Saturday, December 31, 2011

2011 ம் ஆண்டிற்கான சூப்பர் விருதுகள்


2011  ம்  ஆண்டிற்கான சூப்பர் விருதுகள் 
முதல் கட்ட விருதுகள் இன்று 
வழங்கப்படுகின்றன. போகப் போக 
மேலும் பலருக்கு மேலும் பல 
விருதுகள் வழங்கப்படும் 


 கடைசி உண்ணாவிரத பல்டி காரணமாக
ஹீரோவிலிருந்து  ஸீரோ விருது
 



 குடிசைகளில் தங்கி வாக்கு சேர்க்க முயல்வதால்
மாடி வீட்டு ஏழை  விருது 
 



திஹார் சிறைவாசம் மூலம் கண்ணீர் வரவழைத்ததால்
நானே ஒரு டி.வி.  சீரியல் விருது
 


வேட்டி கிழிபடும் கலாசாரம் கொண்ட 
கட்சியின் மாநிலத் தலைவரானதால்
புதிய பலி கடா விருது 
 


செய்வதை ஒழுங்காக செய்யத் தெரியாமல் மாட்டிக் கொண்டவருக்கு
மச்சம், மறு ஒட்டி மாறு வேட விருது
  



ரத யாத்திரையை விடாமல் பிடித்து தொங்குவதால்
நானே நல்ல சாரதி விருது 
  

 வீதியில் அமர்ந்து வேலை பார்ப்பேன் என்று வீரம் பேசியதால்
வாய்ச்சொல் கடமை வீரர் விற்றது
 

 இரண்டு அறை வாங்கியும் தெம்பாக சமாளித்ததால்
ஸ்ட்ராங் மேன் விருது
 பிரிவினை  நாடகமாய் இருக்கும் என்ற சந்தேகம் இருப்பதால்
ஃ பெவிகால் விருது
 

நூறாவது நூறுக்காக ரசிகர்களை காக்க வைப்பதால்
கன்னித்தீவு சிந்துபாத் விருது
 
 கடாபியை போட்டுத் தள்ளியதால் 
சிறந்த கூலிப்படை பாஸ் விருது 
 
 கேரளக் காங்கிரசைக் கண்டித்து உடன் பல்டி அடித்ததால்
சர்க்கஸ் பபூன் விருது 

அண்ணன் மன்மோகனுக்கு விருது இல்லாமல்
ஒரு பட்டியலா? 






 
 எனக்கு எதுவும் தெரியாது என்றே 
சொல்லிக் கொள்வதால்
அவருக்கு 
மக்கு பிளாஸ்திரி   விருது 
வழங்கி சிறப்பு செய்கிறோம். 
அடுத்த பட்டியல் விரைவில் 

Friday, December 30, 2011

தவிர்க்க முடியாத மாமனிதர்கள்

 

ஆனந்த விகடன் பத்திரிகை  வார இதழில்  2011 ம்  ஆண்டின்
டாப் டென் மனிதர்கள் பட்டியலில்  இடதுசாரி இயக்கத்தைச் 
சேர்ந்த  இருவரின் பெயர்கள்  இடம் பெற்றுள்ளது. 




ஒருவர்  மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும்,
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர், தமிழ்நாடு
விவசாயிகள் சங்கத்தின்  பொதுச்செயலாளர் தோழர் பெ.சண்முகம்
மற்றும்   பொதுப்பள்ளிகளுக்கான  மாநில மேடையின் 
அமைப்பாளர் தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோரே 
அந்த இருவர். 




வாச்சாத்தி வன்கொடுமையில்  பாதிக்கப்பட்ட அந்த 
அப்பாவிப் பெண்களுக்கு  நியாயம் கிடைக்க நடைபெற்ற
உறுதியான போராட்டத்தின் முன்னணித் தோழர் 
தோழர் சண்முகம். ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட
இரு நூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு  தண்டனை 
வழங்கப்பட்ட  ஒரே வழக்கு  இது.




அதே போல் சமச்சீர் கல்வி விஷயத்தில் ஜெ 
குட்டு வாங்க முக்கியக் காரணம் தோழர் 
பிரின்ஸ் கஜேந்திரபாபு. மெட்ரிகுலேஷன் பள்ளி
ஒன்றை  நடத்திக் கொண்டே, மெட்ரிகுலேஷன் 
பள்ளிகள் நடத்தும் அக்கிரமங்களை தொடர்ந்து
அம்பலப்படுத்தி  வருபவர். 


பொதுவாக  முதலாளித்துவ ஊடகங்கள் 
இடதுசாரி இயக்கங்கள்  நடத்தும் போராட்டங்களை
கண்டு கொள்ளாது. அன்னா ஹசாரே போன்ற 
போலி பிம்பங்களை மட்டுமே முன்னிறுத்தும்.




அதையும் தாண்டி இரண்டு இடதுசாரிகள்  இந்த
பட்டியலில்  என்றால்  அதற்கு  அந்த இயக்கம், 
மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டங்கள் 
மக்கள் மனதில் அழுத்தமாக  தடம் பதித்துள்ளது
என்றுதான் பொருள்.  




கடந்த ஆண்டு தோழர்கள் பி. சம்பத் மற்றும் ஜி.லதா 




இந்த ஆண்டு தோழர்கள் பி.சண்முகம் மற்றும்
தோழர் பிரின்ஸ் கஜேந்திர பாபு. 




இடதுசாரிகள், மார்க்சிஸ்டுகள் அங்கீகாரத்திற்காக
பணி செய்பவர்கள் அல்ல. ஆனாலும் அப்பணியை 
யாராலும் ஒதுக்கி விட முடியாது.
   
தோழர் பி.சண்முகம் எங்கள் சங்கக்கூட்டத்தில்