சூர்யாவும் ஜோதிகாவும் நேற்று திருப்பதி கோயிலுக்கு போய் விட்டார்களாம்.
எட்டு மணிக்கு பாடத்துவங்கும் வெள்ளியங்கிரி போல சங்கிகளும் ஆரம்பித்து விட்டார்கள்.
கங்குவா
தோல்வியால் அடிபட்டதால் புத்தி வந்து சனாதனத்திடம் அடிபணிந்து விட்டார்கள் என்றும் கோயிலுக்கு செலவழிக்காதே என்று சொன்னதற்கு ஜோதிகா
மன்னிப்பு கேட்காவிட்டால் கங்குவா போல எல்லா படங்களையும் தோல்வியடைய வைப்போம் என்று
பீற்றல் பெருமித மிரட்டல் வேறு.
ஒரு
பொய்யை திரும்ப திரும்பச் சொல்லி அதை உண்மையாக முயலும் சங்கிகளின் உத்தி இது.
ஜோதிகா
சொன்னது என்ன? அந்த காணொளியை நான் முழுமையாக பார்த்தேன்.
“தஞ்சை
பெரிய கோயிலுக்குச் சென்றிருந்தேன். அது மிகவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டிருந்தது.
மறுநாள் அதே தஞ்சையில் உள்ள அரசு மருத்துவமனையில் படப்பிடிப்பு. மிகவும் மோசமான முறையில்
புதர் மண்டிப் போய் பாம்புகள் உலாவும் இடமாக அது இருந்தது. கோயிலை பராமரிப்பதில் காண்பிக்கும்
அதே அக்கறையை மருத்துவமனையை பராமரிப்பதிலும் காண்பிக்க வேண்டும்.”
இதில்
என்ன தவறு உள்ளது?
கோயிலுக்கு
போகாதே என்று சொன்னாரா அல்லது கோயிலுக்கு பணம் கொடுக்காதே என்று சொன்னாரா?
ஆனால்
சங்கிகள் சொல்லாத ஒன்றை சொன்னதாக மீண்டும் மீண்டும் பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
மோடியை நல்லவர், வல்லவர் என்று சொல்லும் கூட்டத்திடம் நேர்மையை எதிர்பார்க்க முடியுமா
என்ன? அவர்கள் சொல்வது பொய்,பொய்யைத் தவிர வேறில்லை.
நாங்கள்
கோயிலுக்கு போக மாட்டோம் என்றோ அல்லது கடவுள் நம்பிக்கை கிடையாது என்றோ எப்போதுமே சொல்லாதவர்கள்
கோயிலுக்கு சென்றதை ஏளனம் செய்வது வன்மம் இன்றி வேறில்லை.
நிற்க
கங்குவா
சங்கிகளால்தான் தோற்றதா?
படம்
வெளிவருவதற்கு முன்பு ஓவர் ஹைப்பை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கொடுத்திருந்தார். வாயை
பிளந்து பார்ப்பீர்கள் என்று சூர்யா சொன்னார். எனக்கு சிரிப்புதான் வந்தது.
ஏனென்றால்
அஜித்தின் சில மொக்கைப் படங்களையும் ரஜினிகாந்தின் மோசமான மொக்கைப்படமான அண்ணாத்தை
யும் இயக்கிய சிறுத்தை சிவா இப்படத்தின் இயக்குனர் என்பதுதான் காரணம்.
அஜித்,
ரஜினி போல சூர்யாவையும் வச்சு செய்திட்டார் சிவா.
கொடுத்த
பில்ட் அப் போல படம் இல்லாததால் கங்குவா தோற்றது.
சரியில்லாத
படம் என்பதால் மட்டுமே தோல்வியே தவிர சங்கிகள் காரணமல்ல, அதே போல பாமக வகையறாக்களும்
காரணமில்லை. அப்படி அவர்களால் ஒரு படத்தை தோல்வியடையச் செய்ய முடியுமென்றால் வெற்றி
பெறச் செய்யவும் முடியுமல்லவா? ஏன் சங்கி, பாமக கருத்தியலை கொண்டு வெளிவந்த மோகன்.ஜி
யின் அனைத்து படங்களும் மரண அடி வாங்கியது?
ஒரு
படத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய இடத்தில் சங்கிகளோ பாமகவோ இல்லை.
அந்த
அளவுக்கு அவர்கள் வொர்த் இல்லை.
பிகு
: எட்டு மணிக்கு வெள்ளைச்சாமிதானே பேசுவாரு, இதென்ன வெள்ளியங்கிரி என்று உங்களுக்கு
சந்தேகம் வரலாம். “வைதேகி காத்திருந்தாள்” வெள்ளைச்சாமி விஜயகாந்த் பாடலை மக்கள் ரசிப்பார்கள்.
ஆனால் “பூவே உனக்காக” வெள்ளியங்கிரி மீசை முருகேஷ் பாட வாய் திறந்தால் மக்கள் தெறித்து
ஓடுவார்கள். அவர் பாடல் போலத்தான் சங்கிகளின் பதிவுகளையும் சகிக்க முடியாது.