Wednesday, February 28, 2018

சங்கரராமனிடம் மன்னிப்பு - வாய்ப்பில்லை




ஜயேந்திர சரஸ்வதி மரணம் தொடர்பாக “உங்களுக்காக சங்கரராமன் காத்திருப்பார். இப்போதாவது அவரிடம் மன்னிப்பு கேளுங்கள்” என்ற ரீதியில் சில பதிவுகளை பார்க்க நேரிட்டது.

பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் போன்றவற்றின் மீது எனக்கு கொஞ்சமும் நம்பிக்கை கிடையாது.

அவையெல்லாம் உண்டு என்று கற்பனையாகக் கருதிக் கொண்டால் கூட  அந்த அடிப்படையில்

 “கோயில்களிலும் மடங்களிலும் நடைபெறுகிற ஊழல்கள், முறைகேடுகள் ஆகியவை களையப் படவேண்டும் என்று குரல் கொடுத்ததற்காக” கொல்லப்பட்ட சங்கரராமனும்

“சங்கர ராமன் குரலை ஒடுக்க கொலையாளிகளை அனுப்பி சாட்சிகளின் தடுமாற்றத்தால் விடுதலையான” ஜெயேந்திர சரஸ்வதியும்

சொர்க்கமோ, நரகமோ ஒரே இடத்தில் இருப்பதற்கான, சந்திப்பதற்கான ( ஒரு வேளை சொர்க்க, நரக ஒதுக்கீடு ஊழல் இல்லாமல் செய்யப்படுமானால்) வாய்ப்பு அறவே இல்லை.

எனவே ஜெயேந்திரர் சங்கரராமனிடம் மன்னிப்பு கேட்பதற்கான வாய்ப்பும் சுத்தமாக இல்லை.

5 comments: