Wednesday, April 8, 2020

அச்சத்தை நிஜமாக்கி விட்டார்கள் . . .


காலை முக நூலில் உலா வந்து கொண்டிருந்த போது ரபீக் ராஜா என்ற தோழர் ஒரு வருடத்திற்கு முன்பு போட்டிருந்த ஒரு பதிவை சில தோழர்கள் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.

அந்த பதிவு கீழே உள்ளது.



அதற்கும் மேலே உள்ள செய்திக்கும் தொடர்பு உள்ளது. ஆமாம் காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்ட முதியவர் தோழர் ரபீக் ராஜாவின் தந்தைதான்.

காவிகளின் பிரதிநிதியாக காக்கிச்சட்டைகளை தமிழக அரசு மாற்றியதன் விளைவுதான் இப்படுகொலை.

தன் கடையைத் திறக்கவில்லை, வியாபாரம் செய்யவில்லை. மோடி மக்களை பட்டினி போட்டது போல அல்லாமல் தன் கடையில் இருந்த கோழிகளுக்கு தீவனம் போடச் சென்ற காரணத்திற்காக இந்த படுகொலை நடந்துள்ளது.

ஒரு மகனின் அச்சத்தை நிஜமாக்கி விட்டீர்களே படுபாவிகளா!

மோடி வகையறாக்களின் எடுபிடியாக தமிழக ஆட்சியாளர்கள் நீடிக்கும் வரை இது போன்ற செய்திகள் தொடரும் என்பது மிகப் பெரும் துயரம்.

No comments:

Post a Comment