Showing posts with label மனிதர். Show all posts
Showing posts with label மனிதர். Show all posts

Thursday, October 24, 2013

அந்த காங்கிரஸ்காரரை நான் கடுமையாக வெறுத்திருக்கிறேன். ஆனாலும் இன்று பாராட்டுகிறேன்.



 The women archaks give teertha and prasadam to Congress Janardhan Poojary and others at Kudroli Gokarnatha shrine in Mangalore     —DC

இந்திரா காந்தி காலத்தில் நிதித்துறை இணையமைச்சராக இருந்த மனிதர் அவர். நிதியமைச்சராகக் கூட இருந்துள்ளார். லோன் மேளா என்ற பெயரில் பொதுத்துறை வங்கிகளின் நிதியை எல்லாம் வாரி வாரி வழங்கிய ஜனார்த்தன் பூஜாரியை உங்களுக்கெல்லாம் நினைவில் இருக்கலாம்.

எண்பதுகளின் துவக்கத்தில் எல்.ஐ.சி யை ஐந்து கூறுகளாக பிரிப்பதாக ஒரு மசோதாவை நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி அறிமுகம் செய்கிறார். அந்த மசோதாவை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மிகக் கடுமையாக எதிர்த்தது. நாடு தழுவிய அளவில் நடைபெற்ற இயக்கங்கள், பிரச்சாரங்கள் காரணமாக அந்த மசோதா இறுதியில் கைவிடப்பட்டது. அப்போது எங்கள் சங்கத்தின் மகத்தான தலைவர் தோழர் சுனில் மைத்ரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்களவை உறுப்பினராக இருந்தார். மசோதாவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளை, உரைகளை காவியம் என்றே சொல்வேன். அந்த மசோதாவை கைவிடப் போவதாக ராஜீவ் காந்தி தோழர் சுனில் மைத்ராவிற்குத்தான் கடிதம் எழுதினார்.

அந்த சமயம் நான் எல்.ஐ.சி யில் பணியில் சேராவிட்டாலும் பிறகு எங்கள் சங்க இதழ் இன்சூரன்ஸ் வொர்க்கரில் பல விபரங்களை படித்து தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. நாடாளுமன்ற விவாதத்தின் போது எல்.ஐ.சி யை ஐந்தாக பிரிப்பதற்கான வாதங்களை நிதித்துறை இணையமைச்சர் என்ற ஹோதாவில் இந்த மனிதன்  ஜனார்த்தன் பூஜாரி முன்வைக்கையில் எல்.ஐ.சி ஊழியர்களை மிகவும் கீழ்த்தரமாக கொச்சைப்படுத்தி சித்தரித்திருந்தார். இழிவு படுத்தினார். அன்றைய கோயபல்ஸ், இன்றைய மோடியை விட மோசமான பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவர் பேசியதை படிக்க படிக்க ரத்தம் கொதிக்கும். சே! எவ்வளவு மோசமான மனிதன் என்று அவ்வளவு கோபம் வந்தது.

ஜனார்த்தன் பூஜாரியின் அபத்தமான பொய்களுக்கெல்லாம் எங்கள் தோழர் சுனில் மைத்ரா சம்மட்டி அடியாக பதில் கொடுத்து விட்டார் என்பது வேறு விஷயம். ஆனாலும் அந்தப் பெயரை கேள்விப்பட்டாலே மனதில் வெறுப்பு எட்டிப்பார்க்கும். தமிழக காங்கிரஸ் கட்சிக்கு பொறுப்பாளராக வேறு அவர் கொஞ்ச காலம் இருந்ததால் அவ்வப்போது பத்திரிக்கைகளில் வேறு அவர் பெயர் வந்து எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றும்.

அப்படி வெறுத்த மனிதரைப் பற்றி ஆனந்த விகடன் இதழில் ஒரு செய்தி படிக்கையில் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது.

மங்களூர் நகரில் ஒரு கோயிலின் தர்மகர்த்தாவாக அவர் உள்ளாராம். அந்த கோயிலில் அர்ச்சனை, அபிஷேகம் போன்றவற்றை செய்வது விதவைப் பெண்கள் மட்டும்தான். விருப்பமுள்ள யார் வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கான பயிற்சி அவர்களுக்கு அளிக்கப்பட்டு அவர்கள் அந்த பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அப்படி பூஜை செய்கிற பெண்களும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

ராசியில்லாதவர்கள், விசேஷங்களில் கலந்து கொள்ள தகுதியில்லாதவர்கள், அவர்கள் முகத்தில் முழித்தால் விளங்காது என்று விதவைகளை ஒதுக்கி வைக்கும் போக்கு இன்னும் சமூகத்தில் நிலவத்தான் செய்கிறது. தங்களின் பையன், பெண் கல்யாணத்திற்கே மேடைக்கு வராமல் நத்தை கூட்டுக்குள் ஒடுங்குவது போல் தாங்களாகவே ஒதுங்கி நிற்கும் பெண்களையும் பார்க்கிறோம்.

நாட்டுக்கே பிரதம மந்திரியாக இருந்தாலும் உன் முகத்தை நேரில் பார்க்க முடியாது என்று சொன்ன சாமியார்களும் உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று சொன்ன கோயில்களும் இருக்கிற நாட்டில் இந்த செய்தி மிகவும் சிறப்பானது.

சமூகம் புறக்கணிக்க ஆசைப்படும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ள ஜனார்த்தன் பூஜாரியை நான் மனமாற பாராட்டுகிறேன்.

மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோயிலில் கூட ஒரு பாராட்ட வேண்டிய அம்சம் உண்டு. மாத விலக்கான நேரத்தில் கூட அங்கே பெண்கள் தாங்களே அம்மனை தொட்டு வழிபாடு செய்யலாம் என்பது அந்த அம்சம்.

கடவுள் நம்பிக்கை இல்லாத உனக்கு என்ன இதிலே இவ்வளவு மகிழ்ச்சி என்று யாராவது அனானிகள் கேட்பதற்கு முன்பாக நானே பதிலளித்து விடுகிறேன்.

மதத்தின் பெயரால், மதக்கலாச்சாரத்தின் பெயரால் பெண்கள் ஒடுக்கப்படும் ஒரு தேசத்தில்,  ஒரு மத அமைப்பு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதில் ஒரு மகிழ்ச்சி. இது மதங்களின் மூர்க்கத்தனத்திற்கு எதிரான கலகமாகவும் பார்க்கிறேன்.

மேல்மருவத்தூரில் நடக்கும் மோசடிகள், கல்லூரிகளின் ஊழல் பற்றி தெரியுமா என்று கேட்கும் நண்பர்களே, அது குறித்து கடந்த காலங்களில் எழுதியுள்ளேன். அங்கே உள்ள ஒரு நல்ல அம்சத்தைப் பற்றி மட்டுமே இதில் குறிப்பிட்டுள்ளேன்.

இந்தியாவை விட இன்னும் பல நாடுகளில் பெண்கள் மோசமாக நடத்தப் படுகின்றார்களே, நீங்கள் அது பற்றி ஏன் எதுவும் எழுதவில்லை என்று கேட்கும் நண்பர்களே, என்னுடைய முந்தைய எழுத்துக்களை படித்து விட்டு பிறகு பின்னூட்டம் இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Wednesday, September 4, 2013

மரம் வளைந்ததா? வக்கிர மனிதன் வளைத்தானா?

கீழே உள்ள படங்களைப் பாருங்கள்.

வளைந்த மரங்களைக் கொண்ட காடு  இது.
போலந்து நாட்டில் உள்ளது. 1930 ல் இவ்வாறு
வளர்க்கப்பட்டது இது. 

ஏன் எதற்கு என்ற காரணம் இப்போது யாருக்கும்
தெரியவில்லை.

ஆங்கிலத்தில் இதற்கு  Crooked Forest  என்று 
பெயர். 

Crooked என்பதற்கு தமிழில் வக்கிரம் என்பது
பொதுவான அர்த்தம். இப்படி மரத்தை வளைத்து
வளர்த்த மனிதன் கூட வக்கிரமானவன்தான்.

நான் சொல்வது சரிதானே?







Sunday, March 10, 2013

இவரைப் போல் ஒருவர் இனி எப்போது இங்கே ?



 

இப்படி ஒரு நீதிபதி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு
இனி எப்போது கிடைப்பார்?

எளிமையானவர்கள் வரலாம். 
ஆனால் இவர் போன்ற
வலுவான தத்துவப் பின்னணியோடு????





பதவி ஓய்வு - பணியின் தொடக்கம் ஒரு மாறுபட்ட நீதிபதி

 


அவரைப் பற்றிப் பாராட்டிப் பேச ஆயிரம் விசயங்கள் உண்டு. ஆனால் அதைப் பேச விடவில்லை அவர். “சம்பிர தாய வழியனுப்பு நிகழ்ச்சி எதுவும் நடத்த வேண்டாம்,” என்று கேட்டுக்கொண்டார். வழி யனுப்பு விழாக்கள் எப்படி ஆடம்பரமாக நடத்தப்படுகின்றன எனக் குறிப்பிட்டு, தனக்கு அத்தகைய விழா தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுத்துப்பூர்வமாகவே தெரிவித் தார். தாம் பதவி ஓய்வுபெறும் நாள் வழக்க மான ஒரு நாளாகவே இருக்க வேண்டும் என்று விரும்பி, அப்படியே அன்பான கைகுலுக் கல்களோடு வெள்ளியன்று (மார்ச் 8) விடைபெற்ற அவர் நீதிபதி கே. சந்துரு.2009 நவம்பர் 9 அன்று உயர்நீதிமன்ற நீதி பதியாகப் பொறுப்பேற்ற அன்று அவர் செய்த செயல் பலரையும் புருவம் உயர்த்த வைத் தது. தனது சொத்துக்கணக்கு ஆவணங்களை தலைமை நீதிபதியிடம் ஒப்படைத்தார். அன்று அவர், பதவிக் காலம் முடிவதற்குள் 1 லட்சம் வழக்குகளை முடித்துவிட விரும்புவதாகத் தெரிவித் தார். ஓய்வு பெறும் நாளில் கிட்டத்தட்ட அந்த எண்ணிக்கையைத் தொட்டுவிட்டார்.


“அவர் ஒரு வழக்கை அனுமதிப்பதற் கான விசாரணைக்கு வரும்போதே அதைப் பற்றி முழுமையாகப் படித்துவிட்டு வருவார். ஆகவே நீதிமன்ற நடைமுறையில் தாமதம் ஏற்படாது. அண்மையில் உடல் நலம் குன் றியபோது தவிர்க்க இயலாத நிலையில் விடுப்பு எடுத்தார். மற்றபடி விடுப்பு எடுப்ப தில்லை. இத்தகைய அவரது அணுகுமுறை களைப் பார்த்த நாங்கள், இந்த லட்சிய எண்ணிக்கையை அவர் எளிதாக எட்டிவிடு வார் என்று ஊகித்தோம். அதுதான் நடந்திருக் கிறது,” என்கிறார் ஒரு மூத்த வழக்கறிஞர்.பிரிட்டிஷ் காலத்திய மரபுப்படி உயர் நீதிமன்ற நீதிபதியை வழக்கறிஞர்கள் “மை லார்டு” என்றே குறிப்பிடுவது இப் போதும் தொடர்கிறது. ஏற்கெனவே ஒரு சில நீதிபதிகள் இதை மாற்ற முயன்ற துண்டு. அவர்களோடு தாமும் சேர்ந்து கொண்டவராக, தம்மை “சார்” என்று அழைத்தால் போதும் என்று வலியுறுத் தினார் சந்துரு.அதே போல், தாம் நீதிமன்றத்திற்குள் வருகிறபோது தமது வருகைiயை ஒரு உதவியாளர் (டவாலி) அறிவித்துக் கொண்டே வருவார் என்ற நடைமுறையை யும் அவர் மாற்றினார். தமது அறையி லிருந்து தாமே சாதாரணமாக நீதிமன்றத் திற்கு வந்துசென்றார்.நீதிபதி என்றால் காலில் ஷூ, சாக்ஸ் அணிந்து கொண்டுதான் வரவேண்டும் என்ற வழக்கத்தையும் உடைத்து, செருப் பணிந்து வந்தார். தமது அறை வாசல் சுவ ரில், தம்மைப் பார்க்க வருகிறவர்கள் உரிய ஆவணங்களை மட்டுமே கொண்டுவர வேண்டுமேயன்றி பூச்செண்டு, பழம் போன்ற பொருள்களைக் கொண்டுவரக்கூடாது என்று அறிவிப்பையே ஒட்டிவைத்திருநதார். “இவரது பணிகளின் சிறப்பு என்ன வென்றால் மக்கள் சம்பந்தப்பட்ட வழக்கு களிலும், தொழிலாளர்கள தொடர்பான வழக்குகளிலும் சமூக அக்கறையோடு அணுகினார் என்பதே. தமிழ் மொழியில் அக்கறை, இலக்கிய ஆர்வம், அனை வருக்குமான கல்வி முதலிய ஈடுபாடுகள் அவரது அணுகுமுறைகளில் பிரதிபலித் தன,” என்று மற்றொரு வழக்கறிஞர் குறிப் பிடுகிறார்.


ஒரு முக்கியத் தகவல்:
அவசர நிலை ஆட்சியின்போது நடந்த கொடுமைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி இஸ்மாயில் தலைமையிலான விசாரணைக் குழு முன்பாக, அன்றைய இளம் வழக்கறிஞ ரான சந்துரு மார்க்சிஸ்ட் கட்சி சார்பாகப் பங்கேற்று வாதங்களைப் பதிவு செய்தார்.பதவி ஓய்விற்குப் பிறகு என்ன செய்யப் போகிறார்? “உச்சநீதிமன்றமும் உயர்நீதி மன்றங்களும் அளித்த பல தீர்ப்புகள் தொகுக்கப்படாமலே இருக்கின்றன. அவற் றைத் தொகுத்து வெளியிட விரும்புகி றேன்,” தம் நண்பர்களிடம் கூறியிருக் கிறார். அந்த விருப்பத்தை நிறைவேற்ற முயல்வார் என்று எதிர்பார்க்கலாம். அவ் வாறு தொகுக்கப்பட்டால் பல புதிய வழக்கு கள் வருகிறபோது நீதிபதிகளுக்கு மட்டு மல்லாமல் வழக்கறிஞர்களுக்கும் பேருதவி யாக இருக்கும். பணி ஓய்வு என்பது இவ ரைப்போன்றவர்களுக்கு வேறொரு பணி யின் தொடக்கம்தான் அல்லவா?-அ.கு.

நன்றி - தீக்திர் நாளிதழ் 09.03.2013