Showing posts with label நீதிமன்றம். Show all posts
Showing posts with label நீதிமன்றம். Show all posts

Tuesday, December 17, 2024

தடைகளை தகர்த்து கிருஷ்ணாவுக்கு விருது

 


சனாதனக் கூட்டம் டி.எம்.கிருஷ்ணாவிற்கு சங்கீத கலாநிதி விருது வழங்கப் படக் கூடாது என்று எத்தனையோ சதிகள் செய்து பார்த்தது. கர்னாடக சங்கீத உலகைத் தாண்டி யாருமே அறியாத ரஞ்சனி-காயத்ரி  சகோதரிகள் முகநூல் மூலம் கலகம் செய்து மூக்குடைபட்டார்கள். மீ டூ குற்றச்சாட்டு காரணமாக மியூசிக் அகாடமியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட சித்ர வீணா ரவி கிரண் தான் முன்பு பெற்றிருந்த சங்கீத கலாநிதி விருதை திரும்பக் கொடுத்து சர்ச்சையாக்க முனைந்தார். அவருடைய லீலைகள்தான் வெளியாகி அசிங்கப்பட்டார்.

அடுத்து உயர் நீதிமன்றத்தில் திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் முறையில் உள்ள ஒருவரை பிடித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட வைத்து தடை உத்தரவு வாங்கினார்கள்.

ஆனால் உயர் நீதிமன்ற பெஞ்ச் அந்த தடையை நீக்கி விட்டது. எம்.எஸ்.சுப்புலட்சுமி, தன் பெயரில் விருதோ அல்லது பண முடிப்போ கொடுக்கக் கூடாது என்று தன் உயிலில் எதுவும் சொல்லவில்லை என்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் பெயரில் சங்கீத கலாநிதி விருது பெறுபவருக்கு 2005 ம் ஆண்டு முதல் ஒரு லட்ச ரூபாய் பண முடிப்பு தரப்படுகிறது. இத்தனை நாள் தூங்கிக் கொண்டிருந்தாயா என்று கேட்டு அந்த பேரன் வகையறாவை துரத்தி விட்டார்கள். இத்தீர்ப்பு வந்தது வெள்ளிக்கிழமை காலை.

மத்தியரசின் தலைமை வழக்கறிஞரே வழக்கு நடத்தப் போகிறார். அதனால் அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வெள்ளிக்கிழமை மதியமே உச்ச நீதிமன்றத்தில் முறையிட அப்படி ஒன்றும் இது தலை போகிற அவசர வழக்காக எடுக்கும் அளவிற்கு வொர்த்தில்லை என்று அங்கேயும் துரத்தி விட்டார்கள்.

 

சனாதனக் கூட்டம் முட்டுச்சந்தில் முழித்துக் கொண்டிருக்க டி.எம்.கிருஷ்ணா, கம்பீரமாக சங்கீத கலாநிதி விருதை ஞாயிறு அன்று பெற்றுக் கொண்டார். இதற்கு முன்பாக சங்கீத கலாநிதி விருது பெற்ற திருமதி பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் திருமதி சௌம்யா ஆகியோர் மேடையில் இருந்ததே சங்கீத உலகின் ஆதரவுக்கான சான்று.

 

சனாதனக் கூட்டம் ஏன் டி.எம்.கிருஷ்ணாவை எதிர்க்கிறது?

 

முன்பு எழுதிய  “ஒரு விருதும் போலிப் புனிதங்களும்ன்” என்ற பதிவை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

 

ஒரு விருதும் போலிப்புனிதங்களும்

 


கர்னாடக சங்கீத அளவில் ஒரு குட்டிக்கலகம் நடந்து கொண்டிருக்கிறது. STORM IN A CUP என்று ஆங்கிலத்தில் சொல்வது போல ஒரு கோப்பைக்குள் வீசும் சூறாவளி என்று கூட சொல்ல முடியாத அளவிற்கு ஒரு குட்டிக் கலகம்.

சங்கீத வித்வத் சபை என்று அழைக்கப்படுகிற மியூசிக் அகாடமி இந்த ஆண்டு அதன் சங்கீத கலாநிதி விருதை இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவிற்கு அறிவித்திருப்பதற்கு ஒரு கோஷ்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள் தாங்கள் மியூசிக் அகாடமியில் பாட மாட்டோம் என்று அறிவித்துள்ளார்கள். முகநூலிலும் பதிவிட்டுள்ளனர்.

ME TOO புகாருக்கு உள்ளானதால் கச்சேரி நிகழ்த்த அனுமதி மறுக்கப்பட்ட ரவிகிரண் அவருக்கு அளிக்கப்பட்ட சங்கீத கலாநிதி விருதை திரும்பக் கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

பிற்போக்குச் சிந்தனைகளை கதாகாலட்சேபம் வழியாக விதைக்கும் விசாகா ஹரி, துஷ்யந்த் ஸ்ரீதர் போன்றோரும் எதிர்த்துள்ளனர். அபஸ்வரம் ராம்ஜி நக்கலடித்து ஸ்லோ பாய்சன் கொடுக்கிறார்.

இத்தனை பேரும் எதிர்க்கும் அளவிற்கு டி.எம்.கிருஷ்ணா விருதுக்கு தகுதியற்ற மொக்கைப் பாடகரா? இசைத்திறன் கொஞ்சமும் இல்லாமல் ரெகமெண்டேஷனில் விருது பெறுகிறாரா?

இல்லை.
நிச்சயமாக இல்லை.

இவர்களின் எதிர்ப்பெல்லாம் இசையால் அல்ல, அதையும் தாண்டியது.

கர்னாடக சங்கீதத்தின் புனிதத்தை சிறுமைப்படுத்தியவராம். 
அதென்ன சிறுமைப்படுத்துதல்?
சபா மேடைகளைத் தாண்டி மீனவக் குப்பங்களில் இசை நிகழ்ச்சி நடத்தியது, மற்ற மதக் கடவுள்களைப் பற்றி பாடியது. 

ஐயப்பனைப் பற்றி கே.ஜே.யேசுதாஸ் பாடலாம், காசி விஸ்வநாதர் கோயிலில் பிஸ்மில்லாகான்  ஷெனாய் வாசிக்கலாம். ஆனால் டி.எம்.கிருஷ்ணா வேற்று மதக் கடவுளை பாடினால் தவறாம். 

கர்னாடக சங்கீதம் புனிதமானதா என்ற கேள்விக்கு கே.பாலச்சந்தர், அப்படி ஒரு புடலங்காயும் கிடையாது என்று முப்பத்தி ஐந்து வருடம் முன்பே உன்னால் முடியும் தம்பி படத்தில் சொல்லி விட்டார்.

"என்னமோ ராகம், என்னென்னமோ தாளம், தலையை ஆட்டும் புரியாத கூட்டம்"
என்ற வரியை நிலைக்க வைக்கும் முயல்பவர்கள் இவர்கள்.

"கவலை ஏதுமில்லை, ரசிக்கும் மேட்டுக்குடி, சேரிக்கும் சேர வேண்டும், அதுக்கும் பாட்டு படி"
என்பதற்கு பதற்றமாகி விடுகிறார்கள்.

புனிதத்தை சிறுமைப்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டின் பின்னணி இதுதான்.

தியாகராஜரை விமர்சித்தார். எம்.எஸ்.சுப்புலட்சுமியை விமர்சித்தார் என்பது அடுத்த குற்றச்சாட்டு.

தியாகராஜரைப் பற்றி என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது. ஆனால் தியாகராஜரைப் போல அன்றாட உணவுக்கு வீடு வீடாக உஞ்சவிருத்தி சென்று வசூலிக்கும் நிலையில் எந்த இசைக்கலைஞரும் இல்லை. "நிதி சால சுகமா?" என்ற பாடலை பாட கூசுபவர்கள்தான் இன்றைய வித்வான் சிரோண்மணிகள்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி அதிகமாக மார்க்கெட்டிங் உத்திகளால் முன்னிறுத்தப்பட்டவர் என்பதில் உண்மையில்லாமல் இல்லை. அதை அவர் செய்யவில்லை. செய்தவர் அவரது தந்திரக்கார கணவரான சதாசிவம். எங்கள் தோழர் ச.சுப்பாராவ் தமிழாக்கம் செய்த நூலை படியுங்கள் புரியும்.

ர,கா சகோதரிகளின் முகநூல் பதிவு அவர்களின் உண்மையான எரிச்சலை அம்பலப்படுத்தி விட்டது.

ஒரு சமுதாயத்தை அழித்தொழிப்பேன் என்று சொன்ன, அந்த சமுதாயப் பெண்களை இழிவு படுத்திய பெரியார் என்றழைக்கப்படும் ஈ.வெ.ரா வை இவர் பாராட்டுகிறார்.

பெரியார் மீது சொல்லப்பட்ட குறிப்பிட்ட இந்த இரண்டு குற்றச்சாட்டுக்களும் அபாண்டமானவை. அனந்தகிருஷ்ண்ன் பட்சிராஜன் என்ற நாஜிப் பெரியவர் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் அவதூறு இது. 

மீ டூ சமயத்தில் பட்ட அசிங்கத்திற்கு இப்போது எதிர்வினையாற்றுகிறார் சபலப் பேர்வழி ரவி கிரண். 

டி.எம்.கிருஷ்ணா மீது இவர்களுக்கெல்லாம் வேறென்ன பிரச்சினை?

கலை, கலைக்கு என்ற நிலைக்கு பதிலாக கலை யாவும் மக்களுக்கே என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்.

கர்னாடக இசை உலகில் நிலவிய பேதங்களை தன் நூல்கள் வாயிலாக அம்பலப்படுத்தியுள்ளார். அதிலே செபாஸ்டியனும் சகோதரர்களும் என்ற நூல் மிருதங்கம் உருவாக்கும் கலைஞர்களைப் பற்றியது. அது பல உண்மைகளை சொன்னது.

மத நல்லிணக்கம், மதச் சார்பின்மை ஆகியவற்றை தொடர்ந்து வலியுறுத்துபவர்.

மிக முக்கியமாக 

குடியுரைமைச் சட்டத்திற்கு எதிரான டெல்லி ஷாகின்பாத் போராட்டத்தில் கலந்து கொண்டவர். போராட்ட கீதம் என்றழைக்கப்பட்ட "ஹம் தேகேங்கே (நாம் காண்போமே" பாடலை பல மொழிகளில் பாடியவர், 

இது ஒன்று போதாதா? 

ரஞ்சனி காயத்ரி சகோதரிகளுக்கு மியுசிக் அகாடமி தலைவர் என்,முரளி கொடுத்த பதில் "உங்களுக்கு உள் நோக்கம் உள்ளது" என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆதிக்க சக்திகளின் குரல் இச்சகோதரிகள் வாயிலாக வெளிப்பட்டுள்ளது. அவர்களைப் பாராட்டுபவர்கள் எல்லோரும் அதே சிந்தனை கொண்டவர்கள்தான். 

இப்போது டி.எம்.கிருஷ்ணாவிற்கு எதிராக பொங்குகின்ற கர்னாடக இசை வித்வான் சிரோண்மணிகள் யாராவது மகள் ஆப்பிரிக்கரை திருமணம் செய்து கொண்டதற்காக  சுதா ரகுநாதன் ஆபாசமாக வசை பாடப்பட்ட போது, அவருக்கு மேடைகள் மறுக்கப்பட வேண்டும் என்று அழுத்தம் அளிக்கப்பட்டபோது அவருக்கு ஆதரவாக வாய் திறந்தார்களா?

மேட்டிமைச் சிந்தனைக்கு புனிதப் போர்வை போர்த்தும் போலிகள்தான் இவர்கள்.. . .

சங்கீத கலாநிதி டி.எம்.கிருஷ்ணாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

Monday, December 2, 2024

எச்.ராசா- ஜட்ஜய்யாவுக்கு ரொம்பத்தான் பெருந்தன்மை

 


தமிழ்நாட்டு பாஜகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை ஆட்டுக்காரன் திரும்பி வந்ததால் நேற்று இழந்த எச்.ராசாவுக்கு இன்று இன்னொரு இழப்பு.

தந்தை பெரியார் சிலையை உடைப்பேன் என்பதற்காகவும் எம்.பி கனிமொழியை அவதூறாக பேசியதற்கும் ஒரு வருடம் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. பெயில் வாங்கியதால் ஜெயில் செல்லவில்லை.

எச்.ராசா மீது இன்னொரு வழக்கும் உள்ளது.

“ஐகோர்ட்டாவது, ம….வது”  என்ற வழக்கில் மட்டும் தீர்ப்பு இதுவரை வரவில்லை. நம்மை அசிங்கப்படுத்திய குற்றத்திற்கு நாமே தண்டனை தருவதா என்ற பெருந்தன்மை போல  . .

பிகு: ஏதோ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றது போல சங்கிகள் ராசாவின் பொறுக்கித்தனத்திற்கு தியாகி பில்ட் அப் கொடுக்கறாங்களே, அதுதான் எரிச்சலாக இருக்கிறது.

 

Tuesday, October 17, 2023

குற்றவாளிகளை பாதுகாக்க விசாரணை?

 


       

புது டெல்லி நோய்டாவிற்குப் பக்கத்தில்  நித்தாரி என்றொரு சின்ன ஊர். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தது. நோய்டாவே உத்தரப்பிரதேசம்தான்

 பல வருடங்களுக்கு முன்பு அந்த ஊரில் நடந்த ஒரு சம்பவம் இந்தியாவையே அதிர வைத்தது.

 அந்த ஊரில் உள்ள பெண் குழந்தைகள், இளம் பெண்கள் காணாமல் போகத் தொடங்கினார்கள். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஒரு பணக்காரன் வீட்டின் பின்னே இருந்த கழிவுநீர் வாய்க்காலில் ஒரு எலும்புக் கூடு கிடைக்கிறது. அது காணாமல் போன ஒரு சிறுமியுடையது என்று தெரிய வருகிறது.

 அந்த செல்வந்தன் வீட்டை சோதனை செய்கையில் மேலும் பல எலும்புக் கூடுகள். அந்த பணக்காரன் மோனிந்தர் சிங் பாந்தர் என்பவனும் அவனது வேலையாள் சுரேந்தர் கோலி என்பவனும் கைது செய்யப்படுகிறார்கள். வழக்கு சி.பி.ஐ வசம் செல்கிறது.

 கொலை, பாலியல் வன் கொடுமை, ஆள் கடத்தல் ஆகியவை மட்டும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் அல்ல. அதையும் தாண்டி அதிர்ச்சிகரமான ஒன்றும் உண்டு.

 ஆம். அது நர மாமிசம் சாப்பிட்டதான குற்றச்சாட்டு.

 கடத்தி கொல்லப்பட்டவர்களின் உடல்களை சமைத்து சாப்பிட்டிருக்கிறார்கள். இதனை அவர்களே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

 இருவருக்கும்  மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இவர்களின் கருணை மனுக்கலை பரிசீலிக்க அநியாயமான கால அவகாசம் எடுத்துக் கொண்டதாக சொல்லி உச்ச நீதிமன்றம் இவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து விடுகிறது.

 நேற்று அலகாபாத் உயர் நீதிமன்றம் இவர்கள் இருவரையும் விடுதலை செய்துள்ளது.

 ஏன்?

 இவர்கள்தான் குற்றவாளிகள் என்பதை ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்க விசாரணைக்குழு தவறியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களை பதிவு செய்ய தவறியுள்ளது. குற்றவாளி சுரேந்தர் கோலி சொன்னதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மற்ற சாட்சியங்களை சேகரிக்க தவறி விட்டது. விசாரணைக்குழு படு அலட்சியமாக இந்த வழக்கை கையாண்டுள்ளது. குற்றவாளிகளை விடுதலை செய்ய விசாரணைக்குழுவின் அலட்சியம்தான் காரணம்.

 மேலே சொன்னதுதான் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சுருக்கம்.

 சி.பி.ஐ ஒரு பொறுப்பான அமைப்பு என்று கருதப்படுகிறது.

 ஆனால் அதன் செயல்பாடு அதற்கு நேர் மாறாக இருந்துள்ளது. குற்றவாளிக்கு ஆதரவாக, குற்றவாளியை பாதுகாக்கவே அப்படி அலட்சியமாக செயல்பட்டதா என்று சந்தேகம் வருகிறது.

 பாதிக்கப்பட்டவர்கள் நிலை?

 அவர்கள் கிடக்கிறார்கள் கழுதைகள், அவர்கள் பாதிக்கப்பட்டதோ, அவர்களின் வலியோ எல்லாம் முக்கியமில்லை.  அவர்கள் ஒன்றும் இந்த அமைப்பில் செல்வாக்கானவர்கள் கிடையாதே! குற்றவாளிகள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்புண்டு. பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து என்ன கிடைக்கும்? ஐயா, எனக்கு நீதியே வேண்டாம் என்று வெறுத்து ஒதுங்கி போக வைக்குமளவுதானே இன்று நீதி பரிபாலணம் மாறி இருக்கிறது.

 சாதாரண நடவடிக்கை தாமதமானாலே குற்றவாளிகள் திமிர்த்தனத்தோடு அலைவார்கள்! இப்படி அலட்சியமாக அவர்களை பாதுகாப்பது போல நடந்து கொண்டால் இன்னும் மோசமாகத்தான் போவார்கள். குழந்தையை கொன்றவன் பிணையில் வெளி வந்து தன் அம்மாவையே கொன்றானே, அது போலத்தான் நடக்கும். நாமும் இப்படி கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும், அதனால் எந்த பயனும் இல்லை என்று தெரிந்து கொண்டே.

 நாட்டையே அதிர வைத்த ஒரு வழக்கில் அலட்சியம் காண்பித்த அந்த விசாரணை அதிகாரிகள், குற்றவாளிகளை விட கேடு கெட்டவர்கள். மொத்தத்தில் நீதி என்பதை கேலிக்கூத்தாக மாற்றி விட்டார்கள்.

 ஒரே ஒரு விஷயம்தான் ஆறுதல்.

 அலகாபாத் நீதிமன்றம் இக்குற்றவாளிகளை பெண்களின் பாதுகாவலர்கள், குழந்தைகளின் பாதுகாவர்கள் என்றெல்லாம் அடைமொழி கொடுத்து எந்த பதவியும் கொடுக்கச் சொல்லி பரிந்துரைக்கவில்லை. அப்படிப்பட்ட கேலிக் கூத்துகள் எல்லாம் நடக்கும் நாடுதானே நம் இந்திய நாடு! சாத்வி பிராக்யா சிங் தாகூர் ஞாபகம் இருக்கிறதல்லவா!

Friday, May 6, 2022

டைமிங் உதைக்குதே ஜட்ஜய்யா . .

 




ஜிக்னேஷ் மேவானி, குஜராத் மாநில சட்டப்பேரவை உறுப்பினரும் தலித் செயற்பாட்டாளாரும் ஆவார். மோடியை விமர்சித்து ட்வீட் போட்டதற்காக அஸ்ஸாம் போலீஸ் கைது செய்தது. பிணை கிடைத்தது, வேனில் செல்கையில் பெண் போலீஸை பாலியல் வன் கொடுமை செய்தார் என்று மீண்டும் கைது செய்து உயர்நீதி மன்றத்தில் அசிங்கப்பட்டு நின்றது அஸ்ஸாமின் பாஜக போலீஸ்.

அவர் வீடு திரும்பிய உடன் ஐந்து வருடத்துக்கு முந்தைய வழக்கில் அனுமதி இல்லாமல் பேரணி சென்றார் என்று மூன்று மாத சிறைத் தண்டனை கொடுத்துள்ளது ஒரு குஜராத் நீதிமன்றம்.

ஐந்து வருடமாக உறங்கிக் கொண்டிருந்த ஒரு வழக்கிற்கு அஸ்ஸாம் பாஜக ஆட்சி அசிங்கப்பட்ட பின்பு  தீர்ப்பு வருகிறது.

உபியில் பாஜகவிலிருந்து ஒரு அமைச்சர் கட்சி மாறிய பின்பு எட்டு வருஷத்துக்கு முந்தைய வழக்கில் அவர் கைது செய்யப்படுகிறார்,

A 2 அதிமுக சட்டமன்றக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக நியமிக்குமாறு கடிதம் கொடுத்த மூன்றாவது நாளில் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்தது.

ஏன் எல்.ஐ.சி யில் கூட பல வருடங்களாக இழுத்துக் கொண்டிருந்த ஒரு தற்காலிக ஊழியர்கள் வழக்கிற்குக் கூட  நிர்வாகத்திற்கு சாதகமான தீர்ப்பு, பங்கு விற்பனை தொடங்குவதற்கு ஒரு வார காலம் முன்பு வருகிறது.

இந்த டைமிங் எல்லாம் நெருடலா இருக்கே ஜட்ஜய்யா.

Saturday, September 25, 2021

பலவீனமானோர் படிக்காதீர் . . .

 தமிழகத்தை அதிர வைத்த ஒரு ஜாதி ஆணவக் கொலைக்கு ஒரு வழியாக தீர்ப்பு வந்துள்ளது. மரண தண்டனையும் ஆயுள் தண்டனையும் அந்த இரக்கமற்ற வெறியர்களுக்கு வழங்கப்பட்டது சரியே என்பதை கீழே உள்ள பதிவை படித்தால் நீங்களும் உணர்வீர்கள். கொடூரத்தை மூடி மறைக்க துணை நின்ற காக்கிச்சட்டைகளும் ஆயுள் தண்டனைப் பட்டியலில் இடம் பெற்றது மகிழ்ச்சியே. . .

இப்பதிவை முக நூலில் பகிர்ந்து கொண்ட தோழர் வெண்புறா சரவணனுக்கு நன்றி சொல்லி பகிர்ந்து கொள்கிறேன்.

உடுமலைப் பேட்டை சங்கர் வழக்கில் மாவட்ட நீதிமன்ற தீர்ப்பு உயர் நீதிமன்றத்தில் தடுமாறியது போல இந்த வழக்கில் நடக்காமல் தமிழ்நாட்டு அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.




சாதிவெறியர்களின் பிடியில்

சிக்கிச் சிதைந்த முருகேசன், கண்ணகி
ஆணவப் படுகொலையின் துயரக்கதை!
*
சாமிக்கண்ணு (முருகேசன் அப்பா) :

"பிரசரண்டு மகன் மருதுபாண்டியும் அவங்காளுங்க அஞ்சாறு பேரும் அன்னிக்கு (6.7.2003) காத்தால எங்கிட்ட வந்து, உம்மவன் முருகேசன் எங்கே? பத்தாயிரம் ரூவா கடன் வாங்கிட்டு இன்னிக்கு நாளைக்கின்னு இழுத்தடிக்கிறான். எனக்கு இன்னிக்கு அவசரமா பணம் வேணும்னான். பத்தாயிரம் வாங்குற அளவுக்கு எம்மவனுக்கு ஒரு செலவுமில்லியேன்னு எனக்கு குழப்பம். எங்கயோ போயிருக்கான். வந்ததும் உங்ககிட்டு கூட்டியாறேன்னேன். அவன் வர்றவரைக்கும் காத்துனிருக்க முடியாது, நீ இப்பவே அவனை தேடிப் பிடிச்சு கூட்டியான்னு சத்தம் போட்டானுங்க. அவங்கப் பேச்ச தட்டமுடியுமா? சரின்னுட்டு எம்மவ வூட்டுக்கு (வண்ணான்குடிகாடு - குப்பநத்தத்துல இருந்து 25 கி.மீ. தூரமிருக்கும்) போய் பாத்துட்டு அங்கயில்லன்னா எங்க சொந்தக்காரங்க ஊருங்களுக்கும் பையனோட படிச்ச வங்க வூடுங்களுக்கும் போய் தேடி இழுத்தாறலாம்னு கிளம்பிப் போயிட்டேன்"

வேல்முருகன் (முருகேசன் தம்பி) :

"அன்னிக்கு காலையில் ஒரு கல்யாணத்துக்குப் போய்விட்டு வீடு திரும்பறப்ப என்னை வழி மறிச்ச மருதுபாண்டி எங்கடா உங்கண்ணன் முருகேசன்னு விசாரிச்சான். இங்கதான் எங்காவது இருப்பார்னு சொல்லிட்டு வூட்டுக்குப் போயிட்டேன். அண்ணனைத் தேடி எங்கப்பா போயிருக்கிறது எனக்குத் தெரியாது. கொஞ்சநேரம் கழிச்சு எங்க வீட்டுக்குள்ளாற புகுந்த மருதுபாண்டி கொடியில கழத்திப்போட்டிருந்த என் சட்டையை எடுத்து பாக்கெட்டைத் துழாவி அதிலிருந்த பஸ் டிக்கட்டையெல்லாம் பரிசோதிச்சான். எதுக்காக இப்படிப் பண்றேன்னு கேட்டேன். நெசமாவே உங்கண்ணன் எங்கயிருக்கான்னு உனக்குத் தெரியாதான்னான். நான் தெரியாதுன்னேன். அவன் பத்தாயிரம் ரூவா கடன் வாங்கியிருக்கான், இப்ப அவசரமா பணம் தேவை, அவனைக் காட்டுன்னு வற்புறுத்தினான். அவன் பேச்சிலிருந்து வேறெதையும் என்னால யூகிக்க முடியல. சரி வா வெளியபோலாம்னு அவன் கூப்பிட்டதை நம்பி சட்டையைப் போட்டுட்டு அவனோடு ரோட்டுக்குப் போனேன்.

ரோட்டோரத்திலிருந்த மோட்டார் ரூம் பக்கத்துல கூடியிருந்த அவங்க சாதிப் பையன்களோட சேர்ந்து என்னை அந்த ரூமுக்குள்ள தள்ளினான். பக்கத்து மைதானத்துல பந்து விளையாடிக்கிட்டிருந்தவங்களும் சேர்ந்துக்கிட்டாங்க. உங்கண்ணன் எங்க இருக்கான்னு சொல்லப்போறியா இல்லையான்னு கேட்டு என்னை அடிக்க ஆரம்பிச்சாங்க. எங்கண்ணன் எங்க போயிருக்கார்னு தெரியல.. வந்ததும் விசாரிச்சு பணம் வாங்கியிருந்தா திருப்பித்தர ஏற்பாடு பண்றேன்… என்னை அவுத்து விடுங்கன்னு கெஞ்சினேன். யாரும் இரங்கல. அடிதாளாம கதறிக்கிட்டிருந்தேன். சித்தப்பா அய்யாசாமிக்கு எப்படியோ விசயம் தெரிஞ்சு ஓடிவந்து என்ன ஏதுன்னு அவங்கள விசாரிச்சார். முருகேசனை தேடிக் கொண்டாறது என்னோட பொறுப்பு, இவனை அவுத்து வுடுங்கன்னு கேட்டதுக்கு மொதல்ல அவனைக் கூட்டிவா, அப்புறம் பாக்கலாம்னு மறுத்துட்டாங்க".

அய்யாச்சாமி (முருகேசன் சித்தப்பா - குப்பநத்தம் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர்) :

"நான் எதிர்பாத்த மாதிரியே முருகேசன் வண்ணான்குடிகாட்ல அவங்கக்கா வூட்லதான் இருந்தான். எங்கயோ போயிட்டு அவனும் அப்பதான் அங்க வந்து சேர்ந்தானாம். அவங்கப்பாவும் (எங்கண்ணன்) அங்கதான் இருந்தார். நடந்த விசயத்த சொல்லி நீ வந்தாத்தான் உன் தம்பி வேல்முருகனை விடுவிப்பாங்க, உடனே கிளம்புடான்னு முருகேசனை வண்டியில ஊருக்கு அழைச்சினு வந்துடலாம்னு ரெடியாகிறப்ப சாயங்காலம் ஆறுமணி வாக்குல வேல்முருகனை விடுவிச்ச தகவல் கிடைச்சதால இப்ப உடனே போகவேணாம் காலையில போலாம்னு அங்கயே தங்கிட்டோம்.

மறுநாள் (7.7.2003) சாயங்காலம் முருகேசனோட நாங்க புதுக்கூரைப்பேட்டைக்கு திரும்பறதுக்குள்ள மருத பாண்டி ஆளுங்க எங்க வீட்டுக்கிட்ட வந்து பொம்பளைங்ககிட்ட தகராறு பண்ணிக்கிட்டிருந்தாங்க. முருகேசனை வேற இடத்துல நிக்கவச்சுட்டு அவங்ககிட்டப் போனேன். என்னைப் பாத்ததும் முருகேசன் எங்கன்னு அடிக்க வந்தானுங்க. முருகேசன் பணம் வாங்கலங்கிறான். நீங்க எதுக்கு இங்க தகராறு பண்றீங்கன்னேன். இல்ல அவனைக் காட்டு நாங்க பேசிக்கிறோம்னு ஒரே தள்ளுமுள்ளு. போய் முருகேசனை கூப்பிட்டேன். வர்றதுக்கு தயங்கினான். பணம் வாங்கலன்னா நேர்ல வந்து நான் வாங்கலன்னு சொல்லிட்டு வந்துடுன்னு நான்தான் ரொம்பவும் வற்புறுத்தி இழுத்துனு போனேன். வரமாட்டன்னு தயங்கினவனை நானே இழுத்துனு போயி அந்த படுபாவிங்ககிட்ட ஒப்படைச்சத நெனச்சாத்தான் இன்னமும் பதறது.

பையனைப் பாத்ததும் மருதுபாண்டி, சோதி, கந்தவேல், ராமதாசுன்னு ஏழெட்டுப்பேர் வளைச்சுப் பிடிச்சு அடிக்க ஆரம்பிச்சானுவ. கடன் வாங்கியிருக்கான் பையனைக் கூட்டியான்னு சொன்னீங்க, கூட்டியாந்திருக்கேன். அதை விசாரிக்காம இப்படிப் போட்டு அடிச்சா என்னா அர்த்தம்னு தடுக்கப்போன என்னையும் அடிச்சானுங்க. துணியெல்லாத்தையும் கிழச்செறிஞ்சுட்டு அவனை வெறும் ஜட்டியோட நிக்கவச்சு அடிச்சானுங்க. என்னால தாங்கவும் முடியல. தடுக்கவும் முடியல. அவன் கை காலை கட்டினானுங்க. சொல்லுடா பொண்ண எங்க ஒளிச்சு வச்சிருக்கிறன்னு ஆணுபொண்ணு அத்தனையும் அடிக்குது. காறித்துப்பறவங்களும் கழுத்த நெறிக்கறவங்களும்… எங்கண்ணியும் என்தங்கச்சியும் (முருகேசனோட அம்மா, அத்தை) ஒடியாந்து தடுத்தாங்க. அவங்களுக்கும் அடி.

எனக்கு ஒண்ணும் புரியல. முருகேசன் எனக்குத் தெரியாதுன்னே சொல்லிக்கிட்டிருந்தான். இவனை இப்பிடியே கேட்டுக்கிட்டிருக்கிறதால பிரயோஜனமில்லன்னு சொல்லிக்கிட்டு அங்கயிருக்கிற கொழாவுக்குள்ள அவனை தலைகீழா எறக்கி இழுத்து சேந்தினாங்க. (நிலக்கரி இருக்கான்னு சோதனை போடறதுக்காவ என்.எல்.சி.காரங்க இந்த ஏரியாவுல இந்தமாதிரி அங்கங்க கொழா போட்டுருக்காங்க. அதுல ஒன்னுதான் இது. 300 அடி ஆழமிருக்கும். குறுகலானதுதான். 16 அங்குலமோ என்னமோ சைஸ். அனாமத்துப் பொணங்க அதுக்குள்ள நிறைய கிடக்கும்னு ஒரு பேச்சிருக்கு.) ரண்டாவது தடவ ரொம்ப ஆழத்துல எறக்கி மேல இழுத்தப்பதான் ‘கண்ணகி மூங்கத்துறைப்பட்டுல எங்க சொந்தக்காரங்க வூட்டுல இருக்கு’ன்னான் முருகேசன். கண்ணகிங்கிறது பிரசரண்டு துரைசாமி மவ. மருதுபாண்டியோட தங்கச்சி.

அவ்வளதுதான், அவங்க எதிர்பார்த்த தகவல் கிடைச்சிருச்சு, பையனை விட்ருவாங்கன்னு நெனைச்சேன். ஆனா வந்து வூட்டக்காட்டுடான்னு காருக்குள்ள என்னைத் தூக்கிப் போட்டுக்கிட்டு பத்து பத்தேகால் மணிக்கு கிளம்பினாங்க. ராவோடராவா மூங்கத்துறைப்பட்டுக்கு போனோம். அங்கயிருந்து 100 மைல் வரும்".

சின்னப்பிள்ளை (முருகேசன் அம்மா) :

"பையனை கட்டிப்போட்டு அடிக்கிறாங்கன்னு கேள்விப்பட்டு நானும் என் நாத்தனாரும் அங்க ஓடினோம். எம்புள்ளைய மன்னிச்சிருங்க சாமி… என் காடுகரை எல்லாத்தையும் உட்டுட்டு இந்த தெசைப் பக்கமே வராம எங்கியாச்சும் கண்காணாத தேசத்துக்கு ஓடிப்போயி பொழைச்சுக்கிறோம்… எம்புள்ளைய வுட்டுருங்கன்னு கையடுத்துக் கும்புட்டு பிரசரண்டு கால்ல வுழுந்து கதறினேன். புள்ள வளக்கத் தெரியாத வல்லார ஓழின்னு திட்டிக்கிட்டே என்னையும் அடிச்சானுங்க. ஓடிப்போயிருன்னு துரத்தினாங்க. தம்புள்ள அடிவாங்கிச் சாகிறத ஒரு மரத்துக்குப் பின்னால ஒளிஞ்சிருந்து பாக்கற கெதி யாருக்கும் வரக்கூடாது. கண்ணகிக்கும் எம்மவனுக்கும் பழக்கமிருக்கிறது முந்தியே தெரிஞ்சிருந்தா நாங்களே அவனை தடுத்து காப்பாத்தியிருப்போம். தெரியாமப் போச்சு. அய்யாசாமிய ஏத்திக்கிட்டு கார் மூங்கத்தொறைப்பட்டுக்கு போனப்புறமும் முருகேசனை அடிக்கிறதை நிறுத்தல. பொண்ணு வந்து சேரட்டும். இவனை கொன்னு எரிச்சிடுவம்னு பேசிக்கிட்டாங்க. எதுக்கும் அஞ்சாத பாவிங்களாச்சே, செஞ்சாலும் செய்வானுங்கன்னு பயந்து நாங்க ரெண்டுபேரும் எங்க சொந்தக்காரங்களோட விருத்தாச்சலம் போலிஸ் ஸ்டேசனுக்கு ஓடினம். ‘பறப்பையன் படையாச்சிப் பொண்ணைத் தொட்டா பாத்துக்கிட்டு சும்மா இருப்பாங்களா’ன்னு அங்கிருந்த போலிஸ்காரங்க என்னையவும் நாத்தனாரையும் அடிச்சு விரட்டுனாங்க. இன்ன விசயம்னு நாங்க சொல்லாமயே இதுக்காகத்தான் நாங்க வந்திருக்கம்னு போலிஸ்காரங்க சொல்றாங்கன்னா அவங்களுக்கு ஏற்கனவே விசயம் தெரிஞ்சிருக்குன்னுதானே அர்த்தம்? இனிமே இவங்கக்கிட்ட நின்னு புண்ணியமில்லன்னு மறுபடியும் புதுக்கூரைப்பேட்டைக்கு ஓடியாறம். அங்க யாரையும் காணல. இருட்டுலயே தேடுறம். பிரசரண்டுக்கு பங்காளியோட முந்திரிக்காட்டுக்குள்ள வந்த சத்தத்தக் கேட்டு அங்கப் போய் பார்த்தா ஊரே தெரண்டு நிக்கிது. எம்பையன் நடுவுல. வாய்விட்டு அழவும் முடியாம நாங்க இருட்டுல மறஞ்சி நின்னிருந்தோம்".

அய்யாச்சாமி :

"எங்க சொந்தக்காரங்க வூட்டுக்குள்ள (08.07.2003) ராத்திரி ஒன்னரை மணிக்குப் பூந்து தேடி கண்ணகிய இழுத்துப் போட்டுக்கிட்டு மூங்கத்துறைப்பட்டுல இருந்து வண்டி திரும்புச்சு. வழிநெடுக அந்தப் பொண்ணை பண்ணின சித்ரவதைய சொல்லிமாளாது. விடிகாலை 3மணி சுமாருக்கு புதுக்கூரைப்பேட்டை ஊருக்குள்ள போகாம வண்டி முந்திரித் தோப்புக்கு திரும்புச்சு. அங்க கைகால கட்டி முருகேசனை கீழ தள்ளியிருந்தாங்க. பொண்ணு கிடைச்சிட்டதால பையனை இப்பவாச்சும் விட்டுருவாங்கன்னு நினைச்சேன். ஆனா, அவன் விழுந்து கிடக்குற எடத்துக்குப் பக்கத்துல இருந்த ஒரு முந்திரிமரத்துல என்னையும் கட்டிப்போட்டாங்க. அந்த எடத்துலயிருந்து கொஞ்சம் தள்ளியிருக்கிற மரத்துக்கிட்ட அந்தப் பொண்ணை கட்டிப்போட்டுட்டு வெங்கடேசனை காவல் வச்சுட்டு இங்க வராங்க. அதுக்குள்ள விடிஞ்சு ஏழுமணியாயிருச்சு.

முன்னாடியே திட்டம் போட்டு எல்லாம் தயார் பண்ணியிருக்கானுங்க. நமக்குத் தெரியல. சோதி, மணி, கோதண்டபாணி, மொளையான் - இவங்கல்லாம் முருகேசனை அசையவுடாம அமுக்கிப் புடிச்சிக்கிட்டானுங்க. கந்தவேல் டப்பா மூடிய கத்தியால கீறித் தெறந்து டம்ளர்ல விஷத்த ஊத்திக் கொடுத்தான். பொண்ணோட அண்ணன் மருதுபாண்டி முருகேசன் வாய்ல விஷத்த ஊத்தினான். என் கண்ணு முன்னாடியே எம்புள்ள சாகுது. மரமாச்சும் அசையும். என்னால அதுவும் முடியாம கத்தறேன். அடுத்தாப்ல அந்தப் பொண்ணுக்கு ஊத்தப் பாக்குறாங்க. அது பல்லை இறுக்கி கடிச்சிக்கிட்டு வாயைத் தெறக்காம இருக்கு. அடிச்சு ஒதைச்சாலும் அது பிடிவாதம் குறையல. வாய் திறக்காததால அமுக்கிப் புடிச்சி காதுலயும் மூக்குலயும் விஷத்த ஊத்தினாங்க. நம்ம பொண்ணாச்சே… வேண்டாம் பாவம்னு எரக்கப்பட்டுத் தடுக்க ஒரு ஆள் இல்ல. ஊரே தெரண்டிருக்க ரண்டு உசுரும் போயிருச்சு.

ரண்டு பொணத்தையும் தூக்கிக்கிட்டு சுடலைக்கு போனாங்க. என்னையும் இழுத்துக்கிட்டுப் போனாங்க கூடவே. பொண்ணை அவங்க சாதி சுடுகாட்டுலயும் பையனை சுடுகாட்டுக்கு பக்கத்துல இருக்குற ஓடையிலயும் (சுடுகாடு தீட்டாயிடக்கூடாதுன்னு) போட்டாங்க. அங்க வெறகுக்கட்டை அடுக்கி எல்லாமே ரெடியா இருந்துச்சு. கொன்னது படையாச்சிங்களா இருந்தாலும் எரிக்கறது எங்காளுங்களோட வேலை தானே. புதுக்கூரைப்பேட்டை காலனி ஆளுங்கதான் (எங்க சொந்தக்காரங்கதான்) ரெண்டு பொணத்தையும் எரிச்சாங்க".

அமராவதி (முருகேசனின் அத்தை) :

"நானும் எங்கண்ணியும் எல்லாத்தையும் இருட்டுக்குள்ள இருந்து பாத்துக்கிட்டிருந்தோம். ஆனா ஒன்னும் பண்ண முடியல. விடிஞ்சி காத்தால ஏழுமணி சுமாருக்கு (8.7.2003) முருகேசனுக்கும் கண்ணகிக்கும் விஷத்தை ஊத்தி கொன்னு தூக்கிக்கிட்டு, கட்டிவச்சிருந்த எங்கண்ணன் அய்யாசாமியவும் கூட்டிட்டு சொடலைக்குப் போனாங்க. நானும் எங்கண்ணியும் மறஞ்சு மறஞ்சு பின்னால போனம். அப்ப சொடலைக்கு வந்த போலிஸ்காரர் (எஸ்.ஐ.யோ இன்ஸ்பெக்டரோ தெரியல) எரிஞ்சிக்கிட்டிருந்த முருகேசனை பூட்ஸ் காலால புரட்டிப் பாத்துட்டு எதுவுமே சொல்லாம கௌம்பிப் போயிட்டார். அதுக்கப்புறம் படையாச்சிங்களும் எரிய வுட்டுக்கிட்டிருந்தவங்களும் போயிட்டாங்க. நானும் அண்ணியும் பதைச்சுக்கிட்டு ஓடிப் பாத்தப்ப முருகேசன் வெந்து கரிக்கட்டையா கிடந்தான். நெஞ்சுக்கூடு மட்டும் வேகாம பொகஞ்சிக்கிட்டு இருந்துச்சு. நான் ஆத்தாமையில அதை அப்படியே கையால அள்ளிட்டேன். கையெல்லாம் பிசுபிசுன்னு என்னமோ ஒட்டுது. அவன வளக்க எங்கக் குடும்பம் எத்தினி கஷ்டப்பட்டிருக்கும்… வாழ்றதுக்குத்தான் கஷ்டப்பட்டம்னா செத்து முழுசா எரியறதுக்கும் குடுப்பினை இல்லாமப் போயிடுச்சேன்னு நெனைக்க நெனைக்க மனசே ஆறல.

அப்பறம் நாங்க ரண்டு பேரும் அங்கயிருந்த செடி செத்தைங்கள அரிச்சுப் போட்டு அது வேகற மட்டும் அங்கயே இருந்தோம். எரிஞ்சிருந்த அவன் கைவிரல்ல கருகிக்கிடந்த மோதிரத்தை எடுத்து எங்கண்ணிக்கிட்ட கொடுத்தேன். ஒரு தாய்க்கு அது போதுமா? அவ முருகேசனை பெத்தவ இல்ல சித்திதான்னாலும் எவ்வளவு பாசமா வளத்தா"…

சாமிக்கண்ணு:

"எம்புள்ள இனி இல்லன்னு ஆயிட்டான். எனக்கு கல்யாணமாகி ரண்டு வருசம் கழிச்சுத்தான் முருகேசன் பொறந்தான். அதுக்காவ நானும் அவங்கம்மாவும் வேண்டாத சாமியில்ல. போகாத கோயிலில்ல. அவன்பேர்ல குலதெய்வத்துக்கு நேர்ந்துட்ட பன்னி நெஞ்சளவுக்கு வளர்ந்திருந்துச்சு. ரெண்டு மாசம் கழிச்சு பொங்க வைக்கணும்னு இருந்தேன். அதுக்குள்ள எம் புள்ளையே இல்லன்னு ஆயிருச்சே… அவங்கம்மா செத்தப்புறம் ரண்டாந்தாரமா சின்னப்புள்ளய கட்டி புள்ளைங்க பொறந்திருந்தாலும் முருகேசன்மேலதான் நாங்க உசுர வச்சிருந்தம். எல்லாம் போச்சு.
*
- The Times Tamil நேர்காணலில் இருந்து... 

Wednesday, July 14, 2021

விஜய் என்பதால்தானா?

 


பாஜகவின் கருநாகப் பாம்பு கரு.நாகராஜன் நீட் தொடர்பாக ஆய்வு செய்ய அமைத்த குழு செல்லாது என்று  தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த முக்கியத் தகவலை பின்னுக்குத் தள்ளியது விஜய் தொடுத்த வரி வழக்கு.

செல்வந்தர்கள் வரி விலக்கு கேட்பது என்பதை எந்நாளும் ஏற்க முடியாது. சச்சினோ, ரஜினியோ, விஜய்யோ, அம்பானி, அதானி வகையறாக்களோ யாராக இருப்பினும் தவறு தவறுதான். விஜய் வரி விலக்கு கேட்டு வழக்கு போட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

இது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் மாண்புமிகு நீதியரசர் தெரிவித்த பல கருத்துக்கள்.

ஒற்றை வரியில் தள்ளுபடி செய்ய வேண்டிய ஒரு வழக்கை ஒன்பது வருடங்கள் இழுக்க முடியும் என்ற அளவில் நம் நீதி பரிபாலன அமைப்பு இருப்பது யார் குற்றம்?

நீதித்துறையுடையதா? விஜயுடையதா?

ரீல் ஹீரோக்கள், திரையில் சமூக நீதி பேசுபவர்கள், என்ன தொழில் செய்கிறார் என்பதை மனுவில் கொடுக்கவில்லை, இன்னும் இதர, இதர வாசகங்கள் தீர்ப்பில் அவசியமா?

திரையில் சமூக நீதி பேசுவது முட்டாள் சங்கிகளுக்கு எரிச்சலாகத்தான் இருக்கும். சமூக நீதியை நிலை நாட்ட வேண்டிய கடமையில் உள்ள நீதியரசர் எரிச்சல் படுவது நியாயமாக இருக்குமா?

வரி விலக்கு கேட்ட வழக்கில் அமிதாப் தன்னை விவசாயி என்று சொன்னதும் திரைக் கலைஞர் என்று சச்சின் சொன்னதும் நினைவுக்கு வருகிறது. அப்படி தவறாக சொல்லியிருந்தால் அது கண்டிக்கத்தக்கது. 

நீதித்துறை காவிமயமாகி பல ஆண்டுகளாகி விட்டது என்ற குற்றச்சாட்டை உறுதி செய்யும் விதமாகவே இத்தீர்ப்பில் அவசியமற்ற வாசகங்கள் உள்ளதோ என்று ஐயம் எழுவதை தடுக்க இயலவில்லையே! என் செய்வது?

இப்படிப்பட்ட கடுமையான வரிகளை தீர்ப்பிலிருந்து அகற்றுவதே முறையாக இருக்கும்!

Monday, June 21, 2021

லட்சத்தீவு - பயமே சாட்சி


 மோடியின் ஆட்சியில் புதிதாக சீரழிக்கப்பட்டுக் கொண்டு வரும் லட்சத்தீவு குறித்த புதிய செய்தி ஒன்று இன்று வந்துள்ளது.

லட்சத்தீவு இப்போது கேரள உயர் நீதி மன்ற எல்லைக்குக் கீழே வருகிறது. அதாவது லட்சத் தீவு மக்களுக்கான உயர் நீதி மன்றம் கேரள நீதிமன்றம்.

மோடியின் நண்பனான பிரபுல் கோடா படேல், லட்சத்தீவை, கேரள உயர் நீதி மன்ற ஆளுகையிலிருந்து கர்னாடக உயர் நீதி மன்ற ஆளுகைக்கு மாற்றும் முன்மொழிவை அமித் ஷாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையை பயன்படுத்தி பாஜக அதனை அமலாக்கவும் செய்யவும்.

இப்போது மாற்றத்திற்கான தேவை என்ன?

பிரபுல் கோடா படேலின் ஒழுங்கீனமான நடவடிக்கைகள், மக்கள் விரோத நடவடிக்கைகள், லட்சத்தீவின் இயற்கை வளத்தை சீரழிக்கும் நடவடிக்கைகள் என பதினைந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் கேரள உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க இப்படி ஒரு குறுக்கு வழி. கர்னாடகத்தில் இருப்பதும் பாஜக ஆட்சிதான்.

ஆனால் இப்படி ஒரு மாற்றம் வருமானால் பிரபுல் கோடா ப்ட்டேல் லட்சத்தீவை விட்டு ஒழிந்தாலும் கூட  அந்த மக்களுக்கு பாதிப்பே. ஏனென்றால் அவர்களின் தாய் மொழியும் பேச்சு மொழியும் மலையாளம்தான்.

லட்சத்தீவில் அராஜக ஆட்சிதான் நடக்கிறது என்பதற்கு வழக்குகளை சந்திக்க பிரபுல் கோடா பட்டேல் பயப்படுவதே சாட்சி.

மோடியே ஒரு பயந்தாங்குள்ளிதான், அவர் நண்பர் மட்டும் வீரனாகவா இருப்பார்!

Tuesday, April 27, 2021

சரியான கேள்வி - பதில்????

 


கார்ப்பரேட்டுகளின் லாபத்தை பெருக்குவதையே இலட்சியமாகக் கொண்டுள்ள ஆட்சியாளர்களோ, அவர்களின் குரலை எதிரொலிப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ள நீதி மன்றம் உள்ளிட்ட அமைப்புக்களோ, மோடி சொன்னா சரிதான் என்று ஜால்ரா தட்டும் ஆட்டு மந்தைக் கூட்டமோ, இந்த நியாயமான கேள்விக்கு பதில் தராது என்பது மட்டுமல்ல, காதிலேயே விழாதது போல கடந்து போய் விடும். 

Friday, November 20, 2020

நானாவதி ஹாஸ்பிட்டலும் பாடாய்ப்படுத்தும் கோர்ட்டுகளும்

 


வரவரராவும் அப்துல் நாசர் மதானியும்

ஓய்வு பெற்ற நீதிபதி K.சந்துரு

புகழ் பெற்ற ஆந்திரப் புரட்சிக் கவிஞர் வரவர ராவ் ஆகஸ்டு 2018ல் கைது செய்யப்பட்டு பம்பாயில் சிறை வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது சட்ட விரோதத் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவருடைய தற்போதைய வயது 80. அச்சட்டத்தின் கீழ் முதலில் ஓர் ஆண்டு காலத்திற்கு சாதாரண பிணை (bail) கிடைக்க வழியில்லை. ஆனால் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லையென்றால் நீதிமன்றத்தால் விடுவிக்க முடியும். இருப்பினும், வரவர ராவ் சிறையில் அடைக்கப்பட்டு ஏறத்தாழ 800 நாட்கள் கடந்துவிட்ட பிறகும் அவருக்குப் பிணை கொடுத்தபாடில்லை.

அவருடைய மனைவி ஹேமலதா, உடல் நலம் குன்றிய தனது கணவரை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். மரணப் படுக்கையில் இருக்கும் வரவர ராவ் மருத்துவ சிகிச்சை இல்லையென்றால் இறந்து விடுவார் என்றும், சிறையிலேயே அவரது உயிரைப் பறிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம் என்றும் கூறினார்.

'ரிபப்ளிக் டிவி' அர்னாப் கோஸ்வாமிக்கு மும்பையில் பிணை மனு நிலுவையிலிருப்பினும் உச்ச நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியது. நாங்கள் பிணை வழங்கவில்லையென்றால் இந்த நாட்டில் தனி மனித சுதந்திரம் பறிக்கப்பட்டு விடும் என்று நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டார். ஆனால் அவர் பிணை வழங்கும் அதே நேரத்தில் மற்றொரு அமர்வில் வரவர ராவிற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கக் கோரும் மனு தள்ளுபடி செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. 'மும்பை நீதிமன்றத்தை அணுகுங்கள். எல்லோரும் டில்லிக்குப் படையெடுக்க முடியாது' என்று அந்த அமர்வு நீதிபதிகள் குறிப்பிட்டார்கள். ஒரே உச்ச நீதிமன்றத்தில் இருவிதமான குரல்கள் ஒலிக்க நேர்ந்தது எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அடுத்த நாள் மும்பை உயர் நீதிமன்றம் வரவர ராவை மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க உத்தரவிட்டதுடன், அதற்கான செலவையும் நீதிமன்றமே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் உத்தரவிட்டது.

சிறையிலிருக்கும் மனிதருக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் என்ன பிரச்சனை இருக்க முடியும்?

தனது கால்களை இழந்து செயற்கைக் காலுடன் வாழ்ந்து வரும் அப்துல் நாசர் மதானியை தீவிரவாதக் குற்றத்திற்காக கோவை சிறையில் அடைத்ததுடன், அவர் மீது போடப்பட்டிருக்கும் குண்டு வெடிப்பு வழக்கு முடியும்வரை அவரைக் கோவை சிறையிலிருந்து வேறெங்கும் எடுத்துச் செல்லக் கூடாது என்ற உத்தரவையும் தமிழக அரசு பிறப்பித்தது. அவருக்குப் பொருத்தப்பட்ட செயற்கைக் கால்கள் (Jaipur legs) இற்றுப் போய் விட்டதனால், அதை மாற்றுவதற்கான தேவை ஏற்பட்டது. அவரது மருத்துவர்கள் திருவனந்தபுரத்திலுள்ள கிங் ஹாஸ்பிடலைச் சேர்ந்தவர்கள். அவருக்குச் செயற்கைக் கால் புதிதாகப் பொருத்துவதற்காக அவரைத் திருவனந்தபுரம் மருத்துவமனையில் சேர்க்க உத்தரவிடும்படி சென்னை உயர் நீதிமன்றத்தை அவர் அணுக நேர்ந்தது. அவரது வழக்கை எடுத்து நடத்தும்படி நீதிபதி கிருஷ்ணய்யர் என்னைக் கேட்டுக்கொண்டார்.

கோவை சிறையிலிருந்து எக்காரணத்தை முன்னிட்டும் அவரை வெளியே அனுப்ப முடியாது என்று தமிழக அரசு கறார் காட்டியது. ஆனால், காலிழந்த மனிதருக்கு செயற்கைக் கால் பொருத்துவதற்குக் கூட இவ்வரசிற்கு மனதில்லை என்பதை உணர்ந்த நீதிபதி, மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு சிகிச்சைக்கு உத்தரவிட எண்ணினார். ஆனால் அரசு தமிழ் நாட்டு எல்லையை விட்டு அவர் எங்கும் செல்லக்கூடாது என்று வலியுறுத்தவே, அவர் என்னிடம் கிங் மருத்துவமனை மருத்துவர்கள் ஏன் கோவை சிறைக்கு வந்து சிகிச்சை தர ஏற்பாடு செய்யக்கூடாது என்று கேட்டார்.

அப்பொழுதுதான் அன்றைய பாரதப் பிரதமர் வாஜ்பாய் கேரளாவிலுள்ள குமரகத்தில் தனது மூட்டுவலிக்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அச்செய்தியைக் குறிப்பிட்ட நான், பிரதமர் தான் சிகிச்சைக்கு குமரகம் வர வேண்டும். குமரகத்தை டில்லிக்கு எடுத்துச் செல்ல முடியாது என்று சொன்னவுடன், நீதிபதிக்குக் கோபம் வந்துவிட்டது. என்னைப் பார்த்து ஏன் உணர்ச்சி வசப்படுகிறீர்கள் என்று சொன்னார். அதற்கு மறுப்பாக நான் நோயாளிகள்தான் வைத்தியரிடம் செல்ல வேண்டும். வைத்தியர்கள் நோயாளியிடம் வருவது என்பது நடைமுறைக்கு ஒத்து வராது என்று கூறினேன்.

பிறகு கோபம் தணிந்த அவர் தமிழ் நாட்டிலேயே நல்ல ஒரு மருத்துவ மனையில் மதானியை அனுமதித்து திருவனந்தபுரம் கிங் மருத்துவமனை மருத்துவர்கள் அங்கே வந்து அவருக்கான சிகிச்சையை மேற்பாற்வையிடலாமே என்று சொன்னார். நானும் முரண்டு பிடிக்காமல் நீதிபதி சொன்ன ஆலோசனையின்படி சென்னை கே.கே.நகரிலுள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவ மையத்தில் மதானியைச் சேர்த்து அவரது மருத்துவர்கள் திருவனந்தபுரத்திலிருந்து வருவதற்கு அரசுக்கு உத்தரவிடும்படி கேட்டுக் கொண்டேன். அரசுத் தரப்பிலிருந்து முனகல்கள் மட்டுமே வெளி வந்ததனால் நீதிபதியும் அவ்வாறே உத்தரவிட்டார்.

அதற்குப் பின்னால் நடந்ததுதான் வேடிக்கை. அன்று மாலை மதானி சிகிச்சைக்காக சென்னைக்கு மாற்றப்படுகிறார் என்ற செய்தி தொலைக்காட்சியில் உடையும் செய்தியாகக் (breaking news) காட்டப்பட்டது. சிறிது நேரத்தில் வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜரான பப்ளிக் ப்ராசிக்யூட்டரும், அவருக்கு உதவி செய்த குற்றவியல் வழக்கறிஞரும் தங்களது பதவியை இழந்தனர். இன்னும் கதை முடியவில்லை. இரவு வெகுநேரச் செய்தியில் மற்றொரு புதிய தகவல் வெளிவந்தது. அன்றைய உள்துறை செயலாளர் சையத் முனீர் ஹோடா ஐ.ஏ.எஸ் மற்றும் அரசு கூடுதல் செயலாளர் சங்கர் ஐ.ஏ.எஸ். இருவரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப் பட்டதாக அச்செய்தி கூறியது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தனி மனித சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு இருப்பினும், அச்சுதந்திரத்தைச் சட்ட வரையறைக்குள் பறிக்கலாம் என்று கூறப்பட்டிருப்பினும் மனிதாபிமான அடிப்படையில் ஒருவர் உயிரைப் பாதுகாப்பதற்கு சிகிச்சை அளிப்பதற்கு எவ்வித சட்டத் தடையும் இல்லை. கைதிகளின் உடல் நிலையை அவ்வப்போது பரிசீலித்து அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பது சிறைத்துறை யினரின் கடமை.

அரசியல்வாதிகள் ஊழல் குற்றத்திற்குக் கைது செய்யப்படப் போகிறோம் என்றவுடனேயே மருத்துவமனையில் போய் படுத்துக் கொள்வதும், அர்பன் நக்ஸல்கள்/ தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு விட்டால் அவர்களுக்கு மருத்துவ உதவியே கிடையாது என்று மறுப்பதும் இந்நாட்டின் சம நீதியாக மாறிவிட்டது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் வரவர ராவ்களும், மதானிகளும் நீதிமன்றங்களின் கதவைத் தட்டினாலும் அவர்களை அலைச்சலுக்குள்ளாக்கிக் கடைசியில் போனால் போகிறது என்ற அடிப்படையில் நீதிமன்றங்கள் உத்தரவுகளைப் பிறப்பிப்பது முறையல்ல.
-- நீதிபதி K.சந்துரு

Tuesday, September 29, 2020

அயோத்தியில பாபர் மசூதி இருந்ததா?

 


பாபர் மசூதி இடிப்பு தொடர்பான குற்றச் செயலுக்கான வழக்கில் இன்று தீர்ப்பு வரப் போகிறது.

தீர்ப்பு வரும். ஆனால் நீதி வருமா?

பாபர் மசூதி இடத்தை கோயில் கட்ட தாரை வார்த்துக் கொடுத்த தீர்ப்பில் மசூதியை இடித்தது குற்றச் செயல். கிரிமினல் நடவடிக்கை என்று சொல்லப் பட்டுள்ளது. ஆனால் அந்த குற்றச் செயல் செய்தவர்களிடமே இடத்தை ஒப்படைத்தது நீதிமன்றம்.

இன்றுள்ள சூழலில் அத்வானிக்கு எதிராக தண்டனை வரும் என்ற எதிர்பார்ப்பு சிறிதும் இல்லை. 

"அயோத்தியில் பாபர் மசூதி இருந்ததா என்ன?"

என்று கேட்காமலும்

"பாபர் மசூதி இடிப்பு சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் கிராஃபிக் வேலை" 

என்று சொல்லாமலும் 

இருந்தாலே அதுவே பெரிய விஷயம்.

சேகர் ரெட்டி போன்ற சின்ன லெவல் களவாணிகளே தப்பிக்கையில் அத்வானி மட்டும் மாட்டிக் கொள்வாரா என்ன!


Monday, September 28, 2020

மாரிதாஸ் மேல போடுங்கய்யா வழக்கு

 


கொஞ்ச நாள் அடங்கியிருந்த மாரிதாஸ் மீண்டும் விஷத்தை கக்க ஆரம்பித்து விட்டான். 

இது அவன் போட்டுள்ள பதிவு.








இதிலே அவன் என்ன அயோக்கியத்தனம் செய்துள்ளான் என்பதை வழக்கறிஞர் தோழர் பிரதாபன் ஜெயராமன் வார்த்தையிலேயே சொல்கிறேன்.


Administrator என்பது நீதிமன்றம் நியமிக்கும் பதவி.

அவ்வாறான ஒரு கிறித்துவ ட்ரஸ்ட்டின் Administrator ஆக நீதிபதி( ஓய்வு) ஹரிபரந்தாமன் நியமிக்கப்பட்டுள்ளார். உடனே, இந்த போர்டு தாஸ் எனும் மாரிதாஸ்..அவரை கிறித்துவ கைக்கூலி என பதிவிட்டுள்ளான்.
நீதிபதி ஹரிபரந்தாமன், எம்.ஜி. ஆருக்கு சொந்தமான சத்யா ஸ்டுடியோ இருந்த இடத்தில் உள்ள ஜானகி கலைக்கல்லூரி நிர்வாகத்திற்கும் Administrator ஆக நியமிக்கப்பட்டவர். எனவே அவர் அதிமுக வா?
இந்த நாயை கைது செய்ய நீதிபதி அவர்கள் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவன் நீதிபதி ஹரி பரந்தாமனை மட்டுமல்ல, அவரை அந்த பொறுப்பில் நியமித்த சென்னை உயர் நீதி மன்றத்தையுமே சேர்த்து இழிவு படுத்தி உள்ளான்.

இதுதான் உண்மையில் நீதிமன்ற அவமதிப்பு.

இதற்குத்தான் அவமதிப்பு வழக்கு போட்டு அவனை உள்ளே தள்ள வேண்டும்.

பிரஷாந்த் பூஷண், சூர்யா ஆகியோர் மீது பாய்பவர்கள், இவனை ஏன் எதுவும் சொல்வதில்லை.

ஆதிசேஷன் மீது பேப்பர் வெயிட்டை எறியும் அளவிற்கான கோபம் எல்லாம் திரைப்படங்களில் மட்டுதான் சாத்தியம் போல . . .

பிகு: மாரிதாஸுக்கெல்லாம் மரியாதை கொடுக்க என் விரல்கள் ஏனோ அனுமதிக்கவில்லை. அதுவே ஸ்பான்டேனியஸாக அவன், இவன் என்றுதான் தட்டச்சுகிறது. இருந்தாலும் தோழர் பிரதாபன் பதிவிலிருந்த எச்.ராசா பிரபல வார்த்த ஒன்றை எடுத்து விட்டேன்






Tuesday, June 30, 2020

அன்னிக்கு எச்.ராசாவை உள்ளே போட்டிருந்தா?



கோவில்பட்டி நீதிமன்றத்தில் சாத்தான் குளம் லாக்கப் கொலை வழக்கு விசாரணையின் போது சாத்தான் குளம் போலீஸ் செய்த அத்து மீறல் தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளையின் பதிவு இது.


அன்னிக்கு எச்.ராசா, ஹைகோர்ட்டை அசிங்கப்படுத்திய போது அந்தாளை உள்ளே தூக்கிப் போட்டிருந்தா, இப்படி கான்ஸ்டபிள் எல்லாம் மாஜிஸ்டிரேட்டைப் பார்த்து அசிங்கமாக பேச முடியுமா?

எல்லாம் உங்க தப்புதான் யுவர் ஆனர்


Sunday, July 21, 2019

இனி நோ “மை லார்ட்”




ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

இனி வழக்கறிஞர்கள் நீதிபதிகளை “மை லார்ட்” என்று அழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று விவாதித்து முடிவெடுத்துள்ளனர். ஜன நாயக நாட்டில் இது போன்று அழைப்பது பொருத்தமில்லை என்பதால் இம்முடிவு என்றும் சொல்லியுள்ளனர்.

ராஜஸ்தான் முன்னுதாரணத்தை மற்ற உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் பின்பற்றலாமே!

Friday, July 19, 2019

ஜீவனாம்சம் ஐந்து கிலோ நெய் . . .




பஞ்சாப் மாநில உயர் நீதிமன்றத்தில் ஒரு விவாக ரத்து வழக்கில் கணவன் மனைவிக்கு மாதம் ஐயாயிரம் ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொல்ல முதலில் மறுத்த கணவன், பின்பு தன் வக்கீல் மூலம் பணத்திற்குப் பதிலாக

ஒவ்வொரு மாதமும்

20 கிலோ அரிசி
ஐந்து கிலோ சர்க்கரை,
ஐந்து கிலோ பருப்பு வகைகள்
15 கிலோ கோதுமை
ஐந்து கிலோ நெய்

மற்றும்

தினம் இரண்டு லிட்டர் பால்,
மூன்று மாதத்திற்கு ஒரு முறை மூன்று செட் சுடிதார்.

இந்த முன்மொழிவை பஞ்சாப் மாநில உயர் நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு விட்டது.

சில சமயம் தீர்ப்புக்கள் வினோதமானவைதான்


Monday, August 27, 2018

பார் வசதி கிடையாதா யுவர் ஹானர்!


இந்திய வங்கிகளை மோசடி செய்த திருடன் விஜய் மல்லய்யாவை மும்பை சிறையில் அடைப்பதற்காக இங்கிலாந்து நீதி மன்றம் போட்ட நிபந்தனைகளுக்கு சி.பி.ஐ அளித்துள்ள பதில் கீழே உள்ளது.


அதை முதலில் படியுங்கள். கடைசியில் எனக்கு ஒரு கேள்வி உள்ளது.

3 பேன்... வெஸ்டர்ன் டாய்லெட்... 40 இன்ச் எல்சிடி டிவி...
மல்லையாவுக்கு தயாராகும் சொகுசு சிறை!




மும்பை, ஆக. 25 -

மும்பைச் சிறையில், மல்லையாவுக்காக, 3 மின்விசிறிகள், பளீச்சென்ற வெஸ்டர்ன் டாய்லெட், 40 இன்ச் எல்சிடி டிவி ஆகியவற்றுடன் சொகுசான அறையை சிபிஐ ஒதுக்கியுள் ளது. மேலும், நூலகம் மற்றும் மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.சாராய ஆலை முதலாளியான விஜய் மல்லையா, இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாயைக் கடனாக வாங்கிவிட்டு, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகருக்கு தப்பினார். தற்போது அவரை இந்தியாவுக்கு கொண்டுவர, சிபிஐ-யும், அமலாக்கத்துறையும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்காக லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தை நாடியுள்ளன.

ஆனால், தன்னை இந்தியாவுக்கு அனுப்பக்கூடாது என்றும், இந்தியச் சிறைகளில் தான் சித்ரவதை செய்யப்படலாம்; தனக்குப் பாதுகாப்பு இருக்காது என்றும் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் கூறிவருகிறார். குறிப்பாக, இந்திய சிறைகளில் சூரிய வெளிச்சம் கூட இருக்காது, சுத்தமான அறைகள் இருக்காது என்றும் அவர் புகார் கூறிவருகிறார்.லண்டன் நீதிமன்றமும் இதனை ஏற்றுக் கொண்டு, மல்லையாவை இந்தியாவுக்கு நாடுகடத்தும் பட்சத்தில், அங்கு அவர் பாதுகாப்பாக நடத்தப்படுவாரா? என்ற கேள்வியை அண்மையில் எழுப்பியது. மல்லையா அடைக்கப்படும் சிறையில் உள்ள வசதிகளையும் கேட்டது.

இதையடுத்து மும்பை ஆர்தர் சாலை சிறையில் 12-ஆம் எண் அறையில்தான் மல்லையா அடைக்கப்படுவார் என்றும், இந்த சிறை அறைஎப்படி இருக்கும், என்னென்ன வசதிகள் உள்ளனஎன்பது குறித்துமான வீடியோவை ஒன்றை சிபிஐ அதிகாரிகள் லண்டன் நீதிமன்றத்தில் தற்போது தாக்கல் செய்துள்ளனர்.

“ஆர்தர் சாலை சிறையின் 12-ஆம் எண் அறையில், நவீனமான வெஸ்டர்ன் டாய்லெட், 6 மின்விளக்குகள், 3 மின்விசிறிகள், சுவற்றில் வெள்ளை நிற பெயிண்ட், 40 இஞ்ச் எல்சிடி டிவிஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன; மருத்துவவசதிகளும் இருக்கின்றன; மேலும், மல்லையாதங்க வைக்கப்பட்டுள்ள சிறை கிழக்கு பார்த்ததாகும்; எனவே அங்கு சூரிய வெளிச்சத்துக்கு பஞ்சமே இல்லை; மல்லையா விரும்பினால் அவருக்கு அறையில் நூலகமும் அமைத்து கொடுக்கப்படும்” என்று வசதிகளை சிபிஐ அடுக்கியுள்ளது. இதனை லண்டன் நீதிமன்றம் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க உள்ளது. 

மக்களுக்கான போராட்டங்களில் கைதாகி சிறை செல்வோரெல்லாம் சித்ரவதை செய்யப்படும் நிலையில், மக்கள் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற நபருக்கு சொகுசு வசதிகள் செய்துதரப்படுவது பெரும் வெட்கக்கேடாக அமைந்துள்ளது.

இந்த வசதி எல்லாம் போதுமா யுவர் ஹானர்? சாராயக் கம்பெனி நடத்திய விஜய் மல்லய்யாவின் அறையில்  பார் வசதி இல்லையென்றால் எப்படி? அதையும் செய்து தர வேண்டுமென்றும் அந்த பாரில் என்னென்ன சரக்குகள் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடுவீர்களா யுவர் ஹானர்?

நீங்களும் சொல்லலாம். உத்தரவு போடலாம். அதை எங்கள் இந்திய அரசும் ஏற்று அவருக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கலாம்.

ஆமாம்.

கதவில்லாத, தண்ணீரில்லாத கழிப்பறை, புழுக்கள் நிரம்பிய உணவு என்றெல்லாம் ஒடுக்குவதற்கு விஜய் மல்லய்யா ஒன்றும் மக்களின் கோரிக்கைகளுக்கான உரிமைப் போராட்டத்தில் ஒன்றும் பங்கேற்கவில்லையே, !!!

இந்திய மக்களின் பணத்தை கொள்ளையடித்தவருக்கு ஒரு கூட்டாளி இது கூட செய்யவில்லையென்றால் எப்படி!!!