Showing posts with label நீதி. Show all posts
Showing posts with label நீதி. Show all posts

Saturday, January 8, 2022

வெண்மணியில் இறந்தவர் 45 பேர்

 



 மூத்த வழக்கறிஞர் தோழர் ஞானபாரதி அவர்களின் முகநூலில் படித்தது. இப்போது அவர் அந்த பதிவை எடுத்து விட்டதால், நினைவிலிருந்து எழுதுகிறேன்.

 


வெண்மணியில் இறந்தவர்கள் 44 பேர் மட்டுமல்ல. கோபால கிருஷ்ண நாயுடு போன்ற செல்வந்தர்கள் எல்லாம் கொலை செய்திருக்க மாட்டார்கள் என்று சொல்லி குற்றவாளிகளை விடுதலை செய்யப்பட்ட போது தலை துண்டாகி ரத்தம் கொப்பளிக்க  நீதி தேவதையும் மண்ணில் விழுந்து இறந்து போனது.

 

Monday, October 15, 2018

மோடி, அமித்திற்கும் தண்டனை கிடைக்குமா?



இன்றைய ஹிந்து நாளிதழின் தலைப்புச் செய்தி 

"அஸ்ஸாமில் போலி எண்கவுண்டர் நடத்தியதற்காக ஒரு மேஜர் ஜெனரல் உட்பட ஏழு ராணுவ அதிகாரிகளுக்கு ராணுவ கோர்ட் இருபத்தி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தண்டனை கொடுத்துள்ளது." 

என்று கூறியது.

சரிந்து வரும் செல்வாக்கை மீட்டெடுக்க

சொஹாராபுதின் ஷேக்,
இஷ்ரத் ஜஹான்,
துளசி பிரஜாபதி

என்று மூன்று போலி எண்கவுண்டர்களை நடத்தி ரத்த நாற்றத்தில் இன்று பிரதமராகவும் பாஜக அகில இந்தியத் தலைவராகவும் உள்ள மோடி மீதும் அமித் ஷா மீதும் சட்டம் பாயுமா?

அவர்களுக்கும் தண்டனை கிடைக்குமா?

அமித் ஷாவை விடுதலை செய்தவர்  மாநில ஆளுனராக,
விடுதலைக்காக வாதாடியவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக,
நற்சான்றிதழ் அளித்தவர் வெளிநாட்டு தூதராக,

சொகுசாக வாழும் நாட்டில்

வழக்கை விசாரித்த ஒரு கீழமை நீதிமன்ற நீதிபதி கோடிக்கணக்கான ரூபாய் கையூட்டை மறுக்க, அன்றே அவர் மர்மமாய் இறந்து போக, அந்த வழக்கை விசாரிக்க வேண்டாம் என்று தீர்ப்பளித்த நீதியரசர்

அடுத்த பதவிக்காக காத்திருக்க

நீதிமன்றமாவது ஹெச்.ராஜா சொன்னதாவது 

என்று நாம் சொன்னால் 

நம் மீது மட்டும் பாயும் சட்டம் . . .




Thursday, June 14, 2018

தீர்ப்பின் பின்னே தெரிவது என்ன?



பதினெட்டு எம்.எல்.ஏ க்களின் பதவி பறிப்பு வழக்கில் இரண்டு நீதிபதிகள் இரு வேறு தீர்ப்புக்கள் கொடுத்ததன் மூலம் பிரச்சினை இன்னும் கால தாமதமாகப் போகிறது என்பது ஒரு புறம் இருந்தாலும் தலைமை நீதிபதியின் தீர்ப்புதான் சர்ச்சை நிறைந்ததாக உள்ளது.

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ க்கள் விஷயத்தில் சபாநாயகருக்கு உரிமை கிடையாது என்று சொன்ன அதே வாயால்

தமிழக சபாநாயகரின் செயலை நியாயப்படுத்தியுள்ளார்.

இது முரண்பாடு என்று சட்ட ஞானம் உள்ளவர்கள் சொல்லலாம். 

ஆனால் இரண்டு தீர்ப்பும் ஒன்றுதான்.

இரண்டுமே பாஜக விற்கு சாதகமான தீர்ப்புதான்.

பாஜக ஆட்கள் ஜனநாயக விரோதமாக நியமனம் செய்ததை ஏற்றுள்ளார்.

பாஜகவின் அடிமை ஆட்சிக்கு எதிரான எம்.எல்.ஏ க்கள் நீக்கப்பட்டதை ஏற்று எடுபிடி ஆட்சி தொடர்வதையும் உறுதி செய்துள்ளார்.

இது சட்டத்தின் தீர்ப்பா?
அரசியல் தீர்ப்பா?

இதன் பின்னணியில் எதிர்கால எதிர்பார்ப்புக்கள் இருக்கிறதா?

அமித் ஷாவை விடுதலை செய்த கையோடு கேரளாவின் ஆளுனராக பொறுப்பேற்றுக் கொண்ட கொடுமையை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா என்ன?


Thursday, June 15, 2017

வைரத்தை விழுங்கிய எலி



வாட்ஸப்பில் ஆங்கிலத்தில் வந்த கதையை தமிழில்   கொடுத்துள்ளேன்.



வைர வியாபாரியின் கடையில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு எலி, ஒரு பெரிய வைரக்கல்லை விழுங்கி விட்டது. அந்த வியாபாரியால் எலியை பிடிக்க முடியாமல் எலி பிடிப்பவரை கூட்டி வந்தார். எலி பிடிப்பவரைப் பார்த்த உடன் எலி ஓடி விட்டது. துரத்திக் கொண்டே போனால் அங்கே ஒரு மறைவிடத்தில் நூற்றுக் கணக்கான எலிகள் இருந்திருக்கிறது.

அங்கே ஒரு எலி மட்டும் சற்று உயரத்தில் கால் மீது கால் போட்டுக் கொண்டு பந்தாவாக இருந்திருக்கிறது. எலி பிடிப்பவர், அதை குறி வைத்துத் தாக்கி பிடித்து கொன்று விட்டார். அதன் வயிற்றில்தான் வைரம் இருந்தது.

“எப்படி இந்த எலியை சரியாக கண்டுபிடித்தீர்கள்” என்று வைர வியாபாரி வியப்புடன் கேட்க

அந்த எலி பிடிப்பவர்

“அதொன்றுமில்லை. முட்டாள்களிடத்தில் திடீரென செல்வம் அதுவும் முறைகேடாக, சேரும் போது அவர்கள் செய்யும் வெட்டி பந்தா ஓவராகத்தான்  இருக்கும்”

இது சரிதான். எத்தனை பேரை பார்த்துக் கொண்டு இருக்கின்றோம்!!!!!!!!

Thursday, June 25, 2015

ஜட்ஜய்யா, தீர்ப்பை மாத்துங்க





இன்னும் எத்தனை விசித்திரமான தீர்ப்புக்களை இந்திய நீதிமன்றங்கள் அளிக்கப் போகிறதோ?

மைனர் சிறுமியை பாலியல் கொடுமை செய்தான் ஒரு கயவன். கர்ப்பமுற்ற அந்தப் பெண் ஒரு குழந்தையையும் பெற்றெடுத்தாள். டி.என்.ஏ சோதனை முடிவு வெளிவரும் வரை தான் ஒரு யோக்கியன் என்றே வாதிட்டுக் கொண்டிருந்தான் அவன்.

அந்த சிறுமியோ இல்லை அவளது குடும்பத்தினரோ எந்தவொரு சமரசத்தையோ இல்லை இழப்பீடையோ விரும்பவில்லை. கேட்கவில்லை. மாறாக தவறிழைத்த அந்த கொடூரனை சட்ட ரீதியாக தண்டிக்கவே விரும்பினார்கள்.

சிறையில் அடைக்கப்பட்ட அந்த பாவி பிணை கேட்டான். அவன் என்ன உரிமைக்காக போராடிய தொழிலாளியா இல்லை தன் நிலத்தை பன்னாட்டுக் கம்பெனி அபகரிக்கக் கூடாது என்று குரல் கொடுத்த விவசாயியா, பிணையை மறுப்பதற்கு?

திருடர்களுக்கும் மோசடிப் பேர்வழிகளுக்கும் உதவி செய்வதற்கு ஆட்சியாளர்களின் ஈர இதயத்தில் மனிதாபிமானம் பொங்கி வழியும் காலமல்லவா இது? பாலியல் கொடுமை செய்தவன் மீது நீதிபதிக்கு மட்டும் மனிதாபிமானம் வாராதா என்ன?

பிணை கொடுத்தார். அதற்கொரு விளக்கம் சொல்லியுள்ளார் பாருங்கள். அப்படியே மெய் சிலிர்க்கும்.

“இந்த பிரச்சினைக்கு ஒரு இனிய முடிவு வர வேண்டுமானால், குற்றம் செய்தவனே அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால், அதற்கு பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டுமானால் இந்த உத்தமன் உள்ளேயிருந்தால் அது எப்படி சாத்தியம்? ஆகவே அவருக்கு பிணை அளிக்கிறேன்” என்று அட்சதை தூவி ஆசீர்வாதம் செய்வது போல சிறைக் கதவுகளை திறக்க வைத்திருக்கிறார்.

“இது என்ன அபத்தம்?” என்று நாம் கேட்பதற்கு முன்பாக அந்தப் பெண்ணே கேட்டு விட்டாள். அவனோடு சேர்ந்து வாழ்வது என்பதெல்லாம் முடியாத காரியம் என்றும் ஆணித்தரமாக சொல்லி விட்டாள். பாலியல் வன் கொடுமை வழக்குகளில் சமரசப் பேச்சுவார்த்தை என்பதற்கு இடமே கிடையாது என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு முற்றும் முரணானது சென்ன உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு என்று பல சட்ட வல்லுனர்களும் கூறியுள்ளனர்.

ஒரு திரைப்படத்தில் விவேக் பாலியல் குற்றவாளிக்கு அளிக்கும் தீர்ப்பு போல தீர்ப்பளிக்க முடியாது என்று எல்லோருக்கும் தெரியும். அதற்காக ஆலமரத்தடி நாட்டாமைகளாகவா நீதியரசர்கள் செயல்படுவது? இன்னும் எத்தனை குமார சாமிகள் இந்தியாவில் இருக்கின்றனரோ?

ஜட்ஜய்யா, தீர்ப்பை மாத்துங்க…..

Monday, June 1, 2015

புதுச்சேரி, ஆந்திர அரசுகளுக்கு மாறாக கர்னாடக அரசு

 http://www.thehindu.com/multimedia/dynamic/01334/18TH_SUPREME_COURT_1334414f.jpg

லேட்டானாலும் லேட்டஸ்டாக கர்னாட அரசு அப்பீல் செல்வது என்று முடிவெடுத்து விட்டது.

சங்கர ராமன் கொலை வழக்கில் புதுச்சேரி அரசும் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் ஆந்திர அரசும் பதுங்கியது போல அல்லாமல் ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடிவெடுத்த கர்னாடக அரசுக்கு பாராட்டுக்கள். 

ஆனாலும் இப்போது எழுகிற கேள்வி.

உச்ச நீதிமன்றம் உண்மையை நிலை நாட்டுமா?

நீதிமான் குமாரசாமியின் 8.12 % என்ற அடிப்படையில் உள்ள தப்புக் கணக்கை நீக்கினாலே தண்டனை கிடைப்பது நிச்சயம்.

ஆனால் 

லாலுவிற்கும் சௌதாலாவிற்கும் காலம் தாழ்ந்து கிடைத்த பிணை ஜெ விற்கு மிகவும் சீக்கிரமாக கிடைத்தது,

பவானிசிங் நியமனத்தில் இரு நீதிபதிகளின் மாறுபட்ட நிலைப்பாடு,

மத்தியரசிற்கும் அதிமுகவிற்குமான உறவு நிலையில் முன்னேற்றம்,

இவை எல்லாவற்றையும் விட நீதித்துறை என்பது அடிப்படையில் ஆளும் வர்க்கத்தின் ஒரு கருவிதான் என்ற யதார்த்தம்.

இவையெல்லாம் மீறி உச்ச நீதிமன்றத்தில் நீதி நிலை நாட்டப்பட்டால்???

முதலில் நடக்கட்டும்.  என்ன எழுதுவது என்பதை  அப்போது பார்த்துக் கொள்ளலாம்.
 

Friday, May 15, 2015

பார் கவுன்சிலுக்கு வேற வேலை இல்லையா?



தப்புக் கணக்கு தீர்ப்பை விமர்சித்தால் அவதூறு வழக்கு தொடர்வோம் என்று பார் கவுன்சில் மற்றும் தமிழக வழக்கறிஞர்கள் சங்கம் எச்சரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பார்த்தேன்.

ஏராளமான வழக்கறிஞர் சங்கங்கள் உள்ளன. அதிலே ஏதாவது ஒரு அம்மா ஆதரவு வக்கீல் சங்கம் அப்படி சொல்லியிருந்தால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் பார் கவுன்சில் என்பது அப்படி இல்லை.

அது கிட்டத்தட்ட ஒரு அரசு அமைப்பினைப் போன்றதுதான். அரசியல் கட்சிகளையோ இல்லை பொது மக்களையோ மிரட்டுவது அதன் வேலை கிடையாது.

வழக்கறிஞர்களை நெறிப்படுத்துவது என்பது அதன் முக்கியமான பணி. வழக்கறிஞர்களுடைய உரிமைகளுக்காக செயல்படுவது என்பது மற்றொரு பணி.

இந்தப் பணிகளை பார் கவுன்சில் சிறப்பாக செய்கிறதா என்பதை வழக்கறிஞர்கள்தான் சொல்ல வேண்டும்.

காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்கள்,
நீதிபதிகள் நியமனத்தில் இல்லாதிருக்கும் வெளிப்படைத் தன்மை,
தேங்கிக் கிடக்கும் வழக்குகள், அலையும் அப்பாவி மக்கள்,
அடிக்கடி நிகழும் நீதிமன்ற புறக்கணிப்புகள்,
அடிப்படை வசதிகளற்ற நீதிமன்றங்கள்

போன்ற பிரச்சினைகளில் பார் கவுன்சில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை தெரிவித்தாலும் மகிழ்ச்சியுறுவேன்.

அது போல மைக்கேல் குன்ஹாவை மிகக் கேவலமான முறையில் தமிழகம் முழுதும் அதிமுக ரத்தங்கள் திட்டி அசிங்கப் படுத்திய போது அதற்கு எதிராக பார் கவுன்சில் இது போன்ற எச்சரிக்கை விடுத்ததா என்பதைக் கூட யாராவது விளக்கினால் நலம்.

அப்படி இல்லாமல் அம்மாவிற்காகத்தான் இந்த சிறப்பு நடவடிக்கை என்றால் பார் கவுன்சிலிடம் இரண்டு செய்திகளை சொல்ல வேண்டியிருக்கும்.

“உங்களுக்கு விதிக்கப்பட்ட வேலைகளை முதலில் பாருங்கள். இந்த அரசியல் உங்களுக்கானது அல்ல”

இதை விட இன்னும் அழுத்தமாக சொல்வோம்.

நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்.
நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே.

அதை கீழேயுள்ள படமும் உணர்த்தும்.


Tuesday, April 2, 2013

நெத்தியடி

உச்ச நீதிமன்றம் அளித்துள்ள நெத்தியடித் தீர்ப்பு இது


புற்றுநோய் மருந்துக்கு காப்புரிமை கோரிய அந்நியக் கம்பெனி உச்சநீதிமன்றம் தள்ளுபடி

 

புதுதில்லி, ஏப். 1 -சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நிறுவனமான நோவர்டிஸ், தாங்கள் சந்தைப் படுத்தி வரும் இரத்தப் புற்று நோய்க்கான மருந்தான ‘க்ளிவெக்’ மருந்தின் காப்புரிமையைக் கோரி தொடுத்திருந்த வழக்கினை உச்சநீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்தது. இந்த மருந்தின் அடிப்படைப் பொருள் கொண்டு மற்ற நிறு வனங்கள் தயாரிப்பதைத் தடை செய்யும் நோக்கில் மேற்கண்ட அந்நியப் பன்னாட்டு மருந்துக் கம்பெனி இந்த மனுவை தாக்கல் செய்தது.

நீதிபதிகள் அப்தாப் ஆலம், ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகி யோர் அடங்கிய அமர்வு முன் னர் இந்த வழக்கு வந்தது. டிசம் பர் 4க்குப் பிறகு சுமார் இரண் டரை மாதங்கள் தொடர்ந்து நடந்த சூடான விவாதங்களுக் குப் பிறகு திங்களன்று முடிவு அறி விக்கப்பட்டது. இந்த மனு வைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர். மேலும் நோவர்டிஸ் நிறுவனத் துக்கு அபராதமும் விதிக்கப் பட்டது.சென்னையில் உள்ள ஐபி ஏபி என்ற மரபுரிமை அறிவு சார் காப்புரிமை வாரியம், நோவர்டிஸ் அளித்த காப் புரிமை மனுவை நிராகரித்தது.

 இதன் பின்னரே இந்த நிறு வனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது.நோவர்டிஸ் நிறுவனத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட் டதை அடுத்து அந்த நிறுவனத் தின் கடந்த 7 வருட உரிமை கோரல் போராட்டம் இந்தியா வில் தோல்வி அடைந்துள்ளது. மேலும், பன்னாட்டு நிறுவனங் களின் மருந்து தொடர்பான இடுபொருள் நுட்பத்துடன் கொண்டு தயாரிக்கப்படும் இந்திய நிறுவனங்களின் உற்பத் தியைக் கட்டுப்படுத்தும் போக் கும் முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதை அடுத்து இரத்தப் புற்றுநோய்க்கான இந்த மருந் தின் தயாரிப்பு விலை மலிவாக இருக்கும். வழக்கம்போல் மலி வான விலையில் இந்த மருந்து இந்தியச் சந்தைகளில் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.அந்த வகையில் உச்ச நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பு, உயிர் காக்கும் மருந்துகள் தயாரிப் பில் மாறுதலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய மருந்துச் சந்தை யைக் குறிவைத்து செயல்படும் மேலை நாட்டு மருந்து நிறு வனங்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பெரிய பின்னடைவு என் றும் கருதப்படுகிறது.

நோவர்டிஸ் நிறுவனப் பங்குகள் 7சதவீதம் சரிவு

நோவர்டிஸ் நிறுவன இரத்தப் புற்றுநோய்க்கான மருந்து காப்புரிமை கோரும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அந்த நிறுவன மனுவைத் தள் ளுபடி செய்த சிறிது நேரத்தில், அந்த நிறுவனத்தின் பங்குகள் 7சதவீதம் சரிந்தது.நோவர்டிஸ் பங்குகள் காலை 10.47க்கு ரூ.571ஆகச் சரிந் தது. பின்னர் மேலும் சரிந்து மிகக் குறைந்த அளவாக ரூ.558க்கு சரிந்தது. மும்பை பங்குச் சந்தையின் ஆரோக்கி யம் சார்ந்த நிறுவன பங்குகள் பிரிவில் சரியான முன்னேற்றம் காணப்படாமல், கடந்த காலாண்டு கால அளவில் நோவர்டிஸ் பங்குகள் 15சத வீதம் சரிந்து காணப்பட்டது.

நன்றி - தீக்திர் நாளிதழ் 02.04.2013


Sunday, March 10, 2013

இவரைப் போல் ஒருவர் இனி எப்போது இங்கே ?



 

இப்படி ஒரு நீதிபதி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு
இனி எப்போது கிடைப்பார்?

எளிமையானவர்கள் வரலாம். 
ஆனால் இவர் போன்ற
வலுவான தத்துவப் பின்னணியோடு????





பதவி ஓய்வு - பணியின் தொடக்கம் ஒரு மாறுபட்ட நீதிபதி

 


அவரைப் பற்றிப் பாராட்டிப் பேச ஆயிரம் விசயங்கள் உண்டு. ஆனால் அதைப் பேச விடவில்லை அவர். “சம்பிர தாய வழியனுப்பு நிகழ்ச்சி எதுவும் நடத்த வேண்டாம்,” என்று கேட்டுக்கொண்டார். வழி யனுப்பு விழாக்கள் எப்படி ஆடம்பரமாக நடத்தப்படுகின்றன எனக் குறிப்பிட்டு, தனக்கு அத்தகைய விழா தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுத்துப்பூர்வமாகவே தெரிவித் தார். தாம் பதவி ஓய்வுபெறும் நாள் வழக்க மான ஒரு நாளாகவே இருக்க வேண்டும் என்று விரும்பி, அப்படியே அன்பான கைகுலுக் கல்களோடு வெள்ளியன்று (மார்ச் 8) விடைபெற்ற அவர் நீதிபதி கே. சந்துரு.2009 நவம்பர் 9 அன்று உயர்நீதிமன்ற நீதி பதியாகப் பொறுப்பேற்ற அன்று அவர் செய்த செயல் பலரையும் புருவம் உயர்த்த வைத் தது. தனது சொத்துக்கணக்கு ஆவணங்களை தலைமை நீதிபதியிடம் ஒப்படைத்தார். அன்று அவர், பதவிக் காலம் முடிவதற்குள் 1 லட்சம் வழக்குகளை முடித்துவிட விரும்புவதாகத் தெரிவித் தார். ஓய்வு பெறும் நாளில் கிட்டத்தட்ட அந்த எண்ணிக்கையைத் தொட்டுவிட்டார்.


“அவர் ஒரு வழக்கை அனுமதிப்பதற் கான விசாரணைக்கு வரும்போதே அதைப் பற்றி முழுமையாகப் படித்துவிட்டு வருவார். ஆகவே நீதிமன்ற நடைமுறையில் தாமதம் ஏற்படாது. அண்மையில் உடல் நலம் குன் றியபோது தவிர்க்க இயலாத நிலையில் விடுப்பு எடுத்தார். மற்றபடி விடுப்பு எடுப்ப தில்லை. இத்தகைய அவரது அணுகுமுறை களைப் பார்த்த நாங்கள், இந்த லட்சிய எண்ணிக்கையை அவர் எளிதாக எட்டிவிடு வார் என்று ஊகித்தோம். அதுதான் நடந்திருக் கிறது,” என்கிறார் ஒரு மூத்த வழக்கறிஞர்.பிரிட்டிஷ் காலத்திய மரபுப்படி உயர் நீதிமன்ற நீதிபதியை வழக்கறிஞர்கள் “மை லார்டு” என்றே குறிப்பிடுவது இப் போதும் தொடர்கிறது. ஏற்கெனவே ஒரு சில நீதிபதிகள் இதை மாற்ற முயன்ற துண்டு. அவர்களோடு தாமும் சேர்ந்து கொண்டவராக, தம்மை “சார்” என்று அழைத்தால் போதும் என்று வலியுறுத் தினார் சந்துரு.அதே போல், தாம் நீதிமன்றத்திற்குள் வருகிறபோது தமது வருகைiயை ஒரு உதவியாளர் (டவாலி) அறிவித்துக் கொண்டே வருவார் என்ற நடைமுறையை யும் அவர் மாற்றினார். தமது அறையி லிருந்து தாமே சாதாரணமாக நீதிமன்றத் திற்கு வந்துசென்றார்.நீதிபதி என்றால் காலில் ஷூ, சாக்ஸ் அணிந்து கொண்டுதான் வரவேண்டும் என்ற வழக்கத்தையும் உடைத்து, செருப் பணிந்து வந்தார். தமது அறை வாசல் சுவ ரில், தம்மைப் பார்க்க வருகிறவர்கள் உரிய ஆவணங்களை மட்டுமே கொண்டுவர வேண்டுமேயன்றி பூச்செண்டு, பழம் போன்ற பொருள்களைக் கொண்டுவரக்கூடாது என்று அறிவிப்பையே ஒட்டிவைத்திருநதார். “இவரது பணிகளின் சிறப்பு என்ன வென்றால் மக்கள் சம்பந்தப்பட்ட வழக்கு களிலும், தொழிலாளர்கள தொடர்பான வழக்குகளிலும் சமூக அக்கறையோடு அணுகினார் என்பதே. தமிழ் மொழியில் அக்கறை, இலக்கிய ஆர்வம், அனை வருக்குமான கல்வி முதலிய ஈடுபாடுகள் அவரது அணுகுமுறைகளில் பிரதிபலித் தன,” என்று மற்றொரு வழக்கறிஞர் குறிப் பிடுகிறார்.


ஒரு முக்கியத் தகவல்:
அவசர நிலை ஆட்சியின்போது நடந்த கொடுமைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி இஸ்மாயில் தலைமையிலான விசாரணைக் குழு முன்பாக, அன்றைய இளம் வழக்கறிஞ ரான சந்துரு மார்க்சிஸ்ட் கட்சி சார்பாகப் பங்கேற்று வாதங்களைப் பதிவு செய்தார்.பதவி ஓய்விற்குப் பிறகு என்ன செய்யப் போகிறார்? “உச்சநீதிமன்றமும் உயர்நீதி மன்றங்களும் அளித்த பல தீர்ப்புகள் தொகுக்கப்படாமலே இருக்கின்றன. அவற் றைத் தொகுத்து வெளியிட விரும்புகி றேன்,” தம் நண்பர்களிடம் கூறியிருக் கிறார். அந்த விருப்பத்தை நிறைவேற்ற முயல்வார் என்று எதிர்பார்க்கலாம். அவ் வாறு தொகுக்கப்பட்டால் பல புதிய வழக்கு கள் வருகிறபோது நீதிபதிகளுக்கு மட்டு மல்லாமல் வழக்கறிஞர்களுக்கும் பேருதவி யாக இருக்கும். பணி ஓய்வு என்பது இவ ரைப்போன்றவர்களுக்கு வேறொரு பணி யின் தொடக்கம்தான் அல்லவா?-அ.கு.

நன்றி - தீக்திர் நாளிதழ் 09.03.2013
 

Monday, February 25, 2013

பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு சட்டத்திற்கு விரோதமானது - தீர்ப்பை வழங்கிய நீதிபதி கே.டி.தாமஸ்


ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனையை எதிர் நோக்கும் பேரறிவாளன்,முருகன்,சாந்தன் ஆகிய மூவரையும் தூக்கிலிடக்கூடாது எனவும் அவ்வாறு நிகழ்ந்தால் அது இந்திய அரசியல் சட்ட முறைமைக்கு எதிரானதாக ஆகிவிடும் எனவும் எச்சரித்திருக்கிறார் முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ்.13 ஆன்டுகளூக்கு முன் அந்த தண்டணையை வழங்கிய நீதிபதியே அவர்தான்.

''நான் தான் முன்னின்று அந்த மூவருக்கும் தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தேன்.அது மிகவும் கொடுமையானது ஏனென்றால் அது அரசியல் சட்ட முறைமைக்கும் இயல்புக்கும் எதிரான நீதி வழுவிய ஒரு தீர்ப்பு என்று இப்போது தான் உணர்கிறேன் இத்தகைய வழக்கில் தீர்ப்பெழுதும் முன் அந்த மனிதர்களின் முன்னாள் வரலாறு அவர்களின் நிறுவப்பட்ட பண்புகள் ஆகியவற்றை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என சட்ட விதி 21 உபதேசிக்கிறது. அம்முறைமையை நாங்கள் கணக்கில் எடுக்காது நான் உட்பட மூன்று நீதிபதிகளும் தவறிழைத்துவிட்டோம். இதே கருத்தை முன்னாள் நீதிபதி எஸ்.பி. ஸின்ஹா அவர்களும் வெளிப்படுத்திருக்கிறார்.. 


மேலும் சாதாரண ஆயுள் தண்டனைக்கைதிகளுக்கு சிறைத்துறை வழங்கும் சில சலுகைகள் கூட 21-ஆண்டுகள் அதாவது இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்து விட்ட இந்த ஏழைகள் மூவருக்கும் வழங்கப்படவில்லை. இதற்கப்புறமும் தூக்கு என்று ஆட்சியாளர்கள் முழங்கினால் அது ஒரே குற்றத்துக்கான இரண்டு தண்டனையாகவும் மேலும் நீதித்துறைகள் கண்டிராத மிக மோசமான நிகழ்வாகவும் அமையும் அதனால் அம்மூவரையும் வாழவிடவேன்டும் என ’’ கே.டி.தாமஸ்அறிவுறுத்தியிருக்கிறார்.


இத்தனை நாள் கழித்து இதனை சொல்லியுள்ள நீதியரசர்
இந்த தூக்கு தண்டனையை தடுக்க என்ன செய்யப் போகின்றார்?

சட்டபூர்வமான நடவடிக்கைகளை அவரே எடுக்கலாமே?

அதை செய்தால் அப்போது அவரைப் பாராட்டலாம். 
 

Wednesday, January 23, 2013

பாலியல் கொடுமைகளை இந்திய ராணுவம் தூண்டுகிறதா?





அதிர்ச்சியளிக்கிற தகவல் இது. பாலியல் கொடுமை செய்த ஒரு ராணுவ வீரர் ஒருவருக்கு ராணுவ நீதிமன்றம் தண்டனை அளித்துள்ளது.

ஆதாரங்களோடும் சாட்சியங்களோடும் நிரூபிக்கப்பட்ட அந்த குற்றத்திற்கு மிக மிக கடுமையான தண்டனை கொடுத்து தர்மத்தையும் நியாயத்தையும் அந்த ராணுவ நீதிமன்றம் நிலை நாட்டியுள்ளது.

என்ன தண்டனை தெரியுமா?

மூன்று மாத சிறை மற்றும் ஒரு பதவி இறக்கம். லான்ஸ் நாயக் என்ற பதவியிலிருந்து சிப்பாயாக பதவி இறக்கம் செய்துள்ளது.

மரண தண்டனை, ஆண்மை நீக்கம், ஆயுட்காலம் வரை சிறை என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் சூழலில் வெறும் மூன்று மாத சிறை என்பதன் மூலம் ராணுவ வீரர்களுக்கு என்ன செய்தி சொல்கிறது இந்த தண்டனை?

கவலைப்படாதே சகோதரா, உனக்கு நாங்கள் துணையாக இருப்போம் என்று சொல்லாமல் சொல்லி உற்சாகப் படுத்துகின்றதா?

சாதாரணமாக அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் ஏதாவது குற்றத்திற்காக ( அது பேனா திருடிய குற்றமாகக் கூட இருக்கலாம்) பதினைந்து நாட்கள் சிறைத்தண்டனை பெற்றாலே அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்.

ஆனால் கட்டுப்பாடும் ஒழுக்கமும் இருக்க வேண்டிய ராணுவத்தில் மோசமான ஒழுக்கக் கேடான ஒரு குற்றத்தை செய்த நபருக்கோ வெறும் பணியிறக்கம் மட்டும்தான் என்பது எவ்வளவு மோசமான விஷயம்?

ராணுவ சிறப்புச் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்து பெண்களை பாலியல் கொடுமைகள் செய்கின்றனர் என்பதுதான் காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் தொடர்ந்து சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள். ராணுவத்தைக் கண்டித்து மணிப்பூர் மாநிலப் பெண்கள் இம்பால் நகரில் உடைகளைத் துறந்து போராட்டம் நடத்தக் கூடிய அளவிற்கு மன ரீதியாக பாதிப்படைந்துள்ளனர் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. அச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தித்தானே ஐரோம் ஷர்மிளா பல்லாண்டுகளாக உண்ணா விரதப் போராட்டம் நடத்தி வருகின்றார்!

இப்படிப்பட்ட நிலையில் ராணுவம் மீதுள்ள மரியாதையை இது போன்ற தீர்ப்புக்கள் இழக்கச் செய்யும்.

இந்த தண்டனையே எதற்காக கொடுத்துள்ளார்கள் என்று எனக்கு தோன்றுகிற சந்தேகம் என்ன தெரியுமா?

“ ஆதாரங்கள், சாட்சியங்கள் என்று மாட்டிக் கொள்ளக் கூடிய விதத்திலா குற்றம் செய்வாய். இதைப் பார்த்தாவது மற்றவர்கள் புத்திசாலித்தனமாக, மாட்டிக் கொள்ளாமல் தவறு செய்யுங்கள்”

என்பதுதான் இந்த தண்டனையின் செய்தியாக நான் நினைக்கிறேன்.