Showing posts with label நாடாளுமன்றம். Show all posts
Showing posts with label நாடாளுமன்றம். Show all posts

Saturday, February 21, 2026

வேள்பாரி பாண்டியன் அரண்மனையும் நாடாளுமன்றக் கட்டிடமும் . . .

 


மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அளித்த ஒரு புதிய தகவல் கீழேயுள்ள காணொளியில் உள்ளது. அரசியல்வாதியை மீறி எழுத்தாளர் கம்பீரமாய் நிற்கும் தருணம் இது. 






Saturday, February 14, 2026

அந்த பதவிக்கு அவர் அருகதையில்லை . . .

 

இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் இது நாள் வரை இவ்வளவு மோசமான அவைத்தலைவரை பார்த்ததில்லை. 

அந்த பதவியில் இருந்தவர்கள் அனைவருமே தோழர் சோம்நாத் சட்டர்ஜி, திரு ஜி.எம்.சி.பாலயோகி, திரு மனோகர் ஜோஷி  நீங்கலாக  அனைவருமே எது ஆளும் கட்சியோ, அதைச் சேர்ந்தவர்கள்தான்.

ஆளும்கட்சி சார்பாகத்தான் அவர்கள் செயல்பட்டிருந்தாலும் கொஞ்சமாவது நடுநிலையோடு நடந்து கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துக்களை சொல்ல கொஞ்சமாவது வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் ஓம் பிர்லா?

ஒரு சபாநாயகரின் முதல் கடமை - துணை சபாநாயகர் தேர்வு. 

12 வருடங்களாக நடக்கவில்லை. இவருக்கு முன்பிருந்த சுமித்ரா மகாஜன் அம்மையாரும் சரி, இவரும் சரி, அதைப் பற்றி கவலைப்படவே இல்லை.

அமைச்சர்கள் சொல்ல வேண்டிய பதில்களை இவரே சொல்லி விடுகிறார். 

எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடை நீக்கம் செய்து அதில் மகிழ்ச்சி அடைபவர், அப்போதுதானே அவர்கள் அரசை விமர்சிக்க முடியாது.

இதில் மிக மிக மோசமான நடவடிக்கைதான் பெண் எம்.பி க்கள் மோடியை தாக்கவிருப்பதாக பழி போட்டது. மோடியை விட கற்பனை வளத்தில் சிறந்தவராக இருக்கிறார்.

அவரை பதவி நீக்கம் செய்ய கொண்டு வரப்பட்ட தீர்மானம் மிகவும் சரியானது. அது தோற்றுப் போகும். ஆனால் ஒரு சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்பது வரலாற்றில் பதிவாகிறதல்லவா! அது போதும்.

பிகு: எழுதி இரண்டு நாளான பதிவு இது. ஓம் பிர்லா பல்பு வாங்கிய ஒரு சம்பவம் சிரிப்பைத் தந்தது. அது கீழே . . 


 

Thursday, February 5, 2026

ஓடி ஓளிவதைத் தவிர மோடிக்கு வேறு வழியில்லை . . .

 


குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி சொல்லும் தீர்மானம் பிரதமர் பதில் அளிக்காமலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது.

என்ன காரணம்?

சீனப் படைகள் முன் வந்த போது முடிவெடுக்க திராணியில்லாமல் நடுங்கியதை சொல்லும் ராணுவத் தளபதியின் புத்தகத்தைக் கொடுக்க ராகுல் காந்தி காத்திருக்கிறார்.

எங்கய்யா போச்சு உன் 56 இஞ்ச் மார்பு என்று எதிர்க்கட்சிகள் குடைவார்கள்.

டொனால்ட் ட்ரம்பின் நிபந்தனைகளுக்கு அடி பணிந்து அவர் அடிமையாய் மாறி விட்டாயே என்ற கேள்விகள் வேறு.

இதைத் தவிர மோடிதான் முஜ்ரா நடனம்  (விபரங்களுக்கு  இந்த இணைப்பை பார்க்கவும்)   ஆடினார் என்று எப்ஸ்டீன் கோப்புகள் சொல்வதாக வேறு ஒரு தகவல்.

இப்படிப்பட்ட சூழலில் அவர் எப்போதுமே வெறுக்கும் நாடாளுமன்றத்திற்கு மோடி எப்படி வருவார்? 

ஓடி ஓளிவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.


அதற்கு ஓம் பிர்லா (சபாநாயகர் என்றெல்லாம் அந்த சங்கிக்கு மரியாதை அவசியமில்லை) சொல்லியுள்ள காரணம்.

வழக்கமான பாஜக அயோக்கியத்தனம்.

நாடாளுமன்றம் கூட பாதுகாப்பில்லை என்றால் உள்துறை அமைச்சர் பதவி எதற்கு? அமித் ஷா ராஜினாமா செய்யட்டும். 

பிகு : நான் பனையூரிலேயே பதுங்கி இருப்பதைப் பற்றி பாஜகவினர் யாரும் பேச முடியாது என்று விஜய்க்கு மகிழ்ச்சியாக இருக்கும். 

அவர்கள் அவர்கள்தான். ஆனால் அவர்களா?

 


நேற்று மணிப்பூரில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது.

யும்மாம் கேம்சந்த்சிங் என்ற மெய்தி இனத்தவர் முதலமைச்சராகவும் நிம்சேன் கிப்கேன் என்ற குக்கி இனப் பெண் எம்.எல்.ஏ வும் லோசில் டிகோ என்ற நாகா இனத்தவரும் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர். 

மணிப்பூரில் உள்ள அனைத்து குக்கி மற்றும் நாகா அமைப்புக்கள், அரசில் தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இணையக்கூடாது என்றும் தாங்கள் வாழும் பகுதியை தனியான யூனியன் பிரதேசமாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

அவர்களை பாஜக அரசு தாக்கியதன் ஒடுக்கியதன் விளைவு அது. மத்திய அரசின் மீதும் மோடியின் மீதும் அவர்கள் எப்போதோ நம்பிக்கை இழந்து விட்டனர். புதிதாக உருவான அமைச்சரவை ஒரு வெத்து வேட்டு என்பதையும் அவர்கள் அறிவார்கள். 

அவர்கள் சந்தித்த இன்னல்கள், கொடுமைகள், பெண்களுக்கு ஏற்பட்ட அராஜகங்கள், இழந்த உயிர்கள், அழிந்த உடமைகள் அப்படிப்பட்ட நிலைமைக்கு அவர்களை தள்ளியுள்ளன.

இந்த சூழலில் குக்கி இனத்தையும்  நாக இனத்தையும் சேர்ந்தவர்களை துணை முதலமைச்சராக்கினால் பிரச்சினை தீரும் என்று சாணக்கியத்தனமாக முடிவெடுத்துள்ளதாக  பாஜக  கருதுகிறது.

நிம்சேன் கிப்கேனும்  லோசில் டிகோவும் குக்கி, நாகா இனத்தவர்கள்தான். ஆனால் அந்த இனத்தை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களா? அவர்களின் நியாயத்திற்காக குரல் கொடுத்தவர்களா? அம்மக்களின் நம்பிக்கையை பெற்றவர்களா?

இல்லை,

இல்லவே இல்லை.

இதுதான் யதார்த்தம். 

அந்த இனங்களை சேர்ந்தவர்களை துணை முதல்வராக்குவது என்பது பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற விருப்பத்தின் பேரில் செய்யப்பட்டது அல்ல. எப்படி ராம்நாத் கோவிந்த் ஒரு பொம்மையாக இருந்தாரோ, எப்படி திரௌபதி முர்மு பொம்மையாக இருக்கிறாரோ, அது போன்ற பொம்மைகளாக இருக்க பதவி கொடுக்கப்பட்டவர்கள். 

அதனால் அமைதிக்கு வாய்ப்பில்லை.

பிகு: நேற்று மாநிலங்களவையில் கமலஹாசனின் உரை நன்றாக இருந்தது என்பதை இரண்டு மூன்று முறை பார்த்து கேட்ட பின்பே புரிந்தது. எளிய மொழியில் நேரடியாக இருந்திருந்தால் வீச்சு இன்னும் நன்றாகவே இருந்திருக்கும்.

ஒரு குழப்பமான தலைப்பை வைக்க அவரது உரையே காரணமாக இருந்தது. 

 

Monday, February 2, 2026

மரண பயத்தில் நடுங்கிய பாஜக . . .


 பாஜகவினர் இன்று மரண பயத்தில் நடுங்கிப் போய் விட்டனர். 

முன்னாள் ராணுவத் தளபதி இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே எழுதிய “விதியின் நான்கு நட்சத்திரங்கள்” (Four Stars of Destiny) என்ற புத்தகத்தின் ஐந்து வரிகளை வாசிக்கவிடாமல் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரும் உள்துறை அமைச்சரும் கடந்த ஒன்றரரை மணி நேரமாக நாடாளுமன்றத்தில் போராடினர்.

அப்படி என்ன எழுதப்பட்டுள்ளது?

ஆகஸ்ட் 31, 2020 அன்று இரவு 8:15 மணிக்கு, சீனாவின் ஆர்மி மற்றும் அதன் நான்கு சீன டாங்கிகள் லடாக்கில் உள்ள ரெசின் லா நோக்கி முன்னேறி வருகின்றன! அவை ஏற்கனவே இந்திய எல்லையில் சில நூறு மீட்டருக்குள் வந்து விட்டன.

இந்திய ராணுவத் தளபதி, ஜெனரல் நரவனே பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோருக்கு அவசர அழைப்புகளை விடுத்து நமது ராணுவத்தை உடனே முன்னேறி, சீனாவின் ராணுவத்தை தடுத்து நிறுத்த அனுமதி கேட்கிறார்!
“நாங்கள் உத்தரவு தரும் வரை துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டாம்” என்று டெல்லியில் இருந்து கட்டளை வருகிறது! சீனராணுவம் தொடர்ந்து முன்னேறுகிறது! நமது ஆர்மி கமாண்டர் உச்ச கட்ட டென்ஷனில் என்ன செய்வதென்று தெரியாது விழி பிதுங்குகிறார்!
சீனர்கள் அவர்களது படைகள் முன்னேறி வருகின்றன! பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்துக்கு அவர் மீண்டும் மீண்டும் வெறித்தனமான அழைப்புகள் அனுப்புகின்றார் .
ஆனால் எந்தப் பயனும் இல்லை. இந்தியாவின் அரசியல் தலைமையிடமிருந்து எந்த தெளிவான செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் எதுவும் டெல்லியில் இருந்து வரவில்லை!
சாத்தியமான அனைத்து வழிகளிலும் துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி கேட்டு எல்லையில் ராணுவ கமாண்ட் அலறுகிறது! ஆனால் ராணுவத் தளபதிக்கு இன்னும் தெளிவான நிர்வாக உத்தரவுகளை டெல்லியில் உள்ள உயர்மட்ட அரசாங்கக் குழு எந்த உத்தரவும் தராமல் மௌனம் காக்கிறது!
ஒருவழியாக இரவு 10:30 மணிக்கு, பிரதமரிடம் பேசிய பிறகு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத் தளபதி நரவனேவைத் திரும்ப அழைத்து, பிரதமரின் அறிவுறுத்தல் படி,
“உங்களுக்கு எது சரியென்று படுகிறதோ அப்படிச் செய்து கொள்ளுங்கள்! என்று பொறுப்பில்லாத பதிலைத் தருகின்றார்!

ஆனால் அதற்குள் சீனாவின் ராணுவம் நம்மை ஒரு வழி பண்ணி விட்டது!

ராகுல் காந்தியை பேச விடாமல் எப்படி தடுக்கிறார்கள் என்பதை கீழே உள்ள காணொளியை பாருங்கள்.


குற்றச்சாட்டிற்கு பதில் சொல்ல பாஜகவினர் தயாராக இல்லை. மாறாக பத்திரிக்கையில் சொல்லியதை படிக்கக் கூடாது. பிரசுரிக்கப் படாத புத்தகத்தை படிக்கக் கூடாது என்றெல்லாம்தான் பம்மாத்து செய்கிறார்கள்.

ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும்,

மோடி ஒரு வெற்று வேட்டு. யாரைக் கண்டாலும் நடுங்கிப் போவார் என்று.

அதனால்தான் ஒட்டு மொத்த பாஜகவினரும் "மரண பயத்தை காண்பிச்சுட்டாங்க பரமா" என்று கதறுகிறார்கள்.

இன்னும் கூட அவர்கள் கதறுவார்கள்.

பிகு" நீல நிறத்தில் இருப்பதை மதுரை தோழர் பகத்சிங்க் அவர்களின் பக்கத்திலிருந்து எடுத்து பகிர்ந்து கொண்டுள்ளேன்.

Saturday, December 13, 2025

மோடியும் நேருவின் கொள்ளு பேத்தியும்

 


உருப்படியாக எதையும் செய்ய இயலாத மோடி, நாடாளுமன்றத்தில் நடத்திய ஒரு வெட்டி விவாதம்தான் "வந்தே மாதரம்" 150 வது ஆண்டு.

அதையும் ஜவஹர்லால் நேருவை வசை பாடத்தான் பயன்படுத்திக் கொண்டார்.

அதற்கு பதிலளித்து நேருவின் கொள்ளுப் பேத்தி பிரியங்கா கொடுத்த பதிலடி சிறப்பாகவே இருந்தது. 

அந்த காணொளி கீழே


ஆமாம். நேரு பற்றி ஒரு விவாதம் வைத்துக் கொள்ளலாமா என்ற கேள்விக்கு மோடியும் அவர் அல்லக்கைகளும் பதில் சொல்லவே இல்லையே! 

ஏற்கனவே பட்ட அசிங்கம் போதும் என்ற அறிவு கூட மோடிக்கு கிடையாதா என்ன!

Wednesday, December 10, 2025

நீதிபதி இம்பீச்மெண்ட் - உமக்கென்ன பயம் சுமந்து?

 


திருப்பரங்குன்றம் தீர்ப்பாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்தியா கூட்டணி அளித்த மனு சங்கி சுமந்தின் உறக்கத்தை கலைத்து விட்டது போல . . .

ட்விட்டரில் நேற்று ஒரே புலம்பல்.

காங்கிரஸ் கட்சி ஆதரிக்குதா?

ம்ம்ம்ம், அவங்களும் கையெழுத்து போட்டுட்டாங்க போல.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு இந்து விரோத முத்திரை வந்துடுச்சு, பிரயோசனமில்லாத இந்த நடவடிக்கையால் அது இன்னும் தீவிரமாகும்னு கூட புரியலையே.

நிச்சயமாக தோத்துப் போகும்னு தெரிஞ்சே இப்படி செய்யறாங்களே! நீதிபதியோட ஜாதி மேல வெறுப்பால செய்யறாங்க. மைனாரிட்டி மதத்தை சேர்ந்தவர் என்றாலோ ஆதிக்க ஜாதியைச் சேர்ந்தவர் என்றாலோ இப்படி செய்ய தைரியம் வருமா?





திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர் மீது நடவடிக்கை என்றால் சுமந்திற்கு ஏன் பதறுகிறது?

இதுவே தாமதம்.

சகோதரி செய்த விபத்தை தான் ஏற்றுக் கொண்டு சிறை சென்றது என்பது ஒரு மோசடி. அப்படி மோசடி செய்தவரை  வேதம் படித்தவர் என்பதற்காக நான் காப்பாற்றினேன் என்று சொன்ன போதே அவர் நீதிபதியாக இருக்கும் தகுதியை இழந்து விட்டார்.

இதிலே ஜாதியின் பெயரால் ஒளித்து வைக்க சுமந்து முயல்கிறார். அய்யா சுமந்து, தீர்ப்பாளரின் பல நடவடிக்கைகளுக்கு காரணமே அவருடைய ஜாதிய மேட்டிமை மனோபாவம்தான். அதையே அவருக்கு அனுதாபம் தேட நீர் முயற்சிப்பது அயோக்கியத்தனம்.

சரி உமக்கு ஏன் இவ்வளவு பதற்றம்?

திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர் போல நமது மனைவியின் செயல்பாடுகள் அமைந்தால் அவர் மீதும் பதவி நீக்க நடவடிக்கை வரும் என்பதால் உருவான பயமா சுமந்து?

Tuesday, December 9, 2025

மோடியே பதில் சொல் . .

 


நேற்று நாடாளுமன்ற மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் ஆற்றிய அற்புதமான, ஆவேசமான, அர்த்தம் மிக்க உரை.

அவசியம் கேளுங்கள். 

என்னைப் போல மீண்டும் மீண்டும் கேட்பீர்கள் . . .


வந்தே மாதரம் பாடலின் 150 ஆவது ஆண்டை கொண்டாடுவதில் உள்ள போலித்தனத்தை மட்டுமல்ல பதவி நீக்கம் செய்யப்பட வேண்டிய தீர்ப்பாளர் பற்றியும் பேசுவது ஆணித்தரமானது.

இந்த உரையில் தோழர் சு.வெ எழுப்புகிற மூன்று கேள்விகளுக்கு மோடியாலோ அல்லது சங்கிகளாலோ பதில் சொல்ல முடியுமா?

வந்தே மாதரம், ஜெய் ஹிந்த், இன்குலாப்  ஜிந்தாபாத் ஆகிய மூன்று முழக்கங்களின் பின்னணியில் லட்சக்கணக்கானவர்கள் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

எந்த முழக்கத்தின் கீழ் நீங்கள் விடுதலைக்காக திரண்டீர்கள்?

"ஈஸ்வர அல்லா தேரா நாம்" என்ற முழக்கத்தை ஒரு முறையாவது உங்கள் உதடுகள் உச்சரித்துள்ளதா?

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் சிவன், விஷ்ணு, துர்கா என்று பனிரெண்டு திரு உருவச் சிலைகளை வைத்துள்ளீர்கள். கிறிஸ்துவத்திலிருந்து ஒரு திரு உருவச்சிலையோ, திருக்குரானின் அடையாளத்தில் எதுவுமோ உங்களுக்குக் கிடைக்கவில்லையா?

பதில் சொல் மோடி. 

உம்மால் முடியாது, முடியாது, முடியாது.  

Monday, December 8, 2025

நீதிபதி பதவி நீக்கம் - சரியான முடிவு

 


திருப்பரங்குன்றம் தீபத்தூண் புகழ் நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை ( IMPEACHMENT MOTION) எடுக்கப் போவதாக "இந்தியா" கூட்டணி முடிவு செய்துள்ளது.

அரசியல் சாசனத்தின் விழுமியங்களைப் பற்றி கவலைப்படாமல், ஜன நாயகத்தை காலில் போட்டு மிதித்துக் கொண்டு  காவிக் கண்ணாடி அணிந்து கொண்டு தீர்ப்புக்கள் மூலம் கலவரத்துக்கு வித்திடுபவர் நிச்சயம் நீதிபதி பொறுப்பிற்கு தகுதியற்றவர்தான்.

அவரை பணி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தின் முன்மொழிவு கொண்டு வர்ய்வது மிகவும் நல்ல விஷயம்.

எண்ணிக்கை அடிப்படையில் அந்த தீர்மானம் வெற்றி பெறாது.

ஆனால்

உங்கள் நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியது, ஏற்றுக் கொள்ள முடியாதது, நீதிபதி பதவிக்கு பொருத்தமற்றது என்று இந்திய ஜனநாயகத்தின் அடையாளமான நாடாளுமன்றத்தில் பதிவாவது மிகவும் முக்கியமானது. 

சரியான முடிவை எடுத்த அனைத்து தலைவர்களுக்கும் வணக்கமும் வாழ்த்துக்களும் . . .

Wednesday, September 17, 2025

எல்.ஐ.சி யை, எல்.ஐ.சி யாகவே நீடிக்க வைத்தவர்


 அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர் சுனில் மைத்ரா அவர்களின் நினைவு நாள் இன்று.

பி.யு.சி படிக்கும் காலத்தில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு பத்து மாத காலம் சிறைத்தண்டனை பெற்றவர். சுதந்திரப் போராட்ட தியாகிக்கான எந்த சலுகையையும் பெறாதவர்.

தனியார் கம்பெனிகள் காலத்தில் பணியில் சேர்ந்த அவர், சங்கத்தின் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்ட காரணத்தால் நாக்பூர், கோவை, அஸ்ஸாம் மாநிலத்தின் திப்ரூகர் ஆகிய இடங்களுக்கு மாற்றப்படுகின்றார்.  என்ன ஆனது? அங்கேயெல்லாம் சங்கம் வலிமையானது.

தேச உடமையாக்கப்பட்ட பிறகு  அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னணித் தலைவராகிறார். சங்கத்தின் போர் அமைச்சர் என்று வர்ணிக்கப்படும் அளவிற்கு உத்திகளை வகுப்பதில் விற்பன்னர்.

அவரது போராட்ட உணர்வும் திறமையும் ஞானமும் அவரை மேலும் மேலும் உயரங்களுக்கு எடுத்துச் சென்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவரை 1980 ல் கல்கத்தா வட கிழக்கு தொகுதியில் மக்களவைக்கு போட்டியிட வைத்தது. ராஜிவ் காந்தி காலத்தில் அமைச்சரான  அஜித் குமார் பஞ்சா என்ற பெரும் பணக்காரரை வென்று நாடாளுமன்ற உறுப்பினர்.

பின்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் பீப்பிள்ஸ் டெமாக்ரஸியின் ஆசிரியராகவும் இறுதி மூச்சு வரை செயல்பட்டவர்.

நாடாளுமன்ற உறுப்பினராக அவர் செயல்பட்ட காலத்தில்தான் எல்.ஐ.சி நிறுவனத்தை ஐந்து கூறுகளாக பிரிக்கும் மசோதாவை 19.12.1983 அன்று  அன்றைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி முன்மொழிகிறார். அப்போதே தோழர் சுனில் மைத்ரா கடுமையாக  எதிர்க்கிறார். 48 மக்களவை உறுப்பினர்களிடமிருந்து உடனடியாக கடிதம் பெற்று சபாநாயகரிடம் அளிக்கிறார்.

அவரது கடுமையான முயற்சி காரணமாக மசோதா நிதியமைச்சகத்தின் நிலைக்குழுவின் ( STANDING COMMITTEE)  பரிசீலனைக்குச் செல்கிறது. அங்கே ஒருமனதான கருத்து எட்டப்படாததால் நாடாளுமன்றத்தின் தேர்வுக்குழுவின் (SELECT COMMITTEE)  பரிசீலனைக்கு அனுப்பப்படுகிறது. அந்த தேர்வுக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்ட தோழர் சுனில் மைத்ரா, யாரெல்லாம் தங்களின் கருத்துக்களை சொல்ல வேண்டும் என்று விழைகிறார்களோ, அவர்கள் அனைவரது கருத்துக்களையும் குழு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அதனை குழுவும் ஏற்றுக் கொள்கிறது. 

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஒரு புறத்தில் வேலை நிறுத்தம், பிரச்சார இயக்கம், கையெழுத்து இயக்கம் போன்ற நடவடிக்கைகளையும் மறுபுறம் தொழிற்சங்க அமைப்புக்கள், அறிவு ஜீவிகள், பல துறை ஆளுமைகள் ஆகியோரை தேர்வுக்குழுவிற்கு தங்களின் கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று கடிதம் எழுத வைக்கிறது.

இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று தேர்வுக்குழு நூற்றுக் கணக்கானவர்களின் கருத்துக்களை கேட்கிறது. தேர்வுக்குழுவின் முன்பாக நானும் சாட்சியம் சொன்னேன் என்று இந்தியாவின் முக்கிய பொருளாதார நிபுணர்களில் ஒருவரான தோழர் வெங்கடேஷ் ஆத்ரேயா அவரோடு  பேசிக் கொண்டிருக்கையில்  ஒரு முறை கூறினார்.

ஆளும் கட்சியே பெரும்பான்மை என்பதால் தேர்வுக்குழு எல்.ஐ.சி யை பிரிப்பதற்கு ஆதரவாகவே பரிந்துரை அளித்தது. 25.08.1984 அன்று மசோதா மீது விவாதம் நடக்கிறது. தோழர் சுனில் மொய்த்ரா ஆவேசமாக உரையாற்றுகிறார். முடிவு எதுவும் எடுக்கப்படாமல் அவை ஒத்தி வைக்கப்படுகிறது. கூட்டத் தொடரும் கூட.

சில மாதங்களிலேயே இந்திரா அம்மையார் கொல்லப்படுகிறார். புதிய பிரதமரான ராஜீவ் காந்தி மக்களவையைக் கலைத்து தேர்தலுக்கு ஆயத்தமாகிறார்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தேர்தல் காலத்தில் இதனை ஒரு முக்கியமான பிரச்சினையாக முன்வைக்கிறது. அனைத்து வேட்பாளர்களிடமும் ஆதரவு கோருகிறது.

தேர்தலுக்குப் பின்பு மீண்டும் பிரதமரான ராஜீவ் காந்தியை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தலைவர்கள் சந்தித்து எல்.ஐ.சி யை ஐந்து கூறுகளாக பிரிப்பதன் பாதகங்களை விளக்கி பேசுகின்றனர்.

மத்தியரசு தன் முடிவை கைவிடுகிறது. தன் அன்னை எடுத்த முடிவை மாற்றுவதா என்று ராஜீவ் காந்தி ஈகோ பார்க்கவில்லை. எல்.ஐ.சி யை ஐந்து கூறுகளாக பிரிக்கும் முடிவை கைவிடுகிறோம் என்று ராஜீவ் காந்தியே தோழர் சுனில் மைத்ராவுக்கு நேரடியாக கடிதம் அனுப்புகிறார். 


எல்.ஐ.சி இன்று 54 லட்சம் கோடி சொத்து மதிப்புள்ள பெரும் நிறுவனமாக, இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, பாலிசிதாரர்களின் நம்பிக்கையாக திகழ்கின்றதென்றால் அது ஒரே நிறுவனமாக நீடிப்பதால்தான் சாத்தியமானது. ஐந்து கூறுகளாக பிரிக்கும் சதி முறியடிக்கப்பட்டதன் காரணமாக மட்டும் எல்.ஐ.சி ஒரே நிறுவனமாக நீடிக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் தோழர் சுனில் மைத்ரா என்பதற்கு ராஜீவ் காந்தியின் கடிதமே சான்று.

எல்.ஐ.சி யின் இயக்குனர் கூட்ட அறையில் (BOARD ROOM)  ஆயுள் இன்சூரன்ஸ் துறையை தேசியமயமாக்கிய அன்றைய நிதியமைச்சர் திரு சிந்தாமணி தேஷ்முக் அவர்களின் படம் உள்ளதாம். அங்கே வைக்க வேண்டிய இன்னொரு படம் தோழர் சுனில் மைத்ராவுடையது. எல்.ஐ.சி, எல்.ஐ.சியாகவே நீடிப்பது அவரால்தானே!

செவ்வணக்கம் தோழர் சுனில் மைத்ரா 

பிகு: அவரைப் பற்றி எழுத இன்னும் எவ்வளவோ உள்ளது. அவை பிறிதொரு சந்தர்ப்பத்தில் . . .


Tuesday, March 18, 2025

ஓடுவது மோடியின் வாடிக்கை . . .

 


கீழேயுள்ள செய்தியை படிக்கையில் எனக்கு அதிர்ச்சியோ, ஆச்சர்யமோ ஏற்படவில்லை.



மோடிக்கு இந்தியாவில் பிடிக்காத ஒரே ஒரு இடம் நாடாளுமன்றம். அப்படி இருக்கையில் பதில் சொல்ல முடியாத கேள்விகளை கேட்டுக் கொண்டே இருந்தால்  அவரால் எப்படி அவையில் உட்கார முடியும்! என்ன வழக்கமாக அவர்  மட்டும்தான் நாடாளுமன்றத்திலிருந்து ஓடுவார்! இந்த முறை அவர் கூட்டாளிகளோடு ஓடி விட்டார். 

Tuesday, March 11, 2025

நாகரீகம் எது? அருமை சு.வெ

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெம்கடேசன் இன்று மக்களவையில் நிகழ்த்திய உணர்ச்சிகரமான உரை.

சங்கிகளுக்கு வெ.மா.சூ.சொ.ரோ இருந்தால் தூக்கில் தொங்குவார்கள். அது எதுவும் இல்லையென்பதால்தான் நாலு கால் ஜந்துகளாக திரிகிறார்கள்.

காணொளியை முழுமையாக பாருங்கள். அதில் வெடிக்கும் கோபத்தை பார்க்க தவறாதீர்கள்.



பட்டினி போட்டாலும் பணியாத தன்மானமும் , பகுத்தறிவும் கொண்ட தமிழ்சமூகம் உங்களுக்குப் பாடம் புகட்டும்

ஒன்றிய நிதிமானியக் கோரிக்கையில் எனது உரை ;
மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே ,
வணக்கம் .
எனக்கு முன்னால் குறுக்கீடு செய்து பேசிய மாண்புமிகு அமைச்சர் பியூஸ் கோயல் அவர்கள் இந்தியை எதிர்த்தால் அது இந்தியாவை எதிர்ப்பது என்று அவர் கூறினார். இந்தித் திணிப்பை எதிர்த்தால் தான் அது இந்தியாவைப் பலப்படுத்துவது என்பதை அமைச்சருக்கு அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
இந்தியா ஹிந்தியா அல்ல ; எல்லா மொழிகளினுடைய சமத்துவத்தில் தான் இந்தியா நிற்கிறது. காசி தமிழ்ச் சங்கத்திற்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை , கல்விக்கு காசு கொடுங்கள் என்று கேட்டால் அது புரியாத உங்களுக்கு , எந்தத் தாய்மொழியின் அருமையும் புரியப் போவதில்லை. கல்வியின் அருமையும் புரியப் போவதில்லை.
கூட்டாட்சியின் மீதான தாக்குதல் தான் நவ பாசிசத்தினுடைய கூறு. நாங்கள் நீங்கள் கொடுத்த அறிக்கையில் இருந்து சொல்கிறோம். நிதி அயோக்கின் அறிக்கை வறுமை ஒழிப்புத் திட்டத்தில் முன்மாதிரியாக இருக்கிற முதல் மாநிலம் தமிழ்நாடு என்று சொல்கிறது. உங்களது பொருளாதார அறிக்கையில் மனிதவளத்தைப் பெருக்குவதில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு என்று சொல்கிறது. நீங்கள் கொடுத்திருக்கிற அறிக்கையில் டெக்ஸ்டைல் ஏற்றுமதியில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு என்று சொல்கிறது.
உயர்கல்வி துவங்கி பொது சுகாதாரம் வரை தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் நாங்கள் கொடுக்கிற 1 ரூபாய் வரிக்கு நீங்கள் திருப்பிக் கொடுப்பது வெறும் 29 பைசா மட்டுமே என்பது எவ்வளவு அவலமானது . ஆனால் பீகார் செலுத்துகிற 1 ரூபாய் வரிக்கு 7 ரூபாய் திருப்பிக் கொடுக்கிறீர்கள். உத்தரப் பிரதேசம் கொடுக்கிற 1 ரூபாய் வரிக்கு 1.75 ரூபாய் திருப்பிக் கொடுக்கிறீர்கள் . இப்படி திருப்பிக் கொடுக்கிற எங்கள் உரிமையைக் கேட்டால் , நீங்கள் எங்கள் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறீர்கள்.
நிதியில் , கல்வியில் , ஆட்சி நிர்வாகத்தில் என எல்லா முனைகளிலும் கூட்டாட்சியைத் தாக்குகிறீர்கள். மாநிலங்களைப் பட்டினி போட்டு பணிய வைக்கிறீர்கள். பட்டினி போட்டு பணிய வைக்கும் உங்களது அதிகாரத்திற்கு எதிராக நிமிர்ந்து நிற்பவர்களை நாகரிகமற்றவர்கள் என்று சொல்கிறீர்கள். நீங்கள் பயன்படுத்திய வார்த்தையை நீங்களே திரும்பப் பெறுகிறீர்கள் என்றால் , எவ்வளவு நாகரிகமற்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்தினீர்கள் என இப்போதாவது நீங்கள் உணர்கிறீர்களா என்று நாங்கள் கேட்கிறோம். நீங்கள் அந்த வார்த்தையைத் திரும்பப் பெற்ற பிறகும் தமிழ்நாட்டிலே இருக்கிற ஒரு ஒன்றிய அமைச்சர் உங்களது பேச்சை ஆதரிக்கிறார் என்றால் , இது தான் நாகரிகமா என்று நாங்கள் கேட்க நினைக்கிறோம்.
கல்வி அமைச்சகத்தின் கீழே வருகிற ஐஐடியின் இயக்குநர் மாட்டு மூத்திரம் குடிக்கச் சொல்கிறார் , அது நாகரிகமா எனக் கேட்க உங்களால் முடியவில்லை . கல்விக்குக் காசு கேட்டால் எங்களைப் பார்த்து நாகரிகமா என்று நீங்கள் எங்களைக் கேட்கிறீர்கள் .
அதேபோல இந்தியர்களைக் கைவிலங்கிட்டு அனுப்பி வைத்தது அமெரிக்கா. அதன் மீது கோபம் வரவில்லை. அதற்கு எதிராக கார்ட்டூன் போட்ட ஆனந்த விகடன் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்கிறீர்கள். இது நாகரிகமா என்று உங்களைப் பார்த்து நாங்கள் கேட்கிறோம்.
மூன்று வருடமாகப் பற்றி எரிகிறது மணிப்பூர். ஒருமுறை கூட பிரதமர் போகவில்லை. ஒருமுறை கூட போகாத பிரதமர் இருக்கிற ஒரு அவைக்கு மணிப்பூரின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறீர்களே ? இது நாகரிகமா என்ற கேள்வியை உங்களிடம் நாங்கள் கேட்க விரும்புகிறோம்.

இதே அவையில் 543 உறுப்பினர்கள் இருக்கிறோம். ஆனால் 848 இருக்கையை இந்த அவையிலே நீங்கள் அமைத்திருக்கிறீர்கள். உங்களது மறைமுக சதித்திட்டத்திற்காக தென் மாநிலங்களின் உரிமையை நசுக்க நினைக்கிற உங்களின் சதிக்கு எதிராக இன்றைக்குத் தமிழ்நாடும் , தமிழ்நாட்டின் முதலமைச்சரும் , தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் இன்றைக்கு ஓரணியில் நிற்கிறார்கள். தென்மாநிலங்களுக்கு நீங்கள் இழைக்கிற வஞ்சகத்திற்கு எதிராக இந்தியாவின் கூட்டாட்சியைக் காப்பதற்கு நாங்கள் உறுதி பூண்டிருக்கிறோம்.

அதேபோல இதே அவையில் நீங்கள் தாக்கல் செய்திருக்கிற இந்த நிதி நிலை அறிக்கையில் சிறு , குறு தொழில்களுக்கு மிக அதிகமான வட்டி. ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு மிக அதிகமான வரிவிலக்கு. உங்களது வரிக்கொள்கையை ஒரு வரியில் விளக்குவதற்கு இது ஒன்றே போதுமென்று நினைக்கிறேன். அதேபோல கடந்த மூன்று மாதமாக MNREGA திட்டத்திற்கு கொடுக்க வேண்டிய தொகையை ஒன்றிய அரசு விடுவிக்க மறுக்கிறது. எங்களது மதுரை மாவட்டத்தில் மட்டும் 121 கோடி ரூபாய் உழைத்த மக்களுக்கான கூலியை நிறுத்தி வைத்திருக்கிறார் பிரதமரும் , நிதி அமைச்சரும் என்ற குற்றச்சாட்டை இந்த அவையிலே நாங்கள் முன்வைக்க விரும்புகின்றோம்.
அதேபோல இன்றைக்கு மும்மொழிக் கொள்கையைக் கடைபிடித்தால் தான் தமிழ்நாட்டின் கல்வித் துறைக்குக் கொடுக்க வேண்டிய 2500 கோடியை விடுவிப்போம் என்று கல்வி அமைச்சர் சொல்கிறார். பட்டினி போட்டு பணிய வைக்க முடியும் என்று அதிகார வர்க்கம் நினைத்தால் , பட்டினி போட்டாலும் பணியாத தன்மானமும் , பகுத்தறிவும் கொண்ட தமிழ்சமூகம் உங்களுக்குப் பாடம் புகட்டும். கொடுப்பதால் மட்டுமே நீங்கள் உயர்ந்தவர்கள் , பெறுவதால் மட்டுமே நாங்கள் தாழ்ந்தவர்கள் அல்ல. அரசியல் சாசனத்தை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதை தமிழ்நாடு மீண்டும் மீண்டும் புரிய வைக்கும்.

Sunday, December 22, 2024

நல்லா மதிக்கிறீங்கடா அண்ணல் அம்பேத்கரை!

 


பில்லா ரங்கா இரிமினல் கூட்டாளிகளில் இளைய கூட்டாளி அமித்ஷா, அண்ணல் அம்பேத்கரை இழிவு படுத்தி பேசியதற்கு முட்டுக் கொடுக்கும் பெரிய கூட்டாளி மோடி, தாங்கள் அண்ணல் அம்பேத்கரை மிகவும் மதிப்பதாக கூவிக் கொண்டே இருக்கிறார்.

அவர்கள் மதிக்கிற லட்சணம் என்ன என்பதை மக்களவை சபாநாயகருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் எழுதிய கடிதம் அம்பலப் படுத்துகிறது.

இந்திய அரசியல் சாசனத்தின் 75 வது ஆண்டுக்காக வெளியிட்ட காலண்டரிலேயே அவர் படத்தை வெளியிடப் பிடிக்காத நீங்களா அவரை மதிக்கிறீர்கள்.

கடுப்படிக்கும் காமெடியை நிறுத்தவும் மோடி





இந்திய அரசமைப்பு சட்டத்தின் 75 ஆவது ஆண்டை கொண்டாடும் விதமாக மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள சிறப்பு காலண்டரில் காந்தி மற்றும் அம்பேத்கரின் படமோ பெயரோ இல்லை.
இது வரலாற்றைத் திரிக்கும் திட்டமிட்ட செயலாகும்.
இந்த காலண்டர்கள் திரும்பப்பெற வேண்டும்.
இந்த செயலுக்காக மக்களவை செயலகம் மன்னிப்பு கோர வேண்டும். இது குறித்து மக்களவை தலைவருக்கு நான் எழுதியுள்ள கடிதம்…

மாண்புமிகு ஓம் பிர்லா
மக்களவை சபாநாயகர் அவர்கள்.
வணக்கம்.
நேற்றைய தினம் மக்களவை செயலகத்திலிருந்து 2025 ஆம் ஆண்டுக்கான மாதாந்திர நாட்காட்டி உங்களின் கடிதத்துடன் எங்களுக்கு அனுப்பிவைக்கப் பட்டது.
இந்திய அரசமைப்பு சட்டத்தின் 75 ஆவது ஆண்டை கொண்டாடுவதன் வெளிப்பாடாகவும், அரசியல் சட்டத்தின் வரலாற்றுப் பயணத்தை நினைவு கூறும் விதமாகவும் இந்த மாதாந்திர நாட்காட்டி உருவாக்கப்பட்டுள்ளதாக நீங்கள் எழுதியுள்ளீர்கள்.
ஆனால் நீங்கள் அனுப்பிவைத்துள்ள மாதாந்திர நாட்காட்டி பெரும் அதிர்ச்சியை தருவதாக உள்ளது.
இந்திய அரசியல் சட்ட வரலாற்றுப் பயணத்தை நினைவு கூறும் இந்த நாட்காட்டியில் தேசத்தந்தை அண்ணல் காந்தியாரின் படமோ, அரசியல் சட்ட வரைவுக்குழுவின் தலைவர் அண்ணல் அம்பேத்கரின் படமோ இல்லை.
இந்த இருபெரும் ஆளுமைகளின் பங்களிப்பை மறைக்க ஒவ்வொரு நாளும் ஒன்றிய அரசு முயற்சி செய்து வருகிறது.
நாடாளுமன்ற கட்டிடத்தின் முன்புறமிருந்த அண்ணல் காந்தியார், அண்ணல் அம்பேத்கர் இருவரின் சிலையையும் அகற்றி நாடாளுமன்ற கட்டிடத்தின் பின் புறம் கொண்டுபோய் வைத்துள்ளீர்கள்.
இப்பொழுது இந்திய அரசியல் சட்டத்தின் 75 ஆவது ஆண்டை கொண்டாடுவதன் அடையாளமாக சிறப்பு மாதாந்திர நாட்காட்டியை வெளியிட்டு அதில் இரு பெரும்
தலைவர்களின் படங்களோ, பெயர்களோ இல்லாமல் அச்சிட்டுள்ளீர்கள்.
இந்த காலெண்டரில் அரசியல் சாசனத்தை வரைந்த ஓவியர்கள், கையெழுத்து பிரதியாளர்கள் படங்களும் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. அவர்களின் பங்களிப்பு போற்றத்தக்கது, அங்கீகரிக்கப்பட வேண்டியது. ஆனால் அரசியல் சாசனத்தின் வரைவு குழு தலைவராக இருந்து பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே அதற்கு வடிவம் தந்த அண்ணல் அம்பேத்கரின் பெயர், படம் எப்படி விடுபட முடியும்?
இந்திய விடுதலைப் போராட்டத்தை ஓர் வெகுமக்கள் இயக்கமாக மாற்றிய தேசத்தந்தை காந்தியாரின் பெயரும் படமும் எப்படி விடுபட முடியும்? இது வரலாற்றை திரிக்கும் திட்டமிட்ட செயலாகும்; நவீன இந்தியாவை உருவாக்குவதில் இவ்விரு பேராளுமைகள் நல்கிய அரும் பங்களிப்பை அவமதிக்கும் செயலாகும்.
ஏற்கனவே அண்ணல் அம்பேத்கர் பற்றி மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் கோடானு கோடி மக்களின் மனதை புண்படுத்தி உள்ளது. தற்போது இந்த காலண்டர் மேலும் மக்கள் உணர்வுகளை ரணமாக்க கூடியதாகும் என அஞ்சுகிறேன். பெரும் காயத்தை மக்கள் மனதில் இது உருவாக்கும்.
உங்களின் இந்த செயல் இந்திய அரசியல் சாசன வரலாற்றின் உருவாக்கத்தை மேன்மைப் படுத்துவதாக இல்லை. மாறாக உங்களின் எண்ணம் அதற்கு நேர் எதிராக செயல் பட்டிருக்கிறது.
ஆகவே இந்த காலண்டரை திரும்பப்பெற்று தேசத்தந்தை காந்தியார், அண்ணல் அம்பேத்கர் ஆகிய இரு ஆளுமைகளுக்கும் உரிய இடம் தருகிற புதிய காலண்டரை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
சு. வெங்கடேசன் எம் பி.

Thursday, December 19, 2024

சைக்கிள் சாரங்கியா? அப்ப சரி, அப்ப சரி

 


இன்று மக்களவையில் தள்ளு முள்ளு நடந்துள்ளது.

 ராகுல் காந்தி ஒரு காங்கிரஸ் எம்.பி யை தன் மேல் தள்ளி விட்டதால் கீழே விழுந்து மண்டை உடைந்துள்ளதாக ஒரு பாஜக எம்.பி ஐ.சி.யுவில் படுத்துக் கொண்டுள்ளதாக மத்யமர் ஆட்டுக்காரன் குழுவே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அநேகமாக ராகுல் காந்தியை கைது செய்யலாம். அதை வைத்து எம்.பி பதவியிலிருந்து நீக்கும் முயற்சியைக் கூட மோடி செய்யலாம்.

 யாரந்த எம்.பி என்று பார்த்தால் அது சைக்கிள் சாரங்கியாம்.

 யார் அந்த சைக்கிள் சாரங்கி?

 ஐந்து வருடத்திற்கு முன்பு எழுதிய பதிவு கீழே . . .

 

மோடி சைக்கிளில் மறைத்த ரத்தக்கறை





மூங்கில் குடிசையில் வசிக்கும் ஏழை,
சைக்கிளில் மட்டுமே பயணிக்கும் எளிய வேட்பாளர்,
ஒடிஷாவின் மோடி

இப்படியெல்லாம் காவிகளால் சமூக ஊடகங்களில் வர்ணிக்கப்பட்டவர் பிரதாப் சந்திர சாரங்கி.

ஒரு சாதாரண கதர் ஜிப்பா அணிந்த இந்த தாடி வைத்த மனிதர் நேற்று மோடியின் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

ஒரு எளிய மனிதரை அமைச்சராக்கி அழகு பார்த்துள்ளார் மோடி என்று சங்கிகளின் பெருமிதத்திற்கு அளவே இல்லை.

ஆனால்  அந்த எளிமைக்குப் பின்னே ஒளிந்திருப்பது மோசமான ஒரு மனிதர், மத வெறி பிடித்த ஒரு மிருகம் என்பதை பி.பி.சி அம்பலப்படுத்தி உள்ளது.

கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் நினைவில் உள்ளாரா?

அவரும் அவரது இரண்டு மகன்களும்  எரித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் நினைவில் உள்ளதா? பஜ்ரங் தள் என்ற ஆர்.எஸ்.எஸ் ஸின் அடியாள் பிரிவுதான் அந்த அராஜகக் கொலைகளை நிகழ்த்தியது என்பதும் நினைவில் உள்ளதா?

இந்தியாவை உலக அரங்கில் தலை குனிய வைத்த அந்த கொடூரக் கொலையை நிகழ்த்திய பஜ்ரங் தள் அமைப்பின் அன்றைய ஒரிஸா மாநிலத் தலைவராகவும் நேரடியாக அக்கொலையைச் செய்த தாராசிங்கின் வழிகாட்டியுமாக இருந்ததும் யார் தெரியுமா?

இதோ இப்போது
சைக்கிளில் பயணிக்கும் எளியவராகச் சொல்லப்படுகிற
மோடியின் புதிய மந்திரி
பிரதாப் சந்திர சாரங்கிதான்.

அந்த வழக்கில் முதன்மைக் குற்றவாளிகளில் ஒருவராக சேர்க்கப்பட்டதால் தலை மறைவாக இருந்தவர் அவர்.

அது மட்டுமல்ல, 2001 ல் ஒடிஷா மாநில சட்டப் பேரவையை தாக்கிய கலவர வழக்கிலும் பிரதான குற்றவாளி இந்த மனிதர்தான்.

சமூக ஊடகங்களால் ஒரு குற்றவாளியை ஒரு குற்றவாளியை புனிதன் போல சித்தரிக்க முடியும் என்பதற்கான சிறந்த உதாரணம் இந்த சாரங்கி.

வெடிகுண்டு சாமியாருக்கு மந்திரி பதவி கொடுக்கவில்லை என்று காலையில் மோடிக்கு நன்றி சொல்லியிருந்தேன். இப்போதுதான் தெரிகிறது சீனியாரிட்டி அடிப்படையில் சாமியாருக்குப் பதிலாக சாரங்கிக்கு கொடுத்திருக்கிறார் என்று.

ஆக மிகப் பெரிய கிரிமினல் மூலம் மோடியின் புது நாடகம் அரங்கேறியுள்ளது. அண்ணல் அம்பேத்கரை இழிவு படுத்திய அமித்ஷாவை பாதுகாக்க நடத்திய திசை திருப்பும் நாடகம். அமித்ஷாவை பாதுகாப்பது மோடியின் கடமை அல்லவா! மோடிக்காக இளம் பெண் பொறியாளரை உளவு பார்த்த உத்தமனல்லவா!

 


பிகு: ஆமாம், எந்த மருத்துவமனையில் ஐ.சி.யு வில் ஒரு நோயாளியை எந்த மானிட்டர் இணைப்போ, குளுக்கோஸ் கூட ஏற்றாமல், தொலைக்காட்சி கேமராக்கள் புடை சூழ மந்திரிகள் வருவதை அனுமதிக்கிறார்கள். போடும் நாடகத்தையாவது ஒழுங்கா போடுங்கடா . . .

 

 

Wednesday, December 18, 2024

ஆளில்லா கடையில், வாய்ப்பில்லா மசோதாவை மோடி???

 


அரசியல் சாசனத்தை திருத்த மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும் என்பதும் அப்படி நிறைவேற்ற வாய்ப்பில்லை என்பதும்  தெரிந்தும் ஏனய்யா மோடி, "ஒரே நாடு, ஒரே தேர்தல் " மசோதாவை கொண்டு வந்தீர்? 

உங்க ஆட்களிலேயே எத்தனை பேர் ஓடிப் போவார்கள் என்பதை அறிந்து கொள்ளவா?

பிகு: இது ஒற்றை மீமோடு முடிக்கிற விஷயமில்லை. விரிவான பதிவு விரைவில் . . .

Tuesday, December 17, 2024

எடப்பாடி க்யாரே டீலிங்கா?

 


சி.ஏ.ஏ சட்டத்தை ஆதரித்து இஸ்லாமியர்களுக்கு துரோகம் இழைத்த அதிமுக, ஒரு நாடு, ஒரே தேர்தல் மசோதாவை ஆதரித்து இந்திய ஜனநாயகத்திற்கே துரோகம் இழைத்துள்ளது.

என்ன எடப்பாடி ரெண்டு நாள் முன்னாடி பொதுக்குழுவில பாஜகவை தாக்கினீங்களாம், அதெல்லாம் செட்டப்பா?

இந்த கேவலமான வேலைக்கு என்ன டீலிங் போட்டிருக்கீங்க?

யானை மாலை போட்டு பிச்சைக்காரன் ராஜாவானது மாதிரி தவழ்ந்து போய் முதலமைச்சரான உங்க கிட்ட எல்லாம் அரசியல் நாணயம் எல்லாம் எதிர்பார்க்க முடியுமா?

நீங்களும் ஒரு அமைதிப்படை அமாவாசைதானே!

Wednesday, December 11, 2024

துணை ஜனாதிபதிக்கு வெ.மா.ரோ.சூ.சொ இருந்தால்?

 


இந்திய ஜனநாயகத்தின் துரதிர்ஷ்டம் மோடி பிரதமராக இருப்பது மட்டுமல்ல. ரௌடி கவர்னராக இருந்த ஜகதீப் தன்கர்  இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருப்பதும் கூடத்தான்.

அவரை துணை ஜனாதிபதி பதவியிலிருந்தும் மாநிலங்களவை தலைவர் பொறுப்பிலிருந்தும் நீக்க வேண்டும் என இந்தியா கூட்டணி எம்.பி க்கள் மாநிலங்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தீக்கதிர் செய்தியில் முழுமையாக உள்ளது.

ஜகதீப் தன்கர்  வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை உள்ள மனிதராக இருந்தால் பதவியிலிருந்து ராஜினாமா செய்திடுவார்.

ஆனால் சங்கிகளுக்குத்தான் அப்படிப்பட்ட எதுவும் கிடையாதே! அதனால் பதவியில் ஒட்டிக் கொண்டுதான் இருப்பார்.

 

ஜகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் தாக்கல்

 

புதுதில்லி, டிச. 10 - நாடாளுமன்ற மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கருக்கு எதி ராக, அரசியலமைப்புப் பிரிவு 67(பி)-ன் கீழ், இந்தியா கூட்டணி கட்சி கள் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்துள்ளன. 

அதானி முறைகேடு குறித்த விவா தத்திற்கும், எதிர்க்கட்சிகள் அளிக் கும் நோட்டீஸ்களுக்கும் மாநிலங் களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் தொடர்ந்து அனுமதி மறுத்து வரு கிறார். அதேவேளையில், அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ்  சோரசுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறி, அதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி.க்கள் அளித்த நோட்டீஸ்களுக்கு வேகவேகமாக அனுமதி அளித்துள்ளார். 

இவ்வாறு, மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதால், அவர் அவைத் தலைவராக நீடிக்கத் தகுதியில்லை என்று கூறி எதிர்க் கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளன.

இதில், காங்கிரஸ், திமுக, ராஷ்டி ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் 60-க்கும் மேற்பட்டவர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீ சை தாக்கல் செய்துள்ளனர்.

 

அதானி ஊழலை மூடிமறைக்க முயற்சி

இந்தியாவில் ‘அதானி கிரீன் எனர்ஜி’ நிறுவனம் விநியோகித்த சூரிய  மின்சக்தியை வாங்க பல் வேறு மாநில மின்பகிர்மான நிறுவன அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர் (சுமார் 2,039 கோடி ரூபாய்) லஞ்சம் அளிக்கப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதேபோல அமெரிக்க முதலீட்டாளர்களிடம் அதானி ரூ. 6,300 கோடி மோசடி செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனவே, இந்த விவகாரத்தில் அதானியைக் கைது செய்யவும், நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளவும் நட வடிக்கை எடுக்க வேண்டும், ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் மணிப்பூர் மாநில வன்முறை மற்றும் சம்பல் பகுதி மசூதி விவகாரத்தில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

ஆனால், மோடி அரசு அதனை ஏற்பதாக இல்லை. நாடாளுமன்றமே முடங்கினாலும், அதானிக்கு எதிராகஎந்த நடவடிக்கையும் எடுக்கமாட் டோம் என்று பிடிவாதமாகஉள்ளது.

11 நாட்களாக தொடரும் போராட்டம்

இந்நிலையில், செவ்வாயன்று (டிச.10) பதினொன்றாவது நாளாக நாடாளுமன்றம் கூடியது. அப்போது இரு அவைகளிலும் அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு அதானி உள்ளிட்ட விவகாரங்களை விவா திக்க வேண்டுமென எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்தனர். 

ஆனால், எதிர்க்கட்சி எம்.பி.க் களின் நோட்டீஸ்கள் எதையுமே ஏற்க  முடியாது என்று அவைகளின் தலை வர்கள் தள்ளுபடி செய்தனர்.

இதனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் முழக்கங் களை எழுப்பவே, பகல் 12 மணி வரையும், பின்னர் நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப் பட்டன. இதனால் 11-ஆவது நாளாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கின.

இதனிடையே தான், மாநிலங் ளவைத் தலைவர் ஜகதீப் தன்கருக்கு எதிராக, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸ்களை அளித்துள்ளனர்.

 

பாரபட்சமான நடவடிக்கைகள்

மாநிலங்களவைத் தலைவராக இருக்கும் ஒருவர் யாருக்கும் ஆதர வாக இருக்கக்கூடாது என்ற போதி லும் தன்கர் எப்போதும் ஆளும் கட்சி எம்.பி.க்களுக்கு சாதகமாக இருப்பதுடன், அவர்களுடன் சேர்ந்து எதிர்க்கட்சியினரை குற்றம் சாட்டு வதை வாடிக்கையாக வைத்துள் ளார் என்பது நீண்டகால குற்றச் சாட்டாகும். எதிர்க்கட்சி எம்.பி,க்கள் பேசும்போது வேண்டுமென்றே குறுக்கீடு செய்வது; தடுத்து நிறுத்து வது, போதிய நேரம் வழங்காதது, என்று ஜகதீப் தன்கரின் பேச்சுக் கள், நடவடிக்கைகள் எதேச்சதிகார மாகவும் அராஜகமான முறையிலும் உள்ளன என்று ஏற்கெனவே புகார்கள் உள்ளன. 

 

மாநிலங்களவை விதிகளையும் மீறுகிறார்

எதிர்க்கட்சித் தலைவர் பேச எழுந்திருக்கும் போது அவரை பேச  அனுமதிக்க வேண்டும் என்பது மாநி லங்களவையின் விதியாகும். ஆனால், காங்கிரஸ் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மல்லி கார்ஜூன கார்கே பேசுவதற்கு அனுமதி மறுப்பதுடன், வேண்டு மென்றே அவரது ஒலிவாங்கி அணைக்கப்படுகிறது. இதுதவிர, ஒரு எம்.பி. தனது பேச்சில் மற்ற வர்கள் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டுக் கள் கூறக்கூடாது என்று மாநிலங்கள வையின் விதி 238(2) தெளிவுபடுத்து கிறது. இந்த விதி மாநிலங்களவை யின் தலைவருக்குமே பொருந்தக் கூடியது தான். ஆனால், மாநிலங் களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், சில எம்.பி.க்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் கருத்துகளைக் கூறுவதாக கூறப்படுகிறது.

பல்வேறு பிரச்சனைகள் தொடர் பாக எதிர்க்கட்சிகள் அளிக்கும் நோட்டீஸ்களில் ஒன்றைக்கூட விவாதத்திற்கு எடுக்க மறுப்பதுடன், அவற்றை மொத்தம் மொத்தமாக தள்ளுபடி செய்வதும், எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதுமாக உள்ளார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம்

அந்த வகையில் அதானியின் ஊழல் பற்றி விவாதத்திற்கு 11 நாட் களாக அனுமதி மறுத்துவரும் மாநி லங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், தற்போது அமெரிக்கத் தொழி லதிபர் ஜார்ஜ் சோரஸூக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் தொடர்பு இருப்ப தாக பாஜக உறுப்பினர்கள் அளித்த நோட்டீஸ்களை மட்டும் வேகமாக விவாதத்திற்கு எடுத்துள்ளார்.

எனவே தான், மாநிலங்களவைத் தலைவரின் பாரபட்சத்தைக் கண்டித்து, அவருக்கு எதிராக தற்போது நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸ்களை எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் அளித்துள்ளனர்.

 

மோடி - அதானி உருவம் பதித்த பைகளுடன் எம்.பி.க்கள் போராட்டம்!

அதானி, மணிப்பூர், சம்பல் விவ காரங்களை விவாதிக்க மறுக்கும் ஒன்றிய மோடி அரசின் பிடிவாதத்தை கண்டித்து, செவ்வாயன்று 6-ஆவது நாளாக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 நன்றி - தீக்கதிர் 11.12.2024