Showing posts with label சுதந்திரப் போராட்டம். Show all posts
Showing posts with label சுதந்திரப் போராட்டம். Show all posts

Saturday, September 2, 2023

இந்த ஆரெஸெஸ் வரலாறு நல்லாருக்கே!

 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் இன்று கலந்து கொண்ட போது, இந்திய விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸின் பங்களிப்பு என்ற புத்தகத்தை வெளியிடக் கேட்டுக் கொண்டார்கள்.


விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸ் எந்த பங்களிப்பும் செய்யாத நிலையில், மிகப்பெரிய அளவில் இருந்த அந்தப் புத்தகத்தை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. அப்படி என்னதான் பங்களிப்பு செய்தார்கள் என்று திறந்து பார்த்தோம். முதல் பக்கத்திலேயே ஆங்கிலேயர் காலணியை நாவால் வருடுகிற புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

அடுத்து காந்தியார் கொலையை குறிக்கின்ற வகையிலான சித்திரம் வந்தது. அடுத்தடுத்த பக்கங்கள் அனைத்தும் காலியாக இருந்தன. ஏனென்று கேட்ட போது, நீங்களும் அந்த வரலாற்றை நிரப்பலாம் என்று கையில் பேனாவைத் தந்தார்கள். மூன்று பெரிய பூஜ்ஜியங்களை வரைந்தோம்.

இப்படிப்பட்ட பூஜ்ய வரலாற்றைக் கொண்ட சனாதனவாதிகளை மக்களிடம் அம்பலப்படுத்திய த.மு.எ.க.ச தோழர்களுக்கு வாழ்த்துகள். தேர்தல் களத்தில் பாசிஸ்ட்டுகளை வீழ்த்தி சனாதனத்தை ஒழிப்போம்.

மான்புமிகு உதயநிதி ஸ்டாலின்
-விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர்




பதிவும் படங்களும் - நன்றி தோழர் பகத்சிங், மதுரை

Monday, August 14, 2023

கேவலமான “பிரிவினை கோர நாள்” அரசியல்

 


கடந்தாண்டு முதல் டிமோ அரசு ஒரு கேவலமான அரசியலை கையில் எடுத்துள்ளது.

14 ஆகஸ்டை பிரிவினை கோர நாள் என்று அனுசரிக்கிறது. இது பற்றிய எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சுற்றறிக்கையின் ஒரு பகுதியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

   இந்திய துணைக் கண்டம் இரு வேறுபட்ட தேசிய-அரசுகளாகப் பிரிவினை கண்டதோடு நமக்கு சுதந்திரம் கிடைத்ததுஇந்த துரதிர்ஷ்டவசமான பிரிவினையானது நிலப்பகுதியை பிரித்தது மட்டுமன்றி நமது தேசிய இயக்கத்தின் ஒற்றுமையையும் பன்முகத் தன்மையையும் கடுமையாக பாதித்தது. பிரிவினையானது புதிதாக வரையறுக்கப்பட்ட எல்லைகள் நெடுகிலும் மக்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத துன்பங்களை விளைவித்தது. பிரிவினையின்போது உலகம் இதுவரை கண்டிராத, கற்பனைக்கு எட்டாத அளவுக்கு கொள்ளை, சூறையாடல் மற்றும் கொலைகள் நடைபெற்றன. கிஞ்சித்தும் மனிதம் அற்ற மதவெறி வன்முறையில் கிட்டத்தட்ட பத்து லட்சம் மக்கள் இறந்ததாக அரசாங்க ஆவணம் தெரிவிக்கிறதுமிகப்பெரிய மனித புலம்பெயர்வு மற்றும் வலுக்கட்டாயமான இடப் பெயர்வு ஆகியவை நிகழ்ந்தன.

 முஸ்லிம் அல்லாதவர்கள் 60 லட்சம் பேர் மேற்கு பாகிஸ்தானில் இருந்து இந்தியப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்ததாகவும், 65 லட்சம் முஸ்லிம்கள் பஞ்சாப், டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய இந்தியப் பகுதியிலிருந்து வெளியேறி மேற்கு பாகிஸ்தானுக்குச் சென்றதாகவும் அரசாங்கப் பதிவுகள் காட்டுகின்றன. இதேபோல் முஸ்லிம் அல்லாதவர்கள் 40 லட்சம் பேர் கிழக்கு பாகிஸ்தானில் இருந்து மேற்கு வங்காளத்திற்கும், 10 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் மேற்கு வங்கத்தில் இருந்து கிழக்கு பாகிஸ்தானுக்கும் இடம்பெயர்ந்தனர். இந்து, சீக்கியர் மற்றும் முஸ்லீம் ஆகிய மூன்று சமூகத்தினரும் சமமான அளவில் பாதிக்கப்பட்டனர்.

 இனவாத வன்முறை மற்றும் வெறுப்பு ஆகியவை உருவாக்கக்கூடிய பேரழிவை நினைவில் கொள்வது அவசியம். இது மனிதர்களை மிருகங்களாக மாற்றுகிறது. பிரிவினையின் போது கண்ட மிருகத்தனம் மிகவும் மோசமானது. அத்தகைய நிலைமை மீண்டும் உருவாக அனுமதிக்காமல் இருப்பதற்கு பிரிவினையின் பேரழிவிலிருந்து படிப்பினைகளைப் பெறுவது முக்கியம்

 *எதற்காக பிரிவினை கோர நாள்?*

 இந்திய அரசு ஆகஸ்ட் 14 ஆம் தேதியை பிரிவினை பயங்கரத்தின் நினைவு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளது. இது மத வன்முறையின் ஆபத்துகள் குறித்தும், வெறுப்பு அரசியலில் இருந்து விடுபட்டு நாட்டிற்காக பாடுபடுவது குறித்தும் குடிமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இருந்தால் அது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அது அவ்வாறு இல்லை. அரசியல் ஆதாயங்களுக்காக, பிரிவினை மற்றும் அதன் வீழ்ச்சிக்கு ஒரு சமூகத்தை குறை கூறுவதும், அதன் மூலம் குறிப்பிட்ட வேறு சமூகத்தினரை அணிதிரட்டுவதுமே இதன் முழு நோக்கமாகும். இந்தப் பின்னணியில்தான், ஆகஸ்ட் 14 ஆம் தேதியை, பிரிவினை பயங்கரத்தின் நினைவு தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் உத்தரவின் பேரில்,   கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது

 கண்காட்சியில் வைக்கப்பட்ட  புகைப்படங்கள், செய்திகள் ஆகியவற்றை பார்க்கும் போது அவை வெறுப்பு அரசியலில் இருந்து விடுபட வழி வகுப்பவையாக இல்லை, மாறாக வெறுப்புத்தீயை பெட்ரோல் ஊற்றி பரவச் செய்வதாகவே அமைந்துள்ளது.

 பிரிவினைக்கான முதல் குரலை எழுப்பியது கோழை சாவர்க்கார்தான். ஆனால் முகமது அலி ஜின்னாவின் புகைப்படத்தைப் போட்டு முஸ்லீம் லீக் தீர்மானத்தை நட்டும் வெளியிட்டுள்ளது.

 இந்துக்களும் இஸ்லாமியர்களும் சீக்கியர்களும் பிரிவினையின் போது பாதிக்கப்பட்டார்கள், தாக்கப்பட்டார்கள்,  கொல்லப்பட்டார்கள்.  உடமைகளை இழந்தார்கள்.

 ஆனால் கண்காட்சிப் படங்களும் செய்தித்தாள் கட்டிங்ககும் இந்துக்களும் சீக்கியர்களும் தாக்கப்பட்டதை மட்டும் சொல்கிறதே தவிர இஸ்லாமியர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி மௌனமாக இருக்கிறது. மிக முக்கியமாக டிமோவின் படம் முதலிலேயே வந்து விடுகிறது.

 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் வெறுப்புணர்வை தூண்டி மத அடிப்படையில் மக்களை திரட்டும் கேவலமான அரசியலன்றி வேறில்லை.

பிகு: கண்காட்சியில் வைக்கப்பட்ட படங்களை இங்கே பகிர்ந்து அவர்களின் வெறுப்பரசியலை நாமும் பகிரக்கூடாது என்பதால் அவற்றை பகிராமல் தவிர்த்து விட்டேன். 

Thursday, August 10, 2023

மகாத்மா காந்தி கொள்ளுப்பேரனா இருந்தாலும்

 


நேற்று மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி கைது செய்யப்பட்டு போலீஸ் நிலைய லாக்கப்பில் அடைக்கப்பட்டுள்ளார். 

சமூக செயற்பாட்டாளர் டீஸ்தா செதல்வாட் வீட்டிலேயே அடைக்கப்பட்டு விட்டார்கள்.

என்ன தவறு செய்தார்கள்?

மேலே உள்ள படத்தைப் பாருங்கள்.

கடந்தாண்டு தென் மண்டல மாநாடு வேலூரில் நடைபெற்ற போது பிரச்சாரப் பயணத்தின் நிறைவுப் பொதுக்கூட்டத்தை "வெள்ளையனே வெளியேறு தினம்" அன்று நடத்தினோம்.

மேலே சொன்ன இருவரும் அன்றைய தினத்தை குறிக்கும் அமைதிப் பேரணியில் கலந்து கொள்ள புறப்பட்டவர்கள்.

பாஜகவிகுத்தான் அமைதியும் பிடிக்காது, சுதந்திரமும் பிடிக்காது. அதனால் பேரணியை தடை செய்து இவர்களையும் கைது செய்து விட்டனர்.

வெள்ளையனே வெளியேறு தினம் அவர்களுக்கு வில்லங்கமானது கூட.

அப்போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகி, கருங்காலிதான் அடல் பிஹாரி வாஜ்பேய் என்பதும் நினைவுக்கு வருமே. 

Sunday, May 7, 2023

இளம் கலைஞருக்கு வாழ்த்துக்கள்

 


வேலூர் மாவட்டத்தின் மக்கள் தலைவரும் குடியாத்தம் தொகுதியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினருமாகவும் இருந்த சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் கே.ஆர்.சுந்தரம் அவர்களின் நூற்றாண்டு பற்றி நேற்று முன் தினம் எழுதியிருந்தேன்.

மழை காரணமாக கூட்டம் தொடங்கி சிறிது நேரமான பின்பே செல்ல முடிந்தது. 

அரங்கத்தின் உள்ளே நுழைந்த போது ஒரு வாலிபர் ஏதோ வரைந்து கொண்டிருந்ததை கவனித்தேன். 

அதன் பின்பு ஒரு அரை மணி நேரம் கடந்திருக்கும். ஓவியம் முடிந்து விட்டது.

நீங்கள் மேலே பார்த்த சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் கே.ஆர்.எஸ் அவர்களின் ஓவியம்தான் அவர் லைவ்வாக வரைந்த அந்த ஓவியம்.


மருந்துவியல் முதலாண்டு படிக்கும் ஸ்ரீகாந்த் என்ற இந்த வாலிபர்தான் அந்த இளம் கலைஞர். கை கொடுத்து பாராட்டினேன். கதவடைப்பு காலத்திலிருந்துதான் ஓவியம் வரைய ஆரம்பித்ததாகச் சொன்னார்.

அபாரம்!




மக்கள் கூடியிருக்க, படு வேகமாகவும் அதே நேரம் துல்லியமாகவும் நுணுக்கமாகவும் வரைந்த இளம் கலைஞர் ஸ்ரீகாந்திற்கு பாராட்டுக்கள். மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.



Tuesday, July 5, 2022

மோடி கம்மிங். தியாகிகள் உஷார்

 


காலையில் கண்ணில் பட்ட படம் முதலில் உள்ளது. ஆந்திராவில் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை மோடி வணங்குகிறாராம்.

விடுதலைப் போரைக் காட்டிக் கொடுத்த களவாணிக் கூட்டத்தின் வாரிசு, விடுதலை வரலாற்றை மாற்றி எழுதும் மோசடிப் பேர்வழி, சுதந்திரத்தின் விழுமியங்களை சிதைக்கும் கொலைகாரன், இந்திய செல்வத்தை விற்கும் தரகன் மோடிக்கு என்ன அருகதை இருக்கிறது!

தியாகிகளே எச்சரிக்கையாக இருப்பீர்!

நாடாளுமன்ற கட்டிடத்தை முத்தமிட்ட மோடி நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் மரபுகளையும் சீரழித்த குற்றவாளி.

உங்களை வணங்கும் கரங்களுக்குள் கொலை வாள் ஒளிந்திருக்கும். எச்சரிக்கையாக இருப்பீர். உங்கள் பென்ஷனைக் கூட அந்த படுபாவி பறிக்கலாம். உங்களை காட்டிக் கொடுத்த கருங்காலி எவனாவது இருந்தால் அவனுக்கும் தியாகி அடையாளி கொடுக்கலாம்.

எலிசபெத் ராணியின் கால்களில் மண்டியிட்டுக் கிடந்த துரோகி கோழை சாவர்க்கரை வீரன் என்று அழைப்பவர்கள் அல்லவா இவர்கள்!

Monday, October 25, 2021

மருது சகோதரர்களும் மத வெறியனும்

 மன்னிப்பு கேட்பதில் கோழை சாவர்க்கரின் சாதனையை விஞ்சிய எச்.ராசாவின் முக நூல் பதிவொன்று மருது சகோதரர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு மதச்சாயம் பூசியது. அதற்கு மதுரைத் தோழர் வெண்புறா சரவணன் சூடான எதிர்வினை ஒன்றை அளித்துள்ளார். 

அதனை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன். ராசா போன்ற கேவலமான விஷ ஜந்துக்களை சுதந்திரமாக திரிய விடுவது இந்திய மக்கள் ஒற்றுமைக்கு பேராபத்து. 


"நரிக்கு கண்ணு கிடை மீது"ன்னு ஒரு சொலவடை இருக்கு. சங்கிகளுக்குத்தான் இது கச்சிதமாக பொருந்தும்...

மருது சகோதரர்கள் நடத்தியது வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிரான வீரம் செறிந்த போர். அவன் கிருஸ்தவனா ஆரியனா என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் அவர்களுக்கு நேரம் இருந்திருக்கவில்லை. எச்சை போன்ற வேலையத்த வெட்டி முண்டங்களிடம்தான் இந்த அற்பத்தனமான ஆராய்ச்சியும் சிண்டு முடியும் கெடுநோக்கமும் இருக்கிறது. இதை வைத்துத்தான் நூற்றாண்டுகளாக பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் ஒரு ட்விஸ்ட் என்னன்னா... வெள்ளையர்களின் கூட்டாளிகளான ஆற்காடு நவாப் என்ற 'முஸ்லீமையும்' தொண்டைமான் என்ற 'இந்துவையும்' இதில் குறிப்பிடவில்லை. அதைக் குறிப்பிட்டால், வரலாற்றை அறிந்தவர்கள் 1779 போரில் மருது சகோதரர்களின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த 'ஹைதர் அலி என்ற முஸ்லீமை' சுட்டிக்காட்டி ரிவிட் அடிப்பார்கள். மேலும் தொண்டைமானை இழுத்து தெருவில் விட்டதுபோல் ஆகிவிடும் என்று இந்த நரிக்குத் தெரியும்.

தியாகிகளும், துரோகிகளும் எல்லா மதங்கள் மற்றும் சாதிகளிலும் கலந்தே இருக்கிறார்கள்.

ஆகவே...

'வெள்ளை கிறிஸ்தவர்கள்' காலை நக்கி மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த சாவர்க்கார் வாரிசு இந்த எச்.ராஜா சர்மாவுக்கு மருது சகோதரர்கள் பெயரை உச்சரிக்கக்கூடத் தகுதியில்லை.

---- வெண்புறா சரவணன்


பிகு: இன்று மாலை :
கோழை சாவர்க்கர் மன்னிப்பு மகாத்மியம்

Friday, September 10, 2021

அப்போது கூட சங்கிகள் நீங்கள் ????

 


எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் சங்கிகள் உள்ளார்கள். பிள்ளையார் சிலை ஊர்வலம் நடத்த வேண்டும் என்பதற்காக அவர்களின் புதிய வசனம் ஒன்றை பேசத் தொடங்கியுள்ளனர்.

 அந்த வசனம்

 “சுதந்திரப் போராட்டத்திற்கு மக்களை திரட்ட பிள்ளையார் சிலை ஊர்வலம்தான் பயன்பட்டது தெரியுமா?”

 சரி. அது உண்மையாகவே இருக்கட்டும்.

 ஆனால் சங்கிங்களா, அப்போ கூட நீங்க சுதந்திரப்  போராட்டம் பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லையே துரோகிகளா!

 உங்களுக்கு பிள்ளையார் மேலயும் பக்தி கிடையாது.  சுதந்திரப் போராட்டத்தின் மீதும் நம்பிக்கை கிடையாது.

 கலவரம் செய்ய பிள்ளையார் சிலையை கையில எடுக்கிற உங்களுக்கு எல்லாம் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியெல்லாம் பேச அருகதையே கிடையாது.

Sunday, September 5, 2021

மோடிக்கு க.ஓ.த பாடல் சமர்ப்பணம்

 


கப்பலோட்டிய தமிழன் திரு வ.உ.சி அவர்களின் நூற்றி ஐம்பதாவது பிறந்த நாள் இன்று.

விடுதலைப் போராட்ட வீரரான அவரது வாழ்க்கையைச் சொல்லும் கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் இடம் பெற்ற இரண்டு பாரதி பாடல்களை மோடிக்கும் நிர்மலா அம்மையாருக்கும் சமர்ப்பிக்கிறேன். சுதந்திரப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் அல்லவா அவர்கள்! நடிகர் திலகம் அவர்களின் நடிப்பைப் பார்த்தாவது அவர்கள் அனுபவித்த துயரங்களை உணர்ந்து கொள்ளட்டும். 





அதை விட மிகவும் முக்கியமாக




அவர்கள் விற்பது இந்தியாவின் சொத்துக்களை மட்டுமல்ல, இந்திய விடுதலைப் போராட்டத்தின் கனவுகளை, சுயசார்பு இந்தியாவின் தன் மானத்தை என்பதை உணர்ந்து கொள்ளட்டும். 

Wednesday, August 18, 2021

ஒருவராவது பாஜகவில் உண்டா?

 


மேலே உள்ள படத்தில் இருப்பவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தினங்கள். கட்சியின் முதல் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்.

அனைவருமே இத்தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். நீண்ட சிறைவாசம் அனுபவித்தவர்கள்.

அவர்கள் எத்தனை காலம் சிறைக் கொடுமையை அனுபவித்தனர் என்பதை கீழே உள்ள படம் உணர்த்தும்.



பாஜகவால் இப்படி ஒருவரையாவது சொல்ல முடியுமா?

சிறை சென்ற சவர்க்கர் மன்னிப்புக் கடித புகழ் சவர்க்கராகி விட்டார்.
அடல் பிகாரி வாஜ்பாயோ விடுதலைப் போராட்ட வீரர்களை காட்டிக் கொடுத்த கருங்காலி.

இது  ஒன்றும் புதிய செய்தி இல்லையே என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது.

வரலாற்றை நினைவு படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் காவிக்கயவர்கள் பொய் வரலாற்றை எழுதுவார்கள். அப்படி ஒரு பொய்ப் பிரச்சாரமே இப்பதிவிற்கான காரணம்.

அது என்ன பொய்?

நாளை எழுதுகிறேன்.


Wednesday, October 28, 2020

ஒருவராவது பாஜகவில் உண்டா?

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தினங்கள் என்று அழைக்கப் படுகிற கட்சியின் முதல் அரசியல் தலைமைக்குழுவில் இடம் பெற்றிருந்த ஒன்பது தலைவர்களும் இந்திய சுதந்திரத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் எத்தனை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தனர் என்ற தகவல்கள் கீழே உள்ள படத்தில் உள்ளது.

 

இது போல சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு போன தலைவர் என்று ஒருவராவது பாரதீய ஜனதா கட்சியில் உண்டா?

 அந்தமான் ஜெயிலுக்கு போன ஒரே ஒரு செல்ஃபி சாவர்க்கரும் பிரிட்டிஷ் மகாராணியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு கோழை சாவர்க்கர் ஆகி விட்டார்.

 அடல் பிகாரி வாஜ்பாயோ வெள்ளையனே வெளியேறு போராட்ட வீரர்களை காட்டிக் கொடுத்த துரோகி.

 எங்களுடையது வீர,  தியாகப் பாரம்பரியம்.

பாஜகவுடையது  கோழை, துரோகப் பாரம்பரியம்

Friday, September 11, 2020

சங்கிகளுக்குத் தெரியுமா போராட்ட வரலாறு?

 



வழக்கறிஞரும் எழுத்தாளருமான தோழர் இரா.முருகவேள் அவர்களின் முக நூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 

அவர் குறிப்பிட்டுள்ள 1921 படத்தை முழுமையாக பார்க்காவிட்டாலும் நேற்று ஒரு அரை மணி நேரத்திற்கு மேல் பார்த்தேன். நேரம் ஒதுக்கி முழுமையாக ஒரு நாள் பார்க்க வேண்டும். திரைப்படம் பார்க்காவிட்டாலும் இந்த போராட்டம் பற்றி படித்துள்ளேன்.

 

சுதந்திரப் போராட்டத்திற்கும் சங்கிகளுக்கும் உள்ள தொடர்பு என்பது காட்டிக் கொடுத்த கருங்காலி வேலைதான். அதனால் அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் இழிவு படுத்தவே முயற்சிப்பார்கள். அதிலும் இஸ்லாமியர்கள் என்றால் வெறி பல மடங்கு அதிகமாகி விடும்.

 

இதிலே மம்முட்டிக்கு துணையாக நின்ற சுரேஷ் கோபி இப்போது ஒரு அக்மார்க் சங்கி என்பது ஒரு கொடூரமான முரண்.

 

மலபார் மாப்ளா புரட்சிக்காரர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் இல்லை என்று சங்கிகள் தொடங்கியிருக்கிறார்கள்.    மாப்ளா புரட்சியை அடிப்படையாகக் கொண்டு “1921” என்று ஒரு மலையாளப் படம் வந்து இருக்கிறது

 

அதைக் கட்டாயம் பார்த்துவிடுங்கள். மிக அருமையான படம்சமூக வரலாற்றை சரியாகக் காட்டியிருப்பார்கள்

 

முதல் உலகப் போரில் வட கேரளா முஸ்லீம்கள் பெருமளவில் பிரிட்டிஷ் படைகளில் போரிட்டனர். அவர்கள் நாடு திரும்பிய காலகட்டத்தில் கோவில்கள், பெரும் நிலப்பிரபுக்களாக இருந்த நம்பூதிரிகள் மற்றும் பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறை உச்ச கட்டத்தை எட்டுகிறது

 

இந்த சுரண்டலின் மீதான வெறுப்பே பின்பு மாப்ளா கிளர்ச்சியாக வெடிக்கிறது. பண்ணையடிமைகளாக இருந்து கற்பனைக்கெட்டாத கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்பட்ட தலித்துகளும் இந்தக் கலகத்தில் மாப்ளா போராளிகளுடன் இணைந்து கொண்டனர். பலர் முஸ்லீம்களாக மாறினர். (இந்தப் புரட்சிக்கு  முன்பே தலித்துகள் முஸ்லீம்களாக மாறுவதை தடுக்க வேண்டும் என்று மலபார் மேனுவலில் வில்லியம் லோகன் எழுதியுள்ளதாக ஒரு நினைவு).

 

இந்த எழுச்சி கொடூரமாக ஒடுக்கப்படுகிறது. ஒரு கூட்ஸ் வண்டியில் 500 போராட்டக்காரர்கள் அடைக்கப்பட்டு கோவை போத்தனூருக்கு அனுப்பப்படுகின்றனர். அவர்களில் 400க்கும் மேற்பட்டவர்கள் மூச்சுத்திணறி மரணமடைந்து இருப்பது போத்தனூரில் கண்டுபிடிக்கப்படுகிறது

 

இதெல்லாம் படத்தில் மிக அற்புதமாகக் காட்டப்பட்டிருக்கும். அதிலும் தலித்துகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளும், அவர்கள் மிக இயல்பாக நிலப்பிரபுக்களுக்கு எதிரான நிலை எடுப்பதையும் காட்டியிருப்பார்கள். வி சசியின் மிகச் சிறந்த படம் இது. இரண்டு அட்டகாசமான மாப்ளா பாடல்களும் உண்டுமம்முட்டி நடித்தபடம்.

 

படத்துக்கு தொடர்பு இல்லாத ஒரு துயரமான நிகழ்ச்சியும் இருக்கிறது

 

கோவை சிறையில் தூக்கிலிடப்பட்ட மாப்ளா போராளிகளின் உடல்கள் ரயில்வே ஷ்டேஷன், அல்லது ஷண்முகா தியேட்டர் அருகே இருந்த இஸ்லாமியர் சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்தனவாம். கல்லறை வழிபாடு கூடாது என்று இஸ்லாமிய அடிப்படை வாதிகள் அந்தக் கல்லறையை இடித்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டேன்

 

இது உண்மையாக இருந்தால் எல்லா அடிப்படைவாதிகளும் ஒன்றுதான். நிலப்பிரபுத்துவக் கொடுமைகளுக்கு எதிராகப் போரிட்ட மாப்ளா போராளிகளுக்கு மத முத்திரை குத்த அனுமதித்த நம்மைப் போன்ற கோவை காகிதப் புலிகள் இன்னும் மோசமானவர்கள்

 

சங்கிகளுக்கு ஒரே ஒரு கேள்வி.

 

இந்துக்களை மாப்ளா புரட்சிக்காரர்கள் கொன்றார்கள் என்கிறார்கள்பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைத்த நிலப்பிரபுக்கள்தான் அந்த இந்துக்கள். அவர்கள் பல்லாயிரம் தலித்துகளை பண்ணை அடிமைகளாக வைத்து இருந்தனர். குத்தகை விவசாயிகளாக இருந்த மற்ற சாதி இந்துக்களையும் வாட்டி  வதைத்னர்.

 

அப்படியானால் அந்த நிலப்பிரபுக்களால் கொடுமைக்குளான, அவர்களை எதிர்த்துப் போரிட்ட தலித்துகள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்?.

 

 

பிகு 1 : மேலே உள்ள படம் 1921 படக் காட்சி

 

பிகு 2: “கழுதைகளுக்கு தெரியுமா கற்பூர வாசனை” என்றுதான் பதிவிற்கு தலைப்பு வைத்திருந்தேன். கழுதைகளை இழிவு படுத்தக் கூடாது என்பதால் மாற்றி விட்டேன்.