கீழேயுள்ள செய்தியை படியுங்கள்.
கோழை சாவர்க்கர் காலம் தொடங்கி இன்றைய நாள் வரை மன்னிப்பு கேட்பதெல்லாம் சங்கிகளுக்கு சாதாரணமான விஷயம். சொல்லப் போனால் மன்னிப்பு கேட்பது என்பதுதான் சங்கிகளின் பாரம்பரியம் . . .
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
கீழேயுள்ள செய்தியை படியுங்கள்.
மோடி விளம்பரம் செய்த, மொட்டைச்சாமியார் உள்ளிட்ட பாஜக முதல்வர்கள் வரி விலக்கும் விடுப்பும் கொடுத்த "காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படத்தை கழுவி கழுவி ஊற்றிய கோவா சர்வதேச திரைப்பட விழா தேர்வுக்குழுவின் தலைவர் நடவ் லேபிட் மன்னிப்பு கேட்டு விட்டார் என்று சங்கிகள் புளகாங்கிகத்தோடு ஒரு செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அச்செய்தி உண்மையா?
அம்பாள் என்றைக்கடா பேசியிருக்கிறாள்? என்பது போல சங்கிகள் என்றைக்கடா உண்மை பேசியிருக்கிறார்கள் என்ற உங்கள் குரங்குக் குளியல் எனக்கு கேட்டு விட்டது.
அவர் சங்கிகளின் பிதாமகர்கள் செல்ஃபி சாவர்க்கரோ, ஆர்.எஸ்.எஸ் தேவரஸோ இல்லை, சர்வ சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கேட்க . .
"காஷ்மீரில் பாதிக்கப்பட்ட பண்டிட்டுகள் யாருக்காவது நான் சொன்னது மனதை புண்படுத்தி இருக்குமானால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
அதே நேரம் "காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படத்தைப் பற்றிய எங்கள் தேர்வுக் குழுவின் கருத்தின் எந்த மாற்றமும் இல்லை. வெறுப்புணர்வை தூண்டும் இழிவான பிரச்சாரப் படம் அது என்பதில் உறுதியாக இருக்கிறோம்"
என்றுதான் அவர் கூறியுள்ளார்.
சர்ச்சையே அவர் திரைப்படம் பற்றி கூறியதுதான். அந்த கருத்தில் மாற்றம் இல்லை என்று சொல்கிற போது மன்னிப்பு கேட்டார் என்பதே அபத்தமானதல்லவா!
என்ன! தாங்கள் அடி முட்டாள்கள் என்பதை சங்கிகள் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்கள். அவ்வளவுதான் . . .
ரூபா தத்தா ஒரு பெங்காலி திரைப்பட, தொலைக்காட்சி நடிகை. சங்கிகளின் ஒரு ரௌடிகள் பிரிவான கர்னி சேனாவின் மேற்கு வங்கத் தலைவரும் கூட.
அவர் பெயர் நேற்று எல்லா ஊடகங்களிலும் அடிபட்டது.
ஏன்?
கொல்கத்தாவில் நடைபெற்று வருகிற சர்வதேச புத்தகக் கண்காட்சியில் அவர் பிக்பாக்கெட் அடித்த போது சிக்கிக் கொண்டு இருக்கிறார்.
ஒரு பையை அவர் குப்பைத் தொட்டியில் வீசியெறிய காவலர்கள் அதை பார்த்துள்ளார்கள். அந்த பைக்குள்ளாக ஏராளமான பர்ஸ்கள். இதற்கு அவரால் விளக்கம் சொல்ல முடியாத காரணத்தால் கைது செய்யப் பட்டுள்ளார். நீதிமன்றத்தால் பிணையும் மறுக்கப்பட்டு விட்டது.
சாவர்க்கரை வணங்குபவருக்கு அவர் பாணியில் மன்னிப்பு கேட்டு தப்பிக்கத் தெரியாதா என்ன?
மன்னிப்பு கொடுக்கத்தான் மேற்கு வங்க ஆட்டுத்தாடியும் கூடவே இருக்கிறாரே!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் அவர்களின் முக நூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.