Showing posts with label ஜெமோ. Show all posts
Showing posts with label ஜெமோ. Show all posts

Wednesday, March 18, 2026

அசிங்கமா போயிடுச்சே ஜெயமோகன்

 


இன்றைக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்பு அகிலனுக்கு ஞானபீடம் அறிவிக்கப்பட்டபோது சுந்தர ராமசாமி மிகக் கடுமையாக எழுதினார். அகிலன் இன்று எவர் என்று தெரியாத நிலை. சு.ராவின் அக்கட்டுரை இன்றும் வாசிக்கப்படும் ஒரு ‘கிளாஸிக்’. சு.ரா சொன்னார் “ஜிப்பா தேசிய உடை ஆக்கப்படுவதை பிக்பாக்கெட்டுகள் ஆதரிப்பது போன்றது அகிலனுக்கு ஞானபீடம் கிடைத்தபோது சோட்டா எழுத்தாளர்கள் கொண்டாடியது”. அந்த பிக்பாக்கெட்டுகளின் பெயர்களை இன்று தமிழ் விக்கியில்தான் தேடவேண்டும்.

இது ஓர் எழுத்தாளர் விருது பெறுவதற்கு எதிரான கண்டனம் அல்ல. இது அந்த ஓர் எழுத்தாளர் சார்ந்த விஷயமும் அல்ல. இந்த விருதோ, அந்த எழுத்தாளரோ எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.

அகிலனுக்கு கிடைத்த ஞானபீடம் தமிழை சிறுமை செய்தது. ஐம்பதாண்டுகளாக தமிழ் இலக்கியத்தை எந்த இலக்கிய மேடையிலும் உரிய இடம் இல்லாததாக ஆக்கியது. அகிலன் தமிழின் தலைசிறந்த எழுத்தாளர் என்றால் மற்றவர்களின் எழுத்தை பொருட்படுத்தவேண்டியதில்லை என்று இந்தியா முடிவு செய்தது.

மேலே உள்ளது ஜெயமோகன் எழுதிய பதிவு. ஞானபீட விருது அகிலனுக்கு கொடுக்கப்பட்டதை ஜெயமோகனும் அவர் ஆசான் சுந்தர ராமசாமியும் கடுமையாக எதிர்த்தார்கள் என்பதையும் அகிலனை ஒரு எழுத்தாளராகவே ஜெமோ மதிக்கவில்லை என்பதையும் அந்த பதிவு சொல்கிறது.

ஜெயமோகன் எப்பேற்பட்ட பொய்யன், சந்தர்ப்பவாதி என்பதை எழுத்தாளரும் திரைக் கலைஞருமான தோழர் கவிதா பாரதி எழுதிய பதிவு லட்சமாவது முறையாக அம்பலப்படுத்துகிறது.

இதோ அந்த பதிவு

அகிலனுக்கு வழங்கப்பட்ட ஞானபீட விருது அரை நூற்றாண்டு காலம் தமிழ் நவீன இலக்கியத்தை இந்திய இலக்கிய சூழலில் மறைத்தது.
-இவ்வாறு ஒரு கோடி ரூபாய்
பம்பர் இலக்கியப் பரிசு அறிவிப்பில் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்
சுவாரசியமானதொரு பிளாஷ்பேக் இதோ..
1990-ல் அகிலன் நினைவு நாவல்போட்டியினை அகிலன் அறக்கட்டளை நடத்தியது..

பல எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை அனுப்பினர்.. ரப்பர் என்னும் தனது நாவலின் கையெழுத்துப்பிரதியை ஜெயமோகனும் அனுப்பினார்

அதில் முதல் பரிசு பெற்றது ரப்பர்.. ரூபாய் பத்தாயிரம் வழங்கப்பட்டு, அகிலன் நினைவு நாவல் போட்டியில் பரிசு பெற்றது என்னும் குறிப்போடு அகிலனின் மகன் அகிலன் கண்ணன் தனது தாகம் பதிப்பகத்தின் சார்பில் அந்த நாவலை வெளியிட்டார்.. அதுதான் ஜெயமோகனின் முதல் நாவல்..





தரமான இலக்கியத்துக்கு
ஒரு கோடி ரூபாய் பரிசறிவிக்கும்
ஜெயமோகனின் இலக்கிய அடையாளம், அவரது அளவுகோல்படி
'தரமற்ற எழுத்தாளர்' அகிலன் நினைவாக வழங்கப்பட்ட பத்தாயிரம் ரூபாய் மூலமாகத்தான் வெளிப்பட்டது..

இதற்கெல்லாம் ஜெமோ அசந்து விடுவாரா என்ன? அவருடைய முழக்கமே "துப்பினால் துடைச்சுப்பேன்" என்பதுதானே!


Monday, March 16, 2026

ஒரு கோடி தரப்போகும் புமா ஆஜான் ஜெமோ

 


ஞான பீட திராட்சை கிட்டாத புளிச்ச மாவு ஆஜான் ஜெயமோகன், இன்று அதிகாலை 05 மணிக்கு முகநூலில் ஒரு பதிவு எழுதியுள்ளார்.  வைரமுத்து மீதும்  ஞானபீடம் கொடுப்பவர்கள் மீதுமான கடும் கண்டனம்தான் பதிவின் சாராம்சம்.

அந்த பதிவில் பார்த்த ஒரு காமெடி கீழே . . .

இந்த இரவு முழுக்க பெண்களின் அழைப்புகள். கண்ணீருடன், கொந்தளிப்புடன். ஏதோ தங்களுக்கு தனிப்பட்ட முறையில் அநீதி இழைக்கப்பட்டது போல. ஒரு தமிழ்ப்பெண்ணாகவே அவமானம் கொள்கிறார்கள் என்றனர். “ஏன் இந்த ஞானபீடைகளிடம் நாம் சென்று நிற்கவேண்டும்? நாம் உருவாக்குவோம் நமக்கான விருதை. அதை விட பெரிய விருதை. நான் என் நகைகளை முழுக்க தந்துவிடுகிறேன்” என்று பல பெண்கள் சொன்னார்கள். அவர்கள் கண்ணீருடன் சொன்னது ஓர் ஆணை.

அப்படி எத்தனை பெண்கள் கண்ணீரோடு அவருடன் பேசினார்கள் என்று தெரியவில்லை. ஒருவர் கூட சொல்லாமல் ஓராயிரம் பேர் சொன்னதாக கதை விடத் தெரியாதா ஆஜானுக்கு? அது ஏன் தமிழ்ப்பெண்ணாகவே அவமானம் கொள்ள வேண்டும்? அப்படியென்றால் அவர்கள் நிஜத்தில் தமிழ்ப்பெண்கள் கிடையாதா?

அடுத்து வருவது அவரது அறிவிப்பு

இதோ நாங்கள் அறிவிக்கிறோம், இந்திய வரலாற்றின் மிகப்பெரிய இலக்கிய விருது. உலக இலக்கியத்திலும் இந்திய இலக்கியத்திலும் சாதனைப் படைப்புக்கான LIVING TAMIL AWARD FOR WORLD LITERATURE . ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது டெல்லியிலும் நியூயார்க்கிலும் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். விருதுத்தொகை இந்திய ரூபாயில் ஒரு கோடி. (ஏறத்தாழ ஒரு லட்சம் டாலர்)
இந்த செய்தி டெல்லியிலும், சென்னையிலும், நியூயார்க்கிலும் முறையாக அறிவிக்கப்படும்.


விருதின் பெயரைக் கூட தமிழில் வடிவமைக்க மனமில்லாத இந்த சுய மோக சங்கிதான் தமிழின் முதன்மையான எழுத்தாளர், தமிழ் இலக்கிய பாதுகாவலர் என்றால் சிரிப்பு மட்டும்தான் வருகிறது.

வருடம் தோறும் ஒரு கோடி ரூபாய் நீர், உமது கால்களில் விழுந்து கிடப்பவர்களுக்கு கொடுக்க எத்தனைப் பெண்களின் நகைகளை அறுக்கப் போகிறீர்களோ?

பிகு: ஜெமோ முக நூல் பதிவில் உள்ள இந்த வரிகளை கொஞ்சம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இன்றைக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்பு அகிலனுக்கு ஞானபீடம் அறிவிக்கப்பட்டபோது சுந்தர ராமசாமி மிகக் கடுமையாக எழுதினார். அகிலன் இன்று எவர் என்று தெரியாத நிலை. சு.ராவின் அக்கட்டுரை இன்றும் வாசிக்கப்படும் ஒரு ‘கிளாஸிக்’. சு.ரா சொன்னார் “ஜிப்பா தேசிய உடை ஆக்கப்படுவதை பிக்பாக்கெட்டுகள் ஆதரிப்பது போன்றது அகிலனுக்கு ஞானபீடம் கிடைத்தபோது சோட்டா எழுத்தாளர்கள் கொண்டாடியது”. அந்த பிக்பாக்கெட்டுகளின் பெயர்களை இன்று தமிழ் விக்கியில்தான் தேடவேண்டும்.
இது ஓர் எழுத்தாளர் விருது பெறுவதற்கு எதிரான கண்டனம் அல்ல. இது அந்த ஓர் எழுத்தாளர் சார்ந்த விஷயமும் அல்ல. இந்த விருதோ, அந்த எழுத்தாளரோ எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.
அகிலனுக்கு கிடைத்த ஞானபீடம் தமிழை சிறுமை செய்தது. ஐம்பதாண்டுகளாக தமிழ் இலக்கியத்தை எந்த இலக்கிய மேடையிலும் உரிய இடம் இல்லாததாக ஆக்கியது. அகிலன் தமிழின் தலைசிறந்த எழுத்தாளர் என்றால் மற்றவர்களின் எழுத்தை பொருட்படுத்தவேண்டியதில்லை என்று இந்தியா முடிவு செய்தது.

இது தொடர்பாக எழுத்தாளரும் திரைக்கலைஞருமான தோழர் கவிதா பாரதி பகிர்ந்து கொண்ட ஒரு தகவல் ஆஜானின் தோலை உரிக்கும்.

Sunday, March 15, 2026

திராட்சை கிட்டா நரியான ஜெமோ

 


நேற்றைய பதிவில் சொன்னது போல தமிழ் இலக்கிய உலகில் பெரிய ரத்தக்களறி நடந்து கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்தால் இந்த சர்ச்சை பின்னுக்குப் போகும்.

வைரமுத்து ஞானபீடம் பெறுவதை நான் கேலிச்ச்சிரிப்புடன் பார்க்கிறேன். அதற்கான காரணங்கள்.

பல வருடங்களாக முயற்சி செய்து வாங்கப்பட்ட விருது.

இந்த விருது பெறுவதற்கான முயற்சிகளில் ஒன்றாக தருண் விஜய் என்ற பெரிய சங்கிக்கு தமிழ்நாட்டில் ரத்தினக் கம்பளம் விரித்து இறுதியில் திருவள்ளுவரின் சிலையை கறுப்பு ப்ளாஸ்டிக் பேப்பரில் சுற்றி ஹரித்வாரின் ஒரு சாக்கடை ஓரத்தில் கிடத்திய இழிவுக்கு காரணம் வைரமுத்து.

அவர் மீதான பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுக்கள். (அவர் மோசமாக நடந்து கொண்ட பின்னும் எதற்கு திருமணத்திற்கு அழைத்து காலில் விழ வேண்டும் என்ற கேள்வி சின்மயியைப் பார்த்து கேட்கப்படும்,)  ஆனால் மற்றவர்கள் வைத்த குற்றச்சாட்டுக்கள்? 

ஜெயகாந்தன் கடைசியாக எழுதியது என்னை பாராட்டித்தான் என்றொரு நாடகம் போட அந்த கதையை ஜெயகாந்தனின் மகள் தோழர் தீபலட்சுமியே தகர்த்தெறிந்தார்.

அவரது சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. வியர்வையின் பெருமையை போற்றி எழுதுபவர் இவர். ஒரு தொலைக்காட்சி கேமரா உதவியாளரின் நெற்றி வியர்வையில் ஒரு சொட்டு இவரது சட்டையில் மைக் பொருத்துகையில் சிந்திய காரணத்தால் அவரை கன்னத்தில் அடித்து விட்டு தன் கையை டெட்டால் போட்டு கழுவிய சம்பவத்தை பல்லாண்டுகள் முன்பே பதிவு செய்துள்ளேன். 

"நட்டு வைத்த வேலுக்கு பொட்டு வைத்தது போல " என்று நிர்மலா அம்மையாரை வர்ணித்ததை எல்லாம் மறந்து விட முடியவில்லை.

நான் எதிர்பார்த்தது போல மிகக் கடுமையான கண்டன இயக்கத்தை முன்னெடுத்துள்ளது புளிச்ச மாவு ஆஜான் ஜெயமோகன்தான்.

அவரது கண்டனத்தை அப்படியே பகிர்ந்து உங்களை கொடுமை செய்ய நான் ஒன்றும் இரக்கமில்லாத கொடூரன் அல்ல.

அவரின் வெறுப்பின் பின்னணி என்பதை அவரது குண்டர் படை தளபதி போதைக்கவி லச்சூவின் பதிவு சொல்கிறது.


ஜெயமோகனின் அல்லக்கையே அவரை அற்பன் என்று விளிக்கும் நேரத்தில் ஜெமோ தன் பதிவில் தன்னை பாஜக, ஆர்.எஸ்.எஸ் அதிகார வட்டங்களுக்கு எதிரானவன் என்று சித்தரித்துக் கொள்ளும் சீன் மூலம் நம்மை சிரிக்கை வைத்து, அவரது கண்டனம், திராட்சை கிட்டா நரியின் புலம்பல் என்று அவரே நிரூபித்து விடுகிறார்.

அநேகமாக ஜெயமோகனுக்கு ஏதாவது பெரிய விருது கொடுங்கய்யா, புக்கர் விருது, மாகஸேசே விருது இப்படி ஏதாவது, இல்லையென்றால் அவரது புலம்பல் காதைகளிலிருந்து தமிழ்நாடு தப்ப முடியாது.


Saturday, March 7, 2026

சோ.அதர்மனை கேட்டது விகடனின் கொழுப்பு

 


ஜெயமோகனுக்கு  பாத பூஜை செய்து,  தந்தை பெரியார், அறிஞர் அன்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரை வசை பாடவே ஒரு நாவல் எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்று,.   அந்த கெத்தை விடாமல் தக்க வைக்க கிறிஸ்துவர்களை இழிவு செய்து இன்னொரு நாவல் எழுதி, தான் இழிவு படுத்திய கலைஞரின் மகனிடமிருந்தே வீட்டிற்கான பத்திரத்தை வெட்கமே இல்லாமல் வாங்கிக் கொண்ட சோ.அதர்மன் போட்ட முகநூல் பதிவு கீழே.


ஒரு மிகப் பெரிய மக்கள் தலைவரை, சுதந்திரப் போராட்ட வீரரை, பொதுவுடமை போராளியைப் பற்றி  சங்கிகளுக்கு சேவகம் செய்வதையே பிறவிக்கடனாக நினைத்திருக்கும் அதர்மனிடம் கேட்டது விகடனின் கொழுப்பு. 

திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர், இப்போது பக்கவாதம் வந்துள்ள ஐகோர்ட் எச்.ராசா ஆகியோரைப் பற்றி கேட்டிருந்தால் சந்தோஷமாக வெண்முரசு அளவிற்கு விஷயங்களை அள்ளி வீசியிருப்பார். 

மிகச் சரியான ஒரு மனிதரைப் பற்றி தவறான மனிதனிடம் கேட்டால் இப்படித்தான் திமிர்த்தனமாக பதில் வரும். 

பிகு 1 : அவருக்கு அங்கேயே சூடாக பதில் கொடுத்தேன்.

பிகு 2 : சோ.அதர்மனின் பதிவுக்கு விருப்பக்குறி கொடுத்திருந்த பேராசிரியர் தோழர் ராஜன்குறை கிருஷ்ணன், தோழர் நல்லக்கண்ணுவிற்கு அஞ்சலி பதிவும் எழுதியிருந்தார். அஞ்சலியும் எழுதி விட்டு அதர்மனுக்கு விருப்பக்குறி இட்டதும் வினோதமாக உள்ளது என்று அங்கே எழுதியிருந்தேன். வாய்ப்பில்லையே என்றார். ஸ்க்ரீன் ஷாட்டை போட்டதும் அகற்றி விட்டு, இந்த தவறு எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை என்று பதில் போட்டிருந்தார்.

பிகு 3 : அதர்மனுக்கு விருப்பக்குறி இட்ட இன்னொரு பிரபலம் கவிஞர் தாமரை - அவருக்கு தோழர் நல்லக்கண்ணு மேல் என்ன வெறுப்போ?

பிகு 4 : சோ.அதர்மனோ இல்லை பேராசிரியர் ராஜன்குறை கிருஷ்ணனோ,  அவர்களது பதிவுகளில் நான் நேரடியாக ஒளிந்து கொள்ளாமல்தான் பதிவிடுகிறேன். என் பதிவுகளில் வந்து ஒளிந்து கொண்டு ஆபாச வார்த்தைகளில் பேசும் அனாமதேயங்களுக்கு மட்டும் ஏன் அந்த நேர்மை கிடையாது? மொட்டைக்கடிதங்களில் வாழும் கேடு கெட்ட ஜென்மங்கள் சாகும் வரை ஒளிந்து கொண்டுதான் வசை பாடும்.


Wednesday, November 19, 2025

வாழ்த்துக்கள் டாகடர் புளிச்ச மாவு ஆஜான்

 


புளிச்ச மாவு ஆஜான் ஜெயமோகனுக்கு தக்சஷீலா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்துள்ளதாம்.


பல்கலைக்கழகத்தின் பெயரைப் பார்த்ததும் நான் ஏதோ பஞ்சாப் தக்சஷீலா வில் உள்ள பழமையான பல்கலைக்கழகமோ என்று நினைத்தேன்.  அப்படியெல்லாம் இல்லை. திண்டிவனம் பக்கத்தில் ஓங்கூர் என்ற கிராமத்தில் 2019 ல் உருவாக்கப்பட்ட தனியார் சுயநிதி பல்கலைக்கழகமாம்.

கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற முதல் இலக்கியவாதி என்று அவர் குண்டர் படை ஆட்கள் பீற்றிக் கொள்வார்களே, அதை நினைத்தால்தான் அச்சமாக உள்ளது. 

Thursday, October 9, 2025

விஜய், தவெக பாஸா இல்லை லூஸா?

 


41 பேர் மரணங்களுக்கு காரணமான தவெக விஜய் கரூர் போக வேண்டுமாம். அதற்காக அவர் காவல்துறைக்கு சில நிபந்தனைகளை கோரிக்கைகள் என்ற பெயரில் வைத்துள்ளார்.


இதில் ஒன்று கூட சாத்தியமில்லை என்று அவருக்கு தெரியும். இருந்தும் ஏன் இப்படிப்பட்ட நிபந்தனைகளை விதிக்கிறார்?

இந்த ஆணவமிக்க, முட்டாள்தனமான நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் விஜய் கரூருக்கு செல்ல அனுமதி மறுக்கப் படும்.

"பார்த்தீர்களா மக்களே இந்த திமுக அரசை, என்னை கரூர் செல்ல விடாமல் அனுமதி மறுத்து விட்டார்கள், என்ன சிஎம் சார் பயந்துட்டீங்களா?"

என்று அடுத்து ஒரு வீடியோ போட்டு முட்டாள் தற்குறிகளை மேலும் உசுப்பேற்றி விடுவீர்கள்.

அதற்குத்தானே இந்த நிபந்தனைகள்?

ஆனால் இது எடுபடாது. உங்களை லூஸ் என்றே மக்கள் கருதுகிறார்கள். 

ஆமாம், யார் உங்களுக்கு வஜனம் எழுதித்தராங்க? திருட்டுக்கதை சர்க்காருக்கு வஜனம் எழுதினவரா? அந்தாள நம்பினா இன்னும் அசிங்கப்படுவீங்க!

Wednesday, October 8, 2025

இலக்கிய வாதிகளே இறக்காதீர், சேடிஸ்ட் ஜெமோ உயிருடன்

 


இலக்கிய உலகைச் சேர்ந்த யாராவது இறந்து விட்டால் புளிச்ச மாவு ஆஜானுக்கு சந்தோஷம் ஊற்றெடுத்து ஓடத் தொடங்கி விடும்.

தஞ்சை பிரகாஷ்,

ஃபிரான்ஸிஸ் கிருபா,

சுஜாதா

அசோகமித்திரன் 

ஆகியோரையெல்லாம் தன் அஞ்சலிக் குறிப்பால் அவர்களுக்கு மரணத்துக்கு பிந்தைய அவதூறு தண்டனை கொடுத்தார்.

அவரது இந்த பிரதாபம் குறித்து முன்பும் கூட சில பதிவுகள் எழுதியிருக்கிறென்.

நினைவுக்கு வந்த சிலவற்றின் இணைப்பு கீழே

அசோகமித்திரன் 1

அசோகமித்திரன் 2

அசோகமித்திரன் 3

க்ரியா பதிப்பகம் ராமகிருஷ்ணன்

பிரான்ஸிஸ் கிருபா

ஆஜானுடைய பார்வதிபுரத்தைச் சேர்ந்த பாட்டையா பாரதி மணி இறந்த போது மட்டும் ஆஜான் அஞ்சலி குறிப்பை எழுதவில்லை. அதன் காரணம் என்ன?

இந்த இணைப்பை பாருங்கள்.

ஆஜான் அஞ்சலி எழுதாதது ஏன்?


இதெல்லாம் பழைய கதை. 

சமீபத்தில் ஆஜானிடம் சிக்கியவர் ரமேஷ் பிரேதன்.

அவருக்கு நினைவஞ்சலி என்ற பெயரில் ஆஜான் எழுதியுள்ளதை படியுங்கள். 


சென்ற 2019 ல் ரமேஷ் என்னிடம் எனக்கு விஷ்ணுபுரம் அவார்டு குடுய்யாஎன்றார்.

 

இப்ப என்ன அப்டி அவசரம்? வாலிப வயசுதானே?” என்றேன்.

பணம் தேவை இருக்குஎன்றார்.

பணம்தானே? அத அனுப்பிடறோம்…” என்றேன். அந்தப் பணத்தை அனுப்பினோம்.

 

அதன்பின் மீண்டும் 2021 ல் அழைத்தார். இப்பயாச்சும் அவார்டு குடுய்யா. நான்லாம் கோவிட்ட தாண்டமாட்டேன்என்றார்.

 

உங்களுக்கெல்லாம் கல் மாதிரி ஆயுசுஅவார்டு முறையாத்தான் வரும்சின்னப்பசங்களுக்கு குடுக்கிற அவார்டு இல்ல இதுஎன்றேன்.

அதன்பின் அவ்வப்போது தன் ஆயுள் முடிவதைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் கோவிட் அதன்பின் வந்த ஒரு நெருக்கடிக்காலம் ஆகியவற்றை கடந்துவிட்டார். அவருக்கு விருதை  வரிசையை முந்திக்கொண்டு அறிவிப்பதே அவருடைய உடல்நிலை, ஆயுள் பற்றி நானும் ஐயப்படுகிறேன் என்று ஆகிவிடுமோ என்னும் குழப்பம் இருந்துகொண்டே இருந்தது. ஆகவே அவருடைய நிரந்தர ஐயத்தை வேடிக்கையாகவே கடந்துகொண்டிருந்தேன்.

 

இந்த முறை அவருக்கு இயல்பாகவே வரிசையில் இடம் அமைந்தது. அதை ஆகஸ்டில் அவரிடம் சொன்னேன். இப்பவே குடுத்திருடிசம்பரில் நான் இருக்கமாட்டேன்என்றார்.

 

நீங்க இருப்பீங்க….” என்றேன்.

 

மீண்டும் ஜூனில் அழைத்து செப்டெம்பரில் தூரன் விழாவோட சேத்தே நடத்திருஇருப்பேனான்னு தெரியலைஎன்றார்.

 

2011 ல் வெள்ளையானை நாவல் நண்பர் அலெக்ஸின் எழுத்து பிரசுர வெளியீடாக வந்தபோது அவர் புதுச்சேரியில் ஒரு மதிப்புரைக்கூட்டம் ஏற்பாடு செய்தார். அந்நிகழ்ச்சி முடிவில் மீண்டும் ரமேஷைச் சந்தித்தேன். மெலிந்து ஒடுங்கி அழுக்கு வேட்டியும் சட்டையுமாக இருந்தார்.

 

நல்லா இருக்கீங்களா?” என்று சம்பிரதாயமாகக் கேட்டேன்.

நல்லா இல்லைஎன்றார்.

 

நிகழ்ந்ததை அவர் சொன்னார். பிரேம், மாலதி இருவரும் அவரை கைவிட்டுவிட்டதாகவும், ஓராண்டுக்குமேல் ஒரு தோப்பில் காவலராக பணியாற்றியதாகவும், உடல்நிலை மோசமாக ஆனதனால் அவ்வேலையைச் செய்யமுடியாமல் அப்போது பாரதி நினைவில்லம் வராந்தாவில் வாழ்வதாகவும் சொன்னார். உறவினர்களிடம் செல்ல அவர் விரும்பவில்லை. உறவுகளை முன்னரே அவர் வெட்டிவிட்டிருந்தார். இரண்டு முனைவர்பட்ட ஆய்வாளர் நண்பர்கள் உணவு வாங்கி அளித்து உதவிவருவதாகவும் பெரும்பாலும் நினைவில்லம் வருபவர்களிடம் கையேந்தி வாழ்வதாகவும் சொன்னார். பிச்சை எடுக்கிறேன் ஜெயமோகன்என்றார்.

 

நான் உணர்ச்சிவசப்பட்டு அவர் கைகளைப் பற்றிக்கொண்டேன். நான் சாப்பிடுற வரை நீங்களும் சாப்பிடுவீங்க. நான் கூரைக்குக் கீழே இருக்கிற வரைக்கும் நீங்க தெருவிலே இருக்க மாட்டீங்கஎன்றேன்.

 

அன்றே அவரை ஒரு வாடகை அறையில் அலெக்ஸ் உதவியுடன் தங்கவைத்தேன். ஒரு வாரத்தில் மணி ரத்னம் அளித்த நிதி, என் சொந்த நிதி மற்றும் கே.வி.அரங்கசாமி அளித்த நிதியுடன் அவருடைய அக்காவின் வீட்டிலேயே ஒரு பகுதியை நிரந்தரக் குத்தகைக்கு எடுத்தோம். அப்பகுதியை செப்பனிட்டு குளிர்சாதன வசதி செய்து, கட்டில் போன்றவை வாங்கி அவரை குடியமர்த்தினோம்.

 

குளிர்சாதனப்பெட்டி, தொலைக்காட்சி என பிற பொருட்களை வாங்க பல்வேறு நண்பர்கள் உதவினர். அவர் ஓர் இல்லத்திற்குச் சென்றதுமே அமைதியடைந்தார். அதன்பின்னர் தான் கைவிடப்பட்டதைப் பற்றிய அகக்கொந்தளிப்பு உருவாகியது. முகநூலில் வசைகளை எழுதத்தொடங்கினார்.

என்ன எல்லாவற்றையும் படித்தீர்களா?

இறந்து போன எழுத்தாளர்களை ஆதரவற்றவர்களாக, வறுமையில் வாடுபவர்களாக, சித்தரிப்பதில் ஆஜானுக்கு அப்படி ஒரு அலாதி இன்பம். அசோகமித்திரன் விஷயத்திலேயே கடுமையாக அனைவரிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

ஆனாலும் அவர் திருந்துவதாக இல்லை. சர்க்கார் மாதிரி படத்துக்கு கதையை திருடி வஜனம் எழுதி இவர் வேண்டுமானால் கோடீஸ்வரராக கொழிக்கலாம். பி.எஸ்.என்.எல் பென்ஷன் வேறு. அதற்காக அடுத்தவரை மட்டம் தட்ட என்ன உரிமை இருக்கிறது?

வேறொன்றுமில்லை.

உடல், மூளை, ரத்தம், நாடி, நரம்பு, கிட்னி, லிவர் என அனைத்திலும் ஊறியுள்ள கொழுப்பு, திமிர், ஆணவம்.

இந்த மனிதனை சிறைக்கு அனுப்பினால் கூட நன்றாகத்தான் இருக்கும். இந்த பிரச்சினைக்காக இல்லையென்றால் கூட மத வெறியை தூண்டியதற்கான பல ஆதாரங்கள் இருப்பதால் அந்த அடிப்படையில் கூட செய்யலாம். 

ஹெச்.ராசா மாதிரியான ஆட்களே சுதந்திரமாக சுற்றும் போது ஆஜானை யார் கைது செய்வார்கள்!

ஆகவே எனதருமை தமிழ் எழுத்தாளர்களே, இலக்கியவாதிகளே, பதிப்பாளர்களே,

சேடிஸ்ட் ஜெயமோகன் உயிருடன் இருக்கும் வரை நீங்கள் யாரும் தயவு செய்து இறந்து போகாதீர்கள். பல்லைக் கடித்துக் கொண்டு உயிரோடு இறந்து விடாதீர்கள். 


Sunday, October 5, 2025

என்ன மிரட்டறியா லச்சூ?

 


கரூர் நெரிசல் மரணங்கள் தொடர்பாக இலக்கியவாதிகள், செயற்பாட்டாளர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையால் நொந்து போன புளிச்சமாவு ஜெமோ குண்டர் படை தளபதி, அற்ப சங்கி, போதைக்கவி லச்சுமி மணிவண்ணனில் அசிடிட்டி பிரச்சினை தீரவில்லை.

அடுத்து ஒரு பதிவு போட்டுள்ளார்.

கூட்டறிக்கையில் கையெழுத்திட்ட எல்லோரும் அரை நக்ஸல்கள், தேசத் துரோகிகள் என்றெல்லாம் திட்டி தீர்த்து விட்டு மோடியின் என்.ஐ.ஏ அவர்கள் அனைவர் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆலோசனை செய்துள்ளார்.



இப்படித்தான் எழுத்தாளர் பா.ஜெயபிரகாசம் அவர்களை புமா ஜெமோ அவதூறு செய்த போது அதைக் கண்டித்து கூட்டறிக்கை வெளியிட்ட போது ஜெமோவும் அப்படித்தான் மிரட்டினார். அவரை யாரெல்லாம் புளிச்ச மாவு என்று எழுதுபவர்களில் மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் பட்டியலை எடுத்து அவர்களின் நிர்வாகத்திற்கு புகார் செய்து வேலையை காலி செய்யப் போவதாக மிரட்டினார்.

நான் கூட என்னை எங்கள் நிர்வாகம் விளக்கக் கடிதம் கேட்கும் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் எனக்கு மிகவும் ஏமாற்றமாகி விட்டது.

அய்யா லச்சு, உங்க ஆஜானாலாயே ஒன்னும் கிழிக்க முடியலை, நீ எம்மாத்திரம்!!!

Saturday, December 28, 2024

ஜெயமோகன் சிஷ்யன் கேரளா போனால்????

 ஜெயமோகனுக்கு முன்னாள் தான் இறந்து போகக்கூடாது என்பதுதான் தமிழ் இலக்கியவாதிகளின் முக்கியமான பிரார்த்தனையாக இருக்கும். இறந்த பின்பு அவர்களை சிறுமைப்படுத்துவது என்பது புளிச்ச மாவு ஆஜானுக்கு அல்வா சாப்பிடுவது போல.

ஜெயமோகனுடனான சகவாசம் இன்னொரு எழுத்தாளரையும் அதே பாணியில் மறைந்த மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரையும் சிறுமைப்படுத்த வைத்துள்ளது. 

ஒட்டு மொத்தமாக எம்.டி.வாசுதேவன் நாயரை சராசரி என்றால் சிக்கலாகும் என்ற அச்சத்தில் இலக்கியத்தில் சராசரி, திரைக்கதையில் உச்சம் என்று சமாளிக்கப்பார்க்கிறார்.

யார் எந்த ஜெமோ சிஷ்யன்?

நவீன கதை சொல்லி என்று அழைக்கப்படுகிறவர் அவர். 

பதிவை படித்தால் உங்களுக்கே புரியும்.

இல்லையென்றாலும் கடைசியில் சொல்கிறேன்.

தன் புத்தகத்தின் தமிழ் மொழி, மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழாவிற்காகத் திருவண்ணாமலைக்கு வந்திருந்த மனோஜ் குருர் (நிலம் பூத்து மலர்ந்த நாள்), சந்தோஷ் எச்சிகானும், நா. முருகேச பாண்டியன் ஆகியோரோடு ஒரு பின்னிரவில் பத்தாயத்துக் களத்து மேட்டில் கொஞ்சம் கலங்கிய நிலையில் உட்கார்ந்து இருந்தபோது, நான் தான் அந்த காட்டமான உரையாடலை ஆரம்பித்தேன். “உண்மையிலேயே எம். டி. வாசுதேவ நாயர் மலையாளத்தில் ஒரு காத்தரமான புனை எழுத்துக்காரர் என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா?” மூவருமே மௌனம் காத்தார்கள். கொஞ்ச நேரத்தில் நானே அந்த மௌனத்தைக் கலைத்தேன் .“இரண்டாம் இடத்திற்குப் பின் இப்பொழுது இறுதி யாத்திரை (விலாபயத்ரா) வாசித்தேன். இரண்டுமே என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. என் குறைந்தபட்ச வாசிப்பில் அவரை விட 10க்கும் மேற்பட்ட மிகச் சிறந்த புனைவு எழுத்துக்காரர்கள் தமிழில் உண்டு,” என்றேன்.

மனோஜ் குருர், சந்தோஷ் எச்சிகானும் என்னை எழ வைத்து கட்டிப்பிடித்துக்கொண்டார்கள். அந்த நெருக்கத்திற்கு அனுமதிக்காமல், “ஆனால் அவர் மிகச் சிறந்த திரைக்கதை ஆசிரியர் இல்லையா?” எனக் கேட்டேன். மூன்று பேருமே அதை 100% ஒத்துக்கொண்டார்கள்.


ஏழெட்டு வருடங்களுக்கு முன் என் மலையாள மொழிபெயர்ப்பாளர் கே. எஸ். வெங்கடாசலம் அவர்களின் கோரிக்கையை ஏற்று, நான் சைலஜா நஜீப் ஆகியோர் இரவு 8 மணி அளவில் கோழிக்கோட்டில் உள்ள எம். டி. வீட்டில் அவரை சந்திக்க அனுமதி கேட்டபோது, உடனடியாக அந்த அனுமதி மறுக்கப்பட்டது. அப்போதுதான் கண் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருந்தார். ஆனால் ஏதோ ஒரு புள்ளியில், நாங்கள் நான்கு பேரும் அவர் முன் அடுத்த சில நொடிகளில் அமர வைக்கப்பட்டிருந்தோம். ஒரு மணி நேரம் நீடித்த உரையாடல் எவ்வகையிலும் சுவாரஸ்யமானது அல்ல; கேரள பஞ்சாயத்துக்குக் கட்டுப்பட்டதாக இருந்தது.

கண் அறுவை சிகிச்சை அவருக்கு வலியையும் சலிப்பையும் தந்திருந்தது. நாம் போன நேரம் அப்படிப்பட்டது. பின் ஒரு சுவாரசியமான சந்திப்பில் எம். டி. உடனான சந்திப்பை என் நண்பர் மம்முட்டி இடம் சொன்னபோது, “கிழவன் என்ன சொன்னார் பவா?” என மிகச் செல்லமாக ஆர்வப்பட்டார். அது அவர்களுக்குள்ளே இருந்த நட்பைப் பிரதிபலிப்பதாயிருந்தது. மலையாள இலக்கியத்தில் சராசரியாகவும் திரைக்கதையில் உச்சமாகவும் சாதித்த ஒரு நல்ல கலைஞனை, ஒரு நல்ல கலைஞனின் விலாபயத்ரா இன்று தொடங்குகிறது. என் ஆழ்ந்த அஞ்சலிகள்.

இந்த பதிவை எழுதிய ஜெயமோகன் சிஷ்யன் பவா.செல்லத்துரை. தன் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்திட்ட த.மு.எ.க.ச வை தன்னை முன் வைத்து ஜெயமோகன் சிறுமைப்படுத்திய போதே கள்ள மவுனம் சாதித்து வேடிக்கை பார்த்த மனிதனுக்கு எம்.டி.வாசுதேவன் நாயரெல்லாம் எம்மாத்திரம்! என்ன இவர் எழுதியது கேரளாக்காரர்களுக்கு தெரிந்தால் இவர் கேரளாவிற்குள் நுழைவதுதான் சிரமம். 

பிகு: அதென்ன கலங்கிய நிலை? சரக்கடிப்பதை எழுத்தாளர்கள் இப்படி ரொமாண்டிஸைஸ் செய்தால் டாஸ்மாக் விற்பனை அதிகமாகாதா? குற்றங்கள்தான் பெருகாதா?

Tuesday, October 8, 2024

சோ.அதர்மன் ஐ.ஏ.எஸ் ஸா?

 


தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள ஒரு போஸ்டரில் பு.மா.ஆஜானின் சீடர் கடலூர் சீனுவின் பரிந்துரையால் சாகித்ய அகாடமி விருது பெற்ற சோ.தர்மன் அவர்களுடைய பெயருக்குப் பின்னால் இ.ஆ.ப (இந்திய ஆட்சிப்பணி) என்று போட்டுள்ளார்கள்.


திராவிட இயக்கத்தை தூற்றுவதையே பிழைப்பாகக் கொண்டிருக்கிற சங்கி எழுத்தாளர் மீது ஏன் திமுக அரசு ஓவர் கரிசனமாக இருக்கிறது?

Thursday, July 18, 2024

என்னமோ நடக்குது !!!

 


"தமிழ் மணம்" வலை திரட்டி செயல்பாட்டில் இருந்தவரை எனது வலைப்பக்கத்தின் பார்வைகள் (HITS) சராசரியாக ஒரு நாளைக்கு ஆயிரத்திலிருந்து ஆயிரத்து இருநூறு வரை இருக்கும். தமிழ்மணம் முடங்கிய பின்பு அது சராசரி ஐநூறு என்ற அளவில்தான் இருந்து வருகிறது. மக்களவைத்தேர்தல் சமயத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் அளவுக்குச் சென்றது.

ஆனால் நேற்று முன் தினம் இரவு முதல் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. செவ்வாய் இரவு ஒன்பது மணி அளவில் வீடு திரும்பிய போது கூட 360 தான் இருந்தது. நேற்று இரவு பார்த்தால் செவ்வாயன்று பார்வைகள் 5168 என்றும்  நேற்று இரவு வரை 7037  என்றும்  இருந்தது.



காலையில் இப்போதைய நிலவரம் இது . . .




நேற்று முன் தினம் இரவு முதல் யார் என் வலைப்பக்கத்திற்கு படையெடுத்து வந்தார்கள்?

சமீபத்திய பதிவுகள் தொடங்கி பத்தாண்டுகளுக்கு முந்தைய பதிவுகள் வரை படிக்கப்பட்டுள்ளது. புளிச்ச மாவு ஆஜான் குறித்து எழுதிய பெரும்பாலான பதிவுகள் பல முறை படிக்கப்பட்டுள்ளது. மாலன் பற்றிய எந்த பதிவும் சீண்டப்படவில்லை என்பது வேறு விஷயம்! 

திடீரென ஏன் இந்த பரபரப்பு?

இது நல்லதா? கெட்டதா?

எதுவாக இருந்தாலும் I am waiting.  . . .



Thursday, May 30, 2024

பு.மா ஆஜானை காப்பியடித்த மோடி

 


யார் சொன்னார் என்ற தகவல் இல்லாமல் “திரைப்படம் வந்த பின்னரே காந்தியை உலகுக்கு தெரியும்” என்ற அற்புதமான கருத்தைத்தான் முதலில் பார்த்தேன்.

இது போன்ற அரிய கருத்துக்களை வெளியிடும் ஆற்றல் நம் புளிச்ச மாவு ஆஜான் ஜெயமோகனுக்கு மட்டுமே உரியதல்லவா என்று அவர் பக்கம் போய் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன். பிறகு இன்னொன்றும் தோன்றியது. ஜெமோ அப்படியெல்லாம் தன்னைத் தவிர இன்னொருவருக்கு அதிலும் வெளிநாட்டு கிறித்துவர் ரிச்சர்ட் அட்டன்பரோவுக்கெல்லாம் பெருமை தர மாட்டாரே என்பது நினைவுக்கு வந்தது. பிறகுதான் தெரிந்தது அது மோடி சொன்னது என்று.

மோடியின் கருத்து பற்றி என்ன சொல்ல? அந்த முட்டாளுக்கு தெரிந்தது அவ்வளவுதான் என்று சென்று விட முடியுமா? கோட்சேவை கும்பிடும் மோடி எனும் ஜந்து மகாத்மா காந்தியினை இழிவு படுத்துவது இது முதல் முறையல்ல. மகாத்மா காந்திடின் சிறப்பு என்று ஏராளமாக இருக்க, தூய்மை என்ற ஒன்றை மட்டும் வைத்து சொச்ச பாரத் என்று விளக்குமாறோடு ஒரு நாள் போட்டோஷூட் முடித்த ஆள்தானே இது!

இந்த முறை மகாத்மாவை இழிவு படுத்த மோடி கையாண்ட டெக்னிக் காப்பியடித்தது. புளிச்ச மாவு ஜெயமோகனிடம் காப்பியடித்தது.

“பின் தொடரும் நிழலின் குரல்” என்ற அந்தாளின் கம்யூனிசத்தின் மீது வெறுப்பை கக்கும் நாவலைப் படித்த பின்பே “லெனின் என்று ஒருவர் இருந்தார்” என்று தனது வாசகர்கள் அறிந்து கொண்டார்கள் என தடம் இதழிற்கு அளித்த நேர்காணலில் பெருமையாக சொல்லிக் கொண்டார்.

லெனின் யாரென்று தெரியாத கூமுட்டைகள்தான் அவரது வாசகர்கள் என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் ஆஜோனுக்கோ அப்படிப்பட்ட கூமுட்டைகள் வாசகர்களாக இருப்பதுதான் பெருமை.

மோடி தன் பாணியை காப்பியடித்து விட்டார் என்று ஆஜான் எப்போது எண்பது பக்க கட்டுரை எழுதப் போகிறாரோ?

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்…

மோடி, ஜெயமோகன் போன்ற சில்லறைகளால் மகாத்மா காந்தியின் புகழையோ, புரட்சித்தலைவர் தோழர் லெனினின் புகழையோ சிறுமைப் படுத்திட முடியாது. இந்த சில்லறைகள் நெருங்க முடியாத சிகரத்தின் உச்சியில் இருப்பவர்கள் அந்த மகத்தான இரு தலைவர்களும் . . .

 

Thursday, January 4, 2024

ஆஜான் Vs ஆ.கு.ப.த லச்சூ

 


ஆம். பேய்க்கும் பேய்க்கும் சண்டை என்பது போல ஆஜானுக்கும் ஆஜான் குண்டர் படைத் தளபதி லட்சுமி மணிவண்ணனுக்கும் மோதல்.

 லச்சூவின் முகநூல் பதிவு, பின்னூட்டங்கள் கீழே உள்ளன.

 









ஜெமோவின் அத்யந்த நண்பர்களாக ஒரு கோஷ்டி உண்டு. அவர்களை நான் குண்டர் படை என்றும் லச்சூதான் அதன் தளபதி என்றும் பல முறை எழுதி உள்ளேன். இப்போது லச்சூவும் அதையே  ஜெமோவின் வாசகர்களை bouncer என்று அழைக்கிறார்.

 ஜெயமோகனையும் தோழர் ஆதவன் தீட்சண்யாவையும் நீங்கள் ஒப்பிட்டால் நான் இலக்கிய உலகை விட்டே வெளியேறி விடுவேன் என்கிற அளவிற்கு எழுதி தன் ஆஜான் விசுவாசத்தை காண்பித்து  லச்சு ஏன் இப்போது ஆஜானுக்கு எதிராக?

 அதற்கும் பதில் கிடைத்து விட்டது. ஒரு பின்னூட்டத்தில் லச்சூவே சொல்லி விட்டார்.

 


ஆக, ஆஜான், தன் மகன், மனைவி, மகள் ஆகியோரை மட்டுமே முன்னிறுத்துவதுதான் பிரச்சினையாக இருந்திருக்கிறது. “நாங்க உனக்காக அடி வாங்குவோம். நீ உன் குடும்பத்தைத்தான் வாரிசுன்னு சொல்வியா” என்பதுதான் லச்சுவின் கோபத்திற்குக் காரணம்.

 

வழக்கமாக ஆஜான் போலிப்பெயர்களில்  கேள்வி எழுப்பி நூறு பக்கங்களில் பதில் சொல்வார்.

 

செல்ஃபி கேள்வி கேட்கும் சிரமத்தை அவருக்கு குறைக்கலாம் என்று பின் வரும் கேள்வியை அவருக்கும்  அவர் அட்மினுக்கும் அனுப்பி வைத்தேன்.

 ஐயா,


உங்களின் பிரதான பிரச்சாரகராக இருந்த திரு லட்சுமி மணிவண்ணன், உங்கள் உரைநடைகளை "பகுதி உண்மைகளின் உளறல்கள்" என்றும் உங்கள் வாசகர்களை "பௌன்ஸர்களாக மாற்றிக் கொண்டிருப்பதாக"வும் குறை சொல்லி, "மனைவியை, மகனை, மகளை முன்னிறுத்துவதாகவும் விமர்சித்துள்ளாரே.

இது பற்றிய உங்கள் விளக்கத்தை உங்கள் தளத்தில் அளிப்பீர்களா?

இவண்

உங்களால் இணைய மொண்ணை பட்டம் அளிக்கப்பட்ட
எஸ்.ராமன், வேலூர்.

இதோ இந்த பதிவை முடிக்கும் வரை ஆஜானிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. பாவம், அவரால் எப்படி பதில் சொல்ல முடியும்! ஆஜானின் இந்த பயம் எனக்கு பிடிச்சிருக்கு…

புமா ஆஜானே, மறுபடியும் முதலேருந்தா?

 


கீழடி தொடர்பாக புளிச்ச மாவு ஆஜான் சமீபத்தில் உதிர்த்த முத்து கீழே


கீழடி தொடர்பாக இதற்கு முன்பாகவும் ஆஜான் வாங்கிக் கட்டிக் கொண்டாரே என்பது நினைவுக்கு வர ஏழாண்டுகளுக்கு முன்பு எழுதிய பதிவை கண்டு பிடித்தேன். அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 

கீழடி ஆய்வை டிமோ அரசு முடக்க முயன்ற போது அதற்கெதிரான இயக்கத்தை தமுஎகச முன்னெடுத்ததும் அன்றைய தமுஎகச பொதுச்செயலாளர் தோழர் சு.வெங்கடேசனின் முயற்சிகளும் ஆஜானுக்கு எரிச்சல் தர, "இவர்கள் யார் கீழடிபற்றி பேச, தொல்பொருள் ஆராய்ச்சியாளரா, வரலாற்று அறிஞரா" என்றெல்லாம் கேட்டிருந்தார்.

அப்போது எழுதிய பதிவு கீழே

-------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரே ஒரு கேள்வி ஆஜானே?

  

ஜெமோவின் எழவெடுத்த பக்கம் வழக்கமாக செல்ல மாட்டேன். மாணவி அனிதாவின் மரணம் குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி போல இந்த மனிதனும் ஏதாவது பிதற்றியுள்ளாரா என்று பார்க்கச் சென்றேன். இன்னும் ஆசான் அது பற்றி எழுதவில்லை. ஆனால் கீழடி பற்றி பத்து பக்கங்களுக்கு மிகாமல் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.கிட்டத்தட்ட நிர்மலா சீத்தாராமனின் குரல் அது.

 கீழடிப் பிரச்சினையை கையிலெடுத்துள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்திற்கு 

 தமிழ் ஃபாசிஸ்டுகள்,

அசடுகள்

அரை வேக்காடுகள்

 என்றெல்லாம் முத்திரை குத்தியுள்ளார்.

 தமுஎகச தோழர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

 கீழடி பற்றி யார் பேச வேண்டும் என்று அறிவுரை கொடுத்துள்ளார்.

அதைப் படியுங்கள்.

 கீழடியைக் குறித்தவரை இவ்விவாதம் உருவாவதற்கு இன்னும் நெடுங்காலம் ஆகும். அங்கு இன்னும் ஆய்வே முறையாகத் தொடங்கப்படவில்லை.    கிடைக்கும் பொருட்களைக் கொண்டு ஆய்வாளர்கள் ஒருவிவாதத்தை 

தங்களுக்குள் இப்போதுதான் தொடங்கியிருக்கிறார்கள். 

அதற்குள்ளாகவே      இங்கே     மேடைப்பேச்சாளர்களும் சினிமாக்காரர்களும் அரசியல்வாதிகளும் – அதாவது    தொல்லியலாளர்கள்  வரலாற்றாய்வாளர்கள் தவிர்த்த அத்தனை பேரும் எப்படி ஆய்வு செய்ய வேண்டும் என்னென்ன முடிவுகளுக்கு வர

வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

 

மேலே ஆசான் சொன்ன அடிப்படையில் அவருக்கு ஒரே ஒரு கேள்வி.

 அந்தந்தத்துறை சம்பந்தப்பட்ட பிரச்சினையில் வேறு யாரும் பேசக் கூடாது என்றால் செல்லா நோட்டு விவகாரத்தில் மோடிக்கு முட்டு கொடுத்து வரிந்து வரிந்து எழுதினீர்களே, நீங்கள் என்ன பொருளாதார நிபுணரா? இல்லை அல்லவா?

 பின்னே என்ன எழவிற்கு அதைப் பற்றி எழுதினீர்கள்?

---------------------------------------------------------------------------------------------------------

ஆஜானை ஏற்கனவே பிளக்க ஆரம்பித்து விட்டார்கள். வடிவேலு பாணியில் "மறுபடியும் முதலேருந்தா" என்று புலம்பிக்கொண்டிருப்பதாக தகவல்.

கீழடியை மட்டம் தட்டும் வேலையை நீ மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தால் அடியும் மறுபடியும் முதலில் இருந்துதான் கிடைக்கும்.

அப்பா சுயமோகா, கீழடி பற்றி வரலாற்று அறிஞர்களும் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களும்தான் பேசனும்னு ஏழு வருஷம் முன்னாடி உபதேசம் செஞ்சியே, நீ மட்டும் என்ன வரலாற்று அறிஞரா? இல்லை தொல்பொருள் ஆராய்ச்சியாளரா?

பதில் சொல்லுய்யா . . .

பிகு: இந்த பதிவெல்லாம் ஜுஜுபி. ஆஜான் தொடர்பான இன்னொரு பதிவு மாலையில் வரும். அது பரபரப்பானது. உங்களுக்கு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அளிக்கும்.  


Sunday, December 10, 2023

ஜெமோ - முட்டாள், ஸோம்பி

 


மேலே உள்ளதை சத்தியமா நான் சொல்லலைங்க. 

மணிரத்தினம் சொன்னது. மணிரத்தினம் அப்படித்தான் திட்டுவார்னு எழுதினது யார் தெரியுமா?

அது ஆஜான்தாங்க  . . .

ஆமாம். நெசமாத்தாங்க!

ஆஜான் தன் மகன் திருமணம் தொடர்பா இருபது பக்கத்துக்கு ஒரு பதிவு போட்டிருக்காரு. வழக்கமா தன்னை பீற்றிப்பாரு. இந்த முறை மகனை . . .

அதில எழுதினதுதான் இது.

நம்பிக்கையில்லையா. ஸ்க்ரீன் ஷாட்டே எடுத்து வச்சுட்டேன். பாருங்க . . .


பொன்னியின் செல்வன் உள்ளிட்ட சில மணிரத்னம் படங்களுக்கு ஆஜான்தான் வஜனம். 

அதனால மணிரத்னம் சொன்னா சரியாதான் இருக்கும். . .

பிகு: இருபது பக்க கட்டுரையை இந்த ஒரு வாக்கியத்துக்காக படிச்ச நான் எவ்வளவு பாவம்! இதுலே வெள்ளிக்கிழமை ஐ.டெஸ்டு செஞ்சு கண்ணு இன்னும் முழுசா நார்மலாகாதபோது . . .