Showing posts with label கல்கி. Show all posts
Showing posts with label கல்கி. Show all posts

Sunday, April 13, 2025

அடிச்சு துரத்தலைன்னா ஆட்டுத்தாடி???

 


உனக்கொன்றும் வானளாவிய அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதி மன்றம் சவுக்கடி தீர்ப்பு கொடுத்து விட்டது.

வெட்கம், மான,. ரோஷம், சூடு, சொரணை உள்ள ஆளாக இருந்திருந்தால் ஆரெஸெஸ்.ரெவி எனும் அந்த அற்ப ஜந்து, இந்நேரம் ராஜ் பவனை காலி செய்து விட்டு பீகாருக்கு ஓடி, பால்ய விவாகம் செய்த மனைவியோடு குடித்தனம் செய்து கொண்டிருக்கும்.

ஆனால் இதுதான் அப்படிப்பட்ட விழுமியங்கள் எதுவும் இல்லாத ஜந்து அல்லவா!

அதனால்தான் நரபலி கேட்கும் காபாலிகர்களின் புதிய முழக்கமான "ஜெய்ஸ்ரீராம்" முழக்கத்தை கல்லூரி விழாவில் எழுப்பியுள்ளது. இன்னும் சில நச்சுக்கருத்துக்களை வேறு கக்கியுள்ளது.

அடித்து துரத்தும் நிலைக்கு அது தள்ளிக் கொண்டிருக்கிறது. அது வரை இன்னும் அதிகமான விஷத்தனங்களைக் கூட செய்யும்.

அதற்காக நாம் பொறுமை இழக்கக் கூடாது. 

ஆட்டுக்காரன் இல்லாத குறையை ஆட்டுத்தாடி ரெவியால் மட்டும்தான் போக்க முடியும். அது கக்கும் விஷமெல்லாம் விழிப்புணர்வை தூண்டும் அமிர்தம்.

பிகு" கல்கி அவர்களின் பார்த்திபன் கனவு நாவலில் நரபலி கொடுக்கும் காபாலிகர்கள் "ஓம் காளி, ஜெய் காளி" என்றுதான் முழக்கமிடுவதாக எழுதியிருப்பார்கள். சில ஆண்டுகள் வரை நவீன காபாலிகர்களான சங்கிகளும் "ஓம் காளி, ஜெய் காளி" என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போதுதான் "ஜெய்ஸ்ரீராம்" என்று மாற்றியுள்ளார்கள். 

Thursday, September 29, 2022

கல்கி பின்பு இறந்திருக்கலாம்.

 


1954 ல் கல்கி இறந்தார். 1956 ல் மணி ரத்னம் பிறந்தார். அவர் கல்கியின் மறு அவதாரம். அதனால்தான் அவர் பொன்னியின் செல்வன் நாவலை படம் எடுக்கிறார் என்று சொல்கிறது இந்த நிலைத்தகவல்.

 


ஐயா கல்கி அவர்களே, 1954 ல் இறப்பதற்கு பதிலாக மணி ரத்னம் பிறந்த பின் இறந்திருக்கலாமே! இந்த மறு அவதாரக் கொடுமைகளைக் கேட்காமல் நாங்கள் தப்பித்திருப்போமே!.

 இப்போதே இப்படி . . .

 நாளை பொன்னியின் செல்வன் வெளியான பின்பு என்ன மாதிரியான இம்சைகளை பார்க்கபோகிறோமோ . . .

Friday, May 21, 2021

அச்சில் பார்த்த அதே மகிழ்ச்சி

 


36 வருடங்களுக்குப் பிறகு - முதல் கவிதை



கல்கி இதழின் அனைத்து பிரதிகளையும் ஸ்கேன் செய்து அவர்களின் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளனர். 

அதைப் பார்ப்பதற்கான இணைப்பு இங்கே உள்ளது

சில வருடங்களுக்கு முன்பு எழுதிய பதிவு கீழே

மதுரையில் கல்லூரியில் படித்த காலம், சென்னைப்  பல்கலைக் கழகத்தின் எம்.பி.ஏ தேர்விற்குக் கடைசி  நிமிடத்தில் பணம் கட்டி ஹால் டிக்கெட் எப்போது வரும் என்று தவிப்போடு ஒவ்வொரு நாளும் காத்திருந்த      நேரம்  அது.  

அந்தத் தேர்வின் மூலமாகவே சென்னைப்பட்டினத்தை முதல் முறையாக பார்க்கத் துடித்த பட்டிக்காட்டு மனோபாவத்தில் இருந்த அந்த நாளில் கவிதை ஒன்று தோன்றியது.

அதனை கல்கிக்கு அனுப்ப அவர்கள் மாணவர் பக்கத்தில் பிரசுரித்து பத்து ரூபாய்    பணம் வேறு அனுப்பி விட்டார்கள். அதுதான் எனது  முதல் வருமானம்.

 ஆனால் ஒரு

 வில்லங்கமும் கூடவே வந்து சேர்ந்து விட்டது. கவிதைக்குப்   பக்கத்தில் ஒரு பெண்ணின் நெடிய கண்களின் படத்தினை   வேறு போட்டு விட்டார்கள். 




ஆகவே நான் எப்படிப்பட்ட  கடிதத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தேன் என்ற கேள்வி, வீட்டிலும் சரி, கல்லூரியிலும் சரி வந்து விட்டது.


இன்று கல்கி களஞ்சியத்தில்  அந்த கவிதை வெளியான 23.06.1985 இதழை தேடிக் கண்டு பிடித்து அந்த பக்கத்தை பார்க்கையில் அன்று எழுதிய முதல் கவிதையை அச்சில் பார்த்த அதே மகிழ்ச்சி மீண்டும் கிடைத்தது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

நன்றி கல்கி