Showing posts with label தந்தை. Show all posts
Showing posts with label தந்தை. Show all posts

Monday, March 28, 2022

மாலனை தாக்குவதில் தவறேயில்லை . . .

 


என் தோழர் ஒருவர் "வயது முதிர்ந்த எழுத்தாளர் மாலனை கடுமையாக தாக்குகிறீர்களே, பாவமில்லையா அவர்?' என்று அவ்வப்போது கேட்பார். வயதுக்கேற்ற முதிர்ச்சி அந்த வார்த்தை வியாபாரிக்கு கிடையாது என்று நான் பதில் சொல்வேன்.

செஞ்சோற்றுக் கடனுக்காக எந்த அளவும் கீழிறங்கக் கூடிய கேவலமான மனிதர் என்பதை அவரே அடிக்கடி நிரூபித்துக் கொள்வார்.

அண்ணாமலையின் 20,000 புத்தக டுபாக்கூரை கலாய்க்க ஒருவர், மூன்று நூல்களின் சாராம்சத்தை மூன்று வரிகளில் எழுதி இதே போலவே 19997 புத்தகங்களையும் படித்து விடுவோம் என்று எழுத

மூத்தவர் போட்ட பின்னூட்டத்தை படியுங்கள்.


20,000 புத்தகம் படித்துள்ளேன் என்று கதையளந்து விட்டு அதை சமாளிக்க புத்தகத்தின் சாராம்சத்தைச் சொல்லும் ஆப்கள் மூலமாக 20,000 புத்தகங்களுக்கு மேலாக அடுத்த கட்டுக்கதையை அவிழ்த்து விட்ட பெரும் பொய்யன் ஆட்டுக்காரனுக்கு முட்டுக் கொடுக்க

வாசிப்பே தவமாய்க் கொண்டிருந்த அறிஞர் அண்ணாவையும் அண்ணல் அம்பேத்கரையும் வம்புக்கு இழுத்து அவர்களை சிறுமைப் படுத்தியுள்ள இந்த சிறுமதியாளனை தாக்குவதில் தவறேயில்லை.

பெரியாரின் தடி மிகவும் பொருத்தமாகவே இருக்கும்.