Showing posts with label உண்ணாவிரதம். Show all posts
Showing posts with label உண்ணாவிரதம். Show all posts

Sunday, October 2, 2011

பாவம் நாய்கள் - இன்று காந்தி ஜெயந்தி


ஆரவாரக் குரல்கள், 
பகிர்தலில் பிரச்சினைகள்,
பாட்டில்கள் திறக்கும் ஓசைகள்,
பிளாஸ்டிக் த்ம்பள்ர்களில்
நிரம்பும் மது வகைகள்,
மசாலாவின் மணம்
எதுவுமே இன்றி 
அமைதியாய் இருந்தது
அந்தப் பகுதி,
டாஸ்மாக்கின் அருகில் 
இருந்த அரசாங்க சாலை
எனும் வெட்ட வெளி பார்.


தன் வீட்டிற்கு 
 எடுத்துச் செல்ல
எதுவும் இல்லாத 
இந்தியக் குடிமகன்
குபேரனாய்  பகிர்ந்து 
கொண்ட மிச்சம் மீதியில்
உயிர் வளர்த்த 
நாய்கள் மட்டும் 
சோர்விலே சுருண்டு போய்
ஓரமாய் கிடக்கின்றது,
ஆதரவளிக்கும் 
வள்ளல்களின் வருகை இன்றி.


தேசத் தந்தையின் 
பிறந்த நாளில் 
பாவம் அந்த  நாய்களும்
இன்று உண்ணா விரதம்.


அவைதான் அறியுமா?
இன்று காந்தி ஜெயந்தி.
மதுக்கடைகள் 
விடுமுறை என்று?


( என் வீட்டுக்கு  வரும் ஒரு 
பிரதான சாலையில் அன்றாடம்
பார்க்கிற சூழல் இன்றி  போவோர்
வருவோர்  யாரேனும்  ஏதாவது 
உணவளிப்பார்களா என்று 
ஏக்கத்துடன் தலை நிமிர்த்துப்
பார்த்து சுருண்டு போய்க் கிடந்த
பத்து நாய்களின் நிலை உருவாக்கிய
தாக்கம், இந்த கவிதை போன்ற 
ஒரு வடிவம்)      

Monday, September 19, 2011

உண்ணாவிரதமா? புதுசா ஏதாவது பண்ணுங்கப்பா!



வர வர உண்ணாவிரதப் போராட்டங்கள்  அர்த்தமிழந்து
போய்க்கொண்டிருக்கிறது. 

அண்ணா ஹசாராவின்  உண்ணாவிரதங்கள் பிரதமரை
லோக் பால் மசோதாவில் சேர்க்கவில்லை. ஆனால் அது
வெற்றி என பேசப்படுகின்றது.   


பாபா ராம்தேவின் உண்ணா விரதம் அவரை சுடிதார்
அணியவைத்தது.


ஏர்கண்டிஷன் அறையில்  உத்தமர் வேடம் போட 
இப்போது  மோடி உண்ணா விரதம்.


அதற்கு போட்டியாய்  காங்கிரசார் உண்ணாவிரதம்.


இந்த பரபரப்பு உண்ணாவிரதங்கள் நியாயமான 
கோரிக்கைகளுக்காக  உண்ணாவிரதப் 
போராட்டம் மேற்கொள்ளும்  பலரை 
பல அமைப்புக்களை  கவனிப்பு  கிடைக்காத
வண்ணம் செய்து விடுகின்றது.  


அப்படி உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என
அரசியல் பிரபலங்கள் ஆசைப்பட்டால் கலைஞர் 
போல காலை உணவுக்கும் மதிய உணவிற்கும்
இடைப்பட்ட நேரத்தில் ஏர்கூலர்கள் வசதியோடு
மூன்று மணி நேரத்தில் முடித்து விடுங்கள்.