இனி மாலனை நக்கலுக்குக் கூட மேஜர் என்றழைத்து அந்த பதவியின் மரியாதையை கெடுக்க விரும்பவில்லை. அந்த
நபருக்கும் மரியாதை அவசியம் இல்லை.
தான்
தெரிவித்த கருத்துக்காக தனி நபர் தாக்குதல் நடத்துகிறார்கள். வசை பாடுகிறார்கள் என்றெல்லாம்
பாஜக ஊதுகுழல் மாலன் புலம்பி இருக்கிறார்.
அப்படி
அவர் மீது தாக்குதல் நடத்துகிற அளவிற்கு என்ன கருத்து சொல்லியுள்ளார்.
மாலன்
உதிர்த்த தத்துவ முத்துக்கள் கீழேயுள்ளது.
இந்திலையில் தமிழ்நாட்டு வாக்காளர்கள் யோசிக்க வேண்டிய ஒன்று உண்டு.
மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்குமானால் (தனித்துப் பெரும்பான்மை பெற்றோ, அல்லது சில கட்சிகளின் ஆதரவோடோ) அதில் தமிழகம் இடம் பெற வேண்டாமா?
எதிர்கட்சி வரிசைகளை நிரப்புவதால் என்ன பலன் கிடைத்துவிடும்?
நம் உரிமைகளுக்குக் குரல் எழுப்ப முடியும். உண்மைதான். ஆனால் உரிமைக்குரல் உணர்வுகளை வெளிப்படுத்துமேயன்றி வேறெதைச் சாதிக்கும்? உணர்ச்சி நிலையிலேயே , அதுவும் ஒரு கொதி நிலையிலேயே ஒரு மாநிலம் இருப்பது அதன் வளர்ச்சிக்கு உதவுமா? தமிழகத்தில் தழைத்து வரும் வெறுப்பரசியல் மற்றவர்களிடமிருந்து தமிழகத்திற்கு எதிராகத் திரும்பினால் என்ன ஆகும்?
உலகெங்கும் சிறுபான்மையருக்கு இரு வழிகள்தான் உண்டு. மொழிச் சிறுபான்மையோருக்கும்தான். ஒன்று மோதல்
(Confrontation) மற்றது அனுசரித்தல் (Conciliation)
மோதிப் பார்த்தால் என்ன ஆகும் என்பதற்கு இலங்கையும், அடையாளங்களை விட்டுவிடாமல் அனுசரித்துப் போனால் என்ன கிடைக்கும் என்பதற்கு சிங்கப்பூரும் நம் கண்ணெதிரே சாட்சிகளாக இருக்கின்றன.
இரண்டிலும் இழப்புக்கள் இருக்கும், மறுப்பதற்கில்லை. ஆனால் மோதலில் சேதம் அதிகம். சமரசங்கள் வலி தருவன. மறுப்பதற்கில்லை. ஆனால் சமரசம் இல்லாத வாழ்க்கை ஒன்றுண்டா? குடும்பத்தில், அலுவலகத்தில், வாழுமிடத்தில், இறுதியில் சுடுகாட்டில் கூட எத்தனை சமரசங்கள்!
தமிழகத்தில்
பாஜக கூட்டணி வரப்போவதில்லை என்பது மாலனுக்கு தெளிவாக புரிந்து விட்டது. மத்தியிலும்
வரப்போவதில்லை என்பது இன்னொரு விஷயம்.
தமிழகத்தில்
தாமரை கருகுவதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. வாங்கிய காசுக்கு வஞ்சகம் செய்யக் கூடாது
என்பதற்காக இலங்கையில் தமிழர்கள் அழிந்து போனது போல தமிழகத்து தமிழர்களும் அழிந்து
போவீர்கள் என்று மிரட்டுகிறார்.
இன்னும்
தெளிவாக சொல்ல வேண்டுமானால்
ஒரு
வேளை மோடி மீண்டும் வந்து தமிழகத்தில் அக்கூட்டணி தோற்குமானால் தமிழர்களை அவர் அழித்து
விடுவார். ஆகவே உயிருக்கு பயந்தவர்களே மோடிக்கு ஓட்டு போடுங்கள்.
மதச்சிறுபான்மையினருக்கும்
அவர் அதே மிரட்டலை விடுக்கிறார்.
மோடிக்கு
அடி பணியாதவர்களுக்கு அழிவு நிச்சயம் என்பதுதான் மாலன் வெளிப்படையாக விடுக்கும் மிரட்டல்.
இதுதான்
பாஸிஸம். இந்த பாஸிஸ குணாம்சம் இருப்பதால்தான் மோடியை எதிர்க்கிறோம். எதிர்ப்போம்.
காவிக்கயவர்களை
விட குரூரமான வார்த்தைகளில் பேசுகிற மனிதன் மாலன் என்று அம்பலப்படுத்துவதையே அவரால்
தாங்க முடியவில்லை. தனி நபர் தாக்குதல், வசை பாடுதல் என்று அவரை கழுவி ஊற்றும் ஜெயமோகன்
பாணியிலேயே அனுதாபம் தேட முயற்சிக்கிறார்.
தளபதி
படத்துல ஒரு வசனம் வரும் தெரியுமா மாலன்!
அது
போலதான்
மோடியை
ஆதரித்து வாழறதை விட அவரை எதிர்த்து அழியறதே மேல்.
எழுத்து
வியாபாரம் செய்யற உனக்கு அதெல்லாம் புரியாது.