Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

Wednesday, April 2, 2025

ஆபரேஷன் பிரம்மா- ரேட் சொல்லிட்டீங்களா மோடி?

 


நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மருக்கு நிவாரணப்பணி செய்ய இந்திய ராணுவம் சென்றுள்ளது. அதற்கு "ஆபரேஷன் பிரம்மா" என்று பெயர் சூட்டியுள்ளார் மோடி.

மோடியிடம் கேட்க வேண்டிய கேள்வி ஒன்று உண்டு,

நிவாரணப்பணிக்கு எவ்வளவு கட்டணம் பேசியுள்ளீர்கள் என்று மியன்மர் அரசிடம் சொல்லி விட்டீர்களா? பிறகு பில் அனுப்பினால் பிரச்சினையாகி அசிங்கமாகி விடும்.

நிவாரணப்பணிக்கு கட்டணமா?

கேரளா பெரு வெள்ளத்தின் போதும் வயநாடு நிலச்சரிவின் போதும் கேரளாவில் ராணுவமும் விமானப் படையும் செய்த பணிக்கு கட்டணம் நிர்ணயித்து கந்து வட்டிக்காரனை விட மோசமாக வசூல் செய்ததுதானே மோடி அரசு!

ரோஹிங்க்யா முஸ்லீம்களை மியன்மரிலிருந்து துரத்தியதை பாராட்டி ஒரு வேளை கட்டணமில்லாமல் சேவை செய்தாலும் ஆச்சர்யமில்லை.

Saturday, October 8, 2022

சிங்காரப்பேட்டை TO செங்கம்

 சிங்காரப் பேட்டையிலிருந்து செங்கம் செல்லும் வழியில் ஒரு மலை அடிவாரத்தில் உள்ள ஏரியின் அழகிய தோற்றம் புகைப்படங்கள் வாயிலாக உங்கள் பார்வைக்கு 







Friday, June 3, 2022

மழை வருவது மயிலுக்கு தெரியும். மயில் வருவது . . .

 


கொடைக்கானலில் நாங்கள் தங்கியிருந்த இடத்தில்  மயில்கள் அகவும் குரல் கேட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் கண்ணில் எப்போதாவதுதான் தென்படும்.

அப்படி தென்பட்டு தோகை விரித்தாடிய தருணத்தை அலைபேசியில் கைப்பற்றி வலைப்பக்கத்தில் விடுவிக்கிறேன்.







மயிலைப் பார்த்த போது  "மழை வருவது மயிலுக்குத் தெரியும்" என்ற ரிஷிமூலம் படப்பாட்டு மனதுக்குள் ஒலித்தது.

அப்பாடல் காட்சியை முகப்புப் படமாக வைக்க யூட்யூபரை நாடினேன். 16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவி, கிழக்கே போகும் ரயிலில் ராதிகா ஆகியோர் ஓடி, ஆடி, குதித்தது போல இப்பாடலில் கே.ஆர்.விஜயாவை ஓடி, ஆடி, குதித்து நடனமாடவைத்து  அவரை டார்ச்சர் செய்துள்ளார் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.

பிகு: கிட்டத்தட்ட மூன்று வாரமாக ட்ராப்டிலிருந்த பதிவுக்கு இன்று விடுதலை. 

Friday, May 13, 2022

ஏரிக்கரை குளிர்க்காற்றே!

 


கொடைக்கானல் ஏரியில் காலைப் பொழுதில்  ஏரியின் அழகை கரையிலிருந்து குளிர்க்காற்றை அனுபவித்தபடி எடுத்த படங்கள் இங்கே.











பிகு: பதிவுக்கு தலைப்பு கொடுத்த "ஏரிக்கரை பூங்காற்றே" பாடல் காட்சி.



Thursday, May 12, 2022

கோடைக்கானல், குறிஞ்சி மலரின் . . .

 


கடந்த வாரம் மூன்று நாட்கள் கொடைக்கானலில் ஒரு பயிலரங்கம். ஓய்வுக்காக அளிக்கப்பட்ட நேரத்தில் வேகம் வேகமாக சென்று கொடைக்கானலின் இயற்கை அழகை கண்களால் பருகியது மட்டுமல்ல, அதனை உங்களுக்கும் தவணை முறையில்  பரிமாறுகிறேன். இப்பதிவு முதல் தவணை
















பிகு: முகப்பில் எதற்கு அந்த படம்?

வாகனத்தில் செல்கையில் இரண்டு தோழர்கள் "அன்புக்கு நான் அடிமை" படத்தில் வரும் "காத்தோடு பூவா ராசா" பாடலின் வரும் "கோடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி" என்ற வரிகளை இரு வேறு சந்தர்ப்பங்களில் பாட, அது மனதில் ஒட்டிக் கொண்டது. அதனால்தான் அது இங்கே


Saturday, March 12, 2022

இயற்கை அளித்த எழில் ஓவியங்கள்

 பயணங்கள் பல சந்தர்ப்பங்களில் இயற்கை எனும் அற்புதக் கலைஞன்  வரையும் ஓவியங்களைப் பார்ப்பதற்கான வாய்ப்பைத் தரும்.

 போன வாரம் சென்னையிலிருந்து வேலூர் திரும்பும் வழியில் பார்த்த இயற்கை வரைந்த ஓவியங்களை நீங்களும் ரசிக்க வேண்டுமென்பதற்காக அலைபேசியில் கைது செய்து வைத்தேன்.

 அவை இங்கே . . .








Saturday, February 5, 2022

இரவும் பகலும் உரசிக் கொள்ளும் . . .


மூன்று நாட்கள் முன்பாக  கடலூருக்கும் புதுவைக்கும்  சென்றிருந்தேன்.
வேலூர் திரும்புகையில் புதுவை எல்லையை கடக்கையில் பார்த்த காட்சி
அலைகள் ஓய்வதில்லை படத்தின் 
"விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே" 
பாடலில் வரும்
"இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதின் போது"

வரிகள் நினைவுக்கு வர அலைபேசியில் பதிவு செய்து கொண்டேன்.


இயற்கை அளித்த அழகுப் பொக்கிஷம் உங்களின் பார்வைக்காக . . .






Friday, December 17, 2021

அதிகாலை அழகே !

 கடந்த வாரத்தில் ஒரு அதிகாலைப் பயணத்தின் போது பார்த்த ஒரு அழகிய காட்சி புகைப்படமாக உங்களுக்காக . . . .




Tuesday, April 13, 2021

சூரியன் உதிக்கும் தருணம்

 

நீண்ட காலத்திற்குப் பிறகு நேற்று சென்னையை நோக்கி ஒரு அதிகாலைப் பயணம். அப்போது எடுத்த படங்கள் கீழே.










அரசியல் பதிவு என்று நினைத்தீர்களா?

அதுவும் சரிதானே!

Wednesday, January 20, 2021

மாலைப் பொழுதினிலே

 




நேற்றைய மாலை வேளைப் பயணத்தில் காருக்குள் அமர்ந்த படி எடுத்தது.