உச்ச நீதிமன்றத்தை இரு ட்விட்டர் பதிவுகள் மூலமாக பிரஷாந்த் பூஷன் இழிவு படுத்தினார் என்று உச்ச நீதிமன்றம் பதிவு செய்த செல்ஃபி அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு அளித்து விட்டார்கள்.
பிரஷாந்த் பூஷன் ஒரு ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று சொல்லி தீர்ப்பளித்து விட்டார்கள்.
ஆம்,
வெறும் ஒரு ரூபாய் தான்.
ஒரு கோடி ரூபாய் என்று முதலில் புளகாங்கிதம் அடைந்த தினமலர் பின்பு சத்தமில்லாமல் பழைய செய்தியை நீக்கி விட்டது.
தீர்ப்பைப் பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. உச்ச நீதிமன்றமே தனது மதிப்பை வெறும் ஒரு ரூபாய் அளவிற்கு குறைத்துக் கொண்ட பின்பு நாம் சொல்ல என்ன இருக்கிறது!
காழ்ப்புணர்வின் காரணமாக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால் இப்படிப்பட்ட பரிதாபமான நிலைதான் வரும் என்பதை அனைவரும் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.