சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Monday, March 10, 2025
பெருமையில்லை, ஆணவம், திமிர்
Saturday, December 17, 2022
பாகிஸ்தான் இல்லையென்றால் தேஷ் பக்தாள் ?????
பார்வையற்றவர்களுக்கான டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் பார்வையற்றோர் அணிக்கு மட்டும் விசா கொடுக்க இந்திய உள்துறை அமைச்சகம் மறுத்து விட்டது.
பாகிஸ்தான் அணியை ஆட அனுமதிக்க மாட்டோம் என்பதெல்லாம் அராஜகமன்றி வேறில்லை.
நிற்க
50 ஓவர் உலகக் கோப்பை அடுத்த வருடம் இந்தியாவில்தான் நடக்க உள்ளதாமே! அப்போதும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை அனுமதிக்க மாட்டார்களா?
பாகிஸ்தான் இந்தியா அணிகள் மோதாவிட்டால் நம் சங்கிகள் எப்படி தங்கள் தேஷ் பக்தியை வெளிப்படுத்துவார்கள்? அதற்காகவாவது அனுமதி கொடுங்களேன்
அப்புறம் அமித்ஷா மகனே, தம்பி ஜெய்ஷா, பாகிஸ்தான் இந்தியா மோதினாதானே கிரிக்கெட் வாரியத்துக்கு துட்டு கோடி கோடியா கொட்டும்! அப்படி கொட்டினாதானே நீயும் கல்லா கட்ட முடியும்! பாகிஸ்தான் வரலைன்னா நமக்குதான் நைனா நஷ்டம்னு சொல்ல மாட்டியா! இல்லை மோடிக்கு செய்யற அளவுக்கு கவனிப்பை அதானி உங்களுக்கும் செய்யறாரா!
Tuesday, April 12, 2022
காஷ்மீர் பற்றி பேசாதீர் . . .
பாகிஸ்தானில் புதிய பிரதம மந்திரியாக ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுள்ளார். பழைய பெருச்சாளி நவாஸ் ஷெரீபின் தம்பி.
நாடாளுமன்றத்தில் முதல் உரையில் காஷ்மீர் பற்றியும் இந்திய அடக்குமுறைகள் குறித்தும் 370 சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பின்பு பாகிஸ்தான் அரசு ஏதும் செய்யவில்லை என்றெல்லாம் பேசியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக கம்பு சுற்றினால்தான் பாகிஸ்தான் அரசியலில் குப்பை கொட்ட முடியும். அதைத்தான் இந்த புதுப் பெருச்சாளியும் செய்துள்ளார்.
ஆனால் இவர்கள் எல்லாம் ஒரு விஷயத்தை யோசிப்பதே இல்லை.
"இங்க அடிச்சா அங்க வலிக்கும்" என்பது போல இவர்கள் பேச பேச அதெல்லாம் இந்தியாவில் குறிப்பாக காஷ்மீரில் உள்ள இஸ்லாமியர்களைத் தான் பாதிக்கும். இப்போது ஏற்கனவே இஸ்லாமியர்கள் அச்ச உணர்வோடு வாழும் துரதிர்ஷ்டமான நிலையை இன்றைய வெறி பிடித்த ஆட்சியாளர்களும் அவர்களின் குண்டர்களும் உருவாக்கியுள்ளனர்.
பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் இது வரை காஷ்மீர் மக்களுக்கு எந்த நல்லதும் செய்ய முடிந்ததில்லை. இனிமேலும் ஏதும் முடியாது.
உங்களால் முடிந்த ஒரே நல்ல காரியம்.
காஷ்மீர் பற்றி நீங்கள் பேசாமல் இருப்பதுதான்.
அந்த மக்கள் எந்த சவாலையும் சந்திப்பார்கள்.
Friday, April 1, 2022
இம்ரான் கானும் மோடியும் தைரியமும்
இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில் முதல் பக்கத்தில் இரண்டு செய்திகளை படித்தேன்.
ரஷ்யாவுடன் இந்தியா வணிக பரிவர்த்தனைகளை மேற்கொண்டால் தீவிரமான பின் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்காவின் துணை பாதுகாப்பு ஆலோசகர் திலீப்சிங் என்பவர் இந்தியாவிற்கு வந்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளரை மிரட்டி உள்ளார்.
இன்னும் ஒரு நாளில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்தித்து பதவியை இழக்கும் தருவாயில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தொலைக்காட்சி உரையில் தனக்கு எதிராக ஒரு அன்னிய சக்தி தன் எதிரிகளோடு இணைந்து சதி செய்வதாகவும் அந்த அன்னிய சக்தி அமெரிக்கா என்றும் வெளிப்படையாக குற்றம் சுமத்துகிறார்.
ஆக பாகிஸ்தான் அரசியலிலும் அமெரிக்கா தலையிடுகிறது. இந்தியா ரஷ்யாவுக்கு ஆதரவாக இருக்கக் கூடாது என்றும் இந்தியாவை மிரட்டுகிறது.
இம்ரான் கான் அமெரிக்காவை வெளிப்படையாக குற்றம் சுமத்துகிறார். அதை பதவி போகப் போவதனால் வந்த தைரியம் என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.
அமெரிக்கா இந்தியாவை வெளிப்படையாக மிரட்டுகிறதே, அதற்கு 56 இஞ்ச் மார்பு கொண்ட வீராதி வீர, சூராதி சூர மோடி என்ன எதிர்வினை ஆற்றப் போகிறார்? இம்ரான் கானே துணிந்து குற்றம் சுமத்தும் போது மோடி மட்டும் சும்மா இருந்து விடுவாரா என்ன?
பார்க்கத்தானே போறோம் மோடியோட தைரியத்தை?
Saturday, March 12, 2022
பாகிஸ்தானுக்குப் பறந்த ஏவுகணை
ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முக நூல் பதிவை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.
Sunday, September 21, 2014
தம்பி பிலாவல், வாயை மூடிக்கிட்டு போறயா?
