Showing posts with label கொல்கத்தா. Show all posts
Showing posts with label கொல்கத்தா. Show all posts

Wednesday, December 25, 2024

கொல்கத்தா மாநகரம் போல . . .

 


ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் பகிர்ந்து கொண்ட முகநூல் பதிவை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.


கிறிஸ்துவர்களின் பண்டிகையான கிறிஸ்துமஸை கொண்டாட முஸ்லீம் சமையல்காரர்  தயாரித்த கேக்கை வாங்க யூதர் ஒருவரின் பேக்கரியில் இந்துக்கள் காத்திருக்கும் ஒரே நகரம் கொல்கத்தா. 

கொல்கத்தா மக்கள் போல இந்தியர்கள் ஒவ்வொருவரும் மாறினால் இந்தியாவில் பாஜகவிற்கு இடமே இருக்காது. 

Saturday, January 14, 2023

ஆயிரம் கைகள் தடுத்து நின்றாலும்

 


அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 26 வது பொது மாநாடு இம்மாதம் எட்டாம் நாள் முதல் பதினோராம் நாள் வரை கொல்கத்தாவில் நடைபெற்றது. கொல்கத்தா நகரெங்கும் பெரிய பேனர்களில் மம்தாவும் சிறிய பேனர்களில் மோடியும் தோன்றி "ஜனநாயகத்தின் தாயகம்" இந்தியாவிற்கு  ஜி 20 தலைமை என்று பீற்றிக் கொண்டிருந்தார்கள்.

ஜனநாயகத்தின் தாயகத்தில் என்ன நடந்தது தெரியுமா?

மாநாட்டு நடத்துவதற்காக ஆறு மாதம் முன்பே கொல்கத்தா எகோபார்க்கில் உள்ள மிஷ்டிகா அரங்கம் முன்பதிவு செய்யப்பட்டு முழு கட்டணமும் செலுத்தப் பட்டிருந்தது.

அதற்கான அனுமதியை மம்தா அரசு டிசம்பர் 15ம் தேதி ரத்து செய்கிறது.

1500 பேர் பங்கேற்பதற்கான மாற்று அரங்கை கண்டுபிடிப்பதற்கான அவகாசம் வெறும் 23 நாட்கள்தான்.

மாநாட்டை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்தி வைக்க வேண்டும் என்பது தீதியின் எண்ணம்.

அந்த எண்ணம் பலித்ததா?

யாரிடம் சவால் விடுகிறார் அவர்!

எங்களிடம் உங்கள் குறுக்கு புத்தியை காண்பித்தால் என்ன ஆகும்?

கொல்கத்தா தோழர்கள் பதில் சொன்னார்கள்.

எகோபார்க் அமைந்திருந்த பகுதியிலேயே ஜோதிபாசு ஆய்வு மையம் கட்ட மார்க்சிஸ்ட் கட்சி வாங்கியிருந்த இடம் இருந்தது

புதர் மண்டிக் கிடந்த பகுதியாய் இருந்த அந்த இடத்தை சுத்தம் செய்தார்கள். மாநாட்டு அரங்கம், சமையலறை, உணவுக் கூடம், கழிவறைகள் என பிரம்மாண்டமாய் ஒரு மாநாட்டு அரங்கம் பதினைந்து நாட்களுக்குள் உருவானது. 

மாநாட்டை தடுத்து நிறுத்த முயன்ற சதிகார படுபாவிகள் வழக்கம் போல தோற்று ஓடினார்கள்.

தோற்றதில்லை, தோற்றதில்லை, தொழிற்சங்கம் தோற்றதில்லை.

சதிகாரர்களின் முகத்தில் கரியை பூசி பிரம்மாண்டமாக நடந்த மாநாட்டின் புகைப்ப்டங்கள் இங்கே.





















பிகு: இம்மாநாட்டில் அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.