Monday, April 27, 2020

புளிச்ச மாவும் திரிஞ்ச பாலும்



தான் வாங்கிய 13 பால் பாக்கெட்டுக்களில் பால் குக்கரில் காய்ச்சும் போது 9 பாக்கெட்டுக்கள் திரிந்து போனதாக சிப்பு சேகர் முதல்வருக்கு  ட்விட்டரில் பதிவு செய்கிறார்.

இவர் ஒருத்தரே இவ்வளவு பாலை வாங்கி பதுக்கி வைத்து என்ன சேய்யப் போகிறார்? பால் குக்கரை சுத்தமாக கழுவினார்களா போன்ற கேள்விகள் ஒரு பக்கத்தில் இருக்கட்டும்.

அவர் ட்விட்டரில் பதிவு செய்த உடன் ஆவின் அதிகாரிகள் உடன் வந்து 9 புதிய பாக்கெட்டுக்களை கொடுத்து விட்டுப் போனதாக இன்னொரு பதிவு முதல்வருக்கு நன்றி சொல்லி போகிறார்.

பால் திரிந்து போவது என்பது வழக்கமாக நடக்கக் கூடியது. முதல்வருக்கு ட்விட்டரில் புகாரில் அனுப்பினால் நம் வீட்டுக்கும் வந்து மாற்றிக் கொடுப்பார்களா என்று தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான உண்மை வேறு. இதையும் புளிச்ச மாவு விவகாரத்தையும் ஆராய்ந்தால் மூன்று விதமான கோணங்கள் உள்ளது.

ஆவின் அரசு நிறுவனமாக இருப்பதால்தான் எஸ்.வி.சேகருக்கு பால் பாக்கெட்டுக்கள் மாற்றித் தரப்பட்டுள்ளது. புளிச்ச மாவை விற்றது தனியார் என்பதால் ஜெமோவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. உலகம் அறிய எஸ்.வி.சேகர் புகார் கூறியும் அவர் வேலை முடிந்து விட்டது. ஜெமோ நிலை ஊரறிந்த விஷயம்.

சினிமாக்காரனை மதித்து பால் பாக்கெட்டை மாற்றிக் கொடுத்த சமுதாயம் எழுத்தாளனை மதித்து புளிச்ச மாவு பாக்கெட்டை மாற்றித் தராமல் வீசி எறிய வைத்து விட்டது.

என்னதான் இருந்தாலும் சிப்பு சேகர் நேரடி சங்கி, ஜெமோ மாஸ்க் போட்ட சங்கி. அந்த வித்தியாசமும் உள்ளது அல்லவா!

2 comments:

  1. OPS oru tea kadai kaaran. Ippo potikku EPS paal kaaran'aa ayitaan.

    ReplyDelete
  2. மிக மிக அவலம். எடப்பாடி ஏன் இப்படி கேவலமாக பார்பான் காலில் விழுந்து சேவகம் செய்து , அதே சமயம் மக்கள் நலன் பற்றி சிறிதும் சிந்திக்காமல் உள்ளார்.

    ReplyDelete