Showing posts with label அரசு நிர்வாகம். Show all posts
Showing posts with label அரசு நிர்வாகம். Show all posts

Monday, July 7, 2025

நெஹல் மோடி கைதாம். அடுத்து

 


பஞ்சாப் நேஷனல் வங்கியை 13500 கோடி ரூபாய் அளவில் ஏமாற்றிய வழக்கில் குஜராத்தின் நீரவ் கோடியின் கூட்டாளியும் அந்தாளின் ப்ன்று விட்ட சகோதரனுமான நெஹல் மோடியை அமெரிக்க போலீஸ் கைது செய்துள்ளது. 

அந்தாளை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப் போகிறார்களாம்.

விஜய் மல்லய்யா பல ஆண்டுகளாக இங்கிலாந்து சிறையில்தான் உள்ளான். (பொருளாதாரக்குற்றவாளிக்கு எதற்கு "ர்" மரியாதை? நான் என்ன புளிச்ச மாவு ஆஜானா? தோற்றுப் போன தொழில் முனைவர் என்று பரிதாபப்பட!)

அதே போலத்தான் இந்த மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளி நீரவ் மோடியும் இங்கிலாந்து ஜெயிலில்தான் உள்ளான். 

பிறகு நெஹல் மோடி மீது மட்டும் சட்டம் தனது கடமையை செய்யுமா?

இந்த நெஹல் மோடி இந்தியாவிலிருந்து வெளியே தப்பித்து வரும் போது 53 கோடி மதிப்பிலான வைரம், 150 பெட்டிகளில் முத்து, 50 கிலோ வைரம், 28 கோடி ஆஸ்திரேலிய டாலர் ஆகியவற்றை துபாய்க்கு எடுத்து வந்துள்ளான். எல்லா மட்டங்களிலும் லஞ்சம் விளையாடாமல் இது சாத்தியமில்லை. 

அதனால் நெஹல் மோடி இந்தியா வருவதும் சாத்தியமில்லை. 


Thursday, April 24, 2025

மரண தண்டனை கேட்பதன் மர்மம் என்ன?

 




மாலேகான் குண்டு வெடிப்பு நிகழ்த்தியவரும் பாஜக முன்னாள் எம்.பி யுமான போலிச்சாமியார் சாத்வி பிரஞ்யாசிங் தாகூருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று தேசிய புலனாய்வு முகமை (NIA)  நீதிமன்றத்திடம் கேட்டுள்ளது.

NIA ஒன்றும் சுயேட்சையான அமைப்பு இல்லை. மோடியின் ஏவல்படைகளில் ஒன்றுதான். 2017 ல் NIA தான் அந்த சாமியார் மீதான குற்றச்சாட்டுக்களை எல்லாம் நீர்த்துப் போக வைத்து பிணை கிடைக்க வழி வகுத்தது.

அதன் பின்புதான் மோடி அவருக்கு லோக்சபா டிக்கெட் கொடுத்து எம்.பி ஆக்கி அழகு பார்த்தார். 

இதுதான் இந்த அரசின் உண்மையாக முகம்.

இப்படி இருக்கையில் இந்த சாமியாருக்கு மரண தண்டனை தர வேண்டும் என்று  NIA வே கேட்பது நிஜமாகவே மர்மமாகத்தான் இருக்கிறது. இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. ஏதோ பிரச்சினையை மடை மாற்ற இப்படி செய்துள்ளது. அதுவும் பஹல்காம் தாக்குதல் நடந்த அன்று இந்த முடிவு என்பதால் அந்த ஐயம் வருகிறது.

பார்ப்போம். மோடி அம்பலமாகாமலா போகப் போகிறார்!

Saturday, March 1, 2025

அந்த கலெக்டரை மாத்திட்டீங்க, மத்தவங்களை ?????

 

நேற்று தமிழக அரசு எடுத்த மிக முக்கியமான முடிவு இது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை அங்கிருந்து மாற்ற காரணம் கீழே உள்ளது.


பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக பொறுப்பற்ற முறையில் பேசிய ஆட்சியரை பணி இடை நீக்கமே செய்திருக்க வேண்டும். சரி இது பரவாயில்லை.

ஆனால் இது போதுமா?

மாநில அரசு நிர்வாகத்தில் ஏராளமான காவி ஆடுகள் ஊடுறுவியுள்ளன. திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர், எஸ்,பி, சென்னை காவல்துறை அனுமதி கொடுத்த மாதர் சங்கப் பேரணிக்கு திண்டுக்கல் மாவட்டச் செயலாளரை செல்ல விடாமல் தடுத்து எம்.பி யின் காரையும் தடுத்த திண்டுக்கல் எஸ்.பி என பெரிய பட்டியலே உள்ளது.

அவர்களையும் களை எடுக்காவிட்டால் தமிழ்கத்தின் அமைதி வயல்களை அந்த காவியாடுகள் தின்று தீர்த்து விடும்.  

Wednesday, February 5, 2025

திருப்பரங்குன்றம் - பக்தி அல்ல, வெறுப்பரசியல்

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் முக நூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன். தமிழக அரசு மீண்டும் மீண்டும் சொதப்பிக் கொண்டிருக்கிறது. ஆட்சியின் செயலற்ற தன்மையை காண்பிக்கிறதா அல்லது காவிகள் ஆட்சிக்குள் ஊடுறுவியுள்ளதா என்பதை முதல்வர் கண்டறிய வேண்டியது உடனடி அவசியம்




திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி எழுப்பட்டுள்ள பிரச்சனை முருகப்பெருமான் சம்பந்தப்பட்டதோ, சிக்கந்தர் தர்ஹா சம்பந்தப்பட்டதோ அல்ல, முழுக்க முழுக்க பாஜக-வின் வெறுப்பு அரசியல் சம்பந்தப்பட்டது.

சு. வெங்கடேசன் எம் பி
திருப்பரங்குன்றம் மலையை வைத்து இந்துத்துவா கும்பல் தங்களின் மதவெறி நிகழ்ச்சி நிரலை அரங்கேற்ற கடுமையாக முயற்சி செய்து வருகின்றன. 90-களில் இராமகோபாலன் வகையறாக்கள் முயற்சி செய்து தோல்வியடைந்ததை இப்பொழுது ஹெச்.ராஜா, அண்ணாமலை வகையறாக்கள் கையிலெடுத்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை மீது இந்து அறநிலையத்துறைக்கான உரிமை என்ன, சிக்கந்தர் தர்காவுக்கான உரிமை என்ன என்பது குறித்து, பல ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்றங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தீர்ப்பு வழங்கி உறுதிப்படுத்தியுள்ளன.

திருப்பரங்குன்றத்து மக்களாலோ, அல்லது சம்பந்தப்பட்ட இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தாலோ அல்லது தர்கா நிர்வாகத்தாலோ உரிமை சம்பந்தமான பிரச்சனை எதுவும் இப்போது எழுப்பப் படவில்லை. பின்னர் பிரச்சனையை எழுப்புவது யார்? ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வின் அமைப்புகள்தான் ஒன்றாகவும் நன்றாகவும் இருக்கும் ஊரில் மதவெறியை கிளப்பிவிட்டு தங்களின் வாக்கு வங்கியை பலப்படுத்த இதுவொன்றே வழி என்று இறங்கியுள்ளன.

அயோத்தி துவங்கி சம்பல் வரை அரங்கேற்றிய நிகழ்ச்சி நிரலை இங்கும் அரங்கேற்ற முயல்கின்றனர். இவர்கள் தங்களின் நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றிய இந்த இடங்களில் எல்லாம் மாவட்ட நிர்வாகம் மற்றும் நீதிமன்றங்கள், இவர்களின் செயல்திட்ட நிறைவேற்றத்தின் பகுதியாக இருந்துள்ளன என்பது கசப்பான உண்மை.

திருப்பரங்குன்றத்திலும் அச்சு அசலாக அதே மாதிரியை இவர்களால் அரங்கேற்ற முடிகிறது என்றால் மாவட்ட நிர்வாகம் மொத்தமாக தோல்வி அடைந்துள்ளது என்பதே பொருள். திடீரென இந்த பிரச்சனை இவ்வளவு பெரிதாக மாறுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக, மாவட்ட நிர்வாகத்தின் அணுகுமுறை இருக்கிறது.

இங்கு வழிபாடு சார்ந்த உரிமை பிரச்சனை எழுப்பப்பட்டது என்று பொத்தாம் பொதுவாக சொல்கிறார்கள். இந்த பிரச்சனையை எழுப்பியது யார்? தர்காவில் கந்தூரி வழிபாட்டு உரிமையில் எந்த அடிப்படையில் காவல்துறை தலையிட்டது. காவல்துறைக்கு புகார் கொடுத்தது யார்? வருவாய் துறை எந்த அடிப்படையில் இதில் தலையிட்டது போன்ற கேள்விகளுக்கான பதில்கள் எல்லாம் இந்துத்துவா அமைப்பினரின் நுண் திட்டங்களுக்குள் பொதிந்து கிடக்கிறது.

திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம் என்று அவர்களாகவே கேள்வி எழுப்பி, போலி வாட்ஸ் அப் செய்திகளை உருவாக்கி, பொது சமூகத்தில் பரப்பியவர்கள் குறித்து துளி அளவாவது அக்கறை கொண்டு காவல்துறை தலையீடு செய்ததா? வெறுப்பு பிரச்சாரம் தங்கு தடையின்றி பரப்படும் போது ஒரு நடவடிக்கைகூட காவல்துறையிடமிருந்து இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஜனவரி 27 ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் திமுக, அதிமுக, காங்., சிபிஎம், சிபிஐ, தெமுதிக, விசிக, மநீமை, மமக, ஐயூஎம் எல் உள்ளிட்ட 12 கட்சிகளின் தலைவர்கள் திருப்பரங்குன்றம் மலையில் இது வரை இருந்து வந்துள்ள வழிபாட்டு மரபுகள் என்ன என்பதையும், அதில் தலையீடு செய்து பிரச்சனையை உருவாக்கி மக்கள் ஒற்றுமையை கெடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியருக்கும், காவல் ஆணையருக்கும் மனு அளித்துள்ளனர். மக்கள் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்பவர்களை தனிமை படுத்த கோரும் மிக முக்கிய நடவடிக்கை இது. அரசியல் கட்சிகள் மிகுந்த பொறுப்புணர்வோடு இந்த பணியை செய்தன.

இந்த கட்சிகளை சார்ந்தவர்கள் மட்டுந்தான், இதற்கு முன் இந்த ஊரில் இருந்தார்களா? மாவட்ட நிர்வாகமோ, காவல் துறையில் அயல்நாட்டிலிருந்து ஜனவரி மாதம் தான் திருப்பரங்குன்றத்தில் நுழைந்துள்ளார்களா? காலகாலமாக இருந்து வரும் வழிபாட்டு மரபுகள் பற்றி எதுவும் தெரியாதது போல, கட்சிகள் சொல்வதை எழுதி வாங்கி, நாங்கள் நீதிமன்றத்தில் தருகிறோம் என்று சொல்வது மட்டும்தான் மாவட்ட நிர்வாகத்தின் பணியா?

மதவெறியர்களை தனிமைப்படுத்த வேண்டிய ஒரு பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் மெத்தனமான அணுகுமுறையோடு செயல்பட்டு வருகிறது. 144 தடை உத்தரவு நிறைவேற்றப்பட்ட முறையும், நேற்று நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் வாதிட்ட முறையும் எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதவை. இதற்கு யார் பொறுப்பேற்பது என்பதை மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி எழுப்பட்டுள்ள பிரச்சனை முருகப்பெருமான் சம்பந்தப்பட்டதோ, மலை சம்பந்தப்பட்டதோ, சிக்கந்தர் தர்ஹா சம்பந்தப்பட்டதோ அல்ல, முழுக்க முழுக்க பாஜக-வின் வெறுப்பு அரசியல் சம்பந்தப்பட்டது.

அக்கட்சியின் தலைவர் ஹெச்.ராஜா, திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாற வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் என்றும், அயோத்தி போல முதல் யுத்தம் திருப்பரங்குன்றத்தில் துவங்கிவிட்டது என்றும் பழங்காநத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விஷம் கக்கியுள்ளார்.

எந்த அயோத்தியை தங்கள் அரசியலின் அடிப்படையாக்கினார்களோ அதே அயோத்தியில் இந்த மக்களவை தேர்தலில் தோற்கடித்து விரட்டப்பட்டார்கள்.

மதவெறியை தனிமை படுத்தும் ஆன்மீக பலமும், பாசிசத்தை எதிர்கொண்டு வீழ்த்தும் மதச்சார்பற்ற அரசியலின் தனித்துவமிக்க பலமும் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. ஹெச் ராஜாவின் மதவெறி கணக்குகளை தவிடுபொடியாக்கும் வலிமை குன்றத்திற்கு உண்டு
.
தீய நோக்கங்களுக்காக இறைவனின் பெயரை பயன்படுத்துபவனே ஆன்மீகத்தின் முதல் எதிரி என்பதை நன்கு அறிந்த திருப்பரங்குன்றத்து மக்களும், தமிழகத்து மக்களும் பாஜக-வின் வெறுப்பு அரசியலை முறியடித்து காட்டுவார்கள்.

Sunday, January 19, 2025

வரலாற்றை மோடி வகையறாக்கள் மறந்ததால் . . .

 


இன்று இன்சூரன்ஸ் தேசியமய நாள். 1956 ல் இதே நாளில்தான் ஒரு அவசரச் சட்டம் மூலமாக ஆயுள் இன்சூரன்ஸ் வணிகத்தை அன்றைய நேரு அரசு தேசியமயமாக்கியது. நிதியமைச்சர் சி.டி.தேஷ்முக் வானொலியில் அந்த முடிவுக்கான காரணங்களை விளக்குகிறார்.

தனியார் கம்பெனிகளின் மோசடிகள் காரணமான சூறையாடப்பட்ட பாலிசிதாரர்களின் நலனை பாதுகாப்பது என்பதுதான் முக்கியக் காரணம். வணிகர்கள் நாற்பது விதமான மோசடிகளை செய்வார் என்று சாணக்கியர் அர்த்தசாஸ்திரத்தில் சொல்லியுள்ளார். அதற்கும் மேல் எண்ணற்ற மோசடிகளை செய்தவர்கள் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் என்று ஃபெரோஸ் காந்தி நாடாளுமன்றத்தில் பதிவு செய்கிறார்.

ஆயுள் இன்சூரன்ஸ் தேசியமயம் எல்.ஐ.சி எனும் மகத்தான நிறுவனத்தை உருவாக்கியது. ஐந்து கோடி ரூபாய் மூலதனத்துடன் உருவாக்கப்பட்ட எல்.ஐ.சி யின் சொத்து மதிப்பு  இப்போது 52 லட்சம் கோடி ரூபாயை கடந்து விட்டது. இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு எல்.ஐ.சி என்பதற்கு மேல் வேறென்ன எழுத வேண்டும்!

இருபதாண்டுகளுக்கு முன்பு வாஜ்பாய் அரசால் இன்சூரன்ஸ் துறை தனியாருக்கு திறந்து விடப்பட்டது. 23 கம்பெனிகள் இப்போது செயல்பட்ட போதும் அவர்களால் எல்.ஐ.சி யின் முதன்மைத்தன்மையை அசைக்க முடியவில்லை. கிட்டே நெருங்கவும் முடியவில்லை.

கார்ப்பரேட்டுகளுக்கு சேவை புரியவே பிறந்திருக்கும் மோடியால் இதனை சகித்துக் கொள்ள முடியுமா?

பட்ஜெட் கூட்டத்தொடரில் சில மாற்றங்களை கொண்டு வர உத்தேசித்துள்ளது. தனியார் கம்பெனிகளுக்கு வளர்ச்சி ஆணையமாகவும் எல்.ஐ.சி க்கு மட்டும் கட்டுப்பாடு ஆணையமாகவும் செயல்படுகிற INSURANCE REGULATORY AND DEVELOPMENT AUTHORITY சில விபரீத பரிந்துரைகளை கொடுத்துள்ளது.

அன்னிய நேரடி முதலீட்டை 100 % ஆக உயர்த்துவது.

இதன் மூலம் இந்நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் பாலிசிதாரர் பணம் அன்னிய நாடுகளுக்கு பறந்து விடும். ஏமாற்றி விட்டு ஓடினால் நீங்கள் அங்கே போய்தான் வழக்கு நடத்த வேண்டும். மொத்தத்தில் இந்தியாவுக்கோ, இந்திய மக்களுக்கோ தம்படிக்கு பிரயோசனமில்லை.

இன்சூரன்ஸ் கம்பெனி துவக்க குறைந்த பட்சம் 100 கோடி ரூபாய் மூலதனம் முதலீடு செய்ய வேண்டும் என்பது ஒரு விதி. காப்பீடு எடுக்கப்படும் தொகையைப் போல ஒன்றரை மடங்கு கையிருப்பு  SOLVANCY MARGIN இருக்க வேண்டும் என்பது இன்னொரு விதி.

இந்த இரண்டு விதிகளையுமே தளர்த்தப் போகிறார்கள். அதன் மூலம் புற்றீசல் போல இன்சூரன்ஸ் கம்பெனிகள் மழையில் முளைக்கும் காளான் போல உதிக்கும். அன்றே இறக்கும் ஈசல் போல காணாமல் போகும். அவைகளை நம்பி முதலீடு செய்தவர்கள் கதி???????

எல்.ஐ.சி வணிகத்தின் அச்சாணி முகவர்கள்தான். ஐ.ஆர்.டி.ஏ கொண்டு வந்த ஒரு பைத்தியக்கார விதி காரணமாக பாலிசித்திட்டங்களை மாற்ற வேண்டிய கட்டாயம் வந்தது. அதனால் முகவர்களின் வாழ்வாதாரத்திலும் பெரிய பாதிப்பு உருவாகியுள்ளது.

இந்த சூழலில் எல்.ஐ.சி முகவர்களை தனியார் கம்பெனிகள் ஆக்கிரமிக்கும் சதியை வேறு ஐ.ஆர்.டி.ஏ கொண்டுள்ளது. இன்சூரன்ஸ் துறையில் நெறிமுறையற்ற வணிகத்திற்கே இது இட்டுச் செல்லும்.

மொத்தத்தில் என்ன ஆகும்?

எப்படி 1956 ல் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளின் மோசடிகளால் மக்கள் பாதிக்கப்பட்டார்களோ, அதே போன்ற நிலை 2026 லேயே உருவாகும்.

"வரலாற்றை மறந்தால் அது இன்னும் வேகத்தோடு மீண்டும் நிகழும்" என்பார்கள்.

தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளின் மோசடிகளை மோடி வகையறாக்கள் மறந்து விட்டார்கள். அதனால் புதிய மோசடிகளுக்கு வாசலை திறந்து வைக்க முயல்கிறார்கள்.

ஆனால் நாங்கள் மறக்கவில்லை. எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மறக்கவில்லை. மக்களிடம் சென்று உண்மைகளைச் சொல்லி அவர்களின் கருத்துக்களை ஆயுதமாகக் கொண்டு போராடி வருகிறோம். 

"வலுவான எல்.ஐ.சி, வலிமையான இந்தியா" என்ற முழக்கத்தோடு களம் இறங்கியுள்ளோம்.

நிச்சயம் நாங்கள் எல்.ஐ.சி யையும் காப்போம், தேசத்தையும் காப்போம்.

Monday, November 18, 2024

உபியில் தொடரும் குழந்தை மரணங்கள்

 


மேலே உள்ளது உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு.

கோரக்பூர் மருத்துவமனை துயரத்தினை தொடர்ந்து இங்கேயும் மிகப் பெரிய மோசமான நிகழ்வு நடந்தது. 

கடந்த வெள்ளிக்கிழமையன்று அங்கே நடத்த தீ விபத்தில் புதிதாய் பிறந்த 11 குழந்தைகள் உட்பட 16 குழந்தைகள் இறந்து விட்டது. கிட்டத்தட்ட நாற்பது குழந்தைகள் தப்பித்து விட்டது. )இதில் ஒரு துயரக்கதை ஒன்றுண்டு. அது பற்றி தனியாக)

மருத்துவமனையின் பராமரிப்புப் பணிகள் நடந்து பல ஆண்டுகளாகி விட்டது விபத்துக்கு முக்கியக்காரணம். தீவிர சிகிச்சைப் பிரிவில் 16 குழந்தைகளுக்கு மட்டுமேயான வசதி உண்டு. ஆனால் அது போல நான்கு மடங்கு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் என்பதால் ஒரே இன்குபேட்டரில்  மூன்று, நான்கு குழந்தைகள் இருக்குமாம்.

உத்திரப் பிரதேசத்தில் பல்வேறு மருத்துவமனைகளை இதே மோசமான தரத்தில் வைத்துள்ளதுதான் மொட்டைச்சாமியாரின் சாதனை.

இத்தனை குழந்தைகள் இறந்த பின்பு அவர் அங்கே போனாரா?

ஜார்கண்டிலும் மகாராஷ்டிராவிலும் தேர்தல் பிரச்சாரம் செய்வதை விடவா இதெல்லாம் முக்கியம்!


Friday, November 15, 2024

புல்டோசர் அராஜகத்திற்கு தடை

 



 உச்ச நீதிமன்றம் உருப்படியானதொரு தீர்ப்பை அளித்துள்ளது.

 அரசு யாரையாவது குற்றவாளி என்று கருதி கைது செய்தால் அவருடைய வீட்டை புல்டோசர் கொண்டு இடிப்பது என்பது மொட்டைச்சாமியார் துவக்கி வைத்த அராஜகச் செயல். குற்றவாளியாகவே இருந்தாலும் அந்த குற்றவாளியின் வீட்டை இடிப்பது என்பதெல்லாம் சமஸ்கிருத பெயரில் மோடி கொண்டு வந்த மூன்று சட்டங்களில் கூட இல்லாத ஒன்று. அப்படி இடிக்கப்படும் வீடுகளில் பெரும்பாலானவை இஸ்லாமியர்களுடையது என்பதை தனியாக சொல்ல வேண்டுமா என்ன!

 மொட்டைச்சாமியார் உ.பி யில் செய்யும் அராஜகத்தை பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களும்  செய்யத் தொடங்கின.

 தங்கள் குற்றச்செயலை நியாயப்படுத்த அவை அனுமதி பெறாத கட்டுமானங்கள் என்று கட்டுக்கதை சொல்லத் தொடங்கின. அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் வரை அவை அனுமதி பெறாதவை என்று தெரியாதா அல்லது இடிப்பதற்கு முன்பு நோட்டீஸ்  தர மாட்டீர்களா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தாலும் அக்கேள்விகளை சங்கி அரசுகள் புறம் தள்ளினர்.

 இப்போது உச்ச நீதிமன்றம் புல்டோஸர் அராஜகத்திற்கு பிரேக் போட்டுள்ளது. எந்த ஒரு க்லட்டுமானத்தை இடிக்கும் முன்பும் சம்பந்தப்பட்டவர்களுக்கு 15 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் தரப்பு நியாயத்தை கேட்டு பரிசீலித்த பின்புதான் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

 மொட்டைச்சாமியார் வகையறாக்களின் முரட்டு அராஜகத்திற்கு உச்ச நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டுள்ளது நல்லது.

 இதனை சங்கி அரசுகள் மதிப்பார்களா இல்லை எச்.ராசா போல உச்ச நீதிமன்றமாவது ஹைகோர்ட்டாவது என்று அராஜகத்தை தொடர்வார்களா?

Wednesday, December 28, 2022

நல்லது. உறுதியாய் தொடரட்டும்

 



புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழ்ந்த இரண்டு தீண்டாமைக் கொடுமைகள் பற்றி நேற்று எழுதியிருந்தேன்.

அதிலே வேங்கை வயல் கிராமத்து கோயிலுக்கு தலித் மக்களை மாவட்ட ஆட்சியரே அழைத்துச் சென்றுள்ளார். சாமி வந்தது போன்ற போர்வையில் தலித் மக்களை இழிவாக பேசிய பூசாரியும் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை சிறப்பு. இன்னொரு பிரச்சினையிலும் குற்றவாளிகளை கைது செய்வார்கள் என்று நம்புவோம்.

இது போன்ற தீண்டாமைக் குற்றங்களில் அரசு எடுக்கிற உறுதியான நடவடிக்கைகள்தான் இனியொரு குற்றம் நிகழாமல் தடுக்கும். 

வழக்கறிஞர் தோழர் பிரதாபன் சொல்வது போல குற்றவாளிகளின் சொத்துக்களை பறித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கலாம்.

ஆனால் அது எந்த அளவு சாத்தியமென்று தெரியவில்லை. ஆண்ட பரம்பரை என்று பீற்றிக் கொண்டாலும் குற்றங்களை நிகழ்த்துபவர்களும் பாதிக்கப் பட்டவர்கள் போல அன்றாடங்காய்ச்சிகளே. வெட்டி ஜாதிப் பெருமைதான் அவர்களின் சொத்து. 

Tuesday, February 22, 2022

கிழிந்து தொங்குகிற இரண்டு முகமூடிகள்

 



 

*நாளொரு கேள்வி: 21.02.2022*

 

தொடர் எண்: *630*

 

இன்று நம்மோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் *கே.கனகராஜ்*

########################

 

*கிழிந்து தொங்குகிற இரண்டு முகமூடிகள்*

 

கேள்வி: உலகமயம் வேலைகளை உருவாக்கும் என்று சொல்லப்பட்டது. அதை தீவிரமாக பின்பற்றும் மோடி காலத்து வேலை உருவாக்கம், வாக்குறுதிகள் நிலைமை என்ன

 

*கே.கனகராஜ்:*

 

2014ம் ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக நரேந்திர மோடி என்கிற புதிய முதலாளிகளின் பிரதிநிதியை ஆளும் வர்க்கம் முன்னிறுத்தியது. அவர்  மிகப் பிரம்மாண்டமான வாக்குறுதிகளை முன்வைத்தார். *ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை* என்பதை அவர் சொன்னது மட்டுமின்றி முதலாளித்துவ ஊடகங்கள் அவர் கையில் அதற்கான *மந்திரகோல்* இருப்பது போன்று ஊதிப் பெரிதாக்கின. இடதுசாரிகள் அப்போது உலகம் முழுவதும் இருந்த அனுபவத்தை கணக்கில் கொண்டு *தாராளமயம் வேலைவாய்ப்பற்ற வளர்ச்சியையே* உருவாக்கும். இதனால் ஏற்கனவே உள்ள  வேலைவாய்ப்புகளும் நீடித்து நிற்க முடியாது என்று உறுதிபட கூறினர். இதற்காக அவர்கள் எள்ளி நகையாடப்பட்டார்கள்.

 

இப்போது பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் தலைவராக உள்ள *பிபேக் தேப்ராய்* வேலைவாய்ப்பற்ற வளர்ச்சியாகத்தானே இருக்கிறதுஎன்று கேள்வி எழுப்பினால் வளர்ச்சியற்ற வேலைவாய்ப்புகள் உருவாகுமா? என்று *எதிர்க்கேள்வி* கேட்கிறார். ஆண்டுக்கு 2 கோடிபேருக்கு வேலை என்று சொன்னவர்கள் தற்போது அடுத்த *ஐந்தாண்டுகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை* உருவாக்குவதற்கான முறையில்தான் திட்டங்கள் அமைந்திருப்பதாக இந்த பட்ஜெட்டில் கூறுகிறார்கள்.

 

சமீபத்தில் வடக்கு ரயில்வேயில் 35 ஆயிரம் பணியிடங்களுக்கு 1.25 கோடி பேர் விண்ணப்பித்திருந்தார்கள். ஆரம்பத்தில் மோடி *ஸ்வட்ச் பாரத், ஸ்மார்ட் சிட்டி, ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா* ஆகியவற்றின் மூலம் மிகப் பெரிய வேலைவாய்ப்புகளை உருவாக்கப்போவதாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தார். ஆனால் கடந்த 40 ஆண்டுகளில் தற்போது தான் வேலையின்மை விகிதம் உச்சத்தில் இருக்கிறது. *2011-12ல் இருந்ததை விட மூன்று மடங்கு அதிகமாக வேலையின்மை* உயர்ந்துள்ளது. 2021 டிசம்பர் கணக்கு படி *சுமார் 5.25 கோடி பேர் வேலையில்லாத இளைஞர்கள் இந்தியாவில்* இருக்கிறார்கள். இவர்களில் 3.50 கோடி பேர் ஏதாவது வேலை கிடைக்காதா? என்று தொடர்ச்சியாக வேலை தேடிக் கொண்டே இருக்கிறார்கள். மீதமுள்ள 2 கோடி பேர் இனி வேலை கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்று நம்பிக்கையிழந்து அந்த முயற்சியை கைவிட்டு விட்டார்கள்

 

2014 இல் தந்த 10 கோடி வேலை வாய்ப்பு வாக்குறுதி சந்தித்த அவலம் இதுதான்

 

உண்மை என்னவென்றால், *2016-17ல் 5.1 கோடி பேர் உற்பத்தி துறையில்* பணியாற்றிக் கொண்டிருந்தனர். 2022ம் ஆண்டை நெருங்குகிற போது இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட *46.5 சதவிகிதம் குறைந்து 2.73 கோடி பேர் மட்டுமே வேலை* பார்க்கிறார்கள். மோடி சொன்னது போல உற்பத்தி துறையில் வேலைவாய்ப்புகள் 5 கோடியிலிருந்து 10 கோடி என்று இரண்டு மடங்காக உயர்வதற்கு பதிலாக 5 கோடியிலிருந்து 2.73 கோடியாக குறைந்து விட்டது. ஒவ்வொரு துறையிலும் இதுதான் நிலைமை. *ரியல் எஸ்டேட், கட்டுமானம், சுரங்கம், ஊடகம், பதிப்புத்துறை, பொதுநிர்வாகம் என்று அனைத்திலும் 2016-17ல் இருந்ததை விட 2020-21ல் வேலைவாய்ப்புகள் அகலபாதாளத்திற்கு* சரிந்து விட்டன. 2021-22 கணக்கைச் சொன்னால் கொரோனா பாதிப்பை கணக்கில் எடுக்காமல் சொன்னதாக சங்பரிவார் ஆதரவாளர்கள் ஊளையிடக் கூடும்.

 

எனவே, தான் 2021 மார்ச் வரையிலான கணக்கு இங்கே முன்வைக்கப்படுகிறது. *ஊடகம் மற்றும் பதிப்புத்துறையில் 10.43 லட்சமாக இருந்த வேலைவாய்ப்புகள் 2.92 லட்சமாக குறைந்து விட்டதாக* தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது, ஏறத்தாழ 72 சதவிகிதம் வேலைவாய்ப்புகள் பறிபோய் விட்டன. அதாவது, 2016-17ல் ஊடகம் மற்றும் பதிப்புத்துறையில் 100 பேர் வேலை செய்தார்கள் என்றால் இப்போது வெறும் 28 பேர் மட்டுமே வேலை செய்கிறார்கள். ஒட்டுமொத்தமாக 2016-17ல் அனைத்து துறைகளும் சேர்ந்து 40.7 கோடி பேர் பணியிலிருந்தார்கள். ஆனால், 2020-21ல் இந்த எண்ணிக்கை 37.8 சதவிகிதமாக சரிந்து விட்டது. மோடி சொன்னது போல நடந்திருந்தால் 2020-21ல் ஒட்டுமொத்த வேலைவாய்ப்புகள் 50 கோடியை தாண்டியிருக்க வேண்டும். மாறாக, உள்ளதும் போச்சு என்று சொல்லும் வகையில் 7.13 கோடி வேலைவாய்ப்புகள் இந்த காலத்தில் இல்லாமல் போய்விட்டன.

 

*எல்லையில் வீரர்கள்* என்று சங்பரிவார் கும்பல் எப்போதும் உண்மையான பிரச்சனையை மடைமாற்றம் செய்வதற்காக கூக்குரலிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் *பாதுகாப்புத்துறையில் 1.90 கோடி பேர் பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில் தற்போது வெறும் 71 லட்சம் பேர் மட்டுமே* பணியிலிருக்கிறார்கள். இப்படி ஒட்டுமொத்தமாக அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் மிகக்கடுமையாக குறைந்திருக்கிறது. இப்போது மோடியின் கையில்மந்திரகோல்ஏதுமில்லை என்பது தெளிவாகியிருக்கும். *வேலைவாய்ப்பு தனி மனிதனின் திறமையினால் மட்டும் உருவாக்கப்பட்டு விடுவது அல்ல.* ஒரு அரசு கடைபிடிக்கும் கொள்கைகளால் உருவாக்கப்படுவது தான். அரசே அனைவருக்கும் வேலைகள் கொடுத்து விட முடியும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால், *அரசின் கொள்கைகள் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்* என்பது தான் இதன் அடிப்படையான அம்சம்.

 

நவீன தாராளமயக் கொள்கை வளர்ச்சி என்று வேடமிட்டு வந்தாலும் அடிப்படையில் அது லாபத்தை அதிகரிப்பதற்கான நோக்கத்தோடு தான் வருகிறது. *லாப அதிகரிப்பு மிக முக்கியமான அம்சமாக இருப்பது தொழிலாளர்களுடைய ஊதியத்தை குறைப்பதும், பணி நேரத்தை அதிகப்படுத்தவும், அவர்களுக்கான சலுகைகள் மற்றும் உரிமைகளை வெட்டிச் சுருக்குவதாகும்.* சிக்கன நடவடிக்கை, வயிற்றை இறுக்கிக் கட்டிக் கொள்ளுங்கள், நாடு வளர வேண்டுமென்றால் நாம் கொஞ்சம் துயரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நவீன தாராளமயத்தை, உலகமயத்தை ஆதரிக்கும் எல்லோரும் ஏழை, எளிய மக்களுக்கும், உழைப்பாளிகளுக்கும் உபதேசம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், *எப்போது சிக்கனத்தை கைவிட முடியும்?, எப்போது இறுக்கி கட்டிய வயிறை சற்று நெகிழ்வாக்கிக் கொள்ள முடியும்?, நாடு வளர ஏற்றுக் கொண்ட துயரம் எப்போது குறையும்?. நாடு எப்போது நிறைவான வளர்ச்சி பெறும்? என்பதை பற்றி எவரும் எழுதுவதில்லை.*

 

தேசத்தின் பொருளாதாரம் கீழ்நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. வேலை வாய்ப்புகள் ஏற்கனவே இருந்த நிலையை விட மிக கடுமையாக குறைந்திருக்கிறது. இத்தகைய அனுபவத்தில் இனிமேலும் நவீன தாராளமயக் கொள்கை என்னும் *வெள்ளை யானையை சுமந்து கொண்டு திரிய வேண்டுமா”?.*

 

உலகமே ஒரு திசையில் ஓடுகிற போது இடதுசாரிகள் மட்டும் மாற்றுக் கருத்தைச் சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என்று சிலர் அப்பாவித்தனமாகவும், சிலர் நரித்தனத்தோடும் பேசக் கூடும். ஆனால், இடதுசாரிகள் சொன்னது தான் இப்போது உண்மையாகி இருக்கிறது.

 

எனவே, இந்தியாவில் சமூகப் பொருளாதார யதார்த்தத்தை கணக்கில் கொள்ளாத *உலகமே ஒரு பக்கம் ஓடுகிறது என்கிற வாதமும், அதனால் நாமும் சேர்ந்து ஓட வேண்டும் என்கிற வாதமும் முட்டாள்தனமானது.*

 

*******************

*செவ்வானம்*