Saturday, April 4, 2020

பாவம்டா. நாசாவை விட்ருங்க . . .



நாசா, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு. ஐம்பது வருடங்களுக்கு முன்பே நிலவுக்கு மனிதனை அனுப்பிய அமைப்பு. 

அந்த அமைப்பை சங்கிகள் போல யாரும் இழிவு செய்து விட முடியாது. இவர்களின் அபத்தமான பொய்ப் பிரச்சாரங்களுக்கெல்லாம் நாசாவை இழுத்து நாசாவே சொல்லி விட்டது என்று சொல்லி அதற்கு அறிவியல் சாயம் பூச வேறு முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள்.



திருநள்ளாறு கோயிலை கடக்கையில் செயற்கைக் கோள்கள் எல்லாம் ஒரு நொடி செயலிழக்கிறது, அதுதான் சனி பகவானின் சக்தி என்பதை ஆராய்ந்து நாசாவே ஆடிப் போய் விட்டது என்று கதை விடத் தொடங்கினார்கள்.

சூரியனின் ஒலியை நாசா பதிவு செய்துள்ளது. அது ஓம் என்று ஒலிக்கிறது என்ற கதையை முன்னாள் காக்கிச்சட்டையும் இந்நாள் சங்கியுமான கிரண் பேடியே பரப்பினார்.



அடுத்து கைதட்டலுக்கும்  இது ஒரு அபாரமான மூளை என்று நாசாவே  சொல்லி விட்டதாக கதை விட்டார்கள்.



அடுத்து நாளை விளக்கேற்றுவதற்கும் நாசாவின் சான்றிதழை வெளியிட்டுள்ளார்கள்.



அடேய்களா, நாசா அறிவியல்பூர்வமாக செயல்படும் அமைப்பு. உங்களின் அபத்தங்களுக்கெல்லாம் நாசாவை துணைக்கு அழைக்க வேண்டாம்.

பாவம் அதை விட்டு விடுங்கள்.


No comments:

Post a Comment