Thursday, April 16, 2020

துரத்தனும், தகர்க்கனும் ,ஒருமிச்சு நிற்கனும்



நேற்று எங்கள் பண்ருட்டி கிளைத் தோழர் எஸ்ஜெயஸ்ரீ பகிர்ந்து கொண்ட காணொளி கீழே உள்ளது.

பல முறை பார்த்து விட்டேன். மலையாளத்தின் சிறந்த கலைஞன் நெடுமுடி வேணு பாடியுள்ள பாடல், கேரள மாநில காவல்துறை கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக தயாரித்த காணொளி இது.

நெடுமுடி வேணுவின் குரல், கோரஸ் இசை, தாள நடை ஆகியவை உங்களையும் நிச்சயம் இரண்டாவது முறையாவது காண வைக்கும்.

துரத்தனும், தகர்க்கனும் என்று கொரோனா வைரஸுக்காக சொல்வதாக இருந்தாலும் இந்த துயர காலத்திலும் மத வெறியை தூண்டும் நாசகர சக்திகளை இந்தியாவை விட்டு துரத்தனும், அவர்களின் சதிகளை தகர்க்கனும், இந்தியாவை பாதுகாக்க நாமெல்லாம் ஒருமிச்சு நிற்கனும் (ஒன்று பட்டு நிற்க வேண்டும்) என்ற செய்தியாகவும் இப்பாடலை நான் பார்க்கிறேன்.





No comments:

Post a Comment