Showing posts with label சங்கி. Show all posts
Showing posts with label சங்கி. Show all posts

Wednesday, September 3, 2025

மோடிக்கு உலகில் பிடிக்காத நாடு

 

ஆமாங்க.

நெஜமாத்தான் . . .

ஆதாரம் வேணுமா?

கீழேயுள்ள படத்தை பாருங்க . . .

அவரு இந்தியாவில எப்படி இருக்காரு, வெளிநாடு போனா எப்பாடி இருக்காரு என்று.

படம் ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கரிடமிருந்து சுட்டது. 



Thursday, August 28, 2025

பொய்யாவது பொருத்தமா சொல்லுங்க சங்கிங்களா

 


மத்யமர்  ஆட்டுக்காரன் குழுவில் சங்கிகள் பெருமிதத்தோடு பகிர்ந்து கொண்டுள்ள படம் கீழே உள்ளது.


நான் சொல்லித்தான் மோடி போரை நிறுத்தினார் என்று இருபதுக்கும் மேற்பட்ட முறை ட்ரம்ப் சொல்லியும் இது வரை மோடியோ அல்லது அவரது மந்திரி மந்திகளோ வாய் திறக்கவே இல்லை. 50 % வரி விதிப்பிற்கும் அப்படியேதான்.   அல்லக்கைகள்தான் சும்மா அளந்து கொண்டிருக்கின்றன.

ட்ரம்ப் என்றால் நடு நடு என்று நடுங்குகிற மோடி, ட்ரம்ப்போடு பேச மறுத்து விட்டாராம். ட்ரம்ப் கூப்பிட்டால் போனாக இருந்தால் கூட நின்று கொண்டே பவ்யமாக பேசும் மோடி, அவரது அழைப்புக்களை நிராகரித்து விட்டாராம்.

கொஞ்சமாவது பொருத்தமா பொய் சொல்லுங்க சங்கிகளா!

Wednesday, August 13, 2025

மனிதன் சினிமா போல நிஜத்திலும்

 


மனிதன் திரைப்படத்தில் "இறந்து போனதாக போலீஸால் கணக்கு காண்பிக்கப்பட்ட ஒருவர் க்ளைமாக்ஸில் வந்து சாட்சி சொல்லுவதாக காட்சி இறக்கும்.

பீகாரில் மரணமடைந்து விட்டார்கள்     என்று சொல்லி தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இரு வாக்காளர்களை டெல்லி முன்னாள் துணை முதல்வர் யோகேந்திர யாதவ் உச்ச நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளார்.

திரைப்படத்தை மிஞ்சும் இக்காட்சி தேர்தல் ஆணைய, மோடி கூட்டணியின் அயோக்கியத்தனத்திகுச் சான்று 


Wednesday, August 6, 2025

இதுதான் நெசம் முட்டாள் சங்கிகளே

 

இந்த கார்ட்டூனை நினைவு படுத்த வேண்டிய அவசியத்தை முட்டாள் சங்கிகள் உருவாக்கி விட்டார்கள்.

ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியது நான்தான் என்று  27 முறை ட்ரம்ப் சொல்லிவிட்டார். இந்தியப் பொருளாதாரத்தை செத்துப்போன பொருளாதாரம் என்று சொல்லி ஒரு வாரமாகிவிட்டது. ரஷ்யாவோடு எந்த வியாபாரமும் செய்யக்கூடாது என்று மிரட்டி மூன்று நாளாகி விட்டது. ஆனால் மோடியோ வாய் திறக்கவே இல்லை.

இந்த சூழலில் இப்படி ஒரு படத்தை சங்கிகள் பரப்புகிறார்கள்.


அதனால்தான் சொல்ல வேண்டியுள்ளது. அடேய் முட்டாள் சங்கிகளே, உங்க மோடி பில்டிங், பேஸ்மெண்ட் எல்லாம் பலவீனமாக இருக்கிற. மேல் மண்டையில ஒன்னும் இல்லாத  வெறும் டம்மி பீஸ்.  ட்ரம்பைப் பார்த்து நடுங்குபவர் என்பதுதான் யதார்த்தம்.

அதனால் இந்த பில்ட் அப் வேலையை எல்லாம் நிறுத்திக் கொள்ளுங்கள். 

Sunday, July 27, 2025

பாவம்யா மோடியின் கருப்புப்பூனை!

 


நேற்று மதியம் சேனல்களை மாற்றி வருகையில் ஏதோ ஒரு சேனலில் மோடி கங்கை கொண்ட சோழபுரம் கோயில் கருவறையில் தியான நாடகம் நடத்தியதை (இது பற்றி தனியாக எழுத வேண்டும்) காண்பித்துக் கொண்டிருந்தது. இன்னொரு சேனலோ இளைய ராஜாவின் பாடலை கண்ணை மூடி ரசிப்பது போல சீன் போட்டு  தப்புத் தாளம் போட்டுக் கொண்டிருந்த கொடுமையை காண்பித்தது.

அப்போது பின்னால் நின்றிருந்த கருப்புப் பூனையையும் காண்பித்தார்கள்.

உண்மையிலேயே அவர் பாவம்!




மோடி செய்யும் கோணங்கித்தனம், சேஷ்டைகள், கோமாளித்தனங்கள் ஆகியவற்றைப் பார்த்தாலும் அவர் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். தலையில் அடித்துக் கொள்ள முடியாது. சிரிக்க முடியாது. தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்வதை மறைக்கத்தான் கருப்புக் கண்ணாடி அணிந்துள்ளார் போலும்!

Saturday, July 26, 2025

மோடி வஞ்சனை செய்யலீங்க! ஆமாங்க

 


சமூக செயற்பாட்டாளர் தோழர் அ.முத்துக்கிருஷ்ணன் பகிர்ந்து கொண்ட பதிவையும் காணொளியையும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

இந்திரா காந்தி 1966-1977 மற்றும் 1980-1984 காலகட்டத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்தார். இந்த காலத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தொடங்கப்பட்டு, ஆரம்பகட்ட வளர்ச்சியில் இருந்தது. 1983இல் இந்தியாவின் முதல் விண்வெளி வீரரான ராகேஷ் ஷர்மா, சோவியத் யூனியனின் சோயூஸ் T-11 விண்கலம் மூலம் விண்வெளிக்கு பயணித்தார். இது இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு மைல்கல்.

ராகேஷ் ஷர்மா விண்ணில் இருந்தபோது, இந்திரா காந்தி அவருடன் தொலைபேசி மூலம் உரையாடினார். இந்த உரையாடல் இந்தியாவின் விண்வெளி திட்டத்தின் முக்கியத்துவத்தையும், தேசிய பெருமையையும் வெளிப்படுத்தியது. இந்திரா காந்தி, ராகேஷ் ஷர்மாவிடம், "விண்ணில் இருந்து இந்தியா எப்படி தெரிகிறது?" என்று கேட்டார். அதற்கு அவர், "சாரே ஜஹான் சே அச்சா" (எல்லா உலகங்களிலும் மிகச் சிறந்தது) என்று பதிலளித்தார்.
மோடி விண்வெளியில் இருக்கும் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் உரையாடு காணொளியை உற்சாகமாக பார்க்க தொடங்கினேன், அதில் மோடி நீ உன்னுடன் கொண்டு சென்ற கேரட் ஹல்வாவை சாப்பிட்டாயா என்று பேசியது, லேப்டாப்பை மூடி வைத்து விட்டு வேறு வேலைகள் நிறைய கிடக்கும் என்று இடத்தை காலி செய்தேன்.


ஏன் தோழர்! மோடி யார்? அவர் படிப்பு என்ன என்பதெல்லாம் நமக்கு தெரியாதா என்ன? அவர் என்ன நேருவா? இந்திராவா? மொரார்ஜியா இல்லை வி.பி.சிங்கா? அல்லது ஐ.கே.குஜ்ராலா? அவர் என்ன வச்சுகிட்டா வஞ்சனை செய்யறாரு! அவரது மூளை எனும் களிமண் சட்டியில் அவ்வளவுதாங்க இருக்கு!!!!!!

..

Thursday, May 1, 2025

தினமலரின் வழக்கமான அயோக்கியத்தனம்

 


தினமலரின் ஜால்ரா முடியல

கீழே உள்ள தின மலர் செய்தியை ஒரு தோழர் மெனக்கெட்டு கொண்டு வந்து கொடுத்தார். எதுக்கு என்னை டென்ஷன் செய்கிறாய் என்று கேட்டதற்கு நீங்க எழுத மேட்டர் கொடுத்திருக்கேன் என்றார்.



ஒரு பிரதமராக உருப்படியாக எதையும் செய்ய துப்பில்லாத மோடி, மாறு வேடப் போட்டியில் கலந்து கொள்வது போல விதம் விதமாக ஆடைகள் மட்டும் அணிந்து கொள்வார்.

 அவர் அணியும் ஆடைகள் எதுவும் எளிமையானது கிடையாது. இயல்பானது கிடையாது. யாருக்கோ வாழ்வு வந்தால் அர்த்தராத்தியில் குடை பிடிப்பார்கள் என்று சொல்வார்களே, அந்த ரகம் இதெல்லாம்.

 அந்த அற்பத்தனத்தின் உச்சம்தான் அவர் பெயர் பொறிக்கப்பட்ட பத்து லட்ச ரூபாய் கோட்டை ஒபாமா வந்த போது அணிந்தது. நாட்டில் உள்ள அனைவரும் கழுவி கழுவி ஊற்றிய பின்பு அந்த ஆடையை ஏலம் போட்டார்கள்.

 ஒரே நாளில்  நாலு முறை, ஐந்து முறை என்று உடை மாற்றுவதெல்லாம் கொழுப்பன்றி வேறில்லை, அல்லது மோடிக்கு ஏதாவது தோல் வியாதி இருந்து பக்கத்தில் உள்ளவர் மூக்கை சுளிப்பார்கள் என்பது காரணமாக இருக்கலாம்.

 அப்படி இருக்கையில்  “உங்களில் ஒருவன் – உடை வழி உணர்த்தும் பிரதமர்” என்றெல்லாம் தலைப்பு கொடுத்திருப்பதெல்லாம்  தினமலரின் வழக்கமான அயோக்கியத்தனம்.

 நியாயப்படிப் பார்த்தால் மேலே உள்ள படத்தில் வடிவேலு கேட்பது போன்ற கேள்வியைத்தான் தின மலர் கேட்டிருக்க வேண்டும்.

Sunday, April 27, 2025

பட்டியல் போடலாமா இளைய (சங்கி)ராஜா?

 




இசையைத் தாண்டி வேறெதற்காவது இளையராஜா வாய் திறந்தால் அது அபஸ்வரமாகவே இருக்கிறது. 

மோடியைப் போல இந்தியாவுக்காக பாடுபட்ட பிரதமர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பட்டியல் போடலாமா என்று கேட்கிறார்.

மோடியைப் போல இந்தியாவை சீரழித்த பிரதமர்கள் யாரும் கிடையாது என்ற உண்மையை கூட புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு சங்கியாக மாறியிருக்கிறார்.

விரிவாக ஒரு பட்டியல் நாளை நான் போடுகிறேன்.  அதை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு அவருக்கு மனம் இருக்குமா தெரியவில்லை.

அவருடைய வீழ்ச்சி மனதிற்கு வருத்தமாக இருக்கிறது.  இனி அவரால் மீள முடியுமா என்பது சந்தேகமே. . .


Thursday, April 24, 2025

மரண தண்டனை கேட்பதன் மர்மம் என்ன?

 




மாலேகான் குண்டு வெடிப்பு நிகழ்த்தியவரும் பாஜக முன்னாள் எம்.பி யுமான போலிச்சாமியார் சாத்வி பிரஞ்யாசிங் தாகூருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று தேசிய புலனாய்வு முகமை (NIA)  நீதிமன்றத்திடம் கேட்டுள்ளது.

NIA ஒன்றும் சுயேட்சையான அமைப்பு இல்லை. மோடியின் ஏவல்படைகளில் ஒன்றுதான். 2017 ல் NIA தான் அந்த சாமியார் மீதான குற்றச்சாட்டுக்களை எல்லாம் நீர்த்துப் போக வைத்து பிணை கிடைக்க வழி வகுத்தது.

அதன் பின்புதான் மோடி அவருக்கு லோக்சபா டிக்கெட் கொடுத்து எம்.பி ஆக்கி அழகு பார்த்தார். 

இதுதான் இந்த அரசின் உண்மையாக முகம்.

இப்படி இருக்கையில் இந்த சாமியாருக்கு மரண தண்டனை தர வேண்டும் என்று  NIA வே கேட்பது நிஜமாகவே மர்மமாகத்தான் இருக்கிறது. இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. ஏதோ பிரச்சினையை மடை மாற்ற இப்படி செய்துள்ளது. அதுவும் பஹல்காம் தாக்குதல் நடந்த அன்று இந்த முடிவு என்பதால் அந்த ஐயம் வருகிறது.

பார்ப்போம். மோடி அம்பலமாகாமலா போகப் போகிறார்!

கல்லறை கட்டப்படும் முன்பே பிரச்சாரமா மோடி?

 


காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் இறந்து போனவர்களின் இறுதிச் சடங்கு இன்றுதான் நடந்திருக்கும். 

எந்த குடும்பங்களில் கல்லறையோ நினைவுச் சின்னமோ அமைக்கும் வழக்கம் இருந்தால் அவர்கள் அதைப் பற்றி  இன்னும் நினைத்திருக்கக் கூட மாட்டார்கள்.

காலையில் எழுதிய பதிவின் படி "பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதன் பலனை பாஜக அறுவடை செய்யும்" என்பதை மோடி நிஜமாக்கி விட்டார்.

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரக்கூட்டத்தை துவங்கி விட்டார். அதிலே அவரது வழக்கமான வாய்ச்சவடாலும் உண்டு.


ஒரு மிகப் பெரிய துயரம் நடந்துள்ளது. இந்த சூழலிலும் இவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றார் என்றால் இவரையெல்லாம் எப்படி மனிதன் என்று சொல்வது! 

அதே போலத்தான் நேற்று விருந்து வைத்த எடப்பாடியையும்!

என்ன ஜென்மங்கள் இதெல்லாம்! 

Friday, April 18, 2025

மோடியை காப்பியடிக்கறியா ஆட்டுக்காரா?

 


மோடியைப் போலவே ஆட்டுக்காரனும் போட்டோகிராபருடனே

 தலைவர் பதவியிலலிருந்து நீக்கப்பட்டாலும் ஆட்டுக்காரன் கண்டெண்ட் கொடுப்பதை நிறுத்தவில்லை.

 இமயமலைக்கு சென்று ரஜினி போல, மோடி போல குகைக்குள் போல் தியானம் செய்வது போல நடித்தாலும் போட்டோ எடுத்து பகிர்ந்து கொள்ள மறக்கவில்லை.

 


மோடி மாதிரி நீயும் போட்டோகிராபருடன் தான் சென்றாயா ஆட்டுக்காரா? என்னையே காப்பியடிக்கறியா என்று மோடி கோபமடையப் போகிறார். ஜாக்கிரதை.

அடுத்த ஜனாதிபதியாக அடிபோடும் துணை . . .

 

மேற்கு வங்கத்தின் முன்னாள் ரௌடி ஆட்டுத்தாடியும் இப்போதைய துணையும் கூட உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக. கேரள ஆட்டுத்தாடி போலவே அபத்தமாக பொங்கியுள்ளது.

அதனை படித்ததும் எனக்கு தோன்றியதுதான் மேலே உள்ள படமாக உள்ளது. 

Monday, April 7, 2025

மோடி கைய வச்சா ராங்கா போகுமடா

 


நேற்று மோடி புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்துள்ளார். ஏற்கனவே நூறாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலத்திற்கு பதில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. பழைய பாலத்தை கட்டியது குஜராத்திகள் என்று பொய் சொல்லி அசிங்கப்பட்டது வேறு கதை. அந்தாளு உண்மை பேசினால்தான் அது அதிசயம்.


கப்பல் வரும் போது பாலத்தின் கதவுகள் திறக்கும். இந்த புதிய பாலத்தில் அவை லிப்ட் போல மேலே உயர்ந்து திறக்கும். அது நேற்று வேலை செய்ய தடுமாறி இருக்கிறது. இதுதான் மோடியின் ராசி என்று வழக்கம் போல பலரும் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

மோடி துவக்கி வைத்த எல்லா திட்டங்களிலும் சிக்கல் வருகிறது என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம்தான் உண்டு.

அந்த திட்டங்கள் முழுமையடையும் முன்பே மோடி திறக்க வேண்டும் என்று அவசரம் அவசரமாக அரைகுறை வேலை செய்தால் அவை இப்படித்தான் பல் இளிக்கும். 

இந்த பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் சரியாக இல்லை, ஏராளமான குறைபாடுகள் இருக்கிறது என்று ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது.

ராம நவமி அன்று ராமேஸ்வரத்தில் மோடி ஒரு பாலத்தை திறந்தார் என்று சீன் போட்டால் அது ரிப்பேர்தான் ஆகும்.

மோடி கைய வச்சா அது ராங்காதான் போகுமடா . . .

Monday, March 31, 2025

மோடியை துரத்துதா RSS?

 


75 வயதை நிறைவு செய்வதால் "உன் சேவை, இனி தேவை இல்லை" என்று ஆர்.எஸ்.எஸ் முடிவெடுத்து மோடியிடம் சொல்லி விட்டதாக தகவல் உலா வருகிறது


மோடி செல்வது நல்லது. புதிதாக வரப் போகிற யார் மீதும்  எந்த பிரமையும் இல்லை.

ஏனென்றால் எரிகிற எல்லா சங்கி கொள்ளிகளும் கெட்ட கொள்ளிகள்தான். 

Monday, March 24, 2025

அதை மட்டும் மன்னிக்க முடியாது டமில்மூசிக் மேடம்

 


மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் உங்கள் அரசின் இந்தி திணிப்பு முயற்சிகளுக்கு முட்டு கொடுக்கும் உங்கள் தமிழ்த்துரோகத்தைக் கூட மன்னிப்பேன், டமில் மூசிக் மேடம் . . .


மோடி தமிழை அதிகம் பயன்படுத்தினார் என்று சொல்லியுள்ளீர்களே, அதை மட்டும் மன்னிக்க முடியாது.

ஏனென்றால் மோடி செய்தது.

தமிழ்க் கொலை.

பாஜக வில் சேர்ந்தாலே இப்படித்தான் மனசாட்சி இல்லாமல் அபாண்டமாக பொய் பேசனும் போல . . .

Wednesday, March 19, 2025

இளையராஜா-மோடி-மு.க.ஸ்டாலின்

 


நேற்று இளையராஜா, மோடியை சந்தித்துள்ளார். அதனை தமிழ்நாடு பாஜகவும் மற்ற சங்கிகளும் எப்படி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்கள் என்று பாருங்கள். . .


மோடியே இளையராஜாவை அழைத்து பாராட்டினார் என்று சொல்கிறார்கள். 

இந்த சந்திப்பு குறித்து மோடியும் ட்விட்டரில் பதிவு போடுகிறார்.


தான் அழைத்து இளையராஜா வந்ததாக மோடி எங்கேயும் சொல்லவில்லை. 

இளையராஜாவும் ஒரு பதிவு போட்டுள்ளார்.


மோடி அழைத்துச் சென்றதாக அவரும் சொல்லவில்லை.

இதில் என்ன டெக்னிகாலிட்டி இருக்கிறது என்று தோன்றலாம்.

சிம்பனிக்கு முன்பாக முதல்வர் இளையராஜாவை சந்தித்தது தொடர்பாக அவர் ஒரு பதிவு போட்டுள்ளார்.


முதல்வர் "நேரில் வந்து" வாழ்த்தினார் என்பதை அதில் அவர் பதிவு செய்துள்ளார். தொல்.திருமா, செல்வப்பெருந்தகை, ஜி.கே.வாசன், ஆட்டுக்காரன் ஆகியோர் அவரை வந்து சந்தித்தார்கள் என்பதையும் அவர் பதிவு செய்திருந்தார்.

சிம்பனிக்கு பிறகு மோடியை சந்தித்ததை பதிவு செய்த இளையராஜா, சிம்பனி முடிந்து சென்னை வந்த பின்பு அவர் சென்று முதல்வரை பார்த்ததை மட்டும் பதிவு செய்யவில்லை. ஆனால் முதல்வர் முன்பும் பதிவு செய்திருந்தார். இப்போதும் பதிவு செய்துள்ளார்.


இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப்பயணத்தை தமிழ்நாடு அரசு கொண்டாடும் என்ற முக்கிய செய்தியை இளையராஜா பதிவு செய்யாதது ஏனோ?

முதல்வரை நேரில் சென்று சந்தித்தது தெரிந்தால் மோடி கோபப்படுவார் என்ற அச்சமோ!

இளையராஜாவின் இசை இணையற்றதுதான். ஆனால் அவர் அரசியல்?

இதற்கிடையில் மோடி அழைத்து பாராட்டினார் என்று சங்கிகள் ஏன் வெட்டி விளம்பரம் செய்கிறார்கள்! மானங்கெட்டவர்கள்!

Tuesday, March 18, 2025

ஓடுவது மோடியின் வாடிக்கை . . .

 


கீழேயுள்ள செய்தியை படிக்கையில் எனக்கு அதிர்ச்சியோ, ஆச்சர்யமோ ஏற்படவில்லை.



மோடிக்கு இந்தியாவில் பிடிக்காத ஒரே ஒரு இடம் நாடாளுமன்றம். அப்படி இருக்கையில் பதில் சொல்ல முடியாத கேள்விகளை கேட்டுக் கொண்டே இருந்தால்  அவரால் எப்படி அவையில் உட்கார முடியும்! என்ன வழக்கமாக அவர்  மட்டும்தான் நாடாளுமன்றத்திலிருந்து ஓடுவார்! இந்த முறை அவர் கூட்டாளிகளோடு ஓடி விட்டார். 

Monday, March 17, 2025

பன்றி வண்டி கிடைக்கலையாம் எச்.ராசா

 


நேற்று காவல்துறை கைது செய்த போது எச்.ராசா எனும் ஐகோர்ட், போலீஸ் வேனில் ஏற மாட்டேன் என்று கலாட்டா செய்துள்ளது. நாய் ஏற்றும் வண்டியில் நான் ஏற மாட்டேன் என்று விளக்கமும் சொல்லியுள்ளது.


அந்த ஜந்துவிற்கு நாய் வண்டியே அதிகமென்றும் அதன் குணாம்சம் கொண்ட பன்றிகளை ஏற்றும் வண்டி கிடைக்காததால் நாய் வண்டியை எடுத்து வந்தார்கள் என்பதை அந்த ஐகோர்ட்டிடம் யாராவது சொல்லவும். 

சீனா, ட்ரம்ப்தான் பயம் - ஆனா 56 இஞ்சர்தான்

 


லெக்ஸ் ஃப்ரீட்மென் என்ற ஊடகவியலாளரிடம் மோடி நடத்திய பேட்டி நாடகத்தில்  தன் கால் வெள்ளை ஷூவுக்கு பாலிஷ் போட காசில்லை என்று மோடி உருட்டிய உருட்டு மட்டுமே மக்களால் கலாய்க்கப்பட்டது. அதை தாண்டியும் பல முக்கிய விஷயங்கள் அந்த பேட்டியில் உள்ளது. (இரண்டு பதிவுகளுக்கான content)

அந்த பேட்டியில் ட்ரம்பை புகழோ புகழு என்று புகழ்கிறார். அமெரிக்காதான் முக்கியம் என்ற நிலைப்பாட்டில் அவர் இருப்பது என்னை பார்ப்பது போலவே இருக்கிறது என்று செல்பி பீற்றல் வேறு. ட்ரம்பின் நடவடிக்கைகள் இந்தியாவிற்கு உருவாக்கும் பாதிப்புக்கள் பற்றி வாய் திறக்கவே இல்லை.

அதே போல சீனா பற்றியும் பம்முகிறார். அண்டை நாடுன்னா எல்லைப் பிரச்சினை இருக்கத்தான்யா இருக்கும், அதையெல்லாம் பேசித்தான் தீர்க்கனும், சீனா ஜனாதிபதி கூட நான் பேசியிருக்கேன். என்று பதுங்குகிறார்.

ஆனால் அதே சமயம்

பாகிஸ்தான் மீது சீறுகிறார், அதானிக்கு வணிக ஒப்பந்தம் பெறுவதற்காக நானே பாகிஸ்தான் போனாலும் கதைக்காகவில்லை என்பதை வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் அதுதான் உண்மை என்பது நமக்கு தெரியுமல்லவா!

பேட்டியில் இல்லாவிட்டாலும் இன்னொரு செய்தியை காலையில் படித்தேன். சீனாவுடன் எல்லை பிரச்சினை தீவிரமானது.  ஆனால் அது பற்றி பம்மும் மோடி மியன்மர் எல்லையில் 1500 கிலோ மீட்டர் தூரத்திற்கு முள் வேலி  போடுகிறார்.

ஆக இவர் வீரமெல்லாம் எளியோருடன் மட்டுமே . . .

Saturday, March 15, 2025

மோடி இந்து கிடையாதா மோகன் பகவந்த்?

 


மோகன் பகவந்த் உதிர்த்த முத்து கீழே . . .


 இங்கே பாருங்கள் மோகன் பகவந்த் – மோடி பாரம்பரிய ஆடையை அணியாமல் ட்ராக் சூட் அணிந்து கங்கையில் குளிக்கிறார். பாரம்பரிய ஆடையான கோவணம் கட்டாமல் பேண்ட் போட்டிருந்த  ஒரு சாமியாரை மற்ற சாமியார்கள் அடித்து கலாச்சாரத்தை பாதுகாத்ததை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். ஆனால் மோடி அணிந்திருப்பது பாரம்பரிய உடை அல்ல.

 ஆங்கிலம் தெரியாவிட்டாலும் கூட வெள்ளைக்காரன், உங்கள் மொழியில் பாவாடை கண்டுபிடித்த டெலி ப்ராம்ப்டர் வழியாக தப்பும் தவறுமாக ஆங்கிலம் பேசுகிறார்.

 அவர் விரும்பி உண்ணும் உணவு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் காளான். இதுவும் பாரம்பரிய உணவு அல்ல.

 ஆக உங்கள் வரையறைப்படி மோடி இந்துவே இல்லை போலிருக்கிறதே சர்சங்சாலக் மோகன் பகவந்த்?

 என்ன செய்யப் போகிறீர்கள்?