Wednesday, November 30, 2022

மாத்தியாவது சொல்லுங்கடா !!!

 


கோவா சர்வதேச திரைப்பட விழாவின் தேர்வுக்குழுவினர் மோடி விளம்பரம் செய்த “காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படத்தை கழுவி கழுவி ஊற்றியதற்கு சங்கிகள் தரப்பிலிருந்தும் மோடிக்கு ஆதரவாக இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதரும் எதிர்வினை ஆற்றியுள்ளார்கள்.

தேர்வுக்குழு தலைவர் இஸ்ரேல் நாட்டின் இயக்குனர் என்பதால் எல்லா எதிர்வினைகளும் “ஹிட்லர் காலத்தில் யூதர்கள் பட்ட இன்னல்களை வெளிப்படுத்திய ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் திரைப்படத்துக்கு இணையானதல்லவா காஷ்மீர் ஃபைல்ஸ்! இதைப் போய் விமர்சிக்கலாமா” என்ற ரீதியில்தான் அமைந்துள்ளது.  தூதரும் அதைத்தான் சொல்கிறார்.

இதைக் கேள்விப்பட்டால் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தற்கொலை செய்வார் என்பது வேறு விஷயம்.

சங்கிகளுக்கும் சரி, தூதருக்கும் சரி, சுய புத்தியே கிடையாதா? பாஜக ஐ.டி விங் எழுதித் தருவதை அப்படியே ட்வீட்டுவார்களா? சின்ன மாற்றம் கூட செய்ய மாட்டார்களா! ஒரே ஸ்க்ரிப்டை எத்தனை முறை படிப்பது!

அனுபம் கேர் கொஞ்சம் பரவாயில்லை. கூடுதலாக, சித்தி வினாயகர் அவரை தண்டிப்பார் என்று சபித்துள்ளார். சித்தி வினாயகருக்கு வேறு வேலையே கிடையாதா! பண்டிட்டுகளை வெளியேற்ற முயற்சிகள் நடந்த போதே அதற்கு காரணமாக இருந்தவர்களை அப்போதே தண்டித்திருந்தால் “காஷ்மீர் ஃபைல்ஸ்” ப்டத்துக்கே அவசியம் வந்திருக்காதே. அப்பட இயக்குனர் 18 கோடியில் அபார்ட்மெண்ட் வாங்கியிருக்க முடியாதே!

பிகு : ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் படத்தை இயக்க ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஊதியமே பெறவில்லை என்றும் இந்த இயக்குனர் அக்னிஹோத்ரி 18 கோடி ரூபாயில் மும்பையில் அபார்ட்மெண்ட் வாங்கினார் என்ற தகவலை சொன்னது யார் தெரியுமா?

 நீங்கள் நம்பாவிட்டாலும் சொல்கிறேன்.

 .

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.


.

.

.

.

.

.

சுமந்து . . .

 

 

இதற்குத்தானா வியந்து வியந்து வியந்து வியந்து?

 


வியந்து வியந்து வியந்து வியந்து மோடிக்கு பாராட்டு மாலை சூட்டிய காசி தமிழ்ச் சங்கமத்தின் யோக்கியதை கீழே பல்லிளிக்கிறது.


"ஸ்டேக்கே ஓப்பி யூனிட்டி" க்கு பிறகு இன்னொரு கொலை.

"உங்களுக்கு ஓட்டு வேண்டுமானாலும் போட்டு விடுகிறோம். தமிழை விட்டு விடுங்கள்" என்று சொல்ல வைக்கும் தந்திரமோ!

பிகு: வேறு சில தலைப்புக்கள் கூட தோன்றியது.

அவை

காசியில் தமிழைக் கொல்லும் கழிசடைகள்.

சங்கமம் நடத்தும் சனியன்கள்.

Tuesday, November 29, 2022

மூக்கில சாப்பிடறயா ஆ.தா ரவி?

 


பின் என்ன? பாரதி சொன்ன ரௌத்திரம்தான் வருகிறது. 

உலகம் முழுதும் பாரதியின் பிறந்த நாளை டிசம்பர் 11 அன்று கொண்டாடினால் தமிழக ஆட்டுத்தாடி ரவி மட்டும் அவரது நட்சத்திரப் பிறந்த நாளன்று கொண்டாடுமாம்.


இந்தாளும் ஆரிப் முகமது கானும் தமிழக, கேரள மக்களை உசுப்பேத்தி அடி வாங்கி ஆட்சியை கலைக்க திட்டம் போட்டிருக்கானுங்க போல. 

அடிக்காம துரத்தி விடனும் . . .

காரி உமிழ்ந்து விட்டார்களே மோடி!

 


மோடி விளம்பரம் செய்தார். மொட்டைச் சாமியாரும் மற்ற பாஜக முதல்வர்களும் சினிமா பார்க்க லீவ் கொடுத்தார்கள். 

அப்படி இவர்கள் உயர்த்திப் பிடித்த  "காஷ்மீர் ஃபைல்ஸ்"  படத்தை கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவின் தேர்வுக்குழுவினர் காரி உமிழ்ந்து விட்டனர்.



சங்கிகளின் கெட்ட நேரம், இவர் இஸ்லாமியரோ, கிறிஸ்துவரோ இல்லை, மோடி நல்லுறவு வைத்துள்ள இஸ்ரேல் நாட்டவர்.

சங்கிகள் பாவம் நிலை குலைந்து போயுள்ளனர். பாவம் இதற்கு அவர்கள் நக்கலடிக்கும் படம் "கலகத்தலைவன்" . அது நல்லாதானே இருக்கு என்றால் பி.பி இன்னும் அதிகமாகி, வெறி நாய்கள் போல ஓலமிட ஆரம்பித்து விடுகிறார்கள். அந்த கதையை நாளை எழுதுகிறான்.

மோடி முன்னிறுத்தும் எல்லாமே தேவையில்லாத ஆணிதான் என்பதை இப்படி அவர் காரி உமிழ்ந்து சொல்லியிருக்க வேண்டாம். இந்திய பிரதமர் மீது தெறிப்பது எங்கள் மீதும் படுகிறதல்லவா!

Monday, November 28, 2022

மோடியின் வேஷம் உமக்கெதற்கு ராகுல்?

 மூத்த தோழர் ஷாகுல் ஹமீது அவர்களின் முகநூல் பக்கத்தில்தான் ராகுல் காந்தியின் இந்த புகைப்படங்களைப் பார்த்தேன்.

 


இந்து வாக்காளர்களை ஈர்க்க ராகுல் காந்தி போட்டுள்ள வேஷம் என்பது நன்றாகவே தெரிகிறது.

 மோடி செய்யும் அதே ஏமாற்று வேலையை அரவிந்த் கேஜ்ரிவால் ரூபாய் நோட்டில் லட்சுமி படம் போட வேண்டும் என்று சொல்வதன் மூலம் செய்தார். நான் மட்டும் உங்களுக்கு சளைச்சவனா என்று இப்போது ராகுல் காந்தியும் வேஷம் கட்டி விட்டார்.

 அனைவருமே இப்படி மத வெறி சாக்கடையில் மூழ்கினால் எதிர்காலம் என்ன ஆகும்?

 இந்திய ஒற்றுமைப் பயணத்தின் மூலம் கிடைத்த நல்ல பெயரை மோடியை நகலெடுப்பதன் மூலம் இழக்கிறார் ராகுல் காந்தி.

 அப்பா  செய்து கொண்ட சமரசம்தான் இந்தியாவில் இன்று மத வெறி தலை எடுக்க காரணம் என்பதை புரிந்து கொண்டு கொள்ளு தாத்தாவினை பின்பற்றினால் அவருக்கு நல்லது.

அவ்ளோ வொர்த் இல்லையே மோடி!

 


காலையில் ஆங்கில இந்துவில் படித்த செய்தி . . .

மர்மமான ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து போன முன்னாள் முப்படைத் தளபதி பிபின் ராவத்திற்கு பஞ்சலோகத்தில் சிலை செய்து அதை ராணுவ தலைமையகத்தில் வைக்கப் போகிறார்களாம்.



தங்கம், வெள்ளி, செப்பு, ஈயம் மற்றும் இரும்பின் கலவையே பஞ்சலோகம். கோயில் உற்சவர் சிலைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் கலவை இது. அதன் மதிப்பு அதிகம் என்பதால்தான் சிலைக்கடத்தல் செய்பவர்கள் பஞ்சலோக சிலைகளையே குறி வைப்பார்கள்.

அவ்வளவு மதிப்பில் பஞ்சலோக சிலை வைக்கும் அளவிற்கு பிபின் ராவத் என்ன சாதித்து விட்டார்?

அகால மரணம் அவரை புனிதராக்கி விடுமா என்ன?

இந்திய் ராணுவத்தை காவிமயமாக்கியதும் உளவுத்துறை தகவல்களை அலட்சியம் செய்து ராணுவ வீரர்களை பலி கொடுத்ததும் போர் வந்தால் நடத்த ஆயுதங்களும் வெடி பொருட்களும் இல்லாத அளவிற்கு ராணுவத்தை பலவீனப்படுத்தியதும் காஷ்மீரில் பொய்யான தாக்குதல்களை  ஊக்குவித்ததும்தான் அவர் சாதனைகள்.

அவருக்கு சிலை என்பதே ஓவர். பஞ்சலோக சிலை என்பது ரொம்பவே ஓவர். 


Sunday, November 27, 2022

ஆட்டுத்தாடி, சூதாடிக்கூட்டத்துக்கு சப்போர்ட்டா?

 


ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து தமிழக அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்திற்கு அனுமதி தராமல் இழுத்தடித்து அச்சட்டம் காலாவதியாக உள்ளது என்பது இன்றைய செய்தி.


ஆன்லைன் சூதாடத்தை நடத்துபவர்களுக்கு உதவுகிறதா ஆட்டுத்தாடி?

மகாபாரதத்திலும் சூதாட்டம் இருப்பதால் அது தர்மம் என்று நினைக்கிறதா அந்த ஜென்மம்?

தர்மன் சூதாடியதால் திரௌபதியின் மானம்தான் பறிபோனது என்ற கதை கூட சனாதன தர்மத்தை பரப்பும் அந்த விலங்கின் சிந்தனையில் ஏறவில்லையா?

ஆன்லைன் சூதாட்டத்தால் வாழ்விழந்த குடும்பங்களின் கதி மற்றவர்களுக்கும் வர வேண்டுமென்று நினைக்கிறதா அந்த ஜந்து?

ஆன்லைன் சூதாடிகளுக்கு ஆதரவாக செயல்படும் ஆட்டுத்தாடியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவானா ஆட்டுக்காரன்?

என்னமோ, ஏதோ?

 


கே.வி.ஆனந்த் இயக்கி ஜீவா நடித்த "கோ" படத்தில் வரும் "என்னமோ, ஏதோ" பாடலின் வயலின் வடிவம், என் மகனின் கைவண்ணத்தில். . . .

யூட்யூப் இணைப்பு இங்கே . . .

Saturday, November 26, 2022

மோடியின் திமிரன்றி வேறில்லை

 


அருண் கோயல் என்ற ஒன்றிய அரசு செயலாளர் வெள்ளிக்கிழமை அன்று விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம் கொடுக்கிறார். அன்றே அது ஏற்கப்பட்டு மலை பணி ஓய்வு பெறுகிறார்.

 மே மாதம் முதல் காலியாக இருந்த ஒரு தேர்தல் ஆணையர் பதவிக்கான அறிவிக்கை சனிக்கிழமை காலை வெளியாகிறது. அன்று மாலையே அவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். திங்கள் கிழமை காலை அவர் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்கிறார்.

 எல்.ஐ.சி மாதிரியான நிறுவனங்களில் ஒரு உதவியாளர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம் அளித்தால் மூன்று மாதம் நோட்டீஸ் காலம் உண்டு. அதற்கு முன்பாக அவர் மீது ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளதா, இல்லையா என்று விஜிலன்ஸ் பிரிவு சான்றிதழ் அளிக்க வேண்ட்டும். அவர் அவசியம் விருப்ப ஓய்வில் சென்றுதான் தீர வேண்டுமா என்று ஒரு உயர் அதிகாரி ஒரு நேர்காணல் நடத்திட வேண்ட்டும். அதன் பின்புதான் அவர் விருப்ப ஓய்வில் செல்ல முடியும். பெரும்பாலான நிறுவனங்களில் இதுதான் நடைமுறையில் உள்ளது, தனியார் நிறுவனங்களில் கூட மூன்று மாத விதி உண்டு.

 ஆனால் எனக்கு இந்த வேலை வேண்டாம் என்று சொல்கிற ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி அன்றே விடுவிக்கப்படுகிறார். ஆறு மாதமாக நியமிக்கப்படாத  தேர்தல் ஆணையர் பதவிக்கான அறிவிக்கை மறு நாளே வெளியிடப்பட்டு ஒருவரிடம் மட்டும் விண்ணப்பம் பெற்று அவர் அன்றே நியமனம் பெறுகிறார்.  தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யக் கூட காலவரை உண்டு. ஆனால் தேர்தல் ஆணையர் பதவிக்கு அதுவெல்லாம் பொருந்தாது போல.

 ஒரு சரியான தலையாட்டி பொம்மையை கண்டு பிடிக்க ஆறு மாத காலம் ஆகியுள்ளது போல.

 அப்படி ஒரு விசுவாசியை, எடுபிடியை, அடிமையை கண்டுபிடித்த உடன் அந்த பணியில் அமர்த்துகிறார்கள் என்றால் ஜனநாயகத்தை இவர்கள் எச்.ராசாவின் ஐகோர்ட்டாகத்தான் மதிக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்ற மோடியின் திமிர் தவிர வேறென்ன இது!

 தன்னுடைய தேர்தல் தில்லுமுல்லுகளுக்கு உகந்த ஒரு ஆளை தேர்தல் ஆணையராக நியமித்ததே மோடியின் பயத்தைத்தான் காண்பிக்கிறது. பொய்களை மட்டும் நம்பி தேர்தலில் இனியும் வெற்றி பெற முடியாது என்ற பயம்தான்.

 பார்ப்போம், இந்த பிரச்சினையை கையிலெடுத்துள்ள உச்ச நீதிமன்றம் என்ன செய்கின்றது என்று

Friday, November 25, 2022

அதற்கு எங்கே ஆதாரம் மேடம்?

 


கங்கையில் மூழ்கிய முத்துசாமி தீட்சிதருக்கு சரஸ்வதி தேவி அளித்த வீணை அருங்காட்சியகத்தில் உள்ளது என்று இளையராஜா சொன்னார்.

 சொப்பனசுந்தரி வைத்திருந்த கார் இப்போது யாரிடம் உள்ளது என்பது போல தீவிரமான ஆராய்ச்சி நடத்திய தினமலர் முத்துசாமி தீட்சிதரின் வீணை அவரது ஏழாம் தலைமுறை வாரிசான முத்துசாமி ஆடிட்டரிடம் கோவையில் உள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது.

 இந்த ஆராய்ச்சிக்காக தினமலருக்கு நன்றி சொல்லி அதனை புளகாங்கிதத்தோடு பகிர்ந்து கொண்டுள்ளார் நிர்மலா அம்மையார்.

 


தீட்சிதரின் வீணை எங்கே இருக்கிறது என்பதற்கான ஆதாரம் முக்கியமில்லை மேடம், அந்த வீணையை முத்துசாமி தீட்சிதர் கங்கையில் முழுகிய போது சரஸ்வதி தேவிதான் கொடுத்தார் என்பதற்கான ஆதாரத்தை முதலில் கொடுங்கள்.

 

புராணப் பொய்களை புனிதமாக்காதீர்.

பாஜகவில இதெல்லாம் ஒரு ஜாலிப்பா!

 



திமுகவிற்கு பெரிய அடி கொடுத்து விட்டோம் என்று சங்கிகள் பீற்றிக் கொண்ட திருச்சி சூர்யா, பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் 
டெய்சி சரனோடு பேசிய ஆடியோவை நானும் கேட்டேன். அசிங்கம், ஆபாசம், வன்முறை, மிரட்டல் இதுதான்,

இப்போது அவர்கள் இருவரும் சமரசமாகி விட்டதாக செய்தி வந்துள்ளது. 


இந்த பிரச்சினையை தீர்க்க ஆட்டுக்காரன் எடுத்த பெரும் முயற்சி வெற்றி பெற்று விட்டது போல . . .

தன்னை ஆபாசமாக பேசியவனை அந்த பெண்மணி செருப்பாலோ, துடைப்பத்தாலோ அடித்திருக்க வேண்டும். ஆனால் தம்பி என்கிறார்.

"அவன் குடும்பத்தை நான் கேவலமா பேசுவேன். என் குடும்பத்தை அவன் படு கேவலமா பேசுவான், நாங்க இதை ஒரு ஜாலியாதான் எடுத்துக்குவோம்" என்ற வடிவேலுவின் டெலக்ஸ் பாண்டியன் வசனம்தான் நினைவுக்கு வந்தது. அது போல இதெல்லாம் அவங்களுக்கு ஜாலி போல . . .

மொத்தத்தில் பாஜக ஒரு மானங்கெட்டவர்களின் கூடாரம். 

Thursday, November 24, 2022

20,000 புக் படிச்ச குழப்பமா ஆட்டுக்காரா?

 


ஆட்டுக்காரன் பஸ் உதாரணம் சொன்ன காணொளியை பார்த்திருப்பீங்க. அதுல பாரதி சொன்னது போல “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்று வேறு சொன்னாரு.

நானெல்லாம் ஸ்கூல் படிச்ச போது


‘பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே’

 என்ற  இந்த பாடல் பவணந்தி எழுதிய நன்னூல் நூலில் வரும்தான் சொல்லிக் கொடுத்தாங்க. ஆனா பாரதின்னு ஆட்டுக்காரன் சொல்றாரு.

 பாவம் 20,000 புக் படிச்சதுல குழம்பிப் போயிட்டாரு போல! பாரதிய ஜனதா கட்சியையே பாரதி ராஜா கட்சின்னு சொல்ற ஆளாச்சே!

மோடியின் கண்களுக்குள் ????????

 முகநூலில் பார்த்தது. விளக்கமேதும் அவசியமில்லை.

 


மோடியின் கண்களில் மட்டுமில்லை, அவரது இதயத்தில், நாடி, நரம்பு, (இல்லாத)மூளை, கிட்னி   என அனைத்திலும் கூட நிரம்பியிருப்பவர்கள் அவர்களே!

 

Wednesday, November 23, 2022

அதுதானே வசதி ஜட்ஜய்யா . . .

 


நேற்று ஒரு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி திரு கே.எம்.ஜோசப், தன் கவலை ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.

"2004 ம் வருடத்திற்குப் பிறகு நியமிக்கப்படுகிற தலைமை தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் மிகவும் குறுகியதாக உள்ளது. அதனால் அவர்களால் எந்த உறுதியான முடிவும் எடுக்க முடியாமல் ஒன்றிய அரசு என்ன சொல்கிறதோ, அதை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளாக மாறி விடுகிறார்கள். தேர்தல் ஆணையத்தின் சுயேட்சையான தன்மையும் இதனால் பறி போய் விடுகிறது. 2004 முதலான பத்தாண்டுகளில் ஆறு பேரும் கடந்த ஏழு ஆண்டுகளில் ஏழு பேரும் தலைமை தேர்தல் ஆணையர்களாக இருந்துள்ளனர். "




அப்படித்தான் ஆட்சியாளர்கள் இருப்பாங்க ஜட்ஜய்யா, அதுதானே அவங்களுக்கு வசதி!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் அப்படித்தான் நியமிக்கனும்னு ஆசைப் படறாங்க! அதனாலதான் உங்க கொலோஜியம் முறையை மாத்த துடிக்கறாங்க!


அதுதானேம்மா அடிப்படை தகுதி!

 


ஏம்மா காயத்ரி ரகுராம், பாஜக கட்சியில சேருவதற்கான அடிப்படை தகுதியே பொய்யனா இருக்கனுங்கறதுதான். அந்த அடிப்படையிலதான் நீங்களும் அந்த கட்சியில சேர்ந்தீங்க.

நீங்க அளந்து விடற புளுகோட அளவைப் பொறுத்து உங்களுக்கு அங்கே பதவி கிடைக்கும். உலகின் மிகப் பெரிய பொய்யரா நீங்க மாறினா, மோடிக்கு பதிலாக நீங்களே பிரதமராகிடலாம்.

அதனால ஆட்டுக்காரன் மேல வேற குற்றச்சாட்டு இருந்தா சொல்லுங்க. எங்களுக்கும் கொஞ்சம் பொழுது போகும். 

Tuesday, November 22, 2022

கலகத் தலைவன் – பார்க்கலாம்

 



 

ஞாயிறன்று திரை அரங்கில் பார்த்த படம்.

 

கார்ப்பரேட்டுகளின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்த முனைவோர்களுக்கும் கார்ப்பரேட் ஏவி விடும் ஹைடெக் அடியாட்களுக்கும் இடையிலான போராட்டமே திரைப்படம்.

 

கார்ப்பரேட் நிறுவனங்களின் முறைகேடுகளை அம்பலப்படுத்தி பல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த படம்தான் முதல் முறையாக CRONY CAPITALISM என்றழைக்கப்படுகிற கார்ப்பரேட் – அரசு கூட்டுக் களவாணித்தனத்தை அம்பலப்படுத்திய படமாக அமைகிறது. பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கும் கார்ப்பரேட் நிறுவனம் அதன் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது, சங்கிலித் தொடராக எங்கேயெல்லாம் பாதிப்பு வருகிறது என்பதை ஒரு கதாபாத்திரம் வாயிலாக தெளிவாக சொல்கிறது படம்.

 

எரிபொருள் பயன்பாட்டை 50 % குறைக்கும் லாரியை அறிமுகம் செய்யப் போவதாக வஜ்ரா எனும் நிறுவனம் அறிவிக்க, அதன் பங்கு விலை கன்னாபின்னாவென்று உயர்கிறது. ஆனால் அது வெளிப்படுத்தும் மாசு அளவு , அனுமதிக்கப்பட்டதை விட பல மடங்கு அதிகமாக உள்ளது என்பது தெரியவந்தாலும் அதனை மூடி மறைக்கப்பார்க்கிறது. அந்த ரகசியம் வெளியாகி நிறுவனம் சிக்கலில் மூழ்கிறது.

 

ரகசியத்தை வெளியிட்டது யார் என்று கண்டுபிடிக்க நிறுவனம் ஈவு இரக்கமற்ற தலைவன் கொண்ட ஒரு குழுவிடம் வேலையை ஒப்படைக்கிறது. வில்லன் ஆரவ், ரகசியங்களை அம்பலப்படுத்தும் உதயநிதி ஸ்டாலினை திட்டமிட்ட, துல்லியமான முறையில் கண்டுபிடிப்பதுதான் படம்.

 

உதயநிதி ஸ்டாலினின் காதல் சொல்ல நினைக்கும் காட்சிகள (படு டீஸண்டான)  வேகமாக நகரும் படத்திற்கு ஸ்பீட் பிரேக்கர். வஜ்ராவின் ஒரு ரசாயன ஆலையால் பாதிக்கப்பட்டவர்கள்தான் உதயநிதி ஸ்டாலின், கலையரசன் ஆகியோர் என்பது கடைசியில் சொல்லப்படுகிறது. அந்த ரசாயன ஆலை தூத்துக்குடி ஸ்டெரிலைட்டை நினைவு படுத்தும் விதத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது.

 

பொதுவாக விறுவிறுப்பாக செல்லும் படம். மூடப்பட்ட ரசாயன ஆலையில் நடக்கும் க்ளைமேக்ஸ் சண்டையின் நீளத்தை வெட்டியிருக்க வேண்டும். நாயகனோடு செல்வதைக் காட்டிலும் ஏழை மக்களுக்கு மருத்துவம் செய்யும் என் கனவுதான் முக்கியம் என்று நாயகி முடிவெடுப்பது நல்ல காட்சி. ஆமாம், யார்  அவர்?

 

அதென்ன கலையரசனை புக் செய்யும் போதே உன் கேரக்டரை நடுவில் கொன்று விடுவோம் என்று சொல்லித்தான் புக் செய்வார்களோ!

 

வில்லன் ஆரவ் பட் மிரட்டல். உதயநிதி ஸ்டாலின், நான் இதற்கு முன்பு பார்த்த அவரது “மனிதன்” படத்தை விட  நடிப்பில் முன்னேறியுள்ளார்.

 

மகிழ் திருமேனியின் இன்னுமொரு பரபரப்பான, புத்திசாலித்தனமான படம் “கலகத்தலைவன்”

 

தைரியமாக பார்க்கலாம்.

தக்காளி சட்னியா ஆட்டுக்காரா?

 


கர்னாடக மாநிலம் மங்களூரில் குக்கர் குண்டு வெடித்து  மூன்று நாட்கள் ஆகி விட்டது. ஐ.எஸ் தொடர்புக்கு வாய்ப்புள்ளதாக அம்மாநில போலீஸ் சொல்கிறது. 

இது வரை வழக்கு என்.ஐ.ஏ விற்ககு மாற்றப்படவில்லை?

ஏன் மாற்றவில்லை என்று ஆட்டுத்தாடியும் கேட்கவில்லை.

பொம்மை அரசை கலைக்க வேண்டும் என்று ஆட்டுக்காரனும் வாய் திறக்கவில்லை.

பாஜக ஆளும் மாநிலம் என்றால் அது மட்டும் தக்காளி சட்னியா அயோக்கியர்களே!

Monday, November 21, 2022

வசனங்களில் வாழ்வார்

 


இன்று காலமான பிரபல கதை வசனகர்த்தா திரு ஆரூர் தாஸ் அவர்களின் நினைவாக அவரது வசன ஆற்றலையும் அந்த ஆற்றலை திறம்பட பயன்படுத்திக்கொண்ட நடிகர் திலகத்தின் முத்திரை பதித்த காட்சி இங்கே



இந்த இந்தியாதான் வேண்டும்.

 பர்தா அணிந்த பெண்கள்

கூட்டம் கூட்டமாக அந்த பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்கள்.
அவர்கள் கூடவே சேர்ந்து சரசரக்கும் பட்டுப் புடவை, நெற்றிக் குங்குமம், மல்லிகைப் பூ சூடிய இந்துப் பெண்களும் அந்த மசூதிக்குள் நுழைய ஆரம்பித்தார்கள்.
இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழ்ச்சியுடன் புன்னகைத்துக் கொண்டார்கள்.
இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்த மசூதி வளாகத்துக்குள் ஒரு வித்தியாசமான திருமணம் நடை பெறப் போகிறது.
முதல்முறையாக ஒரு இஸ்லாமிய மசூதி வளாகத்தில் ஒரு இந்து பெண்ணின் திருமணம் நடக்கப் போகிறது.
ஆம்...
நடந்து விட்டது.
2020 ஜனவரி 19 ல்
கேரள மாநிலம் ஆலப்புழை அருகிலுள்ள சேரவல்லி மசூதி வளாகத்தில் அஞ்சு என்ற மணமகளுக்கும், சரத் என்ற மாப்பிள்ளைக்கும் இந்து முறைப்படி திருமணம் சிறப்பாக நடைபெற்றது. நடத்தி வைத்தவர்கள் அந்த ஊர் ஜமாத்தை சேர்ந்த இஸ்லாமிய பெரியவர்கள்.
'அல்லாஹூ அக்பர்' என ஓதிய இடத்தில், அர்ச்சகர்களின் வேத மந்திரங்கள் முழங்க ஒரு இந்து திருமணம் இனிதே நடந்து முடிந்தது.
எப்படி நடந்தது இந்த மத நல்லிணக்க மங்கல வைபவம் ?
மணமகள் அஞ்சு ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள்.
தந்தை தவறி விட்டார். தாய் பிந்து சிரமப்பட்டு மூன்று குழந்தைகளையும் வளர்த்து வந்தார். அதில் மூத்தவள்தான் அஞ்சு. அவளுக்குத்தான் திருமணம்.
அதற்காக ஒரு சில இடங்களில் கடன் கேட்டிருந்தார் பிந்து.
சரி என்று சொல்லி இருந்தவர்கள் கடைசி நேரத்தில் கை விரிக்க,
கலங்கிப் போய் விட்டார் பிந்து.
"என்னம்மா ஆயிற்று? ஏன் ஒரு மாதிரி இருக்கிறீர்கள்?"
ஆதரவாகவும் ஆறுதலாகவும் இப்படிக் கேட்டவர் நஜுமுதீன். பிந்துவின் பக்கத்து வீட்டுக்காரர். அந்த ஊர் முஸ்லிம் ஜமாத்தின் செயலாளராக இருக்கிறார்.
பிந்து தன் இக்கட்டான நிலைமையை நஜுமுதீனிடம் சொல்லி அழ...
நஜுமுதீன் நீண்ட நேரம் யோசித்தார். அதன் பின் பிந்துவிடம் சொன்னார்: "எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. ஆனால் அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. எனினும் முயற்சி செய்து பார்க்கலாமே!"
நஜுமுதீன் சொன்னபடி பிந்து, ஜமாத்துக்கு உதவி கேட்டு கடிதம் எழுத, இஸ்லாமிய பெரியவர்கள் யோசித்தார்கள்.
அவர்களில் ஒருவர் கேட்டார்:
"நிதி உதவி மட்டும் கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்வதா? அஞ்சு நம் வீட்டு குழந்தையாக இருந்தால் என்ன செய்வோம்?"
இன்னொரு பாய் சொன்னார்:
"ஆம். கல்யாண செலவு முழுவதையும் நாமே ஏற்றுக் கொள்வோம். இந்தக் கல்யாணத்தை நாமே நடத்தி வைப்போம்."
அவ்வளவுதான். அந்த நொடி முதல் இந்து மணமகள் அஞ்சு, அந்த இஸ்லாமிய பெரியவர்களின் செல்லக் குழந்தையாக ஆகிப் போனாள்.
மசூதி வளாகத்துக்குள்ளேயே மணமேடை அமைக்கப்பட்டு, சீரோடும் சிறப்போடும் எந்தக் குறையும் இன்றி, இந்து மத சடங்குகளோடு, இஸ்லாமிய பெரியவர்களின் ஆசிகளோடு இனிதே நடந்து முடிந்தது அஞ்சுவின் திருமணம்.
பத்து பவுன் தங்க நகை, இரண்டு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை, ஆயிரக்கணக்கான மக்களுக்கு அறுசுவை விருந்து. எல்லாம் இஸ்லாமிய பெருமக்களின் அன்பளிப்பு!
சாப்பாட்டுப் பந்தியில் ஜமாத் உறுப்பினர்களும், இந்து மத புரோகிதர்களும் ஒன்றாக அமர்ந்து பேசியபடி சாப்பிடும் காட்சியை பார்க்கும்போது,
மன நிறைவும் மகிழ்ச்சியும்
ஏற்படுகிறது.
தொடரும் காலங்களிலும்
இது போன்ற நிகழ்வுகள் தொடர வாழ்த்துவோம்.
இந்த நல்லதொரு தொடக்கத்தை ஆரம்பித்து வைத்த கடவுளின் சொந்த தேசத்து சகோதரர்களுக்கு நன்றி !
Kerala...
“God's own country”..!
வாழ்க வாழ்க.. !
John Durai Asir Chelliah
(மீள் பதிவு)
Shaik Abraz முகநூலில்...
நன்றி தோழர் தாரைப்பிதா

Sunday, November 20, 2022

அதே பரவசம் ராஜா!

 அபிராமியைக் கண்ட குணாவின் கண்களில் தென் பட்ட அதே பரவசம் மோடியைப் பார்த்த உங்கள் கண்களிலும் தெரிகிறதே!



நல்லதோர் வீணை புழுதியில் விழுந்து நலங்கெட்டதே என்ற ஆதங்கம்தான் . ..

எம்.பி பதவி என்ன செய்யும்?

 


எம்.பி பதவி என்ன செய்யும்?



சாய்ந்து சாய்ந்து சாய்ந்து சாய்ந்து

என்று முன்பு கம்போஸ் செய்த பாடலின் வரிகளை

வியந்து வியந்து வியந்து வியந்து

என்று மாற்றிப் பாட வைக்கும். . . .

Saturday, November 19, 2022

வாட்டி வதைக்கும் வந்தே பாரத்

 


செல்லா நோட்டு போல, ஜி.எஸ்.டி போல, லாக் டவுன் போல அவசர கதியில் அறிமுகம் செய்யப்பட்டது வந்தே பாரத் டிரெயின்கள்.

பசு மாடுகள், எருமை மாடுகள் மோதினால் சேதமடைந்து கொண்டிருந்த ட்ரெயின் இப்போது கன்றுக்குட்டி மோதினாலே சேதமடைந்து விடுகிறது.

இன்று பெங்களூர், சென்னை வழியில் செல்லும் எல்லா ரயில்களும் நான்கரை முதல் ஐந்து மணி நேரம் தாமதமாக சென்றுள்ளது. காட்பாடி ரயில் நிலையம் காத்திருந்த பயணிகளுக்கு பெரும் அவஸ்தையாகி இருக்கிறது. திட்டமிட்டபடி பயணத்தை தொடர முடியவில்லை. முன்பதிவு செய்தவர்கள் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமென்றால் பெரும் பண இழப்பு.

தாமதத்திற்கு வந்தே பாரத் ட்ரெயின் காரணமாக இருந்திருக்கிறது.

கேரளாவில் தண்டவாளத்துக்கிடையில் வரும் யானைகள்தான் சிதறிப் போயிருக்கிறதே தவிர ரயிலுக்கு சேதமேற்பட்டதில்லை.

ஆனால் வந்தே பாரத்திற்கு சேதமாகிறதென்றால் கோளாறு அதன் உருவாக்கத்தில்தான் இருக்கிறது.

அதை சரி செய்யாமல் வந்தே பாரத்தை தொடர்ந்து இயக்குவதென்பது மிகப் பெரிய அபாயமாகும். பயணிகளின் உயிரோடு விளையாடுகிற ஆட்டத்தை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்.

மோடியின் கௌரவத்தை விட பயணிகளின் உயிர் முக்கியம். 

மதுரைக்காரங்க குசும்புக்கு . . .

 இதுக்கு விளக்கம் வேற வேணுமா! யோவ் ஆட்டுக்காரா, மோடிக்கு இதை அனுப்பு



Friday, November 18, 2022

அதெல்லாம் முடியாது ஜட்ஜய்யா

 



கடந்த இரண்டு மூன்று நாட்கள் வீட்டில் சரியாக இல்லாததால் அந்த நாட்களின் நாளிதழ்களை நேற்று இரவுதான் படித்தேன்.

 

அப்போது கண்ணில் பட்ட செய்தி “உச்ச நீதிமன்றத்தின் கோபம்”

 

“நீதிபதிகள் நியமனத்தில் ஒன்றிய அரசு அலட்சியம் காண்பிக்கிறது. தேவையில்லாமல் கால தாமதம் செய்கிறது. கோலோஜியத்தின் பரிநுரைகளை ஏற்றுக் கொண்டோம் என்றோ நிராகரிக்கிறோம் என்றோ சொல்லாமல் கியப்பில் போட்டு வைத்துள்ளது. உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றத்திற்குமான நீதிபதிகள் காலியிடம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. திறமையான பல வழக்கறிஞர்கள் நீதிபதியாக வர இசைவு கொடுத்தாலும் இந்த கால தாமதத்தால் அவர்கள் பின் வாங்கும் நிலை ஏற்பட்டு விட்டது”

 

இவ்வாறு நீதிபதிகள் வெடித்துள்ள போதும் மோடி அரசு வேகமாக செயல்படும் என்று எதிர்பார்க்கிறீர்களா என்ன?

 

நோ, நெவர் . . .

 

கொலோஜியம் (இந்த முறை குறைபாடானது, அதை மாற்ற வேண்டும் ) யார் நன்றாக நீதி வழங்குவார்கள் என்று யோசித்து பரிந்துரை கொடுத்திருக்கலாம். அதற்காக மோடி அரசால் அதனை அப்படியே ஏற்க முடியுமா என்ன?

 

பரிந்துரைக்கப்பட்டவருக்கு ஆர்.எஸ்.எஸ் பின்புலம் இருக்க வேண்டும், ஆட்சியாளர்களின் அராஜகங்களை கண்டு கொள்ளாதவர்களாக இருக்க வேண்டும். நீதிமன்றப்பணிக்குப் பிறகு எம்.பி ஆக, கவர்னராக, தூதுவராக வேலை செய்யுமளவுக்கு தகுதியான தீர்ப்புக்களை சங்கிகளுக்கு ஆதரவாக வழங்கக் கூடியவரா என்று ஆராய வேண்டும். நீதி, நேர்மை, நியாயம், நாணயம், அரசியல் சாசனத் தெளிவு போன்ற தீய குணங்கள் இருக்கக் கூடாது.

 

ஜட்ஜய்யா, நீங்க “மனிதன்” திரைப்பட நீதிபதி ராதாரவி மாதிரி பேப்பர் வெயிட்டை தூக்கி சட்ட அமைச்சர் மேல தூக்கிப் போடலாங்கற அளவுக்கு போனாலும் கூட நீங்கள் நினைப்பது போல எல்லாம் நடக்காது ஜட்ஜய்யா!

 

வழக்குகள் தேங்கிப் போகும் அவ்வளவுதானே! அது கிடக்குது கழுதை.

பிகு: எழுதி மூன்று நாளானாலும் ஆஜானால் தாமதமாகி விட்டது.                                                                         

 

ஜெயமோகன், நீயெல்லாம் ஒரு . . .

 


ஜெயமோகனைப் பற்றி இன்னும் கொஞ்ச நாள் எழுதக்கூடாது என்றுதான் நினைத்தேன். ஆனால் அந்த மனிதனோ வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக "அறை கலன் வார்த்தையை நான் உருவாக்கினேன் என்று சொல்லவேயில்லை" என்று பல்டி அடித்து அந்தாளை விமர்சித்தவர்களை அதிலும் குறிப்பாக எழுத்தாளர் பெருமாள் முருகனை அசிங்கமாக திட்ட, அணைய வேண்டிய தீ மீண்டும் பற்றிக் கொண்டு விட்டது.

ஜெமோவின் தளத்திலிருந்து எடுத்ததன் ஸ்க்ரீன் ஷாட் கீழே உள்ளது. பொன்னியின் செல்வன் நாவலையும் கல்கியையும் திட்டி எழுதிய பதிவுகளை வஜனம் எழுதும் வாய்ப்பு வந்தவுடன் கமுக்கமாக அழித்தது போல இந்த பதிவையும் அழிக்கக்கூடாது என்பதற்காகத்தான் ஸ்க்ரீன் ஷாட்.

இப்போது அதனை படியுங்கள்.






நிஜமாகவே இப்பதிவில் உள்ளது போலத்தான் பேசினாரா?

இந்த காணொளியை பாருங்கள்.




ஜெயமோகனே தன் தளத்தில் பகிர்ந்து கொண்ட யூட்யூப் இணைப்பை பார்த்தும் உறுதி செய்கிறேன்.

"நான்தான் உருவாக்கினேன்" என்று பேசியதை கேட்டீர்கள் அல்லவா!

பொய் அம்பலமானதும் அதை ஏற்றுக்கொள்ளாமல் ஏற்பு பிழை என்றெல்லாம் எழுதி சமாளித்து  விட்டு இப்போது உண்மைக்கு மாறாக பேசுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.  அப்படி அயோக்கியத்தனம் செய்ய உசுப்பேத்தி விட இவரது ஞான மரபு குண்டர் படை வேறு.

உண்மையை அம்பலப்படுத்திய எழுத்தாளர் பெருமாள் முருகனை வசை பாடி எழுதியுள்ளதெல்லாம் புளிச்சமாவின் சின்ன புத்திக்கு சான்று.

நீயெல்லாம் ஒரு மனுசனா என்று கேட்கக்கூடிய அளவிற்கு பொய்யன் ஜெயமோகன்!

இல்லை, 

மனிதன் என்றே கருத அருகதையற்ற ஒரு ஜந்து இந்தாள். இந்தாளும் இவர் குண்டர் படையும் வெறுத்து ஒதுக்கத்தக்க விஷப்பாம்புகள்.




Thursday, November 17, 2022

ஆஜானே, உம்மை தாக்குவதுதான் அறம்

 


புமா ஆஜானே வேற எழுத விடய்யா!


இரண்டு  நாட்களில் ஆஜானைப் பற்றிய மூன்றாவது பதிவு இது. ஆஜானை பற்றி எழுத எனக்கும் அலுப்பாகத்தான் இருக்கிறது. நீதிபதிகள் நியமனம் பற்றி எழுதிய ஒரு பதிவு மூன்று நாட்களாக ட்ராப்டிலேயே இருக்கிறது. இந்தியில் பேசினால் பாலியல் கொடுமை நடக்காது என்று முட்டாள்தனமாக பேசிய சங்கி அம்மணி ஒரு போலி மருத்துவர் என்பதால் கைது செய்யப்பட்டது. கல்விக்கடன் தர மறுத்த ஹெச்,டி,எஃப்.சி வங்கியின் முதலீடு செய்யப்பட்டிருந்த 50 கோடி ரூபாய் மதுரை ஸ்மார்ட்சிட்டி நிதியை வேறு வங்கிக்கு மாற்றுவது என்ற மதுரை எம்.பி தோழர் சு.வெங்கடேசனின் அதிரடி முடிவு  போன்றவற்றை பதிவிட முடியாத அளவிற்கு ஆஜான் தொடர்ந்து கண்டென்ட் கொடுத்தால் நான் என்ன செய்வது?

 



ஆஜானின் ஃபர்னிச்சர் நொறுக்கப்பட்ட விவகாரத்தில் அவர் கொடுத்துள்ள விளக்கமும் என் எதிர்வினையும் கீழே.

 

 

அண்மையில் ஒரு உரையாடலில் வெண்முரசு பற்றி பேசும்போது அதில் முற்றிலும் தமிழிலேயே மொழியைக் கையாண்டிருந்தேன் என்றும், தத்துவம் மற்றும் பிற துறைகளில் கலைச்சொற்கள் தேவை ஆகும்போது தமிழின் பழைய கலைச்சொற்களையே பயன்படுத்தினேன் என்றும், அவை கிடைக்காதபோது புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்கி பயன்படுத்தினேன் என்றும் கூறினேன். பழைய கலைச்சொற்களை பயன்படுத்தியதற்கு உதாரணமாக ‘ஊழ்கம்’ என்ற சொல்லையும் புதிய கலைச்சொல்லை நான் உருவாக்கியதற்கு ‘அறைக்கலன்’ என்ற சொல்லையும் சொன்னேன். அது ஒரு நினைவுப்பிழையாக இருக்கலாம்.

நீங்கள் அதைச் சொன்ன தோரணை, உடல் மொழி எல்லாமே அது ஒரு நினைவுப்பிழை அல்ல, நான் சொல்வதே கட்டளை, என் கட்டளையே சாசனம் என்ற திமிரின் வெளிப்பாடோடுதான் அமைந்திருந்தது.

இருபத்தி ஆறாயிரம் பக்கங்களில் பல ஆயிரம் சொற்களை புதிதாக பயன்படுத்தியிருக்கிறேன். அவற்றில் சில நூறு சொற்களேனும் இன்று ஒவ்வொருவரும் புழங்குவதாக உள்ளன.

அய்யா ஆஜானே அப்படி நீர் உருவாக்கி இன்று மக்கள் பயன்படுத்தும் புதிய தமிழ் வார்த்தைகளில் ஒரு நூறு வார்த்தைகளாவது சொல்லுங்களேன் பார்ப்போம். தெருவோர மாரியம்மனை இன்று அனைவரும் பரபிரம்ம ரூபிணி என்ற் சொல்கிறார்கள். அதுவே தமிழில் அதிகம் புழங்கும் வார்த்தை என்று தடம் பேட்டியில் சொன்னீர்களே, அது போலத்தான் இதுவும்தானா?

 அறைக்கலன் என்ற சொல்லும் முன்னரே ஆட்சித்தமிழ் அகராதியில் இருப்பதை நான் பார்த்ததில்லை. இந்த அகராதிகள் எவையும் புழக்கத்தில் இல்லை என்பதையும் இச்சொற்களையே நான் சொன்னபிறகு இவர்கள் அகழ்ந்து தேடி எடுத்து தான் சொல்லவேண்டியிருக்கிறது என்பதையும் எவரும் பார்க்க முடியும்.

“ஆபரேஷனை கையிலெடுத்த 48 மணி நேரத்துல முடிச்சிருக்கோம்” என்று சுந்தர பாண்டியனில் சூரி சொல்வார். உங்க பேட்டி வெளி வந்த அஞ்சு நிமிஷத்தில உங்க அறை கலனை அடிச்சு நொறுக்கிட்டாங்க. அது அகழ்வராய்ச்சியா? உங்களுக்கு தெரியலைன்னா வேறு யாருக்குமே தெரியாதா என்ன?

நன்று, அகராதியில் அச்சொற்கள் இருந்தால் அச்சொல்லை நான் உருவாக்கவில்லை என்று ஒத்துக்கொள்கிறேன்.

ஓ! இதற்குப் பிறகு கூட நாந்தான் உருவாக்கினேன்னு சொல்வீங்களா?

அதனால் வெண்முரசு தூய தமிழில் எழுதப்பட்ட ஒரு படைப்பு என்பதோ வெண்முரசில் பல ஆயிரம் புதியதமிழ்ச்சொற்கள் உள்ளன என்பதோ அவற்றில் பல நூறு தமிழ்ச் சொற்கள் இன்று புழக்கத்தில் உள்ளன என்பதோ

தூய தமிழில் எழுதப்பட்ட படைப்பு என்ற இந்த அறைகலனை கவிஞர் மகுடேஸ்வரன் தகர்த்து விட்டார். இதற்கு எவ்வளவு பக்கத்தில் பதில் சொல்லப் போறீங்க?



சென்ற நூறாண்டுகளில் எந்த தமிழ் எழுத்தாளனும் தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்களிப்பை விட வெண்முரசின் பங்களிப்பு அதிகம் என்பதோ இல்லாமல் ஆகிவிடுவதில்லை.

மறுபடியும் சப்பாணி உதாரணத்தைத்தான் சொல்ல வேண்டியுள்ளது. “கோபாலகிருஷ்ணன்னு கூப்பிடுங்கடான்னு நாந்தான் சொல்றேன். ஒரு பய மதிக்க மாட்டேங்கறான்” என்று சப்பாணி புலம்புவது போல வெண்முரசு பற்றி நீங்கதான் மெச்சுக்கிறீங்க. வேறு யாரும் சீண்டுவதே இல்லை.

அச்சொல்லை பிடித்துக்கொண்டு குதிப்பவர்கள் தங்களை அறியாமலேயே வெண்முரசின் தனித்தமிழ் மொழிநடையையும் அதிலிருக்கும் பிரம்மாண்டமான சொல்லாக்கத்தையும் பொது வாசகர்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறார்கள். அது மகிழ்ச்சிக்குரியதே நன்றி.

இந்த நெனப்புதான் பொழப்பை கெடுக்குமாம். ஜெயமோகன் ஒரு டுபாக்கூர், பொய்யன், திமிரு பிடிச்சவன் என்பதுதான் இன்னொரு முறை நிரூபணமாகி உள்ளது. நீயெல்லாம் ஒரு எழுத்தாளன்னு நம்பின சில அப்பாவிங்க கூட உன் பக்கம் தலை வச்சு படுக்க மாட்டாங்க என்பதுதான் யதார்த்தம்.

 ஐயா, புளிச்ச மாவு ஆஜானே, “வார்டன்னா அடிப்போம்” என்றெல்லாம் யாரும் உம்மை வேண்டுமென்றே அடிப்பதில்லை. உம் பிற்போக்குத்தனம், அளவற்ற ஆணவம், எண்ண முடியா பொய்கள், ஜாதி, மத வெறி ஆகிய உம் மோசமான குணங்களுக்காகத்தான். மோசமான மனிதனாக இருந்த போதும் யோக்கியன் போல, உத்தமன் போல போடும் வேடங்களுக்காகத்தான். நீ ஒழுங்கா இருந்தா சேதம் கம்மி. திமிரோட எழுதினா அடி வாங்குவதை தவிர்க்கவே முடியாது.

உன் போக்கு இப்படியே தொடர்ந்தால் உம்மை தாக்குவதுதான் அறம்.