Showing posts with label ஜி.எஸ்.டி. Show all posts
Showing posts with label ஜி.எஸ்.டி. Show all posts

Monday, September 22, 2025

மோடி டி.வி ல பேசினா?

 


மோடி தொலைக்காட்சியில் பேசப் போகிறார் என்றாலே மக்கள் பதற்றமடைந்து விடுகின்றனர். காரணம் நவம்பர் எட்டு கறுப்பு தினம். இந்தியப் பொருளாதாரத்தை நிலை குலைய வைத்த முட்டாள்தனமான நடவடிக்கையை எடுத்த மோசமான நாள் அல்லவா அது!

ஜி.எஸ்.டி 2.0 என்று மோடி பீற்றிக் கொண்டுள்ளார். மக்களின் சேமிப்புத் திருவிழா என்றெல்லாம் கதை விட்டுள்ளார்.

இப்போது ஜி.எஸ்.டி யை அகற்றியதும் விகிதத்தை குறைத்ததும் மிகப் பெரிய சேமிப்பை மக்களுக்கு தரும் என்றால் இத்தனை நாள் அந்தா ஜி.எஸ்.டி மூலமாக மக்களின் சேமிப்பை களவாடியதும்  இவர்தானே! அது ஒன்றும் நேரு கிடையாதே!

Saturday, September 6, 2025

GST - பீற்றிக் கொள்ளும் பாஜகவினருக்கு . . .

 GST விகிதங்களைக் குறைத்து மக்களின் துயரத்தை போக்கியுள்ளார் 56 இஞ்ச் மாவீரன் என்று பீற்றிக் கொள்ளும் பாஜகவினருக்கு கீழே உள்ள படம் சமர்ப்பணம். 




Thursday, September 4, 2025

GST அகற்றம் AIIEA வின் வெற்றி

 


தனி நபர் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டின் மீதான 18 % ஜி.எஸ்.டி அகற்றப்பட்டுள்ளது. நேற்றைய ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தின் முடிவு இது.

இந்த முடிவு கோடிக்கணக்கான பாலிசிதாரர்களுக்கு பயனளிக்கும். இந்த முடிவு அவ்வளவு எளிதாக வந்து விடவில்லை. அதன் பின்னால் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் உறுதியான, தொடர்ச்சியான போராட்டங்களும் பிரச்சார இயக்கங்களும் முயற்சிகளும் அடங்கியுள்ளன.

தன் குடிமக்களுக்கு எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை ஒரு மக்கள் நல அரசிற்கு உண்டு. அனைவருக்குமான மருத்துவம் கிடைக்கச் செய்ய வேண்டிய பொறுப்பும் அரசிற்கு உண்டு.

ஆனால் இந்த கடமையை நிறைவேற்றுவதைப் பற்றி உலகமயக் கொள்கையை பின்பற்றும் எந்த அரசும் கவலைப்படுவதில்லை.

அதனால் மக்களே தங்களின், தங்கள் குடும்பத்தின் எதிர்கால பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய ஆயுள் காப்பீட்டை நாடுகின்றனர். மருத்துவ செலவினங்களை சமாளிக்க மருத்துவக் காப்பீட்டை நாடுகின்றனர்.

அரசு செய்யத் தவறியதை குடிமக்களே தங்களது சொற்ப சேமிப்பில் இருந்து மேற்கொள்கிற போது அதற்கு 18 % ஜி.எஸ்.டி விதிப்பதென்பது ஒரு விதத்தில் அராஜகமே.

சேவை வரி என்று ஆரம்பித்த காலம் முதலே அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அதனை எதிர்த்து வருகின்றது. மக்கள் மத்தியில் 2004ம் ஆண்டு முதல் கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட பல இயக்கங்களை நடத்தி வந்தது ஏ.ஐ.ஐ.இ.ஏ.

பாலிசிதாரர்களுக்கு தேவையற்ற சுமையாக மாறியது ஜி.எஸ்.டி, இன்சூரன்ஸ் பரவலை அதிகரிக்க வேண்டும் என்று உபதேசித்த அரசு, வழக்கமாக வரும் வணிகத்தைக் கூட ஜி.எஸ்.டி பாதிக்கிறது என்ற யதார்த்தத்தை கணக்கிலெடுக்க மறுத்தது. 

2019 முதல் இந்த இயக்கம் தீவிரமானது. நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பது, ஜி.எஸ்.டி கவுன்சில்  உறுப்பினர்களை சந்தித்து  ஆதரவு திரட்டுவது, பாலிசிதாரர்களிடமிருந்து கடிதங்கள் பெற்று நிதியமைச்சருக்கு அனுப்புவது என எத்தனையோ இயக்கங்களை சங்கம் நடத்தியது. எங்கள் கோட்டத்தில் கூட புதுவை முதல்வர் திரு நாராயணசுவாமி அவர்களை இரண்டு முறை எங்கள் தென் மண்டலத் தலைவர்களோடு சந்தித்து விவாதித்துள்ளோம். தொகுதிக்கு வராத எம்.பிக்களை தவிர அனைவரையும் சந்தித்துள்ளோம்.

2024 மக்களவைத் தேர்தலுக்கு பின்பு  இயக்கம் சூடு பிடித்தது. நாடு முழுதிலும் நானூறுக்கும் மேற்பட்ட எம்.பிக் களை சந்தித்தோம். பாஜக உறுப்பினர்கள் கூட எங்களின் நியாயத்தை உணர்ந்து ஆதரவு அளித்தார்கள். மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஜி.எஸ்.டி யை அகற்றச் சொல்லி நிதியமைச்சருக்கு கடிதம் அனுப்பினார்.


எங்கள் கோட்டத்திலும் எம்.பி க்களை சந்தித்தோம்.



மக்களவை, மாநியல்ங்களவையில் எம்.பிக்கள் பிரச்சினையாக எழுப்பினர்.

இந்தியா அணி எம்.பி க்கள் நாடாளுமன்றத்தில் தர்ணா நடத்தினர்.



ஆனாலும் நிர்மலா அம்மையார் அசையவில்லை.

ஜி.எஸ்.டி கவுன்சிலில் இது தொடர்பான விவாதம் வந்த போது ,முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.  ஜி.எஸ்.டி அமைச்சரவைக்குழு விவாதித்து பரிந்துரை அளிக்கட்டும் என்று காலம் தாழ்த்தப்பட்டது.

இதற்கு மேலும் தாமதிக்க முடியாது என்ற சூழல் உருவான பின்பு, இப்போது ஜி.எஸ்.டி அகற்றப்பட்டுள்ளது.

மக்களுக்காகவும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நடத்திய இந்த போராட்டமும் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

எல்.ஐ.சி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக ஜி.எஸ்.டி அகற்றம் திகழும். 

எல்.ஐ.சி யை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாப்பது என்பது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சித்தாந்த நிலைப்பாடு.

வார்த்தைகளோடு நிறுத்திக் கொள்ளாமல் செயலிலும் காண்பிக்கிற அமைப்பு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் ஒளி வீசும் மணி மகுடத்தில் இன்னும் ஒரு ரத்தினக்கல் பதிக்கப் பட்டுள்ளது.

இந்த வெற்றியோடு சங்கத்தின் பயணம் தொடரும், மேலும் உறுதியாக, மேலும் உற்சாகத்துடன். . .


Thursday, January 2, 2025

இது தெரியாம போச்சே . . .

 


கீழேயுள்ள செய்தியை தயவு செய்து நிர்மலா அம்மையார் பார்வைக்கு மட்டும் எடுத்துச் செல்லாதீர்கள். அப்படி போனால் ஸ்மார்ட் போன் வைத்துள்ள இந்தியர்கள் அனைவரும் லட்சக்கணக்கில் வரி கட்ட வேண்டியிருக்கும் . . .


பிகு: அம்மையார் பற்றி நெறய மீம்கள் வேறு ஸ்டாக் உள்ளது. அவற்றையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். 

Monday, December 23, 2024

பாப்கார்ன், பிரியாணி, ஆம்லெட் மற்றும் இன்சூரன்ஸ்

 


புதிதாக வரி போடுவதென்றால் நிர்மலா அம்மையாருக்கு ஒரே குஷி. குறைவாக இருந்த வரியை உயர்த்துவதிலும் கூட. அவருக்கு மூளை என்ற வஸ்து இருப்பது தெரிவதே இது போன்ற சந்தர்ப்பங்களில்தான்.

சாதா ஆம்லேட்டிற்கு ஒரு வரி, பெரெட் ஆம்லட்டிற்கு ஒரு வரி, தொட்டுக் கொள்ள ஸாஸ் கொடுத்தால் ஒரு வரி.

அதே போலத்தான் பாப்கார்னிற்கும் பிரியாணிக்கும் . . .

வெங்காயமே சாப்பிடாத அம்மையாருக்கு ஆம்லெட்டைப் பற்றியோ பிரியாணியைப் பற்றி என்ன தெரியப் போகிறது!  வீட்டில் தயாரித்து சாப்பிடுங்கள் என்ற இலவச உபதேசம்  வேண்டுமானால் செய்வார்!

வரிகளை உயர்த்துவதில் காண்பிக்கிற வேகத்தை குறைப்பதில் மட்டும் காண்பிப்பதில்லை.

ஆயுள் இன்சூரன்ஸ் பிரிமியம் மற்றும் மற்றும் மருத்துவக் காப்பீட்டுக்கான பிரிமியத்தின் மீதான ஜி.எஸ்.டி அகற்றப்பட வேண்டும் என்ற குரல் இப்போது வலிமையாக கேட்டுக் கொண்டிருக்கிறது. எங்கள் சங்கத்தின் சார்பில் 400 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தோம். அவர்களும் நிதியமைச்சருக்கு கடிதங்கள் அனுப்பினார்.

மோடியின் மந்திரி நிதின் கட்காரியும் கடிதம் எழுதினார். பலரும் மக்களவை, மாநிலங்களவையில் இப்பிரச்சினையை எழுப்பினார்கள். இந்தியா கூட்டணி எம்.பி க்கள் நாடாளுமன்றத்திலேயே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இத்தனைக்கும் பிறகே இன்சூரன்ஸ் பிரிமியம் மீதான ஜி.எஸ்.டி பிரச்சினை ஜி.எஸ்.டி கவுன்டிலில் இப்பிரச்சினை முன்வைக்கப்பட்டது. அது பற்றி ஆராய கமிட்டியெல்லாம் போடப்பட்டது.

ஆனால் இன்ற வரை முடிவெடுக்கப்படவில்லை. ஆயு, மறு ஆய்வு, மேலும் ஆய்வு என்று நடந்து கொண்டிருக்கிறது.

மக்களிடமிருந்து பிடுங்குவதில் இருக்கும் வேகமும் ஆர்வமும் கொடுப்பதற்கு மட்டும் அம்மையாருக்கு இருப்பதே இல்லை.

மக்கள் என்ன அதானியா இல்லை அம்பானியா?

 

Tuesday, September 10, 2024

முடிவெடுக்க தாமதமேன் நிர்மலா மேடம் ???

 


ஜி,எஸ்.டி கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆயுள் இன்சூரன்ஸ் மற்றும்  மருத்துவக் காப்பீட்டு பிரிமியத்திற்கான 18 % ஜி.எஸ்.டி அகற்றப் படும் அல்லது குறைக்கப்படும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

ஆனால் நேற்றைய கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அமைச்சர்களின் குழு ஒன்று விவாதித்து 50 நாளில் ( 50 நாளுக்குள் முன்னேற்றம் இல்லையென்றால் என்னை உயிரோடு கொளுத்துங்கள் என்று செல்லா நோட்டு சமயத்தில் நான்-பயாலாஜிகல் குழந்தை சொன்ன வஜனம்தான் 50 நாள் என்றாலே நினைவுக்கு  வந்து தொலைக்கிறது) பரிந்துரை அளிக்க வேண்டும் என்றுதான் முடிவெடுத்துள்ளது.

ஆயுள் இன்சூரன்ஸ் மற்றும்  மருத்துவக் காப்பீட்டு பிரிமியத்திற்கான 18 % ஜி.எஸ்.டி  நியாயமா இல்லையா என்று முடிவெடுக்க எதற்கு ஒரு குழு?

ஆளும் கட்சி மந்திரி உட்பட பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜி.எஸ்.டி கூடாதென்ற ஒருமித்த கருத்து உடையவர்கள்தான். 

பிறகு எதற்கு ஆய்வு, மண்ணாங்கட்டி எல்லாம்?

மோடி, நிர்மலா அம்மையார் கூட்டணியை போல் மக்கள் விரோதிகள் யாரும் கிடையாது. எந்த பலனாக இருந்தாலும் முதலாளிகளுக்கு மட்டுமே செல்ல வேண்டுமென்ற சிந்தனை கொண்ட தரகர்கள்.

அகற்றவோ அல்லது குறைக்கவோ முடியாதென்று சொன்னால் அதுவே ஹரியானா, காஷ்மீர், மஹாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகளை பாதிக்கும் என்பதால் ஒரு குழு அமைத்து சமாளித்துள்ளார்கள்.

ஒரு பிரச்சினைக்கு தீர்வு கண்டு பிடிக்காமல் அதை கிடப்பில் போட செய்யும் முயற்சிக்கு பெயர்தானே குழு அமைப்பது!

என்ன! ஜி.எஸ்.டி அகற்றல் கோரிக்கையை வலியுறுத்தும் எங்கள் சங்கத்தின் போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். 


Tuesday, July 30, 2024

மந்திரி பேச்சையாவது கேளுங்கம்மா . . .

 


ஆயுள் இன்சூரன்ஸ் பிரிமியத்திற்கு வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி யை நீக்க வேண்டும்,  ஆயுள் இன்சூரன்ஸ் பிரிமியத்திற்கு மீண்டும் வரி விலக்கு தர வேண்டும், பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒரே நிறுவனமாக ஒன்றிணைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தோழர்கள் நாடெங்கிலும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து வருகிறோம்.

பாஜக மந்திரி நிதின் கட்காரியை எங்கள் நாக்பூர் கோட்டத் தோழர்கள் சந்தித்துள்ளனர். அவர் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு நிதியமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.





ஆணவம் நிறைந்த நிர்மலா அம்மையாரே, நல்லவர்கள் சொல்வதை எல்லாம் கேட்கக்கூடாது என்ற பிடிவாதத்துடன் இருக்கும் நீங்கள் குறைந்தபட்சம் உங்கள் கட்சி மந்திரி சொல்வதையாவது கேட்டு நடக்கவும்.

Sunday, June 13, 2021

பொய் சொல்லாதீர் இரக்கமற்ற அம்மணியே

 


நேற்று ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடந்துள்ளது.

கொரோனா தொற்று தொடர்பான மருந்துகள், பாதுகாப்புப் பொருட்கள், தடுப்பூசி ஆகியவற்றுக்கான ஜி.எஸ்.டி அகற்றப்பட வேண்டும் என்று பாஜக ஆளாத மாநிலங்களின் ஜி.எஸ்.டி கவுன்சில் உறுப்பினர்கள் கடுமையாக குரல் கொடுத்ததன் விளைவாக 12 %, 18 % என்று இருந்த ஜி.எஸ்.டி இப்போது 5 % ஆக குறைக்கப்பட்டுள்ளது.

வரி வாங்கியே பழக்கப்பட்ட அந்த அம்மையாரால் அந்த 5 % வரி கூட விதிக்காமல் இருக்க முடியவில்லை போல. 

மக்கள் மரணத்தோடு போராடும் வேளையில் கூட இவர்கள் கல்லா கட்ட வேண்டும் என்ற சிந்தனை எவ்வளவு கேவலமான ஒன்று!

தடுப்பூசிக்கான 5 % ஜி.எஸ்.டி தொடரும். ஆனால் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படுவதால் மக்களுக்கு பாதிப்பில்லை என்று அம்மையார் சொல்லியுள்ளார்.

இதைத்தான் பொய் என்று சொல்கிறேன் நான்.

சுகாதாரத்துறை அமைச்சர் மோடியின் குரங்குக் குளியலுக்கு மறு நாள் கொடுத்த அறிக்கையில் கோவிஷீல்ட், கோவேக்ஸின், ஸ்புட்னிக் ஆகிய மூன்று தடுப்பூசிகளுக்கும் முறையே 780, 1410, 1145  என அதிகபட்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தனியார் மருத்துவமனைகள் அந்த வரம்பையும் சேவைக் கட்டணம் 150 ரூபாயையும் தாண்டி வசூலிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு என்று சொன்னார்.

வேறு வழியில்லாமல் தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் உங்கள் அரசு நிர்ணயித்த விலையைத் தாண்டி ஜி.எஸ்.டி யும் கட்ட வேண்டியிருக்குமே!

இது பாதிப்பு கிடையாதா?

ஏன் இப்படி அபாண்டமாக பொய் சொல்கிறீர்கள்?

சாரி, மன்னிக்கவும்.

ஏன் பொய் சொல்கிறீர்கள் என்று மோடியின் மந்திரியைக் கேட்டது என் தவறுதான்.