Showing posts with label அரசியல் போலிச்சாமியார்கள். Show all posts
Showing posts with label அரசியல் போலிச்சாமியார்கள். Show all posts

Thursday, April 14, 2011

ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே - அருகிலேயே ஒரு மோசடிப் பேர்வழி



லோக் பால் மசோதா கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர் 
அண்ணா ஹசாரே மேற்கொண்டிருந்த உண்ணா விரதம் ஊழலுக்கு 
எதிரான ஒரு அலையை இந்திய மக்களிடத்தில் உருவாக்கியது. 
அரசும் இறுதியில்  அடிபணிந்தது.  ஊழலுக்கு எதிராக போராட 
வேண்டும்  என்ற உணர்வை உருவாக்குவதில் அண்ணா ஹசாரே நடத்தியபோராட்டத்திற்கு  முக்கிய பங்கு உண்டு. அவரது நோக்கங்களும் செயல்களும் உன்னதமானது.  

ஆனால் அவரை சுற்றியுள்ள அனைவரும் அவரைப் போலவே நேர்மையானவர்களா? 

கிரண் பேடி  உண்மையிலேயே  நெருப்பு போன்ற ஒரு நேர்மையான
அதிகாரி. பணியில் தனது நேர்மையை இறுதி வரை கடைபிடித்தவர். 

மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவானவராக தோற்றமளிக்கும் சுவாமி 
அக்னிவேஷைக் கூட குறை சொல்ல முடியாது.  
ஆனால் சுவாமி ராம்தேவ்? 

தமிழகத்தின் பிரபல சாமியார்கள் போல வட இந்தியாவின் பாபுலர் 
சாமியார். பதஞ்சலி யோக மையம் என்ற அமைப்பின் மூலம் 
யோகா கற்றுத்தரும் சாமியார், வெளி நாடுகளில் இன்னும் பிரபலம். 
அந்த பிரபலம் காரணமாக தன்னுடைய யோகா மூலமாக 
கான்சரை குணப்படுத்தலாம், எய்ட்சை குணப்படுத்தலாம் என்று 
பரபரப்பான  விளம்பரம் தருபவர். 

ராம்தேவ் சொல்வது எல்லாம் கட்டுக்கதை, அறிவியல் ரீதியாக
சாத்தியமே  இல்லை  என்று இந்திய மருத்துவர் சங்கம் மறுத்துள்ளது. ஆனாலும் விளம்பரங்கள் நின்றபாடில்லை.  பணம் சம்பாதிக்க 
என்ன வேண்டுமானாலும்  செய்யக்கூடிய ஆசாமி இந்த ராம்தேவ். 

ஆயுர்வேத மருந்துகள்  என இவர் தயாரித்து விற்கும் மருந்துகளில்
விலங்குகளின் கொழுப்புகள்  அடங்கியுள்ளது என்று சோதனை செய்த
அறிக்கைகளோடு  இவர் செய்த மோசடிகளை  மார்க்சிஸ்ட் கட்சியின் 
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்ந்தா காரத், மாநிலங்களவையில்  அம்பலப்படுத்தினார்.   அதற்காக மார்க்சிஸ்ட் 
கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தை  ராம்தேவின் குண்டர்கள் 
தாக்கினார்கள். 

பாரத் ஸ்வபிமான் என்ற பெயரில் அரசியல் கட்சி துவக்கி வைத்துள்ள 
இந்த ஆசாமி   இந்தியர்கள் முழுவதும்  சைவ உணவு மட்டுமே சாப்பிட
வேண்டும்  என்று பிரச்சாரம் செய்பவர். ஆனால் இவர் தயாரிக்கும்
மருந்துகளில்  மட்டும் மிருகங்களின்  கொழுப்பைக் கலப்பாராம்.
கலப்படப் பொருட்கள் சட்டத்தின்படி கைது செய்யப்பட வேண்டிய 
இந்த பேர்வழிக்கு பிரதமர் கனவு வேறு வந்து விட்டது. அதனால் ஊழல்
எதிர்ப்பு முழக்கத்தை  எடுத்துள்ளார். இந்தியர்களெல்லாம் இளிச்சவாயர்கள்  என்பதில் என்ன ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை! 

இது போன்ற ஆட்களை அருகில் வைத்தால் அது அண்ணா ஹசாறேவுக்கு  ஆபத்து. கரையான் கட்டி வைத்த புற்றில்  கருநாகங்கள்  குடியேறிய கதை  எத்தனை பார்த்துள்ளோம். நல்ல இயக்கங்களில் 
சில புல்லுருவிகள்  தலைமைப் பொறுப்பிற்கு வந்து அந்த இயக்கத்தையே  நாசப்படுத்துவதையும் சீரழிப்பதையும் எத்தனை முறை 
பார்த்துள்ளோம், வேதனையை  உணர்ந்துள்ளோம். 

ராம்தேவ் போன்ற மோசடிப் பேர்வழிகளை பக்கத்தில் வைத்திருந்தால்
அண்ணா ஹசாராவிற்கும்  ஒரு நாள் வேதனைதான் மிஞ்சும்.