Showing posts with label குஜராத். Show all posts
Showing posts with label குஜராத். Show all posts

Thursday, July 10, 2025

இதுதாண்டா குஜராத் மாடல்

 


தோழர் ரவி பாலேட் வரைந்த அருமையான ஓவியம்.

அது சொல்லும் உண்மையை தாங்க முடியாத சங்கிகள் அவர் மீது ஆபாச வாந்தியை கக்கிக் கொண்டிருக்கின்றனர். 

Tuesday, January 9, 2024

பில்கிஸ் பானு - நீதி நிலைக்கட்டும்

 


டிமோ நடத்திய காட்டுமிராண்டித்தனமான கலவரத்தில் குடும்பத்தினரை கண் முன்னே இழந்து கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான பில்கிஸ் பானுவின் துயரத்துக்கு காரணமான கயவர்களை விடுதலை செய்தது குஜராத் பாஜக அரசு.

அந்த முடிவு செல்லாது என்றும் அந்த அயோக்கியர்கள் சரணடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பில்கிஸ் பானு, மார்க்சிஸ்ட் கட்சித்தலைவர் தோழர் சுபாஷினி அலி உள்ளிட்ட ஐவர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இது.

நீதிபதிகள் குஜராத் அரசை கடுமையாக சாடியுள்ளனர். இறுதியாக நீதி கிடைத்தது மகிழ்ச்சி.

ஒரே ஒரு நெருடல் இருக்கிறது.

மகாராஷ்டிராவில் வழக்கு நடந்ததால் முடிவெடுக்கும் அதிகாரம் குஜராத் அரசுக்குக் கிடையாது என்ற ஒற்றை வரியை பயன்படுதி, கட்சி மாறி ஏக்நாத் ஷிண்டேவை பயன்படுத்தி மீண்டும் கயவர்கள் விடுதலையாகக் கூடாது.

கயவர்கள் தொடர்ந்து சிறையில் இருந்தால்தான் நீதி நிலைக்கும் ..

Thursday, July 20, 2023

குஜராத்துக்கு ஒரு குட்டு

 


குஜராத் கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு போராடிய சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் மீது சி.பி.ஐ ஒரு பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளியது. உச்ச நீதி மன்றம் தலையிட்டே பிணை கொடுத்தது. 

பிணையை ரத்து செய்து அவரை மீண்டும் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று குஜராத் உயர் நீதிமன்றம் 1000 பக்க உத்தரவு போட அதனை நேற்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

"ஆயிரம் பக்கம் தீர்ப்பு படிப்பதற்கு சுவாரஸ்யமாக  இருந்தாலும் அதில் எந்த விஷயமும் இல்லை. முரண்பாடுகள் ஏராளமாக இருக்கிறது. சாட்சியங்களை போர்ஜரி செய்தார் என்று குற்றம் சுமத்துகிறீர்கள். அந்த சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்ட காலம் 2008 முதல் 2011 வரை. இத்தனை நாள் சும்மா இருந்து விட்டு 2022 ல் குற்றம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? "

என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடிந்து கொண்டுள்ளனர். குஜராத்தை குறை சொல்வதென்றால் அது டிமோவை சொல்வதாகும்.

தைரியமான நீதிபதிகள்தான்.

அதனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

நீதிபதி லோயா நினைவுக்கு வருகிறார். குஜராத் நீதிபதியை நினைக்கையில் சதாசிவம், தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகாய், எஸ்.ஏ.பொப்டே, அருண் மிஸ்ரா ஆகியோரும் நினைவுக்கு வருகிறார்கள். 

Sunday, May 7, 2023

"குஜராத் ஸ்டோரி" எடு நரேந்திரா

 


32,000 பெண்கள் கேரளாவிலிருந்து சிரியாவுக்கு கடத்தப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்தார்கள் என்றொரு கட்டுக்கதையை அடிப்படையாகக் கொண்டு கேரளா ஸ்டோரி என்றொரு திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. பிரதமர் பதவியில் இருப்பவர் அதற்கு கூவி கூவி விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்.

இன்றைக்கொரு செய்தி வெளி வந்துள்ளது.

கேடி பில்லா முதலமைச்சராகவும் கில்லாடி ரங்கா உள்துறை அமைச்சராகவும் இருந்த குஜராத் மாநிலத்தில் ஐந்தாண்டுகளில் மட்டும் நாற்பதாயிரம் இளம் பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்று கேடிஷா தலைமையில் உள்ள அமைச்சகத்தின் ஒரு பிரிவான தேசிய குற்ற ஆவண மையம் வெளியிட்டுள்ள அறிக்கை சொல்லும் உண்மை இது. அவர்கள் வேறு மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு பாலியல் தொழிலுக்காக விற்கப் படுகின்றனர் என்று சொல்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி. 


காஷ்மீர் ஃபைல்ஸ், கேரளா ஸ்டோரி என்றெல்லாம் பொய்ப் பிரச்சாரம் செய்து படம் எடுக்க வைத்து அதற்கு கேடு கெட்ட விளம்பரமும் செய்து வருகின்ற "வெறும் நரேந்திரா" வே உமது மாநிலத்தின் உண்மைச் சம்பவத்தை வைத்து "குஜராத் ஸ்டோரி" எடுப்பாயா நரேந்திரா?

Sunday, April 23, 2023

ஜனாதிபதி போஸ்ட் ஜஸ்டு மிஸ்ஸு

 


மாயாபென் கோட்னானி என்ற "வெறும் நரேந்திரா"வின் முதல்வராக இருந்த போது மாநில மந்தியாக இருந்தவருக்கு குஜராத் கலவரத்திற்காக முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

இப்போது அவர் குற்றமற்றவர் என்றொரு குஜராத் நீதிமன்றம் விடுதலை செய்து விட்டது.

வழக்கமாக கொலைகாரர்கள் விடுதலை செய்யப்பட்ட பின்பு அவர்களுக்கு எம்.பி. மந்திரி என்று பதவி கொடுத்து அழகு பார்ப்பது பாஜகவின் பெருமை மிகு பாரம்பரியம்.

ஆனாலும் இவர் சாதாரணமானவர் இல்லையே.

ஒன்ற. இரண்டா, அறுபத்து ஏழு பேர் கொடூரமாக கொல்லப்பட்ட நரோடா பாட்டியா வழக்கு! முதலில் மரண தண்டனை வேறு கொடுத்தார்கள்.

அம்மையார் ரேஞ்சிற்கு ஜனாதிபதி பதவிதான் கொடுக்க வேண்டும். என்ன சில மாதங்கள் முன்பாகத்தான் புதிய ஜனாதிபதி நியமிக்க்கப் பட்டு விட்டார். அதனால் வாய்ப்பு போய் விட்டது.

பேசாமல் அமெரிக்க தூதராக்கி விடுங்கள், 

"வெறும் நரேந்திரா"வுக்கு முன்பு விசா கொடுக்காத அமெரிக்காவை சூப்பராக பழி வாங்கியது மாதிரியும் இருக்கும் ! 

Sunday, January 22, 2023

பயந்துட்டீரா மோடி ?

 


அச்சுறுத்தியோ, ஆசை காண்பித்தோ அல்லது உங்க ஆளையே வைத்தோ,  எல்லா வழக்குகளையும் புதைகுழியில் போட்டு மூடி விட்டீர்கள்.

நீங்கள் செய்ததை தவறென்ற வாஜ்பாய் செத்து விட்டார். உமக்காக துணை நின்ற அத்வானி வாய் திறக்கக் கூடாதென்று மிரட்டி ஒதுக்கி விட்டீர்கள்.

உண்மையை அம்பலப்படுத்திய போலீஸ்காரர்களை எல்லாம் ஜெயிலில் தூக்கி போட்டு விட்டீர்கள்.

எல்லாவற்றையும் விட கொடுமையாக இஸ்லாமியர்களை கொன்று குவித்ததையே உங்கள் சாதனை என்று கருதும் அளவிற்கு குஜராத் மக்கள் மனதில் மதவெறியேற்றி அவர்கள் உள்ளத்தில் நச்சு கலந்துள்ளீர்கள்.

இதற்கு மேலும் என்ன பயம் மோடி?

குஜராத் கலவரம் பற்றி பி.பி.சி ஒளிபரப்பினால் ஏன் தடை? அதைப் பற்றிய ட்விட்டர் பதிவுகளுக்கும் தடை?

தமிழ்நாட்டில ஆட்டுக்காரன் வீடியோ ஆதாரங்களை வைத்து கட்சிக்காரர்களை மிரட்டுகிறானே, அது போல ஏதாவது வீடியோ ஆதாரம் வெளிவரும் என்று அச்சமா?

ஆனாலும் அந்த பயம் பிடிச்சிருக்கு மோடி.

உங்கள் மார்பை சுற்றியுள்ள 56 இஞ்ச் பலூனில் பொத்தல் விழுந்து காற்று வெளியேறுவது சந்தோஷம்தான் மோடி. 

Monday, October 31, 2022

இவ்விபத்தும் கடவுளின் செய்திதானா மோடி?

 



 மேற்கு வங்கத் தேர்தல் நேரத்தில் கொல்கத்தாவில் ஒரு பாலம் இடிந்து 21 பேர் கொல்லப்பட்ட போது “மேற்கு வங்க மக்களை ஆளும் கட்சியிடமிருந்து காப்பாற்ற கடவுள் அனுப்பிய செய்திதான் பாலம் இடிந்த விபத்து” என்று பிரச்சாரம் செய்தார் மோடி.

 


அதே லாஜிக்கின் அடிப்படையில் பார்த்தால் மோர்பி பாலம் இடிந்து 140 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டது கூட பாஜக அரசிடமிருந்து குஜராத் மாநில மக்களை காப்பாற்ற சட்டப் பேரவை தேர்தல் நேரத்தில் கடவுள் அனுப்பிய செய்திதானா மோடி?

 

ஓட்டை உடைசல் குஜராத் மாடல் . . .

 


குஜராத்தில் உடைந்து நொருங்கியது வெறும் தொங்கு பாலம் மட்டுமல்ல, உலகிற்கே வழிகாட்டுவதாக கதை சொல்லப்பட்ட குஜராத் வளர்ச்சி மாடலும்தான்.

புனரமைப்புப் பணிகளை தனியாரே செய்தாராம்,

பணி முறையாக நடந்ததா என்று சோதிக்கும் முன்னரே திறந்து விட்டார்களாம்.

Too much privatization என்று முன்னொரு காலத்தில் ரயில்வே விபத்தொன்றை பார்த்த பிரிட்டன் பிரதமர் டோனி ப்ளேய்ர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.

இங்கே தனியார் பாஜக கூட்டுக் களவாணித்தனம் 70 உயிர்களை பலி வாங்கி விட்டது.

தனியாருக்கு தீபாவளிக்கு முன்பு காசு பார்க்கும் வெறி.

பாஜகவிற்கு பாலத்தை திறந்து வைத்து வளர்ச்சி முகம் காட்டி ஓட்டுக்களை பறிக்கும் வெறி.

இந்த வெறிக்கு இரை 70 உயிர்கள்.

இனி எவனாவது குஜராத் மாடல் என்றால் ஆம் ஆத்மி தேர்தல் சின்னத்தால் அடியுங்கள். (அரவிந்த் கேஜ்ரிவாலும் அந்த அடிக்கு தகுதியானவர் என்பது இன்னொரு விஷயம்) 

Wednesday, August 17, 2022

இந்தியாவின் துயரம் . . .

 ....

தோழர் சம்சுதீன் ஹீரா அவர்களின் முக நூல் பக்கத்திலிருந்து பகிர்ந்து கொள்கிறேன்.

மோடியின் கொடூரத்திற்கு வாழும் சாட்சி இந்த பதிவில் எழுதப்பட்டுள்ள பில்கிஸ் பானு. திட்டமிட்ட கொலைகளின் சூத்திரதாரி மோடி . . .

மனிதனாகக் கூட மதிக்கப்பட முடியாத ஒரு ஜந்து பிரதமராக இருப்பதும் தேசபக்தி வஜனம் பேசுவதும் இந்தியாவின் துயரம் . . .




சினிமாக்களில் மட்டுமே பார்த்திருக்க முடிந்த கற்பனைக்கும் எட்டாத கொடூரங்களை ஒரே நாளில் சந்தித்த , 'வாழும் துயரம்' அவர்.

பிப்ரவரி 27, 2002ல் கோத்ரா ரயிலில் பற்றிய தீ கலவரமாக உருவெடுத்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை காவு வாங்கியது. தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்வதற்கு பலர் உயிரோடு இல்லை, பலர் உயிருக்கு பயந்து சொல்லத்தயாராய் இல்லை! ஆனால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காய் படிப்பறிவற்ற ஓர் இளம்பெண் துணிந்து வந்தார்.
அதனை அவர் சொல்லக் கேட்போம்...
"என் கணவர் வேலையில்லாதவராக அப்போது இருந்தாலும் , வசதிக்கொண்ட வீட்டில் திருமண வாழ்க்கை சுகமாக சென்றுக்கொண்டிருந்தது. எங்களுக்கு 3 வயதில் ஓர் மகள் இருந்தாள். பெயர் சாலிஹா. நான் 5 மாத குழந்தையை வயிற்றில் சுமந்தவளாக இருந்தேன்.
பிப்ரவரி 28! சரியாக கோத்ரா சம்பவத்திற்கு அடுத்த நாள் எங்கள் கிராமத்தின் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் இந்துத்துவாவினரால் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது கலவரமாக மாறிப்போக பல முஸ்லிம் வீடுகள் தீக்கிரையாகின. நாங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பிச் செல்ல நாடிய போது ஊர்த்தலைவர் தடுத்து "யாராலும் உங்களுக்கு தீங்கு ஏற்படுத்த முடியாதென்று" உறுதி கூறினார்.
ஆனால் ,அதன் பின்னர் கலவர கும்பல் எங்கள் இல்லங்களை நோக்கி கற்களை வீசத்தொடங்கினர். அதிலிருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தோம். அப்போது நான் செருப்பு கூட அணிய அவகாசம் பெற்றிருக்கவில்லை. உறுதி கொடுத்த ஊர் தலைவர் வீட்டில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் , குழந்தைகள் ஒன்று கூடினோம். ஆனாலும் பாதுகாப்பற்றவர்களாய் உணர்ந்தோம். நாங்கள் தப்பி வேறிடம் செல்பதற்குரிய எல்லா வழிகளும் கலவரக்காரர்களால் அடைக்கப்பட்டிருந்தன. 28ம் தேதி நள்ளிரவில் எங்கள் வீடுகள் திட்டமிட்டு எரிக்கப்பட தொடங்கின. நாங்கள் உங்களை கொல்வோம், நாங்கள் உங்களை வெட்டியே தீருவோம் எனும் கோஷங்கள் உரக்க ஒலித்தன.
எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவைப்பட்டது. அதற்காக கிராம ஆண்கள் காவல்நிலையத்தில் உதவி கேட்டனர். ஆனால் எங்களுக்கு பாதுகாப்பு மறுக்கப்பட்டது. வேறு வழியில்லாமல் பல முஸ்லிம்கள் தங்கள் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள காடுகளுக்கு சென்று சில நாட்கள் மறைந்து வாழ்ந்தனர்.
அன்றைய நாள் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை உண்ண உணவின்றி அருந்த நீருமின்றி உயிருக்கு பயந்து எங்கள் கிராமங்களிலேயே பல்வேறு இடங்களில் ஒளிந்துக்கொண்டே இருந்தோம். ஆனால் அசாதரண சூழல் திணிக்கப்பட்ட நிலையில் அது சாதாரண விஷயமாக இருக்கவில்லை. எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களுக்கெல்லாம் மிரட்டல் விடுக்கப்பட்டது. அவர்களை வெளியே அனுப்பவில்லை எனில் உன் வீட்டையும் கொளுத்துவோம் என்று ஆவேசமாக அவர்கள் கத்தியதால் பலரும் அடைக்கலம் கொடுக்க அஞ்சினர்.
மிரட்டலுக்கு அஞ்சிய , உறுதி அளித்த எங்கள் ஊர் தலைவரும் அவர் வீட்டிலிருந்து எங்களை வெளியேற்றிவிட்டார். எங்கள் வீடுகளுக்கே செல்லலாமென நினைத்தால் , அது ஏற்கனவே தீக்கு இரையாகியிருந்தது. மீண்டும் காவல்துறை அதிகாரிகளிடம் பாதுகாப்பு கோரினோம். அவர்களோ எங்களை அக்கிராமத்தை விட்டு வெளியேறிச்செல்ல அறிவுறுத்தினர்.
இரவாகியிருந்தது. அருகிலிருக்கும் கிராமத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பிஜல்பாய் தாமோர் வீட்டுக்கு அடைக்கலம் தேடி சென்றோம். துரதிஷ்டவசமாக அவர் அப்போது ஊரிலில்லை. அவர் மகனும் கூட எங்களை ஆசுவாசப்படுத்த குடிக்க நீரும் சில திண்பண்டங்களையும் கொடுத்துவிட்டு அங்கிருந்து செல்லும்படி சொல்லிவிட்டார்.
வேறு வழியில்லை! வேறிடம் செல்ல வேண்டும். இன்னுமொரு கிராமத்திற்கு சென்றால் அங்குள்ள முஸ்லிம்கள் உயிருக்கு பயந்து எங்கோ தப்பியோடியிருந்தனர். அங்கிருந்த பள்ளிவாசல் அன்றைய இரவுக்கு பாதுகாப்பு கொடுத்தது.
ஷாமின்! என் ஒன்றுவிட்ட சகோதரி... நிறைமாத கர்ப்பிணி. திடீரென பிரசவ வலி ஏற்பட மருத்துவ உதவியும் கிடைக்காத அந்த நேரம் செய்வதறியாது திகைத்தோம். அவள் பள்ளிவாசலிலேயே தன் குழந்தையை பிரசவித்தாள்.
பள்ளிவாசல் அமைந்திருந்த நாங்கள் தங்கியிருந்த கிராமம் ஏற்கனவே இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டதால் அங்கிருப்பது பாதுகாப்பற்றது என எண்ணி குத்ரா எனும் கிராமத்திற்கு பழங்குடியினர் உதவியுடன் சென்றோம்.
எங்கள் கிராமத்திலிருந்து 500 முஸ்லிம்கள் தப்பி வந்தோம். 17 உறுப்பினர்கள் மட்டும் குத்ராவில் தங்கிக்கொண்டோம். ஷாமினால் பயணிக்க முடியவில்லை. ஈன்றெடுத்த வேதனை அவளை சோர்வாக்கியிருந்தது. ஆகையால் இக்கிராமத்திலேயே 3 நாள் வரை மறைந்திருக்க எண்ணினோம். எங்கள் அடையாளங்களை மறைக்க பழங்குடியினர் அவர்களின் துணிகளை எங்களுக்கு அணியவைத்தனர். ஷாமின் மீதான இரக்கத்தால் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர். இல்லையேல் அதுவும் கிடைத்திருக்காது.
ஆனால் அதுவும் எளிதானதாக இருக்கவில்லை. முஸ்லிம்களை அவர்கள் தங்களுடன் வைத்துள்ளார்களா என பல விசாரணைகளுக்கு உள்ளாகினர். எனவே அதிகாலை 4 மணிக்கு மாறுவேடத்தில் அங்கிருந்து புறப்பட்டோம்.
உயிருக்காய் பயந்தோடிய நாட்கள் எல்லாம் கண்ணீர் மட்டுமே சுமந்திருந்தோம். அடுத்த நொடி என்ன ஆபத்திருக்கிறது என்பதை அறியாத படபடப்புகள் கொடூரமானவை. எதுவும் சிந்திக்க முடியவில்லை! சிந்தனையெல்லாம் எப்படி உயிரை காப்பாற்றுவதிலேயே இருந்தது.
இரு நாட்களுக்கு பிறகு பழங்குடியினரின் வழிகாட்டல் உதவியுடன் சபர்வாட் கிராமத்திற்கு சென்றோம். இங்கிருந்து ,மானாபாய் எனும் நீண்டநாள் நண்பரை சந்தித்து உதவி பெற நினைத்தோம். அவர் இருக்கும் பகுதி பனிவேலா. அங்கு செல்லும் வழியில் ஒரு குக்கிராமத்தில் ஓய்வெடுத்துக்கொண்டோம். அது இரு மலைகளுக்கு இடைபட்ட இடம் . குருகிய சாலை வழியே செல்லக்கூடிய பகுதி.
நாங்கள் சாலை வழியே சென்ற போது திடீரென ஒரு நபர் என் மாமாவை தாங்கினான். கீழே சரிந்த அவர் ஒரு மணி நேரத்திற்கு பின்பே சுயநினைவு பெற முடிந்தது. விரைவிலேயே சில நபர்கள் சூழ்ந்துக்கொண்டனர். அவர்களை முன்பே எனக்கு தெரியும். ஆம்! அவர்கள் என் சொந்த கிராமத்தை சேர்ந்தவர்கள். சற்று முன்னர் நாங்கள் தங்கிய சபர்வாட் கிராமத்தினர் தான் நாங்கள் எங்கேசெல்கிறோம் என்ற தகவலை இவர்களுக்கு கொடுத்துள்ளார்கள். இவ்வெறியர்கள் டாட்டா ஸ்மோவில் வந்திருந்தனர்.
"முஸ்லிம்கள் இங்கேயிருக்கிறார்கள்! கொல்லுங்கள்! கொல்லுங்கள்" எனும் ஆவேச குரல்களை எழுப்பினர்.
அவர்கள் சபர்வாட் மற்றும் பனிவேலா கிராமத்திலிருந்த வெறிபிடித்த மக்களை திரட்டி வந்திருந்தனர். தொடர் ஓட்டத்தின் காரணமாக எங்கள் உடல் சோர்ந்திருந்தது, உதவிக்கு ஆள் இல்லாத நிலை உள்ளத்தையும் சோர்வடைய செய்திருந்தது. எங்களால் இனி அவர்களுடன் சண்டையிட முடியாது! அதற்குரிய சக்தியையும் இழந்துவிட்டோம். ஆனாலும் ஆளுக்கொரு திசையாக ஓட்டம் பிடிக்க நினைத்தோம்! பயனில்லை- சுற்றிவளைக்கப்பட்டோம். நாங்கள் 17 நபர்கள் தான்... நான்கு ஆண்கள் மட்டுமே எங்களில் உண்டு! எட்டு பெண்களும் மீதமுள்ளவர்கள் சிறு குழந்தைகளாகவும் இருந்தனர். அவர்களிலோ 25க்கும் மேற்பட்ட வெறியர்கள் இருந்தனர்.
அவர்கள் எம் பெண்களின் ஆடைகளை கிழித்தெறிந்து பாலியல் தொல்லைக்கு ஆளாக்கினர். நிர்வாணமாக்கப்பட்ட பெண்கள் கூட்டத்தினர்க்கு முன் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர்.
அவர்களின் வெறி 2 நாட்களுக்கு முன் பிறந்த குழந்தையையும் விட்டுவைக்கவில்லை! ஷாமின் 2 நாள் வயது குழந்தையை கொடூரமாக கொன்றனர். என் தாய்மாமா, என் தந்தையின் தங்கை மற்றும் அவரின் கணவரையும் அடித்துக்கொன்றனர். வன்புணர்வுக்காளான பெண்களையும் கொன்றனர்.
அதன் பின் என்னிடம் வந்தனர். நான் என் 3 வயது மகளை கையில் ஏந்தியிருந்தேன். என்னிடமிருந்து வலுக்கட்டாயமாக அவளை பறித்துக்கொண்ட அந்த வெறியர்கள், தன் வெறியின் விசைக்கேற்ப அவளை தூக்கி வீசினர். அவளின் பிஞ்சு தலை பாறையில் மோதிய போது என் இதயமே சுக்குநூறாய் உடைந்தது. அவள் இறந்து போனாள். நான்கு பேர் என் கை மற்றும் கால்களை பிடித்துக்கொள்ள பலபேர் ஒருவர் பின் ஒருவராக என்னை வன்புணர்வுக்குள்ளாக்கினர். அவர்களின் வெறி அடங்கிய பின்பும் கூட கண்மூடித்தனமாக என்னை உதைத்தும் அடித்தும் துன்புறுத்தினர். என் கழுத்துப்பகுதியினை காலால் அழுத்தியிருந்தான் ஒருவன். கற்கள் கொண்டு தாக்கப்பட்டேன். இரும்பு தடியால் என் தலையில் தாக்கிய போது நினைவிழந்து போனேன். நான் இறந்துவிட்டதாக நினைத்த அந்த வெறியர்கள் என்னை புதருக்குள் தூக்கி வீசினர்.
எங்களை தாக்கிய போது அவர்கள் உதிர்த்த முறைகேடான வார்த்தைகளை என்னால் எப்போதும் திருப்பிச்சொல்ல முடியாத அளவுக்கு கேவலமானவை. " கோத்ராவில் எங்கள் மக்கள் கொன்றதற்காக உங்களை கொல்வோம்! எந்த ஒரு முஸ்லிமையும் உயிருடன் விட்டு வைக்க மாட்டோம்" என ஆக்ரோஷமாக கத்தினர்.
என் கண் முன்னே என் அம்மா, என் தங்கை மற்றும் என் 12 உறவினர்களும் கொல்லப்பட்டன்னர். தன் துன்பத்தை கத்தி சொல்ல முடியாத மிருகங்களை துன்புறுத்தி துடிதுடிக்க வைத்து கொல்லப்படுவதை போலவே என் உறவினர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இத்தனைக்கும் 28ம் தேதி காலையில் என் கணவரும் இன்னும் சில உறவினர்களும் பிஜேபி ஊழியர் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட கிராமத்தினர்க்கான மீட்டிங்கில் எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் படி கெஞ்சியுள்ளார். இப்போது எங்களை வன்புணர்வுக்கு ஆளாக்கி கொன்றவர்கள் அப்போது அக்கூட்டத்தில் இருந்தவர்கள் தான்!
17 பேரில் 2 குழந்தைகளும் (சதாம் -வயது 7, ஹுசைன் -வயது 5) நானும் மட்டும் பிழைத்துக்கொண்டோம்! அவர்கள் இருவரும் எப்படி தன்னை காத்துக்கொண்டார்கள் என எனக்கு தெரியவில்லை.
நாங்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட போது சுற்றி நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்களில் எவரும் ஹிந்து பெண்கள் இல்லை. அவர்கள் அனைவரும் நடுத்தர வயது ஆண்கள் மட்டுமே. நாங்கள் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட போது இவர்களெல்லாம் ஆபாச வார்த்தைகளில் கத்திக்கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னை வன்புணர்வுக்கு உள்ளாக்கிய போது நான் ஐந்து மாத கற்பிணி என கூட என்னால் சொல்ல முடியாத அளவுக்கு அவர்களின் கால்கள் என் கழுத்திலும் , வாயிலும் மிதிப்பட்டிருந்தது.
ஹிந்துக்களில் சாதி பேதமின்றி இந்த கொடூரத்தில் பங்காற்றினர். என் கிராமத்தை சேர்ந்தவர்களும் அதில் ஒரு பகுதியினர் தான்! எப்படி என்னால் அவர்களை அடையாளம் காண முடியாமல் போகும் ? அவர்கள் என் கிராமத்தை சேர்ந்தவர்களே!
இரண்டு மணி நேரத்திற்கு பின் என் கண்களை திறந்த போது என் உலகம் சிதைக்கப்பட்டதை கண்டேன். என்னால் நிற்க கூட முடியவில்லை! ஆனால் அவர்கள் கையில் மீண்டும் சிக்க விரும்பவில்லை. நிர்வாணத்தை மறைத்துக்கொள்ள கந்தல் துணியேனும் கிடைக்குமா என தேடியலைந்தேன். மேலங்கி கிடைத்தது. என்னை சுற்றி என் உறவினர்களின் பிணங்கள் இருந்தது. மண்ணில் சரிந்திருந்த அந்த உடல்களை பார்க்கவும் என்னால் முடியவில்லை.
ஓர் இரவும் கழிந்து, அடுத்த நாள் பகல் பொழுதும் கழிந்தது. தண்ணீர் தாகமும் பசியும் என்னை மேலும் துன்புறுத்தியது. என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை! தாகத்திலேயே செத்துவிடுவேனோ என எண்ணத்தோன்றியது. அதனால் மலைப்பாங்கான அந்த இடத்தை விட்டு கீழிறங்கி உணவும் உடையும் கிடைக்குமா என தேடியலைய ஆரம்பித்தேன்.
சில தொலைவில் அடிகுழாய் ஒன்றை பார்த்தேன். அது அந்த பகுதியில் வாழும் பழங்குடியினர்க்கு சொந்தமானது. என்னை கண்டதும் நான் ஒரு முஸ்லிம் என அறிந்து என்னை தாக்க வந்தனர். அதிலிருந்து என்னை காத்துக்கொள்ள நான் முஸ்லிம் இல்லை என்றும் உங்களை சேர்ந்தவள் தான் என்றும் பொய் சொன்னேன் அவர்கள் மொழியிலேயே. அவர்கள் நம்பினார்கள். எனக்கு நீரும் உடையும் கொடுத்தனர்.
கொஞ்சம் உறங்கினேன். அப்போது தான் போலிஸ் வேன் அந்த பகுதிக்கு வந்து தேட ஆரம்பித்தது. ரந்திக்புர் கிராமத்திலிருந்து வந்த குடும்பத்தினர் கொல்லப்பட்டதை குறித்து அவர்கள் அங்கே கேட்டார்கள்.
போலிஸ்காரர்கள் எனக்கு பாதுகாப்பு தருவார்கள் என நம்பினேன். அவர்களும் என்னை அவர்கள் கொண்டு வந்த வண்டியின் பின்புறம் ஓய்வெடுத்துக்கொள்ள சொன்னார்கள். உயிர் பிழைத்தது என் அதிஷ்ட்டம் என்றார்கள். அவர்களுடன் அங்கிருந்து புறப்பட்டேன். லிம்கேதா விற்கு அழைத்து சென்றனர். எனக்கு உணவு கொடுத்த பின் என் கதையை கேட்டார்கள். ஆனால் என் புகாரை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக அவர்கள் என்னை பயம் காட்டினர்.
ஒருவேளை இந்த வன்புணர்வு சம்மந்தமான குற்றச்சாட்டை சொன்னால் என்னுடல் இருக்கும் மோசமான நிலையில் என்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள் என்றும் விஷ ஊசி செலுத்தி என்னை மருத்துவர்கள் கொல்வார்கள் என்றும் கூறினர். நான் பயந்தேன் , எனினும் நான் சொன்னவற்றை ஒன்று விடாமல் புகாராக ஏற்றுக்கொள்ளச் சொன்னேன். ஆனால் அவர்களோ நான் சொன்னவற்றுக்கு புறம்பாக 500 பேர் சேர்ந்த மக்கள் குழு என்னையும் உறவினரையும் அடித்துவிட்டதாக கதை கட்டி எழுதினர். சக்தி முழுவதும் இழந்த என்னால் என் புகார் குறித்து போலிஸாருடன் முறையிட முடியவில்லை.. இவர்களிடம் அது பயனளிக்காது என்பதையும் அறிந்துக்கொண்டேன். ஆகையால் என் எண்ணத்தை கைவிட்டு என்னை கோத்ரா முகாமிற்கு அழைத்துச்செல்லும்படி வேண்டுகோள் விடுத்தேன்! நான் என் உறவினர்களை பார்க்க விரும்பினேன்.
நான் படிக்காதவள். நான் சார்ந்த அமைப்பு பெண்களை பள்ளிக்கு செல்வதை அனுமதிக்காத தப்லீக் ஜமாத்தை சேர்ந்தது. ஆனாலும் கற்பழிப்பு நடத்தப்பட்ட ஐந்து நாட்களுக்கு பிறகு, மெடிக்கல் செக்கப் செய்ய முடிவெடுத்தேன். நான் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதை உறுதி செய்யும் சான்றிதழை பெற்றேன்.
என் அம்மா, என் 2 சகோதரர்கள், இரு சகோதரிகள் மற்றும் என் மூன்று வயது மகள் கொல்லப்பட்டனர். ஆனாலும் என்னால் அந்த குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியும். அந்த மிருகங்களை பல வருடங்களுக்கு முன்பிருந்தே எனக்கு நன்கு தெரியும். நாங்கள் ஊரில் பால் விற்று வந்தோம். எங்களிடம் பால் வாங்கிச்செல்லும் வாடிக்கையாளர்கள் அவர்கள். ஒருவேளை அது அவர்களுக்கு அவமானமாக இருந்தால் அதற்காக அவர்கள் இவ்வாறு என்னை செய்திருக்க வேண்டியதில்லை. இந்நிகழ்வுகளுக்கெல்லாம் பிறகு என் தந்தை மனநிலை குன்றியவராகிவிட்டார். எண்ணிப்பார்க்க முடியாத திருப்பங்களுடனும் மோசமான சொற்ப நாட்களுக்குள்ளும் நான் அனாதையாக்கப்பட்டுவிட்டதால் சக்தி முழுவதும் இழந்துவிட்டேன் ! ஆனாலும் இதனை பாதியிலேயே நான் கைவிடுவதாக இல்லை! எப்படி என்னால் அவர்களை மன்னிக்க முடியும் ? "
முடித்தார். பத்திரிக்கையாளர் ஷீலா பட்-இடம் தனக்கு நேர்ந்தவற்றையெல்லாம் விவரித்தார் பில்கிஸ். அதன் பின்னர் தான் பலரின் கவனத்திற்கு இக்கொடூரம் சென்றது.
எதிர்பார்த்த படியே மோடியின் காவல்துறை 2003ல் இந்த வழக்கை "சம்பவம் உண்மைதான். ஆனால் கண்டுபிடிக்க இயலாதவை" என கூறி முடிவுக்கு கொண்டு வந்தது. இதுபற்றி சகோதரி பில்கிஸ் குறிப்பிடுகையில் " இருமுறை புகார் அளித்தேன். முதலாவதாக லிம்கேதா வில், அடுத்ததாக நான் தங்கியிருந்த கோத்ரா முகாமில் . அவர்கள் என் கைரேகையை பெற்றுக்கொண்டார்கள். ஆனால் படிப்பறிவற்றவளாக இருந்ததால் அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதை நான் அறியவில்லை"
அதன் பின் பில்கிஸ் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை அணுக அஃது அஹ்மதாபாத் சுப்ரிம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. பின்னர் இவ்வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்ட பின் உண்மைகள் வெளிவர ஆரம்பித்தன. மருத்துவர்களும் போலிஸும் இந்நிகழ்வுக்கு துணை புரிந்ததும், தடயங்களை அழித்ததும் அம்பலமானது. 2 மருத்துவர்கள், 6 போலிஸ் உட்பட 20 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. சிபிஐ தன் அறிக்கையில் இந்நிகழ்வு குஜராத் போலிஸ்ஸின் ஒட்டுமொத்த தோல்வியையும் அவர்களின் உடந்தையையும் சுட்டிக்காட்டியது. இந்த வழக்கு போக்கின் காரணமாக பில்கீஸ் அச்சுறுத்தல்களை சந்திக்க நேர்ந்ததன் காரணமாக அவருக்கு CISF பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. சம்பவம் நடந்தது முதல் வழக்கு முடியும் வரையில் 20க்கும் அதிகமான இடங்களுக்கு பாதுகாப்பு கருதி மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பில்கிஸ் குஜராத் க்கு வெளியே வழக்கு விசாரணை நடத்தும்படி சுப்ரிம் கோர்டில் மனு கொடுத்தார். அவரின் கோரிக்கையை ஏற்று இவ்வழக்கு மும்பைக்கு மாற்றப்பட்டது. "நீதியின் மீதான நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுக்க வைத்தது" என இம்முடிவு குறித்து கூறினார்.
இதற்கிடையில் போலிஸாரால் பில்கீஸ் உறவினர்கள் புதைக்கப்பட்ட பனிவேலா கிராமத்தை ஏய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டர் தோஹ்ரா குழு ஆய்வு செய்த போது அங்கே 60 கிலோ உப்பு கிடைத்தது. உடலை சீக்கிரமாக மக்கச்செய்வதற்காக திட்டமிட்டு போலிஸார் இவ்வாறு செய்தது நிரூபணமானது. மண்ணின் ஈரப்பதம் காரணமாக அவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை. பில்கிஸ் சொன்ன அடையாளங்கள் வயதும் மருத்துவகுழு ஆராய்ச்சி முடிவோடு ஒத்துப்போனது. 8 பேரின் உடல்கள் மட்டும் கிடைத்தன. மீதம் ஆறுபேர் காணாதவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். மருத்துவக்குழுவின் அறிக்கை இவ்வழக்கின் போக்கை மேலும் வலுவாக்கியது.
ஆறுவருட போராட்டத்தின் பயனாக , பில்கிஸ் வைத்திருந்த நம்பிக்கையை காக்கும் வண்ணம் சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தீர்ப்பளித்தது. பிடிபட்ட 20 பேரில் 12 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கு 2008, ஜனவரி 18ல் ஆயுள் தண்டனை விதித்தது. ஒருவர் விசாரணையின் போதே இறந்துவிட்டிருந்தார். 7 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டனர்.
நீதி கிடைத்த போதும் விடுவிக்கப்பட்ட ஆறுபேருக்காக தன் ஆதங்கத்தையும் சகோதரி பதிவு செய்தார். அந்நபர்களுக்கும் தண்டனை பெற்றுத்தருவதில் உறுதியாய் உள்ளார். இனிவரும் காலங்களில் அடுத்தடுத்த கேஸ்களுக்கும் சிபிஐக்கு தன் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறினார். இத்தீர்ப்பு பற்றி ப்ரஸ் மீட்டிங்கில் பேசியபோது " இது என் தனிபட்ட போராட்டமல்ல. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பல பெண்களுக்கான போர். பாலியல் வன்முறை திட்டமிடப்பட்டு எங்கள் சமுதாயப் பெண்கள் மீது நடத்தப்பட்டது. என்னுடைய இப்போராட்டம் பாதிப்படைந்த பல பெண்களுக்கு சக்தியை கொடுக்கும். அவர்கள் தண்டிக்கப்படுவதால் மட்டுமே வெறுப்பு ஓய்ந்து விடாது. ஆனால் நீதி இன்னும் சாகவில்லை என்பதற்கான சிறிய அறிகுறிதான் இது..!" என்றார். உண்மை தான் ! எவ்வித பணபலமும் இன்றி, எந்த ஒரு அதிகார வர்க்கத்தின் ஆதரவும் இன்றி தனித்து போராடி தனக்காக நீதியை தனியாளாய் நிலைநாட்டிய பில்கிஸ்ஸின் செயல் ஒவ்வொரு பாதிப்படைந்தவர்களுக்கும் ஒரு முன்மாதிரி தான்.
மோடிக்கு பெரும் தலைவலி என்றே தான் எண்ணத்தோன்றும் சகோதரி பில்கிஸ் அவர்கள் தரும் பதிலடிகளைப்பார்த்தால்! முதலமைச்சர்க்கான தேர்தல் சமயத்தில், "நீங்கள் ஓட்டுப்போடுவீர்களா?" என கேட்கப்பட்ட போது, "நான் ஏன் ஓட்டளிக்க வேண்டும் ?, பல கொடுமைகள் எனக்கு நிகழ்த்தியதோடு என் குடும்பத்தாரை என் கண் முன்னே கொடூரமாய் கொன்றார்கள். இவற்றுக்கு பின்னாவது குஜராத் அரசு என்னை பாதுகாத்திருக்க வேண்டும், எனக்கு நீதி பெற்றுத் தந்திருக்க வேண்டும். இவையெல்லாம் செய்ய வக்கற்ற அரசு இயந்திரத்திற்காகவா நான் ஓட்டளிக்க வேண்டும். முடியாது. நான் விரும்பவுமில்லை" என்றார் காரமாக.
இப்படியான விரக்தியாளர்களை தான் இந்த மதவாத அரசு உருவாக்கியுள்ளது. உங்களுக்கு நீதி கிடைக்க வேண்டி மோடியின் ஆதரவுக்காக அவரை சென்று சந்திப்பீர்களா என கேட்டபோது " தன் சொந்த மாநிலத்தில் எனக்கு நீதியும் பாதுகாப்பும் தர முடியாத நபரை நான் எப்போதும் சந்திக்க விரும்பவில்லை. நான் அவரை நம்பப்போவதுமில்லை " என்ற அவரின் ஒவ்வொரு சொல்லும் மோடியின் ஒவ்வொரு பிம்பத்தையும் உடைத்துக்கொண்டே வந்தன.
இன்று இவரை நாம் மறந்திருக்கலாம், இவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மக்கள் புறக்கணித்திருக்கலாம். நமக்கொரு துன்பம் நிகழாத வரை அத்துன்பத்தின் ரணங்கள் நமக்குப் புரியப்போவதில்லை! ஆனால் அவருக்கான அநீதிகளை ஒதுக்கிவிட்டு கொடூரனை ஆட்சிகட்டிலில் அமர வைக்க துடித்த ஒவ்வொரு சாமானியனும் குற்றவாளிகளே தான். வெட்கபட வேண்டும் நாம்...
மூன்று பெண்குழந்தை ஒரு ஆண் குழந்தையுடன் 20க்கும் மேற்பட்ட முறை வீடும் ஊரும் மாறி மாறி அலைகழிக்கப்பட்டும், அவ்வபோது போலிஸ் நெருக்கடிகளோடும் , இதற்கு சாவே மேலோ என்ற சிந்தனையில் அடிக்கடி வயப்பட்டும் கூட "வாழ்வதற்காய் போராட வேண்டுமெனில் போராடத் தயங்கமாட்டேன்" என திடமாய் வாழ்நாளை கழித்துக்கொண்டிருக்கிறார்... 14 வருடத்தில் ஏதேதோ நடந்துவிட்டது! குற்றவாளிகளெல்லாம் சுதந்திரமாய்... பில்கிஸ் மட்டும் கேள்விக்குறியாய்......... டெல்லி மாணவி நிர்பயா இறந்ததே நலம் தான்! இந்தியாவில் நீதி வேண்டுவோர் தான் குற்றவாளிகள்.
சகோதரி பில்கிஸ்ஸின் நல்வாழ்வுக்காய் பிரார்த்திப்போம்.

Wednesday, June 29, 2022

இதுதான் இன்றைய அராஜகம்


ஐயா, இந்த பத்திரிக்கைக்காரன் இரண்டு சமூகங்களுக்கு இடையே பகைமை உணர்ச்சியை தூண்டக் கூடிய விதத்தில்  சில பதிவுகள், ட்வீட்டுகள் ஆகியவற்றை செய்தான். வீடியோவை வேறு பகிர்ந்தான்.

ஆமாம் ஐயா, உங்கள் வெறுப்புப் பேச்சு வீடியோவைத்தான்.

இதுதான் கார்ட்டூன் சொல்லும் செய்தி. 

இன்றைய நிலைமையும் இதுதான்.

குஜராத் கலவரக் குற்றவாளிகளை அம்பலப்படுத்திய டீஸ்ட்டா செதல்வாட், எம்.பி,ஸ்ரீகுமார், ஐ.பி,எஸ், பொய் செய்திகளை அம்பலப்படுத்தும் ஆல்ட் நியூஸ் முகமது சுபைர் ஆகியோரின் கைதுகள் சொல்லும் செய்தியும் இதுதான்.

பாசிஸம் என்பதைத்தாண்டிய  அராஜகம் இதுதான்.

Monday, April 25, 2022

ஐடியா இல்லாத 😝😝😝😝😝

 போரிஸ் ஜான்சன் கண்ணில் குடிசைப் பகுதிகள் தெரியக் கூடாது என்பதற்காக வெள்ளைத் துணி கட்டிய கேவலம் பற்றி நேற்று எழுதியிருந்த பதிவை படித்து ஒரு தோழர் ஒரு மீமை அனுப்பியிருந்தார்.

 நான் ரசித்து சிரித்தது போல நீங்களும் ரசித்து சிரிக்க பகிர்ந்து கொண்டுள்ளேன்.





Sunday, April 24, 2022

வெள்ளைத்துணி முன்னேற்றம்

 


கொரோனாவுக்கு முன்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குஜராத் வந்த போது அவர் கண்ணில் படக் கூடாது என்பதற்காக குடிசைப் பகுதிகளை சுவர் கட்டி மறைத்தார்கள்.

இப்போது இங்கிலாந்து பிரதம மந்திரி போரீஸ் ஜான்சன் வந்த போது வெள்ளைத்துணி கட்டி மறைத்துள்ளார்கள்.

சுவர் கட்ட இப்போது காசு கிடையாதா?

அல்லது

எதற்கு தேவையில்லாமல் சுவருக்கு செலவு செய்ய வேண்டுமென்று வெள்ளைத்துணி கட்டினார்களா?

கடந்த முறை ட்ரம்பிற்காக நூறு கோடி செலவு செய்தார்கள். அதிலே பூ அலங்காரத்துக்காக மட்டும் செய்த ஊதாரித்தனம் மூனே முக்கால் கோடி.

அதையெல்லாம் மக்களுக்காக செலவு செய்திருந்தால் இப்போது வெள்ளைத்துணி போட்டு மறைக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

வெள்ளைத்துணி மறைத்தது குடிசைகளை மட்டுமல்ல . . .

குஜராத் மாடல் என்று ஊதிப் பெருக்கப்பட்ட ஒரு பிம்பம் என்ற உண்மையையும் கூட.


Thursday, April 15, 2021

குஜராத்தே இப்படின்னா உ.பி

 


 போட்டோ ஷாப் பொய்களால் இந்திய மக்களை ஏமாற்றி மோடியை பிரதமராக்கிய குஜராத் மாடலின் உண்மை முகம் பற்றிய கட்டுரையை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 அதைப் படித்தவுடன் எனக்கு தோன்றிய சிந்தனையைத்தான் தலைப்பாக வைத்துள்ளேன்.

 வளர்ச்சியின் உச்ச கட்டத்தை அடைந்ததாக சொல்லப்பட்ட குஜராத்திலேயே இப்படி என்றால் மிகவும் பின் தங்கிய உ.பி யின் நிலைமை எப்படி இருக்கும்?

 


 

Hide original message

*குஜராத்தின் துயரம்...*

 

_(கொரோனாவால் திணறும் மோடியின் மாடல்)_

 

குஜராத்தின் துயரம் வெவ்வேறுதருணங்களில் வெவ்வேறு நிலைமைகளை வெளிப்படுத்துகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் மதக்கலவரங்கள் எனும் துயரம் எனில் இன்று கோவிட் 19 பெருந்தொற்றின் இரண்டாவது அலை மக்களை அலைக்கழித்து கொண்டுள்ளது

 

சிறுபான்மை மக்களுக்கு எதிராக பெரும்பான்மை மத மக்களைதூண்டியவர்கள் இன்று அதே பெரும்பான்மை மக்களை காப்பாற்ற தவறியுள்ளனர். பொருளாதார ரீதியாகஅதிரும் குஜராத்தைஉருவாக்கியவர்கள்மருத்துவப் பாதுகாப்பு குஜராத்தைஉருவாக்கத் தவறிவிட்டனர்

 

பெரிய சிலைகளையும் விளையாட்டு களங்களையும் உருவாக்கி தனது பெயரையும் கூட்டு கொள்ளைக்காரர்களின் பெயரையும் சூட்டிக்கொண்டவர்கள் சிறந்த மருத்துவமனைகளை கட்ட தவறிவிட்டனர்

 

விளைவு

 

குஜராத் மக்கள் பெரும் துயரத்தில் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

 

உயர் நீதிமன்றத்தின் கண்டனம்

 

உயர் நீதிமன்றம் “Suo moto” எனப்படும் தானாக முன்வந்து வழக்கை விசாரிக்கும் அளவுக்கு குஜராத்தில் பெருந்தொற்று மோசமான நிலைமையை அடைந்துள்ளது. ஆனால் பாஜக மாநில அரசாங்கமோ நிலைமையின் கடுமைத் தன்மையை உணர்ந்ததாக தெரியவில்லை

 

பல உண்மை விவரங்களை மக்களிடமிருந்தும் நீதிமன்றத்திடமிருந்தும் மறைக்க முயல்கிறது. அரசாங்கத்தின் அட்வகேட் ஜெனரல் நீதிமன்றத்தில் முன்வைத்த வாதங்கள் மாநில அரசாங்கத்தின் அக்கறையின்மை மற்றும் திறமையின்மையை வெளிப்படுத்துகிறது

 

கோவிட் பரிசோதனை முடிவு வருவதற்கு ஏன்3 முதல் 5 நாட்கள் ஆகின்றன?” எனும் நீதிமன்றத்தின் கேள்விக்கு அதிக மாதிரிகள் பரிசோதனைக்கு வருவதாகவும் அதனால் தாமதம் எனவும் கூறுகிறார் அட்வகேட் ஜெனரல்

 

ஆனால், நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை

 

தொற்று குறைவாக இருந்த காலத்திலேயே ஏன் பரிசோதனை மையங்களை அதிகப்படுத்தவில்லை? இரண்டாவது அலை சாத்தியம் உண்டு எனும் எச்சரிக்கைகளை நீங்கள் உள்வாங்கவில்லையா என நீதிபதிகளின் கேள்விக்கு அரசிடம் பதில் இல்லை!

 

கோவிட் நோயாளிகளுக்கான படுக்கைகளின் எண்ணிக்கை ஏன் குறைவாக உள்ளது? எனும் கேள்விக்கு மக்கள் சில மருத்துவமனைகளை மட்டுமே அணுகுகிறார்கள் எனவும் போதுமான படுக்கைகள் உள்ளன எனவும் அரசு வழக்கறிஞர் கூறினார்

 

ஆனால், நீதிபதிகள் அதனை ஏற்கவில்லை

 

போதுமான படுக்கைகள் உள்ளன எனில்ஏன் நீண்ட வரிசைகளில் ஆம்புலன்ஸ்கள் அணிவகுத்து நிற்கின்றன? என நீதிபதிகள் எதிர் கேள்வி கேட்டனர்

 

.“நீங்கள் எல்லாமே நன்றாக உள்ளன என கூறுகிறீர்கள்! ஆனால் எங்களிடம் உள்ள விவரங்கள்நேர்மாறான செய்திகளை வெளிப்படுத்துகின்றனஎன நீதிபதிகள் கூறினர்

 

அடுத்து அவர்கள் கூறியதுதான் குஜராத் பாஜக அரசாங்கத்தின் மீதான மிகப்பெரிய கண்டனம் ஆகும்.

 

மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டனர். கடவுளின் கருணைதான் தங்களை காப்பாற்ற இயலும் எனும் நிலையில் மக்கள் உள்ளனர்.”இதைவிட பெரிய கண்டனம் ஏதாவது இருக்க முடியுமா

 

நீதிமன்றத்தின் கண்டனங்கள் கோபத்தில் எழுந்தவை அல்ல

 

குஜராத்தின் உண்மை நிலைமை அதுதான்

 

வழக்கம் போல இந்த செய்திகளை கட்டுப்படுத்த குஜராத் அரசாங்கம் முயல்கிறது; ஜால்ரா போடும் ஊடகங்களும் ஒத்துழைக்கின்றன. ஏனெனில் பிரதமர் ஆண்ட மாநிலம் அல்லவா!

 

குஜராத் மக்களின் அவலங்கள்

 

குஜராத் மக்கள் படும் துன்பங்கள் குறித்து பத்திரிக்கையாளர் தீபல் திரிவேதி கீழ்கண்டவாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்:

 

குஜராத் மக்கள் படுக்கைகளுக்கும்/ஆக்சிஜனுக்கும்/ரெம்டெஸ்வீர் மருந்துக்கும் கெஞ்சிக் கொண்டுள்ளனர்

 

உலகிலேயே மிகப்பெரிய மைதானங்களும் சிலைகளும் நமக்கு தேவை இல்லை. நமது அடிப்படை உரிமையான மருத்துவ சிகிச்சையேநமக்கு தேவை

 

இப்பொழுதெல்லாம் குஜராத்தில்அதிர்வதற்குஎதுவுமே இல்லை.” 

 

அவர் சில வார்த்தைகளை சேர்த்து இருக்கலாம்

 

குஜராத்தில் அதிர்வதற்கு எதுவுமே இல்லை. மக்களின் ஓலமும் மரணங்களும் தவிர!”

 

இன்னொரு டுவிட்டர் பதிவில் தீபல் திரிவேதி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:“எனது மாநிலம் குஜராத் பற்றி எனக்கு எப்பொழுதுமே பெருமை உண்டு. ஆனால், நான் இப்பொழுது என்ன நினைக்கிறேன் என்றால், குஜராத்தில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் கட்டியதற்கு பதிலாக அல்லது ஒற்றுமை சிலைக்கு செலவழித்ததற்கு பதிலாக, அரசு மருத்துவமனைகளை கட்டியிருக்கலாம்

 

பவ நகரில் உள்ளமாநிலத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் உள்ளநிலையை பாருங்கள்.குஜராத் மாடல் என்பது   பெருமைபடக்கூடிய ஒன்று அல்ல!”

 

குஜராத் மாடல் என்பது மக்களுக்கானது அல்ல

 

அது அதானி/ அம்பானிகளுக்கானது என்பதை இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் பல ஆண்டுகளாக தொடர்ந்து கூறிவருகின்றனர். குஜராத் மக்கள் இப்பொழுதாவது அதனை உணர்ந்தால்அவர்களுக்கும் தேசத்துக்கும் நல்லதுதான்!

 

குஜராத் நிலைமை குறித்து சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

 

குஜராத்தின் பெருந்தொற்று உண்மை நிலைமை மகாராஷ்டிரா அளவுக்கு மோசமாக உள்ளது.ஒவ்வொரு இரண்டாவது வீட்டிலும் கோவிட்நோயாளி உள்ளார். மக்களிடம் உண்மைநிலவரங்களை தெரிவித்து அவர்களை காப்பாற்றுவதற்கு பதிலாக அரசாங்கம் உண்மைகளை மறைப்பதற்கே முயல்கிறது

 

மருத்துவமனைகள் முன்பு நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளுடன் அணிவகுத்து நிற்கின்றன. மருத்துவமனைகளில் தரையில்நோயாளிகள் படுக்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

சில இடங்களில் மருத்துவமனையின் வெளியேநோயாளிகள் ஆக்சிஜன்சிலிண்டருடன் உள்ள கொடூரமான நிலைகளும் புகைப்படங்கள் வழியாக வெளியிடப்பட்டுள்ளன. இந்திரா பானர்ஜிஎனும் ஒரு பேராசிரியை! இவர்குஜராத் மத்தியபல்கலைக்கழகத்தில்நானோ அறிவியல்பிரிவின் தலைவர்மற்றும் மிகப்பெரிய ஆராய்ச்சியாளர். பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின்கவுரவ விரிவுரையாளர்

 

அவருக்கு தொற்று நுரையீரலை பாதித்துமூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஆம்புலன்சில் அவரை ஒவ்வொரு மருத்துவமனையாக கொண்டு சென்றனர். எங்குமே வென்ட்டிலேட்டர் கிடைக்கவில்லை

 

இறுதியில் ஒரு மருத்துவமனையில் அடுத்த ஒரு மணிநேரத்தில் வென்ட்டிலேட்டர் கிடைக்கும் என கூறியதால் வெளியே ஆம்புலன்சில் காத்துகொண்டிருந்தார்.  வென்ட்டிலேட்டர் தயாராக உள்ளது என தகவல் வந்தது

 

அவரை மருத்துவமனைக்குள் கொண்டு செல்வதற்காக ஆம்புலன்சை திறந்துபார்த்த பொழுது அவர் உயிர் பிரிந்திருந்தது. இப்படி உயிரிழந்தவர்கள் ஏராளம்!

 

ரெம்டெசிவீர் எனும் மருந்து குஜராத்தில் கடும் தட்டுப்பாடில் உள்ளது. இந்த மருந்து உண்மையிலேயே கோவிட் பெருந்தொற்றை குணப்படுத்துகிறதா என்பதில் இரண்டு கருத்துகள் உள்ளன

 

எனினும் மக்கள் இந்த மருந்தை நம்புகின்றனர்

 

சுமார் ரூ.2000 விலை உள்ள இந்த மருந்து குஜராத் கள்ளச் சந்தையில் ரூ.25,000 முதல்ரூ.40,000 வரை விற்கப்படுகிறது

 

இந்த நிலையில் குஜராத் பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் 5000மருந்துகளை பாஜக அலுவலகத்தில் வைத்துக்கொண்டு தனக்கு வேண்டியவர்களுக்கு விற்றுக் கொண்டுள்ளார்.

 

இந்த மருந்தை மருந்து கடைகளில் மட்டுமே அதுவும் மருத்துவர்களின் சீட்டு இல்லாமல் விற்கக் கூடாது என்பது விதிமுறை! ஆனால், பாஜக என்றைக்கு சட்டம் பற்றியோஅல்லது விதிமுறைகள் பற்றியோ கவலைப்பட்டுள்ளது?

 

ஓயாமல் எரியும் சுடுகாடுகள்!

 

திருச்சியில் காவிரிக்கரையில் உள்ள ஒரு சுடுகாடுக்கு ஓயாமாரி சுடுகாடு என பெயர்! ஏனெனில் பிணங்கள் இங்கு ஓயாமல் எரியூட்டப்படுவதால் இந்த பெயர் என கூறப்படுவது உண்டு

 

குஜராத்தில் பல சுடுகாடுகள் இன்று 24 மணிநேரமும்ஓயாமாரி சுடுகாடுகளாக செயல்படுகின்றன. அதுமட்டுமல்ல! ஒரு நாளைக்கும் மேலாக உயிரற்ற உடலுடன் காத்திருக்கும் உறவினர்கள் பொறுமை இழந்து பொதுவெளியில் எரியூட்டுகின்றனர் எனும் அதிர்ச்சியான செய்திகளும் பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளன

 

நோயாளி இறந்த பின்னரும் 8 முதல் 24 மணிநேரம் வரை உடல்கள் தரப்படுவதில்லை என உறவினர்கள் புகார் கூறுகின்றனர்

 

ஒரு காணொளியில் தனது உறவினரின் உடல் மூன்று நாட்களாக தரப்படவில்லை என ஒருவர்கதறுகிறார். உடல் கிடைத்த பின்னர் எரியூட்டுவதற்கு மேலும் பல மணிநேரம் காத்துகிடக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

 

 

சூரத் நகரில் மூன்று மின்தகனங்கள் உள்ளன.ஒரு நாளைக்கு 100 உடல்கள் இங்கு எரியூட்டப்படுகின்றன. கோவிட் மரணம் எது? ஏனைய மரணம்எது? என வகைப்படுத்த நேரம் இல்லை என சுடுகாடு ஊழியர்கள் கூறுகின்றனர்

 

ஒரு சுடுகாட்டில் தொடர் செயல்பாடுகள் காரணமாக சிம்னி எனப்படும் புகைபோக்கி பாதிக்கப்பட்டு, வேறு ஒன்றைஅவசரமாக நிர்மாணித்ததாக நகராட்சி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இன்னொரு தகனத்தில் எரியூட்டும் அடுப்பில் உள்ள இரும்பு பாளங்கள் தொடர் எரியூட்டல் காரணமாக உருகிவிட்டன எனவும்எனவே, செயல்படாமல் உள்ளன எனவும் ஊழியர்கள் கூறியதாகஇந்தியா டுடேபத்திரிக்கை தெரிவிக்கிறது

 

இதே நிலைமைதான் அகமதாபாத்நகரிலும் உள்ளன

 

ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான உடல்கள் எரியூட்டப்படுகின்றன. ஆனால்குஜராத் பாஜக அரசாங்கமோ 40 முதல் 50 வரைதான் உயிரிழப்புகள் என கணக்கு சொல்கிறது

 

ஜிக்னேஷ் மேவானியின் குற்றச்சாட்டு உண்மை என்பது புலனாகிறது.

 

குஜராத் மாடல் பொருளாதார வளர்ச்சி  என்பது முற்றிலும் கார்ப்பரேட் நலனை மட்டுமே அடிப்படையாக கொண்டது. அதிலும் குறிப்பாக அம்பானி/அதானி/ கர்ஷன் பாய் பட்டேல் (நிர்மா குழுமம்)/ பங்கஜ் பட்டேல் (சன் ஃபார்மா) ஆகிய விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரின் பகற் கொள்ளைக்கு வழிவகுத்ததுதான் குஜராத் மாடல்

 

இவர்களில் பலர் குஜராத் கலவரங்களில் மோடிக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள்! சிலர் வாய்மூடி மவுனிகளாக இருந்தவர்கள். இந்த குஜராத் மாடலில் மக்கள் நலன் சார்ந்த எந்த சமூக முன்னேற்றமும் நிகழவில்லை

 

அதில் முக்கியமான கொடூரம் என்பதுமருத்துவ கட்டமைப்புகள் என்பது அறவே புறக்கணிக்கப்பட்டன

 

கோவிட் 19 முதல் அலை இதனைஅம்பலப்படுத்தியது. இப்பொழுது இரண்டாவது அலை இன்னும் கூர்மையாக இதனை அம்பலப்படுத்தியுள்ளது

 

மாநில மற்றும் மத்திய பாஜக அரசாங்கங்கள் வேகமாக செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவராவிட்டால், குஜராத் மக்கள்மிகப்பெரிய துயரங்களை சந்திக்கும் அவலம் உருவாகும் ஆபத்து உள்ளது.

 

கட்டுரையாளர் :  _.அன்வர் உசேன்/ தீக்கதிர்_