Showing posts with label அயோத்தி கோயில். Show all posts
Showing posts with label அயோத்தி கோயில். Show all posts

Tuesday, June 25, 2024

மழையில் நனைகிறார் அயோத்தி ராமர் . . .

 




உத்திர பிரதேச மாநிலத்தில் பருவ மழை தொடங்கி விட்டது.

நல்ல விஷயம்தானே என்றுதானே நினைக்கிறீர்கள்!

புதிதாக கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயில் ராமர் விக்கிரகத்திற்குத்தான் நல்ல செய்தியில்லை.

ஆமாம்.

கோயில் கர்ப்பகிருகத்தின் மேல் கூறை மழையில் ஒழுகுகிறது. கோயிலெங்கும் சுவர்களில் தண்ணீர் கசிகிறது.

"எத்தனை பொறியாளர்கள் இருந்து என்ன பயன்?இப்படி கோயில் கட்டுமானம் மழைக்கு தாங்கவில்லையே!"

இப்படி புலம்பியிருப்பவர் அயோத்தி கோயிலின் தலைமைப் பூசாரி ஆச்சார்ய சத்யேந்திர தாஸ்.

பாவம்! அவருக்கு தெரியவில்லை.

மோடி கைய வச்சா அது ராங்காதான் போகுமென்று . . . 

Thursday, June 13, 2024

அயோத்தி - அதுக்குள்ளயேவா????

 


கீழே உள்ள செய்தியை படியுங்கள்


உலகிலேயே மிக அதிகமான வசூலை அள்ளித் தரும் வாடிகனை மிஞ்சி விட்டது. அயோத்தியிலிருந்து வரும் வருமானம் கொண்டு மொட்டைச் சாமியார் அந்த மாநிலத்தையே தலை கீழாக மாற்றி சிங்கப்பூர் ரேஞ்சிற்கு மாற்றப் போகிறார் என்றெல்லாம் சொன்னார்களே, அதெல்லாம் வெறும் கானல் நீர்தானா?

பாஜகவை உள்ளூர் மக்கள் தேர்தலில் கைவிட்டால் வெளியூர் பக்தர்களும் கைவிடுகின்றனரே!

என்னை வைத்து அரசியல் செய்யாதே என்று ராம் லல்லா எச்சரிக்கிறாரோ?

Saturday, January 27, 2024

அயோத்தி - சுவரின் பலி தொடங்கியதா?

 



கீழேயுள்ள பத்திரிக்கைச் செய்தியை படியுங்கள்.


மனைவியை கைவிட்டவரால் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட , மனைவியை காட்டுக்கு அனுப்பியவரின் கோயிலுக்குப் போனால் இப்படித்தான் ஆகும் என்று சொன்னால் மனம் புண்பட்டு விட்டது என்று சிலர் ஃபீல் செய்வார்கள் என்பதால் எதுவும் சொல்லவில்லை.

பலி தொடங்கி விட்டது என்ற தலைப்பு கூட தவறுதான். ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்த பின்புதானே அந்த கோயிலே கட்டப்பட்டது. 

Tuesday, January 23, 2024

கோயில் திறந்தாச்சு, அப்புறம் ????

 


பாபர் மசூதியை இடித்து விட்டு அந்த இடத்தில் கோயில் கட்டி சாதனை செய்த டிமோ, அடுத்து பின் வரும் சாதனைகளை செய்யப்போகிறார்.

2014 ல் கொடுத்த வாக்குறுதிகள் படி . . . .

 அனைவரது வங்கிக் கணக்குகளிலும் பதினைந்து லட்ச ரூபாய் வரவு வைக்கப்படும்.

 ஆண்டுக்கு இரண்டு கோடி என்ற கணக்கில் பத்து வருடத்திற்குமாக சேர்த்து இருபது கோடி இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

 இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து டாலரின் மதிப்பு குறைந்து விடும். ஒரு ரூபாய்க்கு நாற்பது டாலர் கிடைக்கும்.

 சமையல் எரிவாயுவின் விலை நூறு ரூபாயாகவும் பெட்ரோலின் விலை லிட்டர் ஐந்து ரூபாய் என்றாகி விடும்.

 இந்தியா முழுதும் அமைதிப் பூங்காவாகி மத நல்லிணக்கம் காப்பாற்றப்படும்.

 பெண்கள் மீதான கொடுமைகள் நின்று விடும். உத்தர பிரதேச மாநிலத்தில் பாலியல் கொடுமைகளே நிகழாது.

 தீண்டாமைக் கொடுமை அகன்று சமூக நீதி நிலவும்.

 கார்ப்பரேட்டுகளுக்கு அதிக வரி விதிக்கப்பட்டு தனி நபர் வருமான வரி குறைக்கப்படும்.

 வங்கியில் கடன் வாங்கி திருப்பித்தராத முதலாளிகள் இந்தியாவிற்கு இழுத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். அவர்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.

 எல்லையைத் தாண்டி தீவிரவாதிகள் வருவது முற்றிலும் நின்று விடும்.

 சீனா, தான் ஆக்கிரமித்த இடங்களிலிருந்து வெளியேறி விடும்.

 இவை அத்தனையையும் டிமோ செய்து விடுவார்.

 நெஜமாவா?

 எத்தனையோ அயோக்கியத்தனம் செஞ்சுட்டாரு, இந்த நல்லதெல்லாம் செய்ய மாட்டாரா?

 அயோத்தி கோயிலில் இருக்கற ராமர் இதையெல்லாம் சொடுக்கு போடும் நேரத்தில் செய்ய டிமோவுக்கு சக்தி கொடுக்க மாட்டாரா?

 யாருப்பா அது? ராமருக்கே பிராணன் கொடுத்தவரு டிமோ, அவருக்கு சக்தி கொடுக்கற அளவுக்கு ராமருக்கு ஏதுய்யா சக்தின்னு கேட்கறது!

 பிகு: டிமோ இது நாள் வரை சாமானிய மக்களுக்கு கொடுத்ததையும் இனி கொடுக்கப் போவதையும் சிம்பாலிக்காக சித்தரிக்கும் புகைப்படத்தை எடுத்த அந்த புகைப்படக் கலைஞருக்கு பாராட்டுக்கள்.

Monday, January 22, 2024

அந்த கோயிலில் கடவுள் இல்லை . . .

 


இரண்டு நாட்கள் முன்பாக பகிர்ந்து கொண்ட தாகூரின் கவிதையைத்தான் மறுபடி பகிர்ந்து கொள்கிறேன்,

ஆமாம்.  100 ரூபாய் கட்டணத்தில் இலவச பாப்கார்னோடு குளுகுளு அரங்கத்தில்  ஒளிபரப்பாகும் ஒன்றில் என்ன பக்தி இருக்கிறது !

மோப்ப நாய்களும் ட்ரோன்களும் வைத்து அசைவ உணவை தேடுபவர்கள்  எத்தனை முகமது அக்லக்குகளை கொல்வார்களோ?

மருத்துவமனைகளை மூட வைத்து எத்தனை நோயாளிகளை இறக்க வைக்கப் போகிறார்களோ! (இதிலே வேறொரு கேலிக்கூத்து உள்ளது. அதைப் பற்றி தனியாக எழுத வேண்டும்) 

என்ன எழவு பெருமிதம் பேசினாலும் மசூதியை இடித்த இடத்தில் கட்டப்படுவது என்றைக்கும் இந்தியாவிற்கும்  ஒரு அவமானச் சின்னம்தானே! 

அதனால்தான்  மீண்டும் சொல்கிறேன்.

அந்தக் கோயிலில் கடவுள் இல்லை . . .

அந்தக் கோயிலில் கடவுள் இல்லை
சொன்னார் ஒரு சாது. 

கடவுள் இல்லையா?

தங்கத்தில் மின்னும் விக்கிரகம்  
அமர்ந்துள்ள அரியாசனம் மட்டுமே
விலை மதிப்பற்ற ரத்தினங்கள் பதிக்கப்பட்டு
பிரகாசிப்பதைப் பார்த்துமா
கோயில் காலியாய் உள்ளதென்று உரைக்கிறாய்

கோபத்துடன் கேட்டான் அரசன்.

அது காலியாய் இல்லை அரசே,
அங்கே உங்கள் அரசின்  
செல்வச் செருக்கு     நிரம்பிஇருக்கிறது.
உங்களைத்தான் சிறப்பாய்  காட்சிப்படுத்தியுள்ளீர்கள்,
இந்த உலகின் கடவுளை அல்ல
பதில் சொன்னார் சாது.
வானத்தை முத்தமிட்டு நிற்கும் 
கோபுரம் கொண்ட கோயிலுக்காக
இருபது லட்சம் பொற்காசுகளை 
மழையாய் பொழிந்தேன்.


அனைத்து
 சடங்களுக்குப் பிறகு 

நான்கடவுள்களுக்கு அளித்த

காணிக்கை ஏராளம்.

 
இத்தனை பிரம்மாண்டமான கோயிலில்
கடவுள் இல்லை என்று சொல்ல 
என்ன துணிச்சல் உமக்கு

கொந்தளித்தான் அரசன்.


சாது நிதானமாய் பதிலளித்தார்.

அதே வருடத்தில்தான் 
உம் குடிமக்களில் இருபது லட்சம் பேர் 

கடும் பஞ்சத்தால் அவதியுற்றனர்.

றுமையில் தவித்த அம்மக்கள்

 உணவின்றிஉறைவிடமின்றி

உன் கதவோரம் அடைக்கலம் நாடி

உதவி கேட்டு கதறி அழுதனர்.

ஆனால் அவர்களோ

உன்னால்  துரத்தப்பட்டனர்.


காடுகளிலும் குகைகளிலும்

சாலையோரங்களிலும் 
பாழடைந்த
 பழைய கோயில்களிலும்

வேறு வழியின்றி தஞ்சம் புகுந்தனர்.

இருபது லட்சம் தங்கக்காசுகளைக் கொட்டி

யாருக்காக என்று சொல்லி

ஒரு பிரம்மாண்டமான கோயிலைக் 
கட்டினாயோ
  அன்றுதான்

அக்கடவுள் சொன்னார்.

நான்  நித்தம் வசிக்கும் வீடு  

நீல வானின் நடுவே

மின்னும் விளக்குகளால்தான்
 
ஒளியேற்றப்படுகிறது.

என் இல்லத்தின் அடித்தளம்
உண்மை
சமாதானம்கருணைஅன்பு

ஆகிய மதிப்பு மிக்க பொருட்களால்
அமைக்கப்பட்டது
.

வீடற்ற தன் குடிமக்களுக்கே
அடைக்கலம்
 தர இயலாத,

இதயத்தில் வறுமை படைத்த
அக்கஞ்சனால்
 நிஜமாகவே

எனக்கு ஒரு இருப்பிட த்தை
அமைக்க
 முடியுமா என்ன?”

 என்று கேட்டு

  
அந்த நாளில்தான் கடவுள்

நீ கட்டிய கோயிலிலிருந்து வெளியேறி
சாலையோரத்தில்
 மரத்தடிகளில்

வாழும் அந்த வறிய மக்களோடு

இணைந்து கொண்டார்.

விரிந்த கடலின் நுரையின்

 வெறுமையைப் போலவே
 
உன் கோயிலும் வெற்றிடம்தான்.

செல்வச் செறுக்கின் நீர்க்குமிழி மட்டும்தான்.”

 கோபமுற்ற அரசன்

உரத்த குரலில் அலறினான்

 அற்பப் பதரே

உடனே என் நாட்டிலிருந்து வெளியேறு

மீண்டும் சாது நிதானமாகச் சொன்னார்.

“ தெய்வீகத்தை எங்கிருந்து வெளியேற்றினாயோ,

 அங்கிருந்து  பக்தர்களையும்
 
தயவு செய்து வெளியேற்றிவிடு

Saturday, January 20, 2024

கார்ப்பரேட்டிடம் சொன்னால் டிமோவுக்கு???

 


வரும் 22 ம் தேதி டிமோ நடத்தும் அயோத்தி கோயில் திறப்பு எனும் அரசியல் கேலிக்கூத்து நாடகத்திற்காக அன்று மதியம் 2.30 மணி வரை அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்துள்ளார்கள்.

இவரு பெருமையை டி.வி ல பார்க்க லீவு விடறாரு. மதியம் மூன்று மணி நேரம் மட்டும் எதற்கு அலுவலகம் போகனும்,  அரை நாள் லீவ் எடுக்கலாம் என்றால் எழவு ஒரு நாள் லீவ் பிடிக்கப்படுமாம். அயோக்கியத்தனமான அதிகார துஷ்பிரயோகம் இது. உன் பவுசை பார்க்க எனக்கு எதுக்கய்யா லீவு?

பொதுத்துறையெல்லாம் இறப்பதற்காக பிறந்தவை என்று அவற்றை அழித்துக் கொண்டிருக்கும் டிமோவே, யாரிடம் தரகுக்கூலி வாங்கிக் கொண்டு, இந்தியாவின் செல்வங்களை எல்லாம் தாரை வார்க்கிறேயே, அந்த கார்ப்பரேட் கம்பெனிகளை லீவ் விடச்சொல்லும் தைரியம் இருக்கிறதா உனக்கு?

சொன்னால் என்ன ஆகும்? யாருக்கு கோயில் திறப்பதாக அரசியல் செய்கிறாரோ, அந்த ராமர் காட்டுக்கு போன போது ராமரின் பிரதிநிதியாக எதை அரியணையில் வைத்து பரதன் ஆட்சி செய்தானோ, அதைக் கொண்டே அடி கிடைக்கும்.

எதைக் கொண்டு?

மேலே உள்ள படத்தை பார்க்கவும் . . .. 

Friday, January 19, 2024

ராம் கி பாடி - அர்த்தமே வேறடா

 


அயோத்தியில் டிமோ அரசு வைத்துள்ள பலகைகள் கீழே . . .



முன்னாடி படேல் சிலைக்கு தமிழில் "ஸ்டேட்டுக்கே ஓப்பி யுனிட்டி" என்று தமிழாக்கம் செய்த அதே தமிழறிஞர்தான் (Micro Irrigation என்பதை சிறுநீர் பாசனம் என்று மொழிபெயர்த்த எச்.ராசாவாக இருக்குமோ)   "ராம் கி பாடி" யை கண்டு பிடித்திருக்க வேண்டும்.

அடேய்களா, உங்கள் தமிழ்க்கொலை கொடுத்துள்ள விபரீத அர்த்தம் புரிகிறதா இல்லையா?

புரியவில்லையென்றால் மேலே உள்ள படத்தை பார்க்கவும். இப்போதும் புரியாதவர்கள் "சாமி" படத்தை பார்க்கவும்.

பாவம்யா ராமரு!

Thursday, January 18, 2024

தாகூரும் தேச விரோதியா டிமோ?

 


மூன்றாண்டுகள் முன்பாக ஒரு மேற்கு வங்கத் தோழர் ரவீந்திரநாத் தாகூர் 120 வருடங்களுக்கு முன்பு எழுதிய கவிதையை அனுப்ப, நானும் அதை தமிழாக்கம் செய்து 20.08.2020 அன்று பகிர்ந்திருந்தேன்.

தாகூர் யாருக்கு சொன்னாரோ என்ற அப்பதிவின் இணைப்பு இங்கே

இரண்டு நாட்கள் முன்பாக ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கரும் அக்கவிதையை மொழிபெயர்த்து முகநூலில் பதிவு செய்திருந்ததை பார்த்ததும் அது நினைவுக்கு வந்தது.

மசூதியை இடித்து விட்டு டிமோ ராமருக்கு கோயிலுக்கு கட்டும் இன்றைய கேலிக்கூத்துக்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளது கவிதை என்பதுதான் மிகப் பெரிய அதிசயம்.

ஒருவேளை தாகூர் இன்று உயிரோடு இருந்திருந்து அக்கவிதை இப்போது எழுதப் பட்டிருந்தால் டிமோ அவரையும் பீமா கொரேகான் வழக்கு என்று கதை கட்டி பல செயற்பாட்டாளர்களை சிறையில் வைத்தது போல தாகூரையும் தேசத் துரோகச்சட்டத்தில் சிறையிலடைத்திருப்பார்.

ஆமாம். அக்கவிதை அவ்வளவு காத்திரமானது.

அவசியம் படியுங்கள்

அந்தக் கோயிலில் கடவுள் இல்லை
சொன்னார் ஒரு சாது. 

கடவுள் இல்லையா?

தங்கத்தில் மின்னும் விக்கிரகம்  
அமர்ந்துள்ள அரியாசனம் மட்டுமே
விலை மதிப்பற்ற ரத்தினங்கள் பதிக்கப்பட்டு
பிரகாசிப்பதைப் பார்த்துமா
கோயில் காலியாய் உள்ளதென்று உரைக்கிறாய்

கோபத்துடன் கேட்டான் அரசன்.

அது காலியாய் இல்லை அரசே,
அங்கே உங்கள் அரசின்

செல்வச்
 செருக்கு
 நிரம்பிஇருக்கிறது.

உங்களைத்தான்
 சிறப்பாய்
காட்சிப்படுத்தியுள்ளீர்கள்,

இந்த உலகின் கடவுளை அல்ல

பதில் சொன்னார் சாது.

வானத்தை முத்தமிட்டு நிற்கும்
கோபுரம் கொண்ட கோயிலுக்காக

இருபது லட்சம் பொற்காசுகளை

மழையாய் பொழிந்தேன்.

அனைத்து சடங்களுக்குப் பிறகு

நான்கடவுள்களுக்கு அளித்த

காணிக்கை ஏராளம்.

 
இத்தனை பிரம்மாண்டமான கோயிலில்
கடவுள் இல்லை என்று சொல்ல 
என்ன துணிச்சல் உமக்கு
கொந்தளித்தான் அரசன்.


சாது நிதானமாய் பதிலளித்தார்.
அதே வருடத்தில்தான் 
உம் குடிமக்களில் இருபது லட்சம் பேர்
கடும் பஞ்சத்தால் அவதியுற்றனர்.


றுமையில் தவித்த அம்மக்கள்
உணவின்றிஉறைவிடமின்றி
உன் கதவோரம் அடைக்கலம் நாடி
உதவி கேட்டு கதறி அழுதனர்.


ஆனால் அவர்களோ
உன்னால்  துரத்தப்பட்டனர்.

காடுகளிலும் குகைகளிலும்
சாலையோரங்களிலும் 
பாழடைந்த
 பழைய கோயில்களிலும்
வேறு வழியின்றி தஞ்சம் புகுந்தனர்.

இருபது லட்சம் தங்கக்காசுகளைக் கொட்டி

யாருக்காக என்று சொல்லி

ஒரு பிரம்மாண்டமான கோயிலைக் 
கட்டினாயோ
  அன்றுதான்
அக்கடவுள் சொன்னார்.

நான்  நித்தம் வசிக்கும் வீடு

நீல வானின் நடுவே

மின்னும் விளக்குகளால்தான்
 
ஒளியேற்றப்படுகிறது.
என் இல்லத்தின் அடித்தளம்
உண்மை
சமாதானம்கருணைஅன்பு
ஆகிய மதிப்பு மிக்க பொருட்களால்
அமைக்கப்பட்டது
.
வீடற்ற தன் குடிமக்களுக்கே
அடைக்கலம்
 தர இயலாத,
இதயத்தில் வறுமை படைத்த
அக்கஞ்சனால்
 நிஜமாகவே
எனக்கு ஒரு இருப்பிட த்தை
அமைக்க
 முடியுமா என்ன?”
 என்று கேட்டு
  
அந்த நாளில்தான் கடவுள்
நீ கட்டிய கோயிலிலிருந்து வெளியேறி
சாலையோரத்தில்
 மரத்தடிகளில்
வாழும் அந்த வறிய மக்களோடு
இணைந்து கொண்டார்.

விரிந்த கடலின் நுரையின்
 வெறுமையைப் போலவே
 
உன் கோயிலும் வெற்றிடம்தான்.
செல்வச் செறுக்கின் நீர்க்குமிழி மட்டும்தான்.”

 கோபமுற்ற அரசன்

உரத்த குரலில் அலறினான்

 அற்பப் பதரே
உடனே என் நாட்டிலிருந்து வெளியேறு

மீண்டும் சாது நிதானமாகச் சொன்னார்.

“ தெய்வீகத்தை எங்கிருந்து வெளியேற்றினாயோ,
 அங்கிருந்து  பக்தர்களையும்
 
தயவு செய்து வெளியேற்றிவிடு