Showing posts with label பழங்குடி. Show all posts
Showing posts with label பழங்குடி. Show all posts

Monday, July 4, 2022

கொளுத்தப்பட்ட பழங்குடி இனப் பெண்

 


பழங்குடி இனப் பெண்ணை ஜனாதிபதியாக்கப் போகிறோம் என்று பெருமை பேசும் பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு பழங்குடி இனப் பெண் கொளுத்தப்பட்டுள்ளார்.

அவர்களுக்கு அரசு ஒதுக்கிய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்த ஆதிக்க சக்திகள்தான் இந்த அராஜகத்தை அரங்கேற்றியுள்ளனர்.

ராம்பியாரிபாய் என்ற அந்த பெண் உயிருக்கு போராடிக் கொண்டுள்ளார்.

ஒரு பழங்குடிப் பெண்ணை ஜனாதிபதியாக்கினால் ஒட்டு மொத்த பழங்குடி இன மக்களுக்கும் விடியல் வந்து விடும் என்று நினைப்பது மூடத்தனம் என்பதைத்தான் இந்த சம்பவம் உணர்த்துகிறது.

கலாம், கோவிந்த், முர்மு எல்லாருமே பாஜகவின் பாசிஸ முகத்தை மறைக்க பயன்படுத்தப்பட்ட / பயன்படுகின்ற முகமுடிகள். 

முன்பு இருந்தவர்களாலும் எந்த பயனுமில்லை. இனி வருபவராலும் கூட. 

செல்லரித்துப் போன மனுதர்மத்தை நிலை நாட்ட உதவுவது கலாமாக இருந்தால் என்ன? முர்முவாக இருந்தால் என்ன? எல்லோருமே மக்கள் விரோதிகளின் பிரதிநிதிகள்தான்.