Thursday, December 31, 2020

ரஜினிக்கு இது தேவைதான்.



 காரியமாகும் வரை காலைப் பிடிப்பார்கள்.

காரியம் முடிந்ததும் கழுத்தைப் பிடிப்பார்கள்.

 இதுதான் சங்கிகளின் குணம்.

 அவர்களுக்கான அடிமை சிக்காமல் தப்பித்துப் போனதில் எவ்வளவு கடுப்பாக இருக்கிறது என்பதற்கு தினமலர் வெளியிட்டுள்ள கார்ட்டூனே உதாரணம்.



 சங்கிகளுக்கு கூஜா தூக்கிய ரஜினிக்கு இது தேவைதான்.

 இப்போதாவது அவர்களின் கேரக்டர் என்ன என்று புரிந்து கொண்டால் நலம்.

 விஷ மூர்த்தி பேச்சைக் கேட்டு “வாய்ஸ்” கொடுக்காமல் இருப்பது அவருக்கு கொஞ்சமாவது மரியாதையை தக்க வைக்கும்.

 

மோடி எனும் போலிக்கு பொருத்தமாக

 போலி தாகூருக்கு பொருத்தமாக

 


“Where the mind is without fear and

 Where the head is held high

 

என்று தொடங்கும் தாகூரின் கவிதையை நாம் பள்ளியில் படிக்கையில் பாடமாக படித்துள்ளோம்.  மேற்கு வங்கத்திற்கு செல்கையில் தாகூர் போல தன்னைக் காண்பித்துக் கொண்ட உலகின் மிகச் சிறந்த நடிகருக்காக யாரோ ஒருவர் தாகூர் கவிதையை மாற்றி எழுதியதை வாட்ஸப்பில் பார்த்தேன்.

 அது போலி தாகூருக்கு பொருத்தமாகவே உள்ளதால் அதனை பகிர்ந்து கொள்கிறேன். அத்தோடு அதனை தமிழாக்கமும் செய்து அதனையும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 ~ Author unknown

 

Where the mind is without wisdom

And the face is eternally turned towards the camera

Where knowledge is commodified;

Where the world has been broken up into fragments by narrow domestic walls;

Where words come out from the depth of the IT cell

Where tireless PR stretches its arms towards total obfuscation

Where the clear stream of reason has lost its way

Into that land of bondage, mein Fuehrer,

You have let this country sink.

 

#FakeTagore

 

எங்கே மனதில் ஞானமில்லையோ,

எங்கே முகம் நிரந்தரமாக காமெராவை நோக்கி மட்டுமே திரும்பியுள்ளதோ,

எங்கே அறிவு விற்பனைப் பொருளாகியுள்ளதோ

எங்கே குறுகிய பார்வைகளால் உலகம் பல துண்டுகளால் உடைக்கப்பட்டுள்ளதோ,

எங்கே வார்த்தைகள் தகவல் தொழில் நுட்பக் குழு தயாரித்தது மட்டுமாகவே வெளி வருகிறதோ,

எங்கே ஓய்வில்லா விளம்பர நடவடிக்கைகள் முழுமையான குழப்பத்திற்கு மட்டும் இட்டுசெல்கிறதோ,

எங்கே தெளிவான சிந்தனை என்பது அடிமைத்தனம் மேலோங்கியுள்ள மண்ணில் தன் வழியை இழந்து விட்டதோ,

அப்படியாக, புதிய ஹிட்லரே,

நீ இந்த தேசத்தையே அழித்து விட்டாய்.

 

Wednesday, December 30, 2020

பதுங்கு குழியில் பத்திரமாக மாலன்

 


யாராவது மூத்த பத்திரிக்கையாளர் மாலனை பார்த்தீங்களா?

24.12.2020 க்குப் பிறகு அவருடைய முக நூல் பக்கமும் ட்விட்டர் பக்கமும் எந்த புதிய பதிவும் இல்லாமல் இருக்கிறது. 

"தினம் ஒரு கேள்வி" என்று அவர் ஆரவாரமாக ஆரம்பித்தது கூட 24.12.2020 அன்றோடு நின்று போய் விட்டது.

அவரை உசுப்பேத்த தினம் ஒரு பின்னூட்டம் போட்டாலும் மனுஷன் அசையவே இல்லை.

நேற்று போட்ட கமெண்டின் ஸ்க்ரீன் ஷாட் கீழே உள்ளது.



சாலமன் பாப்பையா "வாங்க பழகலாம்" என்று கூப்பிட்டது போல "வாங்க மாற்றலாம்" என்று வரவேற்றவர் ஒரு வேளை மேலே உள்ள பதுங்கு குழியில் ஒளிந்து கொண்டிருக்கிறாரோ?

அடுத்தவர் பதிவுகளுக்கெல்லாம் சென்று பின்னூட்டம் போடும் ஒரு மூத்த்த்த்த்த்த பத்திரிக்கையாளரை இப்படி முடக்கி வைத்த பாவம் ரஜினியையே சாரும்.

பிகு: அவரது ட்விட்டர் பக்கத்திலேயே ஒரு சங்கியோடு நடந்த சண்டை நாளை.

புரோக்கர்களுக்கு அழிவில்லை. அவருக்கும் . . .

 


நம்ம தரகுப்புயல் அய்யா, அரசியலிலிருந்து விலகுவதாக உணர்ச்சிக் கொந்தளிப்போடு அறிக்கை விட்டுள்ளார். 


அவரது புலம்பலை படிக்கையில் எனக்கு சிரிப்பு சிரிப்பாகவே வந்தது.

கூழாங்கல்லை இவர்தான் மாணிக்கம் என்று பில்ட் அப் கொடுத்தார். மன நோயாளி போல ரஜினி வருவார், வருவார் என்று சொல்லிக் கொண்டிருந்ததும் இவர்தான். காமராஜர் காலடியில் இருந்தவர் என்று சொல்கிற இவர்தான் காமராஜர் வீட்டை எரித்து அவரை கொல்ல முயன்ற கூட்டம் ஆட்சிக்கு வர 2014 மக்களவைத் தேர்தலில் தரகு வேலை பார்த்தவர். காந்தியின் பெயரில் இயக்கம் வைத்துக் கொண்டே காந்தியைக் கொன்றவர்களோடு கரம் கோர்த்தார். இப்போது ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் அந்த கூட்டம் கொடுத்ததுதானே!

இப்படியெல்லாம் எழுதி விட்டதால் இவர் மீண்டும் அரசியல் பக்கமே வர மாட்டார் என்று யாரும் நினைத்து விட வேண்டாம்.

"திரிஷா இல்லைன்னா நயன்தாரா" என்று சொன்ன நாய் சேகர் போல இவரும் எண்ட் கார்டே இல்லாமல் மறுபடி அரசியலுக்கு வருவார், வேறு ஒருவருக்கு தரகு செய்ய . . .

புரோக்கர்கள் என்றும் அழிவதில்லை. 

பொங்கல் பரிசு 2500 மும் மீம்களும்

 

தமிழக அரசு அளித்து வரும் பொங்கல் பரிசு ரூபாய் 2,500 தொடர்பாக நான் ரசித்த மீம்களின் அணிவகுப்பு கீழே





Tuesday, December 29, 2020

தரகுப்புயலைக் கவனிச்சுக்குங்க ரஜினி.

 


அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கையை பார்த்த போதே 31.12.2020 அன்று ரஜினி அரசியல் கட்சியை அறிவிக்கப் போவதில்லை என்பது தெரிந்து போனது. இன்றைய அறிக்கை மூலம் ரஜினிகாந்த் அதனை உறுதிப்படுத்தி விட்டார்.

 தமிழக அரசியலுக்கு தேவையில்லாத ஆணி ரஜினிகாந்த். எனவே அவரின் முடிவு வரவேற்கத்தக்கது. எழுபதாவது வயதில் மீண்டும் சப்பாணி- பரட்டை கூட்டணி அமையாததுதான் வருத்தமாக இருக்கிறது.

 உங்கள் அறிக்கையைப் பற்றி அறிந்த உடனே நான் மிகவும் கவலைப்பட்டது நம்ம தரகுப்புயல் தமிழருவி மணியன் ஐயா பற்றிதான்.

 தலைமை ஒருங்கிணைப்பாளர் பற்றி கவலை இல்லை. அவர் பாஜகவில் இருந்து டெபுடேஷனில் வந்தவர். பழைய பணிக்கே திரும்பி விடுவார்.

 எல்லாவற்றையும் நீங்கள் மாற்றி விடுவீர்கள் என்று குதித்துக் கொண்டிருந்த மூமூமூமூமூமூத்த்த்த்த்த்த்தததத பத்திரிக்கையாளர் பற்றியும் கவலை இல்லை. அவருக்கு உங்களிடமிருந்தும் வந்திருக்க வேண்டிய கூடுதல் வருமானம் (அவருக்கு அப்படி ஒரு நம்பிக்கை. ஆனால் உங்களிடமிருந்து பத்து பைசா கூட பெயறாது என்பது வேறு விஷயம் ) வராது என்பதற்கு மேல் வேறு இழப்பு இல்லை.

 ஆனால் நம்ம தர்குப்புயல் ஐயா நிலைமையை கொஞ்சம் நினைச்சுப் பாருங்க!

 உங்க அறிக்கையிலேயே சொன்னது போல உங்களுக்காக எத்தனையோ முறை அசிங்கப்பட்டவர் அவர்தான். நீங்க வருவீங்க, வருவீங்கன்னு கூவிக் கிட்டே இருந்தவரும் அவருதான். நீங்க கட்சி தொடங்குவேன்ன்னு சொன்ன அன்னிக்கை உங்க இடது பக்கத்தில நின்ன அவரோட முகத்தில தெரிஞ்ச தேஜஸை, அந்த புன்னகையை, வெற்றிப் பெருமிதத்தை கொஞ்சம் நினைச்சுப்பாருங்க!

 என்னவெல்லாம் அவரு கனவு கண்டிருப்பாரு! நீங்க முதல்வரானா மந்திரியாகலாம், சிவப்பு விளக்கு வைச்ச இன்னொவா காரில் போகலாம். கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள அமைச்சர் பங்களாவில் குடியேறலாம், தினசரி தொலைக்காட்சிகளின் மைக் முன்பாக நின்று பேசலாம். காந்தியை கட்டிக் கொண்டு அழாமல் உங்கள் புகழ் பாடி சில்லறையை தேற்றலாம் என்று எத்தனை திட்டம் போட்டிருப்பார்!

 ஒற்றை அறிக்கை மூலம் அவரது அனைத்து கனவுகளையும் தகர்த்து விட்டீர்கள். பாவம் வயதான மனிதர், இனி பிழைப்புக்கு என்ன செய்வார்?

 அதனால் உங்களுக்காக ஏச்சும் பேச்சும் வாங்கிக் கட்டிக் கொண்ட அவரை கவனித்துக் கொள்ள வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது.

 உங்களுக்கு சில ஆலோசனைகளை மட்டும் முன்வைக்கிறேன்.

 கிரீன்வேஸ் ரோடு பங்களா மாதிரி இல்லாவிட்டாலும் ஏதாவது டபிள் பெட் ரூம் ஃப்ளாட்டாவது இருபத்தி எட்டாவது மாடியில் வாங்கிக் கொடுங்கள்.

 சிவப்பு விளக்கு வைத்த இன்னோவா காருக்கு பதிலாக குறைந்த பட்சம் ஒரு டாடா நானோ காராவது வாங்கிக் கொடுங்கள்.

 அமைச்சரின் ஊதியத்தை தர முடியாவிட்டாலும் ஒரு எம்.எல்.ஏ பெறுகிற பென்ஷனையாவது ஒவ்வொரு மாதமும் கொடுங்கள்.

 சத்யராஜ் படம் மல்லு வேட்டி மைனர் படத்தில் தன் தந்தை சென்று வந்த பெண்களுக்கெல்லாம் சத்யராஜ் ஒவ்வொரு மாதமும் பென்ஷன் அனுப்புவது போல ஒரு காட்சி வரும். ஒரு மைனருக்கு உள்ள இரக்கம் உங்களிடம் இருக்காதா என்ன?

 “டெம்போ எல்லாம் வச்சு கடத்தியிருக்கேன், பார்த்து போட்டுக் கொடுங்க” என்று செந்தில் போல அவர் வாய் விட்டு கேட்க மாட்டார்.

 நீங்களாகவே கருணையோடு பார்த்து செய்யுங்கள் ரஜினி.

தயவு செய்து தரகுப்புயல் ஐயாவை கை விட்டு விடாதீர்கள்.

டெம்போ வைக்காமலே உங்களை அரசியலுக்கு கடத்த நினைத்தவர் அவர்!

இருபது லட்சம் அளித்தோருக்கு நன்றிகள்

 


நேற்று இரவு கணிணியை அணைக்கும் முன்பாகத்தான் பார்த்தேன். வலைப்பக்கத்தின் பார்வை எண்ணிக்கை "இருபது லட்சம்" என்ற மாய எண்ணிக்கையை கடந்திருந்தது.



2009 ம் வருடம் எழுதத்தொடங்கி இரண்டே பதிவுகளில் மூடி வைத்த வலைப்பக்கம், அடுத்த ஆண்டு விபத்து ஏற்பட்டு ஒரு மாத காலம் வீட்டில் முடங்கிய நேரத்தில் மீண்டும் இயங்கத் தொடங்கியது.

நம் கருத்துக்களை சுதந்திரமாக பகிர்ந்து கொள்வதற்கான தளம் என்பதால் அதன் மீதான ஈர்ப்பு இன்னும் நீடிக்கிறது.

"கடை விரித்தேன், கொள்வாரில்லை" என்ற நிலை வந்திருந்தால் எத்தனையோ வலைப்பக்கங்களைப் போல இந்த பக்கமும் நின்று போயிருக்கும். அப்படியில்லாமல் தொடர்ச்சியாக வலைப்பக்கத்திற்கு வருபவர்களால்தான் வலைப்பக்கம் உயிர்ப்போடு தொடர்கிறது.

முதல் பத்து லட்சம் பார்வைகள் வர எட்டு ஆண்டுகள் ஆனது. அடுத்த பத்து லட்சம் மூன்றரை ஆண்டுகளில், அதுவும் "தமிழ்மணம்" திரட்டி இல்லாத போதும் வந்தது மகிழ்ச்சியாகவே உள்ளது.

இருபது லட்சம் பார்வைகளை அளித்து உற்சாகப்படுத்தும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

பயணம் தொடரும் இன்னும் உற்சாகமாக ....

Monday, December 28, 2020

செஞ்சுரி அடிப்பார் அர்ணாபு கோஸ்வாமி

தீக்கதிர் செய்தி கீழே உள்ளது.

 செல்ஃபி சவர்க்கர், வாஜ்பாய், எச்.ராசா இவர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளியுள்ள மோடியின் செல்லப் பிராணி அர்ணாப் கோஸ்வாமி விரைவில் மன்னிப்பு கேட்பதில் சதமடிப்பார் என்பதில் சந்தேகமில்லை.

 உண்மை இல்லாத மனிதனுக்கு வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை எதுவும் கிடையாது. ஆகவே மன்னிப்பு கேட்பதால் அவையெல்ல்லாம் வந்து விடப் போவதில்லை.

 எனவே சதம் மன்னிப்பு அவருக்கு சாத்தியமே!

வி.டி. சாவர்க்கரை பின்னுக்குத் தள்ளினார் அர்னாப் கோஸ்வாமி.. பிரிட்டிஷ் அரசிடம் 2 மாதத்தில் 280 முறை மன்னிப்பு கேட்டு சாதனை...



புதுதில்லி:
இந்துத்துவா பேர்வழியும், ‘ரிபப்ளிக் டிவி’ முதலாளியுமான அர்னாப் கோஸ்வாமி, மன்னிப்புக் கேட்கும் விஷயத்தில் வி.டி. சாவர்க்கரை முறியடித்து சாதனை புரிந்துள்ளார்.இந்துத்துவா என்ற வெறுப்புச் சித்தாந்தத்தை, இந்தியாவில் உருவாக்கி வளர்த்தவர்களில் முக்கியமானவர் விநாயக் தாமோதர் சாவர்க்கர் எனும் வி.டி. சாவர்க்கர். இந்து மகாசபையை நிறுவியவர். மகாத்மா காந்தியைக் சுட்டுக்கொன்ற கோட்சே-வின் குருநாதர். 

ஆரம்பத்தில் பாலகங்காதர திலகரின் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் கலந்துகொண்ட சாவர்க்கர், அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், 1911, 1913, 1921, 24 ஆகிய ஆண்டுகளில் பலமுறை பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு மன்னிப்புக் கடிதம் எழுதி, கெஞ்சிக் கூத்தாடி சீக்கிரத்திலேயே வெளியே வந்தார். “பரிதாபகரமான நிலையில் இருக்கும் என்மீது இரக்கம்காட்டி சிறையிலிருந்து விடுதலை செய்தால், உயிர் உள்ளவரை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்வேன்” என்று அவர் எழுதிய மன்னிப்புக் கடிதங்கள் பிரசித்தி பெற்றவை. 

பின்னாளில், வாஜ்பாய் உள்ளிட்ட இந்துத்துவா வாதிகளும் இதேபோல மன்னிப்பு கேட்டு, விடுதலைப் போராட்ட வீரர்களைக் காட்டிக் கொடுத்தார்கள்.தற்காலத்தில், அந்த வேலையை செய்துவருபவர் அர்னாப் கோஸ்வாமி. பாஜக ஆதரவாளரும் இந்துத்துவா ஊடகப் பேர்வழியுமான இவர், இஷ்டத்திற்கு அடுத்தவர்கள் மீது அவதூறையும் வெறுப்பையும் அள்ளி வீசுவது, பின்னர் மன்னிப்பு கேட்டு, ஜகா வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதில் அவர் தற்போது வி.டி. சாவர்க்கரையே விஞ்சி விட்டது தெரியவந்துள்ளது. அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக இந்தியாவிலேயே ஏராளமான அவதூறு வழக்குகள் இருந்தாலும், வெறுப்புப் பேச்சு, தவறான தகவல்களை பரப்பியதற்காக அண்மையில் இங்கிலாந்து நாட்டின் ஊடக கண்காணிப்பு அமைப்பு, அர்னாப் கோஸ்வாமிக்கு ரூ. 19 லட்சத்து 73 ஆயிரம் அபராதம்விதித்தது. அத்துடன் பகிரங்க மன்னிப்பு கேட்டாக வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து அர்னாப் கோஸ்வாமி ரிபப்ளிக் டிவி-யில் தனது மன்னிப்புக் கோரலை பகிரங்கமாக ஒளிபரப்பி யுள்ளார்.

ஆனால், இம்முறையையும் சேர்த்து அர்னாப் கோஸ்வாமி இதுவரை 280 முறை இங்கிலாந்து அரசிடம் மன்னிப்புக் கேட்டு மண்டியிட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 2020 பிப்ரவரி 26 முதல் ஏப்ரல் 9 வரையிலான காலக்கட்டத்தில் மட்டுமே 280 முறை அர்னாப் மன்னிப்புக் கேட்டுள்ளார். இதன்மூலம் இங்கிலாந்து அரசுக்கு மன்னிப்பு கடிதங்கள் எழுதியதில், சாவர்க்கரை அர்னாப் பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்துள்ளார்.இதையடுத்து 5 மன்னிப்புக் கடிதங்களை எழுதிய சாவர்க்கருக்கு ‘வீர்’ சாவர்க்கர் என்று பட்டம் கொடுத்த மோடி அரசு, அர்னாப்பிற்கு என்ன விருது கொடுக்க உத்தேசித்துள்ளது, மகாவீர் கோஸ்வாமியா அல்லது பரம்வீர் கோஸ்வாமியா? என்று சமூகவலைதளங்களில் பலரும் கிண்லடித்து வருகின்றனர்.

நல்ல வாய்ப்பு ரஜினி

 


மருத்துவமனையிலிருந்து நலம் பெற்று வீடு திரும்பியமைக்கு மகிழ்ச்சி ரஜினி. 

மருத்துவமனை உங்களுக்கு சில அறிவுரைகளை சொல்லியுள்ளது. 

ஒரு வார காலத்திற்கு படுக்கையில் இருந்தபடி முழுமையான ஓய்வு எடுக்க வேண்டுமென்றும் உடலுக்கு சிரமம் கொடுக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்றும் கொரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருந்திட வேண்டும் என்றும் சொல்லியுள்ளார்கள்.

இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி நன்றாக ஓய்வெடுங்கள்.

கொரோனா கிருமியை விட மோசமான கிருமியான பாஜகவிடமிருந்தும் விலகி பாதுகாப்பாக இருக்கலாம்.

டேக் கேர் ரஜினி.

Sunday, December 27, 2020

மகிழ்ச்சியுடன் ஒரு மாற்றம்

 



இன்று எங்கள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், வேலூர் கோட்டத்தின் முப்பத்தி மூன்றாவது மாநாடு வேலூரில் நடைபெற்றது. 

கள்ளக்குறிச்சியில் விமரிசையாக நடந்திருக்க வேண்டிய மாநாடு கொரோனா காரணமாக, வழக்கமான நிகழ்வுகளான பிரச்சாரம், பேரணி, கலை இரவு போன்றவை இல்லாமல் ஒரு நாள் நிகழ்வாக பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடாக நடந்தது.

ஆனாலும் மிகவும் முக்கியமான மாநாடு.

ஏனெனில்

இது நாள் வரை இணைச்செயலாளராக பணியாற்றி வந்த இளைய தோழர் எஸ்.குணாளன், புதிய பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். 



அடுத்த தலைமுறை வசம் சங்கத்தலைமை செல்வது என்பது ஆரோக்கியமான செயல்பாடுகள் நீடிக்க உதவும். அந்த முறையில் கோட்டத்தின் முதன்மைப் பொறுப்பிற்கு ஒரு இளைய தோழரை கொண்டு வர முடிந்தது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

அதே போல துணைப் பொருளாளர் பொறுப்பிற்கு இன்னொரு தோழர் பி.எஸ்.பாலாஜி வந்துள்ளார்.



புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொதுச்செயலாளர் தோழர் எஸ்.குணாளன், துணைப்பொருளாளர் தோழர் பி.எஸ்.பாலாஜி உள்ளிட்ட எங்களின் கோட்டச் செயலகத்தில் உள்ள அனைத்து தோழர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

எங்கள் கோட்டம் புதிய சிகரங்களை நோக்கி நிச்சயம் பயணிக்கும். 

பிகு: தமுஎகச துணைப் பொதுச்செயலாளர் மறைந்த தோழர் கருப்பு கருணா அவர்கள் குடும்ப நல நிதியாக உதவிடுமாறு மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள் விடுத்தோம். சில நிமிடங்களில் ரூபாய் 8,390 நிதி கிடைக்கப்பெற்றது மனதிற்கு நிறைவாக இருந்தது.

மோடிக்கு செம கேள்வி

 


வாட்ஸப்பில் வந்த சுவாரஸ்யமான கேள்வி கீழே உள்ளது.




மோடி சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. அவரது மோகிகளாவது சொல்லுங்களேன் ப்ளீஸ் . . . .

Saturday, December 26, 2020

பேரழிவு அலை

 


இதற்கு முன்பு கண்டதில்லை.
இனியும் காண விருப்பமில்லை.

கடலை நம்பினோர்
கடலாலாலே  கைவிடப்பட்டார்.

கொரோனா கொஞ்சம் கொஞ்சமாக கொல்கிறது.
சுனாமி கொத்து கொத்தாகக் கொன்றது.

அழகிற்கு அடையாளமாம் அலை
அன்று மட்டும் பேரழிவின் அடையாளமானது.

ஆழிப்பேரலையின் சீற்றத்தால் மாண்டோருக்கு

மனமார்ந்த அஞ்சலி

இன்று நாம். நாளை அவர்களும்

 





திருவனந்தபுரம் மாநகராட்சியின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள தோழர் ஆர்யா ராஜேந்திரனின் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்த செய்தி சிலருக்கு வயிற்றெரிச்சலையும் உருவாக்கியுள்ளது. 21 வயது பெண்தான் மேயர் என்றால் வேறு யாருக்கும் தகுதியில்லையா என்பது போன்ற அபத்தமான விமர்சனங்களை பார்க்க முடிகிறது. வயதானால்தான் முதிர்ச்சி வரும் என்று சொல்லும் அதே வாய் ஒரு எழுபது வயதுக்காரருக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்தால் எப்படி பேசும் என்றும் நமக்கு தெரியும்.

இன்று பொறாமையில் பேசும் வாய்கள் கூட நாளை அவரது பணிகளைப் பாராட்டிப் பேசும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

ஏனென்றால் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்வு. அத்தேர்வுகள் என்றுமே சோடை போனதில்லை.

எப்போதும் அவர் எங்களோடு

 


எங்கள் தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம் மறைந்து மூன்றாண்டுகள் உருண்டு விட்டன. அவர் நேரடியாக கலந்து கொள்ள முடியாமல் ஒரு அகில இந்திய மாநாடு கூட முடிந்து விட்டது. 

ஆனாலும் அவர் எப்போதும் எங்களோடே இருப்பதாக உணர்கிறோம். அவரது உரைகளும் எழுத்துக்களும் எப்போதும் எங்களை வழி நடத்தும், உற்சாகமூட்டும். 

எல்லாவற்றையும் விட அவரது மகத்தான சாதனையான "பென்ஷன்" ஓய்வு பெற்றவர்களுக்கும் இனி ஓய்வு பெறப் போகிற எங்களைப் போன்றவர்களுக்கும் அவரின் அருகாமையை எப்போதும் உணர்த்திக் கொண்டே இருக்கும்.

செவ்வணக்கம் தோழர் என்.எம்.எஸ்

இந்தியாவை சூழ்ந்துள்ள ஆபத்தை சுட்டிக்காட்டும் உரையின் காணொளி கீழே உள்ளது. எர்ணாகுளத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாடுதான் அவர் இறுதியாக பங்கேற்ற அகில இந்திய மாநாடு. அதில் அவர் ஆற்றிய உரைதான். அவசியம் பாருங்கள்




பிகு : மேலே உள்ள படம், தோழர் என்.எம்.எஸ், எங்கள் வேலூர் கோட்ட நிகழ்வில் இறுதியாக கலந்து கொண்ட வெள்ளிவிழா ஆண்டு துவக்க விழாவின் போது எடுக்கப்பட்டது.

முகப்பில் உள்ள படமும் வேலூரில் எடுக்கப்பட்டது. தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் 24 வது பொது மாநாடு 1996 ல் வேலூரில் நடைபெற்ற போது எடுக்கப்பட்டது.

Friday, December 25, 2020

யாருய்யா அந்த அருணாச்சலம்?



மக்கள் நீதி மய்யத்தோட பொதுச்செயலாளர் அங்கே இருந்து தாவி பாஜகவுக்கு தாவிட்டாருன்னு சங்கிங்க ஓவரா குதிச்சிக்கிட்டு இருக்காங்க! 

குஷ்பு வந்த போது குதிச்சதிலாவது ஒரு நியாயம் இருக்கு. அவங்களை வேடிக்கை பார்ப்பதற்காவது நாலு பேர் வருவாங்க! 

ஆமாம். யாருய்யா அந்த அருணாச்சலம்?

அப்படி ஒரு பெயரையே இன்னிக்குத்தான் முதல் முறையா கேள்விப் படறேன்.


போதும் இழப்புக்கள்

சமூகத்திற்கு ஆக்கபூர்வமாக பங்களிப்பு நல்குபவர்களின் தொடர் இழப்புக்கள் மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது.

பேராசிரியர் தொ.ப அவர்களுக்கு அஞ்சலி



 தமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவுக்கு

தமுஎகச மாநிலக்குழு

அஞ்சலி

அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய தமிழக அரசு முன்வரவேண்டும்

மூத்த தமிழறிஞரும் ஆழ்ந்த பெரியாரியச் சிந்தனையாளருமான அய்யா தொ.பரமசிவன் அவர்களின் மறைவு தமிழ் ஆய்வுலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். உறுதிமிக்க பெரியாரியவாதியான அவர் தற்செயலாக பெரியாரின் நினைவுநாளிலேயே காலமாகியிருக்கிறார்.

சிவகங்கை மாவட்டம், இளையாங்குடியில் டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றிய நாட்களில் கல்லூரி ஆசிரியர் சங்கமாகிய மூட்டாவின் இணைச்செயலாளராகப் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். மூட்டா இயக்க வரலாற்றின் மிக முக்கியமான போராட்டமான ஜாகிர் உசேன் கல்லூரிப்போராட்டத்தில் முன்னணிப்பாத்திரம் வகித்தவர். அவருடைய முனைவர் பட்ட ஆய்வேடாக அழகர்கோவில் பற்றிய ஆழமான ஆய்வு அப்போது வெளிவந்தது.

பின்னர், மதுரை தியாகராசர் கலைக்கல்லூரியில் பணி தொடர்ந்த காலத்தில் அவருடைய ”அறியப்படாத தமிழகம்” உள்ளிட்ட முக்கியமான நூல்கள் வெளிவந்தன. சின்னச்சின்னக் கட்டுரைகளில் இதுவரை நாம் அறிந்திராத தகவல்களுடன் நாம் பார்த்திராத புதிய கோணங்களில் அவருடைய சிந்தனை வீச்சைத் தமிழகம் கண்டது. அவருடைய ஆய்வுக்கட்டுரைகள் பலவும் மார்க்சிய ஆய்வுநெறியின்பாற்பட்டவையாக இருப்பதைக் காணலாம்.

நாட்டுப்புறத் தெய்வங்கள் மீது தமிழ்ச்சமூகத்தின் கவனத்தைத் திருப்பிய முன்னோடிகளில் ஒருவராகத் திகழும் தொ.ப. அவர்களின் பண்பாட்டு அசைவுகள், உரைகல், தெய்வம் என்பதோர், சமயங்களின் அரசியல் போன்ற நூல்வரிசை இந்துத்துவ அரசியலுக்கு எதிரான வலுவான வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டவை. அவரோடு உரையாடும் சில மணித்துளிகளில் அவர் வெளிப்படுத்தும் அறிவின் விசாலமும் அவரது நினைவாற்றலும் வியப்பளிப்பவை. நூல்களில் கற்றவற்றைத் தமிழ் நிலப்பரப்பில் வீதிகளில் நின்று இதோ பாருங்கள் இதுதான் சங்க இலக்கியம் சொன்ன சேதி என்று ஓர் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டே இருந்தவர். தொல்லியல் ஆய்வுகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர். தமிழ் வைணவம், தமிழ்ச்சமணம் எவ்விதம் வட இந்திய மரபுகளிலிருந்து வேறுபட்டது என்பதை கண்டு சொன்னவர்.

பின்னர், அவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார். பேராசிரியராகவும் ஒரு நிர்வாகியாகவும் அவர் நேர்மையின் இலக்கணமாக வாழ்ந்தார் என்று இன்றுவரை அவரது சக பேராசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்பால் தோழமைப்பூர்வமான உறவை தன் இறுதிநாள்வரை கொண்டிருந்தவர். செம்மலர், புதுவிசை உள்ளிட்ட முற்போக்கு இதழ்களில் பல கட்டுரைகளை எழுதியவர். நெல்லையில் ஒவ்வோராண்டும் நடைபெறும் கலை இலக்கிய இரவுகளில் முதல் வரிசையில் அமர்ந்திருப்பார். தமுஎகசவின் பல பயிலரங்குகளில், நிகழ்வுகளில் பங்கேற்று ஆக்கப்பூர்வமான பங்களிப்பைச் செலுத்தியவர்.

சுற்றுச்சூழல் இயக்கங்களோடு தன்னை மனப்பூர்வமாக இணைத்துக் கொண்டவர்.
பணத்துக்கும் புகழுக்கும் ஒருபோதும் மயங்காத, எதற்காகவும் தன் கருத்துக்களில் சமரசம் செய்துகொள்ளாத மிகப்பெரும் தமிழறிஞராக இறுதிவரை எளிய வாழ்வையே வாழ்ந்தவர். நாட்டின் பன்முகத்தன்மையை அழித்து ஒற்றைத்துவப்படுத்தும் வரலாற்று மோசடிகள் அரசின் துணையோடு விஷமெனப் பரவும் இக்காலத்தில் வரலாற்றின் உண்மைத்தன்மையை துணிவுடன் எடுத்துரைக்க முன்னிலும் கூடுதலாய் தேவைப்பட்ட முனைவர் தொ.ப. காலமாகியுள்ளார். அவரது ஆய்வுநூல்களையும் அறிவார்ந்தச் செயல்பாடுகளையும் பரவலாக்குவதே அவருக்குச் செலுத்தப்படும் பொருத்தமான அஞ்சலியாக அமையுமென தமுஎகச கருதுகிறது. மதிக்கத்தக்க பங்களிப்பினைச் செய்து காலமாகிற தமிழறிஞர்களையும் கலை இலக்கிய ஆளுமைகளையும் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யும் நடவடிக்கையை இவரிலிருந்தேனும் தொடங்க வேண்டுமென தமிழக அரசை தமுஎகச கேட்டுக்கொள்கிறது.

அவருடைய மறைவால் துயருற்றிருக்கும் அவரது இணையர், மகன், மகள், பேரக்குழந்தைகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் தமுஎகச தன் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
அன்புடன்
மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் (பொறுப்பு)
ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்
24.12.2020

மனிதா, மனிதா

 


இன்று வெண்மணி தியாகிகள் தினம். இந்த வருடமும் செல்ல இயலவில்லை. 

அதை ஈடு செய்யும் விதத்தில்

வெண்மணி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட "கண் சிவந்தால் மண் சிவக்கும்" படத்தின்

"மனிதா, மனிதா, இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்"

பாடலின் வயலின் வடிவம் என் மகனின் கைவண்ணத்தில்.

யூட்யூப்இணைப்பு இங்கே

Thursday, December 24, 2020

அவர்தாம் பெரியார் . . .

 


“அறிவைத் தடுப்பாரை,

           மானம் கெடுப்பாரை
          வேரோடு பெயர்க்க வந்த 
           கடப்பாரை

                       - கவிஞர் காசி ஆனந்தன்

 “தொண்டு செய்து பழுத்த பழம்,
            தூய தாடி மார்பில் விழும், 
            மண்டைச் சுரப்பை 
            உலகு தொழும்
            மனக்குகையில் 
           சிறுத்தை எழும்
            அவர்தாம் பெரியார், 
            யார்? அவர்தாம் பெரியார்” 

                      -  பாரதிதாசன்

தந்தை பெரியாருக்கு அஞ்சலி

ஒவியம் : திரைக்கலைஞர் தோழர் பொன்வண்ணன்

என்ன ஆனார் MGR?

 


மேலே உள்ள படம் எங்கள் புதுவை கிளை 2 ன் தோழர் எஸ்.செல்வராஜின் மகன் அனிஷ் பாரதி வரைந்தது.

எம்.ஜி.ஆர் நினைவு நாளை முன்னிட்டு தன் மகன் வரைந்தது என்ற அவர் குறிப்பைப் பார்த்தவுடன்தான் இன்று எம்.ஜி.ஆர் நினைவு நாள் என்பது நினைவுக்கு வந்தது.

வழக்கமாக எனது வீட்டிலிருந்து அலுவலகம் வரும் மூன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் குறைந்தது நான்கைந்து இடங்களிலாவது சின்ன ஷாமியானா போட்டு எம்.ஜி.ஆர் படத்திற்கு மாலை அணிவித்து ஒலி பெருக்கிகளில் அவர் பாடல்களை ஒலித்துக் கொண்டிருப்பார்கள். 

இன்று அப்படி எதுவும் கண்ணில் படவில்லையே, ஒரு வேளை அலுவலகம் வரும் அவசரத்தில் நாம்தான் கவனிக்கவில்லையோ என்று எண்ணி, வீடு திரும்பும் போது நிதானமாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒரே ஒரு இடத்தில் மட்டும்தான் இந்த முறை எம்.ஜி.ஆர் இருந்தார். அந்த இடத்திலும் கூட எம்.ஜி.ஆர் பாட்டு இல்லை, பிள்ளையார் பாட்டுதான்.

கடந்த வருடங்களில் மற்ற இடங்களில் இருந்த எம்.ஜி.ஆர் என்ன ஆனார்?

அவர் துவக்கிய கட்சியின் இன்றைய உரிமையாளர்களின் இன்றைய பெரிய முதலாளியாக மோடி மாறி விட்டதால் எம்.ஜி.ஆர் காணாமல் போய் விட்டாரோ?

ஷேம் ஷேம் மாலன்

 


பாவம், மூத்த பத்திரிக்கையாளர்....

ட்விட்டரில் தினம் ஒரு கேள்வி என்று ஒரு கருத்துக் கணிப்பை தொடங்கினார். 

21 ம் தேதி ஒரு கேள்வி கேட்டார்.



அதற்கு வந்த முடிவு அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கி  விட்டது போல. 

இரண்டு நாட்களாக ஆளை அந்த பக்கம் காணவே காணோம். அடுத்த கேள்விகளும் வரவில்லை. 

ஒரு வேளை உடம்பு, கிடம்பு சரியில்லையோ என்று முக நூல் பக்கம் போய்ப் பார்த்தால் மனுசன் "எருமை மேயும் சிறு வீடு" என்று திருப்பாவை விளக்கம் கொடுத்துக்கிட்டு இருக்காரு.

ரொம்பவே ஷேம் ஷேம் ஆயிடுச்சா மாலன் சார்?

Wednesday, December 23, 2020

விஜய் - சீமான் என்ன பஞ்சாயத்து?

 



வழக்கறிஞர் தோழர் பிரதாபன் ஜெயராமன் அவர்களின் பக்கத்தில் இவற்றைப் பார்த்தேன்.

ஆமாம், இது என்ன பஞ்சாயத்து?

விஜய் ரசிகர்கள் இப்படி கொந்தளிக்கிற அளவிற்கு சீமான் சொன்னது என்ன?

தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்


Tuesday, December 22, 2020

யெட்டிக்கு கார்ப்பரேட் பாசமா? காசு வாங்கிய பாசமா?



 *நாளொரு கேள்வி:  21.12.2020*


*தொடர் எண்: 204*

இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *க.சுவாமிநாதன்*
####################

*கர்நாடக முதல்வரின் கார்ப்பரேட் பாசம்*

*கேள்வி:* பெங்களூரு விஸ்ட்ரான் நிறுவனத்தில் என்ன பிரச்சினை? கர்னாடகா பா.ஜ.க முதல்வர் எடியூரப்பா தொழிலாளர்களைக் கண்டித்துள்ளாரே!

*க.சுவாமிநாதன்*

இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு அறிக்கையின் ஒரு பகுதி. அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிய இதன் தகவல்கள் உதவும். 

"பெங்களூருவில் உள்ள விஸ்ட்ரான் கம்பெனியின் தொழிற்சாலையில் நான்கு மாதங்களாக அதன் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காதது மட்டுமல்ல, அவர்களை கூடுதல்நேர ஊதியம் எதுவும் இல்லாமல் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்ய நிர்ப்பந்தித்தும்  இருப்பதன் விளைவாக அங்கே வேலைசெய்துவந்த தொழிலாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டார்கள். *பன்னாட்டு ( தைவான்) நிறுவனமான இது, ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன்களுக்காக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள ஒரு நிறுவனமாகும். இங்கே பணிபுரியும் பத்தாயிரம் தொழிலாளர்களில் 80 சதவீதத்திற்கும் மேலானவர்கள் நிரந்தரமற்ற ஒப்பந்தத் தொழிலாளர்களாவார்கள்.* பன்னாட்டு நிறுவனங்கள் நாட்டின் சட்டங்கள் எதையும் மதிப்பதே இல்லை. இந்த நிலையில் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்தபின்பு, இவர்கள் தொழிலாளர்களின் உரிமைகளை மீறுவதற்கு வெளிப்படையாகவே வாய்ப்பு அளிக்கப் பட்டிருக்கிறது. விஸ்ட்ரான் நிறுவனம் தொழிலாளர் நலச் சட்டங்களை மீறி செயல்பட்டுக்கொண்டிருப்பதாக *ஆப்பிள் கார்ப்பரேஷன் நிறுவனமே, குற்றம்சாட்டியுள்ள நிலையில், கர்நாடக மாநில முதல்வர் போராடும் தொழிலாளர்களைக் கண்டனம் செய்திருப்பதும், விஸ்ட்ரான் கம்பெனியை ஆதரித்திருப்பதும் விசித்திரமாக இருக்கிறது.* தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் ஒடுக்குமுறையை ஏவியிருப்பதற்கும், பலரையும் கைது செய்திருப்பதற்கும் அரசியல் தலைமைக்குழு கண்டனம் தெரிவித்துக்  கொள்கிறது. நாட்டின் அந்நிய நேரடி முதலீட்டைக் கவர வேண்டும் என்பதற்காக தொழிலாளர்கள் மீது தாக்குதலைத் தொடுப்பதை மோடி அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும்."

இனி இந்து பிசினஸ் லைன் (21.12.2020) தலைப்பு செய்திக்கு வருவோம். *"Apple puts Wistron on watch"* என்பது தலைப்பு. ஆப்பிள் விஸ்ட்ரான் உடனான புதிய வணிக ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்திருக்கிறது. *"எங்கள் மிக முக்கியமான நோக்கம், எல்லா தொழிலாளர்களும் கௌரவத்தோடும், மரியாதையுடனும் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் ஊதியம் முழுமையாக வழங்கப்பட வேண்டும்"* என்று ஆப்பிளின் செய்திக் குறிப்பு கூறுகிறது. 

முதலில் டிசம்பர் 12 அன்று தொழிலாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டு 437 கோடி ரூபாய் சேதத்தை உண்டு பண்ணி விட்டதாகக் குற்றம் சாட்டிய விஸ்ட்ரான் நிறுவனம் இப்போது சேதம் ரூ 50 கோடிகள் என மதிப்பீட்டில் *பெரிய பல்டி* அடித்துள்ளது. 

விஸ்ட்ரான் நிறுவனமும், சில தவறுகள் நடந்து விட்டதாகவும், ஊழியர்கள் சிலருக்கு சரியாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், அதன் விசாரணைக் குழு இம் முடிவுகளுக்கு வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில் *" இந்த தவறுகளுக்கு ஆழமாக வருந்துகிறோம். இதற்காக எங்கள் ஊழியர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் "*

இப்படி மன்னிப்பு கேட்டுள்ள விஸ்ட்ரான் நிர்வாகம் இன்னும் பல தொழிலாளர்களை வேலையில் சேர அனுமதிக்கவில்லை என்பது தனிக் கதை. 

இதை விட என்ன வேண்டும் கர்நாடகா முதல்வருக்கு.... ஆனாலும் கர்நாடகா முதல்வரின் கண்களுக்கு இந்த செய்திகள், அறிக்கைகள் கண்களில் படவில்லை. அவர் என்ன செய்வார் பாவம்! *கார்ப்பரேட் பாசம் கண்களை மறைக்கிறது!*

******************
*செவ்வானம்*

கார்ப்பரேட் பாசம் மட்டும் காரணமாக இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. இந்தியாவின் ஊழல் முதல்வரான யெட்டியை அந்த நிறுவனம் நன்றாகவே கவனித்திருக்கும். கார்ப்பரேட் பாசத்தோடு காசு வாங்கிய பாசமும் சேர்ந்திருக்கும்.