இரண்டு தெருக்களுக்கும் நடுவில் உள்ள ஒரு சின்ன பகுதி. அதை மட்டும் அம்போ என்று விட்டு விட்டார்கள். அந்த பகுதிக்கு எப்போது விடிவுகாலம் பிறக்குமோ?
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர்-திருப்பத்தூர் மாவட்ட மாநாடு நேற்றும் இன்றும் திருப்பத்தூரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கட்சியின் மாவட்டச் செயலாளராக தோழர் எஸ்.டி.சங்கரி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் தோழர், தோழர் சங்கரிதான். அந்த பெருமை வேலூர் மாவட்டத்திற்கு கிட்டியுள்ளது என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொறுப்பாளராக, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக முத்திரை பதித்துள்ள தோழர் எஸ்.டி.சங்கரி, இப்புதிய பொறுப்பிலும் மிளிர்வார் என்பது நிச்சயம்.
தோழர் சங்கரி அவர்களின் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில் படித்த செய்தி.
மண்ணுளிப் பாம்பை நான்கு கோடி ரூபாய்க்கு விற்கும் வேளையில் ஐவரை காவல்துறை கைது செய்துள்ளது. இது நேற்று வேலூர் மாவட்டத்தில் ஜவ்வாது மலை அடிவார கிராமம் ஒன்றில் நடந்துள்ளது.
மண்ணுளி பாம்பு விற்பனை என்ற மோசடி பற்றிய செய்திகள் சமீப காலமாக வரவில்லை. சதுரங்க வேட்டை திரைப்படம் கொடுத்த விழிப்புணர்வு என்று நினைத்திருந்தேன். அப்படியெல்லாம் ஒரு மண்ணும் உருவாகவில்லை என்பது இந்த செய்தி உணர்த்துகிறது.
ஆமாம். உண்மைதான்.
வாயை மட்டுமே மூலதனமாகக் கொண்டு பிழைப்பு நடத்தும் மோசடிப் பேர்வழிகள் உலகெங்கும் பரவியுள்ளனர். அவர்கள் மோடி போல பிரதமராகவும் இருக்கலாம், உங்களை ஏமாற்றிய/ஏமாற்றிக் கொண்டிருக்கிற நண்பனாக உலாவிய துரோகியாகவும் இருக்கலாம்.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களின் சதுரங்க வேட்டை நடந்து கொண்டுதான் இருக்கும்.
விஜய்/ரஜினி/கமல்/அஜித்/சூர்யா/விக்ரம்/சிவ கார்த்திகேயன்/தனுஷ்/சிம்பு?
நேற்று முன் தினம் எழுதிய காரில் நாய்களுக்கு என்ன ஆய்வு? என்ற பதிவின் தொடர்ச்சி இது.
ஏ.டி.எம்
வாசலில் இரண்டு நாய்கள் படுத்துக் கொண்டு எழ
மறுக்கின்றன. கதவை திறக்க முடியவில்லை. கதவை சற்று தள்ளினால் ஆவேசமாக குரைக்க
தொடங்கி விட்டன. குரைத்து விட்டு மீண்டும் கதவின் மீது சாய்ந்து படுத்துக் கொண்டு விட்டன.
அந்த நேரத்தில் அந்த நாய்களை துரத்த வேறு எந்த வாடிக்கையாளர்களும் கூட வரவில்லை. கிட்டத்தட்ட
ஐந்து நிமிடம் இப்படியே கடந்தது. போலீஸ் லாக்கப்பில்
இருந்த ஒரு ஃபீலிங்.
நல்ல
வேளையாக மூன்றாவதாக ஒரு நாய் வர, அந்த நாயோடு இந்த இரண்டு நாய்களும் சண்டை போட செல்ல,
ஒரு வழியாக வெளியே வந்தேன், விடுதலையாகி.
வாஜ்பாய்
ஆட்சியில் நாய்க்கடிக்கான மருந்து உற்பத்தி
லவ்பெல்லால் தனியாருக்கு அளிக்கப்பட்டதையும் அதே வாஜ்பாய் ஆட்சியில் தெருநாய்களை கொல்லக்
கூடாது என்று மேனகா காந்தி சட்டம் போட்டதையும் இணைத்து பாருங்கள்.
தனியார்
உற்பத்தி செய்யும் நாய்க்கடி மருந்து விற்க நாமெல்லாம் நாய்க்கடி பெற வேண்டும்.
இந்த
வாஜ்பாய் பிறந்த நாளை நல்லாட்சி தினமாக வேறு கொண்டாடுகிறார்கள். கொடுமை.
கடந்த வாரம் சென்னை சென்று இரவு திரும்பும் போது வீட்டு வாசலில் மாநாடு நடத்திக் கொண்டிருந்த நாய்கள் பிறகு காரை சூழ்ந்து கொண்டு என்னமோ ஆய்வு நடத்திக் கொண்டிருந்தன.
அப்படி
என்ன ஆய்வு செய்து என்ன கண்டு பிடித்திருக்கும்.
அடிமைத்தளையை அறுத்தெரிய,
சுதந்திரக்காற்றை சுவாசிக்கஅஞ்சலி செலுத்தினோம்.
வேலூரில் புத்தக விழா என்ற அறிவிப்பைப் பார்த்தது முதலே சென்று வர வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தேன். அதற்காக துவக்கப்பட்ட ஒரு வாட்ஸப் குழுவில் வேறு இணைத்து அன்றாட நிகழ்வுகளைப் பற்றியெல்லாம் பதிவு செய்து கொண்டே இருந்தார்கள். ஆனால் தொடர்ச்சியான வேலைகள், பயணங்கள் காரணமாக அதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை.
இன்றுதான் விழாவின் இறுதி நாள் என்பதால் இன்று எப்படியாவது சென்றிட வேண்டும் என்ற வேகத்துடன், மதிய உணவு இடைவேளையின் போது வேகம், வேகமாக சென்று, அதை விட அதி வேகமாக அரங்குகளுக்குள் நுழைந்து புத்தகங்களை வாங்கி வந்தேன்.
செலவழித்த நேரம் குறைவென்றாலும் புத்தகங்கள் வாங்கியதில் குறையெதுவும் இல்லை. மனம் நிறைவடையக்கூடிய விதத்தில்தான் இருந்தது. ஞாயிறு கடலூர் சென்று திரும்பிய நேரத்தில் 256 பக்கங்கள் கொண்ட கள அனுபவ கட்டுரை நூலை படித்து முடிக்க முடிந்ததால் உருவான தைரியமே இந்த அளவு புத்தகங்களை வாங்க தூண்டியது.
இன்று வாங்கிய நூல்களின் பட்டியல் கீழே
எண் |
நூல் |
ஆசிரியர் |
பக்கம் |
1 |
தண்ணீர் |
அசோகமித்திரன் |
112 |
2 |
எரியும் மண் -மணிப்பூர் |
கிர்த்திகா தரன் |
83 |
3 |
நாடோடியாகிய நான் |
சமுத்திரக்கனி |
136 |
4 |
நரவேட்டை |
சக்தி சூர்யா |
280 |
5 |
நகலிசைக் கலைஞன் |
ஜான் சுந்தர் |
143 |
6 |
எதனையும் மறக்க இயலாது |
நேஹால் அகமது - தமிழில் சுனந்தா சுரேஷ் |
160 |
7 |
போராட்டம் தொடர்கிறது |
பிரபீர் பூர்காயஸ்தா தமிழில் ச.சுப்பாராவ் |
253 |
8 |
செயலற்ற அரசு |
எம்.ராஜ்ஷேகர் - தமிழில் ச.சுப்பாராவ் |
352 |
9 |
பேசும் பொம்மைகள் |
சுஜாதா |
230 |
10 |
திருடர்களின் கைகள் மென்மையானவை |
கரங்கார்க்கி |
103 |
11 |
மலரும் சருகும் |
டி.செல்வராஜ் |
198 |
12 |
சபக்தனி |
சம்சுதீன் ஹீரா |
272 |
13 |
தமிழ்ச் சினிமாவில் கம்யூனிசம் |
பாலு மணிவண்ணன் |
88 |
|
|
|
2410 |
பார்ப்போம்,
எவ்வளவு விரைவாக இவற்றையெல்லாம் வாசித்து முடிக்க முடிகிறதென்று.
மேலே உள்ள புகைப்படத்தை நேற்று மாலை ஏழு மணி அளவில் எடுத்தேன். இடம் எங்கள் தெருதான். இது ஏதோ ஒரு நாள் நிகழ்வு அல்ல. எப்போதும் நடந்து கொண்டிருப்பதுதான். குறுகலான சில தெருக்களில் இரு சக்கர வாகனம் செல்வது கூட சிரமமாக இருக்கும். வேலூரின் பெருவாரியான பகுதிகளிலும் இதே நிலைதான். வேலூரில் திரியும் தெரு நாய்களின் எண்ணிக்கையை தெரு மாடுகள் கடந்து விடும் போலிருக்கிறது!
சாலைகளில் மாடுகளை திரிய விடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை ஒருமுறை பார்த்தேன். மாட்டு முதலாளிகள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக ஒரு மாலை செய்தித்தாளின் சுவரொட்டியிலும் கூட பார்த்தேன். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. மாநகராட்சியின் எச்சரிக்கையையெல்லாம் மாட்டு முதலாளிகள் மதிப்பதே இல்லை.
சென்னையில் ஒரு கோர சம்பவம் நிகழ்ந்த பின்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
அது போன்றதொரு சம்பவத்திற்காக காத்திருக்கிறதா வேலூர் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம்?
நேற்று வேலூரில் பார்த்த
சுவரொட்டி கீழே உள்ளது.
காலையில் கைதாகி கல்யாண
மண்டபத்தில் காத்திருந்து போலீஸ் கொடுக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு மாலையில்
வீடு வந்து சேரும் போராட்டத்திற்கெல்லாம் ஏதோ பலான சாமியார் பிரேமானந்தா பெற்ற இரட்டை
ஆயுள் தண்டனை ரேஞ்சிற்கு பில்ட் அப் கொடுத்து
“விடுதலை செய்” என்று வெட்டியாய் போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டும் அளவிற்கு
பாஜகவிடம் காசு உள்ளது.
இந்த போஸ்டரின் முக்கிய நோக்கம் என்ன தெரியுமா?
அந்த கட்சிக்கு வேலூரில் 103 பேர் இருக்காங்களாம். அதைத்தான் இந்த மாதிரி போஸ்டர் அடிச்சு சொல்றாங்க!
பிகு 1 : ஸ்மார்ட் சிட்டி பணிகள் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை
தீர்க்க வேண்டும் என்பது அவர்கள் போராட்டத்தின் நோக்கம். ஸ்மார்ட் சிட்டி என்பதே ஒரு
தேவையில்லாத ஆணி. அதை கொண்டு வந்தது மோடி என்பதும் அதற்கான ஒப்பந்தங்களை இறுதி செய்ததும்
எடப்பாடி அரசுதான் என்பதும் பாஜக ஆட்களுக்கு தெரியாது போல!
பிகு 2 : ஸ்மார்ட் சிட்டி திட்டம் காரணமாக சாலைகள் படு கேவலமாக உள்ளது என்பது உண்மை. ஒன்றிய அரசு திட்டமா? எடப்பாடி சம்பந்தி ஒப்பந்தக்காரரா என்பதெல்லாம் மக்களுக்கு தேவையில்லாத ஒன்று. அவர்களின் கோபம் இயல்பாகவே ஒரு வருடமாக செயல்பட்டுக் கொண்டுள்ள/செயல்படாத மாநகராட்சி மீதுதான் திரும்பும். எனவே சாட்டையை கையிலெடுத்து ஒப்பந்தக் காரரை வேலை வாங்க வேண்டியது அவர்களின் பொறுப்புதான்