாக வேண்டும்  என்று கிட்டத்தட்ட  இருபத்தி ஐந்து வருடங்களாக
போராடி வரும் சத்துணவு ஊழியர்களிலும்  போராட்டம் நடத்தியதற்காக 
பணி நீக்கம், இடை நீக்கம் செய்யப்பட்ட  தலைவர்களிலும் உள்ள தலித்துக்கள் 
பற்றி யோசித்தது உண்டா? 

குடியாத்தத்தில் ஆளும் கட்சி குண்டர்களால்  வீடு இடிக்கப்பட்டு நடுத்தெருவில்
நிற்கும் அருந்ததிய ஆதி திராவிடக் குடும்பங்கள் உங்கள் கண்ணில் படவேயில்லையா?

ராசாவிற்கு ஆதரவாக மட்டும் போராட்டம் என்றால் சிரிப்பாத்தான் வருகிறது
அல்லது ஸ்பெக்ட்ரம் பணம் இங்கேயும் கசிந்துள்ளதோ என்ற சந்தேகம்தான்
வருகின்றது.



   

Wednesday, December 8, 2010

வெட்கம் கெட்ட ப.சிதம்பரம்



இரண்டு நாட்கள் முன்பு எதோ ஒரு வங்கிக் கிளையை திறந்து
வைத்து பேசிய சிவகங்கைச்சீமான் ப.சிதம்பரம் பின் வருமாறு
முழங்கினார்.

' ஆகஸ்ட் ௨௦௦௮ தொடங்கி அமெரிக்காவில் வங்கிகள் திவாலாகிக்
கொண்டிருக்கிறது. வங்கிகள் திவாலாவது இன்னமும் நிற்கவில்லை.
ஆனால் இந்தியாவிலோ ஒரு வங்கிகள் கூட திவாலாகவில்லை.
ஆனால் வங்கிக் கிளைகளை திறந்து கொண்டே இருக்கிறோம்.
எங்கள் அரசின் கொள்கைகள்தான் இதற்குக் காரணம்'  என்று
அவர் தொடர்ந்து பேசிக் கொண்டே போனார்.

சிறிது கூட மனசாட்சியே இல்லாமல் பேசிய பேச்சல்லவா இது?
வங்கிகளை அழிக்க வேண்டும், பன்னாட்டு வங்கிகளை வளர்க்க
வேண்டும் என்பதல்லவா இவர்களின் கொள்கை? கடந்த ஆட்சிக்
காலத்தில் இடதுசாரிகளின் எதிர்ப்பு இல்லாமல் இருந்திருந்தால்
இந்திய வங்கிகளின் சமாதிகளில் இதனை நேரம் புல் முளைத்து
அதனையும் பன்னாட்டு வங்கிகளிடம் விற்பனை செய்திருப்பார்களே!
சமீபத்தில் கூட ஸ்டேட் வங்கியின் பங்குகளை விற்ற படுபாவிகள்
அல்லவா இவர்கள்!

ஆனால் கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாமல் பொய் பேசித்
திரியும் இந்த புனிதனுக்கு எதிராக செருப்பாயுதம் ஏந்திய அந்த
சர்தார்ஜி பத்திரிக்கையாளர் போல ஒவ்வொருவரும்
 செய்தால்தால்தான்  இந்த உத்தமர்களின் பொய் மூட்டைகள்
நின்று போகும் போல.

Thursday, November 4, 2010

சுனாமி நினைவலைகள் - மூன்றாம் பகுதி

29  டிசம்பர் 2004 ம்  நாள் காலையில் மதுரைக் கோட்டத் தோழர்களும் சேலம்
கோட்டத் தோழர்களும் வந்து சேர்ந்தார்கள், வேன் முழுதும் பொருட்களோடு.
தென் மண்டலப் பொறுப்பாளர்கள் தோழர்கள் சுவாமிநாதன் மற்றும் கிரிஜா
ஆகியோரும் வந்திருந்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டக் குழு
அலுவலகம் சென்று அங்கிருந்து கடலூர் மாவட்டச்செயலாளர் தோழர் எஸ்.
தனசேகரன் அவர்களை அழைத்துக் கொண்டு செல்வதாக ஏற்பாடு. கட்சி
அலுவலகத்தில் அனைத்து தோழர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான
ஏற்பாட்டினை செய்திருந்தனர். நாங்கள் அன்று செல்வதாக திட்டமிட்டிருந்த
இடங்கள் எல்லாமே பெரிய அளவில் உயிரிழப்பு நடந்த இடங்கள் என்றும்
கடற்கரை முழுதும் இன்னமும் துர்வாசம் கடுமையாக வீசிக் கொண்டிருப்பதால்
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று தோழர் எஸ்.டி.எஸ் விளக்கினார்.
அதே போல் முகத்தை மூடிக் கொள்ளும் துணியும் வரவழைக்கப்பட்டிருந்தது.
தடுப்பூசி மற்றும் துணிக்கான ஏற்பாட்டை மருத்துவப் பிரதிநிதிகள் சங்கத்
தோழர்கள் செய்திருந்தனர்.

கடலூரில் இருந்த திருமண மண்டபங்களிலேயே பலரும் தங்க வைக்கப்
பட்டிருந்தனர். சொந்த வீடு இருந்தும் இப்படி அனாதைகளாய் நிற்கிறோமே
என்ற கதறல் எல்லா இடங்களிலும் கேட்க முடிந்தது.  உணவு என்பது
ஒரு பிரச்சினையாக இருந்தது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. அரசோ
அல்லது மற்ற அமைப்புகளோ ஏற்பாடு செய்த உணவு என்பது அடிப்படையாக  சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், புளி சாதம், தயிர் சாதம்
என்றுதான் இருந்தது. கடலிலே வாழ்க்கை நடத்தியவர்களுக்கு மீன்
இல்லாமல் உணவு மிகவும் அந்நியமாய் இருந்தது. இதனை சரியாக
உணர்ந்து கொண்டது மார்க்சிஸ்ட் கட்சி மட்டும்தான். சமைக்கப்பட்ட
உணவாக வழங்குவதற்குப்  பதிலாக  பொருட்களை அளித்து விட்டால்
அவர்களின் ருசிக்கேற்ப சமைத்துக் கொள்வார்கள் என்று மாவட்ட
நிர்வாகத்திடம் ஆலோசனை அளிக்க அதுவும் பின்பு அமுலானது.
இந்த நிலவரம் தெரியாமல் ஒரு மார்வாடி ஆயிரக்கணக்கில் சப்பாத்தி
செய்து கொண்டு வர அவை சீண்டுவாரில்லாமல் போயிற்றே என்று
புலம்பிய கதையும் நடந்தது.

அப்படி ஒரு மண்டபத்தில் நாங்கள் சந்தித்த பெண் தாழங்குடா என்ற
கிராமத்தைச்சேர்ந்த பாக்கிய லட்சுமி. அப்பெண்ணின் தந்தை சுனாமியில்
இறந்து போயிருந்தார். எதிர் காலத்தை பற்றிய கவலையை பத்தாவது
படித்துக் கொண்டிருந்த அப்பெண் வாய் விட்டு அழுதே வெளிப்படுத்தினாள்
எனக்கு உணவோ, உடையோ வேண்டாம், நான் படிப்பை தொடர்வதற்கு
மட்டும் உதவி செய்யுங்கள் என்ற கோரிக்கை வைத்தாள். இன்று அந்தப்
பெண் ஒரு பட்டதாரி. பதினொன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலான  அனைத்து கல்விச்செலவுகளையும் காப்பிட்டுக் கழக
ஊழியர் சங்கம் வேலூர் கோட்டம் தான் ஏற்றுக் கொண்டது. அதற்காக
நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பற்றியே தனியாக எழுத வேண்டும்.

சுனாமி உருவாக்கிய பாதிப்புக்கள் பற்றி அன்றைய பயணத்தின் போது
நன்றாக அறிந்து கொள்ள முடியும். கனமான படகுகள் உருக்குலைந்து
போயிருந்தன. தென்னை மரங்கள் உடைந்து அந்தரத்தில் தொங்கிக் கொண்டு  இருந்தன. கேக்கை கத்தியால் வெட்டி எடுத்தால் எவ்வளவு
கச்சிதமாக இருக்குமோ அது போல வீட்டின் சுற்றுச்சுவர்கள்,  சிறிய
கல்வெர்டுகள்  ஆகியவை துண்டிக்கப்பட்டிருந்தன. எவ்வளவு உயரம் வரை
தண்ணீர் வந்ததற்கு அடையாளமாக வீடுகளில் ஈரமான கோடுகள் இருந்தன.

ஒரு சுற்றுலா தளமாக உருவாக்கப் பட்டிருந்த கடலூர் வெள்ளிக் கடற்கரையில் செய்யப்பட்டிருந்த அழகுப் பணிகள் எல்லாமே அழிந்து
போயிருந்தது. ஒரு வீட்டில் திருமணத்திற்கு காத்திருந்த பெண்ணையும்
திருமணத்திற்காக பாடுபட்டு சேர்த்த நகைகளையும் கடல் கொண்டு போக
அந்தப் பெண் வாழ்ந்ததற்கு சாட்சியாக இருந்த ஒரே ஒரு புகைப்படத்தைக்  காட்டி காட்டி ஒரு தாய் அழுது கொண்டிருந்தார். இது போல
எத்தனையோ கதறல்கள், சோகங்கள்.

கொண்டு போயிருந்த அனைத்துப் பொருட்களும் தீர்ந்து போன பின்பு 
பெரியகுப்பம் என்ற கிராமத்தில்  அமர்ந்து அடுத்து என்ன செய்வது  என்று 
விவாதித்தோம்.  உணவு, உடை போன்ற கட்டங்களுக்குப் பிறகு அடுத்த 
கட்டத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் உருவாக்கி விட்டது என்பதால் 
அடுத்த கட்ட நிவாரணப் பணியை வீட்டு உபயோகப் பொருட்களாக வழங்குவது , முறையாக திட்டமிட்டு அமுலாக்குவது என்ற 
முடிவோடு அவரவர் ஊர் திரும்பினோம். 

கடைசியாக வாகனத்திலிருந்து எனது வீட்டில் இறங்கி ஓட்டுனருக்கு 
கணக்கு பார்த்து பணம் கொடுக்கையில்  அவர் ஒரு ஐநூறு ரூபாயை 
திருப்பி அளித்தார். நீங்கள் செய்யப்போகும் அடுத்த கட்ட பணிக்கு 
எனது பங்காக இருக்கட்டும் என்று கூறி. 

அடுத்த கட்ட பணி  ?  இன்றும் மலைக்க வைக்கும் வாழ்நாள் பணி !

                                                                                                நினைவலைகள் ஓயாது 

Monday, November 1, 2010

சுனாமி நினைவலைகள் - இரண்டாம் பகுதி

27  ம் தேதி மாலை புதுவை சென்று முதலில் மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச
செயலாளர் தோழர் பெருமாள் அவர்களை சந்தித்தோம். நாங்கள் சென்ற போது
மாலை ஏழு மணிக்கு மேல் இருக்கும். அப்போது அவர் பாதிப்புக்கள் பற்றிய
விபரங்களைச்சொல்லி அந்த நேரத்திற்கு மேல் கடற்கரை பக்கம் செல்ல  வேண்டாம்  என்றும் மறுநாள் காலையில் சென்னையில் இருந்து தோழர்
என்.வி தலைமையில் ஒரு குழு வருகின்றது என்றும் அவர்களோடு
இணைந்து கொண்டு வந்த பொருட்களை மக்களிடம் அளிக்கலாம் என்று
அவர் வழி காட்டினார். தோழர் ஆர்.பி.எஸ் மற்றும் ராம்ஜி ஆகியோர்
எங்களோடு இணைந்து கொண்டனர்.

இருபத்தி எட்டாம் தேதி காலையில் சென்னையில் இருந்து வந்த குழுவில்
தோழர்கள் என்.வி, கே.பி, ஜி.ஆர், நன்மாறன், பாலபாரதி எஸ்.கே.மகேந்திரன்,  சுதா சுந்தரராமன் ஆகியோர் இருந்தனர். அவரவர்கள் தங்கள் குடும்பத்தில் 
ஏற்பட்ட இழப்புக்கள், பொருட்சேதம் ஆகியவற்றைப் பற்றி ஒரு குடும்பத்தின்  மூத்த பெரியவரிடம் கூறுவது போல தோழர் என்.வி யிடம் சொல்லி அழுதனர். பிள்ளைச்சாவடி, காலடிப்பட்டு ஆகிய இரண்டு இடங்களில்  நாங்கள்  எடுத்துக் கொண்டு போயிருந்த பொருட்களை 
தோழர் என். வி கையால் வழங்க வைத்தோம்.  நாங்களும் மக்களிடம் 
நேரடியாய் பொருட்களை தர வேண்டும் என்பதில் அவர் மிகவும் கறாராய் 
இருந்தார். அதுதான் தலைமைப் பண்போ ! 

புதுவைப் பல்கலைக் கழக வளாகத்திற்குப் போன போது அங்கே ஒரு 
தம்பதியின் அழுகை மிகவும் பாதித்தது. அவர்களின் இரண்டாவது குழந்தை 
ஒரு வருடக் கைக்குழந்தை. ஒரு முள் புதரில் அக்குழந்தையின் உடலைக் 
கண்டெடுத்து அப்போதுதான் அடக்கம் செய்து விட்டு வந்திருந்தார்கள். 
தேவர் மகன் படத்தில் ஒரு காட்சி வரும். ஏரி உடைபட்ட வெள்ளத்தில் 
ஒரு குழந்தை இறந்து போய் முள் செடிகளுக்குள் சிக்க கமலஹாசன் 
அதை பார்த்துக் கதறுவார். திரைப்படம் பார்த்தவர்கள் ஒரு கணம் 
அதிர்ச்சிக்குள்ளாவார்கள்.  அக்காட்சியை  தங்கள் சொந்த வாழ்வில் அனுபவித்த பெற்றோர், அதிலும் அந்த தாயின் கதறல் எனது பல நாள்
தூக்கத்தை தொலைக்க வைத்தது.

புதுவையில் பார்த்த காட்சிகளே எவ்வளவு மோசமான அழிவை சுனாமி
உருவாக்கி இருந்தது என்பதை உணர்த்தியது. கூடுதல் உதவி செய்ய வேண்டிய கடமை உள்ளது என்பதும் புரிந்தது. தாராளமாக உதவி
செய்யுங்கள் என்று முதல் சுற்றறிக்கையில் உறுப்பினர்களுக்கு  வேண்டுகோள்  விடுத்திருந்தோம். அதனை மாற்றினால் 
சரியாக இருக்கும் எனக் கருதி புதுவை அலுவலகத்திலேயே அமர்ந்து 
ஒரு நாள் ஊதியம் தாரீர் என்று புதிய சுற்றறிக்கை அனுப்பினோம். கோட்ட
மாநாடு அப்போதுதான் புதுவையில் நடைபெற்றிருந்தது. மாநாட்டு நிதி 
கொஞ்சம் பாக்கி இருந்தது. ஊழியர் பங்களிப்பு வரும்வரை காத்திராமல் 
இந்த நிதியை  தற்காலிகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்து 
போர்வைகள் வாங்கி காரைக்காலுக்கு எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்தோம்.

தமிழகத்தில் எட்டு எல்.ஐ.சி கோட்டங்கள் உண்டு. சென்னையில் இரண்டு கோட்டங்கள்,  வேலூர், கோவை, சேலம், மதுரை, தஞ்சை, திருநெல்வேலி ஆக மொத்தம் எட்டு. இவற்றிலே கோவை, சேலம், மதுரை கோட்டப் பகுதிகளில்   கடல் கிடையாது. மற்ற ஐந்து கோட்டங்களும் தங்களால் இயன்ற பணிகளை உடனடியாக துவக்கியிருந்தோம். கோவைக் கோட்ட மகளிர் துணைக்குழு எங்களுக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய் அனுப்பி உடனடிப் பணிகளுக்கு இத்தொகையைபயன்படுத்தி கொள்ளுங்கள் என்றிருந்தார்கள். மதுரை மற்றும் சேலம் கோட்டத் தோழர்கள் தொலைபேசியில் கூப்பிட்டு தாங்கள் மறுநாள் நிவாரணப்பொருட்களோடு  வருகின்றோம் என்று சொல்லி நீங்களும் அங்கேயே இருக்க வேண்டும்  என்று அன்புக் கட்டளையிட்டனர்.  ஆக அன்று ஊர் திரும்புவதாக
போட்டிருந்த திட்டத்தை கைவிட்டோம்.


கடலூரில் சில பகுதிகளைப் பார்த்து விட்டு பொருட்களை அளித்து விட்டு
சிதம்பரம் தாண்டி கிள்ளை சென்றோம். பல பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்கள்  கிள்ளையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். சிதம்பரம்
கிளைச்செயலாளரும் எங்கள் கோட்ட இணைச செயலாளருமான
தோழர் சி.வெங்கடேசன் சுனாமி நிகழந்ததிலிருந்தே அங்கேதான் இருந்தார்.
(இவரது பணிகள் பற்றி மட்டுமே தனியாக ஒரு பதிவு எழுத வேண்டும். அவ்வளவு அர்ப்பணிப்பு உணர்வோடு செயலாற்றிய அற்புதத் தோழர் )

சென்னையிலிருந்து வந்த தலைவர்களும் அப்போது கிள்ளை வந்திருந்தனர்.  புடவை போன்றவை ஏதேனும் கையிலிருந்தால் எடுத்து
வாருங்கள் என்று தோழர் கே.பி சொல்ல உள்ளே நுழைவதற்குள்
அப்படியே கூட்டம் மொய்த்துக் கொண்டு விட்டது. மூச்சு விடக்கூட
முடியவில்லை. மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச்செயலாளர்
தோழர் எஸ்.தனசேகரனும் தோழர் மூசாவும் கூட்டத்தை ஒழுங்கு படுத்த
ஒரு வழியாக தப்பி வெளியே வந்தோம்.  இனி இந்த ஊர் பக்கமே
வரக்கூடாது என்று பேசிக்கொண்டே கடலூர் நோக்கிப் புறப்பட்டோம்.
கிள்ளை அவ்வளவு சுலபமாக எங்களை விடப்போவதில்லை என்பது
யாருக்கும் அப்போதும் தெரியாது.
                                                                                                   நினைவலைகள் தொடரும்

Thursday, October 28, 2010

சுனாமி நினைவலைகள்

இந்தோனேஷியாவில் தற்போது நிகழ்ந்த சுனாமி தாக்குதல்கள் 2004 ல் தமிழகத்தின்
கடற்கரையை தாக்கிய சுனாமி, அப்போது நாங்கள் செய்த நிவாரணப்பணிகள் பற்றிய
நினைவுகளை கிளறி விட்டது. கற்பனை செய்ய முடியாத அந்த பேரழிவு மனித
நேயம் இன்னமும் உயிர்ப்போடு உள்ளது என்பதையும் நிரூபித்தது.

அந்த ஆண்டு சி.ஐ.டி.யு சங்கம் வெண்மணி நினைவு தினத்தை ஒட்டி மாநிலம் தழுவிய ஒரு பிரச்சார நடைப்பயண இயக்கத்தை நடத்தி வெண்மணி செல்வதாக
திட்டமிட்டிருந்தார்கள். இப்பயணத்தில் நீயும் வருகின்றாயா என்று சி.ஐ.டி.யு வின்
வேலூர் மாவட்டச்செயலாளர் தோழர் காசிநாதன் கேட்டார். ஆனால் அப்பயணம்
புறப்பட்ட நாளில்தான் பதவி உயர்வு முடிவுகள் வர வேண்டிய நாள். அதன் பின்பு
பதவி உயர்வு பெற்றவர்களுக்கான பணியமர்த்தல் குறித்து நிர்வாகத்துடன் பேசி
முடிவு செய்ய வேண்டியிருக்கும் என்பதால் அப்பயணத்தில் இணைய வாய்ப்பில்லை
என்று கூறி விட்டேன். ஆனால் அது வரை வெண்மணி சென்றதில்லை என்பதால்
எப்படியாவது அந்த ஆண்டு செல்ல வேண்டும் என்ற வேகம் மட்டும் உருவானது.

பொறுப்பாளர்கள் கலந்து பேசினோம். பதவி உயர்வு பணியமர்த்தல் வேலை 22  தேதிக்குள் முடிந்து விடும். எனவே 24 அன்று புறப்படுவது, அதனை ஒரு சிறு
இயக்கமாக நடத்துவது என்றும் முடிவெடுத்தோம். 24 காலையில் கோட்ட அலுவலகத்தில்  ஒரு கூட்டம். சுதந்திரப் போராட்ட வீரரும் குடியாத்தம் தொகுதியின்
முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான தோழர் கே.ஆர்.சுந்தரம் எழுச்சி மிக்க ஒரு
உரையாற்றி பயணத்தை துவக்கி வைத்தார். தோழர் கே.ஆர்.எஸ் அவர்கள் இறுதியாக
பங்கேற்ற எங்கள் சங்க நிகழ்வு அதுதான்.

எங்களின் தற்போதைய தென் மண்டல பொதுச்செயலாளரும் அன்றைய துணைத்
தலைவருமான தோழர் கே.சுவாமிநாதனும் எங்களோடு வந்திருந்தார். போளூர்,
திருவண்ணாமலை,  விழுப்புரம், பண்ருட்டி, கடலூர், புதுவை ஆகிய மையங்களில்
ஊழியர் கூட்டம் நடத்தி விட்டு நள்ளிரவு திருவாரூர் சென்றோம்.

மறுநாள் வெண்மணி சென்று தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு ( வெண்மணி அனுபவங்கள் பற்றி தனியாக விரிவாக எழுதிட வேண்டும்)   வேலூர் திரும்பும் வழியில்  பூம்புகார் சென்றிருந்தோம். கடற்கரை அருகே இருந்த மீனவர் குடியிருப்பைப் பார்த்து  புயல் வந்தால் இவர்களின் நிலை என்ன ஆகும் என்றெல்லாம் பேசிக்கொண்டோம்.  வேளாங்கண்ணி  செல்லலாமா என்று ஒரு தோழர் கேட்ட போது  மறுநாள் செயற்குழு  என்று முன்னரே முடிவெடுத்து  கடிதம் அனுப்பியிருந்ததால் நேரமாகும் என்று அவர்
விருப்பத்தை நிராகரித்து நாகை, புதுவை வழியாக திரும்பிக் கொண்டிருந்தோம்.
கடைசியில் விழுப்புரத்தில் வாகனம் பழுதானதால் சரி செய்ய தாமதமானதால்
செயற்குழுவை ஒத்தி வைக்க நேரிட்டது ஒரு தனிக்கதை.

வீட்டிற்கு வரும்போது   காலை இரண்டு மணி  இருக்கும். எட்டரை மணிக்கு தொலைபேசி  உறக்கத்தை கலைத்தது. திருவண்ணாமலையில் இருந்த கோட்டத்
துணைத்தலைவர்  தோழர் அழகுதுரை  கலவரத்தோடு பேசினார். தோழரே டி.வி
பார்த்தீர்களா, நேற்று நாம் சென்ற இடங்கள் எல்லாம் இன்று அழிந்து போயிருக்கிறது என்று.  கடல் சீற்றம் என்று மட்டுமே அப்போது தொலைக்காட்சியில் சொல்லிக் கொண்டிருந்தார்கள், பாதிப்பு பற்றிய சரியான புரிதல் யாருக்கும் இல்லை. அடுத்த
தொலைபேசி வேளாங்கண்ணி செல்லலாம் என்ற தோழரிடமிருந்து. ஒரு வேளை
நாம் அங்கே சென்று தங்கியிருந்தால் நம் நிலைமை என்னவாகியிருகுமோ என்ற
கேள்வியே இருவர் மனதிலும் மேலோங்கியிருந்தது. 

புதுவையிலிருந்த மூத்த தோழர் ஆர்.பி.எஸ் (தற்போது இவர் மறைந்து விட்டார்)  அடுத்து பேசினார். பலரையும் அரசு  புதுவைப்    பலகலைக்கழகத்தில் தங்க வைத்துள்ளார்கள். ஏராளமான குழந்தைகள் உள்ளனர். அவர்களின் உணவிற்கான
 ஏற்பாடு எதுவும் இல்லை என்று கூறிய  அவரே  பிரெட் பாக்கெட்டுகள் வாங்கி தரலாம்  என்று யோசிக்கிறோம் என்றார். தாராளமாக செய்யுங்கள், பணத்தைப்பற்றி கவலை
வேண்டாம் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்றேன். 1000 பிரெட் பாக்கெட் வாங்கி பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டபோது நேரம் 11 .30
அன்று மாலையே வேலூரிலிருந்த பொறுப்பாளர்கள் அவசரமாகக் கூடி நம்மால்
இயன்ற நிவாரணப் பணிகளை மேற்கொள்வது என்று முடிவெடுத்து தங்களால்
இயன்ற பங்களிப்பை அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை உறுப்பினர்களுக்கு
கையால் எழுதிய சுற்றறிக்கை மூலம் அன்றே அனுப்பினோம். மறுநாள் பாதிக்கப்
பட்ட பகுதிகளுக்கு நேரில் செல்வது என்றும் முடிவெடுத்தோம்.  இதற்கிடையில் எங்கள் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் கே.வேணுகோபால் ஹைதராபாத்
நகரிலிருந்து தொலைபேசியில் அழைத்தார். நம் ஊழியர்கள் யாருக்காவது ஏதேனும்
பாதிப்பு உள்ளதா என்று அக்கறையோடு விசாரித்த அவர் நிவாரணப் பணிகளில்
நாம் முழுமையாக ஈடுபட வேண்டும் என்றும் நிர்வாகத்தையும் இப்பணியில்
இணையுங்கள் என்றும் அவர் வழி காட்டினார்.  அதன் படி கோட்ட மேலாளரிடம் பேச உணவளிக்கும் பணியில் எல்.ஐ.சி நிர்வாகம் தன்னை இணைத்துக் கொண்டது.

மீண்டும் தோழர் ஆர்.பி.எஸ் தகவல் அளித்தார். மாற்று உடை கூட இல்லாத நிலையில் பலர் உள்ளனர். குளிர் காலமாக உள்ளதால் போர்வைக்கான தேவை
அதிகமாக உள்ளது. அதே நேரம் அங்கே உள்ள கடைகள் கூடுதல் விலைக்கு விற்க
ஆரம்பித்து விட்டதால் வேலூரிலிருந்தே போர்வைகள் வாங்கி வந்தால் சரியாக
இருக்கும் என்றும் கூறினார்.

மறுநாள் கோட்ட அலுவலகத்தில் ஒரு அஞ்சலிக்கூட்டம் நடத்தி பங்களிப்பிற்கான
அறைகூவலையும் அளித்தோம். பல தோழர்கள் அதிலும் பெரும்பாலும் மகளிர்
தோழர்கள் அப்போதே தங்கள் கையில் இருந்த பணத்தை அளித்தார்கள். வங்கியில்
இருந்தும் பணத்தை எடுத்துக் கொண்டு கடைப்பக்கம் வந்து போர்வை, லுங்கி, புடவை போன்ற பொருட்களை வாங்கினோம். எங்கள் நோக்கம் அறிந்து மிகவும்
குறைவான விலைக்கே அளித்தார்கள். ஹரியானா ஹாண்ட்லூம் என்ற ஒரு சர்தார்ஜியின் கடையின் உரிமையாளரான சீக்கியப் பெரியவர் கடைசியாக ஒரு
25  சால்வைகளை கட்டிக் கொடுத்து இது எனது காணிக்கையாக இருக்கட்டும் என்று
தூய தமிழில் கூறினார். அப்பகுதி நடை பாதை வியாபாரிகள் குழந்தைகளுக்கான
ஆயத்த ஆடைகளை மிகவும் சொற்பமான விலைக்கு தந்தார்கள்.

டாடா சுமோ வாகனத்தின் மேற்கூரை முழுவதுமும் பின்பக்கம் முழுவதும்
பொருட்களை நிரப்பி நாங்கள் நால்வர் (நான், தோழர்கள் நாராயணன், தசரதன்,
ரமேஷ் பாபு ) புதுவை நோக்கி புறப்பட்டோம். அன்று புதுவை சென்று விட்டு
மறுநாள் கடலூர் சிதம்பரம் பார்த்து விட்டு திரும்புவது எங்களது திட்டம்.

சுனாமி தாக்கிய பகுதிகளை நோக்கிய பயணம் அவ்வளவு சுலபமாக முடியப்போவதில்லை  என்று அப்போது நாங்கள் அறிந்திருக்கவில்லை.

                                                                     நினைவலைகள் அவ்வளவு சீக்கிரம் ஓயாது

Tuesday, October 26, 2010

குற்றவாளிக் கூண்டில் ராமர்


ராமர் மீது வழக்கு வந்தால் - நிஜமல்ல,  கற்பனைதான் ஆனாலும் ?

அலகாபாத் நீதிமன்றம் இன்று மீண்டும் பரபரப்பாக காட்சியளித்தது. அயோத்தி நிலம்
தொடர்பான வழக்குதான் இருவழியாக டெல்லிக்கு போய்விட்டதே, இன்று ஏன் இவ்வளவு கூட்டம், இத்தனை டிவிக்காரர்கள்  என்று நீதிமன்றம் எதிரில் டீக்கடை
வைத்திருந்த முன்னாராம் பக்கத்து பெட்டிக்கடை அப்துல்லாவைக் கேட்டார். யாரோ
புதிய பிரச்சினைகளோடு மீண்டும் வழக்கு தொடுக்கப் போகின்றார்களாம் என்று
விளக்கம் சொன்னார் அப்துல்லா. கோவில் வந்தால் என்ன? மசூதி வந்தால்தான் என்ன
நம் வாழ்க்கை என்னவோ டீ விற்பதிலும் சிகரெட் விற்பதிலும்தான்  முடிந்து போகப்
போகிறது என்று அங்கலாய்த்தபடியே கிளாஸ்களை கழுவத்தொடங்கினார் முன்னாராம்.

நீதிமன்றம்  கூடியது.  மூன்று நீதிபதிகள் தங்கள் இருக்கையிலே வந்து அமர்ந்தார்கள்.
சமீபத்தில் இறந்து போன தந்தையின் ஆன்மா சாந்தி அடைய சங்கமத்தில் காரியம்
செய்ய வந்த உச்ச நீதிமன்ற நீதிபதி கூட பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தார்.
அயோத்தி வழக்கு அவரிடம்தான் வரும் என்ற செவி வழிச்செய்திகள் இவ்வழக்கு
என்னவாக இருக்கும் என்ற ஆவலை அவருக்கு உருவாக்கி இருந்தது.

கை நிறைய கற்றைக் காகிதகங்களோடு  நீதிமன்ற அறையில் வழக்கறிஞர்களோடு
நின்று கொண்டிருந்தவர்களின் தோற்றமே மிகவும் வித்தியாசமாக இருந்தது.
ஒருவரின் முகத்தை உன்னிப்பாக கவனித்தால் குரங்கின் சாயல் தென்பட்டது.
இன்னொருவரின் முகமோ பலமுறை சினிமாவில் பார்த்த பகவதி, ரங்காராவ்
போலவே இருந்தது.

வழக்கு தொடங்கியது. ராமர் மீதும் லட்சுமணர் மீதும் விபிஷணன் மீதும் வழக்கு
பதிய வேண்டும் என அந்த இரண்டு மனிதர்களின் வக்கீல் சொன்னபோது நீதிமன்றம் அப்படியே அதிர்ந்து போனது. மயான அமைதி அங்கே உருவானது.
ஒரு நிமிடம்தான் இந்த நிலை. அடுத்த நிமிடம் சந்தைக்கடை போல அவரவர்
பேசத் தொடங்கினர். என்ன தைரியம் இருந்தா ராமர் மேல வழக்கு போடணும்னும்
சொல்லுவ, மவனே வெளியே வா! என்று காவியுடையும் நெற்றியில் திலகமும்
இட்ட ஒரு தலைப்பாகைக்காரர்  கத்த, நிதிபதிகள் மரச்சுத்தியலை தட்டி தட்டி
அமைதியை உருவாக்க சிரமப்பட்டனர்.

வழக்கறிஞரை   தனது வாதத்தை தொடங்குமாறு நீதிபதிகள் கூறினர். அவரும் தொடங்கினார்.

கனம் கோர்ட்டார் அவர்களே, இங்கே உள்ள எனது கட்சிக்காரர்கள் கிஷ்கிந்தா அரசன்
வாலியின் சந்ததியைச் சேர்ந்த  அங்கதன் மற்றும் இலங்கைச்சக்கரவர்த்தி ராவணின்
பரம்பரையைச சேர்ந்த சிங்கமுகன். இவர்கள் இருவரும் தங்களது முன்னோருக்கு
இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டு வந்துள்ளார்கள். பல தலைமுறைகளுக்கு
முற்பட்ட வழக்குகளுக்கு தீர்ப்பு சொல்லும் ஆற்றல் இந்த நீதிமன்றத்திற்கு மட்டுமே
உள்ளது என்பதால் இங்கே வந்துள்ளனர்.

அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே சாமியார் போல தோற்றமளித்த ஒருவர்  அவசரம் அவசரமாக உள்ளே வந்து வக்கீலின் உதவியாளரின் காதைக்கடிக்க,
அவர் வக்கீலின் காதைக்கடிக்க பரபரப்பாக மீண்டும் நீதிபதிகளை வணங்கி
மை லார்ட் சீதா பிராட்டியின் தந்தை ஜனக மகாராஜாவின் குடும்பத்தினரும்
இவ்வழக்கில் இணைந்து கொள்ள அனுமதி கோருகின்றனர். தங்களின் அனுமதி
வேண்டும் என்று பணிவோடு கோரினார். நீதிபதிகள் தங்களுக்குள் ரகசியமாக
ஏதோ பேசி விட்டு பிறகு அதற்கு அனுமதி தந்தார்கள். இவ்வழக்கு பற்றிய
விசாரணையை மதிய உணவிற்கு பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று சொல்ல
அவை கலைந்தது.

இதனை நாளா இவனுங்க எங்க இருந்தானுங்க, புதுசா என்ன சிக்கலை கொண்டு
வந்துருக்கானுங்க என்றவாறே மக்கள் முணுமுணுத்துக் கொண்டே கலைந்து
போனார்கள். அங்கதன், சிங்க முகன், ஜனகர் வகையறாக்களை தூரத்திலிருந்தே
வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மதிய உணவிற்குப்பிறகு நீதிமன்றம் கூடியது. பத்திரிக்கையாளர்களுக்கே இடம்
போதவில்லை. வாதம் தொடங்கியது.

முதலில் ராவணன் தரப்பு வாதத்தை முன்வைத்தார். ராவணன் வதத்தைப் பற்றி
எதுவும் சொல்வதற்கில்லை ஏனென்றால் அடுத்தவர் மனைவியை கடத்திய குற்றம்
அவர் மீது உள்ளது. ஆனால் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தெறிந்தது என்பது
லட்சுமணன் செய்த குற்றம். ஈவ் டீசிங் சட்டப்படியும் ஐ.பி.சி 354 பிரிவின் படியும்
அவர் மீது வழக்கு பதிய வேண்டும் என்றார். அதே போல் விபீஷணன் மீது
கட்சித் தாவல் தடைச்சட்டப்படியும் ராவணன் அரசு பற்றிய ரகசியங்களை ராமரிடம்
கூறியதாலும் அவர் மீது தேசத்துரோகச்சட்டப்படி நடவடிக்கை வேண்டும் என்று
வலியுறுத்தினார்.

வாலிக்கும் ராமனுக்கும் எந்த பிரச்சினையும்    இல்லாதபோது வாலியை கொலை
 செய்தது , அதுவும் மறைந்திருந்து கொலை செய்தது என்பது திட்டமிட்ட படுகொலை.  இதற்கு 302  பிரிவின்படி தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டார் வக்கீல். அடுத்து
சீதா பிராட்டி தரப்பு வாதங்களை அவர் முன்வைக்கும்   முன்னால்    அந்த சாமியார் எழுந்து   ஐயா, நான் கொஞ்சம் பேசலாமா என்று
பணிவோடு கேட்டார்.

நீதிபதிகள் அனுமதிக்க அவர் பேசத் தொடங்கினார்.
" ஐயா எங்கள் வம்சத்திற்கே மிகப்பெரிய பெருமை சீதா எங்கள்
குலத்தில் பிறந்ததுதான். அயோத்தி இளவரசரை அவர் திருமணம் செய்து
கொண்டபோது மிகவும் மகிழ்ந்தார்கள் எங்கள் முன்னோர்கள். ராமருக்கு
பட்டாபிஷேகம் என்ற போது எங்கள் உற்சாகத்திற்கு அளவேயில்லை. ஆனால்
அவள் கணவரோடு காட்டிற்குப் போனபோது வருத்தமும் ஏற்பட்டது. கணவர்
மீது இவளுக்கு எவ்வளவு மரியாதை என்று பெருமிதமும் அடைந்தோம். அவளைக்
கடத்தி சென்ற போது கவலைப்பட்டோம். மாவீரன் ராமன் இருக்கையில் என்ன
கவலை என்றும் பேசிக்கொண்டோம்.

ஆனால் போர் முடிந்து தீக்குண்டத்தில் சீதையை இறங்கச்சொன்னபோதுதான்
உள்ளம் வலித்தது. எம் குலப்பெண்ணிற்கு  இப்படி  ஒரு கொடுமையா என்று
பதைத்துப் போனோம். ஆனால் அதே தவறை மீண்டும் மீண்டும் செய்வது
எப்படி ஐயா சரியாக இருக்கும்? கர்ப்பமடைந்த பெண்ணை காட்டிற்கு துரத்தினார்கள்.
மீண்டும் அதே போல் குற்றம் சுமத்தி பூமிக்குள் செல்லும்படி செய்தார்கள்.
இதை நியாயம் என்று ஐயா ஒப்புக்கொள்வீர்களா ? என்று கண்ணீரோடு கேள்வி
கேட்டார் அந்த பெரியவர்.

அப்போது எழுந்த வக்கீல் ஐயா ராமபிரான் மீது ஐ.பி.சி யின் பல பிரிவுகளில்
வழக்கு பதிவு செய்யலாம்.

பெண்ணை இழிவு படுத்தியதற்கு 498 ஏ மற்றும் 499
தற்கொலைக்கு தூண்டியதற்கு  306
அஸ்வமேத யாகத்தின் போது சீதைக்குப் பதிலாக தங்கச்சிலையை
வைத்ததற்கு ஆள்மாறாட்ட வழக்கு பதிவு செய்யலாம் என்ற போது என் கட்சிக்காரர்
அதனை விரும்பவில்லை. ஆக எனது வாதங்களின் அடிப்படையில் வழக்கினை
நடத்தி தவறிழைத்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன், யுவர்
ஹானர் என்று கூறி முடித்தார்.

நீதிமன்றத்தில் நிலவிய நிசப்தத்தை ஒரு நீதிபதி கலைத்தார்.

நீங்கள் கூறியவர்கள் யாருமே இப்போது இல்லாதபோது எப்படி வழக்கை நடத்த
முடியும்? நீங்கள் கூறுவதற்கெல்லாம் என்ன ஆதாரம்?  சாட்சிகள் வருவார்களா?

பணிவோடு வழக்கறிஞர் பதிலளித்தார்.
ஐயா,  ராமர் எந்த இடத்தில் பிறந்தார் என்று தாங்கள் எந்த அடிப்படையில் தீர்ப்பு அளித்தீர்களோ, அந்த அடிப்படையில்தான் இந்த வழக்கில் நீதி கேட்கிறோம். அது
சரி என்றால் இதுவும் சரியல்லவா? ராமர் பிறந்தது நம்பிக்கை என்றால் அவரது
வாழ்நாளில் நடந்ததாக சொல்லப்பட்ட சம்பவங்களும் உண்மைதானே? ராமருக்கு
நியாயம் வழங்கியது போல இவர்களுக்கும் நியாயம் வழங்க வேண்டும் என்று
சொல்லி அவர் அமர நீதிபதிகளுக்கு இதயத்தில் மெல்லமாய் வலித்தது.

உச்சநீதி மன்ற நீதிபதி தனக்குள்ளாக சொல்லிக் கொண்டார். தன்னிடம் அயோத்தி
வழக்கு வந்தால் எப்படியாவது அதை வேறு யாருக்காவது மாற்றி விட வேண்டும்.