Showing posts with label மகாத்மா காந்தி. Show all posts
Showing posts with label மகாத்மா காந்தி. Show all posts

Sunday, March 30, 2025

ஆட்டுக்காரன் சொன்னது கரீக்டுதான் . . .

 


இந்தியாவின் முதல் குடியரசு தின விழாவிற்கு மகாத்மா காந்திக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை என்று ஆட்டுக்காரன் சொன்னது சரியான தகவல்தான்.

என்ன!

இந்தியாவின் முதல் குடியரசு தினம் கொண்டாடப்பட்ட 26,ஜனவரி, 1950 க்கு இரண்டு ஆண்டுகள் முன்மே ஆட்டுக்காரனின் முன்னோர்களான கோழை சாவர்க்கர் போட்டுக் கொடுத்த ஸ்கெட்சின் படி கோட்சே 30,ஜனவரி,1948 அன்று மகாத்மாவை கொன்று விட்டான் என்ற தகவலை மட்டும் 20,000 புக் படித்த ஆட்டுக்காரன் மறந்து விட்டான்.

எப்படி இருந்தாலும்

மகாத்மா காந்திக்கு முதல் குடியரசு தின விழாவிற்கான அழைப்பிதழ் அளிக்கப்படவில்லை என்று ஆட்டுக்காரன் சொன்னது கரீக்ட்தானே!

Sunday, February 2, 2025

உங்காளுங்களே சொல்றாங்க ஆட்டுத்தாடி ரெவி

 போன வாரம் காட்பாடி ரயில் நிலையத்தில் எடுத்த புகைப்படம் கீழே உள்ளது.

 


மகாத்மா காந்தியால் சுதந்திரம் கிடைக்கவில்லை என்று உளறிய ஆட்டுத்தாடி அறிவு கெட்ட ஆரெஸெஸ் ரெவிக்கு இரண்டாவது வரி சமர்ப்பணம்.

 

உங்க மோடி தலைமையிலான ரயில்வே அமைச்சகத்தின் சார்பிலேயே காந்திதான் அன்னை இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தார் என்று சொல்லியிருக்காங்க.

 

நீ இப்போ என்ன செய்வே? அஸ்வின் வைஷ்ணவை மாத்த சொல்லுவியா? இல்லை நாக்கை பிடுங்கிக்கிட்டு செத்துடுவியா?

Thursday, January 30, 2025

தமிழ் இந்து வெட்டிய "தகப்பன்சாமி"

 



எங்கள் தஞ்சைக் கோட்டத்தோழரும் தமுஎகச துணைப் பொதுச்செயலாளருமான தோழர் களப்பிரன் எழுதிய கட்டுரையை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

நேற்றைய தமிழ் இந்து வெளியிட்ட கட்டுரையில் வெட்டப்பட்ட பகுதிகளை ப்ரௌன் நிறத்தில் கொடுத்துள்ளேன்.

சங் பரிவாரம் பற்றிய பயமோ, கரிசனமோ, சில முக்கியமான பகுதிகள் வெட்டப்பட்டுள்ளது.

நவம்பர் 14 ம் தேதியன்று ஜவஹர்லால் நேரு பற்றிய கட்டுரையை வெளியிட மறுத்த அனுபவம் தோழர் களப்பிரனுக்கு நேர்ந்துள்ளது. இந்த கட்டுரை பிரசுரமானதற்கு அதிலே மகாத்மா காந்தி குறித்த விமர்சனங்களும் உள்ளது கூட காரணமாக இருக்கலாம்.

ஆனாலும் கூட அண்ணல் அம்பேத்கரை மகாத்மா காந்தியின் தகப்பன்சாமி என்று சொல்லும் வரி நீக்கப்பட்டுள்ளது. தலைப்பிம் கூட மாற்றப்பட்டு விட்டது. ஒருவேளை இதுவும் ஒரு வகை தீண்டாமையோ.

*அம்பேத்கர் எனும் தகப்பன்சாமி*























- களப்பிரன் Kalapiran Kalam
(நன்றி: இந்து தமிழ் திசை 30.01.2025)

இன்று வெளிவந்துள்ள கட்டுரையின் முழு வடிவம்

காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட நாளில் அம்பேத்கர் குறித்து ஏன் பேசவேண்டும்? தன் வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை காந்தியடிகளுடன் மாறுபட்ட கருத்துக்கொண்டிருந்த ஒருவர் குறித்து இந்நாளில் பேச என்ன இருக்கிறது? காந்தியடிகளை மகாத்மா என்று ஏற்றுக்கொள்ளாதவர் அம்பேத்கர். காந்தியடிகளும் அம்பேத்கர் கருத்துக்கு எதிராக தனது இதழ்களில் தொடர்ந்து பதில் எழுதிக்கொண்டே இருந்தார். இப்படி இவர்களுக்குள் இருந்த பல முரண்பாடுகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் காந்தியடிகள் வாழ்க்கையில் நடைபெற்ற மிக முக்கியமான மனமாற்றங்களுக்கு அம்பேத்கர் எந்த அளவிற்கு தாக்கம் செழுத்தினார் என்று பார்த்தோமானால், இவர்களுக்குள் இருந்தது பகை முரண் அல்ல என்பது நன்றாகத் தெரியும்.

*தீண்டாமைக்கு எதிரான தலைவர்*
1948 ஜனவரி 30ல் காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முன்பாக அவரைக் படுகொலை செய்ய ஏழு முறை முயற்சிகள் நடைபெற்றுள்ளது. அந்த ஏழு முயற்சிகளும் காந்தியடிகளுக்கும் அம்பேத்கருக்கும் நடைபெற்ற பூனா ஒப்பந்த உரையாடலுக்குப் பின்பே நடைபெற்றது. காந்தியடிகள் ஆப்ரிக்காவில் இருந்த காலத்திலிருந்தே தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்துவந்தவர் தான். தன் மனைவி கஸ்தூரிபாயை கொண்டு ஒரு ஒடுக்கப்பட்டவரின் மலச்சட்டியை சுமக்கச்சொல்லும் அளவிற்கு தீண்டாமைக்கு எதிராக சொந்த வாழ்வில் இருந்தவர் தான். 1915ல் இந்தியா வந்த பிறகு அகமதாபாத்தில் அவர் தொடங்கிய ஆசிரமத்தில் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த ஒரு குடும்பத்தை தங்கவைத்தார். அதற்காக காந்தியடிகளை வைணவப் பிரிவினர் ஊரை விட்டே ஒதுக்கி வைத்தனர். அவர் ஆசிரமத்திற்கு நிதி கொடுத்தவர்கள் தங்கள் நிதியை நிறுத்திக்கொண்டனர். ஆனாலும் காந்தியடிகள் தன் ஆசிரமத்தை தொடர்ந்து நடத்தினார்.

”தீண்டாமை ஒரு பாவகரமான செயல். அதைப் பின்பற்றுகிற நீங்கள் எல்லாம் இந்து மதத்தின் ஜெனரல் டயர்கள்” என்றும், “நாம் ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெறப் போராடுகிறோம். பெரும்பான்மை மக்களைச் சமமானவர்களாக நடத்தாமல் தீண்டாமைக் கொடுமையால் பிரித்து வைத்திருக்கும் வரை நமக்கு சுயராஜ்ஜியம் சாத்தியமே இல்லை” என்றும் 1920களிலேயே அதுவும் காங்கிரஸ் மாநாடுகளில் நின்று கொண்டு கடுமையாக பேசியவர் தான் காந்தியடிகள். ஆனாலும் சாதிய அமைப்பு குறித்தும், இந்துமத புனிதம் குறித்தும் காந்தியடிகளுக்கு இருந்த பார்வை மிகப்பழமையானவை. அப்போதெல்லாம் காந்தியடிகளின் இக்கருத்துக்கு எதிராக யாரும் வீதியில் இறங்கி போராடவில்லை.

*கிளம்பிய எதிர்ப்பு*
1932 பூனா ஒப்பந்தத்தை ஒட்டியும் அதற்கு பின்பும் அம்பேத்கருடன் நடைபெற்ற உரையாடல்கள் காந்தியடிகளிடம் பெரும் மனமாற்றத்தை ஏற்படுத்தியது. அதுவரை தீண்டாமைக்கு எதிரான கருத்துக்கள் இவரின் தனிப்பட்ட கருத்துக்களாகவே பார்க்கப்பட்டது. அம்பேத்கருடனான உரையாடலுக்குப் பின் அது ”ஹரிஜன இயக்கம்” என்று தேசிய இயக்கத்தின் வேலைத் திட்டமாக மாறியது. தீண்டாமைக்கு எதிராக காந்தியடிகள் தொடர் சுற்றுப்பயணம் செய்யத் தொடங்கி அது சூராவளியாக வீசத் தொடங்கியவுடன், அவருக்கு எதிராக இந்துமகா சபையினரின் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம், மலத்தை எடுத்து அவர் மீது வீசுதல் என்று எதிர் இயக்கத்தை தொடங்கினார்கள். முதல் முறையாக இந்தியாவில் காந்தியடிகளுக்கு எதிரான இயக்கம் தீவிரமடைந்தது அப்போது தான். அதன் உச்சமாக 1934 ஜுன் 25ல் புனாவில் அவர் சென்று கொண்டிருந்த கார் மீது குண்டு வீசி, அவரை கொலை செய்யும் முதல் முயற்சியை தொடங்கி வைத்தார்கள். அம்பேத்கரை காந்தியடிகள் சந்தித்து உரையாடாமல் இருந்திருந்தால் இந்த முதல் கொலை முயற்சியே நடந்திருக்காது.

ஆனாலும் காந்தியடிகளின் தீண்டாமைக்கு எதிரான இயக்கம் சுனக்கமில்லாமல் தீவிரமடைந்தது. கோவில் நுழைவுப் போராட்டம், தலித் அல்லாதோர் தலித்துகளை சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே அவர்களை ஆசிர்வதிப்பது என்று அவர் பணி இன்னும் வேகமெடுத்தது. ”இந்து மதத்தின் புனிதத்தை நீங்கள் கெடுக்கலாமா?” என்று காந்தியடிகளை நோக்கி வீசப்பட்ட கேள்விகளுக்கு “என்னுடைய செயலால் இந்து மதம் அழிந்தால் அழியட்டும். நான் கவலைப்படவில்லை. நான் இந்து மதத்தை காப்பாற்ற வரவில்லை. இந்து மதத்தின் முகத்தை மாற்றவே விரும்புகிறேன்” என்று கடுமையான பதிலைளித்தார். அவர் பேச்சின் சுடு தாங்காமல், “காந்தியையும் அவரைப் பின்பற்றுகிறவர்களையும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்து இல்லை என்று குறிக்க வேண்டும்” என்று ஆங்கில அரசுக்கு கடிதம் எழுதினார்கள் அப்போதைய மடாதிபதிகள். இதன் தொடர்ச்சியாக காந்தியை கொலை செய்த அதே நாதுராம் கோட்சே 1944 மே மாதத்தில் புனே அருகே உள்ள பஞ்சாக்னி என்ற இடத்தில் காந்தியடிகள் மீது கத்தியால் குத்தி இரண்டாம் கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

*இவ்வாறு நடைபெற்ற தொடர் கொலை முயற்சிகளுக்கு, காந்தியடிகள் இந்துமத சனாதனிகளின் கருத்துக்களுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டதே காரணமாகும். ஒரு முறை காந்தியடிகள், “கொலை முயற்சியிலிருந்து எனது உயிர் ஏழு முறை காப்பாற்றப்பட்டிருக்கிறது. நான் அவ்வளவு சீக்கிரம் இறந்து விட மாட்டேன். 125 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வேன்” என்று கூறினார். அதற்கு பதிலாக நாதுராம் கோட்சே தான் நடத்தி வந்த ”அக்ரனி” இதழில் “அதுவரை யார் உங்களை உயிருடன் விட்டுவைக்கப் போகிறார்கள் பார்ப்போம்” என்று வன்மத்தோடு பதில் எழுதினார். அதன் பிறகே 1948 ஜனவரி 30ல் அதே கோட்சேவால் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த அளவிற்கு காந்தியடிகளுக்கும் சனாதானிகளுக்கும் இடையே தீராப்பகையை தொடங்கிவைத்தது அம்பேத்கருடனான காந்தியடிகளின் உரையாடல்களே.*

ஆனாலும் காந்தியடிகளின் தீண்டாமை ஒழிப்புப் பணிகளை அம்பேத்கர் முழுவதும் அங்கீகரிக்கவில்லை. பல நேரங்களில் கடிந்தே சொல்லியுள்ளார். ”காந்தி ஒரு ஆச்சாரமான இந்து தான். இவரால் தீண்டாமை ஒழிக்கப்படாது. அமெரிக்காவில் கருப்பினத்தவர்களுக்காகப் போராடிய கேரிசன் போலல்ல காந்தி” என்றே விமர்சித்தார். ஆனால் மறுமுனையில் காந்தியடிகளோ, “டாக்டர் அம்பேத்கரின் விமர்சனத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. என் மீது துப்புவதற்கு கூட அவருக்கு உரிமை உண்டு. அனைத்து உயர் சாதி இந்துக்களும் தீண்டத்தகாதவர்களை நடத்துவது பாவம். நம் மீது காறி உமிழ்வதற்கு அவர்களுக்கு முழு உரிமை உண்டு. அதை செய்தால் நான் ஏற்றுக்கொள்வேன்” என்று பதிலளிக்கிறார். ஆனால் இவ்வளவு கணிவான பதிலை தன்னை எதிர்க்கும் சனாதனிகளுக்கு எதிராக காந்தியடிகள் ஒருபோதும் சொன்னதில்லை.

*காந்தி – அம்பேத்கர் உறவு*

இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு அம்பேத்கரை ஜின்னா தன் நாட்டிற்கு அழைத்தார். காரணம் அம்பேத்கர் 1946ல் அன்றைய வங்காள மாகனத்திலிருந்தே தேர்வு செய்யப்பட்டார். அது பாகிஸ்தான் வசமானது. ஆனால் காந்தியடிகள் இதில் தலையிட்டு அம்பேத்கரை மும்பை மாகாணத்திலிருந்து மீண்டும் தேர்வு செய்ய வலியுறுத்தினார். அதோடு அவரை இந்தியாவின் முதல் அமைச்சரவையில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதையும் தனது விருப்பமாக முன்வைத்தார். சனாதானிகளிடம் இருந்த பகை முரண் போல் ஒரு நாளும் காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையே இருந்த முரண்கள் பகை கொண்டதாக இருந்ததில்லை.

காந்தியடிகளைப் பொறுத்த வரையில் இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் அன்றைக்கு இருந்த நேரு, நேதாஜி, அம்பேத்கர், பிசி ஜோசி என்ற எல்லோருமே அவரின் பிள்ளை வயது உடையவர்களே. அதனால் ஒரு தந்தையின் முறுக்கோடே அவர் எல்லோரிடமும் நடந்துகொண்டார். தான் எடுத்த முடிவில் ஒருநாளும் அவர் பின்வாங்கியது கிடையாது. சில பிள்ளைகள் அவர் பேச்சை கேட்கும். சில பிள்ளைகள் அவரோடு முரண்பட்டு நிற்கும். ஆனாலும் அவர் தனது முடிவை முரண்படும் பிள்ளைக்காக மாற்றிக் கொண்டதேயில்லை. அதற்காக வருத்தப்பட்டதுமில்லை. ஆனால் ஒரே ஒரு பிள்ளை அவரின் மனசாட்சியை தூங்கவிடமால் செய்தது. அந்தப் பிள்ளை அண்ணல் அம்பேத்கர். அந்தப் பிள்ளைக்காகவே அவர் பல நேரங்களில் மனம் மாறினார். நம்மூரில் தந்தைக்கு அறிவுரை சொல்லும் பிள்ளைக்கு தகப்பன் சாமி என்ற பெயர் உண்டு. காந்தியடிகள் வாழ்வில் அவருக்கான தகப்பன் சாமி அண்ணல் அம்பேத்கர் தான்.

உமக்கு அருகதை கிடையாது ஆரெஸெஸ்.ரெவி

 


சில நாட்கள் முன்பாக காந்தி தேசத்தந்தை கிடையாது என்றும் அவரால் ஒன்றும் சுதந்திரம் வரவில்லை என்றும் உளறிய ஆட்டுத்தாடி ரெவி இன்று என்ன செய்துள்ளது என்று பாருங்கள்.


மகாத்மா காந்தியை கொலை செய்த கூட்டத்தை போற்றிக் கொண்டு அதன் கேவலக் கொள்கைகளை பரப்பிக் கொண்டு மகாத்மாவின் அனைத்து லட்சியங்களுக்கும் எதிராக செயல்பட்டு, மத வெறியை பரப்பிக் கொண்டிருக்கிற காவிக்கயவன் ஆரெஸெஸ்.ரெவியே, உனக்கு மகாத்மா காந்தியைப் பற்றிப் பேசவோ, அவர் படத்திற்கு மாலை போடவோ கொஞ்சம் கூட அருகதை கிடையாது.

போ, போய் கோட்சே படத்துக்கும் கோழை சாவர்க்கர் படத்துக்கும் பூஜை செய் . . .

Friday, January 24, 2025

கவரத்தை தூண்டும் ஆரெஸெஸ் ரெவி

 


ஆளுனர் வேலையைத்தவிர வேறு எல்லா எழவையும் செய்து கொண்டிருக்கிற ஆட்டுத்தாடி ஆரென் ரெவி இப்போது மகாத்மா காந்தியை சிறுமைப்படுத்த மட்டுமே நேதாஜியை உயர்த்திப் பிடித்துள்ளது.


இந்திய விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஜவஹர்லால் நேரு, பகத்சிங் போன்ற அனைத்து ஆளுமைகளும் முக்கிய பாத்திரம் வகித்துள்ளார்கள்.

காங்கிரஸ் கட்சியினர், கம்யூனிஸ்டுகள், முஸ்லீம் லீக் கட்சியினர் போன்ற அரசியல் கட்சிகள் அனைவரும் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

கோழை செல்பி சாவர்க்கர், வாஜ்பாய் போன்ற காட்டிக் கொடுத்த கருங்காலிகளைக் கொண்ட ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபா போன்ற துரோகிகளைத் தவிர அனைவரும் சுதந்திரம் பெற காரணம்தான்.

இதிலே ஒருவரை உயர்த்தி இன்னொருவரை சிறுமைப்படுத்துவது அற்பத்தனம், நேதாஜி மற்றும் காந்தி ஆதரவாளர்களிடையே சண்டை மூட்டும் சில்லறைத்தனம்.

மகாத்மா காந்தி கொலைகாரனை துதிக்கும் ஆரென்.ரெவி தன்னை யாராவது அடித்து அதன் மூலம் கலவரத்தை தூண்ட முடியுமா என்று முய்ற்சிப்பது போல தெரிகிறது.

அது நடக்காது.

அடிக்குமள்வுக்கு ரெவி வொர்த்தில்லை. 

Wednesday, October 2, 2024

மகாத்மா காந்தி – என்றென்றும் தேவை

 


மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அன்றைய அகில இந்தியத் தலைவர் தோழர் அமானுல்லாகான் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவத்தை மீண்டும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 கட்டுரையின் தலைப்பு “இன்றைய காலத்திற்கும் பொருத்தமாய் காந்தி”. கட்டுரையின் தலைப்பு சொல்வது போல மகாத்மா காந்தி மட்டுமல்ல, இந்த கட்டுரையும் இன்றைக்கும் பொருத்தமாக உள்ளது.

 


 

 

இன்றைய  காலத்திற்கும் பொருத்தமாய் காந்தி . . .

-         தோழர்  அமானுல்லா கான்,

                                                                                                             தலைவர்,

                                      அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்.


 

மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாளை சர்வதேச வன்முறை எதிர்ப்பு  தினமாக ஐக்கிய நாடுகள் சபை அனுசரிக்கிறது.  ஏகாதிபத்தியத்தால் தூண்டப்படும் போர்களாலும் பிராந்திய வன்முறைகளாலும் உலகம் சீரழிக்கப்பட்டு வரும் பின்னணியில் இந்தாண்டு இத்தினம் வருகிறது. ஏகாதிபத்தியத்தால் ஆட்டுவிக்கப்படும் போர் விளையாட்டுக்களின் களமாக ஒட்டு மொத்த மத்திய கிழக்கு பகுதியும் மாறி விட்டது. தங்களின் தாயகத்திற்காக பாலஸ்தீனியர்கள் போராட்டத்தை தொடர்கிறார்கள். மகாத்மாவின் சொந்த தேசமோ கலவரங்கள் நிறைந்ததாயுள்ளது.  அஹிம்சையையும் சத்யாகிரகப் போராட்டத்தையும் போதித்த அந்த மகானின் போதனைகளை நினைவு கொண்டு அதிலிருந்து கற்றுக் கொள்வதுதான் அவருக்கான உரிய  அஞ்சலியாக இருக்கும்.

 

இந்தியர்கள் மட்டுமல்லாது உலகில் உள்ள விளிம்பு நிலை மக்களின் எதிர்காலத்தையும் கூட வடிவமைத்த மிக முக்கியமான ஆளுமையாக காந்தி திகழ்கிறார். நாடுகளின் எல்லைகள் கடந்து அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால்  ஒரு முக்கியமான அடையாளமாக அவர் திகழ்வதில் வியப்பேதுமில்லை. 1869 ல் பிறந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களின்   வாழ்வு  மூன்று கண்டங்களில் அநீதிக்கும் சுரண்டலுக்கும் எதிரான போராட்டங்களில் பங்கேற்பதும் வழி நடத்துவதுமாக அமைந்திருந்தது. மனித குல வரலாற்றில் மிக மோசமான வன்முறைகள் நிகழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் அவர். பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ஆப்பிரிக்க நாடுகள் மீது நிகழ்த்திய போர்களை பார்த்தவர் அவர். இரண்டு உலகப் போர்கள் மூலம் நிகழ்ந்த கொடூரங்கள், பேரழிவுகள், மரணங்கள் ஆகியவற்றையும் இத்துணைக்கண்டத்தில் பிரிவினையின் போது பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டதையும் கண்ணுற்றவர்.  இப்போர்களாலும் மோதல்களாலும் மனித குலம் அடைந்த துயரங்ககளே தனது இலக்கை அஹிம்சையினாலும் சத்யாகிரத்தாலும் அடைய வேண்டும் என்ற உறுதியை அவருக்கு அளித்தது.

 

1915 ல் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய அவர் குறுகிய காலத்திலேயே விடுதலை இயக்கத்தின் தலைமைப்ப் பொறுப்பை எடுத்துக் கொண்டார். காந்தியின் வருகைக்கு முன்பு விடுதலை இயக்கத்தின் வீச்சு சுருங்கியே இருந்தது.  தலைமை என்பது அடிப்படையாக உயர் நடுத்தர மக்களிடமே இருந்தது. மனித குல வரலாற்றிலேயே மிகப் பெரிய மக்கள் திரள் பங்கேற்பாக காந்தி விடுதலை இயக்கத்தை மாற்றினார். இருநூறு ஆண்ட காலணி ஆதிக்கத்திற்கு எதிராக அனைத்து மதத்தினர், மொழியினர், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் என லட்சக்கணக்கானவர்கள் திரண்டனர். தேச விடுதலை குறித்த கருத்துக்கு ஒரு வடிவமளித்த அவர் ஒட்டு மொத்த உலகிற்குமே எதிர்ப்பு, கண்டனம், அமைதி வழி உடன்பாடு ஆகியவை குறித்த படிப்பினைகளை அளித்தார்.

 

இந்தியா விடுதலை பெற்ற ஆறு மாதங்களுக்குள்ளேயே காந்தி ஒரு கொலைகாரனின் தோட்டாக்களுக்கு இரையானார். இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக தன்னுயிரையே அர்ப்பணித்த தியாகியானார். முஸ்லீம்களை திருப்திப்படுத்தும் போக்கோடு செயல்படுபவர் என்று கருதி கொலைகாரன் நாதுராம் கோட்சேவும் அவனுக்கு பின்புலமாக இருந்த அமைப்புக்களும் காந்தியை வெறுத்தனர். தேசப் பிரிவினைக்கு அவர்தான் காரணம் என்று அந்த அமைப்புக்கள் அவரை அநியாயமாக வசை பாடினர். இன்று காந்தியை கொலை செய்தவன் கொண்டாடப்பட்டு கோயில்களும் கூட அவனுக்கு கட்டப்படுகின்றன.

 

கோட்சேவுக்கும் தங்களுக்கும் எந்த வித இயக்கரீதியிலான தொடர்பும் கிடையாது என்று ஆர்.எஸ்.எஸ் பலவீனமான சில முயற்சிகள் செய்தாலும் வரலாற்றுச் சான்றுகள் வேறு விதமாகவே உள்ளன. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, ஏன் பிற்காலத்தில் எல்.கே.அத்வானி கூட காந்தியை தேசத் தந்தையாக ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். இன்று இந்துத்துவ அடையாளமாக சித்தரிக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல்தான் காந்தியின் படுகொலைக்குப் பின்பு ஆர்.எஸ்.எஸை தடை செய்தவர். எம்.எஸ்.கோல்வால்கர் எழுதிய கடிதத்திற்கு 11.09.1948 அன்று அளித்த பதிலில் சர்தார் படேல் “காந்தி கொல்லப்பட்ட பின்பு ஆர்.எஸ்.எஸ் அதனை கொண்டாடியதையும் இனிப்புக்கள் பரிமாறியதையும்” குறிப்பிட்டு தனது கோபத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தினார்.

 

இன்று மோடி அரசும் வலதுசாரி அடிப்படைவாதிகளும் காந்தியை உயர்த்திப் பிடிப்பது போன்ற தோற்றத்தை அளிக்க முயன்றாலும்,  மோடி அரசு காந்திஜியை தூய்மை இந்தியா இயக்கத்தோடு சுருக்கி விட்டது. முதலாளிகளுக்கு சலுகைகளை அள்ளித்தரும் மோடி, முதலாளிகளுடனான தனது நெருக்கத்தை காந்திக்கும் பிர்லாவுக்குமான நட்பைச் சொல்லி நியாயப்படுத்துகிறார். இந்த ஒப்பீடு அபத்தமானது, கேலிக்குரியது. “தந்திரமிக்க பனியா” என்றழைத்து காந்திஜியை ஜாதிய சிமிழுக்குள் அடைக்க முயல்கிறார் பாஜகவின் அகில இந்திய தலைவர் அமித் ஷா.  காந்திக்கு இதை விட வேறென்ன இழிவு  இருக்க முடியும்?

 

வெறுப்பரசியல் எங்கும் பரவியுள்ளது. தேசிய அளவிலான விவாதம் என்பது இந்து முஸ்லீம் பிரச்சினையாக சுருங்கி விட்டது. பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையும் அடித்துக் கொல்வதும்  புதிய நடைமுறையாகி விட்டது. தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித்து விட்டது. வருமானம் மற்றும் செல்வாதாரங்களில் உள்ள  சமத்துவமின்மை அதிகரித்துக் கொண்டே உள்ளது. எதிர்க்கருத்து எனும் ஜனநாயக உரிமை துரோகமாக கருதப்படுகிறது. ஒருவரின் தனிப்பட்ட தேசிய உணர்வும் தேச பக்தியும் அராஜகமான முறையில் நடுத்தெருவில் சோதிக்கப்படுகிறது. எனவே இப்படிப்பட்ட சூழலில் நம் காலத்திய பற்றியெறியும் பிரச்சினைகளில் மகாத்மா காந்தியின் பார்வை என்ன என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.

 

அஹிம்சையும் சத்யாகிரகமும் காந்திஜி நம்பிக்கை கொண்டிருந்த இரு வழிமுறைகள். அவர்  போதித்த, தன் ஆதரவாளர்களை பின்பற்ற வைத்த அஹிம்சை மீது இந்துத்துவ சக்திகள் வெறுப்பைக் கக்கினர். காந்தி அஹிம்சையை பின்பற்றியதன் மூலம் தன் சொந்த மக்களின் ஆண்மைத்தன்மையை அகற்றி விட்டார் என்று ஆர்.எஸ்.எஸ் விமர்சித்தது. மிகக் கொடூரமான தாக்குதல்கள் நிகழ்ந்த போதும் அஹிம்சையையும் சத்யாகிரகத்தையும் உறுதியோடு பின்பற்றியதன் மூலம் காந்தி அதிகாரத்தில் இருந்தவர்களை கேள்விக்குள்ளாக்கி பின்வாங்க வைத்தார். சக்தி மிக்க எதிரிகளிடம் அவர் பெற்ற தார்மீக வெற்றி இது. இன்று உலகம் வெறுப்பாலும் மோதல்களாலும் சிக்கி தவிக்கிற வேளையில் வன்முறையோ போரோ எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. இன்று அவையேதான் பிரச்சினைகளாகவே மாறியுள்ளது. அமைதியான உடன்பாடுகள் மூலம் தீர்வினைப் பெற உலகம் காந்தியின் வாழ்விலிருந்து படிப்பினைகளை பெற வேண்டும்.

 

இந்தியா பல வேற்றுமைகளைக் கொண்ட நாடு என்பதை  அவர் உணர்ந்து கொண்டார். மதத்தில், மொழியில் ,கலாச்சாரத்தில் உள்ள இந்த வேற்றுமைகள் மதிக்கப்பட வேண்டும்.  கொண்டாடப்பட வேண்டும். அனைத்து மத நம்பிக்கை உள்ளவர்களும் இந்த நாட்டிலே அமைதியாக வாழ உரிமை உண்டு என்பதை அவர் தன் ஆதரவாளர்களிடத்தில் வலியுறுத்தினார். ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை என்பது அவரது மனதிற்கு நெருக்கமானது. பிரிவினையின் போது ஏற்பட்ட வன்முறையை அவர் ஏற்றுக் கொள்ளவும் இல்லை, அமைதியாகவும் இல்லை. வன்முறைக்கலவரங்கள் நிகழ்ந்த பகுதிகளுக்கு அவர் பாத யாத்திரை சென்று அமைதியை நிலை நாட்டவும் நல்ல புரிதல் உண்டாகவும் முயற்சிகள் மேற்கொண்டார். மதவெறியில் நிகழ்ந்த மூடத்தனங்களை முடிவுக்கு கொண்டு வர உண்ணா நோன்புகளும் இருந்தார். அவரது தார்மீக நியாயமும் ஆளுமையும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பெரிதும் உதவின.

 

முஸ்லீம்களை திருப்திப்படுத்தவும் பாதுகாக்கவுமே காந்தி உண்ணாவிரதம் இருக்கிறார் என்று அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு “இந்தியாவில் தன் உண்ணாவிரதம் முஸ்லீம்களை கொல்லும் இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் எதிரானது, அதே நேரம் பாகிஸ்தானில் இந்துக்களையும் சீக்கியர்களையும் கொல்லும் முஸ்லீம்களுக்கும் எதிரானது” என்று அவர் பதிலளித்தார். காந்திஜியின் பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர்கள் என்று உரிமை கொண்டாடும் காங்கிரஸ் கட்சியோ  அவர் காண்பித்த தைரியத்தையும்  உறுதியையும்  பின்பற்றுவதற்கான அருகதையற்றதாக மாறி விட்டது. காந்திஜியை உயர்த்திப் பிடிப்பது போல நடிக்க  முயல்பவர்கள்தான் மத மோதல்களை நிகழ்த்துபவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஊக்கமளிக்கிறார்கள். காந்தி ஒருவேளை இன்று உயிரோடு இருந்திருந்தால் சிறுபான்மையினருக்கும் எதிர்ப்புக்குரல் கொடுப்போருக்கும்  எதிரான வன்முறைகளை தூண்டி விடுகிற அரசுக்கு எதிராக நிச்சயமாக பொங்கி எழுந்திருப்பார்.

 

எதிர்ப்பு என்பதற்கு புதிய அர்த்தம் கொடுத்தவர் காந்தி. அவர் மீது பல முறை தேசத்துரோகக் குற்றச்சாட்டு பதியப்பட்டு சிறைவாசமும் அனுபவித்துள்ளார். சுதந்திர இந்தியா தேசத்துரோகச் சட்டத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று காந்திஜி கூறினார். ஆனால் 72 ஆண்டுகளுக்குப் பின்பும் இச்சட்டம் நீடித்து அரசியல் எதிரிகளையும் அரசோடு முரண்படுவோரையும் துனபுறுத்த பயன்படுத்தப்படுவதே இன்றைய நடைமுறையாகி விட்டது.

 

இன்றைய இந்தியாவில் எதிர்ப்பு என்பது துரோகமாக கருதப்படுகிறது. அரசின் கொள்கைகளைகளை எதிர்ப்பவர்களும் பெரும்பான்மைக் கருத்துக்களை ஏற்காதவர்களும் தேச பக்தியற்றவர்களாகவும் தேச விரோதிகளாகவும் முத்திரை குத்தப்படுகின்றனர். காந்தியைப் பொறுத்தவரை அனைத்து மக்களுடைய நலம்தான் தேச பக்தி. தேச பக்தி என்பது என்னை பொறுத்தவரை சுதந்திரமும் அமைதியும் நிலவும் நாட்டிற்கான என் பயணத்தின் ஒரு பகுதியே என்று கூறியவர் அவர். அவரது தேசியம் என்பது எப்போதுமே குறுகியது அல்ல. அனைவரையும் உள்ளடக்கியது. உலகளாவிய சகோதரத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர் அவர். உண்மையிலேயே அவர் உலகளாவிய தன்மை கொண்டவர்.

 

தீண்டாமையை ஒழிப்பதில் காந்திஜி போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற இன்னொரு விமர்சனமும் அவர் மீது உண்டு. காந்திஜி நிச்சயமாக தீண்டாமைக்கு எதிரானவர், தீண்டாமையை ஒழிப்பதன் மூலம் இந்துயிஸத்தை  பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர். அம்பேத்கர் இது விஷயத்தில் காந்தியோடு முரண்பட்டார். தீண்டாமையை உள்ளடக்கிய ஜாதிய முறையே இந்துயிஸத்தின் அடிப்படை என்றும் ஜாதிகளை ஒழிப்பதன் மூலமே தீண்டாமையையும் ஒழிக்க முடியும் என்றார் அவர். மிக முக்கியமான முரண்பாடுகள் இருந்த போதிலும் இருவரும் மற்றவர் மீது நல்ல மதிப்பு கொண்டிருந்தார்கள். ஜாதிகளை ஒழிக்க அரசியல் சாசன அடிப்படையில் அழுத்தம் அளிக்க அம்பேத்கர் முயன்றார். ஜாதிய பாரபட்சத்திற்கு எதிராக விழிப்புணர்வை உருவாக்கவும் மக்களிடம் நல்ல சிந்தனையை உருவாக்குவதும் அவசியம் என்று காந்தி கருதினார்.  தீண்டாமைக்கு எதிராக 1933 ல் காந்தி நாடு தழுவிய ஒரு பிரச்சாரப்பயணத்தை மேற்கொண்டிருந்தார். தீண்டாமையை சட்டபூர்வமற்றதாக மாற்றுமாறு இப்பிரச்சாரத்தில் வற்புறுத்தினார்.

 

தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று காந்திஜியும் ஜாதிகளை ஒழிக்க வேண்டும் என்று அம்பேத்கரும் கண்ட கனவுகள் இன்னும் ஈடேறவில்லை. மாறாக இந்திய சமூகத்தில் ஜாதி இன்னும் வலுவாக வேரூண்றியுள்ளது. தங்கள் அரசியல் லாபங்களுக்காக உழைக்கும் மக்களை பிளவு படுத்தும் ஆயுதமாக ஆட்சியாளர்கள் ஜாதியை பயன்படுத்துகின்றனர்.

 

பசுக்களை பாதுகாப்பது என்ற பெயரில் “அடித்துக் கொல்லும் கும்பல் வன்முறை” அதிகரித்து வருவதை இந்தியா பார்த்துக் கொண்டு இருக்கிறது. பசுப் பாதுகாப்பு கும்பல்கள் நிர்வாகத்தின் செயலின்மையாலும் அரசின் மறைமுக ஆதரவாலும் ஊக்கம் பெறுகிறார்கள். முந்தைய யு.பி.ஏ ஆட்சிக் காலத்தில் பிங்க் புரட்சி நடந்ததாக 2014 பிரச்சாரத்தின் போது மோடியே குற்றம் சுமத்தி பேசியதின் விளைவு இது.  மோடியின் கடந்த நான்காண்டு ஆட்சிக் காலத்தில் மாட்டிறைச்சியின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது என்பதும் உலகிலேயே அதிகமான மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது என்பது ஒரு நகைமுரண். ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள யாரும் முஸ்லீம்கள் அல்ல, மாறாக தற்போதைய ஆட்சியாளர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களே.

 

காந்திஜி இவ்விஷயத்தில் தெளிவான கருத்து கொண்டிருந்தார். அவர் பசுவை மதித்தார். ஆனால் முழுமையான கருத்தொற்றுமை இல்லாமல் பசு வதைத் தடைச் சட்டம் கொண்டு வருவதை எதிர்த்தார். ஒரு சமூகத்தினரின் மத நம்பிக்கை இன்னொரு சமூகத்தினர் மீது திணிக்கப்படக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். பசுவைப் பாதுகாக்க மனிதனைக் கொல்லக் கூடாது என்பதில் அவர் தீர்மானமாக இருந்தார். இந்தியாவின் எதிர்காலத்தை அரசியல் சாசனம்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர பெரும்பான்மைக் கருத்துக்கள் அல்ல என்று வலியுறுத்தினார். இன்று நடப்பதோ முற்றிலும் முரணானது. தேர்தல் ஆதாயங்களுக்காக பசுவும் ஒரு அரசியல் ஆயுதமாகி விட்டது.

 

மேற்கத்திய பாணியிலான முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சியை காந்தி நிராகரித்தார்.  இதில் அவர் தனித்து இருக்கவில்லை. முதலாளித்துவ பாணியிலான வளர்ச்சி  என்பது  நிலைக்கத்தக்கதல்ல என்று பல முற்போக்கு சக்திகளும் கூறினார்கள். சுதேசி முறையும் ஆள்வோருடனான ஒத்துழையாமையும் தன்னிறைவையும் சுய சார்பையும் அடைவதற்கான ஆயுதங்கள் என்று அவர் கருதினார். பரவலாக்கலே அவரது பொருளாதாரம், ஆன்மீகத்தின் அடிப்படையிலானது. பொருள் முதல் கண்ணோட்டமுடையது அல்ல.  நவீன தொழில்நுட்பத்தினை சந்தேகத்தோடு பார்ப்பவர் அவர். வர்க்கப் போராட்டத்தை நிராகரிக்கிற அவர் தர்மகத்தா முறையை முன்னிறுத்தினார். அவரது பொருளாதரம் குறித்த புரிதலில் ஏராளமான குறைபாடுகள் உண்டு. முதலாளித்துவ பொருளாதாரத்தின் ஒரு அங்கம் சுரண்டல் என்பதால் வர்க்கப் போராட்டத்தை தவிர்க்க இயலாது. முதலாளித்துவத்தின் மையம் லாபமே தவிர மக்களின் நலன் அல்ல. எனவே அங்கே தர்மகத்தா முறை என்பது சாத்தியமற்றது.

 

உலகிலேயே இரண்டாவது சமத்துவமற்ற சமூகமாக இந்தியா திகழ்வதிலேயே இது தெளிவாகிறது. முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சியினால் சிலர் கையில் மட்டுமே செல்வம்  குவிகிற நிலை ஏற்பட்டுள்ளது. அதிவேக நகரமயமாக்கலாலும் அதன் விளைவால் ஏற்படும் பிரச்சினைகள், கற்பனை கூட செய்ய முடியாத அளவிற்கு இயற்கை வளங்களை சூறையாடுவதும்  இயற்கைச் சூழலுக்கும்  வறுமை ஒழிப்புக்கும் மறு வினியோகத்திற்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களின் பின்னணியில் பார்க்கையில்  கிராமப்புற தன்னிறைவு குறித்த காந்தியின் கருத்துக்களை நம்மால் நிராகரித்து விட முடியாது.

 

உயிர் வாழும் காலத்தில் காந்தியை உதாசீனப்படுத்திய, அவரது மரணத்தை கொண்டாடிய வடதுசாரி சக்திகள் இப்போது அவரை உயர்த்திப் பிடிக்க முயல்கிறார்கள்.  இது ஒரு நாணயமற்ற செயல். அவர்கள் கட்டமைக்கும் அரசியல் சதி முறியடிக்கப்பட வேண்டும்.  சுரண்டப்படும் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைக்கக்கிற உழைக்கும் வர்க்கத்தால் இந்த பிரிவினை சதிகளை எதிர்கொள்ள முடியும்.  அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளின் அடிப்படையிலும் பொருளாதார சம நீதியின் அடிப்படையிலும் ஒரு புதிய அரசியல் சமூக முறையை உழைக்கும் வர்க்கம் உருவாக்க வேண்டும்.

 

காந்திஜி மிகவும் சிக்கலான ஒரு ஆளுமை. உழைக்கும் வர்க்கத்தின் சில அமைப்புக்கள் போல அவரை பூர்ஷ்வாக்களின் தரகர் என்று அவ்வளவு எளிதாக நிராகரிக்க முடியாது. மாறாக இந்த நவீன தாராளமயமாக்கல் சூழலில் இந்தியாவின் தலைசிறந்த புதல்வரின் 150 வது பிறந்த நாளில்  அவரது “சத்திய சோதனை” யை மறு மதிப்பீடு செய்து அதிலிருந்து கற்றுக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

 

இன்சூரன்ஸ் வொர்க்கர் அக்டோபர் 2018 இதழ் கட்டுரையின்

தமிழாக்கமும் வெளியீடும்

 


காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்,

                     வேலூர் கோட்டம்

Thursday, May 30, 2024

பு.மா ஆஜானை காப்பியடித்த மோடி

 


யார் சொன்னார் என்ற தகவல் இல்லாமல் “திரைப்படம் வந்த பின்னரே காந்தியை உலகுக்கு தெரியும்” என்ற அற்புதமான கருத்தைத்தான் முதலில் பார்த்தேன்.

இது போன்ற அரிய கருத்துக்களை வெளியிடும் ஆற்றல் நம் புளிச்ச மாவு ஆஜான் ஜெயமோகனுக்கு மட்டுமே உரியதல்லவா என்று அவர் பக்கம் போய் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன். பிறகு இன்னொன்றும் தோன்றியது. ஜெமோ அப்படியெல்லாம் தன்னைத் தவிர இன்னொருவருக்கு அதிலும் வெளிநாட்டு கிறித்துவர் ரிச்சர்ட் அட்டன்பரோவுக்கெல்லாம் பெருமை தர மாட்டாரே என்பது நினைவுக்கு வந்தது. பிறகுதான் தெரிந்தது அது மோடி சொன்னது என்று.

மோடியின் கருத்து பற்றி என்ன சொல்ல? அந்த முட்டாளுக்கு தெரிந்தது அவ்வளவுதான் என்று சென்று விட முடியுமா? கோட்சேவை கும்பிடும் மோடி எனும் ஜந்து மகாத்மா காந்தியினை இழிவு படுத்துவது இது முதல் முறையல்ல. மகாத்மா காந்திடின் சிறப்பு என்று ஏராளமாக இருக்க, தூய்மை என்ற ஒன்றை மட்டும் வைத்து சொச்ச பாரத் என்று விளக்குமாறோடு ஒரு நாள் போட்டோஷூட் முடித்த ஆள்தானே இது!

இந்த முறை மகாத்மாவை இழிவு படுத்த மோடி கையாண்ட டெக்னிக் காப்பியடித்தது. புளிச்ச மாவு ஜெயமோகனிடம் காப்பியடித்தது.

“பின் தொடரும் நிழலின் குரல்” என்ற அந்தாளின் கம்யூனிசத்தின் மீது வெறுப்பை கக்கும் நாவலைப் படித்த பின்பே “லெனின் என்று ஒருவர் இருந்தார்” என்று தனது வாசகர்கள் அறிந்து கொண்டார்கள் என தடம் இதழிற்கு அளித்த நேர்காணலில் பெருமையாக சொல்லிக் கொண்டார்.

லெனின் யாரென்று தெரியாத கூமுட்டைகள்தான் அவரது வாசகர்கள் என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் ஆஜோனுக்கோ அப்படிப்பட்ட கூமுட்டைகள் வாசகர்களாக இருப்பதுதான் பெருமை.

மோடி தன் பாணியை காப்பியடித்து விட்டார் என்று ஆஜான் எப்போது எண்பது பக்க கட்டுரை எழுதப் போகிறாரோ?

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்…

மோடி, ஜெயமோகன் போன்ற சில்லறைகளால் மகாத்மா காந்தியின் புகழையோ, புரட்சித்தலைவர் தோழர் லெனினின் புகழையோ சிறுமைப் படுத்திட முடியாது. இந்த சில்லறைகள் நெருங்க முடியாத சிகரத்தின் உச்சியில் இருப்பவர்கள் அந்த மகத்தான இரு தலைவர்களும் . . .

 

Wednesday, January 31, 2024

“மாலன்”ன்னா அடிப்பாங்க!

 


மூமூமூமூத்த்த்த்த்த்த்த எழுத்து வியாபாரியை நேற்றிலிருந்து  முகநூலில் அடி பின்னிக்கொண்டு இருக்கிறார்கள். அதற்குக் காரணம் அவர் எழுதிய பதிவொன்று.

 


இந்த பதிவிற்கு அடிக்காமல் கொஞ்சவா செய்வார்கள் என்று நீங்கள் கேட்கலாம். ஆமாம். இதற்கு அடிக்காமல் வேறெதற்கு அடிப்பது!

 ஆனால் இதிலே ஒரு விஷயம் என்னவென்றால் போர்த்தந்திர நிபுணர் மேஜர் மாலன் இப்போது எழுதிய பதிவல்ல இது. மூன்றாண்டுகள் முன்பு எழுதியது. அப்போது மாலனுக்காக நான் தயாரித்த ஸ்பெஷல் பாயசம் கீழே உள்ளது.

 

Tuesday, February 2, 2021

காந்தியைக் கொன்றது மாலனே

 


காந்தியை கோட்சேவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் கொல்லவில்லை என்று வரலாற்றை மாற்றுவதற்கு மிகவும் மெனக்கட்டதன் மூலம் காந்தியை   கொலை செய்த படுபாவிகள் பட்டியலில் இணைந்துள்ள மூமூமூத்த்த்த்த்த்த்த்த்த பத்திரிக்கையாளர் மாலனுக்கு வாழ்த்துக்கள் .

ராணுவ தந்திர மேதையாக மட்டுமல்லாமல் பொருளாதார மேதையாகவும் உருவெடுத்துள்ளார் மாலன். அது பற்றி தனிக் கச்சேரி விரைவில்.  ஆஜானின் குண்டர் படை தளபதி போதைக்கவி, முத்தக்கவி லச்சூவும் பொருளாதார மேதையாக மாறியுள்ளார். அவருக்கும் நிச்சயம் உண்டு கச்சேரி.

முந்தைய பதிவு மீண்டும் உலா வந்து இப்போது வாங்கிக் கொண்டிருக்கிறார். அதில் தவறே கிடையாது. கோட்சேவையும் ஆர்.எஸ்.எஸ் ஸையும் பாதுகாக்க அவர் செய்த திசை திருப்பும் வேலை அவ்வளவு கேவலமானது, நச்சுத்தன்மை உடையது. அந்த கருத்திற்காக அவர் வருந்தவில்லை. திரும்பப் பெறவில்லை. அதனால் அவரை அடி பின்னுவது மிகச் சரியானது.

 ஆமாம்.

 அதனால் எத்தனை நாளானாலும் “மாலன்”ன்னா  அடிப்போம்.

 பிகு: மாலனுக்கு எழுதப்பட்ட ஏராளமான எதிர்வினைகளில் தோழர் ஷோபனா நாராயணன் அவர்களின் பதிவு மிகச்சிறப்பாக இருந்தது. ஊமைக்குத்து. அதை சுட்டு நாளை பகிர்கிறேன்.

 

Tuesday, January 30, 2024

கோட்ஸேவின் தோட்டாக்களை . . .

 


சுதந்திர இந்தியாவின்
முதல் களங்கம், அந்த 
முதல் அரசியல் படு கொலை,
கோட்சேவின் தோட்டாவிற்கு
காந்தி மட்டுமா குறி!
மத நல்லிணக்கமும் 
மக்கள் ஒற்றுமையும்
மாண்டு போகத்தானே சுட்டான் அவன்!
சுட வைத்தார்கள் அவர்கள்!!

கோட்சேவின் தோட்டாக்கள்,
இன்றும் துரத்துகிறது,
ஆளும் கட்சியாய், அதன் குருபீடமாய்,
அற்ப சங்கிகளாய்,
அமலாக்கத்துறையாய், ஆளுநரிகளாய்,
மக்கள அழிக்க மேலும் வெறியுடன்.

தாக்க வரும் தோட்டாக்களை 
துரத்தி விட தவறினால் 
ஆயிரமாயிரம் காந்திகள்
ரத்தம் சிந்துவர்,
அஞ்சலி செலுத்த யாருமின்றி



Thursday, January 25, 2024

சண்டை மூட்டும் ஆட்டுத்தாடி . . .

 



மகாத்மா காந்தியை மட்டம் தட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை உயர்த்திப் பேசியுள்ளது ஆட்டுத்தாடி ரெவி. அந்தாளுக்கு நேதாஜி மீதெல்லாம் மரியாதை கிடையாது. இவர்களின் குருநாதர் சாவர்க்கரின் முதலாளியான பிரிட்டிஷார் கடை பிடித்த “பிரித்தாளும் சூழ்ச்சி” தந்திரம்தான்.

 


ஆட்டுத்தாடியின் பேச்சில் கடுப்பானவர்களில் சிலர் காந்தியை உயர்த்திப் பேசுவார்கள், அதிலும் சிலர் நேதாஜியை மட்டம் தட்டுவார்கள். நேதாஜியின் ஆதரவாளர்கள் காந்தியை மட்டம் தட்டுவார்கள். இப்படியே இது ஒரு சர்ச்சையாக போகும். அதைப் பார்த்து ரெவி இளித்துக் கொண்டிருக்கும்.  ரெவியும் டமில் மியூசிக்கும் ஆட்டுக்காரனும் நிர்மலா அம்மையாரும் பொய்களைப் பரப்பி கலவரத்தை தூண்ட முயற்சித்தது மறைந்து போய் விடும்.

 வரலாறு இல்லாததால் பொய்யான வரலாற்றை பரப்புகிறது ஆட்டுத்தாடி. மகாத்மா காந்தியின் வருகைக்குப் பின்பே விடுதலைப் போராட்டம் ஒரு மக்கள் இயக்கமாக மலர்ந்தது. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம், பிரிட்டிஷாருக்கு அச்சத்தை உருவாகியது. ஆனால் அவர் 1945 ஆகஸ்டில் மறைந்து விட்டார்.  இந்திய விடுதலையை இனியும் தாமதிக்க முடியாது என்ற நிலைமையை உருவாக்கியது 1946 ல் நடைபெற்ற கப்பற்படை மாலுமிகளின் புரட்சி. பம்பாயில் நடைபெற்ற அப்போராட்டத்திற்கு துணை நின்றவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டுமே.  இதெல்லாம் ஆட்டுத்தாடிக்கு தெரிந்திருந்தால் உளறிக் கொண்டிருக்க மாட்டார்.

 சாவர்க்கரை வழிபடும் ஜந்துவிற்கு விடுதலை யாரால் வந்ததென்று எதற்கு கவலை? சுபாஷ் சந்திர போஸே சாவர்கரையும் இந்துத்துவ சக்திகளையும் கழுவி ஊற்றியுள்ளார். அந்த ஆவணங்களை மீண்டும் உலா வர வைத்ததுதான் ரெவியின் சதியால் விளைந்த பயன்.




சுபாஷ் சந்திர போஸ்:
மதவாதம் தன் அசிங்கமான தலையைத் தூக்கி முழு நிர்வாணமாக நிற்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களும் ஏழைகளும் விவரமறியாதவர்களும் கூட விடுதலைக்காக ஏங்குகின்றனர். இந்துக்கள் நாட்டில் பெரும்பான்மையாக இருப்பதால் இந்து ராஜ்ஜியம் வேண்டும் என்கிற குரல் கேட்கிறது. இவையெல்லாம் பயனில்லாத சிந்தனைகள். உழைக்கும் வர்க்கம்   சந்திக்கும் பிரச்சினைகள் எதையாவது மதவாதம் தீர்க்க முடியுமா? அப்படிப்பட்ட எந்த அமைப்பாவது வ்றுமைக்கும் வேலைவாய்ப்பின்மைக்கும் தீர்வுகளை வைத்திருக்கிறதா? சாவர்க்கரும் இந்து மகாசபையும்
செய்யும் முஸலிம்  எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு நடைமுறையில் பிரிட்டிஷ் அரசுடன் அவர்களின் கூட்டுறவு என்பதே பொருள்.

 தமிழில் : தோழர் விஜயசங்கர், முன்னாள் ஆசிரியர். FRONT LINE 

 ஆனால் இதற்கெல்லாம் அந்த ஜந்து ரோஷப்பட்டுக் கொண்டு ஒரு முழம் கயிற்றையோ, தண்டவாளத்தையோ, பாலிடாயிலையோ தேடாது.

 சங்கிகளுக்கு ஒரு விஷயத்தை தெளிவாகச் சொல்ல வேண்டும்.

 இந்திய விடுதலை என்பது நீண்ட நெடிய போர். இதிலே காங்கிரஸிற்கும் பங்கு உண்டு, கம்யூனிஸ்டுகளுக்கும் பங்கு உண்டு. முஸ்லீம் லீக்கிற்கும் பங்கு உண்டு. ஆர்.எஸ்.எஸ் மட்டுமே துரோகப் பாத்திரத்தை வகுத்தது.  இந்திய மக்கள் ஜாதி, மதம் மறந்து போராடியதன் வெற்றிக்கனிதான் இந்திய சுதந்திரம்.

 இங்கே காந்தியும் கதாநாயகர், சுபாஷ் சந்திர போஸும் கதாநாயகர், பகத்சிங்கும் ஜவஹர்லால் நேருவும் இன்னும் பல தலைவர்களும் நாயகர்கள். ஒரே ஒரு வில்லன் கம் காமெடியன் உங்கள் குரு கோழை செல்ஃபி சாவர்க்கர்தான்.

 

Saturday, October 7, 2023

ராகுல் காந்தி ஜாக்கிரதையாக இருக்கட்டும்

 


கீழே உள்ளது மகாத்மா காந்தியை கொன்ற மத வெறியன் நாதுராம் கோட்சே தான் நடத்தி வந்த பத்திரிக்கையில் போட்ட கார்ட்டூன்.


மகாத்மா காந்தியை பத்து தலை ராவணனாக சித்தரித்த கோட்ஸே பின்பு அவரைக் கொன்றான் என்பது இந்தியாவின் துயரம் தோய்ந்த ரத்த வரலாறு, படத்தில் பக்கத்தில் இருப்பது மன்னிப்பு கடித புகழ் கோழை சாவர்க்கர் என்பது கவனிக்கத்தக்கது.


மேலே உள்ள படத்தை சங்கி சுமந்தின் ட்விட்டர் பக்கத்திலிருந்து எடுத்தேன். அவர் கூட பாஜகவின் பக்கத்திலிருந்த பதிவை பகிர்ந்து கொண்டு பாஜக பதற்றமடையத் தொடங்கியுள்ளது என்றுதான் எழுதி சேம் ஸைட் கோல் அடித்திருந்தார்.

மகாத்மாவை பத்து தலை ராவணனாக சித்தரித்து பின்பு அவரைக் கொன்ற சங் பரிவார அமைப்புக்கள் ராகுல் காந்தியையும் அது போல ஏதாவது செய்வதற்கு தங்கள் கிரிமினல் சங்கிகளை உசுப்பேற்றி விடுகிறார்களோ என்று தோன்றுகிறது.

அரசியல் ஆதாயத்திற்காக எந்த கேவலத்தையும் அராஜகத்தையும் செய்ய ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தயங்காது.

அதனால் ராகுல் காந்தி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது மிகவும் முக்கியம். . . 

Wednesday, September 27, 2023

சொச்ச பாரத் – மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்கய்யா

 




டிமோ ஆட்சிக்கு வந்த 2014 ம் ஆண்டு மகாத்மா காந்தியை நினைவு கூற எல்லோரும் கையில் துடைப்பத்தோடு சாலைகளை பெருக்க வேண்டும் என்றார்.

மகாத்மா காந்தியின் மத நல்லிணக்கம், நேர்மை, கிராமப்புற முன்னேற்றம் போன்ற ஏராளமான விழுமியங்களை குழி தோண்டி புதைத்து விட்டு ஏதோ சுத்தம் மட்டும்தான் காந்தியின் அடையாளம் என்று கட்டமைத்தார். அதற்காக எல்லோரும் (அதாவது அரசுத்துறை, பொதுத்துறை ஊழியர்கள் மட்டும்) சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு படிவம் வேறு அனுப்பினார்கள்.

“நான் சுத்தமாக இருப்பேன். குப்பை போட மாட்டேன், யாரையும் குப்பை போட விட மாட்டேன், வாரத்திற்கு இரண்டு மணி நேரம் என்று வருடத்திற்கு 100 மணி நேரம் துடைப்பத்தோடு உழைப்பேன். நான் இன்னும் நூறு பேரை இந்த பணியில் இணைத்து அவர்களையும் நூறு மணி நேரம் துடைப்பத்தோடு அலைய வைப்பேன்”


அந்த ஷபத் வாசகங்கள் மேலே உள்ளது போலத்தான் இருக்கும்.

 


அந்த சொச்ச பாரத் கூத்தெல்லாம் இரண்டு மூன்று மாதங்களோடு முடிந்து போனது. தான் எடுத்த ஷபத்தை டிமோவே நிறைவேற்றவில்லை. சீன ஜனாதிபதி இந்தியா வந்த போது மகாபலிபுரம் கடற்கரையில் போட்ட சீனோடு சரி. அப்படி ஒவ்வொரு வாரமும் அவர் சொச்ச பாரத் செய்திருந்தால் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களில் இருக்கும் குப்பைகளால் சமூக ஊடகங்களே நாறியிருக்கும்.

 இதோ ஆட்சியின் அந்திமக் காலத்தில் மீண்டும் சொச்ச பாரத் கூச்சல் தொடங்கி விட்டது. அதே படிவம் அதே ஷபத். தொலைபேசியில் காலர் ட்யூனாக புரியாத இந்தியில் சொச்ச பாரத், சொச்ச பாரத்.

 அரசின் உத்தரவுக்கு இணங்க, மேலதிகாரிகளின் கட்டளையை அமலாக்க அக்டோபர் முதல் நாள் சொச்ச பாரத் நடத்த பொதுத்துறை நிறுவனங்கள் துடைப்பத்தோடும் அதை விட முக்கியமாக காமெராவுடனானும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 வீடியோ எடுத்தால் பின்னணியில் ஒரு பாட்டு முழங்கட்டும்

 “நேற்று, இன்று, நாளை” திரைப்படத்தில் “தம்பி, நான் படிச்சேன் காஞ்சியில நேற்று” பாடலில் வரும்

 “தெருத்தெருவா கூட்டுவது பொது நலத் தொண்டு, ஊரார் தெரிந்து கொள்ள படமெடுத்தால் சுய நலம் உண்டு”