Saturday, February 17, 2018

ஜக்கி கெத்துதான்


ஜக்கியார் நடத்திய சிவராத்திரி விழாவில் ஒரு "ஆடலும் பாடலும்" காட்சியைப் பார்த்தேன்.  .

“கொலைகொலையா முந்திரிக்கா, நரிய நரிய சுத்தி வா
கொள்ளையடிச்சவன் எங்க இருக்கான்? கூட்டத்தில் இருக்கான் கண்டுபிடி”

இந்த பாட்டிற்கும் சிவ ராத்திரிக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வியெல்லாம் நான் கேட்கப் போவதில்லை.

அது இந்த வருட சிவராத்திரியா இல்லை போன வருட சிவராத்தியா என்று தெரியவில்லை

இந்த பாட்டை பாடுவதற்கு ஒரு கெத்து  வேண்டுமல்லவா?

வன வளத்தை கொள்ளையடித்துக் கொண்டே, ஐநூறு முதல் ஐம்பதாயிரம் வரை தரம் பிரித்து வசூலித்துக் கொண்டே இந்த பாடலை பாடும் கெத்து வேறு யாருக்கு இருக்க முடியும்?

போன வருட சிவராத்திரி என்றால் மோடி
இந்த வருட சிவராத்திரி என்றால் ஓ.பி.எஸ்

கொள்ளையன் கூட்டத்தில் இருக்கான். கண்டுபிடி என்று கொள்ளையர்களை அடையாளம் காட்டும் அந்த நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.


No comments:

Post a Comment