Monday, March 18, 2024

அசிங்கப்படுத்தாதீங்கய்யா - ஜேம்ஸ் பாண்ட்

 


கீழேயுள்ள மீமைப் பார்த்தால் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடித்தவர்கள் மனது என்ன கஷ்டப்படும்! பாவம் எனக்குப் பிடித்த சீன் கானரி, ரோஜர் மூர்  ஆகியோருக்காக வருத்தப்பட்டாலும்  000 எலக்டோரல் பாண்ட் என்பது மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.


 

மார்ட்டின் 868 கோடி கொடுத்தது யாருக்கு?

 


இன்று சங்கிகளின் ட்விட்டர் பக்கங்கள் அனைத்தும் மார்ட்டின் திமுகவிற்கு கொடுத்த  500 கோடி ரூபாய் பற்றியே கூறியிருந்தது.

ஆம், திமுக 500 கோடி ரூபாய் வாங்கியிருந்தது உண்மைதான். அது எதற்காக என்பதை அந்த கட்சிதான் விளக்க வேண்டும்.

நிற்க மார்ட்டினிடமிருந்து திமுக பணம் பெற்ற விஷயத்தை புலனாய்வுப் புலிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிற, நேர்மையின் பிம்பங்கள் என்று தங்களை கருதிக் கொண்டிருக்கிற சங்கிகள் யாரும் கண்டுபிடிக்கவில்லை. மாறாக தாங்கள் வாங்கிய தேர்தல் பத்திர விபரங்களை திமுக தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்திருந்தது. அதை வைத்துத்தான் சங்கிகள் ட்வீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே அதிக தொகைக்கு, அதாவது 1368 கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்கியது மார்ட்டின்தான்.

அதில் திமுகவிற்கு கிடைத்தது 500 கோடி ரூபாய் என்றால் மீதமுள்ள 868  கோடி ரூபாய் போனது யாருக்கு?

பாஜக ஏன் தாங்கள் வாங்கிய தேர்தல் பத்திரம் பற்றி வாய் திறக்கவேயில்லை?

மார்ட்டினிடம் நாங்கள் பத்து லட்ச ரூபாய் கூட (தேர்தல் பத்திரம் வாங்க குறைந்த பட்ச தொகை பத்து லட்ச ரூபாய்) வாங்கவில்லை என்று ஏன் பாஜகவால் சொல்ல முடியவில்லை.

அந்த 868 கோடி ரூபாய் அவர்களுக்குத்தான் சென்றதால்தான் பாஜக கள்ள மௌனம் சாதிக்கிறதா?

 

Sunday, March 17, 2024

1989 ராஜீவ் போல மோடி . . .

 


ஜி.கே.மூப்பனார் ஒரு ஞானசூனியம் என்று வாழப்பாடி ராமமூர்த்தி சொன்னது நினைவில் உள்ளதா?

ஆனந்த விகடனில் மதன் போட்ட ஒரு கார்ட்டூனில் தூங்கிக்கொண்டிருக்கும் ஒரு சிறுவனை அவனது அப்பா "யார் வந்திருக்காங்க பாரு!" என்று உறவினர் ஒருவர் வருகையை முன்னிட்டு எழுப்ப முயல்வார்.  அந்த சிறுவனோ "போப்பா! ராஜீவ் காந்திதானே!" என்று சொல்லி தூக்கத்தை தொடர்வான். இது நினைவில் உள்ளதா? 

மேலே உள்ள இரண்டு சம்பவங்களும் 1989 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பாக ராஜீவ் காந்தி பல முறை நடத்திய தமிழ்நாட்டு பயணங்களை ஒட்டி நிகழ்ந்தது.

கூட்டணி வைக்காமல் தோற்றுப் போனதற்காக வாழப்பாடி மூப்பனாரை ஞானசூனியம் என்று தாக்கி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியையும் பரிசாக பெற்றார்.

நினைத்த போதெல்லாம் தமிழ்நாட்டுக்கு வந்த ராஜீவ்காந்திக்கு மக்கள் தோல்வியைத்தான் பரிசாகக் கொடுத்தார்கள்.

அதை விட மோசமான படுதோல்வியை தமிழ்நாட்டு மக்கள் மோடிக்கு கொடுப்பார்கள். அவர் ஒவ்வொரு முறையும் தமிழகத்திற்கு வர, வர தோல்வியின் அளவுதான் அதிகரிக்கும். அதை புரிந்து கொள்ள முடியாத ஞானசூனியம்தான் ஆட்டுக்காரன் என்பதும் முக்கியமானது.


முத்தூட் விளம்பரம் இனி இப்படி????

 


முத்தூட் பைனான்ஸ் கம்பெனி ஏதோ மிகப் பெரிய கம்பெனி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவ்வளவு பெரிய கம்பெனி இல்லை போல, ஆமாம். வெறும் மூன்று கோடி ரூபாய்தான் தேர்தல் பத்திரம் வாங்கியுள்ளார்கள்.


ஆகவே இனி அக்கம்பெனியின் விளம்பரம் கீழே உள்ளது போல இனி வருமோ?



யானையை பிச்சையெடுக்க் வைப்பது போல ED

 


வலிமையான, கம்பீரமான, பிரம்மாண்ட உருவம் படைத்த யானைகளை எப்படி பிச்சையெடுக்க வைத்தார்களோ, 


அது போல, சுயேட்சையாக, நேர்மையாக செயல்பட வேண்டிய அமலாக்கப் பிரிவை தேர்தல் பத்திரங்களுக்காக பிச்சைக்காரர்கள் போல ரெய்ட் அனுப்பிய பெரிய பிச்சைக்காரர்கள் பாஜக ஆட்சியாளர்கள். 

ஏன் மோடி என்னென்னமோ கெட் அப் போட்டீங்க, கொள்ளைக்காரன் மாதிரியும் பிச்சைக்காரன் மாதிரியும் ஏன் கெட் அப் போடலை? அதுதானே உங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருந்திருக்கும்!


Saturday, March 16, 2024

5000 டாலர் கேட்டது தப்பாங்க?

 


போலி முகநூல் ஐ.டி களுடன் உரையாடுவது எனக்கு ஒரு பொழுது போக்கு. இரண்டு நாட்கள் முன்பாக எங்கள் தஞ்சைக் கோட்டச்சங்க மூத்த தலைவரும் என்னுடைய சின்ன மாமனாருமான தோழர் எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பெயரில் ஒரு நட்பழைப்பு வந்திருந்தது.

 அது போலிக் கணக்கு என்று தெரிந்தும் தோழர் எஸ்.ஆர்.கே அவர்களை ஒரு முறை கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டேன்.

 பிறகுதான் ஆட்டம் தொடங்கியது.

 நட்பழைப்பை ஏற்று நானே இன்பாக்ஸில் தகவல் அனுப்பினேன். குசலம் எல்லாம் விசாரித்த பின்பு எனக்கு உதவ முடியுமா என்ற கேள்வியை நானே முதலில்  கேட்டு விட்டேன். சொல்லுங்கள் என்று அந்த போலி பெரிய மனதோடு சொல்ல, கூகிள் நிறுவன பங்குகளை வாங்க 5000 டாலர் வேண்டும் என்று கேட்க, என் டோக்கியோ வங்கி எண்ணை அனுப்புகிறேன் என்று சீனும் போட அந்த போலி என்னை ப்ளாக் செய்து விட்டது.

 




கேட்கறதுதான் கேக்கறோம், கொஞ்சம் பெரிசா கேப்போம்னு ஐயாயிரம் டாலர் கேட்டா அது ஒரு குத்தமாங்க? அதுக்கு போய் கோபிச்சிக்கிட்டு ப்ளாக் செஞ்சிட்டாரு                        

 பிகு : இந்த சம்பவம் நடந்தும் நாலு நாளாச்சு. எழுதியும் இரண்டு நாளாச்சி. காலையில் சொன்ன அதே காரணம்தான். நெடும் பயணம் காரணமாக புதிதாக எழுத முடியாததால் பகிர்ந்து கொள்கிறேன்.

மதுரை AIIMS – முரட்டு முட்டு

 


மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில்தான் பார்த்தேன். மோடியின் சாதனையாக மதுரை ஏ.ஐ.ஐ.எம்.எஸ் கட்டப்பட்டதாக சொல்லப்பட்டிருந்தது. ஒரு மோடி ஆதரவாளர் உட்பட பலரும் கழுவி ஊற்றிக் கொண்டிருந்தார்கள்.

அவருக்கு சப்போர்ட்டாக இன்னொரு சங்கி வந்து பயங்கரமான காரணம் ஒன்றை கூறினார்.

மதுரை  AIIMS கட்டுவதற்கு திமுக அரசு இடம் கையகப்படுத்திக் கொடுக்கவில்லை என்பதால்தான் கட்டுமானப்பணி துவங்கவில்லை என்பது அந்த சங்கியின் வாதம்.


 

நிலம் கையகப்படுத்தப்படாமல் பின் எப்படி அங்கே மோடி அடிக்கல் நாட்டினார் என்று கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்லாமல் அந்த சங்கி அடுத்த பொய்யைச் சொல்லப் போய் விட்டார்.

 இப்படிப்பட்ட பொய்யர்களும் பொய்களை நம்பி பரப்பும் முட்டாள்களும்தான் மோடியின் மூலதனம்.

 ரொம்ப நாளா ட்ராப்டிலேயே இருந்தது. இன்று ஒரு நெடும் பயணம், அதனால் இதனை பகிர்ந்து கொ:ள்கிறேன்.