Wednesday, March 31, 2021

மோடி 4 இன் 1 கலாய்கள்

 மோடி பற்றிய நான்கு பதிவுகளுக்கான விஷயங்கள் ஒரே பதிவில்

மீம் இல்லைங்க, நியூஸ்

 


பொம்மை தயாரிப்பு பற்றி மோடி சொன்னதா படத்தில் இருப்பது மீம்  இல்லைங்க. நிஜமாகவே அவர் பேசினதுதாங்க.

 ஜெண்டில்மேன் செந்தில் அளவே மோடிக்கும் மூளை

ஆனால் மீம் போடத் தகுதியான ஒரு விஷயத்தையும் மோடி பேசியுள்ளார். எழுத்தாளர் சம்சுதீன் ஹீராவின் பதிவு  எஸ்.எஸ்.எல்.சி பெயிலை விட ஏழாங்கிளாஸ் பாஸ்தான் பெரிது என்று சொல்லும் ஜெண்டில்மேன் செந்தில் அளவுதான் மோடியின் மூளை அளவு  என்பதை காண்பிக்கிறது.



 மோடி மார்க்கெட்டை சிதைத்த தநாபாஜக

அதே நேரம் மோடியின் இன்றைய நிலை கண்டு மிகவும் வருந்துகிறேன். நவாஸ் ஷெரீப், இம்ரான் கான் ஆகியோருக்கு சவால் விட்டுக் கொண்டிருந்த ஒரு மனிதன், டொனால்ட் ட்ரம்ப், ஷீ ஜின் பிங் ஆகியோரோடு குலாவிக் கொண்டிருந்த ஒரு நபர், கடைசியில் திண்டுக்கல் லியோனியைப் பற்றியெல்லாம் பேசுமளவுக்கு கொண்டு வந்து விட்டீர்களே தமிழ்நாடு சங்கிகளே! உங்களுக்கெல்லாம் மன சாட்சியே கிடையாதா?

 மோடியை நாங்கள் விமர்சிக்கும் போதெல்லாம் “என்ன இருந்தாலும் அவர் நம் பிரதமரல்லவா!” என்று பேசும் வசனத்தை நீங்களே மறந்து விட்டீர்களே!

 ஆக மோடி உங்கள் நிலைமை “உள்ளத்தை அள்ளித்தா” மணி வண்ணன் போலத்தான். உங்கள் கட்சி ஆட்கள் மத்தியிலேயே உங்கள் மார்க்கெட் போய் விட்டது.

நினைவுக்கு வந்தார்களா?

இது மட்டும் கலாய் அல்ல. சீரியஸாகவே கேட்கிறேன்.

சரி மோடிஜி, ஒரே ஒரு கேள்வி அதிமுக-பாஜக கூட்டணிதான் பெண்களுக்கு பாதுகாப்பு என்று நீங்கள் பேசிய போது பொள்ளாச்சி பெண்கள், குளியறையை சோதனையிட்ட பன்வாரிலால் புரோஹித், அவருக்காக மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல ஆசை வார்த்தை காண்பித்த பேராசிரியர் நிர்மலா தேவி, பாலியல் கொடுமை பிரபலம் உனாவ் எம்.எல்.ஏ செனகர், நீங்கள் போற்றிய சாமியார் ஆச்சாராம் பாபு, காஷ்மீர் ஆசிபா, ஹத்ராஸ் மணிஷா,மிக முக்கியமாக உங்களால் கைவிடப்பட்ட யசோதா பென்
 

  ஆகியோர் நினைவுக்கு வந்தார்களா?

 

ராகுல் சோனியா தாமரைக்கு வாக்கு கேட்பார்களா?

 


ஆம். 

இப்படி நடந்தாலும் நடக்கும்.

கீழே உள்ள ஸ்க்ரீன் ஷாட்டைப் பாருங்கள்


ப.சிதம்பரத்தின் மருமகளும் சிவகங்கைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் மனைவியுமான ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரத்தின் பரத நாட்டிய அபினயத்தை பயன்படுத்தி தாமரைக்கு ஓட்டு கேட்டுள்ளார்கள்.

இது அபத்தம் எனவும் அவருக்கு தெரியாமல் அவரது படத்தை பயன்படுத்தியது தவறு என்றும் கண்டனக்குரல் எழுந்ததும் சத்தமில்லாமல் அதை நீக்கி விட்டார்கள் போட்டோஷாப் பொய்யர்கள்.

மன்னிப்போ, வருத்தமோ கூட கேட்கவில்லை சங்கிகள். அதில் வியப்பில்லை. பாஜக ஆட்களுக்கு என்றைக்கு வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணையெல்லாம் இருந்திருக்கிறது!

இன்னும் ஒரு சுவாரஸ்யமான செய்தி: அவர்கள் பயன்படுத்திய அந்த காட்சியே கலைஞர் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டுக்காக ஏ.ஆட்.ரஹ்மான் இசையில் கலைஞர் எழுதிய "செம்மொழியான தமிழ் மொழியே" பாடலில் வரும் ஒரு காட்சி.

இவர்களுக்கு

தமிழ் பிடிக்காது, கலைஞர் பிடிக்காது, ஏ.ஆர்.ரஹ்மான் பிடிக்காது. ஆனாலும் ஆதாயத்திற்காக எதையும் செய்யும் ஆபத்தான கூட்டம் இது. 

Tuesday, March 30, 2021

மாலன் “கடுமையான தேச சேவை”யா?

 


மாலன் எழுதறாரு, மோடி படிக்கிறாரு

இப்போதெல்லாம் மூத்த்த்த்த்த்த்த பத்திரிக்கையாளர் படு சுறுசுறுப்பாக இருக்கிறார். ஊரில் உள்ளவர்களின் பதிவுகளுக்கெல்லாம் சென்று மோடி புகழ் பாடுகிறார். திமுகவை திட்டுகிறார். கடுமையான தேச சேவை என்று அவரே நினைத்துக் கொண்டிருக்கிறார்.

 


வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நானும் அவருக்கு பின்னூட்டம் போடுகிறேன்.

 





பார்ட்டி துடைத்துக் கொண்டு போய் விடுகிறது போல . . .

 

விக்ரம் படத்தில் சுகிர்த ராஜாவாக வரும் சத்யராஜ், கொல்லப்பட்ட ராணுவ ஜவானுக்கு “ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தனும், கடுமையான தேச சேவை” என்று சொல்வார். அப்படி ஒரு கடுமையான தேச சேவை செய்கிறார் மாலன். ஆனால் கூலிக்கு மாரடிப்பதால் பாவம் இவர் சேவை எல்லாமே காமெடியாகப் போய் விடுகிறது.

 மோடி புகழ் பாடிய ஒரு பின்னூட்டமும் அதற்கு ஒரு சுவையான கமெண்டும் கீழே உள்ளது. ட்விட்டர் பக்கம் வரக்கூடாது என்று கொள்கைப் பிடிப்போடு வேறு இருக்கிறார்.

 


மோடி பேசும் தமிழை மாலன் சிலாகிப்பது புதிதல்ல. இதிலே மாலனின் ட்விட்டர் பதிவை மோடியே பகிர்ந்து கொண்டுள்ளார் என்று சில்லறையை சிதற விட்ட சம்பவமெல்லாம் வேறு நடந்துள்ளது.

 மோடி தப்பும் தவறுமாக தமிழில் என்ன சொன்னாலும் அடுத்த கணமே மாலன் மெய்சிலிர்க்க தோள்களை உயர்த்திக் கொண்டு பதிவு போட்டு விடுவார்.

 அதற்கான காரணத்தை ஊகிப்பது மிகவும் சுலபம்.

 மோடிக்கு அந்த தமிழ் பிட்டுக்களை எழுதிக் கொடுப்பது மாலனாகவே இருக்க வேண்டும். அதனால்தான் மோடி உளறினாலும் இவரால் அதை சரியாக  எழுத முடிகிறது.

 ஏராளமானவர்கள் இறந்து போன மகாமகத்தின் போது A1, A2 மகாமகக் குளத்தில் குளித்த காட்சியை ஜயேந்திர சரஸ்வதி வர்ணித்தது போல மோடியை மாலன் புகழ்கிறார், மாலனை மோடி புகழ்கிறார். இதெல்லாம் பேக்கரி டீலிங் அமலில் இருக்கும் வரைதான்.

 

ஆனால் மாலன் சாரே, டெலி ப்ராம்ப்டர் வைத்து படிக்கிற ஒருவருக்கு மிகப் பெரிய பேச்சாளர் போல பில்ட் அப் கொடுப்பதெல்லாம் ரொம்ப ஓவர். “வருங்கால அமெரிக்க ஜனாதிபதி முருகேசன் வாழ்க” என்ற கூவலை விடவும் ரொம்பவே ஓவர். ஒரு நாடாளுமன்ற விவாதத்தில் அவரது உடல் மொழி அறுவெறுப்பாக இருந்தது என்பதெல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லை போல.

 மீண்டும் சொல்கிறேன். கூலிக்கு மாரடிக்கும் உங்கள் எழுத்துக்களை அவர்களே “கடுமையான தேச சேவை” கேடகரிக்குள் கணக்கில் கொள்ள மாட்டார்கள்.

 பிகு 1 : கமலஹாசனின் விக்ரம் படத்தை யூட்யூபில் காணவில்லை. அதனால் சத்யராஜ் காட்சியோடு படம் போட முடியாமல் “வருங்கால அமெரிக்க ஜனாதிபதி வாழ்க, காட்சியை பதிவில் இடைச்செருகல் செய்ய வேண்டியிருந்தது.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   பிகு 2 : நாளை ஆஜான் ஸ்பெஷல் “நாற வாய் நாரோயில் ஆஜான்”

ரெண்டு கட்டு பணமா? . . .வட போச்சே . . .

 


 “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி” என்று ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் தன் காரை நிறுத்திய போலீசார், பணம் கடத்தப் படுகின்றதா என டிபன் பாக்ஸ் உட்பட சோதனையிட்ட கடமை உணர்ச்சியைப் பற்றி எழுதியிருந்தார்.

இந்த முறை தேர்தல் நடத்தை விதிகள் தொடங்கிய பிறகு ஒரு முறை குடியாத்தத்திற்கும் இரண்டு முறை சென்னைக்கும் காரில் பயணம் மேற்கொண்டிருந்தேன். ஆனால் இது வரை பறக்கும் படையின் கடைக்கண் பார்வை கிடைக்கவில்லை. முதல் முறை சென்னை சென்று திரும்பி வருகையில் சோதனையிட்டிருந்தால் டிக்கியில் இரண்டு கட்டைப் பைகள் பார்த்து மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். ஆனால் அவை சென்னை புத்தக விழாவில் வாங்கிய புத்தகங்கள் என்பதை அறிந்து நொந்திருப்பார்கள் என்பது வேறு விஷயம். (இந்த வருடம் வாங்கிய புத்தகங்களை வைப்பதற்கான இடத்தை இன்னும் கண்டுபிடிக்காததால் அதன் பட்டியலை தயாரித்து இன்னும் பகிர்ந்து கொள்ள இயலவில்லை).

முந்தைய சந்தர்ப்பங்களில் பல சோதனைகள் நடந்திருந்தாலும் இரண்டு சோதனைகள் சுவாரஸ்யமானவை.

ஒரு தோழருடைய அம்மாவின் மறைவுக்காக செஞ்சி தாண்டி, விழுப்புரத்திற்கு முன்னாள் இருக்கும் ஒரு கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தோம். போகும் வழியில் ஐந்து இடங்களில் நிற்கும் படையின் (மர நிழலில் நின்று கொண்டிருந்ததால்) சோதனையிட்டது. அதில் ஒரு இடம் அந்த கிராமத்திற்கு திரும்பும் பாதையில். அஞ்சலி செலுத்தி விட்டு திரும்புகையில் மீண்டும் நிற்கும் படை நிறுத்தியது. “போற போதுதானே சார் செக் பண்ணுனீங்க, இப்போ மறுபடியுமா?” என்று நான் கேட்க, “ஊரிலே இருந்து பணம் கடத்திட்டு வந்திருந்தீங்கன்னா” என்று ஒரு கடமை வீரர் கேட்க காரில் இருந்த அனைவரும் சிரித்து விட்டார்கள். இப்படித்தான் பதில் சொல்வாங்க பாருங்களேன் என்று ஒரு நிமிடம் முன்பாக நான் சொன்னது நடந்ததால் வந்த சிரிப்பு அது.

2014 மக்களவைத் தேர்தலின் போது விழுப்புரம் மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிட்ட தோழர் ஜி.ஆனந்தன் அவர்களுக்காக இரண்டு பிரச்சார நோட்டீஸ்களை தயார் செய்திருந்தோம். சிதம்பரத்தில் ஒரு தோழரின் மகள் திருமணம். போகும் வழியில் பண்ருட்டியில் நோட்டீஸை கொடுத்து விட்டால் அங்கிருந்து எடுத்துக் கொள்கிறேன் என்று விழுப்புரம் தோழர் சொல்லியிருந்தார். எனவே அந்த நோட்டீஸ் கட்டுகள்  கார் டிக்கியில் இருந்தது.

 

திருவண்ணாமலைக்கு முன்பாக காரை நிறுத்தினார்கள். டிக்கியை திறந்ததும் அந்த காவலர், எதிர்ப்பக்க மரத்தடி நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஏட்டையாவைப் பார்த்து “சார் ரெண்டு கட்டு:” என்று உரத்த குரலில் கத்த, அவரோ ஏட்டையாக்களுக்கே உரிய தொந்தியை கஷ்டப்பட்டு தூக்கிக் கொண்டு ஓடி வந்தார்.

 கட்டுக்களின் மேலே சொருகி இருந்த நோட்டீஸ்களை எடுத்து “இதுதான் இருக்கு” என்று சொன்னாலும் அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. கட்டுக்களை பிரித்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்து பிரிக்க வைத்தார். முழுவதும் நோட்டீஸ்கள் மட்டும்தான் என்றதும் அவர்கள் முகம் பியூஸ் போன பல்புகளாகி விட்டது. கட்டுக்களைப் பார்த்த அந்த நொடிப் பொழுதில் “தொலைக்காட்சியில் முகம், நாளிதழ்களில் புகைப்படம், பாராட்டுக்கள்” என்று எத்தனை கனவுகள் மனதில் ஓடியிருக்கும்!

 மனைவியின் இறப்புச் செய்தி அறிந்ததும்  தளர்ந்து போன எஸ்.பி.சவுத்ரி நடை போலவே  நடந்து ஏட்டையா மீண்டும் மரத்தடிக்கு போய் விட்டார்.

 பாவம் வட போச்சே!

 

நிஜமா மோடிதான். நம்பனும்.

 


வங்க தேச விடுதலைக்காக தன்னை சிறை சென்ற செம்மலாக மோடி பில்ட் அப் கொடுத்ததைத் தொடர்ந்து உலகில் எல்லா வரலாற்றுத் தருணங்களிலும் அவர் இருந்ததை நினைவு கூறும் படங்கள் வெளியாகி உள்ளது.

மோடியை குறைத்து மதிப்பிட்ட அனைவருக்கும் சவுக்கடியாக இந்த படங்கள் அமையும். 

இது முதல் தொடராம். இன்னும் வருமாம். எச்சரிக்கையாய் இருங்கள்

மோடிடா !!!



ஹரப்பா அகழ்வாராய்ச்சியில் கிடைத்தது மோடியின் சிலை.



நிலவில் கால் வைத்த முதல் மனிதர்களை வரவேற்க அங்கே காத்திருந்தார் மோடி



டைட்டானிக் கப்பல் மூழ்குகையில் தப்பித்தவர் மோடி




பிரமிட் கட்ட எகிப்தில் (இஜீபுத்து என்றால்தான் அதிமுக ஆட்களுக்கு புரியும்) கல் சுமந்தவர் மோடி



கற்கால மனிதன் வரைந்த குகை ஓவியம் மோடியின் படமே



நியூட்டன் தலையில் விழுந்த ஆப்பிளை ருசி பார்த்தது மோடியே


எவரெஸ்ட் சிகரத்தை முதலில் தொட்டவர்களை அங்கே முன்னேயே இருந்து கை கொடுத்து வாழ்த்து சொன்னவர் மோடியே.



ரேடியோ கண்டுபிடித்த மார்க்கோனிக்கு முதலில் சிக்னல் அனுப்பியது மோடியே




பல்பு கண்டுபிடித்த எடிஸனை வாழ்த்த சென்றார் மோடி

Monday, March 29, 2021

அருகதை கிடையாது வானதி மேடம்

வழக்கறிஞர் தோழர் பிரதாபன் ஜெயராமன் அவர்களின் முகநூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

நான் சொல்ல வருவதும் அதைத்தான்.

வானதி சீனிவாசன் மட்டுமல்ல, பாஜகவில் உள்ள யாருக்குமே யாரையும் குறை சொல்ல அருகதை கிடையாது. 

காஷ்மீரில் கொல்லப்பட்ட ஆசிபா முதல் உத்தரப் பிரதேச பாலியல் கொலைகள் வரை குற்றவாளிகள் பாஜகவினரே. அந்த குற்றவாளிகளை கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பாதுகாக்கும் பொறுக்கிக் கட்சியும் அதுதான். 



ராதாரவியை தனக்கு பிரச்சாரத்தில் பேசவைத்துவிட்டு, ஆ.ராசாவை எதிர்த்து ஆர்பாட்டம் செய்வதற்கெல்லாம் வெட்கப்படனும் வானதி!

இந்த ராதாரவி, நடிகை நயன்தாராவை விமர்சித்தற்காக திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். நீக்குவதற்கு முன்பாக பெண்களை இழிவுபடுத்திவிட்டார் என நீங்களெல்லாம் குதித்தீர்கள். நீக்கிய பின்னர், ராதாரவியை தங்கள் கட்சியில் இணைத்துக்கொண்டு, வெட்கமே இல்லாமல் ஓட்டு கேட்டு வருகிறீர்கள்.

ஆ.ராசா பேசியதற்கு அந்த கட்சியின் தலைவரும் கண்டித்துள்ளார். மகளிர் அணி செயலாளரரும் கண்டித்திருக்கிறார்.இணையத்தில் எதிர்கட்சி பெண் தலைவர்களை இழிவாக பேசிய உங்கள் கட்சியினரை இதுவரை கண்டித்திருக்கிறீர்களா?

கனிமொழியை கள்ளக்குழந்தை என்றானே உங்கள் கட்சியின் காரைக்குடி வேட்பாளர், எச்.ராஜா, எங்கே கண்டித்தீர்கள்? நீங்களும் தமிழிசையும் ஒரு நாள் கூட கண்டித்ததில்லை.

உங்கள் கட்சியின் மதன் ரவிச்சந்திரன், மாரிதாஸ் ஆகியோர் தோழர் சுந்தரவள்ளியை ஆபாசமாக பேசினார்களே அப்போது எங்கே சென்றீர்கள்?

அதற்கெல்லாம் இது சமம் என்பது என் வாதமல்ல. ஆனால், இதை விமர்சிக்க ஒரு சதவீதம் கூட உங்களுக்கு உரிமையே இல்லை.ஏனெனில் ஆர்.எஸ்.எஸ் எனும் பெண்கள் விரோத, மனித குல விரோத அமைப்பினை தங்கள் தாயாக நீங்கள் அறிவித்துள்ளீர்கள்.

உங்களுக்கு அருகதை இல்லை.





இஸ்லாமியர்களுக்கு ஏன் வீடு கிடைப்பதில்லை?

 இந்த வெறுப்புணர்வுதான் பாஜக சாதனை


நேற்று முகநூலில் பார்த்த இரண்டு பதிவுகள் மனதிற்கு மிகவும்  வேதனை அளித்தது. இப்படிப்பட்ட வெறுப்புணர்வை உருவாக்கியதுதான் பாஜகவின் மிகப் பெரும் சாதனை.

இந்த அனுபவங்களே அவர்களையும் அவர்களோடு கூட்டு வைத்துக் கொண்டுள்ள அதிமுகவையும் தோற்கடிக்க வேண்டும் என்ற வெறியை உருவாக்குகிறது.


இயக்குனர் தாமிரா அவர்களின் முக நூல் பதிவு

சமூகம் என்னும் மலைப்பாம்பு
...............................................................................
சென்னையில் இன்னமும் வாடகைக் குடியிருப்புதான். என்றபோதும் நான் வாடகைவீடு தேடி அதிகம் அலைந்ததில்லை…காரணம் கடந்த இருபது ஆண்டுகளாக ஒரே வீட்டில் குடியிருந்துவிட்டோம்.சில வசதிக்குறைவுகள் இருந்த போதும் வீட்டின் உரிமையாளர் மற்றும் சுற்றத்து மனிதர்களின் அன்பு எங்களை இடம் பெயர அனுமதிக்கவில்லை. பிள்ளைகளின் வளர்ச்சி மற்றும் இட நெருக்கடிக்காக, இன்னும் சற்று பெரிய வீடாக பார்க்கலாம் என்கிற எண்ணத்தில் கடந்த ஒரு மாதகாலமாக வாடகை வீடு தேடி அலைகிறோம்.

இன்று எம் எம்டிஏ காலனியில் ஒரு வீட்டிற்குப் போயிருந்தோம். வாசலில் டூ லெட் போர்ட் மாட்டப்பட்டிருந்தது. நல்ல மரங்கள் அடர்ந்த இடத்தில் அந்த வீடு அமைந்திருந்தது. வெளித்தோற்றமே நன்றாக இருந்ததால்,.. மனைவியை இறங்கி விசாரிக்கச் சொன்னேன்..

மாடி பால்கனியில் வீட்டின் உரிமையாளப் பெண்மணி நின்று கொண்டிருந்தார். என் மனைவி ”வீடு வாடகைக்குக் கிடைக்குமா?’ என்று கேட்டதும்.. சிரித்தபடியே ”முஸ்லீம்ஸுக்கெல்லாம் வாடகைக்கு விடறதில்லைங்க” என்றார்.. என் மனைவி பதிலுக்கு ”தேங்க்ஸ்” என்றபடி வந்துவிட, அந்தப் பெண்மணி போனில் யாரிடமோ சிரித்துப் பேசியபடி தன்னியல்பில் பால்கனியில் நடந்து கொண்டிருந்தார்..

அவரது முகத்தில், ஒரு பர்தா அணிந்து வந்த பெண்ணுக்கு….,தான் இதைவிட நல்ல பதிலை சொல்லிவிட முடியாது என்பது போல, ஒரு பாவனை இருந்தது.நெடுங்காலமாக.. இப்படி ஒரு பதிலை தொடர்ச்சியாக சொல்லி வந்தவர் போல மிக நிதானமாகவும், கண்ணியமாகவும்,, புன்னகையுடனும் அந்த சொல்லை உதிர்த்திருந்தார்..

தூரத்து மரத்தடியில் நின்றபடி அந்த அம்மாவையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.. நான் கோபித்துக் கொண்டு சண்டைக்குப் போய்விடுவேனோ என்கிற அச்சம் என் மனைவியிடமிருந்தது. ’வாங்க மச்சான் போகலாம்’ என்றாள்.நான் மிகக்கனிவான பார்வையோடு, அந்த அம்மாவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். .அந்த அம்மா நிச்சயமாக அசைவ உணவாளிக்கு வீடில்லை என்று சொல்பவர் இல்லையெனத் தோன்றியது..

நடுவகிடெடுத்து உச்சியில் குங்குமம் வைத்திருந்த விதத்தில்… அவர் என்னுள்ளிருந்த எத்தனையோ அம்மாக்களின் சாயல்களைக் கொண்டிருந்தார்.. எனக்குள் இருந்த கேள்வியெல்லாம் எப்படி இந்த அம்மாவைத் தொலைத்தேன் என்பதுதான்...

கோவில் கொடை வீதிகளில் ’என்ன மருமவனே நல்லா இருக்கியளா? மயினிய கேட்டதாச் சொல்லுங்க’.. என விசாரிச்ச ஏதோ ஒரு மாமியின் சாயல், ’என்ன சின்னய்யா ஒரு வாய் காஃப்பித்தண்ணி குடிச்சிட்டுப் போ’ எனக் சொன்ன ஏதோ ஒரு சித்தியின் சாயல்.. ’என்ன கொளுந்தப்புள்ள வந்தியளா’ எனக் கேட்கும் ஏதோ ஒரு மதினியின் சாயல்.. ’தம்பி மாமன் தெனம் குடிச்சிட்டு வாராவள என்னன்னு கேக்கப்படாதா?’ எனக் கேட்கும் ஏதோ ஒரு அக்காவின் சாயல்,’யோவ் தாத்தா என்ன அமட்டிக்கிட்டு நிக்கீரு’ என மிரட்டிய.., ஏதோ ஒரு பேத்தியின் சாயலைக் கொண்டவளாக இருந்தார்.அந்த அம்மா… இவர்கள் எல்லோரது கைகளையும் என்உள்ளங்கைக்குள் வைத்துத்தான் உறவு கொண்டாடிக் கொண்டிருந்தேன்..எப்போது பிடி நழுவியது…யார் விலக்கி விட்டார்…

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
அப்போது நான் நண்பன் வி.கே சுந்தர் வீட்டில் தங்கி இருந்தேன்..ஓராண்டுகாலமாக அந்த வீட்டின் உரிமையாளருக்கும் எங்களுக்கும் நல்ல நட்பும் உறவும் இருந்தது.. சுந்தரும்,சந்திராவும்..என்மேல் அத்தனை அன்பாக இருந்தார்கள்..

நாங்கள் ஒரு குடும்பமாக இருந்து கொண்டிருந்த போது.. ஒரு பத்து நாள் பயணமாக என் மனைவி பஷிரியா வந்தாள்.. அப்போது அவள் புர்கா அணிபவளாகக் கூட இல்லை.. தலையில் ஒரு ஸ்கார்ப் கட்டி இருந்தாள்..அவளது இஸ்லாமியத் தோற்றத்தைப் பார்த்த வீட்டின் உரிமையாளர் சண்டையிட்டு.. ஒன்று அவர்களை வெளியேற்றுங்கள்.. அல்லது வீட்டைக் காலி பண்ணுங்கள் என்று சொன்னார்.. சுந்தர்…..,. உங்களுக்காக நண்பனை விட்டுக் கொடுக்க முடியாது என வீட்டை ஒரு நாளில் மாற்றினான்..

ஓராண்டு நட்பை ஒரு நாளில் முறிக்கும் அளவிற்கு அந்த வீட்டின் உரிமையாளர் மூளைக்குள் ஏதோ திணிக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் அன்று ஊடகத்தில் பணி செய்து கொண்டிருந்தோம் நாங்கள்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதே போல ஒரு சம்பவம்..
இந்த சமூகமெனும் மலைப்பாம்பு இருபத்தைந்து ஆண்டுகளாக இஸ்லாமிய வெறுப்பெனும் இரையைத் தின்றுவிட்டு.. அசைய இயலாமல் படுத்துக் கிடக்கிறது.

அச்சுறுத்தலோ, அறிவின்மையோ நாம் பிணைத்திருந்த கைகளை மெல்ல மெல்ல விலக்கிக் கொண்டு வருகிறோம்.மீண்டும் மீண்டும் நம்மில் யாரோ அதற்கு இரை போட்டபடியே இருக்கிறோம்…

ஏதோ ஒரு வீடு கிடைத்துவிடும்.. எப்படியோ வாழ்க்கை நகர்ந்துவிடும்… ஆயினும் நம்மிடையே நெளிந்து கொண்டிருக்கும் அந்த மலைப்பாம்பின் மீதான அச்சம்.. இருவருக்கும் தீரப் போவதில்லை..!
நிற்க..

வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி.. நாம் அந்த மலைப்பாம்பைத் தாண்டித்தான் நமது வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டியதிருக்கிறது…

என் கேள்வி எளிமையானது.. எல்லோருக்குமானது.. உங்கள் வாக்குச்சாவடி எங்கு இருக்கிறது..

அந்த மலைப்பாம்பிற்கு வலது புறத்திலா? இடதுபுறத்திலா ?

தோழர் இ.பா.சிந்தன் அவர்களின் முக நூல் பதிவு

இயக்குநர் தாமிராவின் (
Thamira Kathar Mohideen
) அனுபவத்தைப் படித்ததும் எனக்கு ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது.

மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர் ஒருவர் புதிதாக ஒரு அப்பார்ட்மெண்டிற்கு குடிபோன செய்தி கேட்டு அவரை சந்திக்கச் சென்றிருந்தேன்.

“வீடு என்ன விலைடா?” என்று கேட்டேன்.
“அறுபது இலட்சம் மச்சி” என்றான்.
“காசு குடுத்து வாங்கினியா?” எனக் கேட்டேன்.
“அவ்ளோ காசு என்கிட்ட ஏதுடா. எல்லாம் லோன் தான்” என்றான்.
சோஃபாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, வீட்டைச் சுற்றும் முற்றும் நோட்டம் விட்டேன். சுவரெல்லாம் வெடிப்பு விழுந்ததைக் காண முடிந்தது.

“சுத்திக் காட்டமாட்டியா?” என்று கேட்டேன்.

தயங்கித் தயங்கி ஒவ்வொரு அறையாக அழைத்துச் சென்று, வேண்டா வெறுப்பாக சுத்திக் காட்டினான். ஹாலில் இருந்து படுக்கையறைக்கு செல்லும் வழியில் ஒரு சிறிய குண்டானை வைத்த்திருந்தார்கள். அதில் பாதியளவிற்கு தண்ணீர் இருந்தது. அப்படியே அந்த குண்டானுக்கு நேராக மேலே பார்த்தால், மேலிருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. அந்த தண்ணீர் தரையில் ஓடிவிடக் கூடாது என்பதற்காகத் தான் அந்த குண்டானை அங்கே வைத்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.

அதுமட்டுமில்லாமல் தரையில் நடக்கையில் அடிக்கடி ஏதோ இடிப்பதைப் போன்று இருந்தது. குனிந்து பார்த்தால், டைல்ஸ் சரியாகப் போடப்படாமல் ஏற்ற இறக்கத்துடன் இருந்ததால் தான் தட்டுப்படுகிறது என்பது புரிந்தது. அப்படியே மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றான். செல்கிற வழியில் படிகள் கூட சரியாகக் கட்டப்படவில்லை என்பது தெரிந்தது.

இதற்கு மேலும் பொறுக்கமுடியாமல்,
“வீடு எப்ப கட்டுனதுடா?” என்று கேட்டேன்.

“இப்பதாண்டா. புதுவீடு இது. நாங்க தான் மொத ஓனர்” என்றான்.

“அப்படியா. வீட்ல கொஞ்சம் பிரச்சனை இருக்குற மாதிரி இருக்கேடா. சரிபண்ணித் தருவாங்களா?” என்று மென்மையாகக் கேட்டேன்.

“இல்லடா. அவ்ளோதான். வீடு ஃபுல்லா கட்டி முடிச்சிட்டாங்க. இனி நம்ம பொறுப்பு தான்” என்றான்.

“என்னடா சொல்ற? இது அப்பார்ட்மண்ட் வேற. மேல இருந்து தண்ணி ஒழுகிட்டே இருக்கு, தரை சரியில்ல, செவுரு ஃபுல்லா க்ராக் விட்ருக்கு. எப்புட்றா நீயே சரிபண்ண முடியும்? நல்லா ஏமத்திருக்காங்கடா உன்னைய” என்று பொறுமை காக்கமுடியாமல், கொஞ்சம் கோபத்துடனேயே சொன்னேன்.

“இருக்கட்டும்டா. விட்றா. பாத்துக்கலாம். இதுல வாழமுடியாதா என்ன? இதவிட மோசமான வீட்லயே வாடகை குடுத்து இத்தன வருசம் கஷ்டப்பட்டு வாழ்ந்திட்டோம். இது அதவிட ரொம்ப பரவால்லடா” என்றான்

“என்னடா இப்படி சொல்ற. வாடகை வீடு வேற. இது வேற. இத்தனை இலட்சத்தை வாறி இறைச்சிட்டு, ஏண்டா இப்படி ஒரு மோசமான வீட்ல கஷ்டப்பட்டு இருக்குனும். மொதல்ல இந்த வீட்ட வித்த உன்னோட ஓனரைப் பாத்து கறாரா பேசி, குடுத்த காசை திரும்பி வாங்கிரலாம் வா. இத விடக்கூடாது” என்றேன்.

“டேய். கொஞ்சம் சும்மா இருக்கியா நீ. இந்த வீட்டையும் திருப்பிக் குடுத்துட்டு தெருவில் போய் வாழச் சொல்றியா” என்று கோபமாகக் கேட்டான்.

ஒன்றும் புரியாமல், அவன் மேலும் விளக்கிச் சொல்வான் என்று காத்திருந்தேன்.

சில நிமிடங்கள் அமைதியாக என்னைப் பார்க்காமல், தரையையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். அவனுடைய தோளில் கைவைத்தேன்.

“மச்சி” என்று மெதுவான குரலில் அவனை அழைத்தேன்.

“என்னடா பண்ணச் சொல்ற. இத்தன வருசமா நாங்க வாடகை வீட்லயே இருந்துட்டோம். அந்த வீட்ட நீ பாத்துருக்கல்ல. எவ்வளவு சின்னதா இருக்கும்னு. ஆனா, அதுக்கு மேல வேற வீட்டுக்குப் போறதுக்கு எங்களுக்கு வருமானமோ வசதியோ இல்லன்னு தான் உனக்குத் தெரியுமே. இத்தன வருசமா கஷ்டப்பட்டு படிச்சி, ஒரு சாஃப்ட்வேர் கம்பெனிக்கு வேலைக்குப் போய், இப்பதான் கைல கொஞ்சம் காசு வர ஆரம்பிச்சிருக்கு. அதனால வேற பெரிய வீட்டுக்கு வாடகைக்கு போகலாமனு வீடு தேட ஆரம்பிச்சேன்.

ஐடில வேல பாக்குறேங்குறதால ஈசியா வீடுகிடைக்கும்னு நினைச்சேன். ஆனா எங்கயுமே வீடு தரல. போன்ல பேசும்போது நல்லா பேசுவாங்க, ஆனா வீட்டுக்குப் போய் பாக்கும்போது என் பேரைக் கேட்டதுமே, வீடு இல்லைன்னு சொல்லிருவாங்க. சிலபேர் மறைமுகமா இல்லன்னு சொன்னாங்க. பலபேர், முஸ்லிம்களுக்கு வீடுதர்றதில்லைன்னு நேரடியாவே சொன்னாங்க. ஒருசிலபேர் என்ன தெரியுமா சொன்னாங்க. அவங்களுக்கு மதம்லாம் பிரச்சனை இல்லையாம். ஆனா அக்கப்பக்கத்து வீட்டுக்காரங்க ஏதாவது சொல்வாங்களாமாம். அதனால வீடுதரமுடியாதுன்னு சொன்னாங்க.

ஒரு வீடில்ல ரெண்டு வீடில்ல, ஒரு மாசமில்ல ரெண்டு மாசமில்ல. ஒரு வருசமா நூறு வீடுக்கும் மேல பாத்துட்டோம். சொல்லி வச்சா மாதிரி யாருமே எங்களுக்கு வீடு தரல தெரியுமா? ஒரு ப்ரோக்கர் கிட்ட வீடு வேணும்னு கேட்டோம். முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு தேடிக் குடுக்குறதெல்லாம் அவ்ளோ ஈசி இல்லன்னு சொன்னாரு அந்த ப்ரோக்கர். அதுவும் 2014க்குப் பின்னாடி தான் இது ரொம்ப ரொம்ப கஷ்டமா மாறிடுச்சின்னு சொன்னார். அதுக்கு முன்னாடிலாம், இந்துனா பத்து வீடு தேடினா ஒரு வீடு கிடைக்குமாம். முஸ்லிம்னா ஒரு முப்பது வீடு தேடினாலாவது கிடைக்குமாம். இப்பல்லாம் முஸ்லிம்களுக்கு எவ்வளவு தேடுனாலும் கிடைக்க மாட்டேங்குதுன்னு சொன்னாரு. அதனால் சொந்தமா வீடு வாங்கிடுங்கன்னு எங்களுக்கு ஒரு யோசனை சொன்னார்.

வாடகைக்கே வீடு தராதவங்க, சொந்தமா எப்படி வீடு தருவாங்கன்னு கேட்டேன் அந்த ப்ரோக்கர்கிட்ட. அதுக்கும் ஒரு வழி இருக்குன்னு சொன்னார். அதாவது சரியா கட்டாத சில அப்பார்ட்மண்ட்களை வாங்க யாருமே வரமாட்டாங்களாம். அந்த மாதிரி அப்பார்ட்மெண்டை முஸ்லிம்களுக்கு கொடுக்க ரெடியா இருப்பாங்களாம். ஆனா அப்பவும் விலையை எல்லாம் குறைக்க மாட்டாங்களாம். ஏன்னா, முஸ்லிம்களுக்கு எப்படியும் வேற எங்க போனாலும் வீடு கிடைக்காதுன்னு அவங்களுக்கு தெரியுமாம். சரி, வீடே இல்லாம இருக்குறதுக்கு பதிலா, இந்த மாதிரி பிரச்சனைகளோட இருக்குற வீடுன்னா எவ்வளவோ பரவாயில்ல தான. அதான், இந்த வீட்டை லோன் போட்டு வாங்கிட்டேன்.

இந்த அப்பார்ட்மெண்டில் மொத்தம் நாலு வீடுகள் இருக்கு. அதுல மூனை முஸ்லிம்கள் வாங்கிருக்காங்க. மீதி இருக்குற ஒன்னை ஒரு இந்து வாங்கிருக்கார். ஆனால் அதையும் ஒரு முஸ்லிமுக்கு தான் வாடகைக்கு விட்ருக்கார். வாடகைக்கு இருக்குற அவரையே வீட்டை வாங்கச் சொல்லி ஓனர் கேட்டுட்டு இருக்கார். இப்ப சொல்லு, தண்ணி ஒழுகிச்சின்னா குண்டா வச்சிக்கலாம், தரை உடைஞ்சிருந்தா கொஞ்சம் பாத்து நடந்துக்கலாம். ஆனா வீடே இல்லைன்னா என்னடா பண்றது?” என்று அடக்கிவைத்திருந்த அனைத்தையும் விரக்தியும் சலிப்பும் கோபமும் வெறுப்பும் கலந்த வார்த்தைகளில் கேள்வியாகக் கேட்டுமுடித்தான். அவனுக்கு சொல்வதற்கு என்னிடம் பதில் இல்லை.

என்ன சொல்வதென்றே தெரியாமல் அந்த அப்பார்ட்மண்ட் மொட்டை மாடியில் அவனுக்கு அருகில் அமைதியாக நின்றிருந்தேன். அங்கே நின்றுகொண்டு பார்க்கையில், சுற்றிலும் பல்லாயிரக்கணக்கான வீடுகள் என் கண்ணில் தென்பட்டன. இத்தனை ஆயிரம் வீடுகளில் வாழும் இத்தனை இலட்சக்கணக்கான மக்களின் மனதில் இப்படியொரு விஷத்தை விதைத்து, மனித சிறைச்சாலைகளை உருவாக்கிக் கொண்டிருப்பவர்கள் தான் நம்மையெல்லாம் ஆண்டுகொண்டிருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது.

அத்தகைய கொடூர ஆட்சியாளர்கள் இப்போது நம் மண்ணில் காலூன்றி முழுவதுமாக ஆக்கிரமிக்க வழிபார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நம்மிடம் இருக்கும் மிச்சமீதி அன்பையும் பறித்துக்கொள்ளும் வெறி அவர்களிடம் இருக்கிறது என்பதை உணர வேண்டிய தருணம் இது. அரசியல் இலாபத்திற்காக மனிதர்களிடையே பிரிவினையை உண்டாக்குபவர்களை அடித்து விரட்டுவது மட்டும் தான் என் நண்பனுக்கும் அவனைப் போன்று சொந்த பூமியிலேயே அகதிகளாகப் பார்க்கப்படும் அனைவரின் கேள்விகளுக்கான விடையாகவும் இருக்கமுடியும். ஆர்எஸ்எஸ் கூட்டத்தை தெருவில் அடித்து விரட்டுவது ஒருவழியென்றால், தேர்தல் வாக்குகளால் விரட்டுவதும் இன்னொரு வழிதான் என்பதை இந்த நேரத்தில் நினைவுபடுத்தியே ஆகவேண்டும்…

எழுத்தாளர் தோழர் சம்சுதீன் ஒரு வரியில் பின்னூட்டம் போட்டிருந்தார். அது மிகவும் வலி தருவது.

இந்த சிரமன் கூட வேண்டாமென்றுதான் தடுப்பு முகாம்களைக் கட்டுகிறார்கள்.

நாம் இந்த வேதனைகளை மௌனமாக கடந்து போகப் போகிறோமா? அல்லது சங்கிகளும் அடிமைகளும் முக்கியப் பிரச்சினைகளிலிருந்து நம் கவனத்தை திசை திருப்புவதற்கு இரையாகப் போகிறோமா?


Sunday, March 28, 2021

மோடியா? சீமானா? யாருக்கு உங்கள் வாக்கு?

 


மிகவும் சிரமமான கேள்விதான். யாருக்கு உங்கள் ஓட்டு? 

தமிழக டுபாக்கூரா? அகில இந்திய டுபாக்கூரா?