Tuesday, September 30, 2014

ஸ்வச்ச்சா பாரத், ஸ்வச்ச்டா ஷபத் – என்னங்கய்யா கூத்து இது?


இந்த ரெண்டையும் அப்படியே முதல் தடவையே கரெக்டா சொன்னா, நீங்கதான் பாரத் புத்ராஸ். அதாவது இந்திய மைந்தர்கள். 

காந்தி ஜெயந்தியை சுத்தம் செய்யும் தினமாக மாற்றுவதற்கு மோடி  வகையறாக்கள் வைத்துள்ள பெயர் இது. சுத்தமான இந்தியா, சுத்ததிற்கான சபதம் என்று அர்த்தமாம். துடைப்பத்தை தூக்கி சுத்தம் செய்யறதுக்குக் கூட ஹிந்தியிலதான் பெயர் வைப்பீங்களாய்யா? 

பொதுத்துறை நிறுவனங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழியை ஹிந்தியிலதான் அனுப்பிச்சுருக்காங்க. 

உங்க ஹிந்தி வெறிக்கு அளவே  கிடையாதா?

 ஸ்வச்ச்சா பாரத், ஸ்வச்ச்டா ஷபத் இதன் உள் நோக்கம் என்ன? மோடியின் செயல் திட்டம் என்ன என்பதைப் பற்றி நாளை பார்ப்போம்.

அது மிகப் பெரிய கேலிக்கூத்து




Monday, September 29, 2014

கண்டிப்பாக தவற விடக் கூடாத காட்சிகள் - பட்டியல் இரண்டு

சிறைக்குள்ளே இருக்கும் அம்மாவிற்கு தங்கள் கண்ணீரை காணிக்கையாக்கி  மீண்டும் அமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்ட  அழுகாச்சி காவியம். இது உலக வரலாற்றில் மிகவும் முக்கியம்தான்.

ஆம், உலகிலேயே ஒரு அமைச்சரவை பதவியேற்பு இவ்வளவு சோகத்துடனும் கண்ணீரோடும் எங்காவது இதுவரை நடந்ததுண்டா?

ஆக இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க புகைப்படங்களை காணத் தவறாதீர்கள். 

ஒன்றிரண்டு படங்களே நேரடியாக கிடைத்தது.

மற்றவையெல்லாம் யூட்யூபுலிருந்து  ஒவ்வொரு அமைச்சராக பார்த்து  பாஸ்  ( Pause)  செய்து பிறகு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து  பெயிண்டில் சேவ் செய்து  பிக்சர் எடிட்டர் மூலம் கிராப் செய்து   எடிட்  செய்து  போட்டது. 

ஒரு வரலாற்று ஆவணத்திற்கு இவ்வளவு கூட மெனக்கெடவில்லையென்றால் எப்படி?





















தவற விடக்கூடாத காட்சிகள் - பட்டியல் ஒன்று










தென் கொரியாவ்ன் இஞ்சியான் நகரில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்றைய நிகழ்வுகளின் சில புகைப்படங்கள். 

அற்புதமான புகைப்படங்களாக எனக்கு தோன்றியது. நான் ரசித்ததை உங்களோடும் பகிர்ந்து கொண்டுள்ளேன். 

அடுத்து இன்னொரு சுவாரஸ்யமான பட்டியலோடு சந்திக்கிறேன்.

 

Sunday, September 28, 2014

பதட்ட சூழலில் பணமுள்ளவருக்கே பயணம்

 

இன்று சென்னையில் ஒரு கட்சித்தோழரின் மகளின் திருமணம் மாலையில் தோழர் ஜி.ஆர் தலைமையில் நடைபெற்றது. மதியம் ஒரு ட்வேராவில் ஒன்பது தோழர்கள் புறப்பட்டு போய்விட்டு வருவது என்று முடிவெடுத்திருந்தாலும்  செல்வதா, வேண்டாமா என்று  காலை முதல் ஒரு  யோசனை இருந்து கொண்டே இருந்தது. கடைசியில் தைரியமாக புறப்பட்டு இதோ பாதுகாப்பாக வீடும் திரும்பி வந்தாகியும் விட்டது.

யோசனைக்கான காரணம் கடந்த  30 ஏபரல் 2013 அன்று தைலாபுரம் தோட்டத்து வாசலில் பாமக கும்பலிடமிருந்து    தப்பித்த அந்த அனுபவம்தான்.  இம்முறை வழியில் எவ்வித சிக்கலும் இல்லை. 

ஆனால் இந்த பயணத்தில் கவனித்த முக்கியமான விஷயம் ஒன்று உண்டு.

சென்னை பெங்களூர் நாற்கர சாலை இருபத்தி நான்கு மணி நேரமும்  மும்முரமாய் போக்குவரத்து நடக்கும் சாலை. அரசுப் பேருந்துகள், லாரிகள், கண்டெயினர் லாரிகள், ஆம்னி பேருந்துகள், குட்டி யானை லாரிகள், அதி வேக சொகுசு கார்கள் முதல் சாதாரண கார்கள் வரை  சதாசர்வ காலமும் விரைந்து கொண்டே இருக்கும்.

ஆனால் இன்றோ நாங்கள் சென்னை போகும் போது கவனித்தது என்னவென்றால் சென்னை நோக்கி ஒரு பேருந்தும் ஓடவில்லை. சென்னையிலிருந்து ஆரணிக்கு மூன்று பேருந்துகளும் காஞ்சிபுரத்திற்கு இரண்டு பேருந்துகளும் எதிர்திசையில் பயணித்துக் கொண்டிருந்தது. கார்கள் வழக்கத்தில் 25 % ஓடிக் கொண்டிருந்தது. 50 % லாரிகள் ஓடின. கண்டெயினர்களும் குட்டி யானைகளும்  காணவில்லை.

சென்னையில் கூட மிக மிக குறைந்த டவுன் பஸ்களே ஓடின. ஆட்டோக்கள் கூட முழு வீச்சில் இயங்கவில்லை. 

திரும்பி வரும் போது நிலைமை இன்னும் மோசம். இரண்டே இரண்டு ஆம்னி பஸ்கள் மட்டும் சென்னையை நோக்கி சென்று கொன்டிருந்தது. கார்கள் கொஞ்சம் ஓடின. ஹோசூரை நோக்கி ஒரே ஒரு அரசு பேருந்து மட்டுமே கண்ணில் பட்டது. ஒரு கர்னாடக அரசு சொகுசுப் பேருந்தை ஸ்ரீபெரும்புதூர் டோல்கேட் அருகில் காக்கிச்சட்டைகள் ஓரம் கட்ட வைத்தார்கள். பிறகு அந்த பேருந்து எப்போது புறப்பட்டதோ?

சொந்த கார் உள்ளவர்களோ அல்லது எங்களைப் போல வாடகைக் காருக்கு பணம் கொடுக்கும் அளவிற்கு வசதி உள்ளவர்கள் மட்டுமே பயணிக்கக் கூடிய அளவிற்குத்தான் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சூழ்நிலை இப்போது உள்ளது. 

சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு அராஜகம் தலை தூக்கும் வேளையில் சாமானிய மக்களின் வாழ்க்கைதான் தாக்கப்படுகிறது. 


சிறைக்குள்ளேயிருந்து

 http://media2.intoday.in/indiatoday/images/stories//1996December/jayalalitha9_100412090854.jpg
சிறைக்குள்ளேயிருந்து
போராட்டங்கள் நடந்துள்ளது,
காவியங்கள் எழுதப்பட்டுள்ளது,
பாடங்கள் புகட்டப்பட்டு
மனிதர்களாய் பலர் மாற்றப்பட்ட
வரலாறும் உண்டு.
மூலதனமும் கூட
மொழியாக்கம் கண்டதுண்டு.
கொலைகள் கூட
திட்டமிடப்பட்டதுண்டு.
இனி
பாதுகை சுமக்கும்
பரதன் ஒருவர் மூலம்
ரிமோட்டின் பொத்தான் கொண்டு
தமிழகமும் கூட
ஆட்சி செய்யப்படும்
 சிறைக்குள்ளேயிருந்து....

Saturday, September 27, 2014

அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு, திறந்திருந்த ஒரே பெட்ரோல் பங்க்


http://www.thehindu.com/multimedia/dynamic/01506/VEPVVHI-W003_G1_03_1506045e.jpg

ஜெ தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுதும் அதிமுககாரர்களின் அராஜகம்  நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தங்கள் உயிரையும் உடமைகளையும் பாதுகாக்க மக்களே  வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்.

வேலூர் சத்துவாச்சாரி, வள்ளலார் பகுதிகளில் என்ன நிலவரம் என்று பார்க்கலாம் என் ஒரு சிறிய உலா சென்றேன்.

ஒரு மருந்துக் கடை, இரண்டு தள்ளு வண்டி பழக்கடைகள் தவிர சத்துவாச்சாரி பகுதியில் பிரதான சாலைகளில் எந்த ஒரு கடையும் திறந்திருக்கவில்லை. வங்கிகள் ஏ.டி.எம் களைக் கூட ஷட்டர் போட்டு மூடியிருந்தன. நொடிக்கு ஒரு ஆட்டோ கடந்து போகும் சத்துவாச்சாரியில் கண்ணிற்கு எட்டிய தூரம் வரை ஒரு ஆட்டோ கூட ஓடவில்லை.

ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது போல மக்களின் நடமாட்டம் கொஞ்சம் கூட இல்லை. காக்கிச்சட்டைகள் கூட கண்ணில் தென்படவில்லை. பாவம் அவர்களுக்கு என்ன முக்கியமான வேலையோ? என்ன உத்தரவோ?

புயலுக்குப் பிந்தைய மயான அமைதியோடு இருந்த சத்துவாச்சாரி பகுதியில்  சுதந்திரமாக சுற்றித் திரிந்து கொன்டிருந்தது பல நாய்களும் சில மாடுகளுமே.

ஆனால் கடமையே கண்ணாக ஒரே ஒரு  பெட்ரோல் பங்க்  மட்டுமே மிகுந்த தைரியத்தோடு திறந்திருந்தது. 

அதிமுகவின் முன்னாள் ராஜ்யசபை உறுப்பினருக்கு சொந்தமானது அந்த பெட்ரோல் பங்க்

பின் குறிப்பு : படம் இன்றைய தினத்தது அல்ல.

தற்காலிகமாக வென்ற தர்மமும் பினாமி முதல்வரும்

 http://www.chennaivideo.com/wp-content/uploads/2013/06/CM-J-Jayalalitha.jpg

ஒரு வழியாக சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்து விட்டது. ஜெ விற்கும் மற்றவர்களுக்கும் நான்காண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டு விட்டது.

அதிமுக் காரர்களால் அதிர்ச்சியை தாங்கவே முடியவில்லை. தர்மம் வென்றது, நீதி வென்றது என்று பல வண்ணப் போஸ்டர்கள் அடித்து தயாராக வைத்திருந்தார்கள். கிலோக்கணக்கில் லட்டுகள் செய்து வீதிகளில் போவோருக்கும் வருவோருக்கும் கொடுக்க ஏற்பாடுகள் இருந்தது. 

லட்டு பெற வேண்டிய ஆட்களை அங்கங்கே அடித்து துரத்திக் கொண்டுள்ளனர். வேலூரில் இப்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதா என்று தெரியவில்லை. நான்கு மணிக்கு  குண்டாந்தடி தொண்டர்களின் உலா இருந்ததாக தகவல் இருந்தது.

ஜெ யின் ஆட்க்ள் சொல்லத் துடித்துக் கொண்டிருந்த "தர்மம் வென்றது" வசனத்தை இப்போது கழகக் கண்மணிகள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.  அவர்களுக்கும் இரண்டு விஷயங்கள் தெளிவாகத் தெரியும். நாளை  ஆ.ராசாவிற்கோ, கனிமொழிக்கோ இதே போன்றதொரு தீர்ப்பு வந்தால் அப்போது தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியுள்ளது என்றுதான் சொல்வோம் என்று. 

இரண்டாவது இன்று வென்றுள்ள தர்மம் நிரந்தர தர்மமா என்பதுதான்.  உயர்நீதி மன்றம், உச்ச நீதிமன்ற்ம், உலக நீதிமன்றம் என்று வரிசையாக மேல் முறையீடு செய்யும் போது எங்காவது ஓரிடத்தில் தர்மம் ஒளிந்து கொள்ள வாய்ப்புள்ளது என்பதை யாரும் மறுக்க மாட்டீர்கள். 

மூன்று அப்பாவி மாணவிகளின் உயிரை குடிக்க காரணமாக இருந்த ப்ளெசண்ட் டேஸ் ஹோட்டல் வழக்கில் இறுதியில் ஜெ விடுதலையானார். அவரது கட்சிக்காரர்கள்தான் இறுதியில் தூக்கு மேடைக்கு முன் நிற்கிறார்கள்.  டான்சி வழக்கில்  உயர்நீதி மன்றம் அளித்ததை விட ஆலமரப் பஞ்சாயத்தில் கூட இன்னும் தெளிவான தீர்ப்பு வந்திருக்கலாம். 

ஆக இப்போதைக்கு தற்காலிகமாகவாவது தர்மம் வென்றுள்ளது என்று மகிழ்ச்சியடையலாம். அதன் மூலம் தமிழகத்திற்கு மீண்டும் ஒரு பெருமை கிடைக்கவுள்ளது. 

இரண்டாவது முறையாக பினாமி முதல்வரை பெறப் போவதனால்.

பீகாரும் நாமும் சமமான நிலையில் இருந்தோம். இப்போது மீண்டும் முன்னணியில் தமிழகம்.
 

 

யாருங்க அடுத்த முதல்வர்? பாதுகை சுமக்கப் போவது யார்?



சொத்து குவிப்பு வழக்கில் ஜெ குற்றவாளி என்று  நீதிபதி சொல்லி விட்டார். அடுத்து தெரிய வேண்டியது தண்டனை என்னவென்றுதான். 

எப்படியும் தமிழகம் புதிய முதல்வரைக் காண வேண்டும்.

ஓ.பி.எஸ், நத்தம் பொன்ற  அதிமுக தொண்டர்களா?

இல்லை

ஷீலா பாலகிருஷ்ணன், நட்ராஜ்   போன்ற அதிகார வர்க்க பிரதிநிதிகளா?

ராமரின் பாதுகையைச் சுமந்த பரதன் வேடம் யாருக்கு? 

அப்படியா மோடிஜீ????????



ஒபாமா உங்களுக்கு விருந்து வைக்கப் போறதில்லையாமே மோடிஜி?
அதனாலதான் நீங்க நவராத்திரி விரதம்னு சொல்லிட்டீங்களா?

Thursday, September 25, 2014

இது ஒன்றும் உங்கள் சாதனையல்லவே மோடிஜீ?





இந்திய விஞ்ஞானிகளின் மகத்தான சாதனை செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யானை அனுப்பியது. இது தங்கள் ஆட்சியின் நூறு நாள் சாதனை என்று பாஜககாரர்கள் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். மோடி கூட “ நாங்கள் துணிச்சலோடு முயற்சித்தோம்” என்று அவர் பொதுவாக அரசாங்கத்தைச் சொன்னாரா அல்லது தன்னைச் சொல்லிக் கொண்டாரா என்பது தெரியவில்லை. ஆனால் தன்னை மட்டுமே முன்னிலைப் படுத்திக் கொள்ளக் கூடிய ஒருவர் அரசாங்கம் என்று சொல்லியிருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு கிடையாது.

முந்தைய ஆட்சிக்காலத்தில் முடிவெடுக்கப்பட்டு முந்தைய ஆட்சிக் காலத்திலேயே பணிகள் துவக்கப்பட்டு முந்தைய ஆட்சிக் காலத்திலேயே  விண்வெளிக்கும் ஏவப்பட்ட மங்கள்யானை தங்களின் சாதனை என்று எப்படி கூச்சமே இல்லாமல் சொல்லிக் கொள்ள முடிகிறது என்று எனக்கு புரியவில்லை.

அறிவியலுக்கும் பாஜகவிற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்ன?

செவ்வாய் தோஷம் என்று கதை சொல்லும் ஜோதிடத்தை ஒரு அறிவியல் பாடம் என்று கற்றுக் கொடுக்க வாஜ்பாயின் ஆட்சிக்காலம் முடிவு செய்ததே….

அறிவியல் பார்வை இருந்திருந்தால் ராமர் பாலம் என்று சொல்லி சேது சமுத்திரத் திட்டத்தை தடுத்திருக்க மாட்டார்கள்.

அப்படி இருக்கையில் மங்கள்யான் எங்கள் சாதனை என்று சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.

பாராட்டுக்கு உரியவர்கள் கடுமையாக உழைத்திட்ட விஞ்ஞானிகள் மட்டுமே.

இது நியாயமில்லை கமலஹாசன்

அன்பான கமலஹாசன்,
 
உங்கள் மீது சாரு நிவேதிதா எவ்வளவு அன்பும் மதிப்பும்  வைத்துள்ளார். சர்வதேச இலக்கியவாதியான, இலக்கியத்திற்கான, அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்கு உலகிலேயே தகுதி வாய்ந்த ஒரே எழுத்தாளரான அவர் உங்களை தனக்கு நிகராக கருதும் பாக்கியத்தை உங்களுக்கு மனமுவந்து அளித்துள்ளார் என்பதை அவரது கடிதத்தின் இந்த பகுதிகளை படித்தால் உங்களுக்கே புரியும்.


//அந்தக் கூட்டத்தில் நீங்களும் டி.எம். கிருஷ்ணாவும் பேசப் போகிறீர்கள் என்று அழைப்பிதழில் பார்த்து எனக்கு இரட்டிப்பு சந்தோஷம்.  ஏனென்றால், நான் உங்கள் இரண்டு பேரிடத்திலும் அன்பும் மரியாதையும் வைத்திருப்பவன்.  உங்கள் மீது அதீதமாகவே.//

// மகாநதி பற்றிய அந்தக் கட்டுரையை நீங்கள் கணையாழியில் வெளிவந்த போதே படித்திருக்கலாம்.  அந்தக் கட்டுரை பிரமாதமாக இருந்தது என்று நீங்கள் சொன்னதாக ஒருமுறை உங்கள் நண்பரும் என் நண்பருமான புவியரசு என்னிடம் சொன்னார்.//

// உங்கள் படங்களையெல்லாம் அநேகமாக நான் சிலாகித்தே எழுதி வந்தேன்.  குறிப்பாக, அன்பே சிவம்.  உங்கள் படங்களில் நான் விமர்சித்து எழுதியது குருதிப் புனல், தசாவதாரம்.  மற்ற எல்லா படங்களையும் பாராட்டியே எழுதினேன், சதி லீலாவதி உட்பட//

//  என் அளவுக்கு உங்களைப் பாராட்டி எழுதியவர்கள் தமிழில் யாரும் இல்லை என்றே நினைக்கிறேன்.//  

 // தமிழ்நாட்டில் Grantaவை சிரத்தையாகப் படிக்கும் ஒரு சிலருள் நாம் இருவரும் அடக்கம் என்று நினைக்கிறேன்.//  

//இந்த வகையில் உங்களை என்றுமே என்னுடைய நட்பு மாடத்தில் வைத்திருந்தேன். இப்போதும் வைத்திருக்கிறேன்.//

.//  இவ்வளவு படித்த ஒரு மனிதரை நான் சந்தித்ததே இல்லை என்பது மதன் உங்களைப் பற்றி அடிக்கடி சொல்லும் வார்த்தை//

.// படிப்பின் மீது மிகுந்த passion உள்ள ஒருவர், படிப்பின் மீதி தீராக் காதல் கொண்ட ஒருவர் தான் இப்படிப் படிக்க முடியும்; கமல் அப்படிப்பட்டவர்//

//அநேகமாக Alejandro Jodorowsky-யின் படங்களைப் பார்த்தவர்கள் தமிழ்நாட்டில் இரண்டு பேர் தான் இருப்பார்கள் என்பது என் யூகம்.  அதில் நீங்கள் ஒருவர்.//
  
// குடும்பம், குழந்தை குட்டி பற்றி உங்கள் கருத்தை ஏற்கக் கூடிய ஒரு நண்பர் உங்கள் நண்பர் குழுவில் உண்டா?  ஆனால் குடும்பம் பற்றி உங்கள் கருத்து எதுவோ அதுவேதான் என் கருத்தும்.  அந்தக் கருத்தின்படி தான் நான் வாழ்ந்தும் வருகிறேன்.  மத்திய வர்க்கத்துக்கு உரிய எந்த சமூக நடைமுறைகளையும் என் வாழ்வில் நான் பின்பற்றுவதில்லை.  உங்களைப் போலவேதான்.//

//இந்த நூற்றுக்குத் தொண்ணூற்று ஐந்துக்கு இன்னொரு உதாரணம், செக்ஸ் தொழிலை தொழிலாக அங்கீகரிப்பது பற்றியது.  இதிலும் நாம் ஒத்த கருத்து உடையவர்களே//
 

//என்ன நடக்கிறது என்று தெரியாமல், உங்கள் பின்னாலிருந்து ஒருவர் சாருவைத் தெரியாதா என்று கேட்க, இன்னொருவர் இரண்டு இண்டர்நேஷனல் ஸ்டார்களுக்கு ஒருவரை ஒருவர் தெரியாதா என்று குரல் கொடுத்தார்//.  



//அச்சகத்திலிருந்து வந்ததுமே அச்சு வாசனை போவதற்கு முன்பே உங்களுடைய நூலகத்துக்குத் தமிழ் நூல்கள் வந்து விடுகின்றன என்பதால் நான் எழுதிய ராஸ லீலா என்ற நாவலை நீங்கள் படித்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்//.  

 அன்புடன் கை கொடுக்கும் ஒருவனை நாலு பார் பார்க்க அவமதிப்பதையா?  அந்த அளவு வெறுக்கத்தக்கவனா நான்?  நேர்மையாக வாழ்வது அவ்வளவு பெரிய குற்றமா?  

//நான் உங்களுடைய படத்தை மட்டுமா விமர்சித்தேன்?  எந்திரனை விமர்சிக்கவில்லையா?//

//நேர்மையாக வாழ்வதால் இன்று நான் ஒரு தீண்டத்தகாதவனைப் போல் நடத்தப்படுகிறேன்.  அந்த அவமரியாதையை நான் எல்லா விழாக்களிலும் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. //

// என்னைப் போன்ற எழுத்தாளனின் நிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். உண்மையில் என்னைப் போன்ற ஒரு transgressive எழுத்தாளனை உங்களைப் போன்ற பிரபலங்கள்தான் ஆதரிக்க வேண்டும்.  அன்பு பாராட்ட வேண்டும்.  ஆனால் தமிழ்நாட்டில் கிடைப்பது கன்னத்தில் அறை. ஏன் இவ்வளவு வருந்தி வருந்தி எதை எதையோ தொட்டுத் தொட்டு எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றால், லௌகீக வாழ்வுக்காக வாசகர்களிடம் பிச்சையும் எடுத்துக் கொண்டு, உங்களைப் போன்றவர்களின் துவேஷத்தையும் சம்பாதித்துக் கொண்டு வாழும் சூழல் சமயங்களில் மன உளைச்சலைத் தருகிறது.//

// நீங்கள் சர்வதேச இலக்கியத்தையும் சினிமாவையும் கற்றவர்.  அந்த ஒரே காரணம்தான்.//

படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் ரஜனிகாந்திடம் சொன்ன டயலாக்கை பிறகு படிக்காதவன் படத்தில் ஆர்த்தி தனுஷிடம் சொல்வார்.

"நீ ரொம்ப கொடுத்து வச்சவன், எனக்கே உன்னை பிடிச்சுருக்கு"

அது போல சாரு நிவேதிதாவிற்கே உங்களை பிடித்திருக்கிறதென்றால் வாழ்க்கையில் உங்களுக்கு வேறு ஏதாவது கொடுப்பினை வேண்டுமா என்ன?

ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள் கமல்?

 "இந்த உலகின் அத்தனை அன்பும் கண்களில் பொங்க அவர்  உங்களுக்குக் கை கொடுத்தார். .  நீங்களோ ஒருக்கணம் ஆளவந்தானாகவே மாறி முகத்தைச் சுளித்தபடி கை நீட்டி விட்டு ஆளவந்தான் மாதிரியே இறுக்கமான பாவனையுடன் தலையை இடது பக்கமும் வலது பக்கமும் ரோபோ மாதிரி திருப்பியபடி சென்று விட்டீர்கள்." 

 உங்களைப் பற்றி பாராட்டி எத்தனை கட்டுரைகள் எழுதியிருப்பார் அவர்?  "அதெல்லாம் குப்பை.  ஆனால் குருதிப் புனலையும் தசாவதாரத்தையும் விமர்சித்து எழுதியதை மட்டுமே உங்கள் சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டிருப்பீர்களா கமல்" என்று கேட்கும்படி செய்து விட்டீர்களே?


ஆனாலும் எவ்வளவு பெருந்தன்மையோடு அவர் எழுதியதை படித்தீர்கள் அல்லவா? 
 
// தவிர்க்க முடியாமல் எங்காவது தங்களைச் சந்தித்தால் மீண்டும் தங்களிடம் வந்து இந்த உலகத்தின் அன்பையெல்லாம் கண்களில் தாங்கி உங்களுக்குக் கை குலுக்குவேன்.  அப்போதும் நீங்கள் முறைத்துக் கொண்டு போனால் இதுபோல் கடிதம் எழுத மாட்டேன்.  அவ்வளவுதான்.  மற்றபடி உங்கள் மீதான என் அன்பும் நட்புணர்வும் போகாது.//  

எழுத்தாளனுக்கும் நடிகனுக்கும் உள்ள வித்தியாசத்தை எவ்வளவு அழகாக அவர் சொல்லியுள்ளார் என்பதை கவனித்தீர்களா?

//மேலும், மை டியர் கமல், எம்.கே.டி.யை விடவா ஒரு சூப்பர் ஸ்டார் வந்து விடப் போகிறார்?  அவர் பெயர் இன்று யாருக்காவது தெரியுமா?  மக்கள் தங்களை சந்தோஷப்படுத்துபவர்களை சீக்கிரம் மறந்து விடுகிறார்கள்.  ஆனால், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் எழுத்தாணி பிடித்தவனை மக்கள் மறப்பதில்லை.  அவன் அந்த மக்களுடைய நினைவிலி மனதில் சென்று தங்கி விடுகிறான்.  அந்த மனம் அந்த நினைவை தலைமுறை தலைமுறையாக தனது சந்ததிகளுக்குக் கடத்திக் கொண்டே இருக்கிறது.//

நீங்கள் செய்தது நியாயமில்லை கமல். நீங்கள் பாட்டுக்கு கை கொடுத்து விட்டுப் போயிருக்கலாம். 

உலகின் மிக நீண்ட நெகிழ்ச்சி மிக்க கடிதம், அதற்கான அவர் ரசிகர்கள், உங்கள் ரசிகர்கள் எதிர்வினைகள் என்று நடைபெற்று வரும் இணைய யுத்தம் எல்லாமே  இல்லாமல் போய் நாங்களெல்லாம் தப்பித்திருப்போம். ஒரு புறாவுக்கு இவ்வளவு அக்கப்போரா என்பது போல ஒரு கைகுலுக்கலுக்கு   எவ்வளவு பெரிய சண்டை என்று எதிர்கால சமுதாயம்
அதிர்ச்சியோடு கேட்பதையும் தவிர்த்திருக்கலாம். 

அடுத்த முறையாவது ஒழிகிறத் என்று கை கொடுத்து தொலைத்து விடுங்கள். எல்லோரும் உருப்படியாக வேறு ஏதாவது எழுதுவார்கள். 

Wednesday, September 24, 2014

உங்கள் துடைப்பத்தால் சுத்தம் செய்ய ஏராளமான குப்பைகள் உள்ளது மோடிஜி

 

இந்தியாவை சுத்தமாக்க துடைப்பத்தைத் தூக்கிக் கொண்டு நானே தெருவில்  இறங்குவேன் என்று வழக்கம் போல் இன்னொரு ஸ்டண்ட் முழக்கம் அடித்துள்ள மோடி அவர்களே இது ரொம்ப பழசு. நேற்று இன்று நாளை படத்தில் லதா, பிறகு  பெயர் நினைவுக்கு வராத ஏதோ ஒரு படத்தில் வடிவேலு ஆகியோர் செய்து விட்டனர். 

இந்தியாவில் குப்பை அதிகம் உள்ளது என்பது உண்மைதான். நீங்கள் புறக்குப்பை பற்றி பேசியுள்ளீர்கள். அதை விட அதிகமாக அகக்குப்பை உங்கள் கட்சியிலும் உங்கள் குருபீடம் ஆர்.எஸ்.எஸ் ஸிடமும் உள்ளது. 

செவ்வாயில் மங்கள்யான் இறங்கியுள்ள நேரத்தில் ஆத்ம பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ராமர் பாலம் என்ற மூட நம்பிக்கைக் கட்டுக்கதை மூலம் சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளீர்கள். இன்னும் எத்தனையோ மூட நம்பிக்கைகளை பரப்புவதில் உங்கள் படைக்கு நிகர் யாரும் கிடையாது. அந்த மூட நம்பிக்கை குப்பையை முதலில் சுத்தம் செய்யுங்கள்.

இந்திய மொழிகளுக்கெல்லாம் சமஸ்கிருதம்தான் தாய் என்று சொல்லி தமிழை இழிவு படுத்தியுள்ளார் உங்கள் உள்துறை அமைச்சர்.  ஹிந்தியை திணிப்பதில் காண்பிக்கிற வேகம் இருக்கிறதே, அதை உங்கள் கூட்டணிக் காரர்களாலேயே தாங்க முடியவில்லை.  எனக்கு விருப்பமில்லாமல் என் மீது திணிக்கும் மொழி எனக்கு குப்பைதான். இந்த மொழித் திணிப்பு எனும் குப்பையை அகற்றி விடுங்கள்.

உங்களுடைய மத வெறி அஜெண்டாவைப் பற்றி ஏராளமாக எழுதியாகி விட்டது. அந்தக் குப்பை சுத்தமாகுமா சார்? கங்கை சுத்தமாகலாம். கூவம் கூட சுத்தமாகலாம். ஆனால் மத வெறியை விடுவதா? நெவர் என்று சொல்வது கேட்கிறது சார்.

காங்கிரஸ் கட்சி சேர்த்து வைத்த அதே பொருளாதாரக் கொள்கைக் குப்பையை நீங்களும் சிம்மாசனம் போட்டு மரியாதை கொடுக்கிறீர்களே? அது சுத்தமாக வாய்ப்புண்டா சார்?

இன்னும் ஏராளமான கேள்விகளோடு மீண்டும் வருகிறேன் சார்.

ஆஹா, இந்த குப்பைகளையெல்லாம் நீங்கள் சுத்தம் செய்ய புறப்பட்டால் உங்கள் கை துடைப்பத்தை உங்களுக்கு எதிராகவே  உங்களைக் கொண்டு வந்த முதலாளிகளும் குரு பீடமும் திருப்பி விடும் அபாயமும்  உள்ளதல்லவா?

பின் குறிப்பு " நீங்கள் துடைப்பத்தோடு இருப்பதாக தயாரித்து வெளியிடப்பட்ட மோசடி போட்டோ ஷாப் போட்டோ நினைவில் உள்ளதா? 

 

ஆனாலும் திரு இறையன்புவிற்கு ஓவர் குசும்புதான்



குலுக்கிய கைகளை உதறிவிட்டுப் போனதற்காக கமலஹாசன் மீது வருத்தம் கொண்டு புலம்பும் சாரு  நிவேதிதா, நீண்டதொரு கடிதம் எழுதிய அவருக்காக கண்ணீர் விடும் அவரது ரசிகர்கள், கடிதம் எழுதிய மனிதனை கலாய்க்கும் கமல் ரசிகர்கள் இப்படியாக இணையத்தில் ஒரு லாவணிக் கச்சேரி ஓடிக் கொண்டிருக்கிற போது

ஜூனியர் விகடனில் வரும் "மனிதன் மாறி விட்டான்"  தொடரில் இன்று திரு இறையன்பு மிகவும் விரிவாகவும் விளக்கமாகவும் எழுதியிருப்பது 'கை குலுக்கல்" பற்றி. 

இது கொஞ்சம் குசும்பு போல தெரிகிறதே சார்....

கை குலுக்குபவர்களை முறைத்து பார்த்து உதறிச் செல்பவர்களைப் பற்றியும் எழுதியிருந்தால் சாரு நிவேதிதாவிற்காவது கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்குமே சார்....

 
 

Tuesday, September 23, 2014

கடவுள் எப்போது "துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம் " செய்யப் போகிறார்?

அன்பே வடிவானவர், அனைவருக்கும் அருள் பாலிப்பவர் என்று சொல்லப்படும் கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் கிடையாது போல. அன்பே வடிவான கடவுளை அவரை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு அன்பைப் போதிக்கவில்லை போலும்.
 
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே என்று சொல்லப்படும் மயானத்தில்  கூட சமத்துவம் மறைந்து போன தமிழகத்தில் ஆலயத்தில் மட்டும் சமத்துவத்தை எதிர்பார்ப்பது மிகப் பெரிய மூட நம்பிக்கை என்பதை அவ்வப்போது சில சம்பவங்கள்  கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
 
அதைத்தான் புதுவையில் நேற்று முன் தினம் நடந்த சம்பவம் உண்ர்த்தியுள்ளது. மதகடிப்பட்டுக்கு அருகே  இருக்கிற கலிதீர்த்தான் குப்பம் என்ற ஊரில் உள்ள திரௌபதியம்மன்  கோயிலிலும் தலித் மக்கள் அனுமதி மறுக்கப்பட்டார்கள். போராட்டங்களுக்கு ஆட்சியாளர்கள் அனுமதி மறுப்பது என்பது இயல்பானது. ஆனால் மக்கள் வழிபடுவதை பக்தர்கள் மறுப்பது ஏனோ? கடவுளின் அருள் தலித் மக்களுக்கு கிடைக்கக் கூடாது என்ற நல்ல எண்ணமோ?
 
காற்றை, மரங்களை, நிலவை, சூரியனை, கடலை, மலைகளை இறைவன் அனைவருக்கும்தான் படைத்தான் என்று சொல்பவர்கள் கடவுளை மட்டும் ஏன் தங்களுக்கு மட்டும் சுருக்கிக் கொள்கிறார்கள்? கடவுளின் பெயரால் கட்சி நடத்துபவர்கள் ஏன் பக்தர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை கண்டு கொள்ளாமல் நத்தையைப் போல ஓட்டுக்குள் சுருங்கிக் கொள்கிறார்கள்.
 
வழிபடும் உரிமையை மீட்டெடுக்க அங்கே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி முடிவு செய்தது. வரும் செப்டம்பர் 30 அன்று தோழர் பி.சீனிவாசராவ் அவர்களின் நினைவுதினத்தன்று நேரடி நடவடிக்கையாக ஆலயப் பிரவேசப் போராட்டம் நடத்த முடிவு செய்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்திற்கு துணை நிற்க முடிவு செய்தது.
 
அதனால் ஆத்திரம் கொண்டு ஆதிக்க சக்திகள் "வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்புக்குழு" என்ற பெயரில்  ஐமப்திற்கும் மேற்பட்டவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதகடிப்பட்டு அலுவலகத்தில் அராஜகமாக நுழைந்து  அங்கே இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர். 
 
 
 
தர்மபுரியில் பற்ற வைத்த தீ இன்னும் எரிந்து கொண்டே இருக்கிறது.  இப்போது நிகழ்ந்துள்ளது கடவுளின் பெயரால். அராஜகத்தின் மூலம் ஆலயப் பிரவேசப் போராட்டத்தை தடுக்க நினைத்த மூடர்களுக்கு புரியாத விஷய்ம் ஒன்றுதான்.
 
இந்த அடக்குமுறை போராட்டத்தின் வீச்சை அதிகப்படுத்தி விட்டது. உறுதியை அதிகரித்து விட்டது. வேகத்தை கூட்டி விட்டது. செப்டம்பர் முப்பது அன்று தீ வைத்துக் கொளுத்தியவர்களின்  அடாவடியை போராட்டத் தீ பொசுக்கி விடப் போகிறது. 

எனக்கு ஒரே ஒரு சந்தேகம்:
 
இத்தனை அராஜகங்கள் செய்து தனது பக்தர்களை துன்புறுத்தும் கும்பலிடமிருந்து கடவுள் ஏன் தனது பக்தர்களை காப்பாற்றவில்லை? தீயவர்களை ஏன் துஷ்ட நிக்கிரக  சிஷ்ட பரிபாலனம்  செய்திடவில்லை? 

விசாரணை – சாட்சி- கோர்ட் அவமதிப்பு – ஜெயில்



அது ஒரு சிறிய ஊர். ஒரு வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. சாட்சி சொல்ல ஒரு மூதாட்டி அழைக்கப்பட்டுள்ளார். அவரது நினைவுகள் சரியாக உள்ளதா என்று சோதனை செய்ய நினைத்த குற்றவாளி தரப்பு வழக்கறிஞர் அந்த மூதாட்டியைப் பார்த்து

“ நான்  யார் தெரியுமா?”

என்று கேட்கிறார்.

அதற்கு அந்த மூதாட்டி

“உன்னைப் பற்றி தெரியாதா எனக்கு? நீ சுப்ரமணி. உன்னை சின்ன வயசுலேந்தே தெரியும். சின்ன வயசுல உங்க பாட்டி சுருக்குப் பையில இருந்த காசை திருடி அடி வாங்கினவன். ஸ்கூல் படிக்கும் போது பீடி குடிச்சதுக்காக உங்கப்பா உன்னை பின்னி எடுத்தாரு. காலேஜுக்கு கட்டடிச்சு சினிமா போய் மாட்டிக்கிட்டவன். இப்பவும் ஒழுங்கா வீட்டுக்குப் போகாம ஊர் சுத்திக்கிட்டு உன் பெண்டாட்டிக்கிட்ட திட்டு வாங்கற. ஒழுங்கா படிக்காம பிட்டடிச்சி பாஸ் செஞ்சுட்டு வக்கீல்னு ஊரை ஏமாத்திக்கிட்டு இருக்க. எதுக்கும் லாயக்கில்லாதவன்”

அப்படியே நிலை குலைந்த அந்த வழக்கறிஞர்.

அரசுத் தரப்பு வழக்கறிஞரைக் காண்பித்து இவரைத் தெரியுமா என்று கேட்க அந்த மூதாட்டி தொடர்ந்தார்.

“இவனைத் தெரியாதா? இவன் கிச்சு. இவன் சரியான சோம்பேறி. குடிகாரன், இவனும் உன்னை மாதிரியே ஒழுங்கா படிக்காம தட்டுத்தடுமாறி பாஸ் செஞ்சவன். லஞ்சம் கொடுத்து கவர்ண்மென்ட் லாயராகி எல்லா கேஸிலயும் சொதப்பி தோத்திக்கிட்டு இருக்கான். இன்னும் கூட இவனைப் பத்தி தெரியும் கோர்ட்டுங்கறதனால சொல்லாம இருக்கேன்”

அரசு வக்கீல் அப்படியே மயக்கமடையும் நிலைக்கு போய் விட்டார்.

இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே அழைத்த நீதிபதி மெல்லிய குரலில் ஆனால் கடுமையாக சொன்னார்

“என்னைக் காண்பிச்சு இவரைத் தெரியுமானு இரண்டு பேரில யாராவது அந்த பாட்டிக்கிட்ட கேட்டீங்க, நீதிமன்ற அவமதிப்புனு சொல்லி இரண்டு பேரையுமே ஜெயில்ல போட்டுடுவேன்”

(முகநூலில் நான் படித்த அமெரிக்க பின்னணியிலான கதையின் இந்திய வடிவம் இது)

சரி இதை எழுதினதால என் பெயரில நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்திடாதல்லவா?

Monday, September 22, 2014

உங்கள் ஆட்களிடமே இதைமுதலில் சொல்லுங்கள் மோடி

“இந்திய முஸ்லிம்கள் இந்தியாவுக்காக வாழ்வார்கள், இந்தியாவுக்காக உயிரையும் கொடுப் பார்கள்,” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி யிருப்பது பொறுப்பான பேச்சு என்பதாகப் பார்க்கப்படுகிறது. அவர் இந்த மக்களின் தேசப் பற்றை இப்போதுதான் கண்டுபிடித்தாரா என்றுகேட்கவும் வைக்கிறது. இந்தியாவில் அல் கொய்தா கிளை துவங்கப்பட்டிப்பதாகச் செய்திகள் வந்துள்ளது தொடர்பாக, சிஎன்என் தொலைக் காட்சிக்கு பேட்டியளித்த மோடி, “தனது ராகத்துக்கு இந்திய முஸ்லிம்கள் ஆடுவார்கள் என்று அல் கொய்தா கருதுமானால் தோற்றுவிடும்,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.நாட்டின் பிரதமராக அவர் இவ்வாறு கூறி யிருப்பது நல்லதுதான். கிறிஸ்துவர்கள் உள் ளிட்ட அனைத்து சிறுபான்மை மக்களுக்கும் இதுபொருந்தும். 

நாட்டை நேசிப்பதில் சிறுபான்மையினர் எல்லா வகைகளிலும் பெரும்பான்மை யினருக்கு நிகரானவர்கள்தான் என்ற எண் ணத்தை ஏற்படுத்துகிற இப்படிப்பட்ட கருத்து முக்கியமானது. சிறுபான்மையினர் மீது கிளப்பிவிடப்படும் அவதூறுகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு இது உதவ வேண்டும் என்றே நல்லிணக்கத்தை நாடுவோர் எதிர் பார்க்கிறார்கள்.ஆனால், பிரதமர் மோடி இதை அழுத்தமாகச் சொல்ல வேண்டியது அல் கொய்தாவுக்கு அல்ல, அவரும் அவரது கட்சியும் சார்ந்துள்ள சங் பரி வாரத்தினருக்குத்தான். 

 சிறுபான்மை மக்களுக்கு எதிரான பகைமைக் கருத்துகளை தூவி வருவது அவர்கள்தான். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இந்தியா இந்துக்களின் நாடு என்றார். இங்கிலாந்து மக்களை இங்கிலீஷ்காரர்கள் என்று சொல்வது போல், ஜெர்மனியில் உள்ள வர்களை ஜெர்மானியர்கள் என்று கூறுவது போல், இந்தியாவில் இருப்பவர்களை இந்துக்கள் என்றுதான் சொல்ல வேண்டும் என்று,இந்தியாவின் சிறுபான்மை மத அடையாளங் களை அழிப்பது போல் பேசினார். 

உ.பி. மாநிலத்தில் யோகி ஆதித்யநாத், “லவ் ஜிஹாத்” என்ற புதிய சொல்லாடலையே உலாவவிட்டு, முஸ்லிம் இளைஞர்கள் மீது பகை வளர்க் கும் பிரச்சாரத்தைச் செய்தார். ம.பி. மாநிலத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் உஷா தாக்குர், நவ ராத்திரி கூட்டு நடன நிகழ்ச்சிகளில் முஸ்லிம் இளைஞர்களை அனுமதிக்கக்கூடாது என்று சொல்லி, பல ஆண்டுகளாக நிலவி வருகிற நல்லிணக்கத்தின் மீது நெருப்பைப் பற்ற வைத் திருக்கிறார். பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் சிறுபான்மையினருக்கு எதிராக நஞ்சு கக்கியது பற்றியும் விரிவாகச் சொல்ல முடி யும். 

தலைவர்களின் வழியில் பல்வேறு இந்துத்துவா அமைப்புகளும் பகை வளர்ப்புக் கைங் கரியங்களில் ஈடுபட்டிருக்கின்றன.பிரதமராக இதையெல்லாம் மோடி கொஞ்சமும் கண்டுகொண்டதில்லையே! அந்தப் பின் னணியில், நீண்ட காலமாக மத நல்லிணக்கம் பேணத் தவறியதற்காக என விசா வழங்க மறுத்துவந்த அமெரிக்க அரசு, தற்போது அழைப்பு விடுத்திருப்பதால் மதச்சார்பற்றவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காகத்தான் இவ்வாறு பேசு கிறாரா என்ற ஐயம் மேலோங்குகிறது. 

ஒரு புறம் ஆர்எஸ்எஸ் திட்டப்படி ஒற்றை மத ஆதிக்கத்திற்கான செயல்திட்டங்களை நிறைவேற்று வது, இன்னொருபுறம் சிறுபான்மையினருக்கான தேசப்பற்றுச் சான்றிதழ் வழங்குநராக மாறுவது என்ற மோடியின் இரட்டை வேடத்தை நாடு புரிந்து கொள்ளவே செய்யும்.


22.09.2014  இதழின் தலையங்கம்

ஈரானில் ஒரு மசூதிக்குள்

இணையத்தில்  பார்த்தது இவை 


















 ஈரானில் உள்ள  ஒரு மசூதியோ அல்லது பல மசூதிகளின்  உள்புறத்
தோற்றம் இந்த படங்கள்.   இதை அழகாக புகைப்படம் எடுத்த வாலிபன்தான்
கடைசி படத்தில் இருப்பது.

அபாயமான சூழலில் உள்ள இரானில் அழகான மசூதி.