Showing posts with label மேற்கு வங்கம். Show all posts
Showing posts with label மேற்கு வங்கம். Show all posts

Monday, October 14, 2024

டாடாவை வெளியேற்றிய குற்றவாளிகள் யார்?

 


டாடா நானோ மேற்கு வங்கத்திலிருந்து வெளியேறியது யாராலே?

 சாம்சங் போராட்டத்திற்கு எதிரான பல்வேறு அபத்தமான பதிவுகளில் டாடா மோட்டார்ஸ் வெளியேறியது போல சாம்சங்கும் வெளியேற வேண்டுமா என்றொரு கேள்வி முன்வைக்கப்பட்டது.

 கொஞ்சம் கூட புரிதல் இல்லாத கருத்து அது.

 டாடா நானோ வெளியேறியதற்கு எந்த தொழிற்சங்கப் போராட்டமும் காரணம் கிடையாது. அது முழுக்க முழுக்க இடது முன்னணிக்கு எதிரான சதிச்செயல்.

 அந்த சதியை பற்றி பேசும் முன்னர்  இடது முன்னணி அரசு மேற்கு வங்கத்தில் எப்படி செயல்பட்டது என்பது பற்றியும் டாடா நிறுவனத்திற்கு விதித்த நிபந்தனைகள் பற்றியும் டாடா நானோ தொழிற்சாலைக்கு ஏன் சிங்கூர் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது பற்றியும் கொஞ்சம் பார்ப்போம்.

 1972 முதல் 1977 வரை மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்த சித்தார்த்த சங்கர் ரே தலைமையிலான காங்கிரஸ் அரசு, தற்போதைய மம்தா ஆட்சியைப் போலவே ஒரு அரைப் பாசிச ஆட்சியையே நடத்தியது. சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விவசாயமும் தொழில் வளமும் இல்லாமல் மின்சாரமே அரிதாகிப் போன மாநிலமாகவே மேற்கு வங்க மாநிலம் இருந்தது.

 அதிகாரங்களையும் நிதியையும் தன் கையிலே குவித்து வைத்துள்ள மத்திய அரசாங்கம் முறைத்துக் கொண்டு நிற்கிற போது ஒரு மாநில அரசின் பணிகள் என்பது சிரமமானது. சவாலானது. ஆனால் அந்த சவாலை எதிர் கொண்டது இடது முன்னணி ஆட்சி.

 பானர்ஜி, சட்டர்ஜி, பட்டாச்சார்ஜி உண்டு ஆனால் எனர்ஜி மட்டும் கிடையாது என்று ஜோக்கடிக்கும் நிலையில் இருந்த மேற்கு வங்க மாநிலத்தை உண்மையிலேயே மின் மிகை மாநிலமாக மாற்றி மற்ற மாநிலங்களுக்கும் மின்சாரம் அளிக்கும் மாநிலமாக மாற்றிய பெருமை இடது முன்னணி ஆட்சிக்கே உண்டு. இத்தனைக்கும் மேற்கு மாநிலத்திற்கான மின் திட்டங்களுக்கு அரசியல் காழ்ப்புணர்வோடு ஏராளமான தடைகளை போட்டது இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அரசாங்கங்கள்.

 இந்தியாவில் இடதுசாரிகளைத் தவிர வேறு எந்த ஒரு கட்சியாலும் செய்ய முடியாத மகத்தான சாதனையை செய்தது மேற்கு வங்கத்தின் இடது முன்னணி அரசு. இந்தியாவில் முதன் முதலாக தேர்தல் மூலம் உருவான தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாத் தலைமையிலான கேரள கம்யூனிச ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நிலச்சீர்திருத்தங்களை மேற்கு வங்க அரசு அமலாக்கியது.

 இடது முன்னணி தனது ஆட்சிக்காலத்தில் முப்பது லட்சத்து நாற்பதாயிரம் குடும்பங்களுக்கு பதினோரு லட்சத்து முப்பதாயிரம் ஏக்கர் நிலங்களை வினியோகம் செய்துள்ளது. இந்தியாவில் செய்யப்பட்ட நில வினியோகத்தில் அறுபது சதவிகித நிலம் மேற்கு வங்க மாநிலத்தில் கொடுக்கப்பட்டதுதான். மூன்று லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் குடும்பங்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கப்பட்டது. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்காக ஒரு அமைச்சர் இருந்தார் என்றால் மேற்கு வங்க இடது முன்னணி அரசிலோ நிலத்தை ஏழை மக்களுக்கு அளிப்பதற்காக ஒரு அமைச்சர் இருந்தார்.

 நிலம் என்பது சாதாரண விஷயமில்லை. அடிமைகளாய், கூலிகளாய் துயரத்தில் உழன்று கொண்டிருந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட மிகப் பெரிய உரிமை. மிகப் பெரிய வாழ்வாதாரம். மிகப் பெரிய நம்பிக்கை. நிலக்குவியல் அங்கே உடைக்கப்பட்டது. சாகுபடிக்கு வாய்ப்பிருக்கிற அரசு நிலங்களெல்லாம் ஏழைகளின் சொத்தானது. ஏழை விவசாயத் தொழிலாளி அங்கே சொந்த நிலமுடைய விவசாயியாக மாறினான். உழைப்புக்கான கருவிகள் வழங்கப்பட்டது, பாசன வசதிகள் பெருக்கப்பட்டது.

 அதனால்தான் மேற்கு வங்கம் விவசாயத்தில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக திகழ்கிறது. அரிசி விளைச்சலிலும் காய்கறி சாகுபடியிலும் மேற்கு வங்கம் இந்தியாவில் முதல் மாநிலமாக திகழ்கிறது என்றால் அதற்கு இடது முன்னணியின் முயற்சிகள் மட்டுமே காரணம்.

 இதை விட இன்னொரு மகத்தான சாதனை அதிகாரப் பரவல். மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பு முறையை அறிமுகம் செய்து பஞ்சாயத்துக்களை உண்மையிலேயே சக்தி மிக்கதாய் மாற்றி அமைத்த பெருமை இடதுசாரிகளையே சாரும். ஜமீன்தார்களும் மிராசுதார்களுமே பஞ்சாயத்து தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட முடியும் என்பதை ஒரு ஏழை விவசாயி கூட  பஞ்சாயத்து தலைவராக முடியும் என்று மாற்றி அமைத்தது இடது முன்னணி ஆட்சிதான். தலித் மக்கள் சுய கௌரவத்தோடு தலை நிமிர்ந்து நிற்பதை உத்தரவாதப்படுத்தியதும் மேற்கு வங்க இடது முன்னணி அரசுதான். தீண்டாமை இல்லாத மாநிலமாக திகழ்வதும் இடது முன்னணி ஆட்சியால்தான்.

 தொழில்துறையில் முன்னேற்றத்தை உருவாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அத்தனை கம்யூனிச எதிரிகளும் சேர்ந்து சீரழித்தது ஒரு தனிக்கதை. அதன் பின்னணி பற்றி நாளை விவாதிப்போம்.

 டார்ஜிலிங்கில் கூர்க்காலாந்து பிரச்சினை பற்றி எரிந்த போது கூர்க்காலாந்து பிராந்திய கவுன்சிலை உருவாக்கி பனி படர்ந்த இமய மலையில் மீண்டும் அமைதி தவழ்வதை உருவாக்கியது இடது முன்னணி அரசு. தனி மாநிலம் பிரித்து தருகிறோம் என்று மம்தாவால் தூண்டி விடப்பட்டதை நம்பி இன்று அந்த மக்கள் ஏமாந்து நிற்பது வேறு கதை

 2009 – 10 ல் விவசாயத்துறை வளர்ச்சி தேசிய அளவில் 2.1 % ஆக இருந்த போது மேற்கு வங்கத்தில் 3.1 % ஆக இருந்தது. குஜராத்தில் விவசாய வளர்ச்சி எதிர்மறையாக இருந்த போதே 11%, 12% என்றெல்லாம் நமோ பஜனையாளர்கள் பொய்ப்பிரச்சாரம் செய்ததை கேஜ்ரிவால் அம்பலப் படுத்தியதை படித்திருப்பீர்கள்.

 அந்த ஆண்டில் அரிசி உற்பத்தி 14.3 மில்லியன் டன். இது நாட்டின் உற்பத்தியில் 16 %. அதே போல் காய்கறி உற்பத்தி 12.8 %.

 தொழிலாளிகளின் அரசாக இடது முன்னணி அரசாங்கம் இருந்த காரணத்தால்தான் ஒருங்கிணைக்கப் படாத தொழிலாளர்களுக்காக வருங்கால வைப்புத் தொகையை முதலில் அறிமுகம் செய்தது. தனது ஏழாவது ஆட்சிக்காலத்தில் மருத்துவக் காப்பீட்டையும் அறிமுகம் செய்தது. விவசாயத்தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்புத் திட்டத்தையும் மருத்துவக் காப்பீட்டையும் விரிவு படுத்தியது. இடது முன்னணி ஆட்சிக்காலம் முடிகிற போது அரசின் சமூக நலத்திட்டங்கள் முப்பத்தி எட்டு லட்சம் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளித்துக் கொண்டிருந்தது.  மூடப்பட்ட ஆலைகளில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1500 அளிக்கத் தொடங்கியதும் இடது முன்னணி அரசு.

 விவசாயத்துறையை தன்னிறைவு பெற்ற துறையாக முன்னேற்றிய பின்பு, தொழிலாளர்களின் எதிர்காலத்தை உறுதி செய்த பின்பு தொழில் துறையை முன்னேற்ற கவனம் மேற்கொண்டது.

 இடது முன்னணியின் ஏழாவது ஆட்சிக்காலத்தில் மட்டும் சிறிய, பெரிய, நடுத்தர          தொழிலகங்களாக  36,000 கோடி  ரூபாய்  முதலீட்டிலான  1313  தொழிற்சாலைகள்  உருவாகின. இதில்  2010 ல்  மட்டும்  322  தொழிற்சாலைகள்  அமைக்கப்பட்டு  1,41,0000  புதிய வேலைகள்  உருவாகின.  மற்ற  இடங்களில்  எல்லாம்  சிறு தொழில்  அழிந்து  கொண்டிருக்கையில் மேற்கு வங்கத்தில் மட்டும் 4000 சிறு தொழில் நிறுவனங்கள் துவக்கப்பட்டு இரண்டு லட்சத்து இருபதாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளித்தது.

 தகவல் தொழில்நுட்பத் துறையிலும் அனைத்து பெரிய நிறுவனங்களும் மேற்கு வங்கத்தில் அலுவலகங்களை துவக்கினர்.  2006 ல்  தகவல்  தொழில்  நுட்பத்துறையில்  36,000  ஆக  இருந்த  ஊழியர்  எண்ணிக்கை  2010 ல் 1,10,000 ஆக உயர்ந்தது.

 ஆனால் மேற்கு வங்க இடது முன்னணி அரசு இந்த வளர்ச்சி போதும் என்று இருந்து விடவில்லை. நிலத்தை பெற்ற விவசாயிகளின் மகனோ மகளோ படித்து விட்டு வருகையில் அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்பதால் தொழில் துறையில் மேலும் முன்னேற்றம் காண்பது அவசியம் என்பதால் அதற்கான நடவடிக்கைகளை தொடங்கியது.

 அதற்கான முதல் நடவடிக்கைதான் டாடா நானோ தொழிற்சாலை.

 மேற்கு வங்கத்தில் பெரும்பாலானவை சாகுபடி நிலங்கள்தான். ஆகவே மூன்று போகங்களோ இல்லை இரண்டு போகங்களோ விளைச்சல் இல்லாத ஒரு போகம் மட்டுமே விளையக்கூடிய நிலத்தை கண்டறிய வேண்டியிருந்தது. அப்படி கிடைத்ததுதான் சிங்கூர்.

 சிங்கூரில் மேற்கு வங்க அரசு டாடாவிற்கு ஒதுக்கியது வெறும் 990 ஏக்கர் நிலம் மட்டுமே. நிலத்தின் கட்டுப்பாடு அரசின் வசமே இருக்கும். இழப்பீடு எப்படி தரப்பட்டது தெரியுமா?

 சந்தை விலையைப் போல ஒன்றரை மடங்கு. குத்தகைதாரருக்கு தனியாக இழப்பீடு. நிலம் கொடுத்தவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, அதைத் தவிர நிலம் கொடுத்தவர்களது குடும்பத்து பெண்களைக் கொண்டு அமைக்கப்பட்ட சுய உதவிக்குழுக்கள் மூலமாகவே நானோ நிறுவன ஊழியர்களுக்கு சீருடை தைக்கப்பட வேண்டும். உணவகமும் அவர்கள் அமைப்பார்கள்.

 சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் மற்ற மாநிலங்களில் விவசாய நிலங்கள் தேவையை விட பல மடங்கு அதிகமாக பறிக்கப்பட்டது. அடிமாட்டு விலை கூட விவசாயிகளுக்கு தரப்படவில்லை. மற்ற இழப்பீடுகளுக்கும் சிங்கூர் இழப்பீட்டிற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம்தான்.

 டாடா ஒப்புக் கொண்டது போன்ற நிபந்தனைகளை மற்ற மாநிலங்களும் விதித்தால் அது கார்ப்பரேட்டுகளுக்கு சிக்கலாகி விடும். ஆகவே அவர்கள் டாடா நானோ சிங்கூரில் வருவதை தடுக்கப்பார்த்தார்கள். 95 % விவசாயிகள் தங்கள் நிலங்களை மனமுவந்து கொடுத்த சூழலில் மம்தா பானர்ஜி கலவரத்தை தூண்ட நானோ தொழிற்சாலை மேற்கு வங்கத்திலிருந்து வெளியேற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

 எங்கள் சங்கத்தின் அகில இந்திய செயற்குழுக் கூட்டம் 2007 ம் ஆண்டு கொல்கத்தா நகரில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் மேற்கு வங்க மாநிலத்தின் அன்றைய தொழிலமைச்சரும் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் இருந்த தோழர் நிருபம் சென், மேற்கு வங்க தொழிற்கொள்கை  தொடர்பாக எங்களிடம் உரையாற்றினார்.

 அப்போது அவர் சொன்ன ஒரு வாசகம் இன்றும் மனதில் நினைவில் உள்ளது. From the Right Fundamentalists to the Ultra Left, every one joined hands to destabilize the Industrial Growth of West Bengal. மேற்கு வங்க மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை சீரழிக்க வலதுசாரி அடிப்படைவாதிகள் தொடங்கி இடது தீவிரவாதிகள் வரை கை கோர்த்துக் கொண்டனர்.

 இடது முன்னணிக்கு எதிரான கலவரத்தில் துப்பாக்கி தூக்கிய மாவோயிஸ்டுகள் நிலை என்ன ஆனது?

 மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்த ஒரு வருட காலத்திற்குள்ளாக அவர்கள் அழித்தொழிப்பு செய்யப்பட்டார்கள். குறிப்பாக மாவோயிஸ்ட் கட்சியின் தலைமை கமாண்டராக இருந்த கிஷண்ஜி. இவர்தான் மேற்கு மித்னாபூரில் தோழர் புத்ததேப் பட்டாச்சார்யாவை படுகொலை செய்ய தாக்குதல் நடத்தியவர். அதே கிஷண்ஜி அதே மேற்கு மித்னாபூரில் மம்தா அரசால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 குஜராத்திற்குப் போன டாடா நானோவிற்கு எவ்வளவு நிலம் கிடைத்தது?

 990  ஏக்கர்  நிலத்திற்கு  பதிலாக  20,000  ஏக்கர்  நிலம்  அங்கே  வாரி  வழங்கப்பட்டது.    அதுவும்  அடிமாட்டு  விலையை  விட  கேவலமாக. இருபது மடங்கு கூடுதல் நிலம் எதற்காக? ரியல் எஸ்டேட் வணிகம் செய்யத்தான்.

 சிங்கூரை விட்டு நானோ போனாலும் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் வரை நிலம் விவசாயிகளுக்கு திரும்பி வழங்கப்படவில்லை. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பு 2017 ம் ஆண்டுதான் மம்தா அந்த நிலங்களை திருப்பிக் கொடுத்தார்.

இப்போது டாடா நானோ உற்பத்தி நிறுத்தப்பட்டு அந்த தொழிற்சாலை முடங்கி விட்டது. அதற்கு எந்த தொழிற்சங்கப் போராட்டமும் காரணமில்லை. ஏராளமான கோளாறுகள் காரணமாக விற்பனை சரிந்து விட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலம் என்ன ஆனது என்பதை சரி பார்க்க அவகாசமில்லை. யாராவது சொன்னால் நல்லது. 

 மேற்கு வங்கத்தில் இடது முன்னணி அரசு வீழ்த்தப்பட்டதற்கு பிறகு அங்கே எந்த புதிய தொழிலும் வரவில்லை.

 டாடா நானோ வை மேற்கு வங்கத்திலிருந்து துரத்தி அம்மாநில தொழில் வளர்ச்சியை முடக்கிய வலதுசாரி அடிப்படைவாதிகள்தான் இப்போது சாம்சங் நிர்வாகத்துக்கு முட்டு கொடுத்து கம்யூனிஸ்டுகள் பற்றி பொய்ப் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த பொய்களை பரப்பும் கருவிகளாக உடன்பிறப்புக்களில் ஒரு பகுதியினர் (தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவான கருத்துக்களை வெளிப்படுத்தும் திமுகவினரும் உண்டு) மாறியுள்ளதுதான் அவர்கள் செய்யும் வரலாற்றுப் பிழை.

 பிழையை இப்போதாவது திருத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் என் எதிர்பார்ப்பு,

 

 

Sunday, August 18, 2024

கொல்கத்தா கொடுமை- மம்தாவே பொறுப்பு

 


கொல்கத்தாவில் நடந்த கொடூரம் நம்மை பதற வைக்கிறது. நிர்பயாவை எப்படி சித்திரவதை செய்தார்களோ, அதை விட மோசமான சித்திரவதைக்கு அந்த இளம் மருத்துவர் உள்ளாகியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் ஒரு ரௌடிக் கலாச்சாரத்தை உருவாக்கி வைத்துள்ள மம்தாவே இச்சம்பவத்திற்கு முழு முதல் பொறுப்பு.  ஒரே ஒரு குற்றவாளி மட்டும் கைது செய்யப்பட்டுள்ளான். அவனைத் தவிர இன்னும் ஏராளமான குற்றவாளிகள் உள்ளனர் என்பது இறந்த பெண்ணின் சடலம் சொல்லும் செய்தி.

ஆனால் மற்றவர்களை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் அந்த மருத்துவ மனை போராட்ட களமானது. 

போராடிக் கொண்டிருந்தவர்கள் மீது நூற்றுக்கணக்கான ரௌடிகள் தாக்குதல் நடத்தி அராஜகம் செய்ததும் அவர்கள் வந்ததும் போலீஸ் ஒளிந்து கொண்டதும், மிகப் பெரிய குற்றத்தின் பின்னணியில் இருப்பது திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள்தான் என்பது தெளிவாகிறது.

ஆர்ப்பாட்டம்  நடத்துவதை விட்டு விட்டு தன் கட்சியில் உள்ள ரௌடிகள், பொறுக்கிகள், திருடர்களை வெளியேற்றட்டும்.

ஆனால் அதை மம்தா செய்ய மாட்டார்.

ஏன்?

அவர் கட்சியே காணாமல் போய் விடும்.

Friday, March 15, 2024

ரத்தத்தைக் கூட துடைக்க மாட்டீங்களாடா????

 


யாரோ அவங்க வீட்டிலேயே பின்னாடிலியிருந்து கீழே தள்ளி விட்டாங்களாம். கீழே விழுந்து நெத்தியில அடி, மூக்கில அடி, ரத்தமா ஒழுகுது. ஆஸ்பத்திரியில சேர்த்து மூனு தையல் போட்டாங்க, ஆஸ்பத்திரியிலேயே தங்கி ரெஸ்ட் எடுக்க சொன்னா, மக்களுக்கு செய்ய வேண்டிய வேலை இருக்குன்னு கிளம்பியாச்சு.

இதெல்லாம் செஞ்சது மோடின்னுதானே நெனச்சீங்க?


 

இவங்களும் மோடி மாதிரியேதான். டுபாக்கூர், முரடு.

 மம்தா பானர்ஜியின் லேட்டஸ்ட் ஸ்டன்ட் இது.

 யம்மா மம்தா உங்க குடும்பத்து ஆளுங்க ரொம்பவுமே மோசம். கீழே தள்ளி விடறாங்க, கொட்டற ரத்த்ததை (அது மெல்லிசா வழியற மாதிரிதான் ஏற்பாடு) துடைக்கக் கூட மாட்டேங்கறாங்க. அவங்களை முதலில் வீட்டை விட்டு வெளியே அனுப்புங்க, நாளைக்கு கொலை கூட செய்ய தயங்க மாட்டாங்க, படுபாவிங்க.

 ஏம்பா திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டருங்களா, உங்க தீதிக்கு நிஜமாவே அடிபட்டதுன்னு நம்பியா ஆஸ்பத்திரிக்கு கூட்டம் கூட்டமா வந்தீங்க?

 தொண்டர் மைண்ட் வாய்ஸ் : அப்படி நம்பி வரலைன்னா எங்க உடம்பிலிருந்து ரத்தம் கொட்ட வச்சி எங்களை ஆஸ்பத்திரியில படுக்க வச்சுடுவாங்களே

Saturday, February 24, 2024

மோதீ- தீதீ – இருவரையும் புறக்கணிப்பீர்

 


சந்தேஷ்காளி என்று மேற்கு வங்கத்தில் ஒரு ஊர். அது கொந்தளிப்பாக இருக்கிறது. அந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் பல்வேறு பாலியல் முறைகேடுகளில் ஈடுபட்ட காரணத்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து கட்சிகளும் போராடுகின்றன.

மம்தாவின் ஆட்சியில் பெண்கள் படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல, அவர்கள் கட்சிக்காரர்கள் எல்லோருமே குண்டர்கள், ரௌடிகள். அக்கட்சியினரையும் வன்முறையையும் பிரித்துப் பார்க்க முடியாது. பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகும் பெண்களை எல்லாம் அக்கொடுமையே மேல் என்று நினைக்க வைக்கும் அளவிற்கு அவதூறுகளை அள்ளி வீசுவது மம்தாவின் வாடிக்கை. அதனால் அவர் ஆட்சியில் இருக்கும் வரை தவறிழைத்த சட்டப் பேரவை உறுப்பினர் பாதுகாப்பாக தனது பாலியல் லீலைகளை தொடர்ந்து கொண்டே இருப்பார்.

இப்பிரச்சினையில் போராடும் பாஜக எப்படிப்பட்டது?

மம்தாவின் மேற்கு வங்கத்திற்கும் பாஜக ஆளும் உபி, மபி, ராஜஸ்தான் மாநிலங்களுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. பாலியல் குற்றவாளிகளை மேற்கு வங்கத்தில் மம்தா எப்படி பாதுகாக்கிறாரோ, அதே வேலையை உபியில் மொட்டைச்சாமியார் செய்கிறார். உபியின் உனாவ் தொகுதிக்கு பாலியல் குற்றங்களின் தலைநகர் என்றே பெயர்.

அதனால் மேற்கு வங்கப் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில் அவர்கள் மோதியின் பாஜக, தீதியின் திரிணாமுல் காங்கிரஸ் என இரண்டு கட்சிகளையுமே புறக்கணிக்க வேண்டும். அவர்களின் பாதுகாப்பு அரணாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்து மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும்.

சமீபத்தில் வாலிபர் சங்கம் கொல்கத்தா பிரிகேட் மைதானத்தில் நடத்திய பேரணியின் பிரம்மாண்டம், பேசு பொருளாக மாறி இருக்கிறது. மக்கள் சிவப்பை மீண்டும் நம்பத் தொடங்கியுள்ளனர் என்பதன் அடையாளமாகும்.

இதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப இரண்டு சந்தர்ப்பவாதக் கட்சிகளும் திட்டமிட்டு சந்தேஷ்காளி பிரச்சினையை கையிலெடுத்து   உள்ளனரோ என்று சந்தேகம் கூட வருகிறது.

சுவை தரும் கனியாய் மார்க்சிஸ்ட் கட்சி இருக்க, கசப்பான காய்கள் எதற்கு?

 

Friday, November 10, 2023

கட்சியால் கைவிடப்பட்டவர்

 


நாடாளுமன்ற மரபுக்குழு( ETHICS COMMITTEE)  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மஹூவா மொய்த்ராவை  பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.

 அதானி குழும முறைகேடுகள் தொடர்பாக மக்களவையில் கேள்வி கேட்க அவர் பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு. அது உறுதிப்படுத்தப்பட்டதாக குழு சொல்கிறது, குழுவில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதனை ஏற்கவில்லை என்று தனியாக கடிதம் (DISSENT NOTE) கொடுத்துள்ளனர். எந்த ஆதாரமும் இல்லை என்பது அவர்கள் நிலைப்பாடு. பணம் எப்படி பரிமாறப் பட்டது என்று விசாரணை செய்யுமாறு உள்துறை அமைச்சகத்திற்கு மரபுக்குழு அனுப்பியுள்ள கடிதமே ஆதாரமில்லாததற்கு சான்று.

 மரபுக்குழு கூட்டம் எப்படி மரபுகளை காப்பாற்றியது தெரியுமா?

 மஹூவா மொய்த்ராவிடம் கேட்ட ஒரு கேள்வி போதும்.

 “நீங்கள் வெளியூர் செல்லும் போதெல்லாம்  எங்கே தங்குவீர்கள்? யாருடன் தங்குவீர்கள்?”

 இந்த கேள்வி கேட்கப்படவுடனேயே அவரும் குழுவில் இருந்த மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளி நடப்பு செய்து விட்டனர்.

 இப்போது மரபுக்குழு பரிந்துரை கொடுத்து விட்டது.

 அவரது கட்சி என்ன நிலை எடுக்கிறது.

 மம்தா பானர்ஜி இது வரை வாய் திறக்கவில்லை.

 திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளவரசுப்ப்பட்டம் கட்டப்பட்ட மம்தாவின் அண்ணன் மகன் அபிஷேக் பானர்ஜி என்ன சொல்கிறார்?

 “தன்னுடைய போராட்டத்தை தானே சந்திக்கும் வல்லமை படைத்தவர் மஹூவா மொய்த்ரா”

 அதன் அர்த்தம் என்ன?

 “நாங்கள் உனக்காக சிறு துரும்பையும் கிள்ளிப் போட மாட்டோம். மகளே உன் சமர்த்து”

 யாருக்கு தெரியும்! அதானியின் பெட்டிகள் மம்தாவிற்கும் போயிருக்கலாம் . .

 பாவம்! அனல் பறக்கும் பேச்சாளர் . . .

 

Saturday, December 4, 2021

அதானி – மம்தா டீலிங் என்ன?

 


மோடியின் உற்ற நண்பர் அதானி, மோடிக்கு எதிராக கம்பு சுற்றுவதாக காண்பித்துக் கொண்டிருக்கும் மம்தா அம்மையாரை சந்தித்துள்ளார். மேற்கு வங்கத்தில் அதானி முதலீடு செய்யப் போகிறாராம்.



 தொழில் வளர்ச்சி வேண்டுமென்று இடது முன்னணி கொண்டு வந்த சிங்கூர் டாடா நானா திட்டத்தை சீரழித்தவர் மம்தா பானர்ஜி.

 அவர் இப்போது அதானிக்கு நிலம் தரப் போகிறார்.

 ஆமாம், விஸ்வாமித்திரர் உருவாக்கிய திரிசங்கு சொர்க்கம் போல  அந்தரத்தில் எந்த தொழிற்சாலையும் அமையாதல்லவா! கண்டிப்பாக நிலம் வேண்டுமே!

 அதானிக்கு  மம்தா எப்படி நிலம் தரப் போகிறார்?

 புத்ததேப் போலவா? மோடி போலவா?

 புத்ததேப் உருவாக்கிய, டாடா ஒப்புக் கொண்ட வழிமுறை என்ன?

 சிங்கூரில் மேற்கு வங்க அரசு டாடாவிற்கு ஒதுக்கியது வெறும் 990 ஏக்கர் நிலம் மட்டுமே. நிலத்தின் கட்டுப்பாடு அரசின் வசமே இருக்கும். இழப்பீடு எப்படி தரப்பட்டது தெரியுமா?

 சந்தை விலையைப் போல ஒன்றரை மடங்கு. குத்தகைதாரருக்கு தனியாக இழப்பீடு. நிலம் கொடுத்தவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, அதைத் தவிர நிலம் கொடுத்தவர்களது குடும்பத்து பெண்களைக் கொண்டு அமைக்கப்பட்ட சுய உதவிக்குழுக்கள் மூலமாகவே நானோ நிறுவன ஊழியர்களுக்கு சீருடை தைக்கப்பட வேண்டும். உணவகமும் அவர்கள் அமைப்பார்கள்.

 சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் மற்ற மாநிலங்களில் விவசாய நிலங்கள் தேவையை விட பல மடங்கு அதிகமாக பறிக்கப்பட்டது. அடிமாட்டு விலை கூட விவசாயிகளுக்கு தரப்படவில்லை. மற்ற இழப்பீடுகளுக்கும் சிங்கூர் இழப்பீட்டிற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம்தான்.

 சிங்கூர் திட்டத்தை மம்தா அழித்ததே இது போன்ற நடைமுறை அமலானால் மற்ற முதலாளிகளுக்கு சிரமம் என்பதால்தான்.

 அதே நேரம் அதே டாடா நானோவுக்கு மோடி ஒதுக்கியது 20,000 ஏக்கர், அதுவும் அடிமாட்டு விலையில்.

 இப்போது டாடா நானோ செயல்படவில்லை. ஆனால் நிலம் அவர்களிடம்தான்.

 மம்தா எந்த பாதையை பின்பற்றப் போகிறார்?

 எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

 மோடியின் நண்பருக்கு மோடியின் பாணியில்தான் உதவுவார்.

 அப்போதுதான் அவரது ஏழைப்பங்காளன் வேடமும் கலையும். மம்தா-மோடி மோதல் எல்லாம் வெறும் நாடகம் என்பதும் புரியும்.

 

 

Saturday, June 12, 2021

ஒரே ஆள்தான். ஆனா அவங்க

 


மேலே படத்தில் இருப்பது முகுல் ராய்.

சாரதா சிட்பண்ட் ஊழலில் முக்கியக் குற்றவாளி.

மம்தாவின் கையாளாக இருந்த அவர் பாஜகவிற்கு மாறியதும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் குப்பைத் தொட்டிக்கு போனது. அப்போது மம்தா அவரை கடுமையாக திட்டினார்.

இப்போது அவர் தாய்க்கழகம் திரும்ப, கண்கள் பணிக்க, இதயம் கனக்க மம்தாவும் அவரை ஏற்றுக் கொள்ள

முகுல் ராய் மீதான விசாரணை தொடரும் என்று சி.பி.ஐ சொல்லியுள்ளது.

மொத்தத்தில் திரினாமுல்லும் பாஜகவும் ஒன்னு.

இதை அறியாதவர்கள் வாயில் மண்ணு.

Tuesday, June 1, 2021

அவ்ளோ பெரிய அப்பாடக்கரா அவரு?

 


மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலாளர் 31.05.2021 அன்று ஓய்வு பெற வேண்டும். அவருக்கு பணி நீட்டிப்பு கேட்கிறது மாநில அரசு. மூன்று மாதம் கொடுக்கிறது மத்தியரசு.

இடையில் மம்தா - மோடி பிரச்சினை நாடகம் நடந்ததால் அந்த த.செ வை டெல்லிக்கு மாற்றுகிறது மத்தியரசு. 

அதெல்லாம் முடியாது. அவர் இங்கேதான் இருப்பார் என்று அடம் பிடிக்கிறது மம்தா ஆட்சி.

நாங்க போட்ட ஆர்டர் போட்டதுதான், அவரு டெல்லிக்கு வந்தே ஆகனும்னு முரண்டு பிடிக்குது மோடி அரசு.

எனக்கு உங்க பதவி நீடிப்பே வேணாம், நான் இன்னிக்கே ரிடையர் ஆகறேன்னு த.செ ரிடையராகிட்டாரு.

அதெல்லாம் ஒத்துக்க முடியாது. நீதான் எனக்கு மூன்று வருஷத்துக்கு தலைமை ஆலோசகர்னு பதவி கொடுத்துட்டாங்க மம்தா.

டெல்லிக்கு வராம ரிடையரான உன் மேல ஒழுங்கு நடவடிக்கை பாயும்னு சொல்லுது மத்தியரசு.

ஆமாம் மத்தியரசும் மாநில அரசும் இப்படி அடிச்சுக்கற அளவுக்கு அந்த த.செ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?

அதெல்லாம் இல்லை.

மோடியும் சரி, அந்த லேடியும் சரி, இருவருமே கேடிகள், கிரிமினல்கள். அடித்துக் கொள்வது போல நடிக்கவும் செய்வார்கள், அடிக்கவும் செய்வார்கள். இருவருக்கும் எந்த நெறிமுறைகளோ, ஜனநாயக அமைப்புக்களின் மீது நம்பிக்கையோ கிடையாது.

ரௌடிகள் கூட்டம் மோதிக் கொள்ள இப்போது கிடைத்துள்ள காரணம் த.செ. அவ்வளவுதான். 

Friday, December 11, 2020

பேய்க்கும் பேய்க்கும் சண்டை

 


நேற்று மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்களுக்கும் திரிணாமுல் ஆட்களுக்கும் இடையே மோதல் நடந்துள்ளது.

பேய்க்கும் பேய்க்கும் இடையில் சண்டையை இப்போது வேடிக்கை பார்ப்போம். நாளை இவர்கள் கை கோர்த்துக் கொள்வார்கள்.

ஆமாம்.

இரண்டு கட்சிகளுமே எந்த கொள்கையும் இல்லாத ரௌடிகள் கும்பல்கள்தான்.

Saturday, June 29, 2019

உங்க தலைவிக்கும் சொல்லுங்க அம்மணி



திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி திருமதி மஹுவா மொய்த்ராவின் முதல் மக்களவைப் பேச்சு பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

மோடி அரசு ஒரு பாசிஸ அரசு என்று அவர் சூடாக பேசுகிறதை நானும் காணொளியிலும் பார்த்தேன். நன்றாகத்தான் பேசினார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.  தங்களின் கல்லூரிப் பட்டத்தைக் கூட காண்பிக்க முடியாத அமைச்சர்கள் உள்ள நாட்டில் ஏழை மக்களிடம் தாங்கள் இந்நாட்டு குடிமக்கள் என்பதை நிரூபிக்க என்ன ஆவணம் இருக்கும் என்ற கேள்வி சரிதான்.

மோடி பாசிஸ ஆட்சி நடத்துகிறார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

அதே சமயம் மஹூவா மொய்த்ரா சார்ந்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் நடத்துவது என்ன ஜனநாயக ஆட்சியா?

குண்டர்களையும் ரௌடிகளையும் வைத்து ஆட்சி நடத்துகிற மம்தாவின் ஆட்சி மோடி ஆட்சியின் மேற்கு வங்க வெர்ஷன். அவ்வளவுதான்.

முந்தைய பதிவொன்றில் சொன்னது போல இப்போது மேற்கு வங்கத்தில் நடப்பது "பேய்க்கும் பேய்க்கும் சண்டை"

ஆகவே திருமதி மஹூவா மொய்த்ரா அவர்களே  உங்கள் உரையில் சொல்லப்பட்ட அனைத்து நியாயங்களையும் உங்கள் தலைவிக்கும் சொல்லி அவரை திருத்த முயலுங்கள், உங்களால் முடியுமென்றால். 

Wednesday, May 16, 2018

அவர் அங்கே பத்திரமாக, ஆனால் தனியாக . . .

கொல்கத்தா எஸ்பிளனேட் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள ஒரு பூங்காவில் உலகின் முதல் புரட்சித் தலைவரான தோழர் லெனினுக்கு ஒரு சிலை உண்டு.

திரிபுராவில் சங்கிகள் செய்த அநாகரீக, அராஜக செயலை திரிணாமுல் குண்டர்கள் ஏதாவது செய்திருப்பார்களோ என்ற அச்சத்துடன் அந்த சிலை அங்கே உள்ளதா என்று முதல் வேலையாக அங்கே  பார்க்கச் சென்றேன்.

தோழர் லெனின் சிலை எந்த பாதிப்பும் இல்லாமல் கம்பீரமாகவே இருக்கிறது.



ஆனால் அந்த பூங்கா எப்போதுமே பூட்டியே இருந்தது.  எங்கள் விருந்தினர் இல்லத்திற்கு வெகு அருகில் இருப்பதால் ஒவ்வொரு முறை அந்த பக்கமாக சென்ற போதும் உள்ளே செல்ல நினைத்தேன்.

"பார்க் பந்த் கயா" என்று காவலாளி ஒவ்வொரு முறையும் பதில் சொல்லி விட்டார்.

பூட்டிய பூங்காவிற்குள் பத்திரமாகவே இருக்கிறார், ஆனால் யாரும் அருகில் வந்து பார்க்கும் வாய்ப்பில்லாமல் தனியாக . . .

                                                             - பயணம் தொடரும்

Tuesday, May 15, 2018

தமிழக போலீஸை விட கேவலமானவர்கள் . . .


மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மம்தாவின் குண்டர்கள் நடத்திய வெறியாட்டம் குறித்த தீக்கதிர் செய்தியினை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தொடங்கிய அராஜகம், நேற்று உச்சகட்டத்தை அடைந்து பனிரெண்டு  உயிர்களை பலி வாங்கியுள்ளது.

இந்திய முதலாளித்துவ ஊடகங்கள் வழக்கம் போல கள்ள மௌனம் சாதிக்கிறது. கேரளாவில் காவி யாருடைய நகமாவது பிய்ந்து விழுந்தால் வன்முறை என்று அப்போது கூச்சல் போடலாம் என்று காத்திருக்கிறார்களோ என்னமோ?

மார்க்சிஸ்ட் கட்சிக்கும் பாஜக விற்கும் உடன்பாடு  என்ற மிகப் பெரிய பொய்யைப் பிடித்துக் கொண்டு தொங்கிய சமூக ஊடக புரட்சியாளர்கள், போராளிகள் கூட இப்போது வேறு பக்கம் புரட்சி செய்ய போய் விட்டார்களா என்று தெரியவில்லை.

இவ்வளவு கொலைகள் கண் முன்னே நடந்தும் கூட, அவையெல்லாம் சிறு சம்பவங்கள் (STRAY INCIDENTS) என்று மேற்கு வங்க மாநில காவல்துறை தலைவர் குறிப்பிடுகிறார். அதன் மூலம் தமிழக காவல்துறையை விட கேவலமானவர்கள் நாங்கள் என்பதை நிரூபித்து விட்டார்.

"அடித்தால் திருப்பி அடி" என்ற தோழர் சீனிவாசராவின் வழிகாட்டுதலை மேற்கு வங்க தோழர்கள் எப்பொது பின்பற்ற தொடங்குகிறார்களோ, அது வரை தாக்குதல்கள் நிற்கப் போவதில்லை என்பது யதார்த்தம்.

இன்று கள்ள மவுனம் சாதிக்கும் கையாலாகாத கூட்டம் தன் ஆழ்நிலை தியானத்தை அப்போதும் தொடர வேண்டும். 

தீக்கதிர் செய்தி கீழே 

மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் பயங்கரம்

சிபிஎம் ஊழியர் குடும்பமே எரித்துப் படுகொலை 
மாநிலம் முழுவதும் வெறியாட்டம்; 
12 பேர் படுகொலை


கொல்கத்தா, மே 14-எதிர்பார்த்தபடியே மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் குண்டர்கள் வரலாறு காணாத கொடூரவன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டனர். அதுதொடர்பான ஏராளமான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. எனினும்தேசிய ஊடகங்கள், திரிணாமுல் குண்டர்கள் ஏவிய இந்த வன்முறை வெறியாட்டத்தை கட்சிகளுக்கு இடையிலான வெறும் மோதலாக வெளிப்படுத்தின.மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தல் திங்களன்று நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலும், கிட்டத்தட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஆயுதமேந்திய திரிணாமுல் குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். 

பல நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடிகளை துப்பாக்கி முனையில் அவர்கள் கைப்பற்றினார்கள். வாக் காளர்களை வெறிகொண்டு தாக்கினார்கள். ஆயுதங்களைக் காட்டி மிரட்டி வெளியேற்றி னார்கள். பல கிராமங்களை ஆயுதமேந்திய திரிணாமுல் குண்டர்கள் முற்றுகையிட்டனர். கைப்பற்றிய வாக்குச்சாவடிகள் அனைத்தையும் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்து வாக்குகளை பதிவு செய்தனர். எதிர்க்கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். எதிர்த்து நின்ற மக்கள் மீது துப்பாக்கிச்சூடு, குண்டுவீச்சு என பயங்கரங்களை அரங்கேற்றினர். ஏராளமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பெட்டிகளை கைப்பற்றிச் சென்றனர்.

திரிணாமுல் குண்டர்களின் வெறி யாட்டம், தாக்குதல்களில் திங்களன்று மாலை 5 மணி வரை கிடைத்த விபரங்களின்படி 12 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கைமேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.பஞ்சாயத்து தேர்தலையொட்டி எதிர்க்கட்சியினர் மீது, குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்இடதுமுன்னணியினர் மீது ஞாயிறன்று நள்ளிரவு முதலே திரிணாமுல் குண்டர்கள் வன்முறையை துவக்கிவிட்டனர்.

தெற்கு 24 பர்கானா மாவட்டம் நம்கானா ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர் தேபுதாசையும், அவரது மனைவி உஷாதாசையும் குறிவைத்து கொடூரமாக தாக்குதல் நடத்திய குண்டர்கள், அவர்களை வீட்டிற்குள் வைத்துப் பூட்டி வீட்டோடு தீ வைத்து எரித்து படுகொலை செய்தனர். தோழர் தேபுதாஸ், திரிணாமுல் வேட்பாளரை எதிர்த்து பஞ்சாயத்து தேர்தலில் பிரச்சாரம் செய்ததால் தேர்தல் நடப்பதற்குள் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஞாயிறன்று காலை திரிணாமுல் வேட்பாளர் மற்றும் அவரது சக குண்டர்களால் கடுமையாக மிரட்டப்பட்டிருந்தார். எனினும் அவர் துணிச்சலுடன்களத்தில் நின்றார். இந்தப் பின்னணியில் நள்ளிரவில் இருவரும் வீட்டோடு சேர்த்து எரித்து கொல்லப்பட்ட பயங்கரம் நடந்திருக்கிறது.

திங்களன்று காலை வாக்குப் பதிவு துவங்கிய நிலையில், வடக்கு24 பர்கானா மாவட்டம் அம்தங்காவில் சிபிஎம் ஊழியர் தைபூர் ரஹ்மான்கெயின் (28), திரிணாமுல் குண்டர் களால் குண்டுவீசி படுகொலை செய்யப்பட்டார். கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டம் நந்திகிராமில் சிபிஎம் ஊழியர் ஜோகேஸ்வர் கோஷ், அபுமன்னா ஆகியோர் திரிணாமுல் குண்டர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.சிபிஎம் ஊழியர்கள் மட்டுமின்றி சில இடங்களில் காங்கிரஸ், பாஜக ஊழியர்களும் கொல்லப்பட்டனர்.கிட்டத்தட்ட அனைத்து மாவட் டங்களிலும் நூற்றுக்கணக்கான சிபிஎம் ஊழியர்கள் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகினர். 

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ரத்தம் சிந்தப்பட்டது. பல இடங்களில் அனைத்து தரப்புமக்களும் ஒன்றுசேர்ந்து திரிணாமுல் குண்டர்களை பதிலடி கொடுத்து விரட்டியடித்த சம்பவங்களும் நடந்தன.திரிணாமுல் வன்முறை தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட, ஒன்றிய தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் புகார்கள் அளித்துள்ளனர். 

கொல்கத்தாவில் திங்களன்று மாலை தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி சிபிஎம் தலைவர்கள் பிமன்பாசு, சூர்யகாந்த மிஸ்ரா தலைமையில் ஆவேசமிக்க கண்டனப் பேரணியும் நடைபெற்றது.

Monday, May 22, 2017

காக்கி உடை காட்டுமிராண்டிகள் (இதய நோயாளிகள் தவிர்க்கவும்)

காட்டாட்சி நடத்தி வரும் மமதை பானர்ஜியின் நிர்வாகத்தில் காக்கிகள் மட்டும் எப்படி இருப்பார்கள்?

மக்கள் கோரிக்கைகளாக மார்க்சிஸ்ட் கட்சி இன்று நடத்திய பேரணியில் காக்கி உடை அணிந்த காட்டுமிராண்டிகள் நடத்திய அராஜகத் தாக்குதலின் புகைப்பட சான்றுகள் கீழே உள்ளனர்.

தோழர்கள் பிமன் பாசு, சூர்யகாந்த் மிஸ்ரா, முகமது சலீம் போன்ற மூத்த தலைவர்களும் தாக்குதலில் காயமடைந்தனர்.

செங்கொடி இயக்கம் இதற்காக அஞ்சி விடாது. நிச்சயம் பழி தீர்க்கும்.

இதய பலவீனம் உள்ளவர்கள் படங்களை பார்க்க வேண்டாம்