மோடி
மந்திரி மகன் காரேற்றி கொன்ற கொடூர சமபவத்திற்கு சாட்சி சொல்ல ஏன் ஆட்கள் முன்வரவில்லை
என்று உச்ச நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு மொட்டைச்சாமியாரின் மனசாட்சி என்ன பதில் அளித்திருக்கும்
என்ற சிந்தனையில் எழுதியதே மேலே உள்ளது.
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
மோடி
மந்திரி மகன் காரேற்றி கொன்ற கொடூர சமபவத்திற்கு சாட்சி சொல்ல ஏன் ஆட்கள் முன்வரவில்லை
என்று உச்ச நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு மொட்டைச்சாமியாரின் மனசாட்சி என்ன பதில் அளித்திருக்கும்
என்ற சிந்தனையில் எழுதியதே மேலே உள்ளது.
மொட்டைச் சாமியார் மாநிலத்தில் கொடூர நிகழ்வு நடந்ததும்
"விவசாயிகள் தலைவர்கள் வன்முறையை கட்டுப்படுத்த இயலாதவர்கள்" என்று கடுமையான விமர்சனத்தை உச்ச நீதிமன்றம் வைத்தது.
"தங்கள் வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் கல்லெறிந்ததால் கார் தடுமாறி வ்ழுந்ததில்தான் இரண்டு விவசாயிகள் இறந்து போனார்கள்"
என்ற மந்திரியின் கட்டுக்கதையை நம்பி சொன்ன விமர்சனம் இது.
இப்போது உண்மை வெளியாகி விட்டது.
விவசாயிகளின் பேரணி மீது வாகனம் வேகமாக வந்து மோதியதன் விளைவே விவசாயிகளின் கொலை என்பதையும் கல்லெறிதல் சம்பவமே நிகழவில்லை என்பதையும் காணொளி அம்பலப்படுத்தி விட்டது.
அயோக்கிய மந்திரியின் பேச்சை நம்பிய உச்ச நீதிமன்றம் இப்போது என்ன சொல்லப் போகிறது?
அயோக்கிய மந்திரியை, மந்திரி மகனை கைது செய்ய உத்தரவிடுமா?
மொட்டைச்சாமியார் ஆளும் மாநிலத்தில் நேற்று நடந்த கொடூர சம்பவம் இது.
லகிம்பூர் கேரி என்ற மாவட்டத்தில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மோடியின் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பேணி,, போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியதால் அந்த மனிதன் நேற்று சொந்த ஊருக்கு வர கறுப்புக் கொடி காண்பித்துள்ளார்கள்.
அதிலே கடுப்பான மந்திரியின் மகன் ஆசிஷ் மிஸ்ரா, போராட்டக்காரர்கள் மீது காரை ஏற்றியதில் நான்கு விவசாயிகள் இறந்துள்ளனர். அவர்களின் எதிர்வினை இன்னும் நான்கு உயிர்களை போக்கியுள்ளது.
பேயரசு ஆட்சியில் இப்படித்தான் நடக்குமா?
மோடி தன் மந்திரி மீது நடவடிக்கை எடுப்பாரா?
இல்லை. மாறாக பாதுகாப்பார்.
கொலைகார ஆட்சியில் கொலைகாரர்கள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்!
தோழர் கவிஞர் சுகிர்தராணியின் கவிதையை பகிர்ந்து கொள்கிறேன்.
சாதியற்றவனின் மரணம்