Thursday, February 22, 2018

ஏனோ மய்யமா தோனுச்சு !!!!!

ஐந்து வருடத்திற்கு முன்பு எழுதிய கவிதை. மீள் பதிவு செய்ய வேண்டுமென்று ஏனோ மய்யமாக தோன்றியது. வேறு எந்த மய்யத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.



நடு நிலைமை நியாயமில்லை


இந்தப் பக்கம்,
அந்தப் பக்கம்
எங்கும் செல்லாமல்
நடுவில் நின்றால்
சாலையிலும் ஆபத்து
வாழ்க்கையிலும் ஆபத்து

நாணயத்திற்கும்
இரண்டு பக்கம்,
பூ உண்டு,
தலை உண்டு,
நடுப்பக்கம்
எங்கே உண்டு?

உண்மை உண்டு,
பொய் உண்டு,
இரண்டிற்கும் நடுவினிலே
வேறு என்ன உண்டு.?

நியாயத்தின் பக்கமா?
அநியாயத்தின் பக்கமா?
இங்கே எங்கு வரும்
நடுவில் ஒரு பக்கம்?

மதில் மேல்
நிற்கும் பூனை கூட
ஏதாவது ஒரு பக்கம்
குதித்தே தீரும்.

நல்லவராய்
முகம் காட்ட
நடுநிலைமை
என்று சொன்னால்
கோழைதான் என்று நம்மை
கண்ணாடி காண்பிக்கும்.

சரியான பக்கம் நின்றால்
சரித்திரத்தில் புகழ் உண்டு,
தவறான பக்கத்திற்கு
மோசமான இடம் கூட
கண்டிப்பாய் கிடைத்து விடும்.
நடுநிலைமை நாடகம்தான்
நடுத்தெருவில் நிற்க வைத்து
விபத்தை உண்டாக்கும்
நமக்கும்,
நாளை தேசத்திற்கும் கூட.

No comments:

Post a Comment