![]() |
மத்த செய்தியை எல்லாம் கூட ஏத்துக்கலாம். இந்தியாவோட ஒட்டு மொத்த உற்பத்தி (ஜி.டி.பி) வரலாறு காணாத அளவு உயர்ந்தது என்ற செய்தியை மட்டும் என்னால் மன்னிக்கவே முடியவில்லை.
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
![]() |
ஹோலிப் பண்டிகையை முன்வைத்து சங்கிகள் தாங்கள் ஆளும் மாநிலங்களில் இஸ்லாமியர்கள் மீது புதிய அச்சுறுத்தல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். கலவரத்தீக்கு அடி கோலுகிறார்கள் காவிக் கயவர்கள்.
இப்படிப்பட்ட சூழலில் சர்ப் வெளியிட்டுள்ள புதிய விளம்பரம் மிகவும் சிறப்பாக உள்ளது, ஒற்றுமையை வலியுறுத்துகிறது.
பாருங்கள், பரப்புங்கள், அமைதியை நாம் விதைத்துக் கொண்டே இருப்போம் . . .
பஜாஜ் நிறுவனத்தின் முதலாளிகளில் ஒருவரான ராஜீவ் பஜாஜ், நான்கு வருடங்களுக்கு முன் சொன்ன ஒரு கருத்தை இப்போதுதான் பார்த்தேன்.
மோடியின்
சத்தமான ஜால்ராவான, தன்னை மோடியின் நாய் என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட அர்ணாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவிக்கு விளம்பரம்
தர முடியாது என்று சொன்ன ராஜீவ் பஜாஜின் வீட்டுக்கோ
அலுவலகத்திற்கு ஏன் உங்கள் எடுபிடிகளாக இருக்கும் அமலாக்கத்துறை, வருமான வரித் துறை
ஆகியோரை ஏன் இன்னும் அனுப்பவில்லை
நாளிதழுடன் வந்த விளம்பர நோட்டீஸில் அச்சிடப்பட்டிருந்த "வெயிகல்கவர்" என்ற வார்த்தையை மட்டும் முதலில் படித்து விட்டு ஒரு கணம் குழம்பிப் போனேன்.
படத்தைப் பார்த்ததும்தான் புரிந்தது. அது "VEHICLE COVER"
அய்யா விளம்பரதாரர்களே, அச்சகத்தாரே, தமிழை கொஞ்சம் விட்டு விடுங்களேன். தமிழ் வாழ வேண்டும்.
மகாத்மா காந்தி நூறாண்டுகளுக்கு முன்பு இந்த நாளில்தான் மேற்கத்திய ஆடைகளை துறந்து அரை ஆடை அணியத் தொடங்கினார். மதுரையில் ஒரு விவசாயியைப் பார்த்து அவர்களின் துயரங்களை அறிந்து அவர்கள் நிலை மேம்படும் வரை அரை ஆடை மட்டுமே அணிவேன் என்று உறுதியேற்றார்.
காலையில் கதவைத் திறந்ததும் எரிச்சலூட்டியது இந்த படம்.
இந்து ஆங்கில இதழின் முதல் பக்க விளம்பரத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பதில் இணையற்ற மாநிலமாக தமிழகம் வழி காட்டுகிறதாம்.
பொள்ளாச்சி பாலியல் கொடுமைகள் ஒன்று போதும் இந்த ஆட்சி யாருக்கு பாதுகாப்பு கொடுக்கிறது என்பதை சொல்ல? அதுவும் நேற்றுதான் அவர்கள் கட்சிக்காரன் கைது செய்யப்பட்டுள்ளான்.
இப்படியெல்லாம் விளம்பரம் கொடுக்க இவர்களுக்கு கொஞ்சம் கூட கூசாதா?