ஆரம்பிச்சுட்டாங்க அடாவடி ஆட்டத்தை
கர்னாடக மாநிலம் தட்சிண கன்னடா தொகுதியில் பாஜக வெற்றி
பெற்றதைக் கொண்டாட சென்ற வெற்றி ஊர்வலத்தின் ஒரு
பகுதியாக சுருள்படி என்ற இடத்தில் உள்ள மசூதியருகே
வெடி வெடித்து அந்த மசூதியின் மீது கல்லெறிந்து தாக்குதல்
நடத்தி கண்ணாடிகள், மேடைகள் ஆகியவற்றை பாஜக
தொ(கு)ண்டர்கள் உடைத்து நொறுக்கியுள்ளனர். அங்கிருந்த
ஒரு மௌல்வியையும் அறைக்குள் வைத்து பூட்டியுள்ளனர்.
அதே பகுதியில் இன்னொரு மசூதிக்குள் புகுந்தும் தாக்குதல்
நடத்தியுள்ளனர்.
முதல் சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
மோடி பதவியேற்கும் முன்பே அடாவடியை துவக்கி விட்டார்கள்.
இனி போக, போக ?????????????
மேலும் விபரங்களுக்கு இந்த இணைப்பை பார்க்கவும்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
மேலே உள்ள பதிவு 18.05.2014 அன்று எழுதியது.
ஐந்தாண்டுகளுக்குப் பிறகாவது கொஞ்சமாவத் திருந்தி இருப்பார்களா என்று பார்த்தால் நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை.
நேற்று முன் தினம் மூன்று இஸ்லாமியர்களை மாட்டுக் குண்டர்கள் அடித்து நொறுக்கியுள்ளார்கள்.
நேற்று டெல்லி அருகே உள்ள குருகிராமில் ஒரு இஸ்லாமிய வாலிபனை அவனது குல்லாவை கழற்ற வைத்து "ஜெய் ஸ்ரீராம்" என்று முழங்கச் சொல்லியுள்ளார்கள். அந்த வாலிபன் மறுத்ததால் அடித்து கொடுமைப் படுத்தியுள்ளார்கள்..
திரிபுராவிலும் மேற்கு வங்கத்திலும் ரௌடிகள் வெறியாட்டம் தொடர்கிறது.
அடுத்த ஐந்தாண்டுகளும் வன்முறையால் நிரம்பி வழியப் போகிறது.
இப்படி ஒரு பாசிஸக் கும்பலுக்கு வோட்டு பட்ட மக்களின் மன நலன் நிச்சயமாக ஆய்வுக்குட்படுத்தப் பட வேண்டிய ஒன்று.
