Friday, April 17, 2020

மதுரக்காரவுகளுக்கு இது தேவையா?





மதுரை அலங்காநல்லூரில் ஒரு ஜல்லிக்கட்டு காளை (அது கோயில் காளையும் கூடவாம்) ஏப்ரல் 12 ம் தேதி இறந்துள்ளது. அதன் அடக்கம் திருவிழா போல நடந்துள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளனர். 

ஜல்லிக்கட்டு காளை எங்களுக்கு கடவுள் போல, யார் தடுத்தாலும் அடங்க மாட்டோம் என்று அமைப்பாளர்கள் கூறியுள்ளனர். 

144 தடை உத்தரவை மீறியதாக காவல்துறை 3000 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் மதுரை மாவட்டத்தில் 45 பேரை தொற்றியுள்ள சூழலில் இப்படிப்பட்ட இறுதி ஊர்வலமும் அதிலே ஆயிரக்கணக்கானவர் பங்கேற்பும் அவசியமா மதுரை மக்களே!

No comments:

Post a Comment