Showing posts with label அதிகார துஷ்பிரயோகம். Show all posts
Showing posts with label அதிகார துஷ்பிரயோகம். Show all posts

Thursday, July 28, 2022

தீர்ப்பும் - திணிப்பும்

 



தீர்ப்பும் - திணிப்பும்

தோழர் க.கனகராஜ்,
மாநில செயற்குழு உறுப்பினர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)


நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் பாஸ்போர்ட் குறித்தான ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளார். அந்த தீர்ப்பில் “ஐ.பி.எஸ். அதிகாரி திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் நேர்மையானவர் என நான் சான்றளிக்கிறேன்” என்று குறிப்பிட்டுவிட்டு, “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தை கையில் எடுத்ததை நான் பாராட்டுகிறேன். அவர் ஜனநாயகத்தின் காவலராக இருந்து வருகிறார். அவர் இல்லையென்றால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்திருக்காது”என்று அண்ணாமலைக்கு Annamalai ஆஹா, ஓஹோ என்று பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.


இந்த வழக்கை 2021ல் ஒரு வழக்கறிஞர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருக்கிறார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பலரையும் விசாரித்து விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில் இந்த பிரச்சனையில் திரு அண்ணாமலை ஆளுநருக்கு ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் முழுக்க, முழுக்க திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்களை குறிவைத்தே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அந்த கடிதத்தின் இரண்டாம் பக்கத்தின் ஏழாவது பாராவில் திரு அண்ணாமலை மிகக் குறிப்பாக, திரு டேவிட்சன் தேவாசீர்வாதத்தை குறிவைத்து கீழ்க்கண்டவாறு குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.

“இந்த வழக்கை கவனித்தால் ஒரு கும்பல் சேர்ந்து இதைச் செய்திருப்பதாக தெரிகிறது. இந்த போலி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்ட காலத்தில் மதுரை காவல்துறை ஆணையாளராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்களின் ஈடுபாடு இல்லாமல் கீழ்மட்ட அதிகாரிகள் இந்த குற்றச் செயலை புரிந்திருக்க முடியாது.” என்று நேரடியாக திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்களை வன்மத்துடன் குறிவைத்திருக்கிறார்.

விசாரணை நடந்து கொண்டிருக்கிறது, குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்படவிருக்கிறது என்கிற நிலையில் திரு அண்ணாமலையின் முழு கவனமும் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்களை குறிவைத்தே இருக்கிறது. ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்த திரு அண்ணாமலைக்கு நிச்சயமாக பாஸ்போர்ட் சம்பந்தமான விபரங்களில் யாருக்கு தொடர்பிருந்திருக்கும் என்பது தெரிந்திருக்கும். இருந்தும் டேவிட்சன் தேவாசீர்வாதம் என்கிற பெயருக்காகவே திட்டமிட்டு இந்த கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அப்படியிருக்கும்போது அண்ணாமலையின் நோக்கமே கெட்ட நோக்கமாக இருந்திருக்கிறது. இந்த வழக்கை திசை திருப்பும் நோக்கமாக இருந்திருக்கிறது.

எனவே, இந்த வழக்கில் அண்ணாமலையை குறிப்பிட்டு ஏதாவது கூறவேண்டுமென்றால் அண்ணாமலை திட்டமிட்டு வழக்கை திசை திருப்ப முயற்சித்திருக்கிறார் என்று தான் குறிப்பிட்டிருக்க வேண்டும். மாறாக அவர் ஜனநாயகத்தின் காவலராக இருந்து வருகிறார் என்று நீதியரசர் மாண்புமிகு ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் கூறியிருப்பது நீதிமன்ற நடைமுறைகளிலிருந்து விலகியதாகவும், பாஜக தலைவராக இருப்பதால் அதை பாராட்ட வேணடுமென்கிற நோக்கத்தோடு சொல்லப்பட்டதாகவுமே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இவ்வளவு விசாரணை நடைபெற்ற பிறகு திரு. அண்ணாமலை இல்லை என்றால் “இந்த விவகாரம் வெளிச்சத்திற்கே வந்திருக்காது” என்று எல்லா புகழையும் அண்ணாமலைக்கு நீதியரசர் வழங்கியிருக்கிறார். ஜனநாயகத்தின் பாதுகாவலராக இருந்து வருகிறார் (இந்து தமிழ் திசை) என்பது இந்த வழக்கில் மட்டுமின்றி பொதுவாகவும் அவரைப்பற்றி சொல்வதாகவே அமைந்திருக்கிறது.

கடந்த காலத்திலும் பாஜகவோடு தொடர்புடைய மாரிதாஸ் மீதான வழக்கை அதிவிரைவில் நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் ரத்து செய்ததை வழக்கத்திற்கு மாறான வேகம் காட்டப்பட்டதாக விமர்சனம் எழுந்ததை புறந்தள்ளி விட முடியவில்லை. இதேபோன்று மைக்கேல்பட்டி மாணவி தற்கொலை வழக்கையும் மின்னல் வேகத்தில் சிபிஐக்கு மாற்றிய பிரச்சனையும் விமர்சனத்திற்கு உள்ளானது. இவற்றையெல்லாம் பார்க்கிற பொழுது நீதியரசர் மாண்புமிகு ஜி.ஆர். சாமிநாதன் அவர்கள் தனது தனிப்பட்ட பாஜக பாசத்தை நீதிவழங்கும் முறையிலும் கலந்திருக்கிறாரோ என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

இந்த நேரத்தில் கே.எம். ஜோசப் என்கிற உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் ஏகமனதாக பரிந்துரைத்ததையும், அதை பாஜக ஒன்றிய அரசு மறுதலித்ததையும் கொலிஜியம் மீண்டும் வலியுறுத்திய பிறகு பணி மூப்பை பின்னுக்குத் தள்ளி நியமனம் செய்ததையும் நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. பெயர்களின் காரணமாக உள்நோக்கத்தோடு ஒரு அதிகாரியின் மீது சம்பந்தமே இல்லாமல் குற்றம் சுமத்துவதும், ஒரு நீதிபதியை காரணமே இல்லாமல் நிராகரிப்பதும் பாஜகவின் வழக்கமாக இருக்கிறது. நீதிமன்றங்கள் இதற்கு துணை போகக் கூடாது.

Monday, August 23, 2021

இரண்டு தவறுகள் - இரண்டு பலிகள்

 


இன்றைய இரண்டு துயரங்கள்

 இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில் படித்த இரு துயரமான செய்திகள் மனதை மிகவும் கஷ்டப்படுத்தியது.

 விழுப்புரத்தில் திமுக கூட்டத்திற்கு கொடிக்கம்பம் அமைக்கும் பணியில் பனிரெண்டு வயது சிறுவன் மின்சாரம் தாக்கி இறந்து போனான்.

 அந்த குடும்பத்திற்கு இழப்பீடு  கொடுத்து சட்டரீதியான பிரச்சினை வராமல் சமாளித்திருக்கலாம். ஆனால் குழந்தைத் தொழிலாளரை பயன்படுத்தியது என்பது மிகப் பெரிய தவறு. ஆளும்கட்சியானாலும் தவறு தவறுதான். இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

 பூந்தமல்லி பக்கத்தில் ஐந்து சிறுவர்களை தெரு நாய் கடித்துள்ளது. அதில் நால்வர்  தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். ஒரு சிறுவனை   மட்டும் அவனது  குடும்பத்தினர் நாட்டு வைத்தியரிடம் கூட்டிச் சென்றுள்ளனர்.

 இந்த பையன் மட்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டு ரேபிஸ் பீடிக்கப்பட்டு இறந்து போயிருக்கிறான். மற்றவர்கள் நன்றாகவே இருக்கிறார்கள். பெற்றோரின் மூட நம்பிக்கை பிள்ளையின் உயிரை பறித்து விட்டது.

தெரு நாய் பிரச்சினைக்கு எப்போதுதான் தீர்வு வருமோ? 

Wednesday, October 14, 2020

வெறியன் கவர்னரை வீட்டுக்கு அனுப்பு

 




மத வெறி பிடித்த சங்கிகளை கவர்னர்கள் ஆனால் என்ன ஆகும் என்பதற்கான உதாரணத்தை மகாராஷ்டிர கவர்னர் பகத்சிங் கோஷியாரி உருவாக்கி உள்ளார்.

 மகாராஷ்டிராவில் கோவிட் 19 காரணமாக இன்னும் வழிபாட்டு தளங்கள் திறக்கப்படவில்லை. வழிபாட்டு தளங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்று பாஜக அங்கே ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. ஆளுனரிடம் மனுவும் அளித்துள்ளது.



 அந்த மனுக்களை முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு அனுப்பியுள்ளார் கோஷியாரி. அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் அதோடு அனுப்பியுள்ள கடிதம்தான் வில்லங்கமானது. வழிபாட்டுத்தளங்கள் என்று பொதுப்படையாக இவர்கள் சொன்னாலும் இவர்கள் குரங்குக் குளியல் என்னவோ கோயில்களை திறக்க வேண்டும் என்பதுதான்.

 உணவு விடுதிகளையும் மது பானக் கடைகளையும் திறப்பதனால் பரவாத கொரோனா வழிபாட்டுத் தளங்களை திறந்தால் மட்டும் பரவிடுமா என்று கேட்டுள்ளார். இதைக் கூட விவாதத்திற்கான ஒரு விஷயம் என்று எடுத்துக் கொள்ளலாம். மதுபானக் கடைகளை திறப்பது என்பதும் தேவையற்றதுதான். அதே நேரம் மதுபானக் கடைகளை திறக்க வலியுறுத்தியது மத்தியரசு என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

 அதற்கு பிறகு அவர் சொல்லியுள்ளவைதான் மோசமானவை. “நீங்கள் முதல்வராக பதவியேற்ற உடன் (கொரோனா காலத்திற்கு முன்பாக) கோவில்களுக்கெல்லாம் சென்று வந்த இந்துத்துவர் நீங்கள். இப்போது உங்களுக்கு என்ன ஆனது? வழிபாட்டுத் தளங்களை திறக்கக் கூடாது என்று உங்களுக்கு ஏதாவது தெய்வ வாக்கு வந்திருக்கிறதா? அல்லது நீங்கள் மதச்சார்பில்லாதவர் ஆகி விட்டீர்களா? அந்த வார்த்தையையே வெறுத்தவர் ஆயிற்றே நீங்கள்!”

 என்று எழுதியுள்ளார்.

 அந்த மண்ணாந்தை கோஷியாரிக்கு சொல்ல வேண்டியது என்னவென்றால் “மதச் சார்பின்மை என்பதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளய்யா மூடரே!  அரசியலில் இருந்தும் அரசு நடவடிக்கைகளில் இருந்தும் மதத்தை விலக்கி வைப்பது மட்டுமே அரசியல் சாசனம் சொல்லும் மதச் சார்பின்மை. மத உணர்வுகளையும் மத வெறியையும் தூண்டி விட்டே அரசியல் ஆதாயம் அடையும் போக்கிரிகளுக்கு மதச் சார்பின்மை என்ற வார்த்தை வெறுப்பாகத்தான் இருக்கும். நீயும் என்னை மாதிரி ஆள்தானே! இப்போ என்ன யோக்கியனாயிட்டியா என்று கேட்டு உசுப்பேத்தும் கீழ்த்தரமான வேலையைச் செய்வது ஒரு கவர்னரின் வேலை அல்ல. என்ன செய்ய! 2014 க்குப் பிறகு இந்தியாவில் அத்தனை அரசியல் சாசனப் பொறுப்புக்களும் மோசமானவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு மதிப்பிழந்து விட்டதே! “

 உத்தவ் தாக்கரே அனுப்பியுள்ள பதிலும் சூடானது.

 என்னுடைய இந்துத்துவ நம்பிக்கை குறித்து நீங்கள் எனக்கு சான்றிதழ் தர வேண்டியதில்லை. மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று வர்ணித்தவர்களை வரவேற்பவர்கள் (அவ்வாறு சொன்ன கங்கணாவை ஒரு நாள் முன்பாகத்தான் கோஷியாரி சந்தித்துள்ளார்) எனக்கு உபதேசிக்க வேண்டாம். மக்களின் வழிபாட்டு நம்பிக்கை மீது எங்களுக்கும் அக்கறை உள்ளது. அதை விட அதிகமாக அவர்கள் உயிர் மீது அக்கறை உள்ளது. உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும். மதச்சார்பின்மை பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். கோயில்களை திறந்தால் இந்துத்துவம், திறப்பதை ஒத்தி வைத்தால் மதச் சார்பின்மை என்ற பார்வை சரியல்ல. மேலும் மதச்சார்பின்மை என்பது இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை. அரசியல் சாசனத்தின் அடிப்படையில்தான் செய்லபடுவோம் என்று சொல்லிதான் நீங்களும் நானும் பதவி ஏற்றுக்கொண்டோம் என்பதை நினைவு படுத்துகிறேன்.

 அரசியல் சாசனப் பதவியான ஆளுனராக இருந்து கொண்டு அரசியல் சாசனத்தை நக்கலடித்துப் பேசும் கோஷியாரியை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு செய்தால் அவருடைய பதவி நீடிக்காது என்பதுதான் யதார்த்தம்.

 பிகு: படுபாவி கோஷியாரே, உத்தவ் தாக்கரே சொன்னது பற்றியெல்லாம் என்னையும் எழுத வச்சுட்டியே!