Saturday, April 11, 2020

இன்றைய காலை இசையோடு இனிமையாய் . . .


இன்றைய காலை இசையோடு இனிமையாய் தொடங்கியது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு தோழர் அனுப்பியிருந்த காணொளி அவ்வளவு சுகானுபவம். 

ஏப்ரல் ஏழாம் தேதி இந்திய இசை மேதை பண்டிட் ரவிசங்கரின் 100 வது பிறந்த நாள். அதை ஒட்டி அவர் மகள் அனுஷ்காவும் மற்ற சீடர்களும் பண்டிட் ரவிசங்கர் உருவாக்கிய "சந்தியா ராகத்தை" சிதார் மற்றும் சில இசைக் கருவிகள் மூலம் அளித்திருந்தார்கள்.




காலை ஏழு முப்பது மணியிலிருந்து இதை எழுதும் வரை மூன்று முறை பார்த்து விட்டேன். 

அந்த அளவிற்கு என் மனதை ஆக்கிரமித்து விட்டது இந்த இசை. 

அவசியம் பாருங்கள். நிச்சயம் உங்கள் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும்.


1 comment:

  1. நல்லது.

    இவ்வாறான பதிவுகளை பொழுதுபோக்கு என வகைப்படுத்துங்கள்.

    தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 26 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    ReplyDelete