Showing posts with label முரண்பாடு. Show all posts
Showing posts with label முரண்பாடு. Show all posts

Saturday, January 3, 2015

ராஜீவ் நினைவகத்தில் இருட்டடிப்பு

ராஜீவ் நினைவகத்திற்கு சென்று வந்தது பற்றி இரு தினங்கள் முன்பாக எழுதியிருந்தேன்.
 http://im.rediff.com/election/2009/may/06sld2.jpg
 
 
அது ராஜீவ் காந்திக்கான நினைவகம்தான், காங்கிரஸ் ஆட்சியால் துவக்கப் பட்டதுதான். அங்கே ராஜீவ் காந்தியின் புகழ் பாடுவதுதான் அரசின் நோக்கமாகவும் இருக்க முடியும்.
 
ஆனால்
 
அந்த கொடூர சம்பவத்தில் ராஜீவ் மட்டும் கொல்லப் படவில்லை. மேலும் ஒரு பதினாலு பேர் கொல்லப்பட்டனர், தனுவைத் தவிர. அதில் போட்டோகிராபர் ஹரிபாபுவைத் தவிர வேறு யாருக்கும் கொலை முயற்சிக்கும் தொடர்பில்லை.
 
ராஜீவ் காந்திக்கு பாதுகாப்பு அளிக்க வந்த காவல்துறையினர், அவரது கூட்டத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ஆகியோர்தான் கொல்லப் பட்டனர். ராஜீவ் காந்தி கொல்லப்படவில்லை என்றால் இவர்களும் இறந்து போயிருக்க மாட்டார்கள்.
 
அவர்களுக்கெல்லாம் சிலை வைத்திருக்க வேண்டாம், ஓவியம் எழுதியிருக்க வேண்டாம், வாழ்க்கை வரலாறெல்லாம் கூட சொல்லி இருக்க வேண்டாம். அந்த பிரம்மாண்டமான வளாகத்தின் ஏதாவது ஒரு மூலையில் அந்த பதினாலு பேருடைய பெயர்களையாவது எழுதி இவர்களும் அந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் என்றாவது பதிவு செய்திருக்கலாம். 
 
எந்த வரலாறும் தெரியாதவர்கள் அங்கே வந்தால் ராஜீவ் காந்தி மட்டுமே அன்று கொல்லப்பட்டார் என்றுதான் நினைப்பார்கள். 
 
அதே நேரம் வெண்மணி நினைவகம் ஒன்றும் பிரம்மாண்டமானதில்லை. பச்சை புல்வெளிகள் அங்கே கிடையாது, பத்துக்கு பத்து அறை, அங்கே ஒரு ஸ்தூபி, அதற்கு வெளியே இன்னொரு ஸ்தூபி. மிகப் பெரிய கலைநயம் என்பதெல்லாம் கிடையாது. ஆனால் அந்த ஸ்தூபியில் தீயில் எரிக்கப்பட்ட நாற்பத்தி நான்கு  தியாகிகள் பெயர்கள் மட்டுமல்ல, கீழத்தஞ்சை மாவட்டத்தில் கொல்லப்பட்ட தியாகிகள் அனைவரது பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGjmZNuYV9Znub6c-CywL_YbWSqtarC-xrv7UM5MtZjjQWNw82sID52VCKfvAIYBP6fgo1o-pkhChMhrJxOoaQBUCbrHVqlXfncvm55jQtJbDgceVvMbGHUmOzxd4fGACbYT6ZSizGEEI/s1600/Venmani.jpg
 
 
ஏனென்றால் வெண்மணி நினைவகத்தை கட்டியது உழைப்பாளி மக்களின் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி.
 
ராஜீவ் நினைவகத்தை கட்டியது முதலாளித்துவக் கட்சியான காங்கிரஸ் த்லைமையிலான அரசு. அங்கே மற்றவர்களின் தியாகத்திற்கு மதிப்பில்லை. 

Thursday, July 10, 2014

"நேத்து ராத்திரி யம்மா" தொடங்கி "ஸ்ரீவெங்கடேசா" வரை


நேற்று இரவு திருப்பத்தூரிலிருந்து வேலூர் வரை பேருந்தில் வந்து கொண்டிருந்தேன். திருப்பத்தூரில் இரவு 8.40 க்கு பேருந்து புறப்படும்போது ஓட்டுனர் ஒலித்த முதல் பாடல் “நேத்து ராத்திரி யம்மா”. அதன் பின்பு நிலா காயுது, பொன்மேனி உருகுதே என வெறும் மிட்நைட் மசாலா பாட்டுக்கள் மட்டுமே. பள்ளி கொண்டா வரும் வரை எல்லாமே இது போன்ற பாடல்கள் மட்டுமே. பெண்கள் முகம் சுளித்த போதும் அவர் அதை கண்டு கொள்ளவே இல்லை.

பள்ளி கொண்டா டோல்கேட்டில் அவர் சி.டி மாற்றினார். அதன் பின்பு வேலூர் வந்து சேரும் வரை "ஸ்ரீவெங்கடேசா" என்று ஒரே ஒரு வெகு நீளமான தெலுங்கு பக்திப் பாடல் மட்டுமே.

அவர் யார் பக்திமானா இல்லை பலான பாட்டுப் பிரியரா?

பி,கு : நேற்று ஒலித்த பெரும்பாலான மிட் நைட் மசாலாப்பாட்டுக்கள் இளையராஜாவால் இசையமைக்கப்பட்டது. அப்படி இருக்கையில் அவருக்கு ஏன் சாமியார் என்ற தோற்றம் தரப்படுகிறது?

Wednesday, December 5, 2012

எப்படி மனம் வருகிறதோ? எப்படித்தான் கட்டுப்படியாகிறதோ? இரு முரண்பாடுகள்




நேற்று ஹோட்டல் சரவண பவனில் மினி டிபன் சாப்பிட்டேன்.

ஐந்து குட்டி இட்லி,
நான்கு அங்குல மசால் தோசை,
இரண்டு ஸ்பூன் கிச்சடி,
ஒரு ஸ்பூன் கேசரி


இதற்கு விலை ரூபாய் 88.00

இவ்வளவு குறைவான அளவிற்கு மிக அதிகமான விலை வைக்க எப்படித்தான் மனது வருகிறதோ? ஆனாலும் திட்டிக் கொண்டாவது அங்கேதான் போகிறோம் என்பது வேறு விஷயம்.

அதே நேரம் இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும்.

மதுரையில் உள்ள மீனாட்சிபவன் ஹோட்டலில் சில தினங்கள் முன்பு மதிய உணவு சாப்பிட்டேன். ஏ.சி அறையில் ஸ்பெஷல் மீல்ஸ்.

ஒரு சூப்,
விஜிடபிள் பிரியாணி – ஒரு கிண்ணம்,
ஒரு சப்பாத்தி
இரண்டு பொறியல்,
இரண்டு கூட்டு,
கட்லெட் போன்ற ஒரு வஸ்து,
காலிஃபளவர் சில்லி,
உருளை வறுவல்,
துகையல்,
அப்பளம்,
பாயஸம்,
ஸ்வீட்,
சாம்பார், காரக்குழம்பு, ரசம், தயிர், மோர்
ஐஸ்க்ரீம், வாழைப்பழம், பீடா
இத்துடன் அளவில்லாத சாதம்

இது எவ்வளவு ரூபாய் தெரியுமா?

வெறும் நூறே ரூபாய்தான்.

சுவையும் நன்றாகவே இருந்தது.

இங்கே சாப்பிட்டு முடிந்ததும்

எப்படித்தான் கட்டுப்படியாகிறதோ என்ற கேள்வி வந்தது.

சரவணபவன் அண்ணாச்சி,  மீனாட்சிபவன் போய் விட்டு வந்தால்
நன்றாக இருக்கும்.

அவர்களை கெடுக்காமல் இருந்தால் சரி